Sunday, July 12, 2009

ஜ்யோவ்ராம் சுந்தரின் அத்துமீறல்+ அராஜகம்

பதிவு டெலிட்டட்!!! (இப்ப இதுதான் பேசன் என்பதால் நானும்!!!)


மாமா பிஸ்கோத்து!!!
டிஸ்கி: தமிழ்மணம் புள்ளிவிபரம்மொத்தப் பதிவுகள் : 5490
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 278
(இது புதுசு) ஒரு நாளில் எழுதப்பட்டு டெலிட் செய்யப்பட்ட இடுகைகள்:10020

Sunday, July 5, 2009

சாரு புத்தகம் ஏன் எனக்கு வேண்டாம்?

"சென்னை 2 சிங்கப்பூர்"
"வாங்க பிரபலமாகலாம்"
"உங்கள் எழுத்துகள் பரவலாக சென்றடைய"

இவை எதுக்குன்னு சரியா முதலில் சொல்லும் ஐந்து நபர்களுக்கு 250ரூபாய்க்கு புத்தகம் பரிசுன்னு தமிழ்வெளி அறிவிச்சு இருந்தது.

அதுக்கு நானும் ஒரு மெயில் அனுப்பி இருந்தேன் போனா போகுதுன்னு நமக்கும் பரிசு கொடுத்து இருக்காங்க மொத்தம் 8 பேரை வெற்றி பெற்றவர்களாக அறிவிச்சு இருக்காங்க. கடைசியா நம்ம பேரு. எப்பொழுதும் கடைசி இடம் எனக்குதான் என்று ரிசர்வ் செஞ்சு வெச்சு இருப்பாங்க போல எங்கேயும்.

1. டி.சுரேஷ்குமார்
2. அருணா
3. லக்கிலுக்
4. சென்பகராமன் பி.வி
5. முத்தமிழ்செல்வன்
6. தருமி
7. நா.ஜெயசங்கர்
8. குசும்பன்

அதுக்கு பரிசாக சாருவின் காமரூப கதைகளை அனுப்பிவிடலாமா என்று
நண்பர் கேட்டதுக்கு அய்யா ராசா அப்படி ஏதும் செஞ்சுடாதீங்க ஸ்கூல் படிக்கும் பொழுதுதான் செக்ஸ் புக்க புத்தகத்துக்குள் ஒளிச்சு வெச்சு இருந்தான், கல்யாணம் ஆகியும் நம்ம பய இன்னும் திருந்தவில்லை போல,
பார்சலில் வாங்கி எல்லாம் படிக்கிறான் என்று நினைச்சு மனசு ஒடிஞ்சு போய்விட போறார் என்றேன்!

ஆகையால் தான் சாருவின் காமரூப கதைகள் வேண்டாம் என்றேன். சரிதானே:)))

குற்ற உணர்ச்சி + பதிவர்சந்திப்பும்

பதிவர் சந்திப்பு என்றாலே அவரை சந்திக்க இயலாமல் போனது பற்றியும் என் அலட்சியம் பற்றியும் தான் குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது. சிங்கையில் இருந்து அவர் வரும் முன்பே நண்பன் மூலம் அண்ணன் வருகிறார் பார்த்துக்க என்றான். சரி என்றேன் வந்ததும் போன் செய்தார் அவர்கள் சொந்தகாரர் வீட்டில்தான் தங்கி இருக்கிறேன் பார்க்கலாம் என்றார், அதன் பிறகு போனிலும் சாட்டிலும் மட்டுமே பேசிக்கிட்டு இருந்தோம், பல சமயம் அவராகவே போன் செய்தார் வெளியில் ஹோட்டலுக்கு போகலாம் என்றார், ஏனோ சந்திக்கமுடியவில்லை, என் கல்யாணநாள் அன்றுகூட போன் செய்து வாழ்த்து சொல்லிவிட்டு ட்ரீட் தருகிறேன் குடும்பத்தோடு வாங்க என்றார் அன்றும் முடியவில்லை . திரும்ப நான் போன் செய்திருக்கனும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் போன் செய்யமுடியாமல் போய்விட்டது. அத்தனை மாதத்தில் நானாவது அவரை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கனும் அதுவும் செய்யவில்லை, திரும்ப போன் செய்தாவது எங்கயாவது சந்திக்கலாம் என்று சொல்லி இருக்கனும் அதுவும் செய்யவில்லை ஏன் என்று தெரியவில்லை. அது எதனால் என்று ஆயிரம் காரணம் கண்டு பிடித்து காரணத்தை காட்டி தப்பிக்கலாம் என்றாலும் காரணம் எதுவும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை என்னை மன்னியுங்கள் வடுவூர் குமார் அண்ணாச்சி! உங்களிடம் அதன்பிறகு பேசினாலும் அடிக்கடி இது நினைவுக்கு வருகிறது. இங்கு நடந்த பதிவர் சந்திப்பு பற்றி கூட எழுத மனம் இல்லாமல் இருந்ததுக்கு இதுதான் காரணம்.

