Friday, January 14, 2011

சிறுத்தை விமர்சனம் + மரபை உடைக்காமல் ஒரு விமர்சனப்பதிவு...

சும்மா பரபரன்னு திரைக்கதையோட +நான்ஸ்டாப் “ஏ” கிளாஸ் காமெடி படம் பார்க்கனும் என்றால் சிறுத்தை பெஸ்ட் சாய்ஸ்.

ரெண்டு மூனு படத்துக்கு மிட் நைட் ஷோ காட்சிக்கு (1.15மணிக்கு) போய் வாங்கி வாங்கிட்டு வந்த அடியே மறக்காதப்ப சிறுத்தைக்கு போகலாமா வேண்டாமா என்று குழப்பத்திலேயே இருந்து கடைசியில் மன்மதன் அம்பு குத்தின புண்ணையும் ஒரு முறை பார்த்துக்கிட்டு தயங்கி தயங்கிதான் போனோம்..

சந்தானம் எண்ட்ரி ஆகி பேசும் டயலாக்கிலேயே வெட்டு போட ஆரம்பிச்சிடுறாங்க...படம் முழுக்க அவரும் கார்த்தியும் செய்யும் அலப்பறை செமயா இருக்கு. கிளைமேக்ஸ் வரை தியேட்டரில் நான் ஸ்டாப்பா சிரிப்பு சத்தம் கேட்டுக்கிட்டே இருந்தது. ரெத்தினவேல் பாண்டியனாகவும், ராக்கெட் ராஜாவாகவும் இவர் செய்யும் சேட்டை எல்லாம் அப்படியே அண்ணன் சூர்யா சிங்கத்திலும் , அபேஸ் பாண்டியனாகவும் நடிப்பதை பார்ப்பது மாதிரியே இருந்துச்சு. படத்தில் ஆந்திர வில்லனுங்க இல்லாமல் நம்ம ஊரு வில்லனுங்க மாதிரி மாத்தியிருந்தா இன்னும் அடி பட்டைய கிளப்பியிருக்கும்.

படத்தின் மைனஸ்
குளிர் ஜுரம் வந்தவன் மாதிரி கம்பளி போர்வைய போத்திக்கிட்டு வரும் வில்லனை பார்க்க சகிக்கவில்லை. ஒரு துவைக்காத பழய போர்வைய போத்திக்கிட்டு ராப்பிச்சைக்காரன் மாதிரி இம்சை செய்யிறான் என்றால் பவுடர் அடிச்ச பல்லி மாதிரி இந்த தமன்னா அடிக்கடி இடுப்ப காட்டி காட்டி எரிச்சலை கிளப்புது நமக்கு கொஞ்சம் கலர் கம்மியா இருந்தால்தான் புடிக்கும் போல. மத்தப்படி படம் பக்கா கமர்சியல்.

*****************

இனி மரபை மீறாமல் மற்றவர்கள் எழுதுவது போல் ஒரு பார்வை...

ஒருபுதுபடம் பார்த்தோம் என்றால் அதுக்கு முன் அந்த டைரக்டர் இயக்கிய, அந்த நடிகர் நடித்த படங்களை பற்றி ரெண்டுபத்தி எழுதிவிட்டு, இந்த படத்துக்குவருவதுதான் மரபு அதே மரபு இங்கேயும் கடைபிடிக்கப்படுகிறது...

பழயபடங்கள் ஒரு பார்வை:
பருத்திவீரன் படத்தில் அறிமுகம் ஆன கார்த்தி அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படியான படங்களில் எதுவும் நடிக்கவில்லை,ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் பருத்திவீரன் சாயல் இருந்தது... ஆனால் இந்த படத்தில் இரண்டுவேடங்கள், பல பெரிய நடிகர்களே அறிமுகம் ஆகி 20 படங்கள் கழித்துதான் இரண்டுவேடங்களில் நடிப்பார்கள்...சில நம்மால் நடிக்கவும் யோசிப்பார்கள், கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கிட்டு டபுள் ஆக்ட்டிங் என்று சொல்லிக்கிட்டவர்கள் பலர். ஆனால் இதில் கார்த்தி பாண்டியன் IPS ஆகவும், ராக்கெட் ராஜாவாகவும் உடல் மொழி( பாடி லாங்வேஜ்ஜை இப்படி சொல்லனுமாம்!), பேச்சு என்று அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

காப்பி அடித்தல்:

(உ (பிள்ளையார் சுழி) IMDB யே துணை)

