
கொஞ்ச நாளைக்கு முன்னாடி எல்லா ”பிரபல பதிவருங்க” பிளாக்கின் சைட் பாரில் நான் ட்விட்டுறேன் நீ ட்விட்டுறியா? என்னோடு ட்விட்ட, என்னோடு நொட்டன்னு ஏகப்பட்ட விளம்பரங்கள் சரி என்ன கருமாந்திரமோ இருந்துட்டு போவுட்டும் நமக்கு எதுக்கு அதெல்லாம் இங்க ஒரு கடைக்கே ஆள் சேர்க்கமுடியல இதுல எதுக்கு ட்விட்டு அது இதுன்னு எதுக்குன்னு பேசாம இருந்துட்டேன்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆயகலைகள் அனைத்தையும் கரைச்சு குடிச்சவரான அன்பு குருஜி சுந்தரும் ஒரு பதிவில் எனக்கு ட்விட்டர்
புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை என்று சொல்லி வேறு ஏதோ சொல்லப்போக சுரேஷ்கண்ணனுக்கும் அவருக்கும் சண்டை வந்தது.
என்னடா என் குருஜிக்கு வந்த சோதனை என்றும் நான் யோசித்துக்கொண்டு இருந்தபொழுது என் அறை நண்பர் சிவராமன் எப்பொழுதும் ட்விட்டுவார் , ட்விட்டரை பற்றி அடிக்கடி பேசுவார் சில பதிவுலக ஜாம்பாவான்கள் கூட அங்க சோபிக்கமுடியவில்லை என்றும் சொன்னார் அட நமக்கு எதுக்கு வம்பு என்று இருந்துவிட்டேன்.
திடிர் என்று ஒரு நாள் ஞானோதயம் வர அப்படி என்னதான் அதில் இருக்குன்னு பார்க்கலாம் என்று ஒரு யூசர் நேம் ஐடி கிரியேட் செஞ்சு பார்த்தேன் ஒன்னும் பிடிபடல அப்படியே விட்டுவிட்டேன், அப்புறம் பாலோயர்ஸ் சேர சேர என்னடா இது என்று எட்டிபார்க்க ஆரம்பிச்சேன் கொஞ்சம் கொஞ்சமாக சிவராமன் , புரூனோ, இளா எல்லாம் சொல்லி கொடுத்தாங்க புரிஞ்சுது அதான் உங்களுக்கு விளக்கமாக சொல்லலாமேன்னு இந்த பதிவு.
ஸ்கூல் படிக்கும் பொழுது ஒரு பாராகிராப் கொடுத்துட்டு அதை சுருக்கி அர்த்தம் மாறாமல் ஒரு 4 வரியில் எழுத சொல்வார்கள். அதுபோல் ஒரு சம்பவம் சொல்லி அதை டெலிகிராபிக் மெசேஜ்ஜாக எழுத சொல்வார்கள்
உதாரணத்துக்கு திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த குவாட்டர் கோவிந்தனின் மனைவியான பரமேஸ்வரி வயது 68 இன்று காலை எழுந்து தண்ணீர் பிடிக்க பைப்படிக்கு சென்ற பொழுது கால் வழுக்கி கீழே விழுந்து மண்டை உடைந்து கபால மோட்சம் அடைந்தார். என்ற செய்தியை டெலிகிராபிக் மெசேஜ்ஜாக எப்படி சொல்வது?
”குவாட்டர் கோவிந்தன் மனைவி பரமேஸ்வரி ”கோ”யிந்தா கோயிந்தா” ஸ்டார்ட் இமிடியட்லிஇவ்வளோ தான் இது எழுத தெரிஞ்சால் போதும் நீங்கள் ட்விட்டராக ஆகலாம்! ஏன் இப்படி என்றால் அங்க அதிகபட்சமாக 140 எழுத்துக்கள் தான் டைப் செய்ய முடியும்!
நாம எல்லாம் குறும்படத்தையே 1 மணி நேரம் எடுக்கும் ஆட்களை வெச்சு இருக்கிறோம், சிலர் எழுதும் பதிவை ஸ்குரோல் செஞ்சு பார்க்கவே 5 நிமிடம் ஆவுது(படிக்க இல்லை), இவர்களை எல்லாம் வெச்சுக்கிட்டு எப்படி ட்விட்டுவது என்று கேள்வி கேட்டால் பதில் என்னிடம் இல்லை:)
அப்புறம் என்னத்த ட்விட்டுவது? எதை பற்றி வேண்டும் என்றாலும் ட்விட்டலாம் இதுதான் என்று வரைமுறை இல்லை
எடுத்துகாட்டாக
காலையில் எழுந்து ஆபிஸ் வந்தேன் பஸ்ஸில் கூட்டம் அதிகம்! இது ஒரு ட்விட்டர் மெசேஜாக போடலாம்
பாலோயர்ஸ் அதிகமாக இருந்தால் அச்சிச்சோ அது என்ன பஸ் என்று கேள்வி கேட்பார்கள்?
