Thursday, June 19, 2008

வளரும் பதிவர், வளர்ந்த பதிவர் கண்டுபிடிப்பது எப்படி?

1) ஒரு படம் பார்க்க போனா அது பொழுது போக்கா தெரிஞ்சா நீங்க சாதாரண ஆள் அதுவே உங்களுக்கு ஒரே ஒரு பதிவுவா தெரிஞ்சா நீங்க வளரும் பிளாக்கர். அதுவே உங்களுக்குஒரு மூன்று நான்கு பதிவாக தெரிஞ்சா நீங்க பினாத்தலார் போன்று பெரும் பிளாக்கர் (தாரே சமீம் பர் புகழ் பினாத்தலார்:)) , அதுவே உங்களுக்கு பார்பனிய மலம், பார்பனிய மூச்சாவாக தெரிஞ்சால் நீங்கள் பைத்தியகாரன் போல்ஒரு பின்நவினத்துவ வாதி.

1.1 ) ஹிட் படத்தை போல் நீங்களும் உல்டாவாக ஒரு படம் தயாரித்து எழுதினால் வளர்ந்த பதிவர். அந்த படத்தின் நடிகரே நீங்கள் தான் என்றால் பழம் பெரும் பதிவர்.

2)ஹோட்டலுக்கு செல்லும் பொழுது இருவருடன் சேர்ந்து சாப்பிட்டது ஹோட்டலோடு மறந்து போனால் சாதாரண ஆள்அதுவே ஹோட்டலில் நடந்த வலைபதிவர் மாநாடாக தெரிஞ்சா அப்ப நீங்க வளரும் பதிவர்.

பின் குறிப்பு : ஹோட்டலில் (சலூனில்) கொடுத்த டிப்ஸை கூட தனிபதிவாக போடலாம் என்று உங்களுக்கு தோன்றினால் நீங்கள் பழம் பெரும் பதிவர்.

3) உங்களுக்கு கேட்க தோன்றும் கேள்விகளை ஹாய் மதனுக்கோ அல்லது அரசு கேள்வி பதிலுக்கோ அனுப்பினால் சாதாரன ஆள்அதுவே அதை டோண்டுவுக்கோ அல்லது லக்கிலுக்குக்கோ அனுப்பினால் நீங்கள் வளரும் பிளாக்கர், மற்றவர்கள் உங்களிடம் கேட்டால்வளர்ந்த பிளாக்கர்.

4) நண்பனிடம் மட்டும் பக்கத்து வீட்டு பிகரின் ஜல்சா மேட்டரை பேசினால் நீங்கள் சாதாரண ஆள்அதுவே ஜல்சா கதை 1001 என்று தலைப்புவைத்து பதிவாக எழுதினால் நீங்கள் கட்டுடைக்கும் பதிவர்.

5) புத்தகத்துக்கு உரை எழுதுவது போல் மற்றவர்களுக்கு பதிவு எழுதி கொடுத்தா பழம் தின்னு கொட்டைபோட்ட பெரும் பதிவர் (தம்பி எழுதி தந்ததும் இதில் அடங்கும்).

6) நீங்க மொக்கை பதிவாக இருந்தாலும் அங்க போய் 10 கமெண்ட் போடுபவராக இருந்தால் வளரும் பதிவர்பத்துபக்க பதிவுக்கு ஒரே ஒரு ஸ்மைலி மட்டும் போட்டால் நீங்க பெரும் பதிவர், கமெண்ட்டே போடாமல் இருந்தால்பழம் பெரும் பதிவர்.

7) விருது ஏதும் வாங்கி இருந்தா நீங்க ஸ்டார் பதிவர், அந்த விருதுவை கொடுத்ததே நீங்க என்றால் சூப்பர் ஸ்டார் பதிவர்.

Monday, June 16, 2008

மிஸ்டர் 7 1/2 ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் பொழுது இதுதான் நினைவுக்கு வரும்!

