Thursday, February 26, 2009

தமிழ்மண விருதின் பகீர் பின்னணி


”டேய் நல்லா தேடிப்பாருப்பா கதை கவிதைன்னு ஏதும் ஒன்னாவது”

”ம்ம்ம்ம் ஒன்னுமே இல்லைங்க!”

”புகைப்படமாவது ஏதும் கிடைக்குதா?”

”இல்லீங்க ஸ்கூலில் வாங்கிய மார்க் போல முட்டைய படம் புடிச்சு போட்டு இருக்கான் ஒரு படம் தான் தேறுது!அதுக்கு கொடுத்தால் மக்கள் நம்மை கேர்ட்டில் வெச்சே அதாலாயே அடிப்பாங்க!”

”அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் இதுல ஏதாவது?”

”மருந்துக்குக்கு கூட இந்த வார்தைகள் இல்லீங்க!”

”பெண்கள் பிரச்சினைகளை பற்றி ஏதும்?”

”பெண்களே பிரச்சினைகள் என்றுதான் ஒன்னு ரெண்டு கிடக்கு!”

”இப்படியே எல்லாத்தலைப்பிலும் தேடிப்பார்த்து டயர்ட் ஆகிய தமிழ்மணம்,எலேய் அப்புறம் என்னததான் டா இரண்டு வருசமா இங்க எழுதிக்கிட்டு இருக்கான்?”

”மொக்கை, கும்மி மட்டும் தாங்க இருக்கு.”

”சரி சரி போனா போகுது. அதுல ஏதும் தேறுதான்னு பாரு.”


ஆனந்தவிகடனில் ஒன்னும் ஜூவியில் ஒன்னும் இவன் கார்ட்டூன் வந்திருக்குங்க!


அதுல ஒன்னு எடுத்து போட்டுக்க. நம்ம பய!!!


நகைச்சுவை,கார்ட்டூனில் முதல் இடம் இப்படிதாங்க கிடைச்சு இருக்கும் தமிழ்மணமே நேரடியாக விருது கொடுத்து இருந்தால்!


ஆனால் இப்படி ஒரு நிலைவராமல் என்னையும் ஓட்டு போட்டு வெற்றிப்பெற வைத்த மக்கள் அனைவருக்கும் நன்றி!


வரும் ஆனா வராது என்ற காமெடி போல் இழுத்துக்கிட்டுஇருந்த விருதுகள் அறிவிச்சதில் மகிழ்ச்சி அதுவும் எனக்கும் தெரிந்த நண்பர்கள் பலருக்கும் விருது கிடைச்சதில் மகிழ்ச்சி! வெற்றிப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தமிழ்மணத்துக்கு நன்றிகள்!
*******************************&&&&&&&&&&&&&&&****************


விருதுன்னு ஏதும் கிடைச்சா அதை யாருக்கும் டெடிக்கேட் செய்யனுமாமே! என் பல மன கஷ்டங்களை போக்க இருக்கும் ஒரே இடமாக இருக்கும் என் சக பதிவர்களுக்கும்,கும்மி நண்பர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். தமிழில் ஒரு சிலவார்த்தைகள் சொல்லவிரும்புகிறேன்.

“எல்லாப்புகழும் இறைவனுக்கே”

(அப்புறம் என்னா பேட்டி, போட்டோஷெசன் எல்லாத்தையும் நாளை வெச்சுக்கலாம் ஏன் என்றால் எனக்கு இன்று விடுமுறை)

Wednesday, February 25, 2009

அச்சுத்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொடுக்கும் கோடாக் நெக்ஸ் பிரஸ்!

அச்சுத்துறையில் ஆப்செட்டுக்கு நிகரனா ஒரு டிஜிட்டெல் பிரிண்டிங் மெசின் இல்லையே என்ற குறையை போக்க வந்திருப்பதுதான் Kodak Nexpress S3000, ஆப்செட்டில் இருக்கும் பெரும் குறையே அது எடுத்துக்கொள்ளும் காலம்தான் ஒரு 5 பக்கம் உள்ள ஒரு கையடக்க புத்தகத்தை பிரிண்ட் செய்யனும் என்றால், பிளேட் போட்டு, பின் கலர் கரெக்சென் செய்து ஒரு புரூப் பிரிண்ட் பார்க்க குறைந்தது 3 நாட்களாவது ஆகும், ஏற்கனவே அவர்கள் வைத்து இருக்கும் ஆர்டரை பொருத்து உங்களுக்கு புரூப் கொடுக்க ஆகும் காலம் கூடலாம். ஆனால் இப்பொழுது பிலிம் Based ஆப்செட் பிரிண்டிங் மெசின்கள் பல வந்துவிட்டாலும் ஒரு பிலிம் பிளேட்டுக்கு 250 Dhs ஆகிறது.

டிஜிட்டெட் பிரிண்டிங்கில் இதுவரை இருந்த பிரச்சினை ஆப்செட் பிரிண்டிங்கில் உபயோகப்படுத்தும் பேப்பர்களை உபயோகப்படுத்த முடியாததுதான், உட்பிரிபேப்பர், ஐவெரி பேப்பர்களை மட்டுமே பயன்படுத்தமுடியும் அதுவும் அதிகப்பட்சம் 300gsm அப்படி பயன்படுத்தும் பொழுதும் முதல் ஒரு 100 பிரிண்ட் சரியான கலரிலும் அதன் பிறகு போகபோக கலர் மாறி மாறி வரும் , பின் கொஞ்ச நாட்கள் போய்விடும் இதுபோன்ற பிரச்சினைகள் Nexpress ல் இல்லை.

Nexpressல் 60gsm பேப்பர் முதல் 450 gsm பேப்பர் வரை உபயோப்படுத்த முடியும் ஆப்செட்டில் பயன்படுத்தும் அனைத்து வகையான பேப்பர்களையும் இதில் பயன்படுத்தமுடியும், இது டோனர் Based பிரிண்டிங் முறை என்றாலும் ஆப்செட்டுக்கு மிக அருகில் அதாவது 92%வரை குவாலிட்டி இருக்கிறது. ஒருவர் 10 பக்கம் கொண்ட புத்தகத்தை டிஜிட்டலில் செய்வது என்பது மிகவும் கடினம் ஏன் என்றால் டிஜிட்டெலில் front & back பிரிண்ட் செய்யும்பொழுது பிரிண்ட் இம்பிரசன் மாறும் அதாவது முதல் பக்கத்தில் பிரிண்டிங் 7.5mm தள்ளி ஆரம்பித்தது என்றால் பின் பக்கம் அதே பேப்பரில் பிரிண்ட்செய்யும் பொழுது 7.1mmலோ அல்லது 7.8mm லோ ஆரம்பிக்கும் ஆனால் இந்த Nexpressல் Reversible பெல்ட் டெக்னாலஜியால் முதல் பக்கத்தில் 7.53mm தள்ளி இம்ப்ரெசன் விழும் என்றால் பின் பக்கத்திலும் 7.53mm அதே இடத்தில் சரியாக இம்ப்ரெசன் ஆகும்.


அனைத்து டிஜிட்டெல் மெசின்களும் 4 கலரை கொண்டு இயங்குவதுதான் CMYK ஆனால் இதில் 5வதாக ஒரு கிளியர் இங் என்று சொல்லப்படும் ஒன்றால் வாட்டர் மாஸ்க் போன்ற பிரிண்டுகளும் பிரிண்ட் செய்யமுடியும்.


இந்த 5வது கலரின் பயன்கள்.


1)வாட்டர் மாஸ்க் போன்ற பிரிண்ட்டுகள் பிரிண்ட் செய்வது!


2)புரொடெக்சன் கோட் ஆகவும் இது பயன் படுகிறது தண்ணீர், விரல் அச்சு போன்றவற்றில் இருந்து காக்க இந்த 5வது கலர் ஆகிய கிளியர் இங் பயன்படுகிறது.கிளாஸி பினிசிங் கொடுக்கவும் இது பயன்படுகிறது, இந்த மெசினோடு கிளாசிங் யூனிட் என்று ஒரு இலவச இனைப்பும் கொடுக்கிறார்கள் 5வது இங் கோட்டிங்கொடுத்து இருந்தால் இதன் மூலம் முகம் பார்க்கும் அளவுக்கு பள பள பிரிண்டிங் ரெடி.


3) செக் புக்கில் இருக்கும் மேக்னடிக் பார் கோட் பிரிண்டிங்


4) டச் பீல் என்று சொல்லபடும் முறை, (ஒரு உருவத்தை பிரிண்ட் செய்தால் அதை தொட்டு என்ன உருவம் என்று உனரசெய்யும் முறை) ஆகியவையாகும்.