நீங்களும் அது 47A எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்லலாம்!
அவரும் கூட்டம் அதிகமாக இருக்கா ஏன் அரசு அதிக பஸ் விடவில்லையா என்பார்
நீங்களும் எத்தனை பஸ் இருந்தாலும் பத்தாது என்று சொல்லலாம்.
இப்படியே மாறி மாறி ட்விட்டலாம்.
என்னது? இத பேச எதுக்கு ட்விட்டனும் சாட் விண்டோவில் பேசிக்கலாமேன்னு கேட்டால் எனக்கு பதில் சொல்லதெரியாதுங்கோ!
நாலு பேரு பாலோயரா ஆவனும் என்றால்நேற்று மன்மோகன் சிங் பேசிய அபத்தமான பேச்சு லிங் என்று அந்த செய்தி வந்த பக்கதுக்கு லிங் கொடுக்கனும். (மன் மோகன் பேச்சுன்னாலே அபத்தமாக இருக்கும் என்பது தெரிஞ்சதுதான் இருந்தாலும் லிங் கொடுக்கனும்),
லாலு பேசிய பேச்சுக்கு லிங் என்று லிங் கொடுக்கனும் (முக்கியமாக இவை எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பது நல்லது, அப்பொழுதுதான் ஒரு கெத்து கிடைக்கும்) நீங்க பாட்டுக்கு தினதந்திக்கு எல்லாம் லிங் கொடுத்தால் ஒன்னும் சொல்வதுக்கு இல்லை:)
இது என்னடா வம்பா போச்சு இப்படி படிச்சுதான் அதுக்கு லிங் கொடுக்கனுமா? அதெல்லாம் சரி வராது நான் தருமி பரம்பரை என்றாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை நீங்க கேள்வி கேட்கலாம். எதை பற்றி?
சுண்டைகாய் பொறியல் செய்முறை லிங் கிடைக்குமா?
மனைவி செய்யும் சாம்பாரின் ருசியை மாற்றுவது எப்படி?
ராக்கமா கைய தட்டு பாட்டு எங்கு டவுன் லோட் செய்யலாம்? இப்படி எல்லாம் தோன்றியதை கேட்கலாம்!
அப்புறம் முக்கியமான விசயம் நீங்க நாலு பேருக்கு பாலோயரா ஆவனும்
அப்படி ஆனா அவுங்க ட்விட்டுவது உங்க பேஜில் வரும் யார் யாரை பாலோயரா ஆக்கலாம் யார் யார் எப்படி எப்படி?
அங்கு நம்ம கேள்வி நாயகன் புருனோ வழக்கம் போல் புள்ளிவிவரங்களுக்கான லிங்கோடு ட்விட்டுவார். சமீபத்தில் விமான ஸ்ட்ரைக் பற்றி இவரும் பத்ரியும் காரசாரவிவதாம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க, நீ என்னா செஞ்சேன்னு கேட்குறீங்களா? இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலைன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். புள்ளி விவரங்கள், செய்திகள் வேண்டும் என்றால் இவர்களுக்கு பாலோயரா ஆவனும்...என்ன இளையராஜாவை பற்றி மட்டும் பேசாம இருக்கனும் புருனோவிடம்:)
அப்புறம் எழுத்துலக ஜாம்பாவான்கள் பா.ரா இருக்காக, சொக்கன் இருக்காக, எப்பவும் சீரியசாகவே பேசும் ஐகரன்பிரகாஸ், பாஸ்டன் பாலா, அன்புடன் பாலா இவுங்க எல்லாம் இருக்காக.
வில்லங்கமான டாப்பிக் ஆள் வேண்டும் என்றால் TBCD
கவிமடதளபதி பினாத்தலார்
அப்புறம் ஜாலியான்னா ஆளா வேண்டும் என்றால் இலவச கொத்தனார், கானா பிரபா
மொக்கையாக என்றால் அதிஷா, நான்:) இப்படி பலர் இருக்காங்க அப்ப அப்ப அய்யனார் நான் வெச்ச மீன் குழம்பை சாப்பிட வருகிறீர்களா என்று தலைய காட்டுவார் இப்பதான் ஜ்வோராம் சுந்தர், பைத்தியகாரன் எல்லாம் சேர்ந்து இருக்காங்க இவர்கள் எல்லாம் சீக்கிரம் பார்ம்க்கு வரும் முன்பே சேர்ந்துவிடுவது நல்லது.
தத்துவம்: நீயும் பிரண்டும் டைப்பினா அது சாட்டு, நீ மட்டும் டைப்பினா அது ட்விட்டு!
டிஸ்கி: சுரேஷ்கண்ணனுக்கு போட்டியாக பிளாக் ஆரம்பித்தேன் என்று அண்ணாச்சி போன சந்திப்பில் சொன்னார், (அவருக்காக இந்த டிஸ்கி) சுரேஷ்கண்ணன் ட்விட்டரிலும் ட்விட்டுகிறார் சீக்கிரம் வாங்க அண்ணாச்சி!