ஒரு ஊரில் ஒரு வயதான தாத்தா இருந்தாராம்,அவர் குதிரைகளை வளர்த்து விற்று வரும் காசில் வாழ்கையை ஓட்டிக்கொண்டு இருந்தாராம். ஒரு நாள் அவரிடம் இருந்த ஒரு விலை உயர்ந்த குதிரை ஒன்று காட்டுக்குள் ஒடி விட்டதாம்.அதை தெரிந்த பக்கத்து வீட்டுகாரர்கள் தாத்தாவிடம் வந்து என்ன கஷ்ட நேரம் இது இப்படி ஆகிவிட்டதே என்றார்களாம் அதற்கு தாத்தா இது கஷ்ட நேரம் என்று இப்பொழுது எப்படி தெரியும்! என்றாராம்.

ஒரு மாதம் கழித்து ஒடி போன குதிரை ஒரு பத்து பதினைந்து குதிரையை கூட்டிக்கொண்டு வந்து விட்டதாம். திரும்பவும் பக்கத்து வீட்டு காரர்கள் இது உங்களுக்கு நல்ல நேரம் போல அதான்ஓடி போன குதிரை மட்டும் இல்லாமல் கூட ஒரு பதினைந்து குதிரையும் வந்து இருக்கு என்றார்களாம்..அதற்கு தாத்தா இது நல்ல நேரமா என்று உங்களுக்கு இப்பொழுது எப்படி தெரியும் என்றாராம்...

ஒரு நாள் அந்த காட்டு குதிரைகளை பழக்க படுத்த முயன்று கொண்டு இருந்த தாத்தவின் ஒரே பேரனை அந்த குதிரை கீழே தள்ளி மிதித்ததில் பேரனின் இரன்டு கால் எலும்பும் ஒடிந்து விட்டதாம் அதை பார்க்க வந்தவர்கள் என்ன கஷ்ட காலம் இது உங்களுக்கு, உதவியாய் இருந்த ஒரே ஒரு பேரனின் இரண்டு காலும் ஒடிந்து விட்டதே என்றதற்கு வழக்கம் போல் இது கஷ்ட காலம் என்று எப்படி இப்பொழுது தெரியும் என்றார்.

பின் ஒரு வாரம் கழித்து அடுத்த நாட்டு ராஜா நம் நாட்டின் மேல் படை எடுக்க இருப்பதால் இளைஞர்கள் படையில் சேர வேண்டும் என்று முரசு அறிவிக்க பட்டது.அதன் படி அனைவரும் படையில் சேர்ந்தனர்.தாத்தாவின் பேரன் கால் ஒடிந்து இருப்பதால் அவனால் படையில் சேர முடிய வில்லை போரில் தாத்தா நாட்டு ராஜா தோற்று போனார் படை வீரர்களும் கொல்லபட்டனர். ஆனால் இதற்கும் தாத்தாவிடம் எந்த மாற்றமும் இல்லை.

பத்து நாட்களுக்கு முன்பு மனைவியை அழைத்து வர எல்லாம் செய்துவிட்டு
வீட்டுக்கும் போன் செய்து சந்தோசமாய் சொல்லிவிட்டு இரவு தூங்கி காலையில் எழும் பொழுது வீட்டில் இருந்து போன், அம்மாவும் அப்பாவும் சென்ற வண்டியில் அம்மா புடவை மாட்டி கீழே விழுந்து அம்மாவுக்கு கையில் இரண்டு இடத்தில் எலும்பு முறிவு, அப்பாவுக்கு காலில் எலும்பு முறிவு. இதை என்ன நேரம் என்று சொல்வது?

Wednesday, June 4, 2008

தமிழ் வலை பதிவர்கள் தயாரிக்க போகும் முதல் திரைப்படம்

எவ்வளோ நாளைக்குதான் ஆனந்தவிகடனில் ஒரு துண்டு இடத்தில் வருவது இனி உலகையே திரும்பி பார்க்கும் படி ஒரு படம் எடுத்துவிடுவது என்று வலைபதிவர்கள் மீட்டிங்கில் கடைசியாக நடந்த கோவி கண்ணன் சந்திப்பில் முடிவு செய்யபடுகிறது. இனி அதன் தொடர்ச்சி.

லக்கி லுக்: பாலா அண்ணே நம்ம பிளான் படி படம் தயாரிக்க ஒரு புரொடியூசர் வேண்டுமே? அதுக்கு யாருன்னே கிடைப்பா அதுவும் நம்பள நம்பி பணம் போட!

பால பாரதி: இங்க இருக்கவனுங்க யாரும் நம்மை நம்பி ஒரு சல்லி காசு கொடுக்கமாட்டானுங்க, NRI யாரையாவதுதான் புடிக்கனும்.

லக்கி லுக்: அப்ப என்னுடைய கழக தோழர் அண்ணன் அபி அப்பா இருக்கிறார் அவரை புடிச்சு கேட்டு பார்க்கவா?

பால பாரதி: கோபமாக யோவ் அவரிடம் ஹீரோயின் வயசுக்கு வந்ததுக்கு புட்டு சுத்தனும், அதுபோல் ஒரு சீன் எடுக்கனும் பணம் கொடு என்றால் கரெட்டா ஹீரோயின் பொண்ணுக்கு புட்டு சுத்தும்பொழுது கொடுப்பார். நீ வேற!

லக்கி லுக்: அப்ப ஆசிப் அண்ணாச்சிய புடிக்கலாமா?

பால பாரதி: யோவ் அவரு கொஞ்சம் விவரமான ஆளு அதுமட்டும் இல்ல காசு வாங்கினா செவத்து மூதி அது இதுன்னு திட்டு வாங்கனும் எதுக்கு அது எல்லாம் ?

லக்கி லுக்: அப்ப அமீரகம் வேண்டாம், இந்த பக்கமா K.R.S, G.ராகவன் இவங்களை புடிக்கலாமா?

பால பாரதி: அட நீ வேற பில்லாவை ரீ மேக் செய்யலாமா என்றால்..வேண்டாம் ஒளவையார், கந்தன் கருனையை ரீமேக் செய்யலாம் என்பார்கள் அவர்களும் ஒத்துவராதுய்யா.

லக்கி லுக்: பாலண்ணே நம்ம கோவி கண்ணன் எப்படி?

பால பாரதி: அடேய் தம்பி சூப்பாரா சொன்னடா, அவருதான் நம்ம புரொடியுசர் அவருதான் ஒத்துவருவாரு.

லக்கி லுக்: எப்படினே!!

பாலபாரதி: தம்பி அவரு ஷேவிங் செய்யவே 1000 கொடுத்தவரு, முடிவெட்ட 10000 கொடுப்பாரு அதுபோல படம் எடுக்க என்றாலும் அவரிடம் இருந்து செமயா காசு வாங்கிடலாம், அதும் இல்லாமா என்னத்த அடிச்சாலும் தாங்குறாரு அவரு ரொம்ப நல்லவரு!!!!

கோவி.கண்ணனும் சம்மதிக்க கதை விவாதத்துக்கு பதிவர்களை அழைக்கிறார் பால பாரதி. பதிவர்கள் அனைவரும் ஒன்று சேருகிறார்கள்.

______________**********************_______________

எல்லாம் பாலபாரதியை திட்டுகிறார்கள் யோவ் உன் பேச்சை கேட்டுக்கிட்டு வந்தோம் பாரு வந்து 3 மணி நேரம் ஆகுது இன்னும் புரொடியூசரை கானும் என்று! பாலபாரதி கோவிக்கு போன்போடுகிறார். இதோ வந்துட்டேன் ஒரு சின்ன வேலையா போய் இருந்தேன் அதான் டிலே ஆகிட்டு என்று வருகிறார்.

பால பாரதி: என்ன கோவி? சிவாஜியில் ஒரு கூடை சன் லைட் பாட்டில் வரும் ரஜினி போல வருகிறீர்கள்.

கிளம்பும் பொழுதுதான் பார்த்தேன் முகத்துக்கு பவுடர் அடிக்கவில்லை என்று அடிக்க சோம்பேறி தனம் அதான் கூட வந்த நண்பனிடம் கேட்டேன் சரி என்று சலூனுக்கு கூட்டிட்டு போனார் அங்க அவன் முகத்துக்கு சாதா பவுடரா , ஸ்பெசல் பவுடரா என்றான் சாதா என்றால் கையில் கொட்டி அடிச்சு விடுவேன், ஸ்பெசல் என்றால் பிரஸ்ஸால் அடிச்சு விடுவேன் என்றான் சரின்னு ஸ்பெசலே சொல்லிட்டேன் பார்த்தா வீட்டுக்கு அடிக்கிற சுண்ணாம்பு பிரஸை வெச்சு சுண்ணாம்பு அடிச்சு விட்டு 100000 வாங்கிட்டான்.

பாலபாரதி: அதான் சுண்ணாம்பு அடிக்கிறான் என்று தெரியுதுல்ல அப்படியே ஓடி வரவேண்டியதுதானே?

கோவி.கண்ணன்: சுண்ணாம்பு அடிக்கும் பொழுது அவன் சொல்றான் என்னத்த அடிச்சாலும் தாங்குறார், இவர் ரொம்ப பழம் பெரும் வலைபதிவர் போலன்னு சொல்லிட்டான் . அவ்வ்வ்வ் என்று வடிவேலு ஸ்டைலில் அழுகிறார்.

அவரை சமாதன படுத்திவிட்டு இனி நடிகர்கள் தேர்வு:
___________________********************_____________________

படத்தின் டைரக்ட்டர்: நம்ம உண்மை தமிழன், இப்படா தம்பி கமல் பத்து வேடத்தில் நடிச்சு அசத்தி இருக்கிறார் அதைவிட பெட்டரா 12 கேரெக்ட்டரில் நடிக்க ஒரு ஆள் வேண்டும் என்னடா செய்யலாம் அப்படி செஞ்சாதான் உலகமே நம்மை திரும்பி பார்க்கும் என்று லக்கியிடம் சொல்ல.

லக்கி: 12 என்ன 24 விதமாகவும் திறமை காட்ட ஒரு ஆள் இருக்கிறார் அவரே பதிவும் போடுவார், அவரே கேள்வியும் கேட்டுப்பார், அவரே பதிலும் சொல்லிப்பார், அவரே பின்னூட்டமும் போட்டுப்பார்,அவரே பின்னூட்டத்துக்கு பதிலும் சொல்லிப்பார் என்று சொல்ல...

உண்மை தமிழன்: நீ அவரை விடவே மாட்டீயா, வேற யாரையாவது சொல்லு.(பால பாரதி உண்மை தமிழனிடம் வந்து அண்ணே மோர் வேணுமா, அண்ணே கூல் டிரிங்ஸ் வேணுமா, அண்ணே சுண்டல் வேண்டுமா? ரொம்ப கவனிக்கிறார்) பாலபாரதி: (லக்கியிடம் கண்ணை காட்ட!) அதை கவனிக்காதது போல் அந்த பக்கம் திரும்புகிறார் லக்கி, கடுப்பான பாலபாரதி லக்கி காலை மிதிக்க ஆஆன்னு கத்துகிறார் லக்கி.

லக்கி : அண்ணே நம்ம வலையுலகில், பார்க்க இளமையா, கொஞ்சம் அழகா, நல்ல கலரா , எல்லாவிதத்திலும் ஹீரோவுக்கு பொருத்தமாக இருக்ககூடிய ஒரே ஒரு ஆள் ....................நான்தான்னே!

பாலபாரதி: அடி ங்கொய்யாலே என்னை ரெக்கமெண்ட் செய்ய சொல்லி சொன்னா நீ உனக்கு சொல்லிக்கிறீயா இருடி...

கடைசியாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து பாலபாரதியே ஹீரோ என்று முடிவாகிறது.

_______________________****************_______________________

கதை விவாதம்:

எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன் என்று உண்மை தமிழன் சொல்ல அப்ப பணத்தையும் நீங்களே போட்டுக்குங்க என்று கோவி டென்சன் ஆகிறார்.

கதை,பாட்டு, பைட்டு எல்லாம் தனி தனியா விட்டு விடலாம் என்று யோசனையை சொல்கிறார்.

படம் திகில் படம் என்றால் வினையூக்கிய எழுத சொல்லிடலாம், காதல் கதை என்றால் சிபியை எழுத சொல்லலாம் ஆனா அவரு மார்கழி மாதத்தையே இன்னும் முடிக்கல. (அதுவும் இல்லாம இந்த ஹீரோவை வெச்சு காதல் கதையும் செய்ய முடியாது ) கிராமத்து கதை என்றால் ஆடுமாடுவை எழுத சொல்லலாம். என்று பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே மழை வர விவாதம் ஒத்திபோட படுகிறது.

Tuesday, June 3, 2008

A டன்டனக்கா A டனக்குனக்கா A டன் டன்

1001

பூரியை பொறித்து எடுக்கும்
முயற்சிகள்
தோல்வியில் முடிந்தன.
உருண்டையாய் உருட்டிவைக்கப்பட்ட
கோதுமை மாவில்
இருந்து சப்பாத்தியை வரவழைக்க
முடிந்தது.

படிந்திருந்த மாவின் இடுக்கிலிருந்து
பிரித்து எடுக்க முடியவில்லை
பூரிக்கான உருண்டை முனையை
குண்டன் ஒருவனின் டுர்ர்ர்ர்
காற்று மாவினை அகற்றியதில்
மாவின் நுனியை பற்றிவிட
முடிந்தது
பூரி கேட்ட என் வீட்டுகாரிக்கு
பசியான அத்தருணத்தில்
என்னால் இயன்றது
வெறும் மாவுமட்டுமே!!!

-----------------------***********-----------------------
1002
லோக்கல் பஸ் ஸ்டாண்டில்
நோட்டிஸ் ஒட்டாதே ஏரியாவில்
எனக்கு முன்னால் அவள்
நோட்டிஸ் ஒட்டிக்கிட்டு இருந்தாள்
பான்பராக்கினால்
சிவந்து இருந்தது
அவள் உதடு.

ஒட்டிமுடித்துவிட்டு நகரும் பொழுது
பாத்தேன் “ரகசிய இரவுகள்”
போஸ்டரை
கண்ணை இமைக்காமல் வெறித்து
பார்த்துகொண்டு இருந்தபொழுது
குனிந்து என் முகத்தின் அருகே
காறி துப்பியபடி போன
சைனாகாரியின் அரை கால் டவுசர்
என் பேண்ட் அளவே இருந்தது.

-----------------------***********-----------------------

1003
தமிழர்களே தமிழர்களே
என்னை தூக்கி கடலில் போட்டாலும்
கட்டுமரமாய் மாறி மிதப்பேன்
என்மேல் நீங்கள் ஏறி
மீன்பிடிக்க போகலாம்
மீன் பிடிக்காதவர்கள் விவேகானந்தர்
பாறைக்கும் போகலாம்.

-----------------------***********-----------------------
பின்னூட்டம்

ஐயோ ராம் சுந்தர்.சி

வெறும்மாவா (இல்லை அரைத்தமாவா?)
வெறும் மாவே பிடித்துஇருக்கிறது.

வைத்தியகாரன்

கால்கழுவ போகும் குளக்கரையில் கன்றாவியாய் தங்களை சந்திப்பதில்மகிழ்ச்சி.

கோழிவாத்

வந்தாச்சு இம்சை வந்தாச்சு:(((

வளர்சூரியன்

முதலில் வந்து இருக்கும் சப்பாத்தி மாவு அருமையாக இருக்கிறது,
இரண்டாவது “இரகசிய இரவுகள்” படம் சுமார் ரகமே!

டிஸ்கி: இந்த பதிவு புரியாதவர்கள் இங்கு (எச்சரிக்கை அது அய்யனாரின் வலை பக்கம், நீங்கள் அங்கு போவது உங்கள் சொந்த ஆர்வத்தினாலேயே, அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், இழப்புகளுக்கும் எவ்விதத்திலும் நான் பொறுப்பு இல்லை) போய் இதை படித்துவிட்டு வந்தால் புரியும், அதில் எனக்கு புரியாத 3 வது கவிதையை உல்டா அடிக்கமுடியாத என் தோல்வியை ஒத்துக்கிறேன்.