Sunday, November 25, 2007

ஜெயலலிதா+ சாய்பாபா+ எட்டியூரப்பா+ காங்கிரஸ் கிருஷ்ணசாமி எல்லோரும் ஒரே இடத்தில்.









படம் பெரிதாக தெரிய படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

Wednesday, November 21, 2007

விருப்பம் இல்லை என்றாலும் ரேஷ்மாவுக்காக இது கூட செய்யவில்லை என்றால் எப்படி?

சரியாக தேதி நினைவில்லை ஆனால் அன்றுதான் அவள் என்னிடம் முதன் முதலாக பேசினாள், லைக்யூ லைக்யூ என்ற சிட்டிசன் பாடலை ரிங் டோனாக கொண்ட என் மொபைல் சினிங்கியது, புதிய நம்பராக இருந்ததால் யாராவது கிளைண்ட் தான் போன் போட்டு திட்ட போகிறான் என்ற பயத்திலேயே எடுத்து ஹலோ என்றேன், மறு முனையில் நாய் போல யாராவது கத்துவார்கள் என்று நினைத்தஎனக்கு இனிய ஒரு பெண் குரல் ஹலோ என்றது சரி ராங் நம்பர் தான் போல என்று நினைத்த எனக்கு சராவா என்று கேட்டவுடன்மிகவும் ஆச்சர்யமாக போய்விட்டது.

மொபைலில் லோவாக இருந்த பேட்டரி கூட சர் என்று எகிறி புல் ஜார்ஜ் ஆனது, இருக்காத பின்னே முதன் முதலில் என் மொபைலுக்கு ஒரு பெண் குரல் அதுவும் என் பெயரை சுருக்கமா யாரும் சரா என்று கூப்பிட்டால் உருகி போய்விடுவேன்.மொபைலும் அது பங்கு விசுவாசம் காட்டியது. அழகாய் பேசினாள் மிகவும் இனிய குரல் கேட்டுகொண்டே இருக்கலாம் போன்று இருந்தது. எப்படி என் நம்பர் உங்களுக்கு கிடைத்தது என்னை எப்படி உங்களுக்குதெரியும் என்ற என் கேள்விக்கு சிரிப்பு ஒன்றையே பதிலாக தந்தாள்.

என் பிறந்த நாளை கூட சரியாக சொன்னாள் எதிர் பார்கவில்லை அதை. அவள் பேச்சில் திக்கு முக்காடி போனேன்.

சரி மறுநாள் கூப்பிடுகிறேன் என்று சொன்னால் மனசுக்குள் பட்டாம் பூச்சு பறக்கும் என்றார்கள் அது எல்லாம் வெளியே வந்து பறந்தது. அன்றைய தினம் மிகவும் மகிழ்சியாக தூங்கினேன் எங்களுக்கு இடையேயான பேச்சு மிகவும் நெருங்கியது கடந்த ஒரு வாரமாக இப்பொழுது எல்லாம் ஹாய் டியர் என்றே கூப்பிடும் அந்த இனிய குரலுக்காகவே காத்திருக்க தொடங்கினேன். தினம் ஒரு முறையாவது அவள் என்னிடமும் நான் அவளிடமும்பேசுவது வழக்கம் ஆனது.

என்னிடம் கடைசியாக அவள் கேட்டால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் அவளுக்காக அதை செய்தேன், அதன் பிறகு அவளுக்கும் எனக்குமான உறவு சடார் என்று நின்றுவிட்டது.

இதோ அவள் நினைவாக கையில் ஒரு கிரிடிட் கார்டு.

Sunday, November 18, 2007

நன்றி நன்றி நன்றி

ரொம்ப சந்தோசமாக இருந்தது நேற்று தினமணி கதிரில் உங்க பிளாக் என்று பாஸ்டன் பாலாவின் பின்னூட்டத்தை பார்த்தபொழுது, சரி என்று கிளிக் செஞ்சு பார்த்தா முதல் முதலாக இருந்தது தஞ்சாவூர் குசும்பு சரி ஊர் பேரும், நம்ம பிளாக் பேரும் ஒன்றாக இருந்ததால் தவறுதலாக என்னை சொல்லிவிட்டார் என்று நினைச்சேன் பிறகுதான் கீழே என் பெயரும் இருந்தது.


என்னாடா நம்மளை பத்தி சொல்லி இருக்காங்கன்னு பார்த்தா UAE வரும் முன் என்று எழுதிய பதிவை பற்றிசொல்லி இருக்காங்க. (இந்த பதிவு ஜமாலன் பதிவை படிச்ச பிறகுதான் எழுதனும் என்று தோனியது, அவருக்கும் வித்யாகலைவாணிக்கும் நன்றி)



அட நம்ம பிளாக்கையும் கவனிக்கிறாங்களா என்று என்னும் பொழுது வரும் சந்தோசம் தனிதாங்க. நான் சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை என்னுடைய வலை பதிவை பற்றி இருக்கும் பதிவுகளில் 99.9999% எல்லாம் யாரையாவது கலாய்ச்சது தான். நாம என்னா இலக்கியம் ,தமிழ் வளர்கவா பிளாக் ஆரம்பிச்சு இருக்கோம் படிக்கும் பொழுது ஏதோ ரெண்டு பேர் சத்தம் போட்டு அல்ல லேசாக புன்முறுவல் செஞ்சா கூட போதும் என்றுதான் ஆரம்பிச்சோம்.இதுவரை யாரிடம் இருந்து திட்டோ, அல்லது குட்டோ வாங்காமல் நிறைய பேரை கலாய்ச்சாச்சு, நிச்சயமாக இது வரை யாரையும் மனம் நோகும் படி செய்தது இல்லை, சம்மந்த பட்டவரே மிகவும் ரசிச்சு சிரிச்சேன் என்று சொல்லும் பொழுது மிகவும் மகிழ்சியாக இருக்கும்.


இதுவரை ஆனந்தவிகடனில், தினமலரில் அவரை பற்றி வந்து இருக்கு இவுங்களை பற்றி வந்து இருக்கு என்று பார்க்கும் பொழுது எல்லாம்ராசா ரொம்ப ஆசை படாத உன் லெவலுக்கு எல்லாம் நெட்டில் எழுத இடம் கொடுத்ததே பெருசு இதுல உங்க பேரு புக்கில் வேறவரனுமா என்று ஒரு குரல் ஒலிக்கும். அதுக்காக ஒழுங்கா உருப்படியா எழுதனும் என்ற தப்பான என்னம் மட்டும் வரவே இல்லை, இப்பொழுது வந்துவிட்டதாலும்வ்அது போல் என்னம் வரபோவதும் இல்லை எப்பொழுதும் போல நாம் கலாய்போம் .
சரிதானே:)



நான் ஏதோ என் லெவலுக்கு துறைசார்ந்த பதிவில் என் பதிவு வர என்ன செய்யலாம் என்று யோசிச்சு பதிவு போட்டுக்கிட்டு இருக்கிறேன்.


பிறகு தஞ்சாவூரானுக்கும் ஜோ / Joe வாழ்த்துக்களை தகவலை சொன்னது மட்டும் அல்லாமல் தனி பதிவாக போட்ட பாலாவுக்கும் முக்கியமாக தினமணிக்கும், பாசகார குடும்பம் தனி பதிவு போட்டு கொண்டாடுகிறது அவர்களுக்கும் நன்றியை சொல்லிக்கிட்டு நன்றி உரையை முடிச்சுக்கிறேன்.

Saturday, November 17, 2007

இன்று முதல் உதயம்----நீங்க ரெடியா?

என்னோட குரு அல்லது ரோல்மாடலா யாரை நினைக்கிறாய் என்று கேட்டால் டக் என்று சொல்லும் பதில் ஜொள்ளுபாண்டி தான் என்று அவரை மானசீக குருவாக ஏற்றுக்கிட்டு பல நாள் ஆச்சு ஆகையால் அவரை கேட்காமலே அவரை கெளரவ தலைவராக போட்டு நிஜ தலைவராக நம்மோட அண்ணாச்சியை போட்டு அவரின் தலைமையில் இன்று முதல் இனிய உதயம் அகில உலக ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம். வெள்ளி கிழமை அவுங்க இங்க வந்து சீனி கம் சீன் கம் என்று பாடி என் நெஞ்சில் கம் போல ஒட்டிக்கிட்டாங்க.


அவுங்க இங்க பாடிய அந்த பாட்டில் இருந்து ஒரு வீடியோ.






யார் யார் எல்லாம் ரசிகர் மன்றத்தில் இனைய விருப்பமோ அவர்கள் எல்லாம் பேர் கொடுங்க.

Friday, November 16, 2007

அமீரகத்தில் இளையராஜா!

எனக்கு இளையராஜாவை விட ரஹ்மானை பிடிக்கும் ஆனால் அமீரகத்துக்கு வரும் பொழுது பிடிக்குதோ பிடிக்கவில்லையோ, கண்ணுக்கு தெரியுதோ தெரியவில்லையோ அதை ஸ்டேடியத்தில் கூட்டத்தோடு அமர்ந்து கேட்பது, அல்லது பார்பது என்பது ஒரு தனி சுகம்.(சென்னையில் ஸ்டேடியத்தில் அமர்ந்து இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் பார்த்த அனுபவம்).

6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் என்று சொன்னாலும் 7.45க்குதான் ஆரம்பம் ஆனது ஆரவார டிரம்ஸ் இசைக்கு நடுவே இளையராஜா வந்தபொழுது அரங்கமே அதிர்ந்தது, எடுத்தவுடனே ஜனனி ஜனனி அகம் நீ... பாட்டு பாடி ஆரம்பித்தார் என்ன ஒரு குரல் அப்படியே எல்லாத்தையும் மறக்க செய்யும் இசை.

அடுத்து பவதாரனிக்கு அடுத்து SPB பாடிய இளைய நிலா பொழிகிறது...அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை இன்னும் அதே துள்ளல் அதே உற்ச்சாகம். ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் பேச்சு மனுசனுக்கு வயசே ஆகாது போல.

அடுத்து ஸ்ரேயா கோசல் காற்றில் எந்தன் தீபம் காணத ... இனி நான் தனியாக ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடலாம் என்று இருக்கேன் என்ன ஒரு அழகு. சின்ன குயில் சித்ரா புன்னகை மன்னன் படத்தில் இருந்து ஒரு பாட்டு பாடினாங்க இப்படி எல்லாமே ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கலக்கினாங்க.


ஆனால் என்னை போல் ஆளுங்களுக்காக அப்ப அப்ப ஒரு ஒரு குத்து பாட்டு போட்டு இருந்தால் இன்னும் நிறைவாக இருந்து இருக்கும் தளபதியில் இருந்து பாட்டு என்றவுடன் அடி ராக்கமா கைய தட்டு என்று நான் உற்சாகமாக ஆட ரெடியாகும் பொழுது...சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்று பாட்டு போட்டு ஏமாத்தினார்.

ஸ்ரேயா கோசல் சீனி கம் சீனி கம் என்று ஹிந்தி பாட்டை அந்த அழகு தேவதையும் SPB அதே பாட்டை மஞ்சம் வந்த தென்றலுக்கு அரங்கேற்றவேளை பட பாட்டை பாடும் பொழுது ஒரு கட்டத்தில் பொருமை இழந்து இளையராஜா ஸ்டாபிட் என்று கத்த அரங்கமே அமைதியானது பின்னனி இசை சரி இல்லாததால் கோப பட்டார் என்று SPB யால் விளக்கம் சொல்லபட்டது .அதன் பிறகு குஷ்பு வந்து ஸ்டேஜ் என்றாலும் ஒழுங்காக கொடுக்கவேண்டும் என்ற சின்சியாரிட்டிதான் உங்களிடம் பிடிச்சது என்று சொல்ல ஜெயராமும் ஆமா அதுதான் ராஜா என்று சொல்ல சின்சியாரிட்டி என்று நீங்க சொன்னா நான் அதுவாக இல்லை நான் அதுவாக இருந்தால் சின்சியாடிட்டி இருக்காது அதில் ஒழுங்கு இருக்காது ..இப்படி ஏது ஏதோ சொல்ல ஜெயராமுக்கும் ஒன்னும் புரியவில்லை எனக்கும் ஒன்னும் புரியவில்லை.

ஆனால் சங்கீதம் என்றால் என்னா சங்கீதாவா எவ அவ என்று கேட்கும் ஞானசூன்யம் ஆகிய எனக்கே இசையில் பட நெருடல்கள் பல தப்புகள் தெரிந்தது, உதாரனத்துக்கு அழகி படத்தில் வரும் ஒளியிலே தெரிவது.. பாட்டு இசை செம சொதப்பல்.
இப்படி பல இருந்தாலும் கொடுத்த 100Dhs க்கு மிகவும் உபயோகமாக இருந்தது.


நான் ரசித்தபாடல்கள்
ஜனனி ஜனனி---- இளையராஜா

இளையநிலா பொழிகிறது-------SPB

காற்றில் எந்தன் கீதம், சீனி கம் சீனி கம்---- ஸ்ரேயா கோசல்

சொர்கமே என்றாலும்----இளையராஜா, சாதனா சர்கம்.

ராசாத்தி உன்னை காணாத (வைதேகி காத்திருந்தாள்)-- மஞ்சரி, விஜய் ஏசுதாஸ்.

அறியாதவயது புரியாதமனசு ரெண்டும் இங்கே காதல் செய்யுது---இளையராஜா
அந்திமழை பொழிகிறது--- SPB
மதுரை மரிகொழுந்து வாசம் ---- மனோ

சொதப்பிய பாடல்கள்
ஒளியிலே தெரிவது ,ராகம்மா கையதட்டு ---இது கடைசியாக கிளம்பும் பொழுது போட்டாங்க செம சொதப்பல் இசை.

ஒரு சிரி கண்டால் ஒரு கனி கண்டால் அது மதி--- மலையாள பாட்டு

இப்படி பல பாட்டு இசை சொதப்பலாக தெரிந்தது.

நான் ரசித்த பாடல் அல்லாத சில விசயங்கள்.
SPB யின் பேச்சு + குறும்பு
சின்ன குயில் சித்ராவின் சிரிப்பு

ஸ்ரேயா கோசல், மஞ்சரியின் அழகு.

என்னை கோப படுத்திய சில விசயங்கள்.
எல்லோரும் மாமேதை, உலகம் காணாத இசையமைப்பாளர் என்று எல்லாம் புகழ்ந்து கொண்டே இருந்தது(அரசியல் மேடை போல), எல்லோரும் அவர் காலில் விழுந்தது,SPB, சித்ரா எல்லாம் இருக்கும் பொழுது தேவை இல்லாமல் பவதாரனியை முன்நிலை படுத்தியது அந்த பெண் சொதப்பியது வேறு விசயம்.சர்ப்ரைஸாக வந்த யுவனும், கார்த்திக்கும் என் பாட்டை பாடு என்று சொன்னதையே திரும்ப திரும்ப 10 நிமிசம் சொல்லி டென்சன் ஆக்கி ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்று அப்பாவுக்கு மேலும் புகழ் சேர்த்தார்கள்.

SPBயை தவிர மீதி அனைவரும் பாடும் பொழுதும் ஸ்கூல் HM முன்பு பயந்து நிற்க்கும் குழந்தை போல ஒரு வித இருக்கமாக இருந்தார்கள்.
சொர்கமே என்றாலும் பாட்டு வரியை மாற்றி சாதனா சர்கமும் இளையராஜாவும் பாடும் பொழுது பாட்டை நிறுத்தி சாதனா சர்கம் என்ன பாடுறாங்க புரியுதா அப்படின்னு கேட்டு விட்டு அவரே! மல்லி பூ போல பிச்சி பூ போல என்று பாடுறாங்க என்று இளையராஜா விளக்கம் கொடுத்தார் இதுபோல பல முறை செய்தார் அப்படி செய்து சாதனா சர்கத்தை அவமதிச்சு இருக்க வேண்டி இல்லை. தமிழ் உச்சரிப்பு சரி இல்லை என்றால் அவர்களை அழைத்து வராமலே இருந்து இருக்கலாம்.

நிகச்சிக்கு வந்தவர்கள்:

இளையராஜா, SPB, சித்ரா, மனோ,பவதாரனி, மதுபால கிருஸ்னன், மஞ்சரி, சாதனா சர்கம், ஸ்ரேயா கோசல், விஜய் ஏசுதாஸ், திப்பு.

தொகுத்து வழங்கியவர்கள் ஜெயராம், குஷ்பு.
நிகச்சிக்கு வந்த வலைபதிவர்கள்:
துபாயில் இருந்து ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் போய் இரவு அங்கிருந்து திரும்பி வந்து காலையில் ஆபிஸ் கிளம்புவது என்பது இயலாத காரியம் என்று போகவேண்டாம் என்று முடிவு எடுத்தபின்பு நான் கொண்டுவந்து விடுகிறேன் டிக்கெட் எடு என்று சொன்னதாலே டிக்கெட் எடுத்து இந்த நிகழ்ச்சிக்கு போனேன் அதற்கு காரணமான லொடுக்குக்கு நன்றி. இவரு VVIP சீட்டில் உட்கார்ந்து இருந்ததால் தப்பிச்சார்.
முன்னாடியே போயாச்சே பினாத்தலார் குடும்பத்தோடு வருகிறேன் என்று சொன்னாரே என்று இரண்டு சீட் பிடிச்சு வெச்சிட்டு எப்ப வர்ரீங்க உங்களுக்காக 2 சீட் பிடிச்சு வெச்சு இருக்கேன் என்று போன் போட்டு சொன்னா 2 சீட் எல்லாம் பத்தாது ஒரு 10 சீட் புடிங்க என்கிறார் எனக்கு தூக்கி வாரி போட்டது என்ன டா wifelogy பாடம் எடுக்கும் வாத்தியாரே இப்படியா என்று? பிறகு நான் அதிர்ச்சி ஆனது தெரிஞ்சு அவரே நண்பர் குடும்பமும் வருகிறார்கள் என்றார்.
சுல்தான் பாய் வந்து இருக்கிறார் ஆனால் பார்கமுடியாமல் போய்விட்டது.

Thursday, November 15, 2007

முதன் முதலாக துறைசார்ந்த பதிவில் என்னுடைய பதிவு வர சிறு முயற்சி

முதன் முதலாக துபாய் பற்றியும் விசா பற்றியும் ஒரு பதிவு எழுதினேன் அது அனைவருக்கும் பிடித்துவிட்டது எல்லோரும் முதன் முதலாக ஒரு உருப்படியான பதிவு எழுதி இருப்பதாக சொன்னார்கள், எனக்கும் பல மாதமாக துறைசார்ந்த பதிவு பக்கத்தில் வருவது போல் ஒரு பதிவாது எழுதிவிடவேண்டும் என்று நினைத்தேன் அந்த பக்கத்தில் எப்பொழுது மா.சிவக்குமார், தீபா, இப்படி ஒரு சிலரை மட்டும்தான் காணமுடிகிறது.
இனி அங்கும் என் பெயரை தெரியவைக்க ஒரு சிறுமுயற்ச்சி.


தமிழக போக்குவரத்து துறை கடந்த ஆட்சியில் செய்த நல்ல செயல்:
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கட்டுபாட்டில் இயங்கும் அனைத்து போக்குவரத்து கழக்நிறுவனங்களின் சார்பாக வழங்கப்பட்ட மொத்த நன்கொடைத் தொகையான ரூ5,31,57,00 க்கான காசோலையை மாண்புமிகுபோக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர் திரு இரா.விசுவநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களிடம்4-1-2005 அன்று வழங்கினார். அவ்வமயம் அரசு போக்குவரத்து துறை செயலாளர் திரு.இரா,கற்பூரசுந்தரபாண்டியன் உடன் இருந்தார்.

http://www.tn.gov.in/transport/tpt-tsunami1.htm

இந்த பதிவு போக்குவரத்து துறை சார்ந்தது இது ஏதேனும் எதிரிகள் சூழ்சியினால் துறை சார்ந்த பதிவில் வராமல் போனால்,அடுத்து
படகு துறை
விமான போக்குவரத்து துறை
கப்பல் போக்குவரத்து துறை
பற்றி எல்லாம் எழுதவேண்டி இருக்கும்.

இனி நானும் சீரியஸ் பதிவர்தான் ஓய்!!! யாரு யாரு எல்லா போட்டிக்கு ரெடி!!!

Monday, November 12, 2007

UAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை!

1) விசா

2) சம்பளம்

விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு வந்து தங்கி இரண்டு மாதம் வேலை தேடுவார்கள் தகுதி இருப்பின் இரண்டு மாத காலத்துக்குள் வேலை கிடைத்துவிடும் இல்லை என்றால் ஒரு மாதம் 500Dhs பணம் கூடுதலாககொடுத்து விசாவின் ஆயுளை நீடிச்சுக்கலாம்.
ஆனால் இப்பொழுது அதுக்கும் ஆப்பு வைத்துவிட்டது விசிட் விசாவில் யாரும் தங்கி வேலை பார்பது தெரியவந்தால் 50000Dhs அபராதம் அந்த company.
ஆகையால் பல company விசிட் விசா ஆட்களை எடுக்கதயங்குகிறார்கள்.

விசிட் விசாவில் வேலைபார்பதின் நன்மை தீமைகள்.

நன்மை: இரண்டு மாத காலத்தில் company நிஜ முகம் தெரிந்துவிடும் சம்பளம் ஒழுங்கா வருமா வராதா? company எதிர்காலம் எப்படி, இல்லை மன்னாரன் companyயா என்று கண்டுபிடித்துவிட்டு ஈசியாக வேறு வேலை தேடிக்கலாம்.

தீமை: லேபர் லா படி எந்த பலனையும் அடைய முடியாது, சம்பளம் தரவில்லை என்றால் கூட ஒன்னும் செய்ய முடியாது.

அடுத்தது எம்ளாயிமெண்ட் விசா:
இதில் இரண்டு வகை இருக்கிறது

1) Free zone visa 2) LLC visa

Free Zone Visa:
இது நம்ம ஊரில் இருக்கும் தொழிற்பேட்டை போன்றது ஒரு இடத்தில் பல companyகள் இருக்கும் அவை அனைத்தும் வெளிநாட்டு முதளீட்டார்களுக்கானது , வெளிநாட்டவர் தனியாக பிசினஸ் செய்யவேண்டும் என்றால் அவர்கள் இது போல் Freezone இடத்தில் ஆரம்பிக்கவேண்டும், அப்படி ஆரம்பிக்கும் company விசாவுக்கு எந்த வித கட்டுபாடும் கிடையாது,
1) படிப்பு சான்றிதழ் சரிபார்பு தேவை இல்லை (இல்லை என்றால் அதுக்கு ஒரு 10000ரூபாய் செலவு ஆகும்)

2) வேலை பிடிக்கவில்லை என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் ரிசைன் செய்யலாம்

3) எங்கு வேண்டும் என்றாலும் அடுத்த வேலைக்கு மாறலாம் எந்த தடையும் கிடையாது.

LLC visa:
Free Zone யை தவிர வேறு எங்கும் ஒரு சிறு டீ கடையோ அல்லது தொழிற்சாலையே ஆரம்பிப்பதாக இருந்தாலும் இங்கு இருக்கும் UAE குடிமக்களில் யாரேனும் ஒருவரை நீங்கள் பார்ட்னராக அவர் பெயரில் ஆரம்பிக்கதான் முடியும், அவர்கள் துனை இன்றி ஆரம்பிக்க முடியாது, ஏன் என்றால் இது அவர்கள் நாட்டில் தொழில் செய்வதால் அவர்களும் பயன் அடையனும், அதுக்கு என்று 40% அவருக்கு லாபத்தில் கொடுக்கவேண்டும் என்று அக்ரிமெண்ட் எல்லாம் போட்டவேண்டும் அப்படி ஆரம்பிக்கும் கம்பெணி LLC ஆகும். அதில் எம்ப்ளாயிமெண்ட் விசா கிடைக்க சான்றிதழ் சரி பார்த்தல் அவசியம்.
இதில் இருந்து அடுத்த company மாறுவது என்பது குதிரை கொம்பு.இந்தவிசாவை நீங்கள் கேன்சல் செய்துவிட்டுதான் அடுத்தவேலை மாறவேண்டும் அப்படி கேன்சல் செய்தால் அட்டோமேட்டிக்காக நீங்கள் ஆறுமாத காலம் இங்கு அமீரகத்தில் வேலை செய்ய முடியாதபடி லேபர் விசா தடை விழுந்துவிடும். ஆனால் நீங்கள் விசிட் விசாவில் வரலாம் அப்படி வந்தால் மேலே சொன்ன பல சிக்கல்கல் இருக்கிறது.
சில நல்ல உள்ளம் படைத்த company ஆட்கள் உங்களை ஒரு வருடம் உள்ளே நுழையமுடியாத படி Entrey Band போட்டுவிடுவார்கள்.

சில பெரிய company நினைத்தால் அல்லது கூடுதலாக 12,000Dhs பணம் கட்டினால் அந்த தடையை நீக்கமுடியும்.
முன்பு நான் இருந்தது Free Zone company ஆகையால் இரண்டு வருடம் கழித்து வேலை மாறினேன் இப்பொழுது இருப்பது LLC சில பல பிரச்சினைகளால் மாறனும் என்று நினைத்தாலும் மாறமுடியாமல் தவிக்கிறேன். நான் விளையாட்டக சொன்னேன் இனி அடுத்தவேலை என்றால் மலையாளி இல்லாத இடமாகதான் மாறனும் என்று தோழர் சொன்னார் அப்ப நீ எங்கயும் வேலை செய்யமுடியாது என்று.

அடுத்து சம்பளம்: துபாயில் ஒரு நான்கு பேர் மட்டும் இருக்கும் ரூமில் ஒரு பெட் ஸ்பேஸ் வேண்டும் என்றால் நீங்கள் கொடுக்கவேண்டியது குறைந்தபட்சம் 800 Dhs,வீட்டில் சமைத்து சாப்பிடும் ஆள் என்றால் பிரச்சினை இல்லை ஆனால் கிட்சனோடு ரூம் என்றால் குறைஞ்ச பட்சம் 1000Dhs கொடுக்கவேண்டும். நான் சொல்வது ஒரு ரூமில் நால்வராக தங்க.கல்யாணம் ஆனவர் மனைவியுடன் தனி ரூமில் தங்க வேண்டும் என்றால் வாடகை 4000Dhs துபையில், சார்ஜாவில் 1800ல் இருந்து கிடைக்கிறது. மற்றொரு குடும்பத்தோடு சேரிங் கிட்சன் என்றால் 2500dhs. முன்பு 25கிலோ அரிசி 45Dhs ஆக இருந்தது இன்று 68 Dhs. single பெட் ரூம் வீடு என்றால் துபையில் 6,000Dhs ஆகும்.

இப்படி எல்லாம் இங்கு விலை அதிகமாகிவிட்டது அதுக்கு தகுந்தபடி பிளான் செய்துப்பது சம்பளத்தை பேசிவிட்டு வருவது நலம்.

அதையும் மீறி பிரச்சினை என்றால் உதவி செய்ய இங்க பலர் இருக்கிறோம், பயப்படாமல் வாங்க.

இந்த பதிவு எழுத சிவாதான் காரணம் அவர் வித்யாகலைவாணி பதிவில்
"மங்களூர் சிவா said...
இங்கயே அப்ரைசல்ல எதிர்பாத்தது இல்லைனா அடுத்த வாரமே பேப்பர் போட்டுடறானுங்க!!!நான் GULF பத்தி ஆஹா ஓஹோன்னுல்ல நினைச்சேன்."


இதுக்காகதான் இந்த பதிவு.

ஜமாலன் அவர்களின் இந்த வசந்தம் பாலையாகும் வளைகுடா இந்தியர்கள். பதிவையும் படியுங்கள்.

Sunday, November 11, 2007

பெண்களை குட்டினால் என்ன ஆகும்? அது தப்பா?

எங்க பள்ளிகூடம் கோ-எஜிகேசன், கூட பல ஊரில் இருந்தும் பல பொண்ணுங்க இருந்தாங்க அப்பொழுதில் இருந்து நமக்கும் பொம்பள புள்ளைங்களுக்கும் ஆகவே ஆகாது எப்ப பார்த்தாலும் முதல் மார்க் அது இதுன்னு வாங்கிட்டு நம்மை ஏகத்துக்கும் டென்சன் ஆக்குவாளுங்க, அது கூட பரவாயில்லை எங்களை பார்த்து வாடா போடான்னு கூப்பிடுவாளுங்க அங்கதான் ஆரம்பிச்சிது வினை. ஏய் எங்களை வாடா போடான்னு கூப்பிட்ட நல்லா இருக்காது ஆமா, ஒழுங்க பேர் சொல்லி கூப்பிடு என்று சுமதியிடம் நான் சொல்ல முடியாது டா அப்படிதான் டாகூப்பிடுவேன் டா என்று சொன்னதும் ஏய் அப்புறம் நானும் வாடி போடின்னு கூப்பிடுவேன் டி என்று சொல்ல வாய் பேச்சு கை கலப்பானது.

அடிச்சு கீழ தள்ளி மேல ஏறி நல்லா கும்மு கும்முன்னு கும்மிட்டு கிளாசுக்கு ஓடி போய்விட்டேன்,கிளாசுக்கு போனா சங்கு சத்தம், ஊர்ல மதியம் ஒரு மணிக்குதானே சங்கு ஊதும் ஆனா என்ன டா அதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுடுச்சுன்னு பார்த்தா அடிவாங்கின சுமதி கத்துறா, என்ன டா இது அவளும் தான் அடிச்சா நாம என்னா இப்படியா ஊரகூட்டினோம் என்று நினைச்சுக்கிட்டு இருக்கும் பொழுதே அப்படியே கொத்தா கோபால் சார் தூக்கிட்டு போனதுதாங்க தெரியும் சட சடன்னு ஒரே சத்தம், டின்னு கட்டுவது என்று கேள்வி பட்டு இருக்கேன் அன்னைக்குதான் பார்த்தேன் சரி விடு விடு போர் வீரனுக்கு இது எல்லாம் சகஜம் என்று வந்து பார்த்தா இஇன்ன்னு சிரிக்கிறா அவ,அடி பாவி நடிச்சியாடின்னு மனசுக்குள்ளே கருவிக்கிட்டு.

உடனே நண்பர்களை எல்லாம் கூட்டி டேய் இது ஒட்டு மொத்த ஆண் சமுகத்துக்கே வந்த இழுக்கு இனி அவளுங்க யாரும் டா போட்டு கூப்பிட்டா நீங்களும் டீ போட்டுகூப்பிடனும் என்று சொல்லி சபதம் எடுத்து விட்டு கலைந்தோம்.

கொஞ்சநாட்களில் சுமதி, கவிதா, புனிதவள்ளி என்று எதிரிகள் லிஸ்ட் அதிகமாகிட்டே போனது டெய்லி அவளுங்களும் அடிவாங்கமா இருக்க மாட்டாளுங்க,அவுங்க வீட்டுபாட நோட்டில் இங்கை ஊற்றி மூடி வைத்து விடுவது புஸ்த பையில் இருக்கும் புத்தகத்தை வேறு யாரோட பைக்காவது மாற்றிவிட்டு அந்த பையில் மண் குப்பை எல்லா கொண்டு நிரப்பி வைப்பேன்.கிளாஸ் சாரிடம் போய் புகார் கொடுப்பாங்க ஆனால் குற்றத்தை நான் தான் செஞ்சேன் என்பதற்கு போதிய சாட்சிகள் இல்லாததால் நான் விடுதலை ஆகிவிடுவேன்,இப்படியே ஒரு ரெண்டு வருசம் ஆனது 7 வது 8 வது படிக்கும் பொழுது பேச்சு வார்த்தை கட் ஆனது பேசிக்க மாட்டோம். கிளாசுக்கு வரும் நடராஜ் சார் என்ன செய்யவார் கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்றால் பொண்ணுங்களை விட்டு குட்ட சொல்லுவார் அது அப்ப பெரிய அவமானம். ஒரு பொண்ணு கையால அடிவாங்குறியே புத்திவரவில்லை என்றுவேறு திட்டுவார்.

நம்ம எப்ப கரீட்டா பதில் சொல்லி இருக்கோம் அங்க பொண்ணுங்க எப்ப டா நான் மாட்டுவேன் என்று காத்துக்கிட்டு இருப்பாளுங்க,அங்கேருந்து வந்து முக்கி முக்கி ஓங்கி வேகமா குட்டுவாளுங்க அது அவளுங்களுக்கு வேகம் ஆனா நம்ம மண்டை தான் ஸ்டாராங்கான மரமண்டையாச்சா அதனால் வலி இருக்காது.என்னமோ ஒரு சிங்கத்தை குட்டி சாச்சுட்ட நிம்மதியில் போய் உட்கார்ந்து இருப்பாளுங்க.

அடுத்த முறை அவுங்க பதில் சொல்லாத பொழுது அதிகமாக கொட்டு வாங்கியது யார் என்ற தகுதியின் அடிப்படையில் நமக்குதான் அவுங்களை குட்ட வாய்பு கிடைக்கும், விரலை மடக்கி முட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சும்மா நங்குன்னு ஒரு குட்டுவைப்பேன் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் வரைக்கும் அழுகை நிறுத்தாதுங்க. மண்டைய தடவி தடவி பார்த்துக்கிட்டு இருக்குங்க வீங்கி இருக்கான்னு மற்ற பொண்ணுங்கஎல்லாம் குட்டி வாங்கியவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு என்னை ஒரு முறை முறைப்பாங்க பாருங்க அப்ப நமக்கு அது ஏதோ ஆஸ்கார் அவர்ட் கொடுத்த மாதிரி.

நம்ம கூட்டதில் சில குள்ள நரிங்க இருப்பானுங்க போய் குட்டுங்கடான்னா அந்த பக்கம் போய் காசு கொடுத்தா யானை தும்பிக்கையை தலையில் வைக்கும்ல்ல அதுபோல நைசா வலிக்காம குட்டுவது போல் நடிச்சுட்டு வந்துடுவானுங்க. அவளுங்களும் அந்த நன்றி கடனை கிளாஸ் டெஸ்டில் காட்டுவாளுங்க பெஞ்சின் இரு மூலையிலும் இரண்டு பெண்கள் நடுவில் ஒரு பையன்என்று உட்கார வெச்சு டெஸ்ட் வைப்பாங்க, அப்பொழுது குட்டுவது போல் நடிச்ச குள்ள நரிங்களுக்கு மட்டும் பேப்பரை காட்டிடுவாளுங்க.

அப்புறம் 9வது படிக்கும் பொழுது தனி தனி கிளாசில் போட்டுவிட்டானுங்க,பிறகு ரெண்டு வருசம் கழிச்சு 11ல் திரும்ப ஒன்னா படிக்கும் பொழுதுதான் வாழ்கையில் எத்தனை பெரிய தப்பை செஞ்சு இருக்கோம் என்று புரிஞ்சது, ஆமாங்க அழகா தாவணி போட்டுக்கிட்டு அம்சமா இருந்தாளுங்க போய் பிரண்ட் ஆகிக்கலாம் என்று பார்த்தால் அப்பயும் நம்ம மேல இருந்த கோவம் தீரல போல! பேச மாட்டாளுங்க சரி இப்ப யாரும் குட்ட சொன்னா போய் நானும் குள்ள நரி ஆகி சமாதானம் ஆகிடலாம் என்று பார்த்தா கடைசிவரை அதுக்கு வாய்பே இல்லாம போச்சுங்க.

அப்புறம் காலேஜ் தஞ்சை பூண்டி கலை கல்லூரி அது ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி அதனால் எனக்கு கேர்ள் பிரண்டு என்ற ஒன்று வாழ்கையில் அமையவே இல்லை. நான் எப்படா காலேஜ் முடிப்பேன் என்று பிரின்ஸ் காத்துக்கிட்டு இருந்தார் போல நான் முடிச்ச அடுத்த வருடத்தில் இருந்து கோ-எஜிகேசன் ஆக்கிட்டார்:((( என்ன கொடுமை சார் இது, நான் அப்படி என்ன பாவம் செஞ்சேன்.

தலைப்புக்கு பதில் கேர்ள் பிரண்டு கிடைக்காமல் போகும்.

Tuesday, November 6, 2007

தீபாவளி நினைவுகள்

குட்டி புள்ள வயசு
எனக்கு ஒரு பெட்டி என் அக்காவுக்கு ஒரு பெட்டி என்று இரண்டு தனி தனி அலுமினிய பெட்டி இருக்கும் அது முழுவதும் வெடியை எடுத்துவெய்யிலில் காயவைக்கும் படலம் ஒரு 10 நாட்களுக்கு முன்பே ஆரம்பித்துவிடும்.
தீபாவளி அன்று ஐயாதான் முதல் வெடி வெடிக்கனும். புது சட்டை, அரை டவுசர் போட்டுபோய் முதல் வெடிய வைத்த பிறகுதான் அக்கா வெடி வெடிகனும், கொஞ்சம் கொஞ்சமாக வெடி வெடித்த பிறகு என் பெட்டியில் வெடி குறைஞ்சு இருக்கும், (வெடிச்சா குறையதானே செய்யும்) அதெல்லாம் சாருக்கு அப்ப புரியாது அம்ம்மே என்று பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பிப்பேன் அவ பெட்டியில் மட்டும் நிறைய வெடி இருக்கு என்று. பின் தானா அம்மாவின் மேற்பார்வையில் அக்கா பெட்டியில் இருக்கும் வெடி எல்லாம் என் பெட்டிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறும். அப்பொழுது அக்கா முகத்தை பார்கனுமே சென்னை 600026ல் பேட்டை புடிங்கிட்டு போகும் பொழுது அழுவானே அதுபோல் இருக்கும். அதன் பிறகு வெடி வெடிச்ச பிறகு யார் வீட்டி அதிக குப்பை இருக்குன்னு ஒரு சர்வே நடக்கும்.

மறு நாள் ஸ்கூல் போகும் பொழுது தவறாமல் அந்த புது சட்டை புது டவுசரை போட்டு போவது வழக்கம். ஸ்கூலில் உங்க அப்பா எவ்வளோ ரூபாய்க்கு வெடி வாங்கி கொடுத்தார் அதுதான் முதல் கேள்வியாக இருக்கும்.

மீசை முளைக்கும் வயசு

ஊர்ல நமக்கு நல்லா படிச்சு ரப்ஜர் கொடுக்கும் அல்லது ஓவர் ரவுசு கொடுக்கும் பிகருங்க வீட்டுக்கு முன்னாடி திரி கிள்ளி ஒரு சரத்தை ஊது பத்தியில் கட்டி அந்த ஊதுபத்தியை பத்த வெச்சிட்டு ஜன்னல் ஓரமாக போய் வைத்துவிட்டு பசங்களோட ஓடி போய் பதுங்கிப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கனிஞ்சு பின் கொஞ்சம் நேரம் கழித்து டம டமான்னு வெடிக்கும் பொழுது பதறி அடிச்சு தூங்கிட்டு இருந்த அந்த பிகர், அவுங்க அப்பா எல்லாம் லைட்டை போட்டு வாசலில்வந்து குய்யோ முய்யோன்னு கத்துவதை பார்கனுமே செம ஜாலியா இருக்கும்.

தீபாவளி அன்று இரவு கும்பகோணம் கடைத்தெருவுக்கு போய் சும்மா ஒன்னும் வாங்காமல் பிகர் வெட்டிட்டு காலையில் 3 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கமாக இருக்கும்

காலேஜ் படிக்கும் பொழுது

டேய் தம்பி சாஸ்த்திரத்துக்கு ஒரு வெடியாவது வைப்பா, என்ற அம்மாவின் கெஞ்சலுக்காக வேண்டா வெறுப்பாக ஒரு வெடி வைத்துவிட்டு அசின் பேட்டியோ அல்லது பிசின் பேட்டியிலோ மூழ்கி விடுவது என்று போகும் தீபாவளி.