சில வாரங்களுக்கு முன்பு புதிய பதிவர்கள் சந்திப்புக்கு மாலை ஆறு மணிக்கு கராமா பார்க்கில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, வழக்கம் போல் என்னுடைய புது மொபைலான i-mate செத்துப்போச்சு, (ஓசியில் கொடுத்தாலும் இதை வாங்காதீங்க) பதிவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. சரி சமாளிச்சுக்கலாம் என்று நான் என் நண்பர் சிவராமனும் பஸ் புடிச்சு கராமா பார்க்குக்கு சரியாக 6 மணிக்கு வந்தோம், அங்கு ஏற்கனவே கண்ணா,வினோத், கலை, சுந்தர்ராமன், ஆகியோ அங்கிருந்தார்கள், பார்த்ததும் தெரிஞ்சுவிட்டது இவர்கள்தான் புது பதிவர்கள் என்று, பின் அய்யனார், ஆசாத், அசோக்,அவருடைய நண்பர், பின் நாகா, செந்தில்வேலன், பிரதீப் மற்றும் லியோ சுரேஷ் ஆகியோருடன் சந்திப்பு துவங்கியது.

சுந்தர்ராமன் கொண்டு வந்திருந்த மசால்வடையை சாப்பிட்டுக்கிட்டே பேசிக்கிட்டு இருந்தோம், அய்யனார் கட்டுடைப்பு பற்றி போட்ட மொக்கை தாங்க முடியாமல் கலையும், பிரதீப்பும் ஜூஸ் வாங்கி வருகிறோம் என்று கிளம்பியவர்கள் ஒரு மணி நேரம் கழித்து வந்தார்கள் அப்பொழுதும் அய்யனார் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்க வேறு வழி இன்றி அமர்ந்தார்கள்.

மணி 8.30 ஆகிவிட வினோத் அலைன் போகனும் என்பதால் சீக்கிரம் முடிச்சோம். அய்யனார், ஆசாத் இருவரை தவிர அனைவரும் புதியவர்கள்
புதிய பதிவர்களை பார்ப்பது இதுதான் முதல் முறை. மிகவும் நல்ல முறையில் நடந்து முடிந்தது.

கலந்துக்கொண்டவர்கள்

கலந்துகொண்ட பதிவர்கள் -
1. அய்யணார் 2. ஆசாத் 3. கண்ணா4. சுந்தர்ராமன்5. வினோத் கெளதம்6. பிரதீப் 7. செந்தில்வேலன்8. சிவராமன்9. கலையரசன் 10. லியோ சுரேஷ்
11 அஷோக் குமார்,12. நாகா,13. ஜெயக்குமார்

*****************
அடுத்த சந்திப்பு இராகவன் நைஜீரியா அவர்களால் நடந்தது, நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு போகும் வழியில் துபாய் வந்ததால் இந்த சந்திப்பு நடந்தது. ஹோட்டலுக்கு வந்ததும் போன் செய்தார் ஆபிஸில் கிளைண்ட் கூட மீட்டிங் என்று சொல்லிட்டு அப்படியே எஸ் ஆகி அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றேன் பின் அவர்களை அழைத்துக்கொண்டு கோல்ட் சூக் அழைத்து சென்று நகை வாங்கிக்கொண்டு பின் ரூமில் விட்டுவிட்டு திரும்ப அலுவலகம் வந்தேன், மாலை 7 மணிக்கு பதிவர்களை சந்திக்கலாம் என்று இராகவன் சொல்லி இருந்தார் அதன் படி நானும் சுந்தர் ராமன் இருவரும் சென்றோம், அங்கு ஏற்கனவே வந்திருந்த கலை தூரத்தில் நாங்கள் தூக்கி வரும் பார்சல்களை பார்த்துவிட்டு திரும்பி நின்னுக்கிட்டு கிட்டக்க போனதும் அப்பொழுதுதான் பார்த்த மாதிரி மெதுவாக ஓடி வந்து வடை இருந்த பையை மட்டும் வாங்கிக்கொண்டார். (நாலு வடை மிஸ்ஸிங்).


பின் இராகவனுக்கு கேமிராவும், சட்டையும் வாங்க சென்றோம் Sharaf DGயில் வாங்கி கொண்டு இருக்கும் பொழுதே ஆசாத் வந்துவிட அவசர அவசரமாக கிளம்பி போனோம், ஹோட்டலுக்கு அருகில் வந்துவிட்டோம் என்று நினைத்து ஒரு பத்து கிலோ மீட்டருக்கு முன்னாடியே காரை பார்க்கிங் கண்டதும் நிறுத்திவிட்டார் சுந்தர், பிறகுதான் தெரிஞ்சுது அது என் நடை அழகை ரசிக்க நடந்த சதின்னு, பதினாறு வயதினிலே கமல் மாதிரி இடுப்பில் இருந்த மூச்சுப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் நடந்ததை பார்த்து ரசிக்க கலையின் சதியினால் சுந்தர் செய்தது என்று பிறகு தெரிஞ்சுக்கிட்டேன்.


நாங்கள் அங்கு போன பொழுது பிரதீப்,கண்ணா,நாகா ஆகியோரும் வந்திருந்தார்கள் இராகவன் மகன் அரவிந் கூட அனைவரும் பேசிக்கிட்டு இருந்தார்கள். பின் அபுஅப்ஸர் வந்தார். இராகவன் அவர் இருக்கும் நைஜீரியா பற்றி சொன்னார் போனா அந்த ஊருக்குதான் போகனும் என்று முடிவு செஞ்சுட்டேன் ஏன்னா நான் அங்க போனா அங்க நான் தான் வெள்ளைகாரனாம்.


இராகவன் கூட முன்பு வேலை பார்த்த நண்பர் ஒருவர் வந்திருந்தார் அவர் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு இருந்தார் இவர்களை ஒருவரை கூட இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையா என்று, அவருக்கு ஆச்சரியம் முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இத்தனை பேரா என்று? அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி???


டிஸ்கி: மகிழ்ச்சியான செய்தி திரும்ப என் மொபைல் செத்துபோனது அதனால் அதில் இருந்த நம்பர் அனைத்தும் போய்விட்டது, திரும்ப மொக்கை போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங்க நம்பரை கொடுக்கலாம். அல்லது போன் செய்யலாம்:)

Thursday, July 2, 2009

பதிவர் சந்திப்பு கார்ட்டூன்ஸ் சென்னை + துபாய்







கீழே இருப்பது துபாயில் நடந்த சந்திப்பு போட்டோ

வினோத் ஏன் அலைன் கைப்புள்ள என்று என்னிடம் கேட்காதீங்க அப்புறம் அவரை அலைனில் நாலு அரபி பசங்க அடிச்சதையும் அப்புறம் வாட்டர் சர்விஸ் செஞ்சு விட்டதையும் பற்றி சொல்லவேண்டி இருக்கும் ஆகையால் என்னிடம் எதையும் கேட்காதீங்க!

Tuesday, June 30, 2009

வயல்வெளியில் நொந்தழல் கவி தோன்றும் லைவ் சாட்! (காமெடி ஷோ)

டிஸ்கி: இந்த பதிவை ரசிக்கனும் என்றால் உங்களுக்கு தமிழ்வெளியும் சிங்கை பதிவர்களும் இணைந்து நடத்தும் போட்டி பற்றி தெரிஞ்சிருப்பது அவசியம் (இங்கே கிளிக்கவும்), அதுபோல் சில நாட்களுக்கு முன் ரவியின் சாட்டிங் பற்றியும் தெரிஞ்சு இருக்கனும்.

இனி.............

குழிழ்மணம் ஒரு ஆண்டாக போட்டி அறிவிப்பு செஞ்சு ,அதை இரண்டு வருடமாக நடத்தி, பரிசை மூனுவருடம் கழிச்சு கொடுத்ததில் இருந்து ஒவ்வொரு திரட்டியும் பரிசு, போட்டின்னு அறிவிக்கிறாங்க. திரட்டி ஓனர்ஸ் எப்படிடா நம்ம திரட்டியை பேமஸ் ஆக்குவதுன்னு பாயபோட்டு பிரான்டிக்கிட்டு இருக்காங்க அதுபற்றி ஒரு கற்பனை...

வயல்வெளி ஓனர் மழலி தன் நண்பர் நொந்தழல் கவி கூட பேசுகிறார்

மழலி: நொந்தழல் கவி என்னய்யா இது புதுசு புதுசா திரட்டி ஆரம்பிக்கிரானுங்க விரட்டி.காம், கொல்லை தமிழ்.காம், குழிழர்ஸ்.காம் என்று ஆரம்பிச்சு நீங்கதான் இந்த வார வெள்ளைகாரன், ஆஸ்திரேலியா காரன், இந்த வார தொப்பி உங்களுக்குதான், இந்த வார குரீடம் உங்க தலையில்தான் அப்படி இப்படின்னு தலைப்பு வெச்சு என்ன என்னமோ செய்கிறானுங்க நாம ஏதும் செய்யனும் என்ன செய்யலாம் சொல்லு.

நொந்தழல்: ஆமாம் மழலி இப்ப எல்லாம் எழுதும் அனைவருக்கும் ஒரு பத்து பின்னூட்டமாவது கன்பார்ம் இப்ப எல்லாம் நானே எனக்கு பின்னூட்டம் போட்டுப்பது இல்லைன்னா பார்த்துக்குங்களேன் , ஒவ்வொரு திரட்டி ஆட்களும் எங்க கருவி பட்டைய நிருவினா உங்க போட்டோ எல்லார் பிளாக்கிளும் தெரியும், எங்க கூட இனைஞ்சா சோப்பு டப்பி இனாம் என்று எல்லாம் பின்னூட்டம் போட்டு விடுறாங்க, நாம என்ன செய்வது? கிளு கிளுப்பா ஏதும் செய்யனுமே! கொரிய பொண்ணுங்க பற்றி நான் வேணும்னா எழுதவா?

மழலி: ஆணிய புடுங்கவேண்டாம், நீதான் டெக்னிக்கலானா ஆளாச்சே அதுபற்றி ஒரு வயல்வெளியில் லைவ் சாட்டிங் வெச்சுட்டா என்ன?

நொந்தழல் கவி: சூப்பர் ஐடியா! அப்படியே செய்யுங்க.

வயள்வெளியில் ஒரு விளம்பரம் ”இலவசமாக கிடைக்கும் சுண்டல்களை வாங்குவது எப்படி? ” ” கூட்டம் அதிகமாக இருந்தாலும் தீர்ந்து போவதுக்கு முன்னாடி வாங்குவது எப்படி”எங்கு எங்கு இலவச சுண்டல் கிடைக்கு என்ற விவரங்கள் தெரியனுமா, நொந்தழல் கவி கூட ஞாயிறு காலை 11 மணிக்கு சாட்டுக்கு வாங்க” என்று விளம்பரம்.

காலை ரொம்ப உற்சாகமாக குளிச்சுட்டு மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்ட நொந்தழல் கவி சிஸ்டம் முன் உட்காந்து ஆன் லைன் சாட்டிங் விண்டோவையே பார்த்துக்கிட்டு இருக்கார் சரியாக 11.15 மணி ஆச்சு யாரையுமே கானும் ஒரே ஒரு ஆள் வருகிறார் எங்கு சுண்டல் வாங்கலாம்? எங்கு என்ன கிடைக்கும் என்று கேட்கிறார் பதில் சொல்லிக்கிட்டே கவி மழலிக்கு போன் செய்கிறார், என்னை 11மணிக்கு வர சொல்லிட்டு எங்கய்யா போய்ட்டீர் பாருங்க ஒரு ஒரு ஆள்தான் சாட்டிங்குக்கு வந்திருக்கான் சீக்கிரம் இங்க வாங்க ஏதாச்சும் செய்யனும்...

மழலி: யோவ் உன் கூட சாட்டிக்கிட்டு இருப்பதே நான் தான், இத விட்டுவிட்டு நான் எங்க வருவது?

நொந்தழல் கவி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

திடிர் என்று மூன்று நான்கு பேர் சரமாரியாக கேள்வி கேட்கிறார்கள், அப்பாடா புரோகிராம் சக்ஸஸ் ஆகிவிட்டது என்று கவி ரூமுக்கு சந்தோசத்தில் மழலி ஓடிவருகிறார்,சிஸ்டத்தை பார்த்து டரியள் ஆகிறார்...

(நொந்தழல் கவியே பல பெயர்களில் சாட்டிங் அவருடனே செஞ்சுக்கிட்டு இருக்கார்)

புது ஆள் ஒருத்தர் சாட்டிங்கில் வருகிறார்... ஆஹா லாகின் ஆயிட்டான் என்னமோ கேட்க போகிறான் என்று இருவரும் விண்டோவையே பார்க்கிறார்கள்.

sweet 16: வானா செக்ஸ் சாட்!

நொந்தழல்: ASL plz?

மழலி: யோவ் இது லைவ் சாட்டிங் யாராவது பார்த்துட போறாங்க

நொந்தழல்: ம்கும் அப்படியே பார்த்துட்டாலும் இதுவேலைக்கு ஆவாது வேறு ஏதாவது செய்யனும் என்று யோசிக்கிறார்கள்.

அப்பொழுது பாவி.கண்ணன் கங்கை மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து பேசுறாங்க..விளையாடல் அமைப்பு சிறுகதை போட்டி அறிவிச்சு அது பெரும் வெற்றி பெற்றுடுச்சு அதுபோல நாமும் ஒரு போட்டி வைக்கிறோம் கலக்குறோம் என்று. அப்ப மழலி பாவி.கண்ணனுக்கு போன் போட்டு அண்ணே நீங்களும் போட்டி நடத்தப்போவதாக சொன்னாங்க நாங்களும் வயல்வெளி சார்பாக போட்டி வைக்கப்போறோம் இதுவரை யாரும் செய்யாததா வித்தியாசமாக செய்யனும் பரிசும் அதுபோல் பெருசா இருக்கனும் என்கிறார்.

பாவி.கண்ணன் தன் சகாக்களுடன் பேசும் பொழுது அங்கிருக்கும் நரி என் தலைவர் குஜினியுடம் ஒரு நாள் டின்னர் சாப்பிடலாம் என்று போட்டி வெச்சா என்ன என்று கேட்கிறார்? அவரை அமுக்கி போட்ட பின் அனைவரும் வயள்வெளியுடன் கூட்டணிக்கு சரி என்று சொன்ன பிறகு ஊத்துகேணி2009 என்ற தலைப்பில் குருத்தாய்வு போட்டி பரிசு கூடுவாஞ்சேரி டூ வண்டுவாஞ்சேரி தலைப்புகள் பின்னர் வரும் என்று சொல்லிவிட்டு , தலைப்புக்கா ஆர்வமாக காத்திருந்த மக்கள் அவர்கள் அறிவித்த தலைப்புகளை பார்த்து தலைதெறிக்க ஓடுகிறார்கள் ஓடுகிறார்கள் வாழ்கையின் எல்லைக்கே ஓடுகிறார்கள்

**************
தமிழகத்தில் பீர்க்கி,கரிசல்காரன்,பேதிமூலகிருஷ்ணன்,துன்பூ,குப்துல்லா எல்லாம் ஒன்னு சேர்ந்து ஒரு மீட்டிங் ரகசிய இடத்தில் கூட்டம் போடுகிறார்கள்

பீர்க்கி: எங்கபோனாலும் போட்டி , தொடர்பதிவுன்னு துரத்துறாங்கப்பா. ஏதாவது செஞ்சு மக்களை மிரட்டனும்..

பேதிமூலகிருஷ்ணன்: ஆமாய்யா இந்த பசும்பன் கூட புக்கு வாங்கு அதுவாங்கு இதுவாங்குன்னு தொல்லை கொடுக்கிறான் ஏதாவது செய்யனும் எல்லோரும் அரண்டு போகனும்...
துன்பூ: அதுக்கு ஒரே வழி என்று ஒரு ஐடியாவை சொல்கிறார்...

அதன்படி குப்துல்லா வீட்டில் கூடும் பதிவர்கள் குனஜன்யாவிடம் இருந்து கவிதை எழுதி வாங்கி அதை குப்துல்லாவை விட்டு பாடசொல்கிறார்கள் கரிசல்காரன் கீபோர்ட். (ஒரு கொடுமை பத்தாதுன்னு மூனு கொடுமை தாங்குமா இந்த உலகம்)

கரிசல்காரல்: லாலாலாலா லலாலா லா(வாசிக்க ஆரம்பிக்கிறார்)

பீர்க்கி: சகா இங்கயுமா லாலா லாலா வேறு ஏதும் வாசி சகா என்று சொல்லிவிட்டு காதில் பஞ்சை வெச்சுக்கிறார்...

குப்துல்லா பாடி முடிஞ்சதும் வீட்டு காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டு குப்துல்லா போய் கதவை திறக்கிறார் அங்க ஒரு பத்து பேர் நிற்கிறார்கள் அதில் இருந்து ஒரு ஆள் முன்னாடி வந்து பாட்டு பாடியது யாருன்னு கேட்கிறார்

பேதிமூலகிருஷ்ணன் குப்துல்லான்னு போட்டு கொடுக்க... ஸ்வீட் எடுத்து கொடுக்கிறார் அவரிடம்... ரொம்ப நாளா இழுதுக்கிட்டு இருந்த பாட்டி உங்க பாட்டை கேட்டு கபால மோட்சம் அடைஞ்சுட்டு ரொம்ப நன்றிங்கோ என்று சொல்லிவிட்டு அவருக்கு மாலை எல்லாம் போட்டு மரியாதைசெய்துவிட்டு போகிறார்கள்...
இன்னும் வரும்..........:)

Sunday, June 28, 2009

கோலபாரதி, பாரு,கொக்கி,குதிஷா தோன்றும் லூசுப்பையன்

இது ஆனந்தவிகடனில் வரும் லூசுப்பையன் மாதிரி யாரும் தப்பா எடுத்துக்காதீங்க மக்கா...

கோலபாரதி நன்றாக தூக்கத்தில் இருக்கிறார் கோ.க.ச தலைவர் கோசிப் போன் செய்கிறார்...

தூக்கத்தில் இருந்த கோலபாரதி.. என்ன கோசிப்? காலைலங்காட்டியும் போன் செஞ்சு எழுப்பிவிடுறீர்.

கோசிப்: யோவ் தல ரொம்ப சந்தோசமான நியுஸ்யா, இது தெரியாம தூங்கிக்கிட்டு இருக்க!

கோலபாரதி: என்ன கோசிப் திரும்ப நீர் துபாய் போக போகிறீரா?

கோசிப்: அது இல்லய்யா அப்படி நடந்தா அது உனக்கு சந்தோசம், அங்கிருக்கும் பசும்பனுக்கு துக்கமான செய்தி. நான் சொல்லப்போகும் செய்தி அனைவருக்கும் சந்தோசமான செய்தி!

கோலபாரதி: அப்படி என்னய்யா சந்தோசமான விசயம்?

கோசிப்: உன் பிளாக்கை யாரோ பிரஞ்சுகாரான் ஹேக் செஞ்சுட்டான். இனி நீ பதிவு போட முடியாதே...

கோலபாரதி: என்னது பிளாக்கை ஹேக் செஞ்சுட்டாங்கலா?

கோசிப்: ஆமாய்யா ரொம்ப சந்தோசமாக இருக்கேன், ரொம்ப நாள் வேண்டுதல் நிறைவேறிட்டு, உனக்கு கோ.க.ச சார்பாக அலகு குத்த போறோம்.

கோலபாரதி:கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

(உலகம் முழுவதும் இருக்கும் பதிவர்கள்SMS செய்தும், போன் செய்தும் கோலபாரதிக்கு வாழ்த்துசொல்லிக்கிட்டு இருக்காங்க)

************
ஷார்ஜாவில் இருந்து குன்ஷி போன் செய்கிறான்...

குன்ஷி: தல உன் பிளாக்கை ஹேக் செஞ்சவன் போன் செஞ்சானா தல?, சொல்லு தல உன் பிளாக்கை திரும்ப கொடுக்க எவ்வளோ கேட்டான்?

கோலபாரதி: அவன் ஒருலட்ச ரூபாய் கேட்கிறான் குன்ஷி:(

குன்ஷி: கவலையவிடு தல அவன் போன் நம்பர் அக்கவுண்ட் நம்பர் கொடு தல! நான் பார்த்துக்கிறேன்

கோலபாரதி: அடேய் அப்பரண்டிஸ் இவ்வளோ நாளா எங்கடா போய் இருந்த ....

குன்ஷி: ரொம்ப உணர்சிவசப் படாத தல, முதலில் மேட்டரை முடிச்சுட்டு பேசுறேன்...

கோலபாரதி:8545774343 (அக்கவுண்ட் நம்பர் சொல்கிறார் )

குன்ஷி: கவலைய விடு தல நாங்க ரெண்டு லட்சமா அனுப்பிடுறோம் மாசா மாசம் அவனுக்கு சம்பளமும் தந்துடுறோம் ஆனா உன் பிளாக்கை திருப்பி தரவேண்டாம் என்று சொல்லிடுறோம். இந்த வாரம் முழுவதும் கொண்டாட்டம் தான்.

கோலபாரதி: ங்கொயால....

**********
சிங்கபூரில் இருந்து மோர்ராஜ் போன் செய்கிறான்...

மோர்ராஜ்: தல நான் சாப்ட்வேரில் பெரிய ஆளு உன் பிளாக்கை ஹேக் செஞ்சவன் ஐடி எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டேன் அவன் பேசினா அவனிடம் நைசா பேசி அவனோட போட்டோவை மட்டும் கேட்டு வாங்கு தல மீதிய நான் பார்த்துக்கிறேன்.

கோலபாரதி: நீ ஒருத்தவன் தான்யா நல்லவனா இருக்க... அவன் போட்டோ கிடைச்சுதுன்னா அதை வெச்சு இண்ட்ர்நேசனல் போலீஸில் கேஸ் கொடுக்கதானே போற? சைபர் கிரைமில் அவனுக்கு பெரிய தண்டனையா வாங்கி தரனும்...

மோர்ராஜ்: அட நீங்க வேற தல இதுவரைக்கும் ஒரு 5 லட்ச ரூபாய் கலெக்சன் ஆகியிருக்கு அவனுக்கு தங்க சிலை வைக்கனுமாம், சிலை செய்ய போட்டோ வேணுமே அதான்...

கோலபாரதி: அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நீயுமாஆஆஆஆ

(ரொம்ப சோகமான கோலபாரதி அண்ணன் குகுந்துவை பார்த்து விபரத்தை சொல்கிறார் ஒன்னும் பிரச்சினை இல்லை உன் பிளாக் தானா கிடைக்க வழி இருக்கு என்று காதில் ஒரு ரகசியத்தை சொல்கிறார்)

கோலபாரதி அதன்படி ஒரு அறிக்கை விடுகிறார் ஒரு பிளாக்தானே ஹேக் செய்யப்பட்டுவிட்டது அதனால் என்ன! நாளை முதல் கோலபாரதி. காம், கோலபாரதி.நெட், கோலபாரதி.ஓஆர்ஜி, கோலபாரதி.இன், கோலபாரதி.gov என்று பல வெப்சைட் உருவாக்கி ஒன்னு ஒன்னுலேயும் என் போட்டோவோடு விடுபட்டவை, அடிபட்டவை, உதைபட்டவை என்று எழுதப்போறேன் முக்கியமா ஒரு சைட்டில் கவிதை மட்டும் எழுதப்போறேன் என்று அறிக்கை கொடுக்கிறார்.

அடுத்த 30 நிமிடத்தில் ஒரு பிரஞ்சு காரன் ஓடி வருகிறான் ... அவன் என்னமோ பேச அதை மொழிபெயர்க கோண்டு வருகிறார். தல தெரியா தனமா உங்க பிளாக்கை ஹேக் செஞ்சுட்டானாம் இனி இப்படி தப்பு நடக்காதாம் அதனால நீங்க பல வெப்சைட்டில் எழுதும் முடிவை மாத்திக்கனும் என்று கேட்கிறான், இல்லேன்னா கோ.க.ச ஆட்கள் இவனை கொன்றுவிடுவாங்களாம்.

கோலபாரதி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இம்புட்டு பாசக்கார பயபுள்ளைங்க இருக்காங்களா?

*****************
பாரு சோகமே உருவாக டாஸ்மாக்கில் உட்காந்து சரக்கடிச்சுக்கிட்டு இருக்கார் அங்கு வரும் அவரது தீவிர ரசிகர்கள் கொக்கியும், குதிஷாவும் என்ன தலைவரே ஏன் சோகமாக உட்காந்து தண்ணி அடிக்கிறீங்க, நீங்க படம் பாக்காம விமர்சனம் எழுதிவிட்டதாக குய்யனார் எழுதினதை நினைச்சு சோகமாக இருக்கீங்களா? சொல்லுங்க தலைவரே குய்யனாரை வூடு கட்டிவிடுவோம், கோசிப் உங்களை திட்டி எழுதினார் அவரை வீரப்பனா மாத்தியாச்சு சொல்லுங்க அதுபோல வேற யாரையும் மாத்தனுமா? உங்களை யார் என்ன சொன்னாங்க சொல்லுங்க அந்தர் செஞ்சுடுவோம் என்கிறார்கள்...



அதுக்கு பாரு சொல்கிறார் "இல்லப்பா இந்த தயமோகனுக்கு மட்டும் சினிமா சான்ஸ் கிடைக்குது, அமெரிக்கா போக சான்ஸ் கிடைக்குது நம்ம ஒரு பயபுள்ளயும் மதிச்சு கூப்பிடமாட்டேங்கிறானுங்களே".



கொக்கி: சினிமாவில் சான்ஸ் கிடைக்குனும் என்றால் நீங்க யாரோடயாவது நட்பு வெச்சுருந்திருக்கனும், தமிழ் பட ஆட்கள் அனைவரையும் திட்டுறீங்க குவாஜிக்கு நடிக்க தெரியலைன்னு சொல்றீங்க, பமல்ஹாசனுக்கும் நடிக்க தெரியலைன்னு சொல்றீங்க, கோலாவுக்கு படமே எடுக்க தெரியலைன்னு திட்டுறீங்க, கோலா எடுத்த ”சோதாமகன்” திரைப்படத்தை குப்பைன்னு திட்டுன்னா, கோலா அடுத்தபடத்துக்கு தயமோகனுக்கு சான்ஸ் கொடுக்காம உங்களுக்கு எப்படி கொடுப்பார்.



பாரு: இல்ல கொக்கி கோலாவோட கடைசி படம்மான ”நான் லூசு”வுக்கு நல்லபடியாதானே விமர்சனம் எழுதினேன்.



குதிஷா: இல்ல தலைவரே ”நான் லூசுவை” படிச்ச பலபேரு அது உங்களை பற்றிய பதிவுன்னு நினைச்சுக்கிட்டாங்க.



பாரு: சரி கொக்கி இப்ப என்ன செய்யலாம் சொல்லு...



கொக்கி: ”பாரு வேட்டி பறக்குதடான்னு” நான் உங்களை பத்தி எழுதுறேன்



பாரு: இல்ல கொக்கி இன்னும் பெருசா ஏதாச்சும் செய்யனும் இந்த தயமோகனையும் திட்டனும் அதே சமயம் அமெரிக்காவுக்கும் போகனும். தயமோகனை திட்டனும் என்றால் சும்மா திட்டமுடியாது...ஏதாவது ஒரு காரணம் வேண்டும், அதுக்கு ஒரே வழி லெட்டர் எழுதுவதுதான் இரு லெட்டர் எழுரேன் இந்த மப்புல எழுதினாதான் நல்லா திட்டமுடியும்...



குதிஷா: யாருக்கு எழுத போறீங்க தலைவரே?



எனக்கு நானே எழுதிக்கபோறேன் என்று சொல்லிட்டு பாரு ஒரு சுண்டல் பேப்பரில் எழுத ஆரம்பிக்கிறார்...
அன்புள்ள பாரு
”நான் தொன்னையில் கடந்த பத்தாண்டுகளாக வேலை வெட்டி இல்லாமல் அலைந்துகொண்டிருப்பவன்.(உங்களுக்கு கடிதம் எழுதும்பொழுதே தெரிந்திருக்கும் இருந்தாலும் ஒருமுறை சொல்லிவிடலாமே என்றுதான் சொல்கிறேன்.) உங்களை ஒருமுறை சந்தித்து பேசியதில் இருந்து அதன் பிறகு நேரில் சந்திக்க வாய்பு கிடைத்தும் பின்னங்கால் பிடறியில் பட ஓடி இருக்கிறேன். இந்த தயமோகன் நான் லூசுவில் வசனம் எழுதவே இல்லை அப்பொழுது அவர் பேனா நிப்பு உடைஞ்சு போச்சு அதனால் அவர் சொல்ல சொல்ல வேறு ஒருவர் எழுதினார், இதை நான் என் கண்ணால் பார்த்தேன். ஆனால் ”நான் லூசு”வில்அவர் வசனம் எழுதியதாக வந்தது. இது ஒரு மோசடி இதற்கு காக்கா புராணம் படி என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்.
இப்படிக்கு
பத்திரிநாத்



தயமோகனை திட்டு திட்டுன்னு திட்டி பதில் கடிதமும் எழுதிவிடுகிறார். கடைசியாக தயமோகனுக்கு தண்டனையாக காக்கா தயமோகன் மேல கக்கூஸ் போகட்டும் என்று தண்டனையும் கொடுக்கிறார்.



***********



பதிவர்கள் எல்லாம் கூடி நின்னு பேசிக்கிட்டு இருக்காங்க என்ன ஆச்சு வைத்தியகாரனுக்கு என்று, (வைத்தியகாரன் பாருவை திட்டி எழுதின பதிவு எல்லோருக்கும் புரிஞ்சுடுச்சாம் அதான் எல்லோரும் வைத்தியகாரனுக்கு எதோ பிரச்சினைன்னு பேசிக்கிட்டு இருக்காங்க.)




அங்கு வரும் குய்யனார் வைத்தியகாரனிடம் பிரச்சினை இதுதான் பாருவுக்கும் பிஸ்கோத்து வேண்டும் தயமோகனுக்கும் பிஸ்கோத்து வேண்டும் இது பிஸ்கோத்துக்காக அவர்கள் போட்டுக்கும் சண்டை என்று விளக்கம் கொடுக்கிறார்.




அங்கு வரும் குரேஸ் கண்ணன் கொக்கியிடம் இப்படி தயமோகனை திட்டி எழுதிய பாருவை இந்த முறையாவது நீங்க ஆதரிக்காமல் இருக்கனும் என்கிறார்...




அங்கு வந்த அய்யோராம் சுந்தர் இது தப்பு வைத்தியகாரன் நீங்க பாருவை பார்த்து இப்படி சொல்லி இருக்ககூடாது என்கிறார் அவரு ஒன்னாம் வாய்ப்பாடு எல்லாம் படிக்கவில்லை என்று எப்படி நீங்க சொல்லலாம்? என்று கேட்கிறார்..



எல்லோரும் என்ன என்னவோ சொல்லிக்கிட்டு இருக்க அங்கு வரும் இளர்மதி பிரச்சினைய சரியா புரிஞ்சுக்கிட்டவன் குய்யனார் மட்டும் தான் இது பிஸ்கோத்துக்கான சண்டை இதில் நாம் தலையிடதேவை இல்லை என்கிறார்.



இதை தெரிஞ்சுக்கிட்ட ஏர்சிம் இரு பை முழுவதும் பிஸ்கோத்து வாங்கி வருகிறார் ஒரு பைய பாருவுக்கும் ஒரு பைய தயமோகனுக்கும் கொடுக்க சொல்லி பிரச்சினையை சுபம் ஆக்கிவிடுகிறார்.
டிஸ்கி: இந்த பதிவு புரியாதவர்கள் அண்ணன் பாலபாரதியின் இந்த பதிவையும், செகண்ட் பார்ட்டுக்கு அண்ணன் பைத்தியகாரன் அவர்களின் இந்த பதிவையும் படிக்கவும்.

Monday, June 15, 2009

ஒரு நல்லசெய்தி+ஒரு கெட்டசெய்தி...