Monday, April 26, 2010

பொத்திவெச்ச மல்லிகை மொட்டு...

கதைப்படி கதாநாயகன் ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவன். எப்படின்னா? ஜுரம் வந்து டாக்டரிடம் போனால் கூட ஜென்ஸ் டாக்டராக தான் பார்த்து போவான். ஒரு முறை வேளச்சேரியில் தங்கி வேலை பார்த்துக்கொண்டு இருந்த பொழுது, கடுமையான சுரம். அருகில் இருந்த மருத்துவமனைக்கு நண்பன் ஒருவன் அழைத்துச்சென்றான், இவன் நேரம் அங்கிருந்த ஜென்ஸ் டாக்டர் லீவ், வேறு வழியே இல்லாமல் லேடி டாக்டரிடம் காட்டவேண்டியதாக போச்சு. அவுங்க டெஸ்ட் செஞ்சுட்டு ஊசி மருந்து எழுதி கொடுத்து வாங்கி வர சொன்னாங்க, வாங்கிட்டு வந்த மருந்தை டாக்டரிடம் கொடுத்தான்.

டிஸ்போசல் சிரஞ்ஜில் மருத்தை எடுத்து அதை ஒரு அமுக்கு அமுக்கி ரெண்டு சொட்டு மருத்து சும்மா சாமிக்குன்னு தரையில் விழுந்ததும், டாக்டர் சொன்னாங்க கொஞ்சம் பேண்டை இறக்குங்க என்று.. பதறிபோன ஹீரோ அச்சிச்சோ முடியாது கையில் போடுங்க என்று சொல்ல டாக்டர் இல்லை இதை கையில் போடமுடியாது, பின்னாடிதான் போடனும் என்று பிடிவாதம் பிடிக்க அப்ப வேற ஜென்ஸ் டாக்டரை விட்டு போட சொல்லுங்க இல்லை ஊசியே வேண்டாம் என்று சொல்லி பிடிவாதம் பிடிச்சான். கூட வந்த நண்பன் திட்டியும் போடா உடம்பு சரி இல்லை என்றாலும் பரவாயில்லை என்று கிளம்பி வெளியே வந்துட்டான் நம்ம ஹீரோ. கடைசிவரை ஊசி போட்டுக்கவே இல்லை.

சரி இப்ப எதுக்கு இந்த ப்ளாஸ் பேக் என்று கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கு, இப்படி ஊசி பின்னாடி போட்டுக்கவே கூச்சப்படும் நம்ம ஹீரோ வாழ்வில் ஒரு புயல் அடிச்சு அவன் கட்டி காத்து வந்த கற்பு காற்றில் பறந்து போச்சு.. எப்படின்னு சொல்றேன் கேளுங்க.

நம்ம ஹீரோவுக்கு கல்யாணம் ஆகி ஒருமாசம் கூட ஆகவில்லை வேலை விசயமாக மனைவியை விட்டு பிரிஞ்சு இருக்க வேண்டிய சூழ்நிலை, எப்படியும் மனைவியை ஒரு இரண்டு மாசத்தில் அவன் இருக்கும் இடத்துக்கு அழைச்சுக்கிட்டு போய்விடனும் என்ற வெறியோடு கிளம்பி போனான் நம்ம ஹீரோ. போய் ஒரு பத்து நாள்தான் ஆகியிருக்கும் தலைவருக்கு ஒண்ணுக்கு அடிக்கும் பொழுது ஒண்ணுக்கோடு வலியும் கொஞ்சம் இரத்தமும் சேர்ந்து வர ஆரம்பிச்சிட்டு. ஆஹா இதுவரைக்கு ஒழுங்காதானே இருந்துச்சு, மனைவியை அழைச்சிக்கிட்டு வரும் நேரம் பார்த்து இப்படி ஆவுதே என்ற கவலையோடு டாக்டரை பார்க்க போனான் நம்ம ஹீரோ.