இவை அனைத்தையும் விட Variable Data பிரிண்டிங் எனப்படும் முறை இந்த மெசினில் பிரிண்ட் செய்யலாம். உதாரணத்துக்கு பள்ளிகூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு அவர்கள் பெயர் போட்டு ஒரு லெட்டர் அனுப்பவேண்டும் என்று அந்த நிர்வாகம் நினைக்கிறது, 5000 பேருக்கு அனுப்பவேண்டிய லெட்டரை மட்டும் தனியாக பிரிண்ட்செய்துவிட்டு பின் பெயர் வரும் இடத்தில் தனியாக எழுத வேண்டும் அல்லது வேறு முறையை உபயோக்கிக வேண்டும் ஆனால் இதில் பெயர்கள் அடங்கிய டேட்டாபேஸ் பைலை எந்த இடத்தில் பெயர் வரவேண்டும் என்று சொல்லிவிட்டால் போது அழகாக அவர்கள் பெயர் அடங்கிய லெட்டர்ரெடி ஆகிவிடும் அது போல் தன் நிர்வாகத்தில் பணி புரியும் 10 ஆட்களுக்கு மாதாந்திர காலெண்டரில் இருக்கும் 12 பக்க படத்திலும் அவரவர் பெயர் போட்டுகொடுக்கவேண்டும் என்றாலும் இதில் சாத்தியம் மொத்தம் 10 காலெண்டர் பத்து பெயர்களிலும் ரெடி ஆகிவிடும்.


ஒருவர் தான் எழுதிய கவிதை தொகுப்பை ஒரு பத்து பேருக்கு புத்தக வடிவில் பிரிண்ட் செய்து கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றால் அவரால் ஆப்செட்டில் பிரிண்ட் செய்யமுடியாது, 10 புத்தம் பிரிண்ட் செய்ய 50 புத்தகம் பிரிண்ட் செய்யும் அளவுக்கு முதலில் பேப்பர் வேஸ்ட் ஆகும், ஆனால் இதில் 5 புத்தகம் தான் வேண்டும் என்றாலும் அடுத்த 30 நிமிடங்களில் புத்தகம் ரெடி!


சாதரணமாக பிரிட்டிங்கில் உபயோக்கிக்கும் பேப்பர்களை உணவு பேக்கிங்குக்கு பயன்படுத்த கூடாது ஏன் என்றால் அதில் இருக்கும் நச்சுதன்மை ஆனால் இதில் பிரிண்ட் செய்தவைகளை தாரளமாக பயன்படுத்தலாம். இதுபோல் பல பயன்கள் இருக்கிறது இந்த Nexpressல் விலை கொஞ்சம் அதிகம் தான் நம் ஊர் காசுக்கு கிட்டதட்ட 4 கோடி வரும் ஆனால் மிகவும் தாரளமாக கொடுக்கலாம். நாங்கள் வாங்கி இருக்கும் முறையை பற்றி வெளியில் சொல்லமுடியாது யாருக்காவது விருப்பம் இருப்பின் மெயிலில் கேளுங்கள் எப்படி வாங்கவேண்டும் என்று சொல்கிறேன். U.A.E லேயே முதன் முதலாக வாங்கி இருக்கும் பெருமை என் கம்பெணிக்கு இருக்கிறது அதுபோல் இந்த மாடலுக்கு முன் மாடலான Nexpress 2000 இந்தியாவில் 4 இடத்தில் இருக்கிறது சென்னையிலும் ஒரு பிரபல தொழிலதிபரிடம் இருக்கிறது.
டிஸ்கி: பதிவர்கள் புத்தகம் ஏதும் எழுதிக்கிட்டு இருந்தால் அதை இதில் எளிதில் பிரிண்ட் செய்துவிடலாம்.

Tuesday, February 24, 2009

தேடலில் காமசூத்ரா, சரோஜாதேவியும்!!!

ஆங்கில அகராதியில் அதிகம் தேடப்படும் வார்த்தை “செக்ஸ்” என்பது உங்களுக்கு தெரியும் அதுபோல் தமிழில் காமசூத்ராவும், சரோஜாதேவியும்.

காமசூத்ராவை பற்றி பலருக்கும் தெரியும் அது டெக்னிக்கலாக காமத்தை பற்றி விவரிப்பது ஆனால் சரோஜாதேவி மலிவு விலை மது மாதிரி ஒன்லி ஆக்சன் காட்சிகளுக்கு வரிவடிவம் கொடுப்பது கூடுதல் இணைப்பாக சில படங்களுடன். உதாரணத்துக்கு ஒயினை போல் கொஞ்சமாக போதை தருவது காமசூத்ரா அது படிப்பவனின் கற்பனைகளை விரிவுபடுத்துகிறது ஆனால் சரோஜா தேவிவேலிமுட்டி போல் (லோக்கல் பட்ட சாராயம்) குப்புன்னு கிக் ஏற்றுவது. இதுதான் சரோஜா தேவி புத்தகத்தை பற்றி ஒன்னுமே தெரியாத பச்ச புள்ளைகள் அப்துல்லா,சஞ்சய் போன்றவர்களுக்காக நான் கொடுக்கும்(கெடுக்கும்) விளக்கம்.



என்ன திடிர் என்று இந்த விளக்கம் எல்லாம் என்று கேட்கிறீர்களா? என் பிளாக்குக்கும் தினம் பத்து பதினைந்து புது புது வருகையாளர்கள் வருவதாக ஹிட் கவுண்டர் காட்டும், என்னடா இதுக்கு சாத்தியமே இல்லையே, வந்தவங்களே திரும்ப வராத பொழுது இது யாரு புதுசா? வழித்தெரியாம வந்து இருப்பார்களோ என்று நினைத்துக்கொள்வேன், ஆனால் இது தொடர்கதையாக எனக்கு அதில் ஒரு சந்தேகம் இருந்து வந்தது இது எப்படி சாத்தியம் என்று...அதுபோல் புது பதிவு போடாத பொழுதுகூட தினம் தினம் எங்கேயிருந்து இப்படி புது புது மக்கள் அதுவும் நம்மை தேடி வருகிறார்கள் என்று வியந்துப்போய் இருக்கிறேன்.

எங்கிருந்து வருகிறார்கள் என்பதை இருதினங்களுக்கு முன் என் வலைப்பூவில் நான் நிறுவிய Google Analytics எங்கிருந்து வருகிறார்கள், எப்படி தேடியதால் எத்தனை நபர்கள் வந்தார்கள், எத்தனை நேரம் இருந்தார்கள் என்ற விவரத்தை எல்லாம் தருகிறது சரோஜா தேவி என்று தேடும் பலருக்கு என் பிளாக் லிங் போகிறது போல முன்பு பரிசல்காரர் கேபிள் சங்கரோடு மல்லுகட்டிய பொழுது நான் எழுதிய எதிர்பதிவை தேடிதான் பலர் வருகிறார்கள். காமசூத்ராவை பற்றி எப்பொழுது எழுதினேன் என்று நினைவு இல்லை, சாருவின் குட்டிக்கதைகளுக்கும் நான் லிங் கொடுக்கவில்லை, ஜ்யோராம் கதைகளுக்கும் நான் லிங் கொடுக்கவில்லை அப்படி இருக்கும் பொழுது எப்படி காமசூத்ராவினை தேடி என் பதிவுகளுக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை.







இனி என் வலைப்பூவுக்கு சரோஜாதேவியை தேடி வருகிறவர்களுக்கு சாருவின் O டிகிரி புத்தகம் பரிசாக வழங்கப்படும்! ஜாக்கிரதை!

*********************###################*******************
காமத்தை பதிவு லேசாக டச் செய்வதால் ஒரு ஜோக் சமீபத்தில் குமுதத்தில்
படித்தது என்று நினைவு.

பெரும்பாலும் மன்னரை பற்றி வரும் ஜோக்குகள் 95% பாடாவதியாக இருக்கும் , மன்னா புறா ஓலை கொண்டுவந்து இருக்கிறது என்று மந்திரி சொல்வார் அதை 65 போட்டு கொண்டுவா என்று மன்னர் சொல்வார் இதுபோன்று ஜோக்குகள் படிப்பவர்களை டரியள் ஆக்கும் ஆனால் இந்த ஜோக் என்னை கொஞ்சம் சிரிக்கவைத்தது.

