Saturday, January 30, 2010

ஆசிப் அண்ணாச்சிக்கு பிறந்தநாள்!

அண்ணனுக்கு அண்ணன் வலையுலக கண்ணன் ஆசிப் அண்ணாச்சிக்கு இன்று 50வது பிறந்த நாள். என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்!

Sunday, January 17, 2010

உய்யா உய்யா உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்



சிலநேரங்களில் கிடைக்கும் எதிர்பாராத பரிசுகள், வாழ்த்துக்கள் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,நேற்று அதுபோல் கிடைத்த தமிழ்மண 2009 நகைச்சுவை, கார்ட்டூன் பிரிவின் முதல் பரிசு விருதும் அதன்பிறகுபோன் செய்தும் மெயில் அனுப்பியும் பின்னூட்டமிட்டும் வாழ்த்திய நண்பர்களால் மிகவும் உற்சாகமாக இருந்தேன்.

எவ்விதமான சச்சரவும் இன்றி தமிழ்மணம் ஒருநாள் கூட தாமதமின்றி இந்த போட்டியினை நடத்தி முடித்திருக்கிறார்கள், சரியான திட்டமிடல்களோடு பக்காவாக நடத்திமுடித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், தொழில் நுட்ப குழுவினருக்கும் நன்றிகள் சொல்லி அதை ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது.

நான் பரிந்துரை செய்தது ஒரே ஒரு பிரிவான "நகைச்சுவை, கார்ட்டூன்" பிரிவு அதில் செந்தழல் ரவியின் வெண்ணைபோல் ஒருவன், கார்க்கியின் புட்டி ஹீரோ ஏழு, பினாத்தலின் திருமங்கலம் மில்லியனர் இவர்களை எல்லாம் பார்த்ததும் ஆஹா இந்த முறை வடை கிடைக்காது போலவே என்று மனசில் பயம் இருந்தது. இருந்தும் ஓட்டு மட்டும் யாரிடமும்கேட்க கூடாது ஸ்டேட்டஸ் மெசேஜ் கூட போடக்கூடாது யாருடையது பிடித்திருக்கிறதோ அதுக்கு ஓட்டு போடட்டும் நண்பர்களுக்கு எதுக்கு தொல்லைகொடுக்கனும் என்று விட்டுவிட்டேன். தோற்றாலும் யாரிடம் தோற்க போகிறோம் நம் நண்பர்களிடம் தானே இதில் என்ன இருக்கு என்று நினைத்தேன்.ஆனால் எப்பொழுதும் போல் நான் நினைப்பதுக்கு எதிராகவே நடப்பது போல் இதிலும் வெற்றிப்பெற்று முதல் பரிசு கிடைத்துவிட்டது. இருந்தும் எனக்கு பிடித்திருந்த செந்தழல் ரவி, கார்க்கி, பினாத்தல் சுரேஷ் இவர்களோடு இந்த விருதை பகிர்ந்துக்கிறேன். இதற்கு காரணமாக இருந்த சக பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

அமீரகத்தில் இருந்து வெற்றி பெற்ற நண்பர்கள் ஆதவன், இஸ்மத் ஆகியோருக்கும் மற்ற பிரிவில் வெற்றிப்பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Tuesday, January 5, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்!

ஒப்பனை கலைஞர் தன் உதவியாளர்களிடம் டேய் பூ எத்தனை முழம் இருக்கு.

எடுபுடி: அது ஒரு 200 முழம் இருக்குங்கய்யா.

தலைவர்: ம்ம்ம் அந்த பவுடர் டப்பா?

எடுபுடி: அது ஒரு 12 டப்பா இருக்குதுங்க...

தலைவர்: ம்ம்ம் அந்த மை...

எடுபுடி: அது மட்டும் 6 தாங்க இருக்கு.

தலைவர்: ம்ம்ம் சரி சரி ஆள் அனுப்பி வாங்கி வர சொல்லு. அப்படியே ஜிகினா பேப்பர், கொடி தோரணம் எல்லாம் வாங்கி வர சொல்லு.


டேய் குமாரு நீ அந்த பூவை சுத்த ஆரம்பி..

சரிங்கய்யா..

டேய் பாபு நீ அந்த பவுடரை அடிக்க ஆரம்பி...

சரிங்கய்யா...

தலைவர்: டேய் என்னடா பூ சுத்துர அங்க கொஞ்சம் கேப் இருக்கு பாரு நல்லா நெருக்கி ஒழுங்கா சுத்துடா..

டேய் பாபு என்னாடா செய்யுற? நல்லா சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பது போல் அடிக்கனும் சரியா?

பாபு: ஐய்யா இதுவரை 5 கோட் அடிச்சு இருக்கேன் போதுமா பாருங்க.

தலைவர்: பத்தாதுய்யா இன்னும் 4 கோட் அடி..

டேய் வாங்கிட்ட வர சொன்ன ஜிகினா பேப்பரை எல்லாம் வெட்டி பின்னாடி சடையில் கொடி போட கட்டுங்க... அந்த பச்ச ரிப்பனை ஒரு பக்கமும் அந்த சிகப்பு ரிப்பனை அடுத்த பக்கமும் கட்டுங்க.

ம்ம்ம் அந்த மை டப்பாவை இங்க கொடு...இப்படி பல மணி நேரம் டெக்ரேசனுக்கு பிறகு ரெடி செஞ்ச பிறகு நொங்கு நொங்குன்னு நொங்கி...

எடுக்கப்பட்ட படம்


ஹேப்பி பர்த் டே ஆயில்யன்!

டிஸ்கி: பழய பதிவுதான் இது, அதுக்காக கும்முவதில் குறை வெச்சிடாதீங்க மக்கா!

Sunday, January 3, 2010

சாணி அள்ள பிறந்தவன்--- புது பட கதை

ஹாலிவுட் பட DVDயை பார்த்து அதுல நம்ம ஊரு செண்டிமெண்டை சேர்த்து படம் எடுத்து ஹிட் ஆக்கும் பார்முலாவை பிடிச்சு இனி அடுத்த படத்தை அதே மாதிரி இயக்கி மக்களை பொலிபோட்டுவிடவேண்டியதுதான் என்று சபதம் செய்யும் போர்ரரசு, கதை சொல்ல ஓடுகிறார் தளபதி குஜயிடம்.

"போர்"ரரசு: பாஸ் இந்த முறை எல்லாமே வித்தியாசம், இந்த முறை ஊர் பேரில் படம் கிடையாது, படத்துக்கு பெயர் சாணி கேப்சன் அள்ளப்பிறந்தவன். டைட்டிலே அதிரடியா இதுவரை யாரும் செய்யாத மாதிரி ஒரு எறுமை மாடு பேக்கை குளோசப்பில் காட்டுறோம் சாணி போடும் பொழுது அது தரையில் விழாம எதிரே இருக்கும் சுவரில் துப்பாக்கி குண்டால் சுடுவது போல் தட தடன்னு 1000வாட்ஸ் சவுண்டில் போய் விழுது, போய் விழும் ஒவ்வொரு உருண்டையும் ஒரு ஒரு புள்ளியாக மாறி சாணின்னு பார்ம் ஆவுது. கீழே கேப்சன் அள்ளப்பிறந்தவன் என்று சுவரை பிளந்துக்கிட்டு வருது.

குஜய்: ஆஹா ஒருமுடிவோடதான் கிளம்பி வந்திருக்கார் போல...சரி கதை என்னா சொல்லுங்க.

போர்ரரசு: ஓப்பனிங் சீன் அமெரிக்காகாரன் உங்க போட்டோவை வெச்சுக்கிட்டு “ஐ நீட் ஹிம் இமிடியட்லி” என்று 500 டெசிபல் சவுண்டில் கத்துகிறான், கேமிராவைதடதடன்னு ஆட்டுறோம், அப்படியே அடுத்த சீன் ஜப்பான் காரன் ““ஐ நீட் ஹிம் இமிடியட்லி” 500 டெசிபல் சவுண்டில் கத்துகிறான், கேமிராவை தடதடன்னு ஆட்டுறோம்.இப்படியே பலநாட்டு ஆளுங்க உங்களை தேடுறாங்க.

குஜய்: ஏன்?

போர்ரரசு: அங்கதான் இருக்கு ட்விஸ்ட்! வெளிகிரகத்தில் இருந்து வந்த வினோத உருவம் கொண்ட பூச்சி மக்களை கடிச்சு கொல்லுகிறது, துப்பாக்கியால் சுட்டாலும் அது சாகமாட்டேங்குது, ராக்கெட் விட்டு அடிச்சாலும் அது சாகமாட்டேங்குது, உலகம் முழுவதும் அது தரைக்கு அடியில் பரவுது, அது எங்க எப்ப வரும் என்று சொல்லமுடியாது.ஆனா திடிர் என்று வந்து ஒரு ஊரையே காலி செஞ்சுடும். உங்களுக்கு ஒரு தங்கை, உங்க அப்பா அம்மா நீங்க சின்னவயசில் இருக்கும் பொழுதே செத்துபோய்ட்டாங்க, தங்கச்சின்னா உங்களுக்கு உசுரு.. உங்க ஊருக்கு பக்கத்து ஊரு வரைக்கும் அந்த பூச்சிகள் பரவிடுது.

நீங்க அன்னைக்கு வழக்கம் போல் காலையில் எழுந்து சுவரில் சாணி அடிச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க ஊருக்கும் அந்த பூச்சிங்க வந்துடுது, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி உங்க வீட்டுக்கு வருது வீட்டில் இருந்து தங்கச்சி வீல் என்று சத்தம் கேட்குது பதறி அடிச்சு கையில் ஒரு சாணி உருண்டையோட ஓடுறீங்க, அங்க அந்த பூச்சிங்க உங்க தங்கச்சியை கடிச்சிடுது.கையில் இருந்த சாணியை தூக்கி மலிங்கா த்ரோ அடிப்பது போல் அடிக்கிறீங்க, எல்லா பூச்சிம் செத்து விழுந்துடுது. இருந்தாலும் உங்க தங்கச்சியை காப்பாற்ற முடியல.தங்கச்சி சாகும் பொழுது அண்ணே என்னை கடிச்ச பூச்சை இந்த உலகத்தை விட்டு துரத்திடனும் ஊர் முழுக்க இதுபோல் எத்தனை தங்கச்சி இருக்காங்க என்று சொல்லி செத்துடுறாங்க.

தங்கச்சியை எரிச்சிட்டு திரும்ப வீட்டுக்கு வரும் பொழுதுதான் தெரியுது யாராலையும் கொல்லமுடியாத அந்த பூச்சிகளை நீங்க கொன்னது, மறுநாள் உலகின் அத்தனை பேப்பரிலும் உங்க போட்டோ வருது ஆள் ஆளுக்கு அவுங்க அவுங்க வீட்டுல இருந்து மாட்டு சாணியை எடுத்து அடிச்சு பார்க்கிறாங்க அந்த பூச்சிங்க சாக மாட்டேங்குது.

ஏதோ உங்க வீட்டு மாட்டு சாணியில் மட்டும் விசேசம் இருப்பது தெரிஞ்சு அந்த பார்முலாவை கண்டுபிடிக்க ஒரு சர்வதேச தீவிரவாத கும்பல் லோக்கல் ரவுடிங்க கூடசேர்ந்துக்கிட்டு பிரச்சினை செய்யுறாங்க, மறுபக்கம் இந்த உலகை அழிக்கும் பூச்சிங்க, கடைசியில் அனைவரையும் எப்படி ஜெயிக்கிறீங்க என்பதுதான் கதை.

குஜய்: ஏன் என்னிடம் இருக்கும் மாடு போடும் சாணியில் அப்படி என்ன விசேசம்?

போர்ரரசு: அங்கதான் இருக்கு நம்ம படத்தோட ட்விஸ்டே, மக்களுக்கு மெசேஜ் சொல்றோம் நீங்க மாடுங்களுக்கு போடுவது இயற்கை உரம் போட்டு வளந்த புல்லு வைக்கோலை, நீங்க உங்க மண்ணையும் பொண்ணு போல பார்த்துக்குறீங்க, அதோடு நீங்க மாட்டுக்கு புண்ணாக்கு போடும் பொழுது வெறும் புண்ணாக்கு மட்டும் போடுவது இல்லை அதோடு சேர்த்து உங்க அன்பையும் போடுறீங்க. அதான் மேட்டரே.

தீவிர வாதிங்க உங்க மாட்டு சாணியை பாக்கெட் போட்டு வித்தா கோடீஸ்வரர்களாயிடலாம் என்று பிளான் போட்டு உங்க மாட்டை எல்லாம் கடத்த வராங்க, பூச்சிங்க உங்களை தேடிக்கிட்டு வருது ஒரு பக்கம் பூச்சி, ஒரு பக்கம், எப்படி ஜெயிக்கிறீங்க என்று சாணி பறக்க சொல்றோம்..

தந்திரசேகர்: மகனே இது செம சான்ஸ்டா இதுல நடிச்ச அடுத்த முதல்வர் நீதான்...

குஜய்: தயாரிப்பாளர் யாரு போர்ரரசு?

போர்ரரசு: ஆவிஎம்

குஜய்: யார் வேண்டும் என்றாலும் தயாரிக்கட்டும் ஆனா படத்தை அவுங்களே தான் ரிலீஸ் செய்யனும், அவுங்க பன் பிக்சருக்கு வித்துட கூடாது?

தந்திரசேகர்: ஏன் மகனே?

குஜய்: யப்பா நீ வேற படம் முடிஞ்சி பேசாம இருக்கலாம் என்றால், காலையில் இருந்து நைட் வரை புரோகிராம் செட்டியூல் போட்டு ஊர் ஊரா தியேட்டர் தியேட்டரா என்னை அனுப்பி டான்ஸ் ஆட உடுறாங்கப்பா, காதலில் கவுந்தேன் கோகுலை விட என்னை கேவலமா ஊர் ஊரா அனுப்பி ஆடவுடுறாங்கப்பா..வலிக்குதுப்பா வேண்டாம் அழுதுடுவேன்...

Friday, January 1, 2010

வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!

சில வருடங்களுக்கு முன்பு நண்பர்களோடு "டட டன் டட டன் டன் டும் டும் ஹாய் எவ்ரி படி விஸ் யூ ஹேப்பி நியு இயர்" என்று சகலகலா வல்லவன் பாட்டோடு நியு இயர் கொண்டாடியது ஏனோ நினைவுக்கு வருகிறது, கடந்தமுறை போலவே இந்த வருட புத்தாண்டை கொண்டாடும் மனநிலையில் இல்லை, எப்பொழுதும் போல் இதுவும் கடந்துபோகும் :) ஒரு வேளை எல்லாம் குடும்பஸ்தர்களும் இப்படிதானோ, ஏதோ வயதாவது போல் ஒரு உணர்வு...

தஞ்சையில் உழவர் சந்தைக்கு எதிரே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையில் தான் தஞ்சையில் இருந்தவரை நியு இயர் விடியும். நண்பர்கள் பீர் பாட்டில் சகிதம் அங்கு இரவு பத்துமணிக்கு ஆஜர் ஆகிடுவார்கள், சரியாக 11.55 வரை குடிச்சிட்டு அதன் பிறகு மறக்காமல் தண்ணீரை வாயில் பீச்சி அடிச்சி வாட்டர் வாஷ் செய்வார்கள் என்னடான்னு கேட்டா, புதுவருடத்தில் சுத்தமாக இருக்கனுமாம், அதுபோல் சரக்கு மீதி இருந்தாலும் குடிக்கமாட்டார்கள்.
அதன் பிறகு அங்கிருந்து கிளம்பி வந்து மேரீஸ் கார்னரில் இருக்கும் நண்பன் கடைக்கு முன்னாடி கேக் வெட்டி அருகில் இருக்கும் சர்ச்சுக்கு வரும் பிகருங்களுக்கு ஹேப்பி நியு இயர் சொல்லி கேக் கொடுத்து கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

சிங்கபூரில் இருந்து போன் கால் வந்தது முதலில் பேசியது அப்துல்லா, அண்ணாச்சி பதிவர் சந்திப்பில் இருக்கும் பொழுது போன் செய்திருக்கிறார், நண்பர்கள் ஜோசப்பு,ஜெகதீசன்,கோவி, அத்திவெட்டி ஆகியோரும் மற்ற நண்பர்களும் வாழ்த்து சொன்னார்கள்.

அப்துல்லா போன் செஞ்சதும் அண்ணே உங்களை பற்றி பெருமையா பேசிக்கிட்டு இருந்தேன் நண்பர்களோடு என்றார்... அவ்வ்வ் அப்ப ஒன்னும் பேசவில்லை என்று சொல்றீங்க என்றேன்.ஹி ஹி ஆமான்னே என்றார், எங்களுக்கு தெரியாதா நம்மை பத்தி அப்படி பேச ஒன்னும் இல்லைன்னு, பின் அண்ணாச்சியிடம் இருந்து போன் வாங்கி ஜோசப்பு மச்சி வீட்டில் பாட்டி, தாத்தா,தாத்தாவோட பேத்தி எல்லாம் நலமா என்று விசாரிக்க ஆரம்பித்தான் மாப்பி ஒரே ஒரு டவுட் என்றேன் என்னடான்னான், போன் உன் போன் இல்லைதானே என்றேன் ஆமான் டா எப்படி கண்டுபிடிச்சே என்றான், ம்ம்ம் ங்கொய்யால ISD யில் ஓசி போனுன்னாதானே தாத்தாவில் இருந்து நலம் விசாரிப்ப என்றேன்... ஹி ஹி என்றே போனை அப்துல்லா அண்ணாச்சிக்கிட்ட கொடுத்தான், பேச ஆரம்பிக்கும் பொழுதே ஒரு உறுதிமொழி வாங்கிக்கிட்டு தான் பேச ஆரம்பிச்சேன்... பேசி முடிக்கும் வரை பாட்டக்கூடாது என்று:)

புத்தாண்டு சபதம்:

ஆசிப் அண்ணாச்சி சில வாரங்களுக்கு முன்பு எலேய் குசும்பா தமிழ்மண விருதுக்கு உன் பதிவை பரிந்துரை செய்துட்டியா என்றார், ம்ம் செஞ்சுட்டேன் அண்ணாச்சி என்றேன், எந்த எந்த பிரிவில் என்றார்? எனக்கு தூக்கிவாரி போட்டது, என்னது எந்த எந்த பிரிவிலா? அவ்வ் அண்ணாச்சி எனக்கு எல்லாம் ஒரு பிரிவில் ஒரு பதிவை பரிந்துரை செய்வதே பெரும் விசயமாக இருக்கு, நீங்க என்னடான்னா எந்த எந்த பிரிவில் என்று கேட்குறீங்க என்றேன், நானும் கொஞ்சம் தேடி பார்த்தேன் வேற பிரிவில் பரிந்துரை செய்வது போல் பதிவு எல்லாம் இல்லை அண்ணாச்சி, வேண்டும் என்றால் அடுத்த முறை மொக்கை, மரணமொக்கை என்று இருபிரிவுகள் இருந்தால் இரண்டு பதிவுகளை பரிந்துரை செய்யலாம் என்றேன். அவரும் விடாபிடியாக எலேய்
நீ மழை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தியேடா அந்த பதிவை நினைவுகள் பிரிவில் பரிந்துரை செய்யலாமே என்றார், அது நல்லாதான் இருந்துச்சு என்றார்... இல்ல அண்ணாச்சி கார்ட்டூன் பிரிவில் மட்டும் தான் பரிந்துரை செய்திருக்கிறேன் என்று சொல்லியபிறகு ஒரு முடிவு எடுத்தேன். அதை புதுவருடம் உறுதிமொழியாக மாத்திக்கிட்டேன்.

இந்த வருடம் அண்ணாச்சி நினைவு வைத்திருந்தது போல் தப்பு தவறிக்கூட ஒரு பதிவையும் எழுதிடக்கூடாது, மொக்கை மட்டுமே நம்ம நோக்கமாக இருக்கனும் என்று முடிவு செய்திருக்கிறேன். வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!