வேலை பார்க்கும் பொழுது

என்னம்மா ஒரு நாள்தான் லீவ் இங்க கோயம்பேட்டில் இருந்து பஸ் இடம் கிடைக்க நாய் படாத பாடுபடனும், வந்துட்டு நைட்டே கிளம்பனும் எதுக்கு அப்படி வந்து என்னா செய்ய போறேன்? நாளும் கிழமையுமா உன் முகத்தை பார்காம எப்படிப்பா சாப்பிடுவது என்ற அம்மாவின் கெஞ்சல் குரலுக்காக ஊருக்கு போய் பகல் முழுவது தூங்கிவிட்டு பின் இரவு கிளம்பி சென்னை வருவது வழக்கமாக இருந்தது.

இப்பொழுது

தீபாவளி அன்று போன் போட்டு என்னய்யா புது துணி போட்டு இருக்கியா? என்னது இன்னைக்கும் ஆபிஸ் உண்டா அங்க, லீவ் எல்லாம் கொடுக்க மாட்டாங்களா?வெடி வெடிக்க முடியாதா? அங்க முறுக்கு அதிரசம் ஏதும் கிடைக்குமா? யாரும் வந்தா சொல்லுய்யா கொஞ்சமா கொடுத்து அனுப்புறேன். தம்பி நீ அனுப்பின பணத்தில் அம்மாவுக்கு பட்டு புடவை எடுத்து கொடுத்துவிட்டேன் ஆனா கட்டிக்கமாட்டேங்குதுப்பா நீ ஒரு வார்த்தை சொல்லுப்பா என்று சொல்லும் அப்பா.ஏம்மா என்று கேட்கும் முன்பே உன் முகத்தை பார்காமல் என்னா பெரிய தீபாவளி என்று தழுதழுக்கும் அம்மா.

பக்கத்தில் இருக்கும் வரை எதன் அருமையும் தெரியாது என்பது இப்பொழுதுதான் புரிகிறது.

Monday, November 5, 2007

தீபாவளி தமாக்கா--- போட்டோ குசும்பு
















எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள், ஊருக்கு போகும் மக்களே நல்ல படியா தீபாவளி கொண்டாடிட்டு பத்திரமா திரும்ப வாங்க. கல்யாணம் ஆகாத இளம் காளை, புலிகளே(சிவாவை அல்ல) அடுத்த வருடமாவது தலை தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்!!!

Sunday, November 4, 2007

மேக்கப் செய்வது எப்படி? ஒரு நேரடி ரிப்போர்ட்

ஒப்பனை கலைஞர் தன் உதவியாளர்களிடம் டேய் பூ எத்தனை முழம் இருக்கு.

எடுபுடி: அது ஒரு 200 முழம் இருக்குங்கய்யா.

தலைவர்: ம்ம்ம் அந்த பவுடர் டப்பா?

எடுபுடி: அது ஒரு 12 டப்பா இருக்குதுங்க...

தலைவர்: ம்ம்ம் அந்த மை...

எடுபுடி: அது மட்டும் 6 தாங்க இருக்கு.

தலைவர்: ம்ம்ம் சரி சரி ஆள் அனுப்பி வாங்கி வர சொல்லு. அப்படியே ஜிகினா பேப்பர், கொடி தோரணம் எல்லாம் வாங்கி வர சொல்லு.


டேய் குமாரு நீ அந்த பூவை சுத்த ஆரம்பி..

சரிங்கய்யா..

டேய் பாபு நீ அந்த பவுடரை அடிக்க ஆரம்பி...

சரிங்கய்யா...

தலைவர்: டேய் என்னடா பூ சுத்துர அங்க கொஞ்சம் கேப் இருக்கு பாரு நல்லா நெருக்கி ஒழுங்கா சுத்துடா..

டேய் பாபு என்னாடா செய்யுற? நல்லா சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பது போல் அடிக்கனும் சரியா?

பாபு: ஐய்யா இதுவரை 5 கோட் அடிச்சு இருக்கேன் போதுமா பாருங்க.

தலைவர்: பத்தாதுய்யா இன்னும் 4 கோட் அடி..

டேய் வாங்கிட்ட வர சொன்ன ஜிகினா பேப்பரை எல்லாம் வெட்டி பின்னாடி சடையில் கொடி போட கட்டுங்க... அந்த பச்ச ரிப்பனை ஒரு பக்கமும் அந்த சிகப்பு ரிப்பனை அடுத்த பக்கமும் கட்டுங்க.

ம்ம்ம் அந்த மை டப்பாவை இங்க கொடு...இப்படி பல மணி நேரம் டெக்ரேசனுக்கு பிறகு ரெடி செஞ்ச பிறகு நொங்கு நொங்குன்னு நொங்கி...

எடுக்க பட்ட படம்


நம்ம இந்த வார ஸ்டார் ஆயில்யன்:)))

Friday, November 2, 2007

வீர வணக்கம் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் மறைந்த புலிகளுக்கு.

1984 ஆம் ஆண்டு முதல்... தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.1

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.


2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள் 1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும் 1992 இல் சிறிலங்கா படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும் முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல் ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண்பட்டார்.பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான "தவளை நடவடிக்கை"யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண்பட்டார்."

ஒயாத அலைகள் - 03" நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

நவ. 5 ஆம் நாள் வரை தமிழீழ தேசிய துக்க நாளாக பிரகடனம்
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவையிட்டு எதிர்வரும் 5 ஆம் நாள் வரை தேசியத் துக்க நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.வன்னிப் பெருநிலம் எங்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் மக்கள் கறுப்பு- சிவப்பு- மஞ்சள் கொடிகளையும் கட்டி வருகின்றனர்.

நன்றி Lankssri