ஒரு படத்தை பார்த்தோம் என்றால் அது எந்த எந்த படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டு இருக்கிறது என்று லிஸ்ட் சொல்வது முக்கியம், முக்கியமாக அந்த லிஸ்ட் கொரியன், ஈரானியன்,ஜப்பானியன், படமாக இருக்கவேண்டும். ) இந்த சிறுத்தையும் பல படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டு இருக்கிறது. பாண்டியன் போலீசாக வரும் காட்சிகள் “தி போலீஸ்” என்கிற ஆங்கிலபடத்தில் இருந்தும், பிக்பாக்ட் காட்சிகள் “தீப் & போலீஸ் “ படத்திலிருந்தும் காப்பியடிக்கப்பட்டு இருக்கிறது. சப்பானிய மொழி படமான “சுமோவோ சுசுக்கியாக” படத்திலிருந்து முடிவு காப்பியடிக்கப்பட்டு இருக்கிறது. “மை பை சைக்கிள் வீல்ஸ்” என்ற ஒரு ஈரானிய படத்தில் வரும் ஒரு உடைந்த சைக்கிள் வீல்மாதிரியே ஒரு சைக்கிள் வீல் கார்த்திக் குடியிருக்கும் வீட்டின் மூலையிலும் கிடக்கிறது. கதைகளை தான் காப்பியடிக்கிறார்கள் என்றால் படத்தில் வரும் பிராப்பர்டியையும் காப்பியடித்து படத்தில் வைக்கிறார்கள். இதற்காகதான் நான் தமிழ்படங்களே பார்ப்பது இல்லை.

டெக்னிக்கல் பகுதி:
படத்தில் எதுவும் புதுசாக முயற்சி செய்யாமல் அதே ஆஸ்பிட்டல் சீன், அதே பெரிய பெரிய கத்திய வெச்சிக்கிட்டு இருக்கும் வில்லனுங்க,பிக்பாக்கெட்டை லவ் செய்யும் ஹீரோயின், உடைஞ்ச பாலத்தில் தொங்கும் கிளைமேக்ஸ் சீன் என்று எல்லாமே அந்த காலத்து படத்திலிருந்து பார்த்துக்கிட்டு வருகிறோம். இதிலும் அது எல்லாம் இருக்கு ஆனால் திரைக்கதையில் பரபரன்னு வேகம் காட்டியிருப்பதாலும் காமெடியாக போவதாலும் நமக்கு போர் அடிப்பது இல்லை.

ஆணீயம் பெண்ணீயம் இந்துத்துவா
படம் முழுக்க சந்தானம் & கார்த்தி அடிக்கும் காமெடிகள் ஏ வகையை சேர்ந்தவையாக இருக்கிறது அதுக்கு எல்லாம் சென்சார் போர்ட் ஒன்னும் சொல்லாமல் இருந்துவிட்டு,கிளைமேக்ஸ் சீனில் தமன்னா வில்லனிடம் ராக்கெட் ராஜா மயிறை கூட புடுங்க முடியாதுன்னு சொல்லும் டயலாக் மட்டும் கட் ஆகிவெறும் சைலண்டாக சைகையில் வருகிறது, இதன் மூலம் ஆண் எவ்வளோ கெட்டவார்த்தைவேண்டும் என்றாலும் பேசலாம்ஆனால் பெண் ஒரு வார்த்தைக்கூட பேசக்கூடாது என்று இந்த சமூகம் அவளை அமுக்கிவைக்கிறது.


படத்தில் வரும் வில்லன் சாமியார்கள் கூட இருந்து கஞ்சா குடிப்பது போல் காட்சி வைத்திருப்பதன் மூலம் இந்துக்களின் மனசை புண்படுத்திவிட்டார். அதுபோல் வில்லன் காதில்,கழுத்தில் எல்லாம் ருத்ராட்ச மாலை போட்டுக்கிட்டு இருக்கிறார் இதன் மூலம் ருத்ராட்ச மாலை அணிந்தவர்களை எல்லாம்கெட்டவர்களாக சித்தரித்து இந்துக்களின் மனசை புண்படுத்திவிட்டார்.


வில்லனை கடையில் கையில் இருக்கும் சக்கரம் மூலம் கொல்கிறார் கார்த்திக். சக்கரம் விஷ்ணுவின் குறீயிடு. ஆகையால் தேவை இல்லாமல்அந்த சீனை வைத்து அதர்மத்தை அழிக்க இந்து கடவுளே வருவார் என்கிறமாதிரி காட்சி வைத்திருக்கிறார். ஸ்டேசனுக்கு வெளியில்அமர்ந்து மிரட்டும் ஆட்களில் 5 பேரில் 3 பேர் முஸ்லீம் ஆகவே அங்கேயும் தன்னுடைய இந்துத்துவா புத்தியை காட்டியிருக்கிறார்.

பஞ்ச் லைன் பகுதி
சிறுத்தை பாய்ந்து அடிக்கிறது
சிறுத்தை வசூலில் பாய்ச்சல்

Thursday, January 13, 2011

கலப்பட எழுத்தாளர் + டென்சன் மை லார்ட்





டென்சன் செய்யுறாங்க மை லார்ட்!


ரெண்டு நாள் ஷேவ் செய்யாட்டி பிச்சைக்காரன் மாதிரி ஆயