Monday, March 21, 2011

உப்புலி --திருப்புலி

ஸ்கூலில் படிச்சிக்கிட்டு இருக்கும் பொழுது 10th B செக்சனில் ஒரு பயபுள்ள இருப்பான் பேரு உப்பிலி...மாலை நேரத்தில் கிரவுண்டில் பார்த்தால் காலில் பேடு எல்லாம் கட்டி கிரிக்கெட் பேட்டை இப்படியும் அப்படியுமாக காற்றில் கத்தி வீசுவது போல் வீசிக்கிட்டு இருப்பான்..ஒரு முறை ஆப் சைடிலில் வீசினால்
அடுத்த முறை ரெண்டு ஸ்டெப் போட்டு ஏறி வந்து கங்குலி அடிப்பது போல் பேட்டை வீசுவான்...எதிரே பால் போட யாரும் இருக்க மாட்டார்கள்... அவனை ஆச்சரியமாக பார்ப்போம் ஏன் என்றால் அவன் அப்பொழுதே சொந்தமாக
பேட், பேடு கிளவுஸ் எல்லாம் வெச்சிருந்தான். அவன் அடுத்த செக்சன் என்பதால் அவ்வளோ பழக்கம் கிடையாது...அவன் காற்றில் மட்டை வீசும் ஸ்டைலை பார்த்தால் கிரிக்கெட்டில் பெரிய புலின்னு எல்லோரும் நினைச்சிப்பாங்க.

அவனைப்பற்றி சொல்லணும் என்றால்...பெரிய சைஸ் கிரிக்கெட் பால் என்று சொல்லலாம்...ஏன்னா அப்படியே உருண்டையா இருப்பான்...கழுத்துன்னு ஒரு பார்ட் அவனுக்கு மிஸ் ஆகியிருக்கும். ஆளும் கட்டை. அடுத்தவருடம் எங்க செக்சனுக்கு வந்த பிறகுதான் தெரிஞ்சுது அவரு பேட்டிங்கில் மட்டும் இல்லை பவுலிங்கிலும் புலின்னு. உலகத்திலேயே சிறந்த டீம் ஆஸ்திரேலியா தான்...ஷேன் வார்ன் தான் சிறந்த பவுலர் என்று எல்லாம் பீட்டர் வுட்டுக்கிட்டு இருப்பான். போகப்போகதான் தெரிஞ்சது அவன் ஷேர்வார்ன் மாதிரியே
தான் பவுலிங் போடுவதாகவும்...இந்திய டீமில் இடம்பிடிக்கப்போகும் இந்திய ஷேன்வார்ன் இவன் தான் என்றும் சொல்லிக்கிட்டு இருந்தான்.

பவுலிங் போடும் முன்பு ஓடிவரும் ஸ்டைல், பந்தை போடும் முன்பு ஒருகையால் பந்தை சுத்தி சுத்தி பிடிக்கும் ஸ்டைல் கையை மேலே தூக்கும் ஸ்டைல்,நாக்கை ஒரு பக்கமா துருத்திக்கிட்டு பந்து போடும் ஸ்டைல் என்று எல்லாத்திலும்
அப்படியே ஷேன் வார்ன் மாதிரியே இருக்கும்...ஆனால் பந்து மட்டும் பொத்துன்னு எருமைமாட்டு சாணி மாதிரிதான் விழும். எப்பயாச்சும் கல்லு மேல பால் பட்டு எங்கேயாச்சும் திரும்பிட்டா அதுக்கு ஒரு பேரு சொல்லி கொல்லுவான்... பேட்ஸ் மேன் காலிலோ, அல்லது கேட்ச் மாதிரி தெரிஞ்சாலே அப்படியே ஷேன் வார்ன் மாதிரியே அவுட் ஷாஆஆஆஆஅட்
என்று இருகையையும் தூக்கிக்கிட்டு அப்படியே வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்காந்திருப்பது போன்ற பொசிசனில் கத்துவான்....அம்பையர் அவுட் கொடுக்காட்டி...கொஞ்சங்கொஞ்சமாக கீழே இறங்கி இந்தியன் டாய்லெட் பொசிசனுக்கு வந்து தலையில் கையவெச்சிக்கிட்டு உட்காந்துவிடுவான்.
நாளுக்கு நாள் அவன் மேனரிசம்தான் அதிகமாச்சே ஒழிய பந்து திரும்புவதாக இல்லை...இவன் பவுலிங் என்றாலே பேட்டிங் புடிப்பவனுங்களுக்கு செம குஷி ஆகிடும்.

எவனாவது தப்பு தவறி இவன் பந்தில் அவுட் ஆகிவிட்டால் அன்னைக்கு முழுவதும் இவன் பேச்சு தாங்கமுடியாது...அது எப்பயாச்சும் தான் நடக்கும் என்பதால் அதைக்கூட தாங்கிக்கலாம். ஆனால் மச்சி இந்த மாதிரி பவுலிங் எல்லாம் நம்ம பிட்சில் எடுக்காது மச்சி...பிட்ச் மட்டும் ஒழுங்கா இருந்துச்சுன்னு வையி...எல்லா விக்கெட்டும் எனக்குதான் ஒருத்தன் அடிக்கமுடியாதுன்னு அவன் பேசும் பேச்சைதான் கேட்கமுடியாது. ஒரு முறை இவன் ஓவரில் 4 சிக்ஸ் 2 போர் போனதில் ரொம்ப வருத்தத்தில் இருந்தான். மச்சி இனி இந்த மாதிரி பிச்சிக்கு சைனாமேன் பவுலிங் தான் சரிவரும் இனி சைனாமேன் பவுலிங் என்றால் என்ன என்றேன்? வெயிட் என்று சஸ்பென்ஸ் வெச்சிட்டு போனான்...இரண்டு நாள் விளையாடவும் வரலை...


திடீர் என்று ஒருநாள் வந்து நின்னவன் பாலை புடுங்கி மச்சி இன்னைக்கு சைனாமேன் பவுலிங் என்றான்....என்னடான்னு பார்த்தா சவுத் ஆப்ரிக்கா பால் ஆடம்ஸ் மாதிரி ஒரு குதி குதிச்சிட்டு ஸ்டெம்பை பார்க்காம என்னென்னமோ குரளி வித்தை எல்லாம் காட்டி பவுலிங் போட்டான்....இம்சை அரசன் வில்லு பயிற்சி எடுத்த மாதிரி பேட்ஸ் மேன் இருக்கும் பக்கத்தை தவிர மத்த பக்கம் எல்லாம் பால் போச்சு...அந்த வொயிட்க்கு எல்லாம் விலகி போகும் டிஸ்டென்சை கால்குலேட் செஞ்சு ரன் கொடுக்கனும் என்றால் குறைந்தது 4 ரன் கொடுக்கனும்..(ஒரு சைனாமேன் வொயிடு = 4 நார்மல் பவுலிங் வொயிட்) தொடர்ந்து வொயிடா போய்கிட்டு இருந்துச்சு ...மச்சி போதும் இந்த மாதிரி பவுலிங்குக்கு இந்த பிட்ச் சரிவராது போல அதான் பால் எங்கெங்கோ எகிறுது...இது சேப்பாக் ஸ்டேடியத்தில் போடவேண்டிய பவுலிங் இப்ப இதை இங்க போடவேண்டாம் என்று சொல்லிட்டு பவுலிங் மாத்திக்கொடுத்ததிலும் பசங்க சிரிச்சதிலும் கோவப்பட்டு சைக்கிள் எடுத்துக்கிட்டு போய்விட்டான்...அப்புறம் ஒருவாரம் கழிச்சி திரும்பவும் ஷேர்ன்வார் அவதாரம் எடுத்தான்...என்னடா மச்சி ஆச்சி சைனாமேன் பவுலிங் என்றேன்...அந்த பவுலிங் பிராக்டிஸ் செஞ்சதிலிருந்து கை வலி டாக்டரிடம் போய் காட்டியதில் எல்.போ இன்ஜுரியா இருக்கும்...இனி இதுமாதிரி பவுலிங் எல்லாம் பிராக்டிஸ் செய்யாதீங்கன்னு அட்வைஸ் செஞ்சாரு மச்சி..நம்ம டிஸ்ரிக்ட்லேயே சைனாமேன் பவுலிங் போட தெரிஞ்ச ஒரே ஆளு நான் தான் மச்சி...இந்த எல்போ இன்ஜுரி மட்டும் வராம இருந்திருந்தா...


ப்யூஸ் சால்வா பவுலிங்கை பார்த்தப்ப எல்லாம் எனக்கு உப்பிலி நினைவுதான் வந்துச்சு...

Thursday, March 17, 2011

அம்மா ஸ்பெசல் போட்டோடூன்ஸ் 17-3-2011


தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்!....

நாங்க நிக்கிறோம் நாங்க நிக்கிறோம் நாங்க நிக்கிறோம்--ப்ளாசுலாக்கி!

வாசக்கதவ விஜயலெட்சுமி தட்டுகிறவேளையிது....
புறாக்காலில் என்னா இருக்குன்னு கண்டுபிடிக்க தெரிஞ்ச உங்களுக்கு அம்மா மனசுல என்னா இருக்குன்னு கண்டுபிடிக்க தெரியலீயே பாவா!


உயர்மட்ட குழு இதுதான்...ஆனா குழு மாதிரி


புள்ளபூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு யாருக்கு தெரியும்!
கொலகொலயா முந்திரிக்கா...நல்லகண்ணே நல்லகண்ணே சுத்திவா!-ஜெ

அப்ப எனக்கு ஒரு சான்ஸ் இருக்கே!- வைகோ!

மச்சான் சுதீஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...


விஜயகாந்து: பயபுள்ளைங்க 5 பேர் ரவுண்டுகட்டி பேசினாய்ங்களேய்யா!

தோழர்கள்: அடுத்த முறையாவது உசாரா நாம முதல் ரவுண்டுலேயே அந்த சோசியர் கூட பேசிடுவோம்.


**********
ஜெயலலிதா: காசி விஷ்வநாதர் கோயில் இருக்கும் தொகுதியையும் தமிழகத்தோடு சேர்க்கவேண்டும்...

தேர்தல்கமிசன்: அம்மா உங்க சோசியர் சொல்றாருங்கிறதுக்காக எல்லாம் அப்படி எதுவும் செய்யமுடியாது....

*********
செய்தி: வைகோவை வரலாறு காணாத அளவுக்கு அவமானப்படுத்தியுள்ள நிலையில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்று கூறிய நாம் தமிழர் கட்சித் தலைவர் இயக்குநர் சீமானின் நிலை என்ன என்பது கேள்விக்குறியதாகியுள்ளது.

டக்ளஸ்: அடப்பாவிங்களா அப்ப இதுவரை கொஞ்சம் கொஞ்சமா அவமானப்படுத்திக்கிட்டு இருந்திங்களா? எது எதுக்குதான் வரலாறுகாணதன்னு சொல்லுவதுன்னு இல்லையாடா?

Monday, March 14, 2011

வைகோ போட்டோ டூன்ஸ் 15-3-2011

பீ கேர்புல்...என்னைய சொல்லிக்கிட்டேன்
எவ்வளோ கொடுத்தாலும் வாங்கிப்பாரு...வைகோ ரொம்ப நல்லவருன்னுட்டாங்கய்யா அம்மா!

தாயகம் தாய்கழகத்துடன் இனைகிறது!

சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு...

கூடவே இருக்கனும் என்று நினைக்கும் எங்களுக்கு இதுமாதிரி நெருக்கடியை கொடுக்குறீயே இது நியாயமா? உனக்கு என்ன பாவம் செஞ்சோம்!

************

டரியள் டக்ளஸ்

செய்தி: 1993ம் ஆண்டு கட்சி ஆரம்பித்த வைகோ இன்று வரை தனது கட்சியை பெரிய அளவில் சிந்தாமல், சிதறாமல் கட்டிக் காத்து வருகிறார்.

டரியள் டக்ளஸ்: சிந்தாம சிதறாமய்யா?யோவ் அவரு என்னா பழனிக்கு பால்காவடியா எடுத்துக்கிட்டு வராரு...கட்சி நடத்துறாருப்பா கட்சி நடத்துறாரு.


செய்தி:இடையில் எத்தனையோ பெரிய தலைகள் எல்லாம் கட்சியை விட்டு வெளியேறியபோதும் கட்சி உடையாமல் காத்து வந்துள்ளார் வைகோ.

டரியள் டக்ளஸ்: ஆமா ஆமா அவரே இன்னும் கட்சியை விட்டு வெளியேராம கட்சிக்கு உண்மையா இருக்காருன்னு சொல்லுங்கப்பா!


Tuesday, March 8, 2011

புதுமனைவியின் சமையலறை அனுபவங்கள்!

லேபர் வார்டுக்குள் மனைவியை அனுப்பிவிட்டு பதட்டத்துடன் இருக்கும் கணவனைப்போல் மிகுந்த பதட்டத்துடன் காத்திருந்தான் சஞ்சய். 4 மணிநேரம் ஆச்சு எந்த தகவலும் இல்லை சத்தம் இல்லை என்றதும் பதட்டம் அதிகம் ஆனது...கடிகராத்தில் மணி 2யை நெருங்கிய பொழுது என்னங்ங்ங்ககன்னு ஒரு குரல் வந்த திசையை நோக்கி ஓடும் பொழுதே...அந்த என்னங்க குரலில் இருப்பது பதட்டமா? இல்லை அபயமான்னு கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்தவனாக ஓட்டமாக ஓடிப்போய் நின்றான்...ஒருகையில் புளியும் ஒருகையில் எலும்பிச்சையுமாக நின்ற புது மனைவி...என்னங்க ஒரு ஸ்கேல் வேண்டும் என்றாள்.

எதுக்கும்மா ஸ்கேல் என்று வாய் வரை வந்த கேள்வியை மென்னு முழுங்கிவிட்டு ஸ்கேல் எடுத்துவரப்போனான் சஞ்சய். போகும் பொழுது ஒருவாரத்துக்கு முன்பு நடந்த சம்பவம் அவன் நினைவில் வந்து சென்றது.

மனைவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கையில் கறுப்பு கலர் திரவம் தளும்பிய பாத்திரத்தை சஞ்சய் முகத்துக்கு நேராக காட்டியப்படி என்னங்க என்னா ஊருங்க இது? எங்க ஊரில் எல்லாம் இட்லி மாவு வெள்ளைக்கலராக இருக்கும். இங்க மட்டும் கறுப்பு கலராக வருது என்றாள் புது மனைவி... அடுப்பில் வைத்து செய்யும் பதார்த்தம் எதார்த்தமாக கருகி போய் கறுப்பாக மாறினால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கு...ஆனால் புதிதாக வாங்கிய கிரைண்டரில் அரைத்த மாவு எப்படிங்க கறுப்பாக போகும்? என்று டெக்னிக்கலாக சஞ்சையை மனைவி மடக்கிய பொழுது சஞ்சய் விக்கித்து போனான்...

இந்த டெக்கினிக்கல் கேள்விக்கு பதிலை கண்டுபிடிப்பது கடமையாகி போனதால்...முதல் நாள் மனைவி அவுங்க அம்மாவிடம் போனில் பேசி இட்லி செய்வது எப்படின்னு கேட்டது முதல் எல்லாத்தையும் விசாரித்து பார்த்தான். அவுங்க அம்மா சொன்னதிலும் தப்பு இல்லை எல்லாம் சரியாக இருந்தது. பிறகு எப்படி கறுப்பாக மாறியது...சட்டென்று உளுந்தை கழுவி போட்டு அரைத்தாயா என்றான்? ஆமாங்க நல்லா கழுவிட்டுதான் போட்டேன் என்று மனைவியிடமிருந்து பதில் வந்தது. உளுந்தில் இருந்து எடுத்த தோல் எங்கே என்றான்? தோலா? அப்படின்னா? என்று பதில் வந்தது.

எங்கு தப்பு நடந்தது என்று கண்டுபிடித்த மகிழ்ச்சியில்...இந்த பாரும்மா உளுந்தை ஊறவெச்சி பிறகு அதன் கறுப்பு தோல் போற மாதிரி கழுவனும் என்றதும் மனைவியின் கோவம் ஹல்ப் லைனில் வந்து ஒழுங்கா சொல்லிக்கொடுக்காத அம்மாமேல் திரும்பியது. கடையில் விற்கும் இட்லி 10 ரூபாய் என்றால் இட்லி செய்வது எப்படின்னு கேட்டு போன் செஞ்ச காசுக்கு ஒருவாரம் கடையில் வாங்கி சாப்பிடலாம் என்பது மறைக்கப்பட்ட தகவலாகவே போனது.

பிறகு அடுத்த நாள் ஆபிஸ் போய் இருந்த பொழுது போன் வந்தது...மகிழ்ச்சி பொங்க மனைவி என்னங்க இட்லி மாவு வெள்ளையாகவே வந்துட்டுங்க என்றாள். இன்னைக்கு இரவு இட்லிதான் டிபன் ஓக்கேவா என்றாள். அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் கூட இத்தனை சந்தோசப்பட்டு இருப்பானா என்பது சந்தேகமே! இட்லி மாவு வெள்ளையாகவே வந்ததுக்கு சந்தோசப்படும் புது மனைவியை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று சந்தேகத்திலேயே பொழுது போனது... 6 மணிக்கு வீட்டுக்கு போனதும்...கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்று போன மனைவி மணி 8 ஆகியும் வெளியில் வரவில்லை. இப்பொழுது என்ன பிரச்சினை என்று தெரியவில்லையே என்று காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்தவனாக என்ன நடக்கிறது என்று உள்ளே எட்டிப்பார்த்தான்...இட்லி பானையை மூடுவது தீக்குச்சி வெச்சி குத்திப்பார்ப்பதுமாக மனைவி பதட்டத்துடன் இருந்தாள். என்னம்மா என்ன பிரச்சினை என்றவனிடம்...இட்லி வேகவே மாட்டேங்குதுங்க என்றாள்...

இட்லி பானையை அடுப்பில் வைக்க சொன்ன உங்க அம்மா ஸ்டவ்வை பத்தவைக்க சொல்ல மறந்திருப்பாங்க என்று மனசுக்குள் நினைத்தப்படியே அடுப்பு எரிகிறதா என்று பார்த்தவனுக்கு பகீர் என்று இருந்தது...கார்த்திகைக்கு கொளுத்தும் சொக்கப்பானையை போல் அடுப்பு கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டு இருந்தது. அப்படியும் இட்லி வேகவில்லையா என்ற சந்தேகம்
மேலோங்க இட்லி பானையினுல் எட்டிப்பார்த்தவனுக்கு மயக்கமே வந்துவிட்டது...இந்த பாரும்மா இது தண்ணியை விட தண்ணியாக இருக்குமா...இதை ஒருவாரம் அடுப்பில் வெச்சி வேகவிட்டாலும்
இட்லியா வராதும்மா...அதை அப்படியே அடுப்பில் வெச்சி கிண்டி வத்தமாவு மாதிரி கூழா ஆக்கிக்கொடு ஒரு டம்ளர் குடிச்சிட்டு படுக்கலாம் என்றான்...முதன் முதலாக இட்லி கூழ் குடிச்சவன் என்ற பெருமைக்கு சொந்தக்காரன் என்ற பந்தா கொஞ்சம் கூட இல்லாமல் இருந்தான் சஞ்சய்.

தினம் தினம் இப்படி புதுப்புது அனுபவங்கள் கிடைத்தன சஞ்சய்க்கு... இன்று விடுமுறை ஆகவே வீட்டில் இருந்தவனிடம் கூப்பிட்டு ஸ்கேல் கேட்டதும் ஸ்கேல் எடுத்து வந்தான்...என்னதான் செய்கிறாள் மனைவி என்று பார்த்தவன் விக்கித்துப்போனான்...எலும்பிச்சை பழ அளவு புளி என்று அம்மா சொல்லியதால் எலும்பிச்சை பழம் என்ன அளவுன்னு அளக்க ஸ்கேல் கேட்டு இருக்கிறாள் என்று புரிந்தது...என்னங்க கை புளியா இருக்கு...கொஞ்ச அளவு சொல்றேன்
அந்த பேப்பரில் எழுதுங்க விட்டம் 6செ.மீ. உயரம் 5 செ.மீ என்று சொல்லிக்கொண்டே போய்கொண்டு இருந்தாள் மனைவி...

துபாயில் இருந்த நண்பர் சரவணனுக்கு போன் செய்து மாமா இதுக்கு எல்லாம் எப்ப மாமா விடிவு வரும் என்று கேட்டான் சஞ்சய்...மாமா காப்பி குடிக்கிறவங்களை கேட்டு இருக்க கடித்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் சித்தார்த் பற்றி கேள்வி பட்டு இருக்கியா? மிளகாய் தூள் போட்ட ரசம் சாப்பிடும் கென் இவர்களுக்கு மத்தியில் நீ தேவலாம் மாமா...என்று அவன் சொன்ன ஆறுதலைக்கேட்டு நிம்மதியாக தூங்கப்போனான் சஞ்சய்.


மகளிர் தின வாழ்த்துக்கள்!