அமைச்சர் கணக்குப்பிள்ளையிடம்: மன்னரின் பாதுக்காப்பை
பலப்படுத்திய வகையில் செலவு என்று எழுதியிருக்கிறீர்கள் என்ன செலவு அப்படி?
கணக்குப்பிள்ளை: மன்னருக்கு ஆணுறை வாங்கிய செலவு அமைச்சரே!

Sunday, February 22, 2009

ஆஸ்கார் A.R. ரஹ்மான் விருதும் என் வருத்தமும்!!!




முதலில் A.R.ரஹ்மான் அவர்களுக்கு விருது கிடைத்த மகிழ்ச்சி இருந்தாலும் அதில் எனக்கு இருக்கு வருத்தம் அதைப்பற்றி பின்னாடி பார்க்கலாம் இந்த வாரம் நாம் படிக்க போகும் பல பதிவுகள் இப்படி இருக்கும்....



A.R. ரஹ்மானுக்கு உண்மையில் தகுதி இருக்கிறதா? ----> எதையும் ஆழ்ந்து நோக்கும் பதிவர்.



ஆஸ்கார் என்பது ஆங்கில படத்துக்கான விருது அதனால் தமிழில் நல்ல படம் வருமா------> புதிய கண்டுபிடிப்பாளர் ஐன்ஸ்டீன்




ஆஸ்கார் விருது வாங்கியதால் இந்தியா முன்னேறுமா?-----> மன்மோகன் சிங்க்கு அடுத்தபடியாக முன்னேற்றத்தை பற்றி கவலைபடும் உண்மை இந்தியன்




ஆஸ்கார் விருது ஏன் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லை----> இளையராஜா விசிறி




ஆஸ்கார் விருதுவினால் என்ன பயன்?-------> பட்ஜெட் பத்மராஜா.




இந்தியாவின் மானத்தை உலகலவில் ஏலம் போட்ட படத்துக்கு விருது!!! கொண்டாடு தமிழனமே----> புரச்சிகர தமிழ்சிந்தனையாளர்




ஸ்லம் டாக் மில்லினியரில் இருக்கும் இசை அபத்தங்கள்----> சிம்பொனி சிலம்பு




உலக அமைதிக்கு என்ன செய்தார் A.R. ரஹ்மான்?----> சமாதான கழுகு


தமிழன் அல்ல ரஹ்மான்---------> பிறப்பு,சாதியை மட்டுமே ஆராயும் பதிவர்


ஆஸ்கார் விருது வழங்கியதில் திம்மிகளின் அரசியல்---- திம்மி எதிர்பாளர்


A.R. ரஹ்மான் ஒரு ஆங்கிலேயே அடிவருடி-----> முன்போக்கு சிந்தனையாளர் முனுசாமி




***********************%%%%%%%%%%%%%%%%************************


A.R. ரஹ்மான் வாங்கியாச்சு ஆஸ்கார் கொண்டாடி மகிழ்வோம் வாங்க----> சக தோழர்கள்


ரஹ்மானிடம் 10 கேள்விகள்-----> பரிசல்காரன், படகுகாரன், கப்பல்காரன், கத்திகப்பல் காரன், நீர்மூழ்கி கப்பல்காரன்


சரி அவரு விருது வாங்கியதில் உனக்கு என்ன வருத்தம் என்று கேட்கிறீர்களா? முதல் ஆஸ்கார் விருது வாங்கியவர் என்று ஒரு சவுண்ட் மிக்சிங்க்கு விருதுவாங்கிய பூக்குட்டி பெயர் வந்துவிடுமே!. A.R. ரஹ்மான் பெயர் வராதே என்றுதான்:(((


இருந்தாலும் ஒருவிருதுக்கு இரண்டு கிடைச்சுடுச்சு அதுவரை சந்தோசமே.




Friday, February 20, 2009

வக்கீல் Vs போலீஸ் கார்ட்டூன்+ டரியள் டக்ளஸ் 21-02-2009





சிவாஜி சுமன் ஸ்டைலில் படிக்கவும்


டரியளின் பார்வையில் டிராவிட் Vs மன்மோகன்
'டிராவிட்' இவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பெருஞ்சுவர்.
'மன்மோகன்' இந்திய பிரதமர் வரிசையில் குட்டிச்சுவர்!
'டிராவிட்' அடிக்கவும் மாட்டார் அவுட் ஆகவும் மாட்டார்!
'மன்மோகன்' வேலைப்பார்கவும் மாட்டார், வேலைவாங்கவும் மாட்டார்!
************************%%%%%%%%%%%%%****************************
டரியள்: எக்னாமிக் பிரச்சினை உலகையே ஆட்டிபடைக்கும் பொழுது இந்தியாவில் மட்டும் இந்த பிரச்சினை இல்லை ஏன் தெரியுமா?
குசும்பன்: தெரியாதே!
டரியள்: நிதித்துறை அமைச்சராக மன்மோகன் இருப்பதால்!
குசும்பன்: ஓ அவரு அவ்வளோ பெரிய தில்லால்லங்கடியா?
டரியள்: அட நீ வேற!பொருளாதார நிலமை சீராக இருக்கனும் என்று ஒன்னுமே செய்யமாட்டார்! அதுவே போதுமே!முன்னேற்றம் அடைய!





Thursday, February 19, 2009

பெண்களை குட்டுவது தப்பா? அதனால் என்ன ஆகும்?

எங்க பள்ளிகூடம் கோ-எஜிகேசன், கூட பல ஊரில் இருந்தும் பல பொண்ணுங்க இருந்தாங்க அப்பொழுதில் இருந்தே நமக்கும் பொம்பள புள்ளைங்களுக்கும் ஆகவே ஆகாது. எப்ப பார்த்தாலும் முதல் மார்க் அது இதுன்னு வாங்கிட்டு நம்மை ஏகத்துக்கும் டென்சன் ஆக்குவாளுங்க, அது கூட பரவாயில்லை எங்களை பார்த்து வாடா போடான்னு வேற கூப்பிடுவாளுங்க அங்கதான் ஆரம்பிச்சிது வினை. ஏய் எங்களை வாடா போடான்னு கூப்பிட்ட நல்லா இருக்காது ஆமா, ஒழுங்க பேர் சொல்லி கூப்பிடு என்று சுமதியிடம் நான் சொல்ல முடியாது டா அப்படிதான்டா கூப்பிடுவேன் டா என்று சொன்னதும் ஏய் அப்புறம் நானும் வாடி போடின்னு கூப்பிடுவேன்டி என்று சொல்ல வாய் பேச்சு கை கலப்பானது.


அடிச்சு கீழ தள்ளி மேல ஏறி நல்லா கும்மு கும்முன்னு கும்மிட்டு கிளாசுக்கு ஓடி போய்விட்டேன், கிளாசுக்கு போனா ஊஊஊஊஊஊன்னு சங்கு சத்தம், ஊர்ல மதியம் ஒரு மணிக்குதானே சங்கு ஊதும் ஆனா என்ன டா அதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுடுச்சுன்னு பார்த்தா அடிவாங்கின சுமதி கத்துறா, என்ன டா இது அவளும் தான் அடிச்சா நாம என்னா இப்படியா ஊரகூட்டினோம் என்ன இது சின்னபுள்ள தனமா ராஸ்கல்ஸ் என்று நினைச்சுக்கிட்டு இருக்கும் பொழுதே அப்படியே கொத்தா கோபால் சார் தூக்கிட்டு போனதுதாங்க தெரியும் சட சடன்னு ஒரே சத்தம், டின்னு கட்டுவது என்று கேள்வி பட்டு இருக்கேன் அன்னைக்குதான் வாங்கினேன்.

சரி சரி விடு விடு பெண்ணீயத்தை எதிர்த்து போர் செய்யும் வீரனுக்கு இது எல்லாம் சகஜம் என்று வந்து பார்த்தா இஇன்ன்னு சிரிக்கிறா அவ, அடி பாவி நடிச்சியாடின்னு மனசுக்குள்ளே கருவிக்கிட்டு. உடனே நண்பர்களை எல்லாம் கூட்டி டேய் இது ஒட்டு மொத்த ஆண் சமுகத்துக்கே வந்த இழுக்கு இனி அவளுங்க யாரும் டா போட்டு கூப்பிட்டா நீங்களும் டி போட்டுகூப்பிடனும் என்று சொல்லி சபதம் எடுத்து விட்டு கலைந்தோம்.