அங்க ரிசப்சனில் இருந்த டீவியில் வயசுக்கு வராத பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்ட கவுண்டமணிக்கு செந்தில் ஐடியா கொடுத்து கிரிக்கெட் விளையாட சொல்லி, பால் கரெக்ட்டா பொண்ணோட அப்பா மண்டையை உடைக்காமல் கவுண்டமணியை பதம் பார்க்கவேண்டிய இடத்தில் பதம் பார்த்துவிடும், டாக்டர் ஆப்ரேசன் முடிஞ்சதும் உங்களை காப்பாத்திட்டோம் ஆனா இனி நீங்க தாம்பத்தியம் வெச்சிக்க முடியாது என்று சொல்லுவார், இந்த காமெடியை பார்த்ததும் நம்ம ஹீரோ கொஞ்சம் ஜர்க் ஆனாலும். பயப்படாத மாதிரி உள்ளே போய் டாக்டரை பார்த்தான், எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து வந்ததும் அதை பார்த்த டாக்டர் உங்களுக்கு சிறுநீரக கல் இருக்கு, இந்த பக்கம் கிட்னியில் இரண்டு அந்த பக்கம் இரண்டு இதோ கிட்னிக்கும் பிளாடருக்கும் போகும் பாதையில் ஒன்னு வந்து சிக்கி ஜாம் ஆகி நிக்குது அதான் அது நகரும் பொழுது வலியோடு இரத்தமும் வருகிறது என்றார். அவசரமாக அதை ஆப்ரேசன் செஞ்சு கல்லை உடைக்கனும் என்று டாக்டர் சொல்ல. முதலுக்கு மோசம் வராது என்ற உறுதி மொழியை வாங்கிக்கிட்டு விரைவில் வருகிறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினான் நம்ம ஹீரோ.

வீட்டுக்கு போய் படுத்ததும் நம்ம ஹீரோவுக்கு பல யோசனை, இந்த ஊரில் இருக்கும் டாக்டருங்ககிட்ட நாம ஒன்னு சொல்லி அது புரியாம அவர் ஒயரிங்கை மாத்தி கொடுத்து ஏதும் சார்ட் சர்கியூட் ஆகி புகைஞ்சு போய்ட்டா என்ன செய்வது? பெட்டர் நம்ம ஊருக்கே போய் ஆப்ரேசன் செஞ்சுக்கலாம் என்று அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்து நண்பர்கள் பலர் கைக்காட்டிய டாக்டரிடம் போய் காட்டி அவரும் சீக்கிரம் ஆப்ரேசன் செஞ்சுடுவது நல்லதுன்னு சொன்னதும், சரி என்று அன்றே அட்மிட் ஆகிவிட்டான் நம்ம ஹீரோ.

மறு நாள் காலை 10 மணிக்கு ஆப்புரேசன், இரவில் இருந்து ஏதும் சாப்பிட கூடாது குடிக்க கூடாது என்று எல்லாம் சொன்னாங்க சரின்னு அங்கிருந்த பெட்டில் படுத்து இருந்தான், ஒரு அழகான நர்ஸ் வந்து, சார் எழுதிருங்க ஆப்ரேசனுக்கு பிரிப்பேர் செய்யனும் என்று சொன்னதும் எழுந்தான், என்ன செய்யனும்? உட்காருங்க என்றதும் உட்காந்தான், கண்ணை ஒரு பச்சை துணியால் கட்டியது அந்த நர்ஸ், படுக்க சொன்னுச்சு அந்த நர்ஸ். படுத்ததும். கொஞ்சம் பேண்டை கழட்டுங்க,சட்டை பனியனை தூக்குங்க என்றதும் பதறி எழுந்த நம்ம ஹீரோ எதுக்குன்னு கேட்டான்.

"ஷேவ் செய்யனும்"

"எங்க?"

"அங்க"

"கொடுங்க நான் செஞ்சுக்கிறேன்"

"முடியாது, வயிறில் இருந்து முட்டி கால் வரை சுத்தமா ஷேவ் செய்யனும்"

"முடியாது நானே செஞ்சிக்கிறேன்"

"இல்லை டாக்டர் என்னைதான் திட்டுவார், கண்ணை கட்டிக்கிட்டு படுங்க"

"என்னங்க இது கண்ணை கட்டிக்கிட்டா சரி ஆகிடுமா? அதெல்லாம் முடியாது."

"சொன்னா புரிஞ்சுக்குங்க, இன்னும் ரெண்டு பேசண்டுக்கு பிரிப்பரேசன் செய்யனும் படுங்க"

"அல்லோ நீங்க சொன்னா புரிஞ்சுக்குங்க, முடியாது அட்லீஸ்ட் Male நர்ஸ் இருந்தா அனுப்புங்க"

"அவுங்களுக்கு நைட் டூட்டி கிடையாது காலையில்தான் வருவாங்க"

"அப்ப காலையிலேயே செஞ்சுக்கலாம் நீங்க போங்க"

"முடியாது"

"ஆப்ரேசன் செய்யலைன்னா கூட பரவாயில்லை, நான் ஒத்துக்கமாட்டேன்"

ஹல்லோ டாக்டர் நான் கமலா பேசுறேன், 203 பேசண்ட் பிரிப்பரேசனுக்கு ஒத்துக்கமாட்டேங்கிறார் அடம்பிடிக்கிறார்,ரொம்ப கூச்சப்படுகிறார். நீங்க பேசுங்க... " ஹல்லோ இந்தாங்க டாக்டர் லைனில் இருக்கிறார்.

டாக்டர் நான் லேடி டாக்டரிடம் ஊசி போட்டுக்க கூட கூச்சப்படுவேன், இதுக்கு எல்லாம் ஒத்துக்கமாட்டேன், ஆப்ரேசன் டிலே ஆனாலும் பரவாயில்லை வலியை தாங்கிக்கிறேன். இது நம்ம ஹீரோ

"ஓக்கே ஓக்கே போனை அவுங்க கிட்ட கொடுங்க"

"ஓக்கே டாக்டர், ஓக்கே டாக்டர் சொல்லிடுறேன்....

"என்ன சொன்னார் டாக்டர்?"

"காலையில் வருவாங்க.." படார்ர்ர்ர்ர்ர்ர்ர் கதவு வேகமாக சாத்தப்பட்டது.

காலையில் ஒரு ஆள் வந்து எல்லாம் முடிஞ்ச பிறகு பச்சை கலர் அங்கி நம்ம ஹீரோவுக்கு கொடுக்கப்பட்டது, ஆப்ரேசன் தியேட்டருக்கு அழைச்சிக்கிட்டு போய் மயக்க மருந்து கொடுத்த பிறகு சில பெண் குரல் கேட்டது, தூக்கி வாரி போட்டாலும் நம்ம ஹீரோவால் ஒன்னும் செய்யமுடியவில்லை. எல்லாம் முடிஞ்சு போச்சு. ரூமில் கொண்டு வந்து போட்ட பிறகு கொஞ்சம் மயக்கம் தெளிஞ்சு நிமிர்ந்து பார்க்க தலையை தூக்கி பார்க்க முடியவில்லை கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருந்துச்சு, மற்றொரு கையால் என்ன நடந்திருக்கு என்று ஆராய்ந்த பொழுது, டிங்கரிங் பட்டி எல்லாம் பார்த்து அதில் ஒரு விரல் மொத்த பிளாஸ்டிக் டியூப் சொறுவி இருந்தது, ஆஹா அது எங்க போவுதுன்னு பார்த்தா ஒரு பிளாஸ்டிக் பையில் போய் முடிவடைந்தது.

கண்ணில் கண்ணீர் வழிய படுத்திருந்தான் நம்ம ஹீரோ, அவனோட நண்பன் ஏன் டா ரொம்ப வலிக்குதா என்றான். அதுக்கு அவன் இல்லைடா இத்தனை வருசம் பொத்தி வெச்சிருந்த கற்பு காற்றில் பறந்து போய்ட்டுடா, ஆப்ரேசன் தியேட்டரில் யாருன்னே தெரியவில்லை பெண் குரல் கேட்டுச்சுடா. என்று அழுதான். அதுக்கு நண்பன் அதான் நீ அவுங்க மூஞ்சை பார்க்கவில்லையே என்றான்.. அதுக்கு ஹீரோ டேய் அவுங்க மூஞ்சை நான் பார்க்கவில்லை என்றால் என்ன....என்று திட்டிவிட்டு போச்சே போச்சே எல்லாம் போச்சேன்னு படுத்து இருந்தான்.

அப்பொழுது கிளிக் என்று கதவு திறக்கும் சத்தம், வெள்ளை டிரஸில் ஒரு ட்ரேயில் மருந்தோடு வந்த நர்ஸ் எப்படி இருக்கு, வலி இருக்கா? என்று கேட்டுக்கிட்டே வலிக்காத மாதிரி ஒரு ஊசியை போட்டு விட்டு, டக்கென்று பச்சை அங்கியை தூக்கி டியூபை பிடிச்சு பார்த்துவிட்டு, ம்ம்ம் இன்னும் யூரின் கலர் மாறல என்று டியூபை ரெண்டு ஆட்டு ஆட்டிவிட்டு போய்விட்டார்கள். ஹீரோவால் ஒன்னியும் சொல்லமுடியல. அதன் பிறகு போற வர நர்ஸ் எல்லாம் தூக்கி பார்த்து டியூபில் வரும் யூரின் கலரை நோட் செய்வது வழக்கமா போய்விட்டது. தலைக்கு மேலே வெள்ளம் போச்சு இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன ஹீரோ சோகமாக படுத்து கிடந்தான்.

அருகில் இருந்த நண்பனை கூப்பிட்டு மச்சி வரண்டாவில் யாரும் டேபிள் சேர் போட்டுக்கிட்டு உட்காந்து இருக்காங்களா பாரு என்றான். அவனும் ஓடி போய் பார்த்துட்டு இல்லைடா, ஏன் ஏதும் செய்யுதா? நர்ஸை கூப்பிடவா என்றான். அதுக்கு ஹீரோ, இல்லை இல்லை கூப்பிட வேண்டாம் என்னமோ எக்ஸ்பிஸன் நடக்கிறமாதிரி போறவங்க வரவங்க எல்லாம் தூக்கி பார்த்து பிள்ளையார் கோவிலில் மணி அடிப்பது போல் டியூபை ஆட்டுறாங்களே, அதான் வெளியில் யாரும் உட்காந்து டிக்கெட் கொடுத்து அனுப்புறாங்களோன்னு டவுட் என்றான். உனக்கு தையலை கீழே போட்டு இருக்க கூடாது. வாயில் போட்டு இருக்கனும் என்று திட்டிவிட்டு படுத்தான் நண்பன்.

இரண்டாவது நாள் ஒயரிங் எல்லாம் கட் செஞ்சுவிட்டு டாக்டர் நீங்க வீட்டுக்கு போகலாம், ஆனா ஒரு மாசம் "ஒன்னியும் செய்யக்கூடாது". ஊர்ல பாம்பு அடிக்கும் பொழுது தலையை அடிச்சு நசுக்கிட்டாலும் வாலு ஆடும், உயிர் இருக்கு பாருன்னு போட்டு செத்த பாம்பை அடிஅடின்னு அடிப்பாங்க அதுமாதிரி அடிச்சிட்டு பேசுறீங்க பேச்சு, நீங்க சொல்லவில்லை என்றாலும் ஒன்னியும் முடியாது போல டேமேஜ் அப்படி இருக்குன்னு மனசுக்குள் நினைச்சுக்கிட்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வரும் பொழுது முறைச்சு பார்த்துக்கிட்டே போனது, பிரிப்பரேசன் செய்யவந்து திரும்பி போன நர்ஸ், ஊரே கூடி நின்னு வேடிக்கை பார்த்துவிட்டு உன்னை மட்டும் விரட்டி அடிச்சிட்டேனே, நீ விட்ட சாபமா இருக்குமா இல்ல ஏதும் நாயை கல்லால் அடிச்சு பிரிச்சதால் அந்த நாய்விட்ட சாபமா இருக்குமா ஏன் இப்படி என்று யோசனையில் வீட்டுக்கு வந்தான் ஹீரோ.

விவேக் ஒரு படத்தில் பின்னாடி வேஸ்டியை தூக்கி பிடிக்க ஆள் இருப்பது போல் இவன் முன்னாடி கைலியை தூக்கி பிடிச்சுக்கிட்டு சேரில் உட்காந்திருந்தப்ப விசுக் என்று ஒரு கல் பறந்து போய் வேலியில் விழுந்ததும் லொள் லொள் என்று சத்தத்தோடு இரண்டு நாய்கள் பிரிந்து வேறு வேறு பக்கம் ஓட அதை தொரத்திக்கிட்டு ஒரு சிறுவர் கூட்டம் ஓடியது. அந்த பசங்களை நினைச்சு சிரிச்சுக்கிட்டு உட்காந்திருந்தான் நம்ம ஹீரோ.

*************சில வருடங்களுக்கு பிறகு********************
அதன்பிறகு லேடி டாக்டர் ஜென்ஸ் டாக்டர் என்று எல்லாம் பார்ப்பதை விட்டுவிட்டான் நம்ம ஹீரோ.

டாக்டர் ஹல்லோ ஹல்லோ இப்ப எதுக்கு பேண்டை கீழே இறக்குறீங்க இந்த ஊசியை கையிலேயே போட்டுக்கலாம். என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டான் நம்ம ஹீரோ.

Sunday, April 25, 2010

IPL & லலித் மோடி ஸ்பெசல் 26-4-10

வேற வேற வேற வேட்டைக்காரன்

உள்ளுக்குள் அழுகிறேன்,வெளியில் சிரிக்கிறேன்





ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவன் மண்ணுக்குளே...


சிறந்த அடிதாங்கி
மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா...

Saturday, April 24, 2010

கிராமத்தானுங்க என்றால் இளப்பமா?

கருப்பை வாய் புற்றுநோய்த் தடுப்பூசி போடப்பட்டதில், ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த, 10-14 வயதுள்ள சிறுமிகள் நான்கு பேர் இறந்தனர். 120 பேர் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரு தினங்களுக்கு முன் மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து, மத்திய அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டியது. ஆனாலும், மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டார்.


கொடிய நோய்களுக்குத் தீர்வு காணும் தடுப்பூசிகள் மனிதர்களுக்குப் பரிசோதனை அடிப்படையில் போடப்படுவது புதிதல்ல. இத்தகைய சோதனைகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்தினாலும், விலங்குகளுக்கு ஏற்படும் அதே விளைவுகள் மனிதர்களுக்கும் ஏற்படும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆகவே, இந்தச் சோதனைகளை மனிதர்களிடம்தான் நடத்தியாக வேண்டும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (உங்க வீட்டிலும் பொண்ணுங்க இருப்பாங்களே அவுங்களுக்கும் போட்டு டெஸ்ட் செய்ய வேண்டியதுதானே???)

அதேசமயம், இதை ரகசியமாக நடத்துவதும், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வோருக்குத் தெரிவிக்காமல் இருப்பதும், இவை யாவற்றுக்கும் மேலாக, இந்தச் சோதனைக்கு உள்ளாகும் நபர்களுக்கு உடனடி மருத்துவச் சேவை அல்லது மருத்துவக் கண்காணிப்பு இல்லாததும்தான் ஆட்சேபணைக்குரியவை.

குலாம் நபி ஆசாத் கூறியுள்ள மறுப்பு, எந்தவித மறுசிந்தனைக்கும் இடமளிக்காத தட்டையான வாதம். இந்த மருந்தினால் அந்த நான்கு பேரும் சாகவில்லை என்று மறுப்பது ஆளும்கட்சிக்கே உரித்தான நெளிவுசுளிவு. யானைக்கால் நோய்த் தடுப்பு மருந்து சாப்பிட்டு இறந்தாலும், தட்டம்மை தடுப்பூசியில் குழந்தை இறந்தாலும், போலியோ சொட்டு மருந்தினால் ஏதோ ஒரு குழந்தை இறக்க நேரிட்டாலும், தடாலடியாக வரும் பதில் இது ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதைத்தான் அவரும் செய்திருக்கிறார்.


கம்மம் மாவட்டத்தில், மலைவாழ் மக்களிடம் நடத்தப்பட்ட இந்தத் தடுப்பூசி பரிசோதனை மாநில அரசாலும், இந்திய மருத்துவ ஆய்வுக் குழுமத்தாலும் அனுமதிக்கப்பட்டுத்தான் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் தொடர்புடைய தன்னார்வத் தொண்டு நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த பாத் இன்டர்நேஷனல் என்பதாகும். இந்த நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் பார்மசூடிக்கல் என்ற நிறுவனத்துக்காக இந்த மருந்து சோதனையைக் கையில் எடுத்துக்கொண்டு, அதை இந்தியாவில், செயல்விளக்கத் திட்டமாக மேற்கொண்டது என்கிற உண்மைகள்தான், மரணங்களைவிட கொடூரமானதாக இருக்கின்றன.
எச்பிவி எனப்படும் ஹியூமன் பாப்பிலோ வைரஸ் மானுடக் கலவி வழியாகப் பரவுகிறது. பெண்களில் கருப்பைவாய், ஆசனவாய் புற்றுநோய்க்கும், ஆண்களில் பிறப்புறுப்பு புற்றுநோய்க்கும் காரணமாக உள்ளது. இதனால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள 15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 74 சதவீதம் பேர் எச்பிவி பாதிப்பு உள்ளவர்கள் என்பதுதான் உண்மை நிலவரம்.

அமெரிக்காவில் இந்தச் சோதனை இருபத்தியொரு ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது என்று அமைச்சர் கூறுவது, அமெரிக்க நிறுவனம் தரும் புள்ளிவிவரமே தவிர, இதைச் சரிபார்க்க நமக்கு இயலாது. அப்படியே அமைச்சர் சொல்வதைப்போல 21,000 அமெரிக்கப் பெண்களுக்கு எந்தப் பின்விளைவும் இல்லாமல் மிகச் சரியான மருந்தாக இருக்கும் என்றால், அதை வெளிப்படையாக உலகம் அறிய அறிவித்து, அம்மருந்தை சந்தைப்படுத்தியிருப்பார்களே தவிர, இவ்வாறு ரகசியமாக, ஆந்திர மாநிலத்திலும் குஜராத்திலும் கேள்விப்படாத ஊர்களில் வாழும் அப்பாவி மக்களிடம் சோதித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.


அமெரிக்கப் பெண்களை இந்த மருந்து கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து தடுத்துக் காப்பாற்றும் என்றால், இந்தியப் பெண்களுக்கு மட்டும் செயல்பட மறுத்துவிடுமா என்ன?

அதிக மக்கள்தொகை மற்றும் சுகாதார விழிப்புணர்வு இல்லாமை ஆகிய காரணங்களால் இந்தியாவிலும் எச்பிவி பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயினால் இறக்கிறார்கள் என்பதுதான் இந்திய மருத்துவர்கள் தரும் புள்ளிவிவரம்.

இந்த மருந்து வெற்றிகரமானதாக அமையும் என்றால் இது இந்தியர்களுக்கும், ஏன் உலகம் முழுவதற்கும் பயன்தரப் போகிறது என்பதால், இதை இந்தியர்களிடம் சோதித்துப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அதை முறையாகச் செய்யாததுதான் தவறு.

அமெரிக்க மருந்து நிறுவனம் தனது மருந்தைச் சோதனை அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கும் முன்பாக, அந்த மருந்தினால் ஏற்படும் பின்விளைவுகளுக்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தருவதற்காக கணிசமான தொகையை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு பிறகுதான் அவர்களைக் களத்தில் இறக்க வேண்டும்.

அவ்வாறு சோதனைக்கு அனுமதிக்கும்போது அத்தகைய நபர்களை மருத்துவமனை அருகிலேயே, மருத்துவர்களின் நேரடி பார்வையில் தங்க வைத்து பின்விளைவுகள் ஏதாகிலும் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகளை, உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ள நிபந்தனைகளின்படி மத்திய அரசு செய்ய வேண்டும்.

பொது விற்பனைக்கு முன்பாக, நான்காவது கட்டமாக 24 ஆயிரம் பேரிடம் இந்த மருந்து சோதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அவர்களுக்கு இந்த மருந்தை அளிக்கும் முன்பாக, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் பின்விளைவுகளுக்கான இழப்பீடு தொகையை உறுதி செய்து கொண்டு அனுமதிப்பதும், தற்போது பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதும் இந்திய அரசின் கடமை.
இந்த தடுப்பூசி உண்மையிலேயே எச்பிவி-யை எதிர்க்கும் வல்லமை தந்து, பெண்களை கருப்பைவாய் புற்றுநோயிலிருந்து காப்பாற்றுமானால் நமக்கு மிக்க மகிழ்ச்சிதான்.

நன்றி தினமணி

மலைவாழ் மக்கள்,படிப்பறிவு இல்லாத மக்களை ஆயுவு கூட எலிகளாக மாற்றிக்கொள்ளும் அதிகாரத்தை இவர்களுக்கு தந்தது யார்? மோடி, சரத் பவார் விக்கெட் விழவேண்டும்? என்று பிரச்சினை செய்யும் எதிர்கட்சிகள் ஏன் இதை எல்லாம் கண்டுக்கொள்வது இல்லை? இதுபோல ஆய்வுகளை எழை மக்களை வைத்து செய்யாமல் தடுப்பது எப்படி?

Monday, April 19, 2010

குஜித் நடிக்கும்- பல்லா குசல் பார்ட்2

தல குஜித்தின் அடுத்த படத்துக்கு கதை சொல்ல போகிறார் நம்ம வலையுலக சகலகலா வல்லவன் பேதிமூலம்கிருஷ்ணன்.(சற்குணராஜ்க்கு அடுத்தபடியாக பல திறமைகளை சட்டை பேண்ட் போட்டு மூடி வெச்சிருக்கும் ஒரே ஆள்)(இமேஜ் நேம் என்னன்னு பார்த்து ஷாக் ஆவுறவங்களுக்கு இந்த போட்டோ 10 அனுப்பி மயக்கம் தெளியவைக்கப்படும்)

பேதிமூலகிருஷ்ணன்: தல நம்ம பல்லா குசல் ரெண்டையும் மிக்ஸ் செஞ்சு புதுசா தல குஜித் நடக்கும் பல்லா குசல் பார்ட் 2ன்னு பேர் வெச்சி அதிரிபுதிரியா ஒரு படம் செய்யுறோம்.

குஜித்: சூப்பர், அப்ப இத்தாலி போறோம்.

பேதி: எதுக்கு தல இத்தாலி? இன்னும் பட கதையையே சொல்லவில்லை அதுக்குள்ள இத்தாலிங்கிறீங்க?

குஜித்: அங்கதான் கோட் சூட் எல்லாம் ரொம்ப அருமையாகவும், அழகாகவும் கிடைக்குமாம் இப்பதான் அந்த டீடெயில் தெரிஞ்சுது, படம் கதை எப்படி இருந்தா என்ன கோட் சூட் தவிர இனி வேற காஸ்டியூமில் என்னை பார்க்க ரசிகர்கள் விரும்ப மாட்டாங்க.

பேதி: ரைட்டுதான் தல இத்தாலி போறோம், 400 கோட் சூட் வாங்குறோம்.ஒரு ஸ்டெப் வெச்சி நடந்ததும் ரெஸ்ட் எடுக்குறீங்க கோட் மாத்துறோம் அடுத்த ஸ்டெப் வைக்கிறீங்க!

குஜித்: சரி கதையை சொல்லுங்க.

பேதி: ஓப்பனிங் சீன் ஒரு பெண் கையை புடிச்சு நாலு ரவுடிங்க இழுக்கிறாங்க, நீங்க அப்படியே வேகமா ஓடி வர்றீங்க..

குஜித்: என்னது வேகமாகவா நானா? நெவர்...

பேதி: பரவாயில்லை தல கேமிராவை நாங்க வேகமா நகர்த்திக்கிறோம். ரவுடிங்களை நீங்க அட்டாக் செய்ய மெதுவா நடந்து வருகிறீர்கள், ரவுடிங்கஎல்லாம் வேக வேகமா ஓடி வந்து உங்க கிட்ட அடி வாங்கிக்கிட்டு தூரமா போய் விழுறாங்க..டக்குன்னு ஒரு டவுடி ஹீரோயினை நோக்கி கத்தியை வீசுறான், நீங்க ஹீரோயினை கைய புடிச்சு இழுந்து காப்பாத்திடுறீங்க, ஹீரோயின் உங்க மேல பட்டதும் ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி டூயட் பாடபோறீங்க...டான்ஸ் மாஸ்டர் நம்ம பிரபுதேவா தல.

குஜித்: பிரபுதேவா? யாருக்கு ஹீரோயினுக்குதானே டான்ஸ் மாஸ்டர்!

பேதி: புரியலையே தல...

குஜித்: எனக்கு ஏதும் பேசன் ஷோ கொரியோ கிராப்பர் போதும், நான் வித விதமா கோட் போட்டு நடந்து வர ஹீரோயின் டான்ஸ் ஆடுவாங்க, பிரபுதேவா ஹீரோயினுக்கு மட்டும் டான்ஸ் சொல்லிகொடுத்தா போதும்.

பேதி: சரிதல அப்படியே செஞ்சிடலாம்.

குஜித்: ம்ம்ம் மேல சொல்லுங்க..

பேதி: பாட்டு முடிஞ்சதும் அந்த ஹீரோயினை தொரத்திக்கிட்டு ஒரு கும்பல் ஜீப்பில் வருது? நீங்க ஹீரோயின் கைய புடிச்சுக்கிட்டு ஓடுறீங்க...

குஜித்: என்னது நானா ஓடுறேனா???

பேதி: நீங்க ஓடுற மாதிரி கிராப்பிக்ஸில் செஞ்சிக்கிறோம் தல!

குஜித்: நோ நோ எதா இருந்தாலும் ரியலா இருக்கனும், நான் வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டப்பட்டு வேகமா நடக்கிறேன், நீங்க உங்க கேமிராவையும் வேகமா நகர்த்துங்க ஓடுறமாதிரி காட்டிக்கலாம்...

பேதி: அப்படியே ஆகட்டும் தல..அப்படியே வேகமா கைய புடிச்சுக்கிட்டு நடக்குறீங்க.. எதிரே ஒரு பெரிய சுவர் வந்துடுது, அதுக்கு மேல நீங்க நடக்க முடியல, ஆளுங்க நெருங்கிவந்துட்டாங்க...இண்டர்வெல் விடுறோம்... பிறகு டக்குன்னு நீங்க உங்க தலையால சுவரை முட்டுறீங்க சுவர் உடையுது...

குஜித்: நானா???

பேதி: சரி விடுங்க, வில்லன் ஆளுங்க வேகமா ஓடிவருகிறார்கள் நீங்க டக்குன்னு நகருகிறீர்கள், அவுங்க மோதி சுவர் உடைஞ்சுதுன்னு வெச்சிக்கலாம்..

குஜித்: டக்குன்னு நான் நகரனுமா? என்னா மேன் வந்ததில் இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன் என்னை ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிக்க வைப்பதிலேயே குறியா இருக்க, இது சரிவராது நீ கிளம்பு..

(பேதி சோகத்துடன் வெளியே வருகிறார், அங்க வரும் குப்துல்லா அண்ணே இந்த படத்தில் நான் பாட்டு பாடுறேன் எனக்கு சான்ஸ் கொடுங்க என்று கேட்கிறார்)

பேதி: அட போங்க குப்துல்லா குஜித் ரொம்ப ரிஸ்கான சீன் நிறைய இருக்கு என்று படத்தை ட்ராப் செஞ்சுட்டார் இனி வேற ஆள் புடிக்கனும்.

குப்துல்லா: அட நீங்க வேற இந்த கதைக்கு ஏத்த மாதிரி விக்ரம் மாதிரி ரொம்ப நாளா நடைபழகும் ஒரு ஆளை தெரியும் அவரை ஹீரோவா நடிக்க வெச்சாரொம்ப ரியலா இருக்கும்.

பேதி: யாருன்னே அவரு? கால்சீட் கிடைக்குமா?

குப்துல்லா: ஈசியா கிடைக்கும், ரொம்ப ஃபிரியாதான் இருக்கார், பேரு பைகோ! அடிக்கடி இதுமாதிரி நடைபழகிட்டு இருப்பார் அவரை வெச்சி எடுத்தா அவருக்கும் ரீ எண்ட்ரி கொடுத்தமாதிரி இருக்கும் உங்க கதைக்கு ஏத்த ஒரு ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும்.

பேதி: அம்மே...!

குப்துல்லா: ம்ம்ம் கரெக்ட் அங்கதான் எப்பொழுதும் இருப்பார் போய் பாருங்க.

Sunday, April 18, 2010

கார்ட்டூன் குசும்பு 19-4-2010