Wednesday, August 29, 2007

தமிழ்மணத்திற்கு மனம் திறந்த மடல்

From:

குசும்பன்
கும்மி இல்லம்
துபாய்

To:
தமிழ்மண நிர்வாகம்



sub: ஒரு இரண்டு மூன்று நாட்கள் விடுப்பு வேண்டும்.


ஐயா:
வணக்கம், நான் இங்க தமிழை அடுத்த கட்டத்துக்கோ, அல்லது பலருக்கு கருத்து சொல்லவோ இங்குவரவில்லை, ஏதோ நாமும் சிரிக்கனும் மத்தவங்களையும் சிரிக்க வைக்கனும் அதுதான் நம்ம கொள்கை. ஆனா கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டும், சண்டை , போர், யுத்தம் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு நான் எல்லாம் 23ஆம் புலிகேசி இனம் ஆகையால் யுத்தம் எல்லாம் முடியும் வரை கொஞ்சம்
ஓய்வு வேண்டும்.

நிறையபேர் இதே மனநிலையில்தான் இருக்காங்க. பிளாக் எழுத பலர் வரவேண்டும் என்று பால பாரதி, பொன்ஸ் அக்கா,லக்கி போன்றோர் பதிவர் பட்டறை அது இது என்று நடத்தி கஷ்டப்படுகிறார்கள், ஆனால் இருக்கிற பல நல்ல தரமான பதிவர்கள்(நான் இல்லை)
இதை எல்லாம் பார்த்து போகிறேன் என்கிறார்களே அவர்களை எல்லாம் யார் திரும்ப அழைத்து வரபோகிறார்கள்???


அன்புடன்
குசும்பன்

Monday, August 27, 2007

சாதி மத சண்டைகளுக்கு எதிராக தமிழ் பதிவர்களே ஒன்று சேருங்கள்.

தமிழ் மணத்தில் வர வர சாதி மத சண்டைகள் திரும்ப தலை தூக்குகிறது, ஏன் நமக்கு அது அனைத்தையும் மறந்து வாருங்கள் ஒன்று சேருங்கள் புதுஉலகம் படைப்போம். இதோ இந்த விளையாட்டை விளையாடுங்கள் நீங்கள்உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த விளையாட்டு மூலம் நீங்கள்ஒன்று சேரபோவது நிஜம்.

கசப்புகளை மறந்து அனைவரும் ஒன்று சேருங்கள் கீழே இருக்கும் flash பகுதியின் மேல் கிளிக் செய்யுங்கள்







ஓணம் சேலை கட்டி ஓணம் கொண்டாடும் கேரள பெண்குட்டி...

இவ்வட எங்கேயும் ஓணம் கொண்டாட்டமாக இருக்கிறது. காலையில் ஓணம் சேலை கட்டிய கேரள பெண்குட்டிகளை பார்த்ததில் இருந்து ஆபிஸில் வேலை செய்ய முடியவில்லை.


மதியம் வேறு ரெட் பெப்பர் ஹோட்டலி 30 வகையுடைய சாப்பாடு ஏற்பாடு செய்து இருந்தார்கள் நானும் அங்கு போய் இருந்தேன், ஒரு இலையின் முன் அமர்ந்து இருந்த குழைந்தைக்கு ஒரு பெண்குட்டி சாப்பாடு ஊட்டி விட்டு கொண்டு இருந்தது ஞானும் அவ்வட உட்கார்ந்து...ஆஆஆஆ என்று வாயை open செய்துவைத்து கொண்டு இருந்தேன்... ஆனா அந்த பெண்குட்டி கடைசி வரை ஊட்டிவிடவே இல்லை :(( பிறகு நானே சாப்பிட்டு விட்டு வந்தேன்.


பிறகு சாப்பிட்டு விட்டு ஜி-டாக்கில் ஸ்டேட்டஸ் மெசேஜ் "ஓணம் சேலை கட்டி ஓணம் கொண்டாடும் கேரள பெண்குட்டிகளுக்கு மட்டும் என் ஓணம் வாழ்த்துக்கள்" என்று உடனே தம்பி கோபி ஏன் சேட்டனுக்கு எல்லாம் சொல்லமாட்டிங்களா என்று...


தம்பி இப்படி இருந்தா நீ யாருக்கு வாழ்த்து சொல்வாய்?











சில பூக்கள் பல பூக்களை வைத்து ஒரு கோலம் போடுகிறது அடடே கவிதை !!!( ஆச்சர்ய குறி)

Sunday, August 26, 2007

இளம் ஹீரோ பால பாரதி தலைவன் படத்திலிருந்து விலகினார்

அன்றைய தினம் எல்லா பேப்பர்களிலும் முதல் பக்கசெய்தி

"இளம் ஹீரோ பால பாரதி தலைவன் படத்திலிருந்து விலகினார். அவரின் பா.க.ச படை கொதிப்பு. அனைவரும் அமைதிகாக்கும் படி பால பாரதி வேண்டுகோள்."

நிருபர்: நீங்க ஏன் அந்த படத்தில் இருந்து விலகுகிறீர்கள் என்று சொன்னால் உங்கள் பா.க.ச ரசிகர்கள் சமரசம் அடைவர்கள்? என்ன நடந்தது சொல்லுங்க.



பால பாலதி: இல்லீங்க சொன்னாதான் அவுங்க கோபம் இன்னும் அதிகரிக்கும்.
நிருபர்: பரவாயில்லை சொல்லுங்க!!!
பால பாரதி: உங்களுக்காக இதை நான் விளக்கமாக என்ன நடந்தது என்று சொல்கிறேன்.
அன்று ஒரு நாள் படத்தின் தயாரிப்பாளர் போன் செய்தார், லோ பட்ஜெட் படம் ஒன்று தயாரிக்க போவதாகவும் பாலபாரதி தி பாஸ் டைரக்டர் சிபி தான் இந்த படத்தையும் டைரக்ட் செய்ய போவதாகவும் சொன்னார். நானும் சரி என்று சொன்னேன்.

கதைபடி நான் வக்கீலுக்கு படிக்கும் இளைஞன், நான் கல்லூரிக்கு சென்று வரும் பொழுது ஹீரோயினை பார்த்து காதல் வருகிறது, பின் ரவுடிகளால் அவள் கொல்ல படுகிறாள் அவளுக்காக நான் போராடி நீதி வாங்குகிறேன். சாட்சி சொல்ல பேய்கள் எல்லாம் வரும் என்றார்கள் சரி வித்தியாசமான கதை என்பதால் சரி சொல்லி இருந்தேன்.

முதல் நாள் ஷூட்டிங் நானும் பந்தாவாக கிளம்பி போனேன்.
அங்கு டைரக்டர் சிபி நீங்க கதை படி இன்று காலை காலேஜ்க்கு பைக்கில் கிளம்பனும், நீங்க வேளச்சேரியில் இருந்து நந்தனம் போவதாக இன்று ஷூட்டிங் செய்ய போகிறோம் என்றார், சரி பைக் கொடுங்க என்றால் இது லோ பட்ஜெட் படம் பைக் எல்லாம் கிடையாது , அதனால் நீங்க சும்மா வாயாலே டூர்ர்ர்ர்ர்ர்ர்என்று சத்தம் கொடுத்துக்கிட்டு ரெண்டு கையையும் வண்டி ஓட்டுவது போல் வைத்து கொண்டு ஓடி வாங்க நாங்க ஷூட் செஞ்சுக்கிறோம் என்றார். நானும் சரி என்று ரெண்டு கிலோ மீட்டர் சின்ன பிள்ளைங்க டூர்ர்ர்ர்ர் என்று வண்டி ஓட்டுவது போல் நானும் ஓடினேன்...
நடு நடுவே ஹாரன் அடி, பிரேக் அடி யூ டேர்ன் அடி அப்பதான் ஒரிஜினாலிட்டி கிடைக்கும் என்றார்கள் நானும் கஷ்டபட்டு எல்லாம் செய்தேன்.அப்பதான் டைரக்டர் கதை படி ஹீரோயினை நீங்க பெட்ரோல் பங்கில் தான் சந்திக்கிறீங்க அதனால் வண்டிய நிறுத்தி பெட்ரோல் போடுங்க என்கிறார். பெட்ரோல் பங்கு காரனும் வண்டிய திருப்புங்க பெட்ரோல் போடனும் என்கிறார்கள்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அடுத்த சீன் காலேஜ் எலக்செனில் வண்டி பிரேக்கை வில்லன் ஆட்கள் கட் செய்வார்களாம் எங்க எத கட் செய்வாங்கன்னு தெரியலை. இப்படி ஒவ்வொரு நாளும் வேதனையோடு போனது...

அதோட கொடுமை ஹீரோயினாக சொட்டை மனோகருக்கு பெண் வேசம் போட்டுவிட்டு ...லிப் டு லிப் கிஸ் வேற இருக்கு என்கிறார்கள்.
இத எப்படிங்க பொறுத்துகொள்வது.

அதான் வெளியேறிவிட்டேன்.

Friday, August 24, 2007

ஓஹோ வரவில்லை....(தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்)

சிகப்பு கலரில் இருப்பது கண்மணி எழுதிய கவிதை அதற்க்கு கீழே இருப்பது நான் எழுதிய எதிர் கவுஜ:)

ஆஹா...வந்துடுச்சி...[தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்]

ஓஹோ வரவில்லை....(தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்)

உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால்
பூக்கள் இதழ் விரிக்காமலே இருந்திருக்கக் கூடும்.
பிரிவோம் என நினைத்திருந்தால்
உன்னைப் பற்றிய நினைவுகள்
எனக்குள் வேர்விட்டிருக்காது
காதல் பூத்தும் இருக்காது
கொட்டியச் சிதறிய சருகுகள்
மக்கிச் சிதைந்து மரத்திற்கே உரமாவதுபோல
உன் சுணக்கமும்,ஒதுங்கல்களும் எனக்குள்ளே
புதைந்து என் கனவுகளுக்கு உரமிட்டு
உன் நினைவுகளை என்னுள் ஆழமாய்
வேறூன்றச் செய்கின்றன.

தடுக்கி விழுவோம் என அஞ்சியிருந்தால்
அஞ்சு பாபி ஜார்ஜ் ஓடாமலே இருந்திருக்க கூடும்.
உடைவோம் என நினைத்திருந்தால்
எனக்கு பிடித்த முட்டை
கோழி வயிற்றிலேயே இருந்திருக்க கூடும்.
முட்டை வெளியே வந்தும் இருக்காது
வந்து என் கையில் சிக்கியும் இருக்காது.
உடைந்து முட்டைகள் வெந்து தணிந்து
ஆம்லேட் ஆவதுபோல.
வாந்துமுட்டையும், ஆமை முட்டையும்
மண்ணுக்குள்ளே இருந்திருக்கும்.

இந்த உலகை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
உன்னிடம் பேசும் வரை
பேசிய பிறகோ என்னையே வெறுத்துக் கொள்கிறேன்
காரணமே தெரியாமல்.
பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்
விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள்
ஏராளம்.

இந்த ஆம்லேட்டை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
அதை எடுத்து சாப்பிடும் வரை
சாப்பிட்ட பிறகோ என்னையே வெறுத்து கொள்கிறேன்
காரணமே தெரியாமல்..
வெந்த முட்டைகளை விட வேகாத ஆப் பாயில்கள்
ருசி அதிகம்.


கவனம் தப்பாத உன் பேச்சுக்களில்
எங்கேனும் காதல் ஒளிந்திருக்குமோ
எனப் பார்த்திருப்பதும்
மட்டறுக்கப் படும் உன் வார்த்தைகளில்
எனக்கான நேசம் தூவப் பட்டிருக்குமோ எனத்
தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது


கவனமாக திருப்பி போடப்பட்ட ஆம்லேட்டுகளில்
பச்சைமிளகாய் எங்கேனும் ஒளிந்துருக்குமா
என பார்பதும்
அதன் மேல் மிளகு தூள் தூவபட்டு இருக்குமா
எனத் தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது.


இலையுதிர் காலங்களுக்குப் பிறகு
வசந்தம் வந்துதானே ஆகவேண்டும்.
காத்திருக்கிறேன் வரும்வரை

எனக்கு முன் ஆடர் செய்த ஆம்லேட்டுக்கு பிறகு
ஆப்பாயில் வந்துதானே ஆகவேண்டும்
காத்திருக்கிறேன் வரும் வரை...(சாப்பிடாமல்)

டிஸ்கி: ....எனக்கும் காதல் கவிதை
டிஸ்கி: எனக்கான ஆப்பாயில்

Wednesday, August 22, 2007

கும்மி 2007 முறைகேடு நடப்பதாக செந்தழல் புகார்

நடந்துகொண்டு இருக்கும் கும்மி 2007 தேர்தலில் எதிர்கட்சிகள் கோல்மால் செய்வதாக செந்தழல் ரவி சர்வேசனிடம் புகார் கொடுத்து இருக்கிறார்.

சகவேட்பாளர் ஆன சிபி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதாகவும் அதற்கான ஆதரத்தையும் வெளியிட்டு உள்ளார் செந்தழல் ரவி.

இங்கு போட்டோ மட்டும் வெளியிட்டு உள்ளார், வீடியோ ஆதாரத்தை விரைவில் வெளியிட போவதாக சொல்லி இருக்கிறார்.

வீடியோவில் என்ன இருக்கு என்பதை சொல்லி இருக்கிறார்.

சிபி: நந்தா எப்படி இருக்கீங்க?

நந்தா: நல்லா இருக்கே தள.

சிபி: வரபோகிற கும்மி2007 எலக்சனில் எனக்கு ஓட்டு போட்டு பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.

நந்தா: இப்பதான் ஓசை என்னை அழகா படம் எடுத்து தரேன் அதுக்கு பதிலா எனக்கு ஓட்டு போடனும் என்றார்.

சிபி: ம்ம்ம் வேற யார் யார் எல்லாம் கேட்டாங்க?

நந்தா: அய்யனார் தனக்கு ஓட்டு போடவில்லை என்றால் தன்னிடம் இருக்கும் புலியை அவுத்து விட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார்...

சிபி: ம்ம்ம் கவலை படாதே தம்மி நாளை நமதே!!!

நந்தா: இந்த பால பாரதி என்னடான்னா ஓட்டு போடவில்லை என்றால் சொந்த குரலில் ஒரு ஆடியோ கேசட் முழுக்க பாட்டு பாடி அதை என்னை கட்டி போட்டு காதில் ஹெட் போனை மாட்டிவிட்டு கேட்கவைப்பேன் என்கிறார்.

சிபி: ம்ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் அவுங்கள விடுங்க நந்தா!!! இந்தாங்க இந்த பையில் 1000 ரூபாய் பணம் இருக்கு வச்சிக்குங்க.ஓட்டை மட்டும் மறக்காம எனக்கு போட்டுவிடுங்க!!! சரி யாருக்குதான் உங்க ஓட்டு சொல்லுங்க???

நந்தா: பணம் எல்லாம் வேண்டாம் தளா, எல்லாருக்கு ஒரு ஓட்டு போட்டுவிடுகிறேன் தள!!!


குறிப்பு: நந்தா உங்க முகவரி என்னிடம் இல்லை அதனால் உங்களிடம் அனுமதி வாங்க முடியவில்லை. ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்க எடுத்துவிடுகிறேன்.!!!

Tuesday, August 21, 2007

கோபமுடன் புனிதர்களுக்கு = (சமவினை)

வம்பு, தும்பு, சந்தோசம், பிறப்பு விளிம்பிற்க்கு தானாகபோகும் வாழ்வின் அவலம்இவை எல்லாத்தையும் படித்துக்கொண்டோ அல்லது வீசிடி போட்டி டிவியில் முனியாண்டிவிலாஸ்ஆட்டுகால் சூப் குடித்துக்கொண்டோ சந்திரன் வழுக்கை மண்டை உச்சியில் விழுந்த தேங்காய் போல் மிகச் சக்தி வாய்ந்த புனிதர்கள் ஆரம்பித்த குழுமம் தான் கோபமுடன் என எனக்கு தெரியும்.

கோபு தந்த குட்டியை பிடித்து கொண்டு போனால் அங்கு ஒரு மாடு கட்டபட்டு இருந்தது,அதற்கு யூசுப் புல் வைத்து கொண்டு இருந்தார், என்னடா இவரு எல்லாம் மாட்டுக்கு புல் வைக்கிறாரா? என்ற ஆச்சர்யம் முதலில் எழுவே இல்லை!

அறிவுசூரியன் எழுதிய நாலு பக்கங்கள் கிழிக்கபட்டதுக்கு காரணம் எனக்கு இனிப்பை தந்தது. ஏன் ஏன்றால் அந்த பக்கத்தில் லட்டு இருந்தது ,தமிழை இங்குபில்லரில் வைத்து பாதுகாக்கும் இப்புனிதர்களின் பணி வாழ்க. தவறான நாலுபக்கம் என்று கிழிக்கபட்ட பக்கங்களை இங்கு வைக்கிறேன். கோபமுடன் பற்றியெல்லாம் சமவினையாற்ற என் வலைபக்கம் இருப்பிடமே!!!

-------------------X X X(அதான் சிம்பாளிக்கா சொல்றோம்ல்ல)---------------
கோணி இப்பொழுது ஆங்கில சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றார் ஆனால் அதே சம்பளம் தான் அந்த கம்பெணி கொடுப்பதாக தனியாக புலம்பினார்.ஏதோ "தெரிந்தும் தெரியாமலும்" எழுத வந்துவிட்டார்.

ஒரு டீச்சர்

+ குறி

- குறி

x குறி

% குறி

என்று வகுப்பில் குறி சம்மந்தபட்ட பாடத்தை எப்படி எடுக்கலாம். இது சம்மந்தமாக அவர் எழுதியதுதான் பிரச்சினையாகி இருக்கிறது, நிஜமாகவே கோணி கணக்கு வாத்தியார் அல்ல யாரும் திடிர் என்று 100323 x 1212121 பதில் என்ன வரும் என்று கேட்டுவிட்டால் அவர் கணக்கு வாத்தியாரை கேட்டே பதில் சொல்ல வேண்டி வரும். ஆகையால் இனி அவர் தெரிந்தும் தெரியாமலும் எழுதகூடாது.

-------------------XXX-------------------------






மேலே உள்ள செங்குத்தாக இருக்கும் எழுத்துக்கள் அய்யனார் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது.


டிஸ்கி: இது அய்யனாரின் எதிர் வினைக்கு, எதிர் வினை ஆகையால் இது சம வினை.

குறிப்பு: அய்யனாரின் அன்புடன்1 புனிதர்களுக்கு எதிர்வினையை படித்து இருந்தால் மட்டுமே இது புரியும்.

Monday, August 20, 2007

காதலிக்கும் அனைவருக்காகவும் இது....


If you have some conditions in the mind then you will never be able to love, those conditions will become barriers. Because love is beneficial to you .if you can understand that just by loving people you grow in fearlessness, you will Love for the sheer joy of it.

Ordinarily people love only when there conditions are fulfilled. They say you should be like this, only then will I love. A mother says to the child. “I’ll love you only if you behave.” A wife says to the husband. ”You have to be this way, only then can I love you”. Everybody creates conditions; Love disappears.

Love is infinite sky! You cannot force it into narrow space, conditioned, limited. if you bring fresh air into your house and close it off from everywhere-all the window closed all the doors closed-soon it becomes stale. Whenever love happens it is a part of freedom; then soon you bring that fresh air into your house and everything goes stale, dirty.

When you fall in love everything looks beautiful, because in those movement you don’t put conditions. Two persons move near each other unconditionally. Once they have settled, once they have stared talking each other for granted, then conditions are being imposed;” you should be Like this, you should have like that, only then will I love “- as if love is bargain

People come to me, they always say “the others is not loving me “ nobody comes and say “ I am not loving the other. “Love has become Demand;” “The other is not loving me.” Forget about the other! Love is such a beautiful phenomenon, if you love you will enjoy.

By Osho

டிஸ்கி: இன்று என் அக்கா மகள் பிறந்த நாள் அதற்காகதான் இந்த பதிவு. அக்கா மகளுக்கு படிக்க தெரியாது ஏன் என்றால் அவளுக்கு வயது இரண்டு.
இது ஓசோ எழுதியது யாரும் தமிழில் அழகாக மொழிபெயர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Sunday, August 19, 2007

கொஞ்சமா நான் வெஜ் --- அடல்ஸ் ஒன்லி

இரண்டு நாட்களுக்கு முன்பு ஓசை செல்லா ஒரு நான் வெஜ் பதிவு போட்டார் அவர் எப்படி அப்படி போடலாம் என்று கும்மு கும்மு என்று கும்மி கொண்டு இருக்கிறார்கள். அது அடங்கும் முன்பு நானும் ஒரு நான் வெஜ் பதிவு போட்டு அந்த சூட்டை இன்னும் கொஞ்சம் அதிகபடுத்தலாம் என்று முடிவு செய்து இந்த பதிவு. முட்டை மசலா

தேவையான பொருட்கள்:

முட்டை : 6
பெரிய வெங்காயம்: 4
பச்சை மிளகாய் : 3
பூண்டு :பெரியது 1
இஞ்சி: சிறிதாக ஒன்று
தக்காளி: 3
கொத்தமல்லி: தேவைக்கு ஏற்ப
மிளகாய் தூள்: இரண்டு சூபுன்
உப்பு தேவைக்கு ஏற்ப.

செய்முறை:
முதலில் வெங்காய்தை நறுக்கி கொள்ளவும், பின் தக்காளியை நடுதண்டு பாகத்தை விட்டு மீதியை வெட்டிக்கவும் (கிட்னியில் கல் உள்ளவர்கள் தவறாமல் செய்யவும்). பின் பச்சை மிளகாயை இரண்டாக வெட்டவும். பூண்டு , இஞ்சை அரைத்து விழுதாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின் வாணலியை சூடாக்கி ஆயில் விட்டு வெங்காயத்தை வதக்கவும் (சிறிது உப்பு போட்டு வதக்கினால் வெங்காயம் உடனே வதங்கி விடும்). பின் தக்காளியை போட்டு வதக்கி கொண்டு. அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுதை போடவும், கூடவே மிளகாய் தூள் ,பச்சை மிளகாய் எல்லாம் போட்டு சூடாக்கவும். பின் வேக வைத்த முட்டையை ஆங்காங்கே கீறி விட்டு
அதில் போடவும். மிளகாய் தூள் வாடை போகும் வரை சூடுபடுத்தவும்.
பின் அறிந்து வைத்த கொத்தமல்லியை போட்டு பறிமாறவும்.


டிஸ்கி: இப்ப தலைப்பு விளக்கம் சொல்லிவிடுகிறேன் முட்டை முழு நான் வெஜ் இல்லை அதனால்தான் கொஞ்சம் நான் வெஞ் என்றேன்.
பிறகு அடல்ஸ் ஒன்லி எதுக்கு என்றால் நான் அடல்ட்தானே நாம் மட்டுமே இதை சமைத்தேன் அதான் அடல்ஸ் ஒன்லி.

பாலபாரதிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா--- போட்டிக்கு

டாக்டர் பட்டம் நம்ம ஷில்பா செட்டிக்கு முதல்ல கொடுத்தாங்கபிறகு இப்ப நம்ம விஜய்க்கு, சங்கருக்கு இப்படி ஊர்ல இருக்கிற வீனாபோன பசங்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கும் பொழுது நம்ம பாலபாரதிக்கு ஏன் கொடுக்க கூடாது? அப்படி எந்த விதத்தில்நம்ம பா.பா குறைஞ்சு போய்விட்டார்.(இதுக்கு ஏதும் உள் குத்து எல்லாம் கிடையாதுங்க).

எந்த வித்திலும் நம்ம தல விஜயைவிடவோ, அல்லது ஷில்பாவை விடவோகுறைந்தவர் அல்ல. அதற்காக அமீரக பா.க.ச சார்பில் டாக்டர் பட்டம் கொடுப்பது என்றுமுடிவு செய்யபட்டு உள்ளது.

இன்று மாலை ஆசிப் மீரான் முன்னிலையில், அபி அப்பா மேற்பார்வையில் திருமதி .டாக்டர் டெல்பின் அவர்கள் பட்டம் கொடுக்க, டாக்டர் பட்டம் பெறுகிறார் நம் பா.பா.

இந்த பட்டத்தை கொடுப்பது நிஜ டாக்டர் ஆகையால் இது டாக்டர் பட்டம்தானே?


நாங்கள் ஒரு பட்டம் அல்ல இரண்டு பட்டம் கொடுக்கிறோம் தல சந்தோசமா வச்சிக்க தல!!! வச்சிக்கிட்டு சும்மா ஜொய்ய்ய்ய்ன்னு பட்டத்தை விடு தல.
தொடரும்....

Saturday, August 18, 2007

புலி தோல் போர்திய பசு

காமெடியனாக இருப்பதில் இருக்கும் ஒரு கஷ்டம் சில விசயங்கள் சீரியசாக பேசும் பொழுதுமற்றவர்கள் அதையும் நகைசுவையாக எடுத்து கொள்வதுதான், ஒன்றுக்கு மூன்று முறை இல்லை நிஜமாகதான் சொல்கிறேன் என்று சொன்னாலும் அது மற்றவருக்கு நகைசுவையாகதான் தெரியும் பொழுதுகொஞ்சம் வலிக்கதான் செய்கிறது. இதை அதுபோல் எடுத்துகொள்ளாதீர்கள்.

முதன் முதலாக உன்னிடம் பேசிய நாளை நினைவில் வைத்து கொள்ளவில்லை ஆனால் என்ன பேசினேன் என்று நினைவு இருக்கிறது, அன்று எனக்கு தெரியவில்லை உன்னுல் விழபோகிறேன் என்று!
வழக்கம் போல் கிண்டலுடனே ஆரம்பித்த நம் அறிமுகம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து இன்று ஒரு புயலை போல் மையம் கொண்டு உள்ளது.

நம் சமுதாயத்துக்கு ஒரு நடிகன் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும், அரசியல்வாதி என்றால் இதைதான் செய்யவேண்டும் என்று ஒரு சட்டதிட்டங்களை வைத்து இருக்கிறார்கள், அதுபோல் ஒரு கவிஞன் என்றால்"அன்பே" "அமுதே" என்றுதான் எழுதவேண்டும் என்ற சட்டத்தை உன்மீதும் வைத்து பொருத்த முயலும் அதை நீ உன் வார்தைகளால் உடைக்கிறாய் பொறுத்துகொள்ள முடியாதவர்கள் உன்னை சாடுகிறார்கள்.

பெண்களை பற்றியும் மதுவை பற்றியும் எழுதுவதால் நிஜத்திலும் அப்படிதான் என்று முடிவு கட்டும் மக்களை பார்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது வாய் வழியாக அல்ல! ஏன் ஒருவன் வெளிப்படையாக இருந்தால் அவன் மோசமானவனாகதான் இருக்கவேண்டுமா? என்ன? உன் வெளிபடையான பேச்சுதான் எனக்கு மிகவும்பிடித்தது. உண்மையாக பழகியவர்களுக்கு தெரியும் நீ நல்லவன் என்று.

எனக்கும் தெரியும் நீ நல்லவன் என்று!!! நீ வெறும் புலி தோல் போர்திய பசுதான் என்று வேறு யாருக்கு தெரியவேண்டும்?

......................அய்யனாருக்கு

Thursday, August 16, 2007

இன்னாள் நண்பனுக்கு - எதிர் கவுஜ



நீயோ அல்லது நானோ சில
கணங்களேனும் தாமதித்திருந்தால்
(அந்த லாரி மேல மோதி இருக்கும்).
நிச்சயம் தவிர்த்திருக்கலாம் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட நம் சந்திப்பை....

(ஆமா என்ன செய்ய காலையில் கழுதை முகத்தை பார்த்தா நல்லது என்றார்கள்)


எனக்கான பார்வைகள் எதுவும்

உன்னிடமோ

உனக்கான வார்த்தைகள் ஏதும்

என்னிடமோ

மிச்சமிருக்கவில்லை அப்போது..

(நாங்க இலையில் வச்ச புல் மீல்சையே மிச்சம் வைக்க மாட்டோம் , பக்கத்து இலையையும் சேர்த்து காலி செய்வோம் இதுல பார்வை மிச்சம் இல்லை வார்தை மிச்சம் இல்லை என்று சொல்லிக்கிட்டு).


தப்பித்தல்களின் அவசரத்தோடு(ஜெயில் இருந்தா???)

நொடியொன்று இறக்கும்

அவகாசத்திற்குள்

விரைந்து கடந்தாய் என்னை..

(மின்னல் போல மறைந்தான் என்று சொல்ல என்னவெல்லாம் சொல்வீங்க, நொடி இறக்குது, நிமிசிசம் பிறக்குதுன்னு).


உன் முதுகில் பட்டுத்தெறித்த

என் பார்வைகள்

முனை மழுங்கி

மண்ணில் விழ....

(அதனால் என்ன ஸார்பினர் வச்சு திரும்ப சீவிக்கிட்டா போச்சு)


ஒப்பனைகள் கலைந்து

(உங்க மேக்கப் கலைஞ்சு போச்சா அய்யோ பாவம் மக்கள்)

விகாரமாய்ப் பல்லிளிக்கிறது

(அய்யனார் கிட்ட சொன்னா அந்த பெண் மாட்டி இருந்த கிளிப் ஒன்று ஆர்டர் செய்வார்)

என்றோ வெகு

புனிதமென

நான் கொண்டாடிய

உன் நட்பு...

(தீபாவளி கொண்டாடுவோம், பொங்கல் கொண்டாடுவோம் அது என்னா புச்சா)


டிஸ்கி: ஜெஸிலா நீங்க காயத்ரி பதிவில் போட்ட மாதிரியே இங்கும் அதே பின்னூட்டம் போட வேண்டும் :) அதுக்குதான் நம்ம அய்யனார் போட்டோ.



Wednesday, August 15, 2007

ஒரு அப்பாவி நம் வலைபதிவர்களிடம் விலாசம் கேட்கிறார்

வழிதெரியாமல் தவிக்கும் ஒருவர் நம் வலைபதிவர்களிடம் வழிகேட்டால் எப்படி வழி சொல்வார்கள் என்று ஒரு கற்பனை. பெரிய தலைகள் எல்லாம் கோச்சுக்காதீங்க:)

அப்பாவியான அவர் எதிரே நம்ம ஜோசப் சார் எதிரில் வருகிறார்.

அப்பாவி: எக்ஸ்கூயுஸ் மி சார் இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?

ஜோசப் சார்: ம்ம்ம் இங்க வா இப்படியே நேரா போய் "திரும்பிபார்" ஒரு புலிய மரம் தெரியும்,அங்க இருந்து லெப்ட்ல போய் "திரும்பிபார்" ஒரு Bank போர்ட் தெரியும் அங்கே இருந்து, அங்க இருந்த ரைட்ல திரும்பி பார் ஒரு பழைய வீடு தெரியும், நேராக போய் "திருப்பி பார்" நான் இங்க நிற்பது தெரியும். திரும்பி பார்துக்கிட்டே வந்தின்னா நான் நிற்கும் இடத்தில் இருக்கும் எதிர் வீடுதான் அந்த வீடு.

அப்பாவி: ?????????????????

*****************************************
வீட்ட கண்டுபிடிக்க முடியாத அப்பாவி எதிரில் நம்ம செந்தழல் ரவி வருகிறார்.

அப்பாவி: எக்ஸ்கூயுஸ் மி சார் இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?

செந்தழல் ரவி: என்னய்யா என்னை பார்க்காம திரும்பி யார பார்த்து அட்ரெஸ் கேட்கிற?

அப்பாவி: இல்ல இதுக்கு முன்னாடி வேற ஒருத்த கிட்ட கேட்டேன் அடிக்கடி திரும்பி பார்க்க சொன்னார் அதனால கழுத்து சுலுக்கிக்கிச்சு.

ஹோ அப்படியா ! இப்படியே நேராக போ அங்க பச்சகலர் பெயிண்ட் அடிச்ச வீட்டு கொடியில நீலகலர் சுடிதார் காஞ்சிக்கிட்டு இருக்கும், அதுக்கும் பக்கத்தில் இருக்கும் ரோட்டில் ரைட்டில் கட் செஞ்சீன்னா ஒரு காலேஜ் பஸ்ட் இயர் படிக்கும் பெண் மொட்ட மாடியில் நின்னு படிச்சிக்கிட்டு இருக்கு. அந்த வீட்டுக்கு எதிர் பக்கம் போகும் ரோட்டில்....

செந்தழல் : இப்ப டைம் என்னா?

அப்பாவி: 12.30

செந்தழல்: அய்யயோ பிலிப்பைன்ஸில் 10 மாடலிங் பெண்களுடன் மீட்டிங் இருக்கு பிளைட்ட பிடிக்கனும், மீதி வழியை பிளைட்டில் போகும் பொழுது லேப் டாப்பில் டைப் செஞ்சு மெயில் செய்கிறேன் இப்ப பை.

************************************************
எதிரில் நம்ம அய்யனார் வருகிறார்

அப்பாவி: தம்பி தம்பி இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?

அய்யனார்: இப்படியே நேரா போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ... அங்கே இருந்து ரைட்டில் திரும்பி போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒரு டாஸ்மார்க் வரும் அங்கே இருந்து லெப்டில் திரும்பி போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ. ஒரு "குட்டி" சுவரு வரும் அங்கே இருந்துநேரா வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... பக்கத்தில் ஒரு நீலகலர் பெயிண்ட் அடிச்ச வீடு இக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

தம்பி டைம் என்னா? ஏன்னா நான் கால சக்கரத்தை மறந்து வச்சிட்டு வந்துட்டேன்.

அப்பாவி: 6.30

அய்யனார்: சாரி சார் எனக்காக பல்லில் கிளிப் போட்ட பெண், ஜாக்கெட்டில் ஊக்கு போட்ட பெண், ராதிகா எல்லாம் வெயிட்டிங் வேற ஆள் கிட்ட கேளுங்க...

**********************************************

தம்பி கதிர் எதிரில் வருகிறார்

அப்பாவி: தம்பி தம்பி இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?

தம்பி: வாய்யா! என் பேரு எப்படி தெரியும்?

அப்பாவி: உங்க பேரு தம்பிங்களா ரொம்ப சந்தோசம்... இந்த அட்ரஸை கொஞ்சம் சொல்லுங்களேன் காலையில் இருந்து தேடிக்கிட்டு இருக்கேன்
தம்பி: சரி வா ஒரு டீ சாப்பிட்டு கிட்டே அட்ரஸ் சொல்கிறேன். சரி உன் பேரு என்னா?

அப்பாவி: .................

தம்பி: கூட பிறந்தவுங்க எத்தனை பேர் என்னா வேலை செய்யுற? எத்தனை பிள்ளை எல்லா விவரத்தையும் கேட்டுகிறார். பின் நான் கிளம்புறேன் பை பை

அப்பாவி: தம்பி இன்னும் நீங்க அட்ரசை சொல்லவே இல்ல...

தம்பி: போய்யா இப்பதான் பதிவு போட மேட்டர் உன் கிட்ட இருந்து வாங்கி இருக்கேன் அது மறக்கும் முன் நான் பதிவு போடனும் பை பை.

*********************
எதிரில் ஜீ.ராவு கையில் அர்சனை தட்டோடு வருகிறார்.

சார் சார் உங்கள பார்தா ரொம்ப நல்லவுங்க போல தெரியுதுகொஞ்சம் இந்த அட்ரஸ் எங்க இருக்கு சொல்ல முடியுமா?

ஜீ.ரா : ஓம் முருகா! இப்படியே நேரா போனா, ஒரு முருகன் கோயில் வரும் அங்க இருந்துலெப்டில் திரும்பினா ஒரு பிள்ளையார் கோவில் வரும், அங்கே இருந்து நேராக போனா ஒரு அம்மன் கோயில் வரும் அதுக்க அடுத்த சந்தில்....

மணி என்னா ஆச்சு?

அப்பாவி: 8.30

ஜீ.ரா: கோயில் நடை சாத்தும் முன் நான் போக வேண்டும் பை பை.
**********************

எதிரில் நம்ம அண்ணாச்சி வருகிறார்.
அப்பாவி: அண்ணே அண்ணே இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?

அண்ணாச்சி : எலே செவுத்து மூதி எங்கன நின்னுக்கிட்டு என்ன விலாசத்த கேக்குதியபோலே போய் வட பழனி பஸ் ஸ்டாண்டில் கும்பகோணம் பஸ் புடிச்சு ஊருக்கு போய் அங்கன கேளுலே, வந்துட்டாங்கிய எங்கன இருந்துதான் இப்படி கிளம்புவானுகிய!!!

அந்த அப்பாவி அபி அப்பா!!!!

Tuesday, August 14, 2007

தமிழ்மண நுழைவு தேர்வு முடிவு

நடந்து முடிந்த நுழைவுதேர்வில் ஆர்வமுடன் பலபேர் கலந்துக்கொண்டனர், தேர்வு முடிவு என்றாலே வழக்கம் போல் பெண்கள் தான் முதல் இடத்தை பிடிக்கின்றனர். அது போல்தான் இங்கேயும் நம்ம ஜெஸிலாதான் முதல் இடத்தை பிடிக்கிறார். அவரை அடுத்து இரண்டாம் இடத்தை நம்ம வெங்கட்ராமனும் மூன்றாம் இடத்தை நம்ம ராம் நான்காம் இடம் இம்சையும் பெற்று இருக்கிறார்கள்.

தினதந்தி முதல் பக்கம்
நடந்து முடிந்த நுழைவு தேர்வில் முதல் இடம் பெற்ற ஜெஸிலா போட்டோவும் பேட்டியும் இடம் பெற்று இருக்கிறது.

கேள்வி: இந்த வெற்றி எப்படி உங்களுக்கு சாத்தியமானது?

பதில் : ஆபிஸில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் கூட வீனாக்காமல் தமிழ் மணத்திலேயே செலவிட்டேன்.

கேள்வி:இதுக்கு பின்னால் யார் இருக்கா?

பதில்: என் பின்னால் யாரும் இருந்தால் தமிழ்மணதை படிக்க முடியாமல் போய் இருக்கும். அதனால் பின்னால் யாரும் இல்லை.

கேள்வி: முதல் மார்க் வாங்கிட்டீங்க அடுத்து உங்கள் லட்சியம் என்ன?
பதில்: டாக்டர் ஆவது தான் என் லட்சியம். (எல்லாம் அப்படிதானே சொல்லுவாங்க).


தினகரன் முதல் பக்க செய்தி
பல சோதனைகளையும் தாண்டி சாதனை புரிந்த மாணவர் வெங்கட்ராமன்.

கேள்வி : நீங்க அதிக அளவில் சோதனைகளை சந்தித்து இருக்கிறீர்களாமே அப்படி என்ன?

முதலில் லக்கி கிட்ட மாட்டினேன் என்ன காரணம் என்றே தெரியவில்லை அவரு என் மேல கோவமா ஆயிட்டார். அடுத்து இளவஞ்சிக்கிட்ட சிக்கிசின்னா பின்னமானேன், அவருக்கும் என் மேல என்ன கொலை வெறியோ தெரியல. இரண்டு நாள் ரூம் போட்டு அழுதேன் தெரியுமா? இப்படி பல சோதனைகலை கடந்துதான் இந்த சாதனையை செஞ்சு இருக்கிறேன்.

தினமலர் செய்தி.

ஆபிஸில் பார்ட் டைமாக வேலை பார்த்து, இரவில் கண் முழித்து வேலை பார்த்த இளைஞர் ராம் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.

கேள்வி: நீங்க இந்த வெற்றிய எதிர் பார்தீங்களா?

பதில்: ஜாகிர்கான் நன்றாக பால் போடும் பொழுதே வெற்றிய எதிர் பார்தேன். இந்தியா வெற்றி பெறும் என்று சொல்லி இருந்தேன்அது போலவே நடந்தது.

கேள்வி: நான் அத கேட்கலீங்க நீங்க மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து இருப்பதை கேட்கிறேன்?

பதில்: ஹோ அதுவா இது எல்லாம் சாதாரணம், எங்க ஊரில் நான் படிக்கும் பொழுது நான் தான் முதல் மார்க் வாங்குவேன். ஏன்னா நான் ஒருத்தவன் தானே எங்க ஊர் பள்ளி கூடத்தில் படித்தது.

கேள்வி: இந்த வெற்றிக்கு யார் யார் எல்லாம் காரணம்?

பதில் : எங்க மேனேஜர்தாங்க!

கேள்வி: எல்லாரும் அம்மா அப்பா டீச்சர் என்று சொல்லுவாங்க நீங்க வித்தியாசமா மேனேஜர் என்று சொல்றீங்க?

பதில்: ஆமாங்க அவருதானே என்ன ஆபிஸில் சும்மா உட்கார வச்சு இருக்கிறார் அதனால் தானே என்னால் படிக்க முடியுது. அப்ப அவருதானே காரணமாக இருக்க முடியும்.

மறு கூட்டலுக்கு விண்ணபங்கள் வரவேற்கபடுகின்றன. கட்டணம் $5000 செலுத்துபவர்களுக்கு முதல் மார்க் வழங்கபடும்.

Monday, August 13, 2007

சன் டீவியில் வலைபதிவர்கள்

அனித்தா கந்தசாமி உங்களை திரும்பவும் சின்ன மொட்டுகள் பகுதியில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சிஅடைகிறேன். (அங்கு வரிசையாக சிபி, லக்கி, செந்தழல் ரவி, டோண்டு, ஓசை செல்லா எல்லாரும் அமர்ந்திருக்க நிழச்சி ஆரம்பம் ஆகிறது.

சிபி குட்டி வாங்க வாங்க...இங்க ஆண்டி பக்கத்துல உக்காருங்க ஏய் பக்கத்துல உட்கார சொன்னேன் மடியில் இல்லை இறங்கி அங்க எட்டி உட்காந்துக்குங்க)

அனி: இன்னைக்கு என்ன சொல்ல போறீங்க

சிபி: ம்ம்ம் A, B, C, D

அனி: யார் சொல்லி குடுத்தா

சிபி : ம்ம்ம் பக்கத்து வீட்ல இருக்கிற என் சைட்டு

அனி: ம்ம்ம் செல்லுங்க பார்ப்போம்

சிபி : அதான் முன்னாடியே சொல்லிட்டேன்னே!

அனி: இல்லப்பா முழுசா சொல்லுங்க!

சிபி : நான் இப்ப என்ன அரை குறையாவா சொன்னேன்!

அனி: ஸ்ஸ்ஸ்ஸ் ய்பா திருப்பி சொல்லு

சிபி: எனக்கு அந்த பொண்ணு A யில் இருந்துதான் சொல்லி கொடுத்துச்சு z ல் இருந்து சொல்லி கொடுக்கல!!!

அனி: முடியல ராசா? இன்னொரு முறை சொல்லுப்பா

சிபி: ம்ம்ம் இப்படி தெளிவா கேட்கனும்.

A for Aruna B for Banu C for chithra D for Devi E for Eazlil Araci... சரி சரி போதும் போதும் போய் சமத்தா உட்காந்துக்கோ!!!

-------------------------
அனி: அடுத்து யாரு லக்கி யா இங்க வாங்க வாங்க வாங்க

லக்கி முடியாது போ!!!!

அனி: ஆண்டிய அப்படி எல்லாம் சொல்ல கூடாதும்மா வாங்க இங்க

லக்கி முடியாதுன்னா முடியாது!

அனி: ஏன்

லக்கி: என் டவுசர் கிழிஞ்சு போச்சு.

அனி: அப்ப சரி சரி அங்கயே உட்காந்துக்குங்க
-----------------------------


அனி: அடுத்து யாரு டோண்டுவா வாங்க வாங்க !!!

அனி: என்னது இது புது துணியில் இருந்து நீங்க பிரைஸ் லேபிள எடுக்கலையா!

டோண்டு இல்ல அது எல்லாம் லேபிள் இல்ல நான் தான் ஒரிஜினல் கண்டு பிடிக்க நான் போட்டு இருக்கும் நம்பர் tag.

அனி: சரி சரி என்ன சொல்ல போறீங்க!

ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன் அதை தான் எப்பவும் சொல்லுவேன்!

இங்கு பேசியது நான் தான் என்பதை என் பதிவில் பின்னூட்டமாக போட்டுவேன். !

அனி :(

-----------------------------------

அடுத்து யாரு செந்தழல் ரவியா வாங்க வாங்க

அனி: என்ன சொல்ல போறீங்க

ரவி: ரைம்ஸ்

அனி: என்ன ரைம்ஸ்

ரவி: டிவிங்கில் டிங்கில் லிட்டில் ஸ்டார்

அனி: யார் சொல்லி கொடுத்தா?

ரவி: கொரிய அழகி

அனி:சொல்லுங்க

ரவி: டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்
எங்க கொரியன் பிகர் சூப்பர் பார்!

அனி: ரொம்ப சமத்து போய் உட்கார்ந்துக்கோ

---------------------------------------------

அனி: அடுத்து யாரு ஓசை செல்லாவா வாங்க வாங்க
என்ன சொல்ல போறீங்க!

ஓசை செல்லா: இருங்க ஒரு நிமிசம்

அனி: இது சொல்லவா அங்க இருந்து வந்தீங்க!

ஓசை செல்லா: யோவ் கேமிரா மேன் கேமிராவ அங்க வச்சா படம்
நல்லா விழாது..
ஏய் இப்படி பிடிக்கனும்,
லெப்ட்ல திருப்பு...
இல்லய்யா கொஞ்சம் ரைட்டுல திருப்பு...
இல்லையா ரொம்ப திருப்பிட்ட...
கொஞ்சம் மேல அப்படியே தூக்கு அந்த லைட்டிங் சரி இல்ல பாரு...
இம் இப்பதான் சரியா இருக்கு
இப்ப எடு பார்கலாம்.

அனி: யோவ் நீ சொல்லி கிட்டு இருகிறது கேமிரா மேன் இல்ல செக்யூரீட்டி கையில் துப்பாக்கி வச்சு குறி பார்த்துக்கிட்டு இருக்கான் அவன் கிட்ட போய்...
கேமிரா மேன் இங்க நிக்கிறான் பாரு.

ஓசை செல்லா : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொஞ்சம் உணர்ச்சிவேச பட்டுட்டேன்!!

Sunday, August 12, 2007

தமிழ்மணம் நுழைவு தேர்வு

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி மதிப்பெண் 12 X 1= 12

1) நாள் ஒன்றுக்கு 5 பதிவுகளுக்கு மேல் போட்டு தாக்குபவர் யார்?

அ) மகேந்திரன்.பெ ஆ) செந்தழல் ரவி இ) ஓசை செல்லா ஈ) இவை அனைத்தும்


2) கீழ்கண்டவர்களில் யாருக்கு கராத்தே தெரியும்

அ) நாமகல் சிபி ஆ) பொட் டீ கடை இ)வரவணையன் ஈ) தமிழச்சி

3) பத்து பக்கத்துக்கு மேல் ஒரு பதிவு போடுபவர் யார்?

அ) அபி அப்பா ஆ) யோசிப்பவர் இ) பால சந்தர் கனேசேன் ஈ) உண்மை தமிழன்

4) முதல் பின்னூட்டம் போடுபவர் யார்?

அ) மை பிரண்ட் ஆ) அபி அப்பா இ) G3 ஈ) இலவச கொத்தனார்

5)பின்னூட்டம் மட்டுமே போடுபவர் யார்?

அ)மின்னுது மின்னல் ஆ) மின்னாத மின்னல் இ) மினுக்கும் மின்னல் ஈ) பின்னிய மின்னல்

6) சட்னி வடை யார்?

அ) மகேந்திரன்.பெ ஆ) பெ.மகேந்திரன் இ) மகேந்திரன் ஈ) எல்லாம் ஒன்றுதான்


7) கருப்பு யார்?


அ) நெல்சன் மண்டேலா ஆ) மைக்கேல் ஜாக்ஸன் இ) முத்தையா முரளிதரன் ஈ) இவர்கள் அனைவரும்

8) அய்யனாரின் கவிதைகளில் அதிக இடம் பெறும் வார்தை

அ) மது ஆ) குறி இ) ராதிகா ஈ) இவையனைத்தும்


9) யாருடைய பின்னூட்டத்தில் அங்கங்களின் பெயர் இடம் பெற்று இருக்கும்

அ) டோண்டு ஆ) போலி டோண்டு இ) மகேந்திரன்.பெ ஈ)இவை அனைத்தும்

10) போனில் பேசுவதை அல்லது ரோட்டில் அட்ரஸ் கேட்ட ஒரு நிகழ்வை பதிவாய் போடுபவர் யார்?

அ)தம்பி ஆ) அண்ணன் இ) சித்தப்பா ஈ) மாமா

11) வீனை வாசிக்க போவதாக சொல்லி தமிழ்மணத்தில் இருந்து விடைபெற்றவர்?

அ) ஓசை செல்லா ஆ) ஆசை செல்லா இ) பூசை செல்லா ஈ) தோசை செல்லா

12) யாருக்கு பின்னூட்டம் போட்டால் வீட்டை பற்றி திட்டி பதில் பின்னூட்டம் வரும்.

அ) தாண்டு ஆ) நோண்டு இ) பூண்டு ஈ) யாருக்கும் இல்லை

பொருத்துக 5 x 2 =10

1) அய்யனா------------ கேமிரா

2) கவிதாயினி காயத்ரி--------ஆவி

3) நாமக்கல் சிபி --------- நடணமங்கை,காலி கோப்பை

4) ஓசை செல்லா ------- ரிப்பீட்டேய்

5) கோபி ------- டீ கடை காரன்


கோடிட்ட இடங்களை நிரப்புக 8 X 1 =8

1) பதிவர் பட்டறையில் -----------------என்பவருடைய --------------------காணாமல் போனது.

2) -------------------பார்கிறேன் தொடரை 100 வாரங்கள் எழுதியவர்----------------

3) -------------------சோதனை தமிழ் மணத்தில் பிரபிலம்.

4) பதிவர் சந்திப்பு என்றால் ------------------------கண்டிப்பாக இடம்பெறும்.

5) ---------------------டைய டவுசர் கிழிந்து போனது.

6) திசையதிர ------------விட்டதை பற்றி எழுதியவர் ----------------------------

7) இளவஞ்சியிடம் வகையாக வாங்கி கட்டிகொண்டவர்---------------------------

8) ஜட்டியின் கதை எழுதியவர் ---------------------------

odd வார்தைகள்

1) அ)அய்யனார் ஆ) சுகுனாதிவாகர் இ) தமிழ்நதி ஈ) குசும்பன்

2) அ)நாமகல் சிபி ஆ)ராம் இ) நாகைசிவா ஈ) பெயரிலி

3) அ) அபி அப்பா ஆ)சென்ஸி இ) தம்பி ஈ) ஜெஸிலா

4) அ)கண்மனி ஆ) அபி அப்பா இ) முத்துலெச்சுமி ஈ)மாலன்

விளக்கி எழுதுக

1) பா.க.ச என்றால் என்ன?

2) வ.வா சங்கம் என்றால் என்ன?

3) ப.பா சங்கம் என்றால் என்ன?

4) அ.மு.க என்றால் என்ன?

5) கு.மு.க என்றால் என்ன?

Saturday, August 11, 2007

பண வீக்கம் & மதிப்பு சில சந்தேகங்கள்

நண்பர்களே சில சந்தேகங்கள் இருக்கிறது. யாருக்கேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்!

1) பண வீக்கம் என்றால் என்ன? அது குறைவது நல்லதா? அல்லது வீங்குவது நல்லதா?

2) ஒரு நாட்டின் பண மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது. அதன் மதிப்பு ஏறுவதும் இறங்குவதும் ஏன்?

3) அன்னிய செலவானி மதிப்பு என்றால் என்ன?

(கட்டையால் அடித்தால் வீங்கும் அதுதான் வீக்கம் பதில் சொல்லாமல் ஒழுங்கா சொல்லுங்க)

Tuesday, August 7, 2007

கட்டுடைக்கும் சுகுணாதிவாகர்,அய்யனாருக்கு ஒரு பகிரங்க சவால்

நான் அடிக்கடி நம்ம அய்யனாரிடம் பேசும் பொழுது கேட்பேன் என்ன அய்யானார் நீங்கள் எழுதும் கவிதைகள் பல புரியாமையும், புரியும் வார்தைகள் கொஞ்சம் மோசமாகவும் இருக்கிறதே என்று கேட்டால் அவர் சொல்லும் பதில் நான் சுகுணா திவாகர், எல்லாம் ஒரெ (ரு) மாதிரியாகதான் எழுதுவோம். நாங்க எல்லாம் கட்டுடைக்கும் ஆளுங்கள் என்பார்.
அதனால் அவர்களுக்கு நான் வைக்கும் சவால்..

இது நம்ம கவிதாயினி காயத்ரி தலைக்கு பொருந்தாத கீரிடம் என்று எழுதிய விமர்சனத்துக்குகாக ஆட்டோ அனுப்பி சரியாக கவனித்தார் ஒரு சக பதிவர்.
அதனால் அவர் இருக்கும் நிலை. சுகுணா திவாகர் நீங்க இந்தியாவில் இருப்பதால் முடிந்தால் இந்த கட்டை உடையுங்கள் பார்கலாம்,

வெறும் கையால் முடியவில்லை என்றால் சுத்தியல், கடப்பாறை எல்லாம் எடுத்துக்கலாம் ஆட்சேபனை இல்லை எங்களுக்கு தெரிய வேண்டியது நீங்கள் எப்படி கட்டுடைப்பீர்கள் என்றுதான்.

அய்யனார் இனி உங்களுக்கு அடுத்த சவால். எங்க இந்த கட்டை வெறும் கையால் உடைக்கனும் அப்பதான் நாங்க நீ கட்டுடைக்கும் ஆள் என்று ஒத்துகொள்வோம்...


(சுகுணா திவாகர் கோச்சுக்கமாட்டீங்க என்று நினைக்கிறேன்:)

Monday, August 6, 2007

என் பார்வையில் பதிவர் பட்டறை + பாலபாரதிக்கு ஒரு வேண்டுகோள்

சென்னை பதிவர் பட்டறை என் பார்வையில்.







பால பாரதிக்கு சில ஆலோசனைகள்:
1) மேற்கண்ட படங்கள் என் பார்வையில் இப்படிதான் நான் எங்க வீட்டில் இருந்து பார்தால் தெரிந்தது, ஆகையால் அடுத்த முறை பட்டறை நடத்தும் பொழுது எங்கிருந்து பார்தாலும் தெரியும் படி உயரமான இடத்தில் நடத்தவும்.
(தள உலகில் இருக்கும் அனைவருக்கும் நீ கண்ணுக்கு தெரிவாய் ஏன்னா நீதானே எங்கள் ஸ்டார் மற்றவர்களும் தெரியும் படி ஏற்பாடு செய்யவும்.)
***************************************
2) உலகெங்கும் இருக்கும் வலை பதிவர்களும் பங்கு பெற வசதியாக நீங்கள் இலவச விமான டிக்கெட்டும் கூட ரெண்டு டிக்கெட்டுகளும் (குடும்பத்துக்குப்பா தப்பா நினைக்காதிங்க) அனுப்பி அவர்களையும் பங்கு பெற செய்யவேண்டும் (உன் சொந்த செலவில்) என்பதுதான் உன் கணவு என்று எனக்கு தெரியும் அதை உலகுக்கும் சொல்லிவிடு தள.
************************************
3) சாப்பாட்டுக்கு ஒரு டோக்கன் மட்டும் வாங்கி கொண்டு இரண்டாம் முறை சாப்பிட போன பொழுது "........................" வாங்கியதை நான் வெளியில் சொல்ல மாட்டேன், ஆனால் எங்கள் பா.க.ச தலைவருக்கே இந்த கதியா என்று அனைவரும் கொந்தளித்து போய் இருக்கிறோம், ஆகையால் அடுத்த முறை இரண்டு டோக்கன் கொடுக்கவும்.
************************************
4)இந்த முறை இந்தியன் எக்ஸ்பிரஸில் மட்டும் தான் நம் பா.க.ச பெயர் வந்துள்ளது அடுத்த முறை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், கன்யாகுமரி எக்ஸ்பிரஸ், ஜனசதாப்பதி எக்ஸ்பிரஸ் முடிந்தால் அமெரிக்கன் எக்ஸ்பிரஸிலும் உன் பெயர் வர செய்யவேண்டிய பொருப்பை பொன்ஸ் அக்கா, வினையூக்கு, JK, சிபி ஆகியோருக்கு கொடுத்துவிடவும்.
**************************************
இங்கனம்
அன்புடன்
தலைவர்
பா.க.ச கிளை
துபாய்.