கொஞ்சநாட்களில் சுமதி, கவிதா, புனிதவள்ளி என்று எதிரிகள் லிஸ்ட் அதிகமாகிட்டே போனது டெய்லி அவளுங்களும் அடிவாங்கமா இருக்க மாட்டாளுங்க,அவுங்க வீட்டுபாட நோட்டில் இங்கை ஊற்றி மூடி வைத்து விடுவது புஸ்த பையில் இருக்கும் புத்தகத்தை வேறு யாரோட பைக்காவது மாற்றிவிட்டு அந்த பையில் மண் குப்பை எல்லா கொண்டு நிரப்பி வைப்பேன்.கிளாஸ் சாரிடம் போய் புகார் கொடுப்பாங்க ஆனால் குற்றத்தை நான் தான் செஞ்சேன் என்பதற்கு போதிய சாட்சிகள் இல்லாததால் நான் விடுதலை ஆகிவிடுவேன்,இப்படியே ஒரு ரெண்டு வருசம் ஆனது.

7 வது 8 வது படிக்கும் பொழுது பேச்சு வார்த்தை கட் ஆனது பேசிக்க மாட்டோம். கிளாசுக்கு வரும் நடராஜ் சார் என்ன செய்யவார் கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்றால் பொண்ணுங்களை விட்டு குட்ட சொல்லுவார் அது அப்ப பெரிய அவமானம். ஒரு பொண்ணு கையால அடிவாங்குறியே புத்திவரவில்லை என்றுவேறு திட்டுவார்.

நம்ம எப்ப கரீட்டா பதில் சொல்லி இருக்கோம் அங்க பொண்ணுங்க எப்ப டா நான் மாட்டுவேன் என்று காத்துக்கிட்டு இருப்பாளுங்க,அங்கேருந்து வந்து முக்கி முக்கி ஓங்கி வேகமா குட்டுவாளுங்க அது அவளுங்களுக்கு வேகம் ஆனா நம்ம மண்டை தான் ஸ்டாராங்கான மரமண்டையாச்சா அதனால் வலி இருக்காது.என்னமோ ஒரு சிங்கத்தை குட்டி சாச்சுட்ட நிம்மதியில் போய் உட்கார்ந்து இருப்பாளுங்க.

அடுத்த முறை அவுங்க பதில் சொல்லாத பொழுது அதிகமாக கொட்டு வாங்கியது யார் என்ற தகுதியின் அடிப்படையில் நமக்குதான் அவுங்களை குட்ட வாய்பு கிடைக்கும், விரலை மடக்கி முட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சும்மா நங்குன்னு ஒரு குட்டுவைப்பேன் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் வரைக்கும் அழுகை நிறுத்தாதுங்க. மண்டைய தடவி தடவி பார்த்துக்கிட்டு இருக்குங்க வீங்கி இருக்கான்னு மற்ற பொண்ணுங்க எல்லாம் குட்டு வாங்கியவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு என்னை ஒரு முறை முறைப்பாங்க பாருங்க அப்ப நமக்கு அது ஒலிம்பிக்கில் மெடல் கொடுத்த மாதிரி.

நம்ம கூட்டதில் சில குள்ள நரிங்க இருப்பானுங்க போய் குட்டுங்கடான்னா அந்த பக்கம் போய் காசு கொடுத்தா யானை தும்பிக்கையை தலையில் வைக்கும்ல்ல அதுபோல நைசா வலிக்காம குட்டுவது போல் நடிச்சுட்டு வந்துடுவானுங்க. அவளுங்களும் அந்த நன்றி கடனை கிளாஸ் டெஸ்டில் காட்டுவாளுங்க பெஞ்சின் இரு மூலையிலும் இரண்டு பெண்கள் நடுவில் ஒரு பையன் என்று உட்கார வெச்சு டெஸ்ட் வைப்பாங்க. அப்பவே தெரிஞ்சு இருக்கு பொண்ணுங்க ஆண்களின் முன்னேற்றத்துக்கு உதவமாட்டாங்க என்று, குட்டுவது போல் நடிச்ச குள்ள நரிங்களுக்கு மட்டும் பேப்பரை காட்டிடுவாளுங்க.

அப்புறம் 9வது படிக்கும் பொழுது தனி தனி கிளாசில் போட்டுவிட்டானுங்க, பிறகு ரெண்டு வருசம் கழிச்சு 11ல் திரும்ப ஒன்னா படிக்கும் பொழுதுதான் வாழ்கையில் எத்தனை பெரிய தப்பை செஞ்சு இருக்கோம் என்று புரிஞ்சது, ஆமாங்க அழகா தாவணி போட்டுக்கிட்டு அம்சமா இருந்தாளுங்க போய் பிரண்ட் ஆகிக்கலாம் என்று பார்த்தால் அப்பயும் நம்ம மேல இருந்த கோவம் தீரல போல! பேச மாட்டாளுங்க சரி இப்ப யாரும் குட்ட சொன்னா போய் நானும் குள்ள நரி ஆகி சமாதானம் ஆகிடலாம் என்று பார்த்தா கடைசிவரை அதுக்கு வாய்பே இல்லாம போச்சுங்க.

டிஸ்கி: தலைப்புக்கு பதில் கேர்ள் பிரண்டு கிடைக்காமல் போகும்!

இது பழயகுப்பை முன்னாடி எழுதியது! சும்மா கிண்டியதில் கிடைத்தது!

Wednesday, February 18, 2009

காத்துவாங்கும் கடைக்காரனும் -பின்நவீனத்துவ பீரங்கியும்!

என்னடா குசும்பா ரொம்ப சோகமாக இருக்க என்ன பிரச்சினை? என்று கேட்டப்படியே உள்ளே வந்தார் அய்யனார்.

இல்லய்யா ஒன்னும் இல்ல போஸ்ட் போட்டா ஒருத்தரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க, பின்னூட்டமும் வருவது இல்லை, கூட்டமும் கூடுவது இல்லை காத்துவாங்கும் கடைக்காரன் ஆகிவிட்டேன் கூடிய சீக்கிரம் கடைய இழுத்து மூடிவிடலாமான்னு கூட தோனுது!

டேய் மண்டையா இதுக்கெல்லாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆவப்போவது இல்லை. எப்படி எழுதினா கூட்டம் கூடும் என்று சொல்றேன். என்று என்னை அழைத்துக்கொண்டு கடற்கரை பக்கம் போனார்.போய்இருவரும் அப்படியே வெளியே போய் ஒரு புல் தரையில் அமர்ந்தோம்.

டேய் நீ இதுவரை எழுதி இருக்கிறது எல்லாமே மொக்கை இப்படி எல்லாம் எழுதினா ஒரு பயபுள்ளையும் மதிக்கமாட்டானுங்க! அப்ப அப்ப லைட்டா பின்நவீனத்துவம் எழுத ஆரம்பி என்றார் அதற்கு நான் யோவ் நீ வேற எனக்கு பின் நவீனத்துவம் என்றால் என்னான்னே தெரியாது! அதைப்போய் எழுது எழுதுன்னுன்னு சொன்னா? நான் என்ன செய்வேன்.

டேய் பின்நவீனத்துவம் என்பது ஒன்னுமில்லை!--அய்யனார்.
ரைட்டு விடு ஒன்னும் இல்லாததை பற்றி எழுதி ஒன்னும் ஆகப்போவது இல்லை--நான்

டக்கென்று கீழே இருந்து ஒரு புல்லை புடுங்கி இது என்ன இதைப்பற்றி என்ன எழுதுவாய் என்றார்? அதற்கு நான் இந்த புல்லை பற்றி எழுத என்னா இருக்கு? புல்ல அறுத்து மாட்டுக்கு போட்டா மாடு பால் கொடுக்கும் அதை வேண்டும் என்றால் எழுதலாம்.

அதற்கு டேய் இப்படி எல்லாம் எழுதினா ஒருத்தனும் படிக்கமாட்டானுங்க! இதை எப்படி எழுதனும் தெரியுமா

தரையில் சிறிதும் பெரிதுமாய்
குறிகள் நீட்டிக்கொண்டு
இருக்கின்றன இரவில் நிலவை புணர!

இப்படி எழுதிட்டு ஏங்கும் ஆண் குறி என்று தலைப்பு வெச்சேன்னா பதிவு பிச்சுக்கிட்டு போகும்.

யோவ் என்னய்யா செக்ஸ் பாட்டு எழுத சொல்லுற என்று கேட்டதுக்கு டேய் இதுல எங்க செக்ஸ் வந்துச்சு,இது செக்ஸ் பாட்டு இல்லடா புனைவு இந்த புல்லை குறியாக நினைச்சு பாரு கவிதை புரியும்.

டக்கென்று எழுந்திரிச்ச என்னை ஏன் டா எழுந்திருச்சுட்ட என்றார், இதுக்கு மேல இந்த புல்லு மேல உட்கார என்னமோ மாதிரி இருக்கு வா அங்கபோய் மணல் மேட்டில் உட்காரலாம் என்று அழைத்து போனேன். டேய் இங்க பாருடா எதை பற்றி எழுதினாலும் ஒரு பிரமாண்டம் இருக்கனும்..என்று அவர் சொல்ல

எனக்கு தெரிஞ்சு பிரமாண்டம் என்றால் நமீதாதான் என்று சொல்ல அதுக்கு அவர் என் காதில் சொன்னதும் அந்த மணல் மேட்டிலும் உட்கார என்னமோ மாதிரி இருந்தது சரி வா நடந்துக்கிட்டே பேசுவோம் என்று அழைத்துச்சென்றேன்.

நடந்துக்கிட்டே டேய் முதலில் எழுதக்கூடாதது எழுதக்கூடியது என்று எல்லாம் எதுவும் இல்லை, எதைப்பற்றி வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம். இதைதான் எழுதனும் என்று இருக்கும் கட்டை அவிழ்க்கனும்! அல்லது கட்டுடைக்கனும்!அதுக்கு பேருதான் புனைவு.

புரிஞ்சு போச்சு முடிச்ச அவிழ்கனும் என்று சொல்ற கரீட்டா? என்று கேட்ட என்னை முறைச்சு பார்த்துவிட்டு டேய் இங்க பாருடா கொஞ்ச நாட்களுக்கு முன் எங்க வீட்டு பால்கனிக்கு புறா வந்துச்சு அதை பற்றி எப்படி எழுதினே தெரியுமா? என்று கேட்டுவிட்டு அவர் சொன்ன தலைப்பை கேட்டதும் நல்ல வேளை உங்க வீட்டுக்கு மயில் வரவில்லை என்றேன்.

டேய் உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா! புனைவு என்பது என்னன்னா?

இரு இரு நான் சொல்றேன்
1) படிக்கிறவனுக்கு ஒன்னும் புரியக்கூடாது
2) கொஞ்சம் கிளு கிளுப்பா கெட்டவார்த்தை எல்லாம் இருக்கனும்
3)சொல்ல வருவதை நேரா சொல்லக்கூடாது,சொன்னவனுக்கும் என்ன சொன்னோம் என்று தெரியக்கூடாது, கேட்டவனுக்கும் ஒன்னும் புரியக்கூடாது.
4) தமிழுக்கே அகராதி தேடும் அளவுக்கு கடினமான வார்த்தைய யூஸ் செய்யனும்!
இதானே இரு நானே ஒரு புனைவு கவிதை எழுதுகிறேன் என்று எழுத ஆரம்பிக்க...

டேய் என்னை கொஞ்சம் அனத்த விடுடா என்று அய்யனார் பாய்ஸ் விவேக் போல கத்த... நான் தூக்கத்தில் இருந்து விழித்தேன்.

மக்களே இந்த கனவு நான் கண்டது இன்று காலை 4 மணிக்கு விடியல் காலை கனவு பலிக்குமாமே, அது நிஜமா? அப்படி நிஜம் என்றால் நான் புனைவு எழுதுவது போல் கண்ட கனவு நடக்காமல் இருக்க ஏதும் பரிகாரம் இருக்கா?

Tuesday, February 17, 2009

நன்றி சொல்ல மனசு வரவில்லை!!!

அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்று பார்க்க சென்னையில் வந்து இறங்கியதும் கார் அனுப்பி என்னை அழைத்துக்கொண்டு போய் மருத்துவமனையில் விட்டு பின் தினம் போனும் ஒரு முறை நேரிலும் வந்து பார்த்துவிட்டு தைரியம் சொன்ன அப்துல்லாவுக்கும்

மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் நனைந்த படி மருத்துவமனை வந்த லக்கி, பாலபாரதி இருவருக்கும், அவர்கள்வரும் பொழுது கூடவே வந்த டாக்டர் புரூனோவுக்கும்

ஊருக்கு போகும் வேலை இருந்தாலும் அம்மாவை பார்க்க வந்து சென்ற தம்பி உமா கதிருக்கும்,

பொங்கல் அன்றும் ஹாஸ்பிட்டலில் எங்களோடு இருந்த அண்ணன் உண்மை தமிழனுக்கும்

ஒரு நாள் முழுவதும் எங்களுக்கு அவரின் கார் அனுப்பியது மட்டும் இன்றி மதியம் எங்களை வந்து சந்தித்த நர்சிமுக்கும்,

பல வேலைகளுக்கும் இடையில் நேரில் வந்த அண்ணன் சிபிக்கும்,

புதிய இடம் என்றாலும் கொஞ்சமும் தயங்காமல் வந்த கவிதாயினி காயத்ரிக்கும்

வீட்டுக்கு அழைத்து சென்று கனிவாக உபசரித்த முரளி கண்ணன்,

யார் என்றே தெரியாவிட்டாலும் அண்ணனுக்காக வந்து பார்த்த நிஜமா நல்லவனின் தம்பி,

தன் நண்பரை அனுப்பி பார்த்து வர சொன்ன சுரேகா, அவரின் நண்பர்

போனில் பேசி தைரியம் சொன்ன

சஞ்சய்

சுப்பையா அய்யா
நந்து
ஜ்வோராம் சுந்தர்
வால் பையன்
அதிஷா
பரிசல்
கபீஷ்
பட்டாம்பூச்சி
G3
மங்களூர் சிவா
புதுகை தென்றல்
தாமிரா
வெண்பூ
நிஜமா நல்லவன்
கார்க்கி
இளைய கவி

பிராத்தனை செய்த

வெட்டிப்பயல்
சந்தனமுல்லை
விக்னேஷ்வரன்
அதிரை ஜமால்
ஆயில்யன்
மது
வித்யா
நானானி
நான் ஆதவன்
நண்பன்
வெங்கட்ராமன்
Busy
படகு
திகழ்மிளிர்
அன்புடன் அருணா
எம்.ரிஷான் ஷெரீப்
கைப்புள்ள
smile
ராஜ நடராஜன்
சுரேஷ் - ஆப்ரிக்காவில் ஒரு தமிழன்
கண்மணி
selvanambi
ச்சின்னப் பையன்
Thusha
ஜே கே
nagoreismail
நாகராஜன்
PoornimaSaran
Jeeves
T.V.Radhakrishnan
முத்துலெட்சுமி-கயல்விழி
கார்த்திக்
Shakthiprabha
ILA
gulf-tamilan
Kavitha Senthil
BalasBits s
இராம்/Raam
குடுகுடுப்பை
ஆளவந்தான்
பிரேம்ஜி
Pondy-Barani
கிரி
பிரேம்குமார்
சின்ன அம்மிணி
வடுவூர் குமார்
Nice time
Balakumar
கோவி.கண்ணன்
துரியோதனன்
A N A N T H E N
sriram s
வடகரை வேலன்
நாகை சிவா
Varadaradjalou .P
நையாண்டி நைனா
அமிர்தவர்ஷினி அம்மா
இரவு கவி
LOSHAN
ஈ ரா
ராம்.CM
K.USHA
Muhammad Ismail .H
ஜோசப் பால்ராஜ்
syed rahman
bbPreethi
பிராத்தனை செய்த வாசக நண்பர்களுக்கும்!, அனானிகளுக்கும் இங்கு கூடவே இருந்து சொந்த சகோதரன் போல பாவித்து உதவிகள் பல செய்யும் உள்ளூர் சொந்தங்கள் ஆசிப், அய்யனார், கோபி, சென்ஷி, அபி அப்பா, சுல்தான், ஜெஸிலா, பினாத்தல், லொடுக்கு ஆகியோருக்கும் நன்றி என்று சொல்ல மனசு வரவில்லை. தம்பிக்கு உதவி செய்யும் அக்காவுக்கு அல்லது அண்ணனுக்கு நன்றியா சொல்கிறோம் அல்லது தினம் நம்மை கவனித்துக்கொள்ளும் அம்மா,மனைவிக்கு நன்றியா சொல்கிறோம் பிறகு எதுக்கு நான் சொல்லவேண்டும்.

வலைப்பூவில் எழுதுவதால் என்ன கிடைத்தது என்று கேட்பவர்களுக்கு, இதுக்கு மேல் வேறு என்ன கிடைக்கவேண்டும் இந்த நண்பர்களுக்கு மேல் வேறு என்ன இருக்கிறதுகிடைக்க.

Monday, February 16, 2009

சென்னையில் நாள் சம்பளம் ஒரு லட்சத்தில் வேலை வேண்டுமா?

சென்னையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் சம்பளமாக கொடுக்க தயாராக இருப்பதாகவும் அதுக்கு ஆள் தேவை என்றும் நண்பர் ஒருவர் சொன்னார். என்ன என்ன சலுகைகள் என்று முதலில்சொல்லிவிடுகிறேன் இஷ்டம் இருப்பின் அவரை நீங்கள் அணுகலாம்.

சம்பளம்: நாள் ஒன்றுக்கு 1 லட்சம்.

சலுகைகள்: நல்ல புதிய கார், நல்ல சாப்பாடு, பெசண்ட் நகரில் ஒரு இடம், வேலை முடிந்ததும் உங்களை டிராப் செய்ய துணைக்கு நான்கு பேர்.

முக்கிய குறிப்பு: சம்பளம் உங்களிடம் மட்டுமே தப்படும்.

நீங்கள் செய்யவேண்டியது இதுதான். உங்களிடம் கார் கொடுத்துவிடுவார்கள் ECR ரோட்டிலோ அல்லது வேளச்சேரி 100 அடி ரோட்டிலோ வேகமாக ஓட்டிக்கிட்டு செல்லவேண்டியதுதான். இதுதான் உங்க வேலை. வேலையை ஆரம்பிக்கும் முன் நல்ல உயர்தர ஹோட்டலில் உணவு வழங்கப்படும்.

உங்கள் வேலை காரை ஓட்டுவது மட்டும்தான்!

முன்பு சொன்னது போல் வேகமாக ஓட்டிக்கொண்டு செல்லும் பொழுது எதிரே ஒரு லாரியையோ அல்லது டேங்கரையோ மோதவிடுவார்கள் கம்பெனி நிறுவனத்தார்கள்அப்படி மோதிய பொழுது உங்கள் அனுபவம் எப்படி இருந்தது அந்த கார் பாடி எதுவரை அழுத்தத்தை தாங்குகிறது. அல்லது அதன் பாடியில் வேறு மாற்றத்தை கொண்டுவரவேண்டுமா?அல்லது உபயோகப்படுத்தும் உலோகத்தை மாற்றவேண்டுமா என்று எல்லாம் ஆராய்சி செய்வார்கள்.
FAQ:
1)வேலைக்கு போகும் முன் எதற்கு நல்ல சாப்பாடு மட்டும் கொடுக்கிறீர்கள் அதன் பிறகு ஒன்றும் கிடையாதா?
நிச்சயமா வேலை முடிந்த பிறகு மறு நாள் ”பால்”

2)பெசண்ட் நகரில் எந்த ஏரியாவில் இடம், வசதியாக இருக்குமா?
பெசண்ட் நகர் மெயின் ஏரியாவில் இடம்,5 அடி ஆழத்தில் 6 அடி நீளத்தில் உள்ள படுக்கை அறை, நல்ல வசதியாக இருக்கும்.

3)வேலை முடிந்ததும் கூட நான்கு பேர் மட்டும்தான் வருவார்களா?
அடிப்படை தேவைக்காக நான்கு பேர் மட்டுமே வருவார்கள் உங்களுக்கு நண்பர்கள், சொந்தங்கள் அதிகம் இருப்பின் யார் வேண்டும் என்றாலும் பின்னாடி வரலாம்.

4) மோதிய கார் பாடியை எப்படி திரும்ப எடுத்துவந்து உங்களிடமே ஒப்படைப்பது?
முதலில் உங்க பாடிய யாரிடம் ஒப்படைப்பது என்று சொல்லுங்கள்.

5) வேலை கிடைக்க முன்னுரிமை யாருக்கேனும் உண்டா? அப்படி எனில் என்ன தகுதி இருக்கவேண்டும்?
நீங்கள் பின் நவீனத்துவ பிடாரியாக இருந்தால் முன்னுரிமை முதலில் வழங்கப்படும். ”சொந்த”கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 லட்சமும் முன்னுரிமையும் உண்டு.

டிஸ்கி:
இந்த பதிவு ஏன் புரியாமல் விழிப்பவர்களுக்குக்காக ஒரு செய்தி நண்பர் முரளிகண்ணன் அவர்கள் கார்கள் விபத்துக்குள்ளாகும் பொழுது அதிக சேதத்தை தவிர்ப்பது என்று ஆராய்ச்சி செய்கிறார்.

ஆராய்சியில் பங்கு பெறுங்கள்!

Saturday, February 14, 2009

கயிற்றால் கட்டிப்போட்டு ஒரு ஜோடிக்கு கல்யாணம்

பயந்தது போலவே நடந்துவிட்டது ஒரு ஜோடிக்கு கயிற்றால் கட்டிவைத்து கல்யாணம் செய்துவைத்துவிட்டனர்.

குடும்ப பாரத்தை சுமப்பது என்பது இதுதானோ??

*******************************************************************************
காதல் என்றால் என்னவென்று தெரியாத சின்னஞ்சிறுசுக்களுக்கு


காதல் என்பது பரத்தும், சந்தியாவும் நடிச்ச படம்.

அதுல பரத் பின்னாடி கட்டி வந்தது போல உட்காந்துக்கிட்டுதான் வண்டி ஓட்டுவார் அதன் மூலம் காதல் வந்தா ஒரு இடத்தில் ஒழுங்கா உட்காரக்கூட முடியாது என்பதை சிம்பாளிக்கா சொல்லி இருப்பாங்க.

இதுதாங்க காதல் பற்றிய விளக்கம் மேலும் காதலை பற்றி தெரிஞ்சுக்கனும் என்றால் காதல் சி.டி அல்லது டி.வி.டி பார்த்து தெரிஞ்சுக்குங்க!

Monday, February 9, 2009

பாழாப்போன ஜோசப் பால்ராஜும் வீனாப்போன அப்துல்லாவும்!---மொக்கை!

ஜோசப் பால்ராஜ் இனியும் நீங்கள் தாங்கள் தங்களுடைய குணத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் அதுக்கு தக்க தகுந்த தண்டனை உங்களுக்கு உரிய நேரத்தில் தவறாமல் வழங்கப்படும்.

அப்துல்லா என்று சக பதிவர் தாங்களை சந்திக்க சிங்கப்பூர் வந்த விசயம் அனைவரும் அறிந்ததே, அதுவரை ஒழுங்காக இருந்த புதுகை அப்துல்லா தாங்களை சந்தித்தப்பிறகு எம்.எம். அப்துல்லா என்று பெயர் மாற்றியது மட்டும்அல்லாமல் அவரின் எழுத்திலும் சரி பேச்சிலும் சரி பல மாற்றங்கள், அந்த மாற்றங்கள் ஆரோக்கியமானதாக இல்லாததாலேயே இந்த கடிதம்!

இதுவரை புதுகை அப்துல்லா என்ற பெயரில் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் ரிலே ரேசில் ஓடிக்கிட்டு இருந்தவரை தாங்களை சந்தித்த பிறகு யுவான் சுவாங் ரேஞ்சில் பயன கட்டுரையும், திராவிடமும் கம்யூணிசமும் என்று எழுதியது மட்டும் இன்றி ஸ்பீல் பெர்க் படம் எடுப்பது போல் திராவிடமும் கம்யூணிசமும் பார்ட் 2 என்று எல்லாம் வேறு எழுதிவருகிறார். ஒழுங்காக மொக்கை போட்டுக்கிட்டு இருந்தவரை உன்னை போல் உருப்படியாக எழுத வெச்சது அடுக்குமா, நியாயமா இன்னுமும் காலேஜில் இருந்தது போலவே இருக்கிறீயா நண்பா!

மக்களே இந்த ஜோசப் பால்ராஜூம் நானும் MS .IT ஒன்னா படிச்சோம்( அப்பாடா நான் படிச்சதுக்கு இருக்கும் ஒரே சாட்சி நீதான் மாப்பு), படிக்கும் காலத்திலேயே ஜோசப் அவரை போல் என்னையும் நன்றாக படிக்கவைக்கவும், ஒழுங்கா புரோகிராம் எழுதவும், வகுப்பறையில் பாடம் ஒழுங்கா நடக்க ஒத்துழைப்பு கொடுக்கவேண்டியும் பல பகீர முயற்சிகள் எல்லாம் எடுத்துப்பார்த்தார். நான் கடவுளில் பாலா தலை கீழாக நிற்பது போல் நிற்காததுதான் குறை அப்படி எல்லா சவால்களையும் வெற்றிகரமாக முறியடிச்சு இன்றும் அப்படியே இருக்கிறேன் ஆனால் இந்த அப்துல்லா இப்படி ஒரேயடியாக மாறிப்போய்ட்டாரே!

இறுதியாக ஒரு எச்சரிக்கை: அப்துல்லா அண்ணாச்சி இதன்பிறகும் தாங்கள் இப்படிதான் உருப்படியாக எழுதுவீர்கள் என்றால் இனி உங்களோடு இருக்கும் இரு நாட்டு உறவுகளும் துண்டிக்கப்படும்!

மொக்கை மொக்கைமட்டும் அறியேன் வேறொன்றும் அறியேன் பராபரமே!
(நான் கடவுள் விமர்சனம் படிச்சதுக்கே இந்த எபெக்ட்).

புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான் என்பது போல் போடுறது எல்லாமே மொக்கை இதுல எதுக்கு புதுசா மொக்கைன்னு லேபிள் வேற என்று என் உள் மனம் கேட்கிறது இருந்தாலும் ஒரு ஆர்வம்தான்!

Sunday, February 8, 2009

இன்றைய அரசு மருத்துவமனையும் அதன் போட்டோவும்!!!

அரசு மருத்துவமனை என்றால் நமக்கு உடனே நினைவுக்கு மட்டும் இன்றி மூக்குக்கும்வருவது அதன் பினாயில் நெடியும், சுகாதரமற்ற பராமரிப்பும்தான். எல்லோரிடமும் இருக்கும் ஒரு நினைப்பு காய்ச்சல் வந்து அங்கு போனால் அதோடு வயிற்றுப்போக்கையும் வாங்கி வரவேண்டும் அல்லது ஒரு நோய்க்கு சிகிச்சை எடுக்கபோனால் அதோடு இலவச இனைப்பும் வரும் என்ற பயம். இவை அனைத்தும் உங்கள் மனதில் இருக்குமானால் இனி அதை அழித்துவிடுங்கள்.

சென்னையில் சென்ட்ரலில் இருக்கும் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் இருக்கும் பொதுக் கழிப்பறைகூட அத்தனை சுத்தம். சமீபத்தில் அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லாமல் திருச்சியில் காவேரி என்ற மருத்துவமனையின் பின் புலம் தெரியாமல் அங்கு கொண்டு போய் சேர்த்து ஒரு 10 நாட்கள் அங்கு இருந்து அவர்களிடம் இருக்கும் அத்தனை புதியமெசினுக்கும் கப்பம் கட்டிவிட்டு கடைசியாக ரிசல்ட் வந்தது “நுரையீரல் புற்று நோய்” என்று, மேலும் உறுதி படுத்த இன்னும் மீச்சம் மீதி இருக்கும் மெசின்களுக்கும் வேலை வைக்க எண்ணியவர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பி, அப்பாவின் நண்பரும் சமீபத்தில் பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய டாக்டர். சிவராமன் என்பவர் மூலம் அரசு மருத்துவமனையில் சேருங்கள் மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றதால் அங்கு கொண்டு போய் சேர்த்தார்கள்.
(பொங்கலுக்காக நெக்லஸ் மற்றும் வித விதமான ஆபரனங்களோடு மருத்துவமனையின் முகப்பு )

அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது அங்கு இல்லாத வசதியே இல்லை, எத்தனை எத்தனை விதமான பிரிவுகள் எத்தனை எத்தனைவிதமான தொழில்நுட்ப உபகரணங்கள், அங்கு அம்மாவுடன் 20 நாட்கள் இருந்தேன், பின் அங்கு ஒரு முறைக்கு இரு முறை செய்த டெஸ்டில் கேன்சர் இல்லை என்று வந்தது. பின் நுரையீரலில் சுற்றி நிரம்பி இருக்கும் தண்ணியை வெளியேற்ற சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது. 6 மணி நேரத்துக்கு ஒரு முறை நான்கு ஊசிகள் போட வேண்டும்காலை 6 மணிக்கு ஒன்று, மதியம் 12 மணிக்கு ஒன்று, மாலை 6 மணிக்கு ஒன்று, பின் இரவு 12 மணிக்கு ஒன்றுஇருந்த 20 நாட்களிளும் ஒரு நாள் கூட 12.01க்கோ அல்லது 6.01க்கோ ஊசி போட்டது இல்லை மணி சரியாக 12 நெருங்கும் வேலையில் கூப்பிடாமலேயே தானாக வந்து ஊசி போட்டுவிட்டு செல்வார்கள் அந்த செவிலியர்கள்.
அதுபோல் முன்பு எல்லாத்துக்கும் வழங்கப்பட்டு வந்த த/அ என்ற வெள்ளை மாத்திரை இல்லாமல் பெரிய கம்பெணிகளில்தரமான மாத்திரையே வழங்கப்படுகிறது. எங்கு தேடினாலும் கிடைக்காத வாடகையில் ஒரு சிங்கிள் பெட் ஏ/சி ரூம், ரூ600வாடகையிலும் இரு பெட் போடப்பட்ட அறை ரூ 300 க்கும் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 4 முறையாவது சுத்தம் செய்கிறார்கள், மூக்கை துளைக்கும் மருந்து நெடி இல்லை.
மருத்துவர்களும் சரி, செவிலியர்களும் சரி மிகவும் கனிவோடும் அதே சமயம் அக்கரையோடும் இருந்ததால் அங்கு இருந்த வரைஅம்மா மிகவும் நிம்மதியாகவே இருந்தார்கள்.

மிடில் கிளாஸ் மக்கள் பலரும் தன் சொத்தை விற்று மருத்தும் செய்யதற்கு பதில் அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம்பார்த்துக்கொண்டு பின் உங்களால் முடிந்த அளவுக்கு அந்த துறைக்கு சில உதவிகளை செய்துவிட்டு வாருங்கள்!
********************************************************************
அங்கு இருந்த ஒவ்வொரு நாளும் எத்தனை விதமான காதலர்களால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது தெரியுமா? அங்கு இருந்த 20 நாட்களும் வித விதமான காதலர்களால் மருத்துவமனை நிரம்பி வழிவதை கண்டேன், சக்கரை வியாதியினால் இரு கால்களை இழந்த கணவனை தன் முதுகில் தூக்கி கொண்டு வந்த மனைவி, 50 வயதில் சிறு நீரகப்பிரச்சினையினால் கணவரின் மூத்திரபையை கையோடும் கணவனைதோளில் கைப்போட்டு அழைத்து சென்ற அம்மா, மனைவியின் புற்று நோய்க்கு சிகிச்சைக்காக காத்து கிடக்கும் கணவன், புது தாலியோடு கணவனின் அடிப்பட்ட காலுக்கு அருகிலேயே உட்காந்து இருந்த புது மனைவி என்று எத்தனை எத்தனைவிதமான காதலர்கள். பந்தம் என்பதை தாண்டி அதில் இருக்கும் அன்பை உணர்ந்தால் மட்டுமே அவர்களை புரிந்துக்கொள்ளமுடியும்.
***************************************************************************
நம் சக வலைப்பதிவர் டாக்டர் புருனோ அங்குதான் வேலைப்பார்க்கிறார், மூன்று முறை வந்து அம்மாவை பார்த்துவிட்டு பேசிக்கொண்டு இருந்து விட்டு சென்றார்,பேசிக்கொண்டு இருந்த பொழுது ஒரு முறை சொன்னார் நாளை 24 மணி நேர டூட்டி இப்பொழுதான் முடிந்தது என்று, சும்மா ஒரு சேரில் உட்காந்துக்கிட்டு 8 மணி நேரம்பொட்டி தட்டிட்டு வீட்டுக்கு போய் ஒரு லாரி கல்லை உடைத்ததை போல் பில்டப் கொடுக்கும் நம்மை போல் ஆட்கள் எல்லாம் இது போன்றவர்களிடம் கத்துக்கவேண்டியது நிறைய இருக்கிறது. அரசு மருத்துவமனையில் 8 மணி நேர வேலை என்றாலே எத்தனை சிரமம் அதிலும் 24 மணி நேர டூட்டி முடிந்து கொஞ்சமும் சோர்வு இல்லாமல் முகத்தில் புன்னகையோடு சேவைசெய்யும் இவரை போன்ற மருத்துவர்கள் பலர் அங்கு இருப்பதால் தான் அங்கு காதலர்கள் நிம்மதியோடு இருக்கமுடிகிறது.

அங்கு இருக்கும் சில குறைகள்.

1) டெஸ்ட் கொடுக்க பின் அதன் ரிசல்டை வாங்க என்று நோயாளியோடு வந்தவர்தான் அலைய வேண்டும், சில வயதான பெரியவர்கள் அல்லது யாரும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
2) புது பிளாக்கில் இருக்கும் சுத்தமும் சுகாதாரமும் பழைய மருத்துவமனையில் இல்லை.
3) பல பேர் வந்து போகும் இடம் என்பதால் தளத்துக்கு தளம் செக்யூரிட்டி கேமிரா இல்லாதது ஒரு குறை.

Wednesday, February 4, 2009

பப்ளிக்கா ஒண்ணுக்கு அடிக்காதீங்க! (அடல்ட் “ஒன்”லி பதிவு)

ஆத்திரத்தை அடக்கினாலும் உச்சாவை அடக்காதீங்க என்று ஒரு சொல் வழக்கு உண்டு! எதை எதையோ மறந்த நம்ம பயபுள்ளைங்க இதை மட்டும் கரெக்ட்டா கடைப்பிடிச்சுக்கிட்டுவரானுங்க. ஊரில் எத்தனை எத்தனையோ மாற்றம் ஆனால் பஸ் ஸ்டாண்ட், முட்டு சந்து, தெருமுக்கு, குட்டி சுவரு, என்று எந்த பாரபடசமும் இன்றி நம்ம ஆளுங்க யூரின் டேங்கைகாலி செஞ்சுட்டு போய்டுறானுங்க அது மட்டும் மாறவே இல்லை. அதுவும் போகும் பொழுது ரவுண்ட் ரவுண்டா டிசைன் போட்டுக்கிட்டு, சில பேர்
என்னமோ போனாவை புடிச்சு செக்கில் கையெழுத்து போடுவது போல் படம் வரைவானுங்க. குட்டி சுவர் என்றால் ஈ.ஸி.ஜி மாதிரி லைன் லைனா போடுவானுங்க. சில சமயம் யார் ரொம்ப தூரம் எட்டி அடிக்கிறானுங்க என்று போட்டி வேற!


நம்ம பயபுள்ளைங்களுக்கு இருக்கும் ஒரு பழக்கம் ஒருத்தன் ஒண்ணுக்கு அடிக்க ஆரம்பிச்சா டக்கு டக்குன்னு மத்தவனுங்களுக்கும் ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு வந்து அப்படியே லைன் கட்டிநின்னு ஒரு சின்ன ஓடைய உருவாக்கிவிட்டு விட்டு போய்டுவானுங்க.



இதே மாதிரி கண்ட கண்ட இடத்தில் ஒண்ணுக்கு அடிக்கும் பொழுதுதான் நம்ம தல நர்சிம் உள்ளேவருகிறார் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று!. ச்சே அவுங்க ஒண்ணுக்கு அடிக்கிற இடத்துக்கு இல்லைங்க. என் நினைவில் வருகிறார் என்று சொல்ல வந்தேன்.

இதே மாதிரி கண்ட கண்ட இடத்தில் எல்லாம் ஒண்ணுக்கு அடிச்சு இடத்தை நாற அடிப்பதை எப்படி எல்லாம் தடுக்கலாம் என்று மல்லாக்க படுத்துக்கிட்டுயோசிச்சதில் பல ஐடியா தோன்றியது.

1) எங்க ஊரில் திறமையான பசங்க நிறைய பேர் இருக்கானுங்க சும்மா டைம் பாஸ்க்கு ஸ்கூலுக்கு போய்ட்டு படிப்பு வராம ஒரு நிலையான வருமானமும் இல்லாமசுத்திக்கிட்டு இருப்பானுங்க, அவனுங்களுக்கு பொழுது போக்கு வேலியில் போகும் ஓணானை எட்டி நின்னு ஒரு சின்ன கல்லால் அடிச்சு அது வாயில புகையிலை வெச்சு டான்ஸ் ஆட உடுவது, அது வாயில் பீடிய வெச்சு பீடி அடிக்கவிடுவது என்று பைசா பிரோஜனம் இல்லாத வேலைய பார்த்துக்கிட்டு இருக்கானுங்க. அப்படி ஓணான் அடிப்பதில் திறமையான ஆளுங்களை கொண்டு வந்து பஸ் ஸ்டாண்ட் பக்கம் உட்கார வெச்சு கையில கொஞ்சம் கல்லை கொடுத்தோம் என்று வெச்சுக்குங்க எவனாவது ஒண்ணுக்கு அடிக்க ஜிப்பை திறந்து வெளியே எடுத்தானுங்க “டிங்காண”வை ஓணான் அடிப்பது போல் ஒரே அடி அடிச்சுடுவானுங்க. இப்படி அதிகமாகஅடிச்சு விரட்டுபவர்களுக்கு மாதம் ஒரு சம்பளம் போட்டு கொடுத்தா அவன் பொழப்பும் ஓடும் பஸ் ஸ்டாண்டும் கிளீனா இருக்கும். (ஓணான் பிடிக்க இன்னொரு முறை வெளக்கமாத்து குச்சியில் சுருக்கு போட்டு புடிப்பது அந்த முறையில் கை தேர்ந்தவர்கள் இந்த வேலையில் வாய்ப்பு வழங்கபடாது)

2) முதலில் சொன்ன யோசனையில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம் கல்லு கொஞ்சம் வேகமாக போய் பட்டுவிட்டால், அதனால் அதுக்கு பதில் பிளாஸ்டிக் குண்டுகள் நிறப்பிய டுப்பாக்கி கொடுக்கலாம், பிளாஸ்டிக் குண்டு என்பதால் ரிஸ்க் கம்மி, அதோடு மட்டும் இன்றி விவேக்கிடம் கேட்பது போல் எதடா சுட்ட? என்று கேட்டால் மைனர் குஞ்ச சுட்டேன் என்று டயலாக் வேற சொல்லிக்கலாம். (இதுக்கு டிரைனிங் அக்டாமி ஆரம்பிப்பது, ”குறி” தவறாமல் சுடுபவர்களுக்கு பதக்கம் வழங்குவது என்று பல ஐடியா இருக்கு)

3) கால் வெச்சா வெடிக்கும் கண்ணி வெடி போல் ஜொய்ங்ங்ங் என்று உச்சா அடிக்கும் பொழுது உச்சா பட்டா ”டமார்” என்று வெடிக்கும் சில பல வெடிகளை கண்டுபிடிக்கவேண்டும், அப்படி வெடிச்சுது என்றால் பயத்தில் வந்த உச்சாவும் ரிவர்ஸ் கியர்போட்டு உள்ளே ஓடிவிடும்.

4)ஒருவித கெமிக்கல் கண்டுபிடிக்கவேண்டும் அதை பொது இடங்களில் தூவ வேண்டும் அந்த கெமிக்கலுக்கு இரு பயன்கள் இருக்கவேண்டும்

4.1) டிங்கானாவின் அளவு ஒருமுறை பப்ளிக்கா உச்சா போனால் ஒரு மி.மீ குறையவேண்டும். நம்ம பயபுள்ளைங்களுக்கு எப்பொழுதுமே இருக்கும் ஒரு டவுட் “அளவை” பற்றியது இது போதுமா போதாதா? இதை வெச்சு வாழ்கைய ஓட்டமுடியுமா? எத்தனை முறை மாத்ரூபூதம் டீவியில் தோன்றி யானைய அடக்கும் அங்குசம் சின்னதுதான் என்று சொன்னாலும் என்று ஒருவித குழப்பத்தோடயே உலாவிக்கிட்டு இருப்பானுங்க அப்படி இருக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் ஒரு மி.மீ குறையும் என்றால் உள்ளதும் போச்சுடாநொல்லகண்ணா என்று பப்ளிக்கா வெளியே எடுக்கவே பயப்படுவானுங்க!

4.2) இரண்டாவது பலனாக ஒரு முறை பப்ளிக்கா உச்சா போனால் ஒரு மூன்று நாளைக்கு ”ஒன்னியும்” செய்யமுடியாதபடி அந்த கெமிக்கல் பவுடர் வேலை செய்யனும்.

5) பஸ் ஸ்டாண்டில் பெரிய ஸ்கிரீன் வெச்சு மாய லென்ஸ் மூலம் ரொம்ப சின்னதா புரோஜெக்ட் செஞ்சா பயந்து போய் ஓடி போய்டுவானுங்க.

இப்படி டிராப்பிக்கை, எச்சில் துப்புவதை, சிகரெட் பிடிப்பதை எல்லா தடுக்க பல யோசனை வெச்சு இருக்கேன், இதுக்கு மேலும் ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று யாராவது கேட்டிங்கன்னா ஒன்னு ஒன்னாக வெளியே வரும்.


டிஸ்கி: உங்களுக்கும் ஏதும் இதுபோல் யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் கூச்சப்படாம சொல்லுங்க பாஸ்!