Saturday, June 30, 2007

லொள்ளு பாட்டு...

பாட்டு: பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை...
லொள்ளு: யப்பா அந்த மத்தாப்பூவ பத்த வச்சு இவன் காதுல சொறுவு நல்லா கேட்கட்டும்.


பாட்டு: சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்தது..
லொள்ளு: சிட்டுக்கு சிறகு முளைக்காம கொம்பா முளைக்கும்..


பாட்டு: என் சமையல் அறையில் நீ உப்பா சர்கரையா?
லொள்ளு: இரண்டும் இல்ல குப்ப தொட்டி...

பாட்டு: பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்..
லொள்ளு: ஏன் புடிச்சு தள்ள வசதியாக இருக்குமா?

பாட்டு: சுண்ட கஞ்சி சோறுடா, சுலும்பு கருவாடு டா, வாழ மீனு காலு டா...
லொள்ளு: மெனு என்னன்னு கேட்டா இப்படியா மரியாத இல்லாம பேசுவ..

பாட்டு: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..
லொள்ளு: பூவுல தென்றல் ஆடமா டென்டுல்கரா வந்து ஆடுவாரு?

பாட்டு: என்னை முதன் முதலா பார்த்தபொழுது என்ன நினைத்தாய்??
லொள்ளு: "நீ ஒரு லூசுன்னு" அப்பவும் சரி இப்பவும் சரி ஒரே நினைப்பு தான்.

பாட்டு: இளைய நிலா பொழிகிறது....
லொள்ளு: அப்ப மூத்த நிலா எங்க வெக்கேசன் போயிருக்கா?


புஷ் : அப்பா ஏன் அப்பா என்ன லூசா பெத்த...

w.புஷ்: டைட்டா பெத்தா லூசாவுறத்துக்கு டைம் ஆகும் அதானாலதான்..

Thursday, June 28, 2007

கூட்டாஞ் சோறு

அன்று பள்ளி விடுமுறை நான் எனது நண்பர்கள் எல்லாம் எங்க ஊரில் இருக்கும் இடைநிலை பள்ளி கட்டிடத்தில் கூடுவது வழக்கம், அந்த பள்ளி ரொம்ப சின்னதாக சுற்றிலும் மரத்துடன் இருக்கும் அதன் சுற்று சுவற்குள்ளே ஒரு பாழடைந்த ஒரு சின்ன பெருமாள் கோவில், ஐஸ் பாய், ஒளிந்தாகூடு, கபடி, கிட்டிபில், பம்பரம் எல்லாம் விளையாட எங்க விளையாட்டு மைதானம் அந்த பள்ளிகூடம் தான்.


அன்று விளையாட்டு போர் அடிக்கவே எல்லாரும் "கூட்டாஞ் சோறு" செய்வது என்று முடிவெடுக்க பட்டது, முதலில் வெஜ் பிரியாணி செய்யலாம் என்று நண்பன் சக்தி சொன்னான், அதற்கு தேவையான பாத்திரத்தை அவன் எடுத்து வந்துவிடுவதாகவும் அரிசி காய்கரி எல்லாம் காசு போட்டு வாங்கிவிடலாம் பள்ளிகூடத்துக்கு பின்னால் இருக்கும் சந்தில் சமைக்கலாம் என்றான் எல்லாம் சரி என்று சொல்லிவிட்டு கையில் இருக்கும் காசு எல்லாம் போட்டு பார்ததில் அரிசி கூட வாங்க முடியாது என்று தெரிந்தது. டேய் இருக்கிற காசுக்கு தகுந்த மாதுரி ஏதாவது செய்யலாம் என்றதற்க்கு இருந்து யாரோ ஒருவன் சூடுகாய் போடலாம் டா என்றான் நான் அது வரை அப்படி ஏதும் சாப்பிட்டது இல்லை. அதற்க்கு என்ன என்ன வாங்க வேண்டும் என்று பார்த்ததில் முதலில் ஒரு தேங்காய் பிறகு அரைகிலோ வெள்ளம், பொட்டுகடலை, ஏலக்காய் என்று முடிவானது சரி கடைக்கு போகலாம் என்ற போது காசு கம்மியா இருக்கு, எதுக்கு காசு கொடுத்து தேங்காய் வாங்கி கிட்டு "யார்" வீட்டு மரத்தில்லாவது பறித்து கொள்வோம் "திருட்டு தேங்காய்தான் ருசிக்கும்" என்று புது மொழி சொல்ல பட்டது.


சரி முதலில் தேங்காய் பறித்துவிடலாம் பிறகு பறிக்கமுடியவில்லை என்றால் பொருள் எல்லாம் வீனாக போய்டும் என்று சொன்னதால். சரி என்று தேங்காய் திருட கிளம்பினோம், அதில் நிறைய விதிமுறை இருந்தது மரம் சின்னதாக இருக்க வேண்டும் அப்பதான் யாரும் வந்தால் சீக்கிரம் இறங்கி ஓடி போக முடியும்,மரம் இருக்கும் இடம் யாரும் அடிக்கடி வந்து போகாத இடமாக இருக்க வேண்டும், அந்த மரம் தேங்காய் நல்ல முற்றலாக இருக்க வேண்டும்.இப்படி நிறைய விதிமுறைகளை வைத்து கொண்டு மரத்தை தேடி போனோம் ஒரு வழியாக ஒரு தென்னத்தோப்பில் நல்ல மரத்தை கண்டுபிடித்து எல்லாம யாரும் வருகிறார்களா என்று காவல் காக்க ஒருவன் மேலே ஏறி இரண்டு தேங்காய் பற்றித்து போட்டு விட்டு இறங்கும் போடு தலையாறி (ஊர் காவல் காரர்) வர எல்லாத்தையும் அவசரம் அவசரமாக எடுத்து கொண்டு ஓடினோம்,அவரும் துரத்தி கொண்டு ஓடிவர நாங்க வேலிமுல்,நாயுருவி எல்லாம் காலில் கிழிக்க ஓடி வந்து பள்ளி கூடத்தில் பின் புறம் தேங்காயை பதுக்கி வைத்துவிட்டு ஓடிவந்த களைப்பாறினோம்.



தேங்காயை நாங்க கூர்மையான கருங்கல் கொண்டு குத்தி உறித்து கொண்டு இருந்தோம்,இருவர் மட்டும் கடைக்கு போய் பொருட்கள் வாங்கி வந்தனர்.தேங்காயை திருடி விட்டதால் கொஞ்சம் மீதி இருந்த காசுக்கு தேன் மிட்டாய்யும் முறுக்கும் வாங்கி வந்தனர். சாப்பிட்டு கொண்டே "சூடுகாய்" செய்ய ஆரம்பித்தார்கள் சக்தியும், முரளியும். என்ன செய்கிறாகள் என்று அருகில் இருந்து பார்த்து கொண்டு இருந்தேன், முதலில் அந்த தேங்காய் மேல் இருக்கும் குடுமியை பிய்த்து விட்டு அங்கு இருக்கும் மூன்று கண்னில் ஒரு கணில் ஓட்டை போட்டுவிட்டு அதில் வெள்ளம் பொட்டுகடலை ஏலக்காய் எல்லாம் பொடி செய்து அது வழியாக உள்ளே திணித்து கொண்டு இருந்தார்கள் பின் அந்த கண்னை ஒரு குச்சியை வைத்து அடைத்தார்கள்.



காய்ந்த மரத்தில் இருந்து கீழே விழுந்து இருந்த குச்சி அனைத்தையும் பொருக்கி தீயை மூட்டி அதில் தேங்காய்யை போட்டு வாட்டினார்கள், அப்ப அப்ப நடு நடுவே அந்த தேங்காய் தண்ணியில் வெல்லமும் பொட்டுகடலையும் கலந்து இருப்பதால் அது வற்றும் வரை சூடு படுத்த வேண்டும் அதன் பிறகு எடுத்து உடைத்து சாப்பிட்டா!எப்படி இருக்கும் தெரியுமா என்று நாக்கை சப்புகொட்டி காண்பித்தான் ஒரு அரை மணி நேரம் கழித்து தேங்காய் தீ பிடிக்க ஆரம்பித்தது, சரி இனிமேல் இருந்தால் முதலுக்கே(?) மோசம் ஆயிடும் என்று சொல்லி விட்டு தேங்காயை துண்டு சுற்றி எடுத்து கொண்டு பள்ளி கூடம் முன்பக்கம் வந்தோம், வந்து தேங்காயை உடைத்தால் தண்ணி வற்றவும் இல்லை ஒன்றும் இல்லை, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு எங்கே தவறு நடந்தது என்று ஆராய்சி செய்தார்கள் கடைசியாக தேங்காய் முற்றல் இல்லை என்றாகள்,பின் உடைத்து ஆள் ஆளுக்கு பங்கு பிறித்து சாப்பிட்டோம், வெல்லத்தை சாதாரன தேங்காயில் சாப்பிடுவது போல் இருந்தது அப்படி இருந்தும் ஒன்றும் மிச்சம் ஆகவில்லை எல்லாம் காலியாகி விட்டது.

மதியம்வீட்டுக்கு போனால் அம்மா, அப்பா எனக்காக காத்துகொண்டு இருந்தார்கள் போனவுடனே கை,கால கழுவிட்டு வாடா தம்பி சாப்பிடலாம் என்றார்கள் இல்லமா இப்ப வேண்டாம் என்றேன் ஏன் இன்னும் தேங்காய் செறிக்கலையா என்றார்கள்நான் அதெல்லாம் ஒன்றும் இல்லையே என்று சமாளிக்க பார்த்தேன் வாய் ஓரத்தில் தேங்கா ஒட்டி இருக்கு பாரு என்றார்கள் நானும் பார்த்தேன் ஒன்னும் ஒட்டி இல்லை பொய் சொல்லி இருக்கிறார்கள் அப்பா என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தார். அம்மா அது சரி தேங்காய் ஏது என்று கேட்டுச்சு, ம்ம்ம் அது வந்து வந்து முரளி வீட்டு கொள்ளையில் பறித்து எடுத்து வந்தான் என்றேன்.

அவுங்க எப்படா தம்பி நம்ம தென்னந் தோப்பை அவுங்க வாங்குனாங்க என்று அம்மா கேட்டுச்சு, அப்பா சரி போதும் விடு தம்பி அடுத்தமுறை வேனும்னா சொல்லு நம்ம தலையாரியே பறித்து கொடுப்பான் அவனை பார்த்து ஓடி கை,காலை ஒடிச்சுக்காதே என்றார்.அடுத்த ஒரு வாரம் வீட்டில் வேலை செய்யும் பெண்கள், என்ன சின்ன பிள்ளை நம்ம தோப்புல தேங்கா திருட சொல்லிட்டு நீங்களே காவல் நின்னீங்கலாமே! என்று கிண்டல் செய்தார்கள். அதில் இருந்து சூடுகாய் என்றாலே தென்னாலி ராமன் பூனை போல் ஓடிவிடுவேன்.

Monday, June 25, 2007

இளா


நம்ம இளா இப்ப என்ன செஞ்சு இருக்காருன்னா இப்ப கோடை காலம் தண்ணி இல்லை அதனால் விவசாயம் பார்க்க முடியாது அதனால் கொத்தனார் வேலைக்கு (இலவச கொத்தனார் ஜாக்கிரதை போட்டிக்கு ஒரு ஆள்). போய் இருக்கிறார் அங்கு வளைஞ்சு நெளிஞ்ச சுவர் கட்டும் வேலை அதுக்கு கலவையை இருட்டுல போடசொல்லி இருக்கிறார்கள் அதனால் பயந்து போனேன் என்பதை முதல் இரண்டு பத்திகளில் சொல்லி இருக்கிறார்.

இப்ப மூனாவது பத்தியில என்ன சொல்ல வருகிறார் என்றால் அங்கு வேலை செய்ய முடியாமல் அங்கிருந்து தப்பித்து மறைந்து மறைந்து ஓடுகிறார், என் முடிய கூட புடிச்சு சிறை வைக்க முடியாது என்று வேறு சவால் விடுகிறார்.

கடைசியா என்ன ஆச்சின்னா இளாவ புடிச்சு...இருட்டு அறைக்குள்ள போட்டு அடைச்சிட்டாங்க அங்க ரூம்ல புகையவேறவிட்டுடாங்க...(வாழபழம் பழுக்க வைக்க செய்வாங்களே அதுமாதிரி) ...இவரு பிஞ்சு அதனால் வெதும்பிகிறேன் என்கிறார்.

பெட்லேயே படுத்து பழக்க பட்ட இளா...கோரை பாயில் படுத்டு இருக்கிறேன் என்கிறார். (பாய் மஞ்சலாக இருக்கும்),யாராவது வந்து காப்பாற்ற மாட்டாங்களா என்று ஏக்கமாக விடியலை நோக்கி இருக்கிறார்...யாரோ உவமை என்கிறவுங்க (ஆணா பெண்ணா என்று தெரியவில்லை) அவர்கள் காப்பாற்றுவதாக சொல்வது பொய்யோ என்று சந்தேகம் வேறு படுகிறார்...

நீதி: ஒன்னும் இல்ல (நான் எதுவும் இங்க சொல்லவில்லை)

புணர்வென்னும் கலவையில்
சுருக்கமான நெளிவுகளுக்குள்

நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!

இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!

நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்,
தேடித் தேடியே கலைந்து
போகிறேன் வக்கிரத்தை!

புணர்வென்னும்
கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!

மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா உவமை?


இளா கவிதையும் அதன் விளைவும்

இளா வேண்டாம் இளா சொன்னா கேளு இளா இளா வேண்டாம் இளா சொன்னா கேளு இளா (வேட்டையாடு விளையாடு கமல் டயலாக் இல்லீங்க)
குசும்பனின் கதறல் ...ஏன் என்று தெரியவேண்டுமா????
இது நான் கண்மணி அக்காவின் குட்டிஸ் ஜங்சனில் அடுத்த டிரைனுக்காக காத்திருக்கும் பொழுது அக்கா கொடுத்த கிலுகிலுப்பையுடன்...(அக்கா உங்க ஜங்சனில் டிரைன் வரும் தானே????)
கவிதைய படிக்கனுமா?????




இது மின்னல் கவிதையின் விளைவு....


இது கவிதாயினி காயத்ரியால் வந்தது...



இது ராமின் குருட்டு புலியால் வந்தது. (சேதாரம் கம்மியாதான் இருக்கு)


இது அயானாரின் அவனும் அவளும் .......அதனால் வந்தது.


இது சிபிக்கு உரை எழுதிய பிறகு...



இது இளா கவிதைய படிச்சதால் வந்தது , சிங்கத்தை சாச்சுபுட்டீங்களே இளா..
ஒரு பச்ச புள்ளைய போய் ஒத்தைக்கு ஒத்தை கூப்பிட்ட இளாவை வன்மையா கண்டிக்கிறோம்...
இங்கனம்
அபி, அபி தம்பி மற்றும் குசும்பன் (வயது வாரியாக லிஸ்ட்).


அடிச்சிட்டேன் 50

இதோ வெற்றிகரமாக 50 பதிவுகள் போட்டு முடித்துவிட்டேன், எத்தனை பதிவுகள்உங்களை சிரிக்கவைத்தன என்று தெரியவில்லை, இருந்தாலும் உங்களை சிரிக்கவைத்து இருக்கும் என்றநம்பிக்கையில் அடுத்து அடுத்து பதிவு போட்டு இதோ இன்று 50 பதிவை போட்டு முடித்து இருக்கிறேன்.

எனக்கு நீங்கள் கொடுத்த ஊக்கம் தான் குறுகிய காலத்தில் 50 பதிவு போடவைத்தது... நீங்கள் யாரும் கண்டுக்காமல்போய் இருந்திருந்தால் சீசீ இந்த பழம் புளிக்கும் என்று ஓடி போய் இருப்பேன் (தப்பு செய்துவிட்டமே என்று வருந்துவதுதெரிகிறது).

குசும்பன் என்று ஒருவன் காமெடியாக எழுதுகிறான் என்று பலபேரிடம் சத்தம் போடாமல் சொல்லி என் பதிவிற்க்கு வரசெய்த சிபி அவர்களுக்கும் தானாக வந்து உதவி செய்த பொண்ஸ் அக்காவிற்க்கும் நன்றி.

அன்பான அய்யனார்(நேர்ல பார்க்கும் பொழுது அடிக்காம இருக்கனும்ல அதுக்குதான்), அடாவடியான தம்பி, குஜாலான மின்னல்,ஜாலியான சந்தோஷ் என்று குறுகிய காலத்திற்க்குள் ஒரு நல்ல நட்பு வட்டத்தை தந்த தமிழ் மணத்திற்க்கு நன்றி...

மேலும் தொடந்து என் பதிவுக்கு வருகை தரும்
வெங்கட்ராமன்
siva
காயத்ரி
அய்யனார்
துர்கா
மின்னுது மின்னல்
இராம்
பொன்ஸ்~~Poorna
CVR
கண்மணி
ஜி
சந்தோஷ்
அபி அப்பா
மை ஃபிரண்ட்
தம்பி
Sathia
G3
செல்வேந்திரன்
நந்தா
குட்டிபிசாசு
பினாத்தல்
சுரேஷ்
லக்ஷ்மி
tbr.joseph
நளாயினி
பாலபாரதி

அனைவருக்கும் நன்றி, நன்றி,நன்றி...

Saturday, June 23, 2007

விடுதலை எப்போது?

இந்த கவிதைக்கு விளக்கம் சொல்லாமல் ஏன் இந்த கவிதையை சிபி எழுதினார் என்று உங்களுக்கு சொன்னால் தானாக உங்களுக்கு கவிதை அர்த்தம் புரியும் .

அன்று ஒரு நாள் மாலைவேளையில் பார்க்கில் மல்லாக்க படுத்து அடுத்த கவிதைக்கு கருவை தேடிக்கொண்டு இருக்கும் பொழுது...மரத்தின் மேல் இருந்த காக்கா அண்ணன் மேல் கக்கா (காக்காவின் கக்காவைதான் எச்சம் என்கிறார்) போய்விட ஆத்திரத்தில் ஒரு கல்லை எடுத்து காக்காவை அடிக்க அடிபட்ட காக்கா கீழே விழுவதற்க்குள் எதிர் பக்கம் இருந்து ஒரு குரல் தள ஏன் இந்த கொலை வெறி ஏன் என்றால் அருகில் இருந்த ராம் தலை மீது மண்டையை பதம் பார்த்தது அருகில் இருந்த போலீஸ்கார் விலங்கு வதை தடுப்பு சட்டம், கொலை முயற்ச்சி வழக்கில் அண்ணனை கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது...அங்கிருந்து அண்ணன் கேட்டது தான் கவிதையின் முதல் வரி...(அலைபாயுதே பட ஸ்டைலில் கவிதை எழுதி இருக்கிறார்).

மின்னலும்,குசும்பனும் தான் இந்த கொலை முயறச்சிக்கு சாட்சி அதனால் தான் பயந்து போய் இருக்கிறார் (அரண்டவனுக்கு இருண்டதுஎல்லாம் பேய் என்று சொல்வார்களே அதுபோல்).. சிபி ஜெயிலில் இருக்கும் சேதி கேட்டு தெல்கியாரும், கிழ்மத்துர் எக்ஸ்பிரஸ் இருவரும்மகிழ்ச்சி கடலில் திளைக்கின்றனர்.

ஜெயில் இருப்பது நினைவு இல்லாமல் சண்டைக்கு அழைக்கிறார், சக கைதிகள் போட்டு வெளுத்து வாங்கி விடுகின்றனர், அடிப்பட்டு (காக்க காக்கவில் சூர்யா கிடப்பது போல் கிடக்கிறார்) ..அப்பொழுது சத்தம் போட்டு சொல்கிறார் "விடு! தலை கிடைக்கும்ஒரு நாள்" (காந்தி ஜெயந்தி எல்லாம் முடிஞ்சு போச்சு ...இப்ப விடுதலை கிடையாது).

இப்பொழுது கவிதை


வீறிட்ட அலறலுடன்கேட்டுக் கொள்கிறேன்
என்னை நானே!"விடுதலை எப்போது?"
என் கேள்விவான் மீது
மோதிபறவைகளின் எச்சமாய்
என் மீதே விழுகிறது!
எதிர்ப்படுக்கை
ஒன்றிலிருந்துமுனகல்வருகிறது!

"தள!ஏனிந்தகொலைவெறி?
""உமக்கேது விடுதலை?"எகத்தாள ஒலிசுவரில்
பட்டுஎதிரொலிக்கிறது!எரிச்சலுற்று
திரும்பிப் பார்க்கிறேன்!மின்னலும்
குசும்பும்மாறி மாறிகண்ணில்
தெரியவிழிகளின் பாப்பாக்கள்
பப்பரப்பே என்றுசுழலத் தொடங்குகின்றன!

கெக்கெபிக்கேசிரிப்பொலியொன்று
கவனத்தைச் சிதறடிக்கஎங்கோ தொலைவில்
தெக்கியாரைக்கிச்சு கிச்சு மூட்டிவிட்டுவிரைந்து
செல்கிறதுஅதிவேகபுகை வண்டி!

எனக்கென்றுஎதிரிகளைநானே தெரிவுசெய்து
சண்டைக்குஅழைக்கிறேன்!வாளைச்
சுழற்றியபடிபிச்சுவாக் கத்தியுடன்
எனைச் சூழ்ந்துநெருங்குகின்றனர்!
நானும்சண்டையிடத்தயாராகிறேன்!

சமாதானம் எங்கிருக்கிறது?
திமிறித் திமிறிப்பார்த்தும்பிடியிலிருந்து
நழுவ முடியவில்லை! சுய நினைவைக்கொஞ்சம்
கொஞ்சமாய்இழந்துகொண்டேசூளுரைக்கிறேன்!
"விடு! தலை கிடைக்கும்ஒரு நாள்"
நின்றுவிட்ட இயந்திரத்தைப்பொல
தேய்ந்து வருகிறது குரல்!
தோள் பட்டையில்உணர்கிறேன்சுரீரென்ற வலி!


Friday, June 22, 2007

அண்ணன் பால பாரதிக்கோர் கடிதம்!!!

அண்ணன் பால பாரதி

நலம் நலம் அரிய அ(ல்)வா! தாங்கள் நடத்திவரும் பா.க.ச பற்றி இதுவரை நான் அறிந்திராதது என் துரதிஷ்டமே! நான் நண்பர் சிபி அவர்களிடம் அது என்னா பா.க.ச என்று அடி வெலுத்து எடுத்துவிட்டார், இங்கு புதிதாக கலாய்க்கும் பதிவு போட யார் வந்தாலும் அவர் கையில் பாபா துணை (பால பாரதி துணை) என்று பச்சை குத்தி காதில் 1)பால பாரதி 2)பால பாரதி 3)பால பாரதி என்று மூன்று முறை பெயரை சொல்லி அவர் சங்கத்தில் உறுப்பினறாக ஆன பின்பே பதிவு போடுவது வழக்கம், இதுவரை எப்படி நீ அவரை தெரியாமல் இருந்தாய் என்று அடித்தார்.

பின் சங்கத்தில் உருப்பினார் ஆனால் மாத மாதம் 5000ரூபாய் (சிபி அண்ணா நீங்க 500 என்றுதான் சொன்னீங்க இரண்டு மாசமா சம்பளம் வரல பால் பில், கரண்ட் பில் எல்லாம் கட்டவேண்டும் கண்டுக்காதீங்க). நீங்களே அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொன்னார். நான் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மண வாசகராக இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்து முன் தேதி இட்டு உறுப்பினர் அட்டை வழங்கி (அத்தனை மாதங்களுக்கும் சந்தா தொகையும்) என்னையும் அதில் உருப்பினர் ஆக்கிகொள்ளும் படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

என்னை பா.க.ச வில் சேர்த்துவிட்டதற்காண மார்கெட்டிங்(MLM) ராயல்டி பீஸ்சும் சிபி வேண்டாம் அதையும் குசும்பன் நீங்களேவாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார், ஆகையால் அந்த பணத்தையும் சேர்த்து என் பெயருக்கு அனுப்பி வைக்கும்படி கழுத்தில் கத்தி வைத்து பணிவோடு கேட்டுகொள்கிறேன்.....

உறுப்பினர் அடையாள அட்டையில் தாங்கள் இரத்ததினால் உறுப்பினர் பெயரை எழுதி அடையாளஅட்டை தருவதை வழக்கமாக கொண்டு உள்ளீர்கள் என்று சிபி சொன்னார் என் பெயரை குசும்பன் என்று எழுதி விடாதீர்கள்.... திருவாடு துறை சிவ சிதம்பர கோவிந்த சாமி புஷ்பவனம் குப்புசாமி முனியசாமி கோவிந்தன் குசும்பன் என்று எழுதும் படி கேட்டுகொள்கிறேன்.

அன்புடன் குசும்பன்
பா.க.ச,
திருமங்கலம்,சென்னை
(பதிவு எண் : 1245678/07)

Thursday, June 21, 2007

எட்டு விளையாட்டு

என்னை அழைத்த சிவா அவர்களுக்கு ஒரு வார்தையில் நன்றி எல்லாம் சரி வராது தனியா கவனிச்சிக்கிறேன் என்னை பற்றிய எட்டு...

1) 12 படிக்கும் பொழுது ஆசிரியர்கள் என்னவாக போகிறீர்கள் என்று எல்லாரிடமும் கேட்டு என் முறை வந்த பொழுது மல்டிமீடியா டிசைனர் ஆக வேண்டும் என்று சொன்னது சொன்னது போலவே அதை செய்தது. படித்தது வளர்ந்தது எல்லாம் கிராமம், முழுசா நாலு வார்தை இங்கிலீஸில் எழுதவோ படிக்கவோ வராத நான் இன்று வெளி நாட்டில் வெளிநாட்டவருடன் தட்டு தடுமாறி பேசிகிறேன் அதுவே பெரிய சாதனை. (ராசையா படத்தில் வடிவேல் பிரபுதேவா பேசும் இங்கீலிசையை பார்த்து அழுவது போல் உள்ளே இருக்கும் குசும்பன் அடிக்கடி அழுவான்)

2) யாருக்காகவும் எதற்காகவும் என்னை, என் பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ளாத பிடிவாதம், நீ நீயாக இரு நான் நானக இருக்கிறேன் எனது கொள்கை. (காதலிக்கு பிடிக்கவில்லை, மனைவிக்கு பிடிக்கவில்லை என்று தங்கள் பழக்கங்களை மாற்றி கொள்பவர்களை பார்த்தால் :) )

3) காலேஜ் படிக்கும் பொழுது B.Sc மூன்று வருடம் M.Sc இரண்டு வருடம் ஆக மொத்தம் ஐந்து வருடம் நான் வைத்து தலையில் வெட்டாமல் வைத்து இருந்த ஒன்றரை அடி நீள தலை முடி முன் பக்கம் வைத்து இருந்தது, ஹிட்லர் மீசை இப்படி பல கெட்டப் பல எதிர்புகளையும் மீறி வைத்து இருந்தது.

4) மற்றவர்களோடு என்றும் பொருத்தி பார்த்து கொள்ளாத குணம்.

5) தெரியாததை தெரியாது என்று சொல்வதற்க்கு, அதை கேட்டு தெரிந்து கொள்ள தயங்காத குணம். இதனால் பல பேர் கிண்டல் கேலிக்கு ஆளாக நேரிட்டாலும் அந்த குணம் மட்டும் மாறவில்லை.

6) இன்று வரை புகை, மது அருந்தாதது (குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்ல :)

7) மணதறிந்து இதுவரை யாருக்கும் தீங்கு நினைக்காதது, யாருக்கும் துரோகம் செய்யாதது.

8) நான் என்னிடம் இருக்கும் ஒரே ஒரு திறமையாக நினைப்பது உள்ளுக்குள் தூங்கி கொண்டு இருக்கும் "கிரியேட்டர்" அவன் ஒரு விளம்பர பிரியன் நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க அவன் டீவி யில் வருமே அந்த விளம்பர பிரியன் பல பொருட்களுக்கு பல மாதிரியாக விளம்பரம் எப்படி எடுக்கலாம் என்று யோசித்து எழுதி வைத்து இருப்பவன். என்றாவது ஒரு நாள் Ad film making ல சாதிக்கனும் என்று வெறியோடு (மற்றவர் தேவைக்காக) இப்பொழுது உறங்கி கொண்டு இருப்பவன்.

குறிப்பு: exam கூட இத்தனை நேரம் எழுதியது இல்லைங்க.

நான் அழைக்கும் எட்டு பேர்

1) வெங்கட்ராமன்

2) நாமக்கல் சிபி

3) காயத்ரி

4) அய்யனார்

5) துர்கா

6) மின்னுது மின்னல்

7) சந்தோஷ்

8) அபி அப்பா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

"ஆப்பு"ரேசன் கவுஜர்ஸ்!

ஆப்புரேசன் கவுஜர்ஸ் ஸ்டாட்ஸ் அதன் துவக்கவிழா :)
(சிவாஜியில் ரஜினி கருப்பு பணத்தை எப்படி ஒழிக்கிறாறோ அது போல் இனி ....)


துர்கா: எப்படி குசும்பா எல்லா மொக்க கவிஞர்களையும் கண்டுபிடிக்க போற!!!

குசும்பன்: துர்கா எல்லா நாட்டுலேயும் வலைபதிவு பக்கம் வரும் பலபேர் இருக்காங்க சும்மா ஆணி புடுங்குறவுங்க, ஆணி புடுங்கர மாதிரி நடிக்கிறவுங்க எல்லாரையும் ஒரு இடத்துக்கு வரசொல்லுவோம். அவுங்க கிட்ட அவங்களுக்கு தெரிஞ்ச கவுஜை எழுதுறவுங்க பத்தி டீட்டெயில் கேட்போம்.

துர்கா: எப்படி குசும்பன் அவுங்க நம்ம கிட்ட சொல்லுவாங்க...

குசும்பன்: அதுக்கு நாம போகவேண்டிய இடம் முதலில் துபாய்...
(உய்ங்ங் ஏரேபிளேன் துபாய்ல இறங்குகிற சவுண்ட்)

குசும்பன்,துர்க்கா: ஹலோ மிஸ்டர் அய்யனார் எப்படி இருக்கீங்க...

அய்யனார்: என்ன இத மாதிரி கவுஜ, கதை எழுத சொன்ன தம்பி கூட எட்டி பார்கல, ஆனா நீங்க ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் (பேச முடியாமல் கண் கலங்குகிறார்).

குசும்பன்: நாங்க இத மாதிரி "ஆப்பு"ரேசன் கவுஜர்ஸ்" ஆரம்பித்து இருக்கிறோம், உங்களுக்கு பு.மொ.க.வி பட்டம் கொடுத்த பத்தி கவல படாம எங்க கூட வாங்க.

அய்யனார்: நாலாயிரம் பேருக்கு நல்லது நடக்கனும்னா வருகிறேன் குசும்பன், துர்கா.

(தட தட தட தட ஏரேபிளேன் இப்ப சென்னையில் இறங்குகிற சவுண்ட், டப்பா பிளைட் அதான் இந்த தட தட சத்தம்).

எங்க பேச்சுக்குமதிப்பு கொடுத்து வலைபதிவை மேய்பவர்கள், சும்மா கமெண்ட் போடுபவர்கள், பதிவு போடுபவர்கள், கவுஞர்கள் எல்லாம் வந்து இருக்கீங்க ...நீங்க எல்லாம் செய்யவேண்டியது...உங்களுக்கு தெரிஞ்ச நண்பர்கள் ரெடி செய்து வைத்து இருக்கும், அல்லது போஸ்ட்செய்து இருக்கும் மொக்ககவுஜர்கள் யார் யார் என்று நீங்க இங்க எங்க கிட்டவந்து சொல்லுங்க, (கூட்டத்தில் இருந்து ஒருவர்).மொக்ககவுஜன்னா என்னா....அத ஏன் உங்க கிட்ட சொல்லன்னும்...

குசும்பன்: நீ வலைபதிவுக்கு புதுசா...!!!

அந்த ஆள்: ஆமா எப்படி கண்டுபிடிச்சிங்க...

குசும்பன்: ஹாஹாஹா..கண்னு...மொக்ககவுஜன்னா என்னான்னு நீ கேட்க்கும் பொழுதே...நான் தெரிஞ்சுக்கிட்டேன்...நீ என்னன்னு தெரியாம படிச்சு அவுங்களுக்கு கமெண்ட் போடுறதாலதான் அவுங்க இன்னும் மொக்ககவுஜ போடுறாங்க...நீ தெரியாம செய்யிற தப்பு மத்தவுங்க ஏன் உன் பிள்ளைங்க கூட நாளைக்கு இப்ப தமிழ் மணத்துல பரண் என்று ஒரு வசதி இருக்கு அதன் மூலமாக அத படிச்சு தலை கிறு கிறுத்து போகலாம் ... இது தேவையா...

அந்த ஆள்: நான் யார் யார்ன்னு சொல்லிடுறேன்... மேடைக்கு வருகிறார்

மற்றவர்கள்: பார்டா...நாம யார் யார்ன்னு சொல்லனும்மாம் இவரு எல்லாருக்கும் விருது கொடுத்து நல்ல பெயர் வாங்குவாராம்...

துர்கா: இங்க சொல்ல விருப்பம் இல்லாதவங்க அங்க ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க....
(பாதிபேர் ஆபிஸ் ரூம் போகிறார்கள் )

அங்கே ஆபிஸ் ரூம்மில்...( வராரு வராரு அய்யனார் வராரு, கையில் கவிதை, கதை தொகுப்ப எடுத்துக்கிட்டு வராரு...மொக்க சத்தம் கேட்காமலே, குந்திகினு கவுஜை போடுறாரு அழகு ராசா..) இது பின்னனி பாட்டு.

அய்யனார் அங்கே அவன் அவள் மற்றுமொரு அவள் மேலதிகமாய் சாயந்திர மழையும் (கதை தலைப்பே புரியலேயே ராசா எப்படிஎப்படி ராசா உன்னால மட்டும் முடியுது!!!) கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.. என்ன கதையை சொன்னார் என்று உங்களுக்கு தெரியவேண்டுமா? http://ayyanaarv.blogspot.com/2007/06/blog-post_19.html போய் பாருங்கள் ...

ஒரு மண்டை ஓடு கீழே ரெண்டு பெருக்கள் குறி

துர்கா: அது என்ன குசும்பா ஒரு மண்டை ஓடு கீழே ரெண்டு பெருக்கள் குறி..

குசும்பன் : எச்சரிக்கைக்கு அப்படிதானே போட்டு இருப்பாங்க...படம் போட முடியல கொஞ்சம் அட்ஜஸ் செய்துக்குங்க..

எல்லாம் கதவை உடைத்துக்கிட்டு, ஜன்னல உடைத்துகிட்டு வெளியே வந்து விழுறாங்க...
அவர்கள் கொடுத்த லிஸ்ட்.....(சாரி ரகசியம்...)

உங்களுக்கு தெரிந்த பெயர்களை பின்னூட்டதுல சொல்லுங்க இல்ல அய்யனார் அங்க வருவாரு பின்னாடியே அப்புறம் ராம் வருவாரு ஆமா சொல்லிபுட்டேன்....


Wednesday, June 20, 2007

சிபியின் கவிதைக்கு விமர்சனம்

மௌனத்தின் வேலிகள்
வார்த்தைகளின் வழியை அடைத்துவிட
(பங்காளி சண்டை போல வேலிய வழியில வச்சுட்டாங்க)
குற்றுயிராய்க் கிடந்த (ஹெவி ஆக்சிடண்ட் போல)

உணர்வுகள் மெல்ல எழுந்து எட்டிப் பார்க்கின்றன!
( வச்ச அலாராம் அடிச்சு ஊர்ல இருக்குறவன் எல்லாம் எழுந்துட்டான், இப்பதான் உணர்வு மெல்ல எட்டி பாக்குதா !!! அடிங்க)

ஒரு போதும்காத்திருத்தலின்
அவசியம் எனக்கு நேரவில்லைதான். (சொந்த வண்டி இருக்கு போல)
ஆனாலும் கணப்பொழுதும்
கலைந்துவிடாமல் காத்துக்கிடக்கிறேன்!


தேடி வந்தபட்டாம்பூச்சியும் என்
இருப்பை அறியாது
இறக்கைகளை களைப்புடன் (பூஸ்ட் குடி பட்டாம் பூச்சி)
கழற்றி வைக்கிறது! (அட மனுசனுக்குதான் டோப்பா முடி எல்லாம் இருக்குன்னு நினைச்சேன்!!!)

வந்த சுவடு தெரியாமல் தன்னை
மறைத்துக்கொள்ள
தவியாய்த்தவித்துக் கொண்டிருந்த
(ஒடி போய் சிபி பாக்கெட் குள்ள ஒளிஞ்சுக்க)

தவளை ஒன்றுபெருங்குரலில் சகாக்களை அழைக்கிறது!
(தாங்கெட்டது பத்தாதுன்னு கூட இருக்கிறவனையும் சேர்த்து கெடுக்குறது இதுதான் இதுதான்)

புறாக்கூடொன்று இருந்த

இடத்தில் பார்க்கும் குச்சிகளினூடே
பிய்க்கப் பட்ட புறாவின் இறகுகள் தெரிகிறது!
(ஏய் எடு எடு வீட்டுல பட்ஸ் தீந்து போச்சு)

கற்பனை உலகின் உறவுகள் நிஜத்தில் வராதுதான்!
ஆனாலும் காத்துக் கொண்டுதானிருக்கிறேன் கனவுகளில்!
நிஜவுலகின் நிசப்தங்கள் என்னைக் கலைத்தாலும் கூட!
(நீங்க என்ன கோலமா கலைக்க, இல்ல சீட்டு கட்டா கலைக்க!!!)

துபாயில் ஒரு ஜாலி கவிதை திருவிழா!!!

இந்த வாரம் முதல் இனி கவிஞர்களுக்கு சிறந்த பு.மொ.க.வி பட்டம் வழங்குவது என்று முடிவு செய்யபட்டு உள்ளது.. போட்டிக்கு பல கவிதைகள் வந்தன வந்து கொண்டும் இருக்கின்றன... அதில் இருந்து சில கவிதைகளை மட்டும் நாங்கள் தேர்வு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம்..

அதன் படி தேர்வு செய்யபட்ட கவிஞர்கள்

1) கவிஞர் ராம்
2) கவிஞர் அய்யனார்
3) கவிஞர் மின்னல்

இவர்கள் மேடைக்கு வந்து அவர்கள் கவிதையை அவர்களே வாசிக்கட்டும்..
முடிவை நடுவர்கள் பிறகு அறிவிப்பார்கள்...
முதலில் கவிஞர் ராம் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்..

கவிஞர் ராம் நீங்க எழுதிய குருட்டு புலி கவிதை இந்த பு.மொ.க.வி விருது அடுத்தசுற்றுக்கு தேர்ந்து எடுக்க பட்டு இருக்கிறது.

நீங்க அதை வாசியுங்கள்...


கவிஞர் ராம் அந்த கவிதையை வாசிக்கிறார்..
அவர் வாசித்து முடித்தவுடன்...ஒரே அமைதி... (முத்துவில் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட மாதிரி.) அபி பாப்பா தம்பி ங்கே ங்கே ங்கா..ங்காங்கா..என்று பசியில் கத்த கூட்டம் தப்பாக புரிந்துகொண்டு கூட்டம் முழுவதும் ங்கே ங்கே ங்கா..ங்காங்கா.. ரீப்பீட்டே!!
ஸ்டேடியம் முழுவதும் ங்கா பாட்டு கோரஸ்சாக ஒலிக்கிறது..

அடுத்து கவிஞர் மின்னல் மேடைக்கு வரவும்...
கவிஞர் மின்னல் வந்து...
குளம் மேல் கல் எறிந்தேன்
குளித்துக்கொண்டு இருந்த
நிலா பட்டது காயம்
என்று கவிதை பாட...

கூட்டத்தில் இருந்து ஒரு கல் மின்னல் மேல்..அடித்தவர் நான் நிலா ரசிகன் (ரகசீவ் ஞானியார் இல்லப்பா) (அ.ஆ ஹீரோயின்) என் நிலா மேல் ஏன்யா கல்ல போட்ட என்று கேட்க ஓடுகிறார் மின்னல்..

அடுத்து கவிஞர் அய்யனார்யை அழைக்கிறோம்...

அய்யனார் அவர் போர்ஹோவின் முத்தம் கவிதையை படிக்க படிக்க எல்லாரும் ஓடுகின்றனர். ..அவர்களுக்கு வெளியில் அனைவருக்கும் எலும்பிச்சை பழம் தேய்த்து குளிக்க வழங்கி கொண்டு இருக்கிறார் அண்ணாச்சி.

இப்பொழுது முடிவை அறிவிக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது...

நடுவர் இங்கு பங்கேற்ற அனைவரும் திறமையாணவர்கள்தான் ஒருத்தருக்கொருத்தர் சலைத்தவர்கள் அல்ல ஆனால் இந்த விருதை ஒருவருக்குதான் கொடுக்க முடியும் ஆதாலால்
இந்த வருட சிறந்த பு.மொ.க.வி வித்தகர் விருதை வாங்கி கொள்ள தம்பி அய்யனாரை அழைக்கிறேன்... மேலும் மிகவும் நெருக்கடி கொடுத்த கவிஞர் ராமை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதை இங்கு தெரிவு படுத்த விரும்புகிறேன்...

நம்ம இந்த பு.மொ.க.வி விருதின் நோக்கமே.. புரியாத மொழியில் கவிதை எழுதுவதுதான் ஆனால் கவிஞர் ராம் கவிதையை ஒரு வாரம் முன்புபிறந்த குழந்தை ரிப்பீட் அடிச்சது அந்த குழந்தைக்கு புரிந்துவிட்டதால் அவர் இந்த விருது பெரும் வாய்ப்பை இழக்கிறார்...

மேடையில் தம்பி, அய்யனார் இருவரும் வர நடுவர் குழம்புகிறார் நீ யாருப்பா ஏன் மேடைக்கு வந்த என்று கேட்க நீங்கதானே தம்பி அய்யனார் வருக என்றீர்கள் நான் தம்பி, இவர் அய்யனார் என்க நடுவர் தலை தெறிக்க ஓடுகிறார்.

கூட்டத்தில் இருந்து இருவர்: புரியாத மொழியில் கவிதை எழுதுவதால் நீங்கள் இன்று முதல் பு.மொ.கவி வித்தகர் என்று அழைக்க படுவீர் ஆக.

பேட்டி: பு.மொ.க.வி விருது வாங்கினத பற்றி என்ன நினைக்கிறீங்க மிஸ்டர் பு.மொ.க.வி. வித்தகர் அய்யனார்???

அய்யனார்: ஆக்ஸ்வலி

குசும்பன் : எங்க வலி...

அய்யனார்: வலி எல்லாம் இல்ல... ஆக்ஸ்வலி நான் விருத குறி வச்சு எல்லாம் கவிதை எழுதுறது இல்ல...தமிழ்மண மக்கள் அனைவரையும் குழப்பனும் அதுதான் என் நோக்கம்...

ஒரே ஒரு சந்தேகம்: அது என்னா இப்ப எல்லாரும் ஒரு வார்தையில் உள்ள தேடியலைந்து என்கிறதை

தே
டி

லை

ந்
து

குருட்டு புலிய

கு
ரு
ட்
டு

பு
லி


இப்படி எழுதுறீங்க font அலைன்மெண்ட் பிரச்சினையா???


பேட்டி: மிஸ்டர் கவிஞர் ராம் நீங்க இந்த விருதை தவற விட்டதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்??

ராம்: கொஞ்சம் வருத்தமாகதான் இருக்கிறது ஒரு 10 ரூபா கட்டி ரீ-ஜாயின் பண்ற மாதிரி ஏதும் வழி இருந்தா சொல்லுங்க குருட்டு எலின்னு ஒரு கவிதை ரெடி செய்யிறேன்...

குசும்பன்: அபீட்.....


Tuesday, June 19, 2007

ஒரு நிமிடம் பீளீஸ் - N0 குசும்பு

கட்சி தலைவன் தலைவிக்காக மண் சோறு, நாக்கை அறுத்துக்கொள்வது,பிறந்தநாளுக்காக காவடி எடுபது...அலகுகுத்துவது அமைச்சரே தீ மிதிப்பது போன்ற நிகழ்சிகள் நம் நாட்டில் இதுவரை நடக்கவில்லையா??? நம் உழைப்பு, நம் பணம் எல்லாத்தையும் நம்மிடம் இருந்து கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை விட நடிகர்கள் மேல்...

நாம் யாரிடம் எதிர் பார்க்கவேண்டுமோ அவர்களை மறந்துவிடுகிறோம்... வேலை செய்து கூலிவாங்கும் நடிகர்கள் நாட்டை காக்க வேண்டும்என்று எதிர் பார்கிறோம்...







Monday, June 18, 2007

கவிதை விமர்சனம் செய்ய யார் யார் ரெடி!!!

என் இனிய தமிழ் மண கவிஞர்கள்
தல ராம் அவர்களே!
தோழி காயத்ரி அவர்களே!
தளபதி மின்னல் அவர்களே!
நண்பர் சிபி அவர்களே(நீங்க தான் சகலாகல வல்லவன் ஆச்சே!)

விடுபட்ட (நிஜ) கவிஞர்கள் மண்ணிக்கவும்...


இது நண்பர் எழுதிய கவிதை(???)யா செய்யுள்ளா என்று தெரியவில்லை,இதுக்கு விமர்சணம் எழுத சொன்னார்...நம்ம சிற்றறிவுக்கு எட்டவில்லை,அதனால் தான் உங்களை எல்லாம் கூவி கூவி அழைக்கிறேன்..வந்து விளக்கம் சொலுங்கோ...


வெளிச் சொல்லமுடியாத
வெக்கைகளின் வெளிகளில்
பற்றியெறிகின்றன என்
பச்சை தாவரங்கள்சுயங்களின் முனை முறிவுகளில்
தடவப்பட்ட பிரியக்களிம்புகள்
என்றென்றும் ஆற்றுவதில்லை
புரையோடிப்போனமனக்காயங்களை

இருள் நிறைந்த பாதைபோல
ஒளியற்றுப்போகிறதுவாழ்க்கை
சில நேரங்களில்ஆங்கே ஒட்ட வைத்தமெழுகு
போல உன் பிரியங்கள்அவ்வப்போது
என்னை ஆற்றுமாயினும்வழியற்றுத்
திரிகின்றனஎன் விழிப் பட்டாம்பூச்சிகள்

காலங்களின் வழிதெரியாஒற்றையடிப்பாதையின்
வழியேவழிந்தோடிக்கொண்டிருக்கிறது
என் பிரியங்களின் ஆழ்நதி
என்றேனும் ஒருநாள் கரையேருமென்ற

நம்பிக்கையில் நானும்
என் பிரியங்களும்
உன் பின்னாலேயெ நடைபயில்கிறோம்.

நன்றி சிவராமன்

ரொம்ப நேர ஆராய்ச்சிக்கு பிறகு எனக்கு என்ன புரிந்தது என்றால்

"என்றென்றும் ஆற்றுவதில்லை புரையோடிப்போனமனக்காயங்களை"
அவருக்கு எங்கயோ அடிபட்டு காயம் அடைந்து இருக்கிறார்.

"வழியற்றுத் திரிகின்றனஎன் விழிப் பட்டாம்பூச்சிகள்"
கண்ணுல பூச்சி பறக்குதுன்னு சொல்லுவாங்கள்ள அத வேறுமாதிரிசொல்கிறார்.

"என் பிரியங்களும்உன் பின்னாலேயெ நடைபயில்கிறோம்."
யார் பின்னாலேயோ நடந்து போகிறார்...

ஆனா மக்கா என்னா என்ன சொல்லவருக்கிறார் என்றுதான் புரியவில்லை...

Sunday, June 17, 2007

ப.பா சங்கம் வ.வா சங்க விளக்கம்

ப.பா சங்கம் வ.வா சங்கம்

மதுரையில் தமிழ் வளர்த்த தமிழ்சங்கம் போல் இணையத்தில் தமிழ் வளர்க்கும் சங்கள் பல இருந்தாலும் அதில் முக்கியமானவை வ.வா சங்கமும், ப.பா.சங்கமும், (ஸ்ஸ் அச் அச் என்ன ப.பா. கொள்கை பரப்பு செயலார் காயத்ரி தும்மல், அச் அச் அது யாரு இன்னொரு தும்மல் வ.வா தலைவர் ராம்)

இப்படி இரு சங்கங்கள் இருந்தாலும் என்னை போன்ற புதியவர்களுக்கு ப.பா சங்கம், வ.வா.சங்கம் என்றால் என்ன என்று ஒரே குழப்பம். சரி இனையத்துல இருக்குற பெரியவங்க கிட்ட கேட்களாம் என்றால், ஏன் அவரிடம் கேட்டாய் என்று திட்டி பதில் வருகிறது. சரி எதுக்கு
வம்பு சம்மந்த பட்டவர்களிடமே கேட்டுவிடலாம் என்று ஆனா அவங்களிடமே போய் உங்க சங்கத்துக்கு விளக்கம் சொல்லுங்க என்று கேட்டால் ஏய் இது தெரியாம இன்ன இதுக்கு நீ எல்லாம் blog ஆரம்பிச்ச என்று கேட்டுவிட்டால் என்ன செய்யிறது...ஆகையால் இவங்கள பத்தி அவுங்க கிட்ட கேட்போம், அவுங்கள பத்தி இவுங்க கிட்ட கேட்போம்...என்று சூப்பர் ஐடியா வந்தது...

அதன் படி நான் முதலில் ப.பா சங்கத்துக்கு போன் போட்டேன் இனி நடந்தது அப்படியே உங்கள் பார்வைக்கு.....

பல்லேலக்கா பல்லேலக்கா பல்லேலக்கா...(ரிங் டோனுங்க டிரிங் டிரிங் எல்லாம் ஒல்ட்)...

எதிர் முனையில் ஹலோ என்றது ஒரு பெண் குரல்...

நான்: என்னங்க இது ப.பா சங்கம்தானே...

எதிர் முனை: ஆமாம் உங்களுக்கு என்ன வேனும்...

நான்: ஒரு சின்ன சந்தேகம்...

எதிர் முனை: சின்ன சந்தேகம்ன்னா என்ன கடுகு சைஸ் இருக்குமா? என்ன சந்தேகம்...

நான்: இல்ல வ.வா சங்கம்ன்னா என்னங்க அதுக்கு என்ன விளக்கம் என்று கேட்டேன்.

எதிர் முனை: கெக்கே பிக்கே கெக்கே பிக்கே கெக்கே பிக்கே கெக்கே பிக்கே கெக்கே பிக்கே கெக்கே பிக்கே (அப்படி சிரிச்சாங்க, டெலி போன் மணி போல் எல்லாம் இல்லை).

என்னய்யா இப்படி கேட்டுப்புட்ட வ.வா சங்கம் என்றால் உனக்கு தெரியாதா? சரி இங்க பாரு வ.வா சங்கம் வ.வா சங்கம்னு திரும்ப திரும்ப 100 முறை சொல்லு...

நான் : என்னங்க தெரியாம உங்க கிட்ட கேட்டா இப்படி சொல்ல சொல்றீங்க

எதிர் முனை: உனக்கு பதில் வேணும்ன்னா வடிவேலு மாதிரி திரும்ப திரும்ப வேகமா சொல்லு ..

நான்: 1)வ.வா சங்கம் , 3)வ.வா.சங்கம் 4)வ.வா சங்கம் , 5)வ.வா.சங்கம் 6)வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம், வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வ.வா சங்கம் , வ.வா.சங்கம், வ.வா சங்கம் , வ.வா.சங்கம் வவ்வா சங்கம், வவ்வா சங்கம்,வவ்வா சங்கம்.....

எதிர் முனை: நிறுத்து நிறுத்து...இப்ப என்ன சொன்ன

நான்: வவ்வா சங்கம்ன்னேன்..

எதிர் முனை: வவ்வா எப்படி தொங்கும்?

நான் : தலை கீழா தொங்கும்...

எதிர் முனை: எங்க கிட்ட வகையா வாங்கி கட்டி கடைசியாய் தலை கீழாய் தொங்க விட்டு விடுவோம் அதானால தான் அந்த பேரு.. வகையா வாங்கி கட்டிகொள்வோர் சங்கம்.


(நாரயண நாரயாண நாரயண நாரயாண நாரயண நாரயாண பிண்ணனி இசை).


அடுத்து போன் போட்டது வ.வா சங்கம்....

டிரிங் டிரிங்...

ஹலோ யார் பேசுறது இது வ.வா சங்கமா?

சங்கத்து சிங்கம் பேசுறேன் நீ யாரு?

நான்: எனக்கு ஒரு சந்தேகம் அத தீர்த்துக்க தான் போன் செய்தேன்...

ச.சி: என்ன பின்லேடன் எங்க இருக்கான்னு தெரியனுமா?

நான்: இல்ல ப.பா சங்கம்னா என்னா?

ச.சி: கர் கூர் கர் கூர் கர் கூர் கர் கூர் கர் கூர் கர் கூர் கர் கூர் (குறட்டை இல்லிங்க சங்கத்து சிங்கம் சிரிக்குது).

நான்: என்ன இப்படி சிரிக்கிறீங்க??

ச.சி: ஏன் வேற மாதிரி சிரிச்சு காட்டவா?

நான் : வேண்டாம் வேண்டாம் என் சந்தேகத்த தெளியவைங்க...


ச.சி: அப்ப ஒரு சோடா வாங்கி வா!!!

நான் : ஏங்க மிக்ஸிங்கு ஒன்னும் இல்லையா!!!

ச.சி: நீதானே தெளியவைங்கன்னு சொன்ன அதான் சோடா அடிச்சா தெளியும்.... (கர் கூர் கர் கூர் கர் கூர் கர் திரும்பவும் அதே சிரிப்பு)

நான் : ஏங்க என்ன பார்த்தா பாவமா தெரியல என்ன வச்சு இப்படி மொக்கை காமெடிசெய்யிறீங்க....

ச.சி: ப.பா சங்கம் ப.பா சங்கம்ன்னு ஒரு 100 முறை கிடு கிடு கிடுன்னு சொல்லு..

நான்: ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம் ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம் ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம் ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம்
ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம் ப.பா சங்கம் ப.பா சங்கம் ப.பா. சங்கம் ...பப்பா சங்கம் பப்பா சங்கம் பப்பா சங்கம்....

ச.சி: நிறுத்து நிறுத்து.... நீ என்ன சொன்னேன்னு பார்த்தீயா பப்பா சங்கம்ன்னு சொல்லுற... சின்ன பப்பாங்கலா சேர்ந்து ஆரம்பிச்ச சங்கம் தான் அது கால போக்குல அது ப.பா சங்கம் என்று ஆயிட்டு இதுக்கு தமிழில் மருவு என்று பெயர்.

நான்: மருவோ பருவோ விளையாடாம உண்மைய சொல்லுங்க என்றதற்க்கு

ச.சி: சிங்கத்த பார்த்தா சின்ன மான் என்ன பண்ணும்?

நான்: பயந்து ஓடி போகும்..

ச.சி: சும்மா ஓடாது பயந்து பாய்ந்து ஓடுவதால் அவுங்களுக்கு ப.பா சங்கம் என்று பெயர்.

(நாரயண நாரயாண நாரயண நாரயாண நாரயண நாரயாண பிண்ணனி இசை)

Wednesday, June 13, 2007

கிரிக்கெட் போர்ட் + சொட்டை மனோகர்



படங்களை மெயில் செய்த ராகவ்க்கு நன்றி....

போட்டோ கலாட்டா!




அவர் அனுப்பிய்ய போட்டோ கீழே!!!







Tuesday, June 12, 2007

நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற!!!

நுழைவு தேர்வை ரத்து செய்துவிட்டதால் என் போன்ற திறமையான மாணவர்கள் திறமையை நிருப்பிக்க வழி இல்லாமல் போய்விட்டது, என்னதான் இருந்தாலும் அதில் அதிக மதிப்பெண் வாங்கும் டெக்னிக்கை மறந்து விடாமல் வாழையடி வாழயாக போற்றி பாதுக்காக்க வேண்டியது எனது கடமை. ஆகையால் இத்தனை நாட்களாக கட்டிகாத்து வந்த ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன்.

12வது தாண்டுவதற்கே முப்பது குட்டிகரணம் போடும் என்னை போன்ற ஆட்கள் 49 மார்க் நுழைவு தேர்வில்எடுப்பது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன், உங்களிடம் வேண்டி கேட்டு கொள்வது எல்லாம் இதை தயவு செய்து வியாபாரம் ஆக்கிவிட வேண்டாம். அது போல் குரு காணிக்கையாக எதுவும் எனக்கு வேண்டாம்.

நுழைவு தேர்வில் இனி 49 மார்க் எடுப்பது எப்படி. அவசியம் மூன்று ரப்பர், 1 பென்சில், ஒரு பால் பாயின்ட் பென் (ஏன் 3 ரப்பர், 1 பெண்சில் என்ற கேள்வி நீங்க கேட்பது புரிகிறது பதில் கடைசியில்) தேர்வு அறைக்கு முன் செல்லும் முன் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...ஒரு ரப்பரை எடுத்து அதன் நான்கு பக்கங்களிளும் 1,2,3,4 என்று எழுதி கொள்ளுங்கள். பின் கொஸ்டின் பேப்பரை கொடுத்த உடன் நீங்கள் எடுக்க வேண்டியது உங்கள் பெண்சிலை அல்ல..உங்கள் ரப்பரை.. எடுத்து அதை உங்கள் டேபிள் மேல் தாயகட்டை உருட்டுவது போல் உருட்டிவிடுங்கள் அதில் மூன்று என்று வந்தால்முதல் கேள்விக்கு பதில் மூன்றாவது கட்டத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் விடை.

அதுபோல் எல்லா கேள்விக்கும் உருட்டி எல்லா கேள்விக்கும் விடை அளியுங்கள்.

ம்ம்ம் இப்ப கேளுங்க உங்க சந்தேகத்தைஏன் மூன்று ரப்பர் அதுதானே?
உருட்டி விடும் பொழுது முன்னாடி போய் விழுந்துட்டா அத எடுக்க என்று உங்க நேரத்தை வீணடிக்காமல் அடுத்த ரப்பரை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுங்கள்.

ம்ம்ம் அடுத்தது என்ன இப்படி செய்வதால் 49 மார்க் வாங்க முடியுமா அதுதானே! கண்டிப்பா 200 க்கு 49 மார்க நான் வாங்கினேன்.

இருந்தாலும் முன்பு நான் சிபியிடம் சொன்னதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்
சிபி கேட்டார் எப்படிய்யா பார்த்து எழுதும் பொழுது தப்பு வரும் என்று...அதற்க்கு நான் சொன்னேன் சனி பகவான் உச்சத்துல இருந்தா ஜெராக்ஸ் எடுத்து குடுத்தா கூட தப்புவரும் என்று..


இதன் நன்மைகள்

முன்பு கண்னை மூடிக்கொண்டு ஒரு பதிலை தொடும் முறை இருந்துவந்தது அதில் நிறைய bugs இருப்பதால் அதற்க்குமாற்றாக இந்த முறை, கண்னை மூடி கொண்டு தொடும் முறையில் தவறாக கேள்வியையே தொடும் வாய்ப்பு அதிகம்அது போல் முதல் கேள்விக்கு அடுத்த கேள்விக்கான பதிலை தொடும் வாய்ப்பும் அதிகம் ஆகையால் இது அதிகமுறை சோதனைக்கு உட்படுத்த பட்டு அதில் நான் வெற்றியும்(????) பெற்றதால் உங்களிடம் சொல்கிறேன்.

கவிதை விமர்சனம்

கவிதை ????
என் உடம்பு அனல் போல் கொதிக்கிறதே

காதலியே நீ என்ன சமையல் அறையில் வேலை செய்கிறாயா?
(ம்ம்ம் இல்ல மொட்ட வெய்யில்ல மாடு மேச்சுக்கிட்டு இருக்கேன் வா உன்னையும் அதோடு சேர்த்து மேய்க்கிறேன்.)

என் கை விரல்கள் எறிகிறதே
காதலியே நீ என்ன துணி துவைக்கிறாயா?
(சொறி புடிச்சவனே ஒழுங்கா சோப்பு போட்டு குளின்னா கேக்குறீயா?)

என் காலகள் வலிக்கின்றனவே
காதலியே நீ என்ன தண்ணீர் தூக்கி செல்கிறாயா?
(ம்ம்ம் இல்ல பண்ணி குட்டிய தூக்கிக்கிட்டு போறா? போய் ஹல்ப் பண்ணு)

என் கண்களில் நீர் தலும்புகிறதே!
காதலியே நீ என்ன சோகமாக இருக்கிறாயா?
(அஞ்சர குல்ல வண்டிய நைட் அஞ்சு தடவ பார்த்தா கண்ணு கலங்காம என்ன டா பண்ணும்)

காதலியே என் காதலை ஏற்றுக்கொள்
உன்னை பூவை விட மெண்மையாக பார்த்துக்கொள்வேன்.

(ஏன் டா உனக்கு உடம்பு கொதிக்கிறது, கை எறிகிறது,கால் வலிக்கிறது, கண்ணு நொல்லை உன்ன பார்த்துக்கவே ரெண்டு ஆளு வேணும் போல இருக்கு இதுல அவள பார்த்துக்கபோறீயா? போ டா போ)

(நண்பா உன் கவிதைய தமிழ் மணத்துல போட்டுட்டேன் டா!)

Monday, June 11, 2007

உலக சாதனையை மிஸ் பண்ணிய நல்லவர்

உலக சாதனையை செய்ய எல்லா தகுதியும் படைத்த ஒருவர் அதை வேண்டாம் என்றும் மக்கள் சேவை செய்வதில் உள்ள மகிழ்ச்சி அதில் இல்லை என்று மறுத்திருக்கிறார்..
அவரை பற்றிய விபரமும் செய்தியும்...


செய்தி : உம்மா தருவதில் உலக சாதனை படைத்துள்ளனர் ஹங்கேரி ஜோடிகள், தலை நகர்புடாபெஸ்ட்டில் உள்ள நாடாளுமன்ற வளாகம் முன்பு ஒரே நேரத்தில் 12,800 பேர் உம்மாகொடுத்து சாதனை படைத்துள்ளனர்.

கேள்வி: இதே குசும்பன் அங்கு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
அதே உலக சாதனைதான் கொஞ்சம் வேறு மாதிரி நடந்து இருக்கும்
எப்படி?12,800 பேர்ல பொண்னுங்க எத்தனை பேர்?6400 பேர். அத்தனை பேரும் குசும்பனுக்கு உம்மா கொடுத்து அது ஒரு உலக சாதனையாக ஆகியிருக்கும்.

இப்ப சொல்லுங்க உலக சாதனையை மிஸ் பண்ணிய நல்லவர் யார்?

Sunday, June 10, 2007

நண்பனின் போட்டோ + குசும்பு



இந்த போட்டோஸ் + அவன் கவிதையை நக்கல் அடித்து இருந்ததுஎல்லாத்தையும் எனக்கு blogயில் போட அவன் அனுமதி அளித்து இருந்தான் இருந்தாலும் அப்படியே போட எனக்கு மனசு வர வில்லை ஆகையால்தான் இந்த போட்டோ மார்பிங்...




Saturday, June 9, 2007

நாமகல் சிபியை குமட்டில் குத்தபோவது யாரு???

நாமகல் சிபியை குமட்டில் குத்தபோவது யாரு???
அசத்த போவது யாரு நிகழ்சியை பார்த்து பார்த்து போர் அடித்தவர்களுக்கு இந்த சுவையான குமட்டில் குத்த போவது யாரு நிகழ்ச்சி..


நாமகல் சிபி அண்ணன் எப்பொழுதுமே பாக்கு போட மாட்டார் எப்பயாவது தம் அடிக்கும் பொழுது பாக்கு போடுவார், எப்பொழுதுமே தம் அடிக்க மாட்டார் எப்பயாவது தண்ணி அடிக்கும் பொழுது மட்டும் தம் அடிப்பார்.எப்பயும் தண்ணி அடிக்க மாட்டார். எப்பயாவது ......................(கோடிட்ட இடங்களை நிரப்புக).

அப்படியா பட்ட நல்லவர் இன்று முதல் தம் மட்டும் அடிப்பது இல்லை என்று சபதம் எடுத்து இருக்கிறார்,மேலும் அவர் இனி அவரை தம் உடன் பார்த்தால் "குமட்டில் குத்தலாம்" என்று இனிய செய்தியை எல்லாருக்கும்சொல்லி இருக்கிறார். இனி வருங்காலத்தில் அடுத்த அடுத்த பழக்கங்களை விடும்பொழுது அண்ணன் தமிழ்மண பதிவர்,வாசகர்களுக்கா ஒவ்வொரு உறுப்பையும் நேந்துக்கிட்டு விட்டுவிடுவார் என்று அண்ணன் சார்பாக சொல்லிகிறேன்.


இனி அவரை குமட்டில் குத்த முத்தான சில யோசனைகள்...

தேவையானவை: 1)உருட்டு கட்டைகள் தேவைக்கு ஏற்ப
2) உதயம் படத்தில் நாகார்ஜுன் கையில் மாட்டி மற்றவர்களை குத்தும் குத்து கட்டை அவர் அவர் கை சைசுக்கேற்ப்ப
3)கிரிக்கெட் பேட், ஸ்டெம், ஹாக்கி ஸ்டிக் அவர் அவர் வசதிக்கு ஏற்ப.

செய்முறை: இந்த முறைக்கு கொஞ்சம் சிறு வயதில் ஓனான் பிடித்த முன் அனுபவம் தேவை. ஓனான் என்றும் கடைக்கு போய் சிகெரெட் வாங்கி அடித்தது இல்லை நாமாக அதன் வாயில் சிகரெட்டை வைத்துவிட்டு, ஏய் இத பார்டா என்ன பாத்து ஓனான்புகை விடுது என்று அடுத்து நொறுக்கிய அனுபவம் தேவை. அப்படி பட்டவர்கள் சிபியை எங்கு பார்த்தாலும் குண்டாங்கட்டியா கட்டிதூக்கி அவர் வாயில் ஒரு சிகெரெட்டை தினித்து (மறக்காமல் ஒரு புகை படம் எடுத்து கொள்ளவும் அப்பதான் ஏன் அடிச்சிங்க என்று நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது.) குமட்டில் குத்து குத்து என்று மொத்தமாகவோ அல்லது தனி தனியாகவோ குமட்டு குத்து குத்தவும்...குமட்டு பொன்னிறமாகவரும் வரை விடாமல் குத்தி எடுக்கவும். இதை சின்னவர் முதல் பெரியவர் வரை செய்யலாம். மிகவும் ஜாலியாக இருக்கும்.

யோசனை 2:
தேவையானவை: மேற்ச்சொன்ன அனைத்து கருவிகளும் + ஒரு தெர்மா மீட்டர் + ஒரு டாக்டர் கோட்.

செய்முறை: ஒரு பத்து பதினைந்து பேரை மறைந்து இருக்க சொல்லி விட்டு, சிபி எதிரில் வரும் பொழுது...நாங்க எல்லாம் மெடிக்கல் காலேஜ் ஸ்டுடண்ஸ் ஒரு சர்வே எடுக்கிறோம். எல்லாருக்கு உடல் வெப்ப நிலை சூரியனை பொருத்து மாறுகிறதா என்று கண்டுபிடிக்க போகிறோம். சோ உங்க வாய ஆ காட்டுங்க இந்த தெர்மா மீட்டர வச்சு பார்த்துவிடுகிறோம் என்றுசொல்லிவிட்டு அவர் ஆ காட்டும் பொழுது சிகரெட்டை வாயில் வைத்துவிடவும்... பிறகு முதல் பத்தியில் உள்ள கடைசி மூன்று வரிகளைபடிக்கவும்.


யோசனை 3:

தேவையானவைகள்: மேற்கூறிய அனைத்து ஆயுதங்களும் + சிம்பு நடித்து வெளி வந்த தம் பட சீடி.

செய்முறை : அவர் கையில் தம் பட சீடியை கொடுத்துவிட்டு...பிறகு என்ன போட்டோ + குமட்டு குத்து.

குமட்டு எங்கிருக்கிறது என்று தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு அவர் சரியாக செய்யும் வரை வாய்ப்பு வழங்க படும். பின் தனியாக கிளாஸ் வேண்டுமானாலும் எடுக்க படும்.
மேலும் யோசனைகளும் செய்முறைகளும் வரவேற்க படுகின்றன.... முதலில் வருபவர்களுக்கு ஆயுதங்களும், குறிப்புகளும் இலவசமாகவழங்க படும். முன் பதிவும் செய்யலாம்.( குறிப்பு: ஆயுதங்கள் ஸ்டாக் உள்ள வரை மட்டுமே.)

வெப்பன் சப்ளையர்ஸ்: 1)உண்மைத் தமிழன் 2)அபி அப்பா 3)பொன்ஸ் 4)சந்தோஷ்


வேண்டுகோள்: ஆயுதம் உடையோர் ஆயுதம் தாரீர், இல்லாதோர் அடியாள் தாரீர்.



நீங்க எந்த இடத்தில்

தமிழ்மணத்தில் நீங்க எத்தனையாவது இடத்தில் இருக்கிங்க என்று தெரியவேண்டுமா? ஒரு சுய பரிசோதனை.

1)ரெண்டு வரியில் ஒரு பதிவு போட்ட பிறகு யாராவது பின்னூட்டம் போட்டு இருக்கிறார்களா என்றுஅடிக்கடி பார்ப்பவரா?

பதில் 1) ஆம் 2) இல்லை

2) யாரேனும் ஒருவர் வந்து ஒரே ஒரு புள்ளியோ அல்லது :) போட்டால் கூட தங்கள் வருகைக்கு நன்றி என்று பதில் போடுபவரா?

பதில் 1) ஆம் 2) இல்லை

3) சொந்தமாக ரூம் போட்டு யோசிச்சு பதிவு எழுதுபவரா?

பதில் 1) ஆம் 2) இல்லை

4) உங்க பெயரில் போலியாக யாரும் பதிவு எழுதவில்லையா?

பதில் 1) ஆம் 2) இல்லை

5) ரெண்டு வரியில் ஒரு பதிவு போட்டால் கூட அதற்க்கு 40 பின்னூட்டத்துக்கு மேல் வரும் சூட்சமம் புரியவில்லையா?

பதில் 1) ஆம் 2) இல்லை

6) மற்றவர்கள் பின்னூட்டத்திற்க்கும் பின்னூட்டம் போடுகிறீர்களா??

பதில் 1) ஆம் 2) இல்லை

7) ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் போதிய இடைவெளி விடுகிறீர்களா?
பதில் 1) ஆம் 2) இல்லை

8) பதிவு எழுதுறதைவிட பின்னூட்டம் போடுறதுல குறியா இருக்கீங்களா?

பதில் 1) ஆம் 2) இல்லை

9) கும்மிக்கும் கும்பிக்கும் அர்த்தம் தெரியுமா?

பதில் 1) ஆம் 2) இல்லை

10) நீங்கள் வலையுலகில் இல்லாவிட்டாலும் மற்றவர்கள் உங்களுக்கு மற்றவர்கள் ப்ராக்ஸி கொடுக்கிறாங்களா?

பதில் 1) ஆம் 2) இல்லை


ரிசல்ட்:
மேற்கண்ட கேள்விகளுக்கு 7-10 பதில்களுக்கு ஆம் என்று சொல்லியிறுந்தால்
நீங்க குட்டி பாப்பா உங்களுக்கு cerelac பரிந்துரை செய்யபடுகிறது .

4-6 பதில்களுக்கு ஆம் என்று சொல்லியிறுந்தால் "complan" தேவை.(வளர்ந்து வருகிறீர்கள் இருந்தாலும் ஊட்டசத்து தேவை படுகிறது.

1-3 பதில்களுக்கு ஆம் என்று சொல்லி இருந்தால் நீங்க ஆளாகி விட்டீர்கள்.

ஒரு பதிலுக்கு கூட ஆம் என்று பதில் சொல்லவில்லையா....அப்ப நீங்க இந்த வார நட்சத்திரம் அல்லது நீங்கதான் "இல்லி வடை"


Thursday, June 7, 2007

அப்படி போடு போடு போடு....


ஒவ்வொருத்ரும் ஸ்கூலில் அடி வாங்கி இருப்பீங்க அதன் பின்னனியில் சில சுவையாண சம்பவங்கள் இருக்கும் அப்படி "அடி"யேன் அடி வாங்கிய கதை...நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

நான் வீட்டுல ஒரே பிள்ளை என்பதால் அவ்வளவாக வீட்டில் அடி வாங்கியது இல்லை.
ஆனால் படிக்கும் பொழுது பள்ளிகூடத்தில் வாங்கிய அடி அடா அடா உங்க வீட்டு எங்க வீட்டு அடி இல்லைங்க அப்படி அடி வாங்கி இருக்கிறேன். பல சமயம் நம்ம கொழுப்பால் சில சமயம் யாரோ செய்த தவறுக்கு பலி கடா ஆக்க பட்டு இருக்கிறேன். அப்படி நான் அடிவாங்கியதில் மறக்க முடியாதவை.

விளையாட்டு & உடற்பயிற்ச்சி வாத்தியார் அடித்த அடி.
வாரத்தில் ஒரு நாள் கடைசி கிளாஸ் விளையாட்டு, அன்று அது போல் கிரிகெட் விளையாட போனோம், லெக் அம்பெயர் மாதிரி விளையாட்டு வாத்தியார் நின்று கொண்டு இருந்தார், என் முறை பேட்டிங் முதல் இரண்டு பந்து அடிக்க முடியவில்லை , சரி இதுக்கு மேலே வேஸ்ட் பண்ணினா மான பிரச்சினை என்று மூனாவது பந்தை அடிக்க வேகமாக சுற்றினேன் சுற்றின சுற்றில் சொய்ங் என்று பறந்தது பந்து இல்லைங்க என் கையில் இருந்த பேட் போய் நச் என்று அவரின் காலை பதம் பார்த்தது, அதன் பிறகு சட சட ஒரே சத்தம் என் முதுகில் இருந்து, என்ன நடக்குது என்று யோசிபதுக்குள் போட்டு வெளுத்து வாங்கிவிட்டார், ச்சே ஒரு வருங்கால டென்டுல்கரை இப்படியா அடிப்பது என்று கோப பட்டு கொஞ்ச நாள் கிரிக்கெட் விளையாடம இருந்தேன் அது தனிகதை. மறு நாள் அவரை பார்க்கும் பொழுதுதான் ஏன் அப்படி அடித்தார் என்று தெரிந்தது,காலில் கட்டு போட்டு 16 வயதினிலே கமல் மாதிரி நடந்து வந்தார்.

பத்தாவது படிக்கும் பொழுது R.K அடித்த அடி.நான் போன "சாமி" படத்திற்க்கு அவரும் வந்து அவரை நான் பார்த்ததினால் ஒரு குற்ற உணர்ச்சியிலா இல்லை பத்தாவதிலே ""சாமி" படம்" பார்த்து இவன் என்ன பண்ண போறான் என்ற அக்கறையிலா என்று தெரியவில்லை, கிளாஸ் உள்ளே வந்து நேரா என் கடைசி டெஸ்க்கு வந்து என்ன ஏது என்று சொல்லமலே அடி அடினு அடித்தார் அதுவும் என் டெஸ்க் கிளாஸ் மூலையில் இருந்தது அவருக்கு வசதியாக போய்விட்டது மூலையிலவிட்டுகிட்டு கும்மு கும்முனு கும்மி எடுத்துட்டாரு.

A.R என்ற கணக்கு வாத்தியாரிடம்.கிளாசில் எனக்கும் இன்னொறு பையனுக்கும் சண்டை . சண்டையில் அவனை அடிக்க துரத்திக்கொண்டு ஓடினேன் ஓடியவன் கிளாஸ் ரூம்க்கு வெளியே போய் நின்று என்னை திரும்ப பார்த்தான் நான் கிளாஸ் ரூம் வாசலில் ஒரு காலை ஸ்டைலா தூக்கி புரூஸ்லி கூப்பிடும் ஸ்டைலில் நின்று கொண்டு கைகலால் வாடா வாடா என்று கூப்பிட்டேன் வந்தது கணக்கு வாத்தியார், காலை தூக்கி கொண்டு உதைப்பது போல் நின்று கொண்டு இருப்பதை பார்த்தவர் துவைத்து காய போடாத குறை ஒன்றுதான் அப்படி அடித்தார்.

11வது படிக்கும் பொழுது கிளாஸ் டெஸ்ட் வைத்தார் NN என்ற வாத்தியார், அவர் டெஸ்ட் வைப்பதற்க்கு முன்பே சொன்னார் ஐந்து தவறு வரை இருக்கலாம் அதற்க்கு மேல் போனால் ஒவ்வொரு தவறுக்கும் பத்து பத்து அடி என்று சொல்லி இருந்தார், நாம எழுத போவது புக்கை பார்த்து நாம தவறே இல்லாம எழுதினோம் என்றால் அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் என்னை நம்ம மாட்டார் அவர், ஆகையால் நாம பார்த்தே எழுதினாலும் நாமாக வேணும் என்று நாலு தவறு செய்வோம் ஐந்துக்கு மேல் போனால்தானே அடி என்று புக்கை பார்த்து எழுதினேன். என் கெட்ட நேரம் எழுதும் பொழுது தானாக நான்கு தவறு + கூடுதலாக நானாக வேண்டும் என்றே வைத்த நான்கு தவறு ஆக மொத்தம் எட்டு தவறு எனக்கு 40 அடி என்று முடிவானது , கையை நீட்டி அடித்து கொண்டு இருக்கும் பொழுது வலியில் கம்பை பிடித்துவிட்டேன் என்னமோ சட்டையை பிடித்த மாதிரி அவருக்கு கோபம் வந்து பின்னி பெடல் எடுத்துவிட்டார்.

பிறகு 12வதில் தமிழ் ஸார்யிடம் வாங்கிய அடி எங்க பள்ளிகூடத்தில் ஒரு பழக்கம் உண்டு காலையில் பிரேயரின் பொழுது கிளாஸ் வாரியாக அமர்ந்து இருக்க வேண்டும். அப்பொழுது எங்க பள்ளிகூடத்தில் ஒரு போர்டில் முதல் நாளே ஒரு திருக்குறளும் அதற்க்கு விளக்கமும் எழுதி போட்டு இருப்பார்கள்,அதை ஒவ்வொருவரும் தனியாக ஒரு நோட்டில் எழுதிவைத்து இருக்கவேண்டும் அதன் கூடவே அன்றைய முக்கிய செய்திகள் குறைந்தது ஐந்து எழுதி இருக்க வேண்டும். HM அவர்கள் இந்த row வில் இத்தனையாவது பையன் என்பார் அவன் எழுந்து குறளையும் அதன் விளக்கத்தையும் சொல்லவேண்டும் குறைந்தது 700 அல்லது 800 பேர் இருக்கும் கூட்டத்தில். அப்படி அவனுக்கு தெரியவில்லை என்றால் அப்பொழுதே அவன் எழுந்து HM ரூம் வாசலில் போய் முட்டி போட வேண்டும்,பின் வந்து தமிழ் வாத்தியாரிடம் அர்ச்சனை வாங்க வேண்டும், சரி பிரேயருக்கு வந்தாதானே இப்படி என்று லேட்டாக போனால் பள்ளி கூடத்து வாசலிலேயே அடி வாங்க வேண்டும். இதில் உள்ளுக்குள் நாலு சுவற்றிற்குள் அடிவாங்குவது தான் சால சிறந்தது என்று நான் முன்பே போய் விடுவேன். அன்று அப்படி போன பொழுது எங்கே உன் நோட்டை காட்டு என்றார், நான் எழுதி இருந்தது பிரதமர் வெளிநாட்டு பயணம் ,பின் அன்றைய வெப்ப நிலை. திருச்சி 101, தஞ்சை...(அனேக பக்கங்களில் இதைதான் எழுதி இருந்தேன்)இப்படி எழுதி இருந்ததை பார்த்து விட்டு என்னடா இது நியுஸ் எழுத சொன்னா வெப்ப நிலையை எழுதி இருக்க என்றார். ஏன் அதையும் தான் நியுஸ்ல சொல்லுராங்க அப்ப அதுவும் நியுஸ் தானே என்றேன் , சொன்ன பிறகு என் கிளாஸில் இருந்து HM ரூம் வரை அடித்தே இழுத்து கொண்டு சென்றார் HM அவர் பங்குக்கு கொஞ்சம். பின் ஒரு வாரம் அவரின் தமிழ் கிளாஸின் பொழுது வெளியே போய் வாசல் படியில் புத்தகத்தை வைத்து நிற்க்க வேண்டும்.

இப்படியாக எந்த வாத்தியாருகிட்டயும் நாம அடி வாங்கலேயே என்று பின்னால் ஒரு குறை வந்துவிடகூடாது என்று எல்லாரிடமும் அடிவாங்கி ஒரு வழியா ஸ்கூலை முடித்து கொண்டு காலேஜில் சேர்ந்தேன். அதன் பிறகு அடிவாங்குவதற்கு மங்களம் பாடபட்டது.

Wednesday, June 6, 2007

சாரி அப்துல்கலாம் ஜீ


வெங்கட்ராமனுக்காக இந்த உடனடி பதிவு. நன்றி வெங்கட்ராமன் உங்கள் குட்டுக்கு.

கோடை கிளு கிளு ஸ்பெசல்































இவர்கள் அழகின் ரகசியம் உங்களுக்கு தெரியவேண்டுமா?ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்கபருவத்துல பண்ணி குட்டி கூட அழகாகதான் இருக்கும் என்று.எப்படி என்று தெரியாதவர்களுக்கு கீழே உள்ள படம்.



Tuesday, June 5, 2007

இன்றைய கார்ட்டூன்




இன்றைய காமெடி அறிக்கைகள்

நர்ஸ் ஜெயலெச்சுமி: நான் ரொம்ப கவுரவமாண குடும்பத்தை சேர்ந்தவள், என்னை கலங்கபடுத்த முயற்சிக்கிறார்.

முதல்வர்: வண்டி ஓட்டி செல்பவர்கள் கட்டாயமாக தலை கவசம் தலையில் தான் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை, பின் சீட்டிலோ இல்லை சைட், பாக்ஸிலோ அவர் அவர் வசதிக்கேற்ப்ப எங்க எங்க மாட்டிக்கலாம் என்று தோனுதோ அங்க அங்க மாட்டிக்கலாம்.

தலைவி: ஏய் ங்கொயாலே, நாளைக்கு நீ இருக்கியா இல்ல நான் இருக்கனாங்குறத பார்த்துடலாம். இன்னா திமிரு இருந்தா என் இதய தெய்வம் வாழ்ந்த இடத்த இடிக்க நோட்டிஸ் விடுவ!

விஜயகாந்: மதுரை மத்திய தொகுதியில் என்னை தனியாக எதிர்க்க முடியுமா தில் இருக்கா? ஆங்ங்ங்

Monday, June 4, 2007

நண்பனின் கழுதை

நண்பனின் கழுதை சாரி கவிதை!

கவிதை 1

காலையில் எழுந்ததும்
இந்துக்கள் படிப்பதோ கீதை
முஸ்லிம்கள் படிப்பதோ குர்ரான்
கிறிஸ்துவர்கள் படிப்பதோ பைபிள்
ஆனால் நான் படிப்பதோ
நீ எழுதிய உன் காதல் கடிதத்தை.......


"டேய் இத்தனை நாளா காலையில் எழுந்ததும் ஒரு கழுதை போட்டோவும்அதுல என்னை பார் யோகம் வரும்ன்னுஎழுதி இருக்கிறதை படிப்பாய்!அதுதான் உன் காதலி கடிதம்+ காதலி போட்டோஎன்னு இப்பதான் டா புரிஞ்சுக்கிட்டேன்."

கவிதை 2

என் கண்னென்னும் காமிராவில் (கேமிரா இல்லேங்குறத எப்படி எல்லாம் சொல்லுற டா நீ!!!)
என் இதயமென்னும் பிலிம் மாட்டி
நான் பிடித்த உன் புகைப்படத்தை
என் கண்ணீரால் கழுவி (ஏன் அவ போட்டோவ பார்த்தா கண்ணீர் விடும் படி அட்டு பிகரா இருப்பாளோ!!!)
என் நெஞ்சென்னும் சுவற்றில் (இங்க என்கிட்ட ஒரு ஆணிய கொடு அப்புறம் எங்க ஆணி அடிச்சு அவபோட்டோவ மாட்டுறேங்குறத மட்டும்பாரு...)
என் காதல்லென்னும் ஆணியால்
என் மனதில் பதித்துவிட்டேனடி
என் காதலியே.

நன்றி (டேய் இத நாங்க சொல்லனும் உனக்கு, ஏதோ இரண்டு கவிதையோட இன்னைக்கு எங்கள விட்டியேன்னு...)

Sunday, June 3, 2007

சந்தேகங்கள்

தமிழ் மொழி மத்தியில் ஆட்சி மொழியாக வரவேண்டும்?
அதனால் என்ன பயன்? அப்ப சில மாதம் முன்பு தமிழ் மொழியை செந்தமிழ் மொழியா அறிவிச்சபொழுது சாதனையாசொன்னீங்களே. அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்.


ஹெல்மெட் அணிய சொல்லி கட்டாயபடுத்தி பொதுமக்களுக்கு தொல்லை தரகூடாது?
போன வாரம் எங்க வீட்டுல அதிகாரிகள் கரண்ட் பில் கட்டு, போன் பில் கட்டு என்று தொல்லை தருகிறார்கள் அதற்க்கும் ஏதும் சலுகை உண்டா.

டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய சொல்லி மூன்று நாள் போராட்டம்?
அம்மா ஆச்சியில் ஏன் இந்த போராட்டத்தை செய்யவில்லை...

பாப் உல்மர் கொலை இயற்கையானதுதான் என்று அறிவிக்க போகிறார்களாம்...
அவரே கழுத்தை நெறிச்சு செத்துபோனாரா?