தொலைந்து போன......சில

டைட்டில் ஓடுகிறது 11.11.2004 அன்றுகாலை அந்த இடமே பரப்பரப்பாக இருக்கிறது.எல்லோரும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறார்கள்.

மீசைகாரர் எலே அங்க என்ன டா நின்னுக்கிட்டு மச மசன்னுபேச்சு போய் வேலைய கவனிங்கடா, என்று ஓடி ஆடி விரட்டிகொண்டு இருக்கிறது.

வாங்க வாங்க என்று எல்லோருக்கு சிரித்த முகத்துடன் பன்னீர் தெளித்துகல்கண்டு, சந்தனம் கொடுக்கும் பட்டுசேலை கட்டிய பெண்கள்.

குளேசப்பில் அருண் vs புனிதா திருமண நாள் 11.11.2004 இடம்கும்பகோணம் ராணி மஹால், தெர்மாகோல் கொண்டு செய்ய பட்டதட்டி தெரிகிறது.
நேரம் ஆச்சு பெண்னை அழைச்சுகிட்டு வாங்க...
மாங்கல்யம் தந்துநானே .....கெட்டிமேளம் கெட்டிமேளம்.

................................................................................
அப்பா திரும்ப திரும்ப எத்தனை தடவை இதேயே போட்டு போட்டு பார்ப அப்படி என்னத்த இதில இருக்கு...

உங்க அம்மாவின் பணிவு!!!

Sunday, August 5, 2007

இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

அன்புள்ள அண்ணி
இதோ இன்றோடு இரண்டு வருடம் ஆகிவிட்டது. உங்கள் முகத்தை பார்க்காமல் நாட்களை ஓட்டிவிட்டேன். உங்கள் முகத்தை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. இன்று நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு நானும் ஒரு காரணம் என்பதால்.

அவன் என்னிடம் தயங்கி தயங்கி சொன்னான் உங்கள் காதலை பற்றி. அண்ணி பெயர் என்ன என்று கேட்ட பொழுது சமீரா பானு என்றான், என்ன டா எப்படி டா மதம் விட்டு மதம் கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்களா என்றதற்கு அதெல்லாம் பார்த்துக்கலாம் என்றான்.

முதன் முதலாய் உங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்க அழைத்து வந்த பொழுது நீங்கள் முகத்தைமறைக்க முயன்றீர்கள், அப்பொழுது உங்களை தடுத்து இவன் எனக்கு தம்பி இது போல் மீண்டும்
ஒரு முறை செய்யாதே என்றான். அப்பொழுது கேட்டிர்கள் "ஏங்க கொஞ்சம் இவங்க கிட்ட சொல்ல கூடாதா இந்த அடிதடி எல்லாத்தையும் விட சொல்லி. இத பாருங்க கையில் எப்படி அடி பட்டு இருக்கு என்று அவன் அடி பட்ட கையை காட்டினீர்கள்" நேற்று நடந்த சண்டையே எனக்காகத்தான் என்று எப்படி நான் உங்களிடம் சொல்ல முடியும்.

அன்று தேதி சரியாக தெரியவில்லை டேய் மாப்பிள்ள பானுவ கல்யாணம் செஞ்சுக்கலாம் என்று நினைக்கிறேன் அவுங்க வீட்டுல ஓக்கே சொல்லிட்டாங்க இதுக்கு மேல காத்திருக்க முடியாதுன்னுட்டாங்க. அடுத்த மாசம் அவுங்க அப்பா இந்தியா வருகிறார் அப்ப கல்யாணம் வைக்கனும் என்கிறார்கள். என்ன சொல்கிறாய் என்றான். எப்படி டா இன்னும் நீயும் செட்டில் ஆகல முஸ்லீமா மாறி கல்யாணம் செஞ்சா பின்னாடி நம்ம வீட்டில் பிரச்சினை என்றேன். அதெல்லாம் பார்த்துக்கலாம் என்றான்.

சரி டா அண்ணனுக்கு தெரிந்தால் என்றதற்கு அவன் ரிலீஸ் ஆகி வருவதற்கு இன்னும் ஒரு 6 மாசம் ஆகும் அத பிறகு நாகூர் போய் கல்யாணம் நம்ம வீட்டுல தங்கச்சி கல்யாணம் முடியும் வரை சொல்லவேண்டாம், அதன் பிறகு சொல்லிக்கலாம் பானு கல்யாணத்துக்கு பிறகு அங்கேயே இருக்கட்டும் என்றான்.

அன்று மதம் மாறும் சடங்குகள் முடிந்த பின் அன்று உங்கள் கல்யாணம் நடந்தது. வீட்டுக்கும் வந்தோம், அவன் வீட்டில் என்னோடு ஊட்டிக்கு போவதாக சொல்லிவிட்டு இரவு உங்கள் வீட்டுக்கு வந்து விட்டு விட்டு ஏதோ பெரிய சாகசம் நடத்தியது போல் மகிழ்ச்சியோடு திரும்பினேன்.
அந்த மகிழ்ச்சி 1 வருடம் கூட நிலைக்க வில்லை ஆகஸ்ட் 6 காலை 11.30 மணிக்கு நண்பனிடம் இருந்து போன், மாப்பிள்ளை நம்ம நம்ம செந்தில் பானு, வீட்டுக்கு போய்ட்டு திரும்ப வரும் பொழுது .........

உன் காதல் கல்யாணம் சீக்கிரம் முடிந்தாலும் நீ செய்து வைத்த காதல் திருமணங்களில் இன்னும் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய டா என் அருமை நண்பனே.

(என்றும் உன் நீங்காத நினைவுகளுடன், பூண்டி கல்லூரி நண்பர்கள்).

Friday, August 3, 2007

இன்னொரு உலகம்

பல் செட்டை கழட்டி வைத்துவிட்டு
என் அருகில் வந்து காலில் விழும்
ஒரு அறுபது வயது வாலிபர்.

குச்சியை ஊன்றிய படி எழுந்து
நின்று தத்தி தத்தி என் அருகில் வந்து
என் கையை தடவி தான் போட்டு இருந்த
மோதிரத்தை எனக்கு மாட்டி விடும்
இன்னொரு எழுபது வயது வாலிபர்.

கட்டு கட்டாக பணத்தை டோக்கனாக
மாற்றி வைத்து வீசும் மற்றொறு
ஐம்பது வயது விடலை.

முதல் வரிசை சில இருக்கைகள் இது
போன்ற வாலிபர்களுக்காகவே
முன்பதிவு செய்யபட்டு காத்திருக்கிறது.

கடைசி வரிசையில் அமர்ந்து ஆரஞ்சு பழ
சாராயம் குடிக்கும்இருப்பத்தைந்து
வயது பெரியவர்கள் கூட்டம்.
குடும்பத்தோடு வந்து ஆணுக்கு பெண்
சமம் என்று பீர் ஜூஸ் குடிக்கும் குலவிளக்குகள்.

உடை குறைச்சலாக இருக்கிறது
இன்னும் கொஞ்சம் அதிகமாக
உடுத்து அப்பொழுதான் செயின் கிடைக்கும்
என்று ஆலோசனை சொல்லும் சக தோழி.

இந்த உலகம் விந்தையாகவே
இருக்கிறது என்று அவள் உறங்கியும்
உறங்காமல் விடை தேடும்
நாட்டியகாரியின் மனசாட்சி.

Thursday, August 2, 2007

வார்தைகள் இல்லை

ஆசிப் அண்ணாச்சி என்ன சொல்வது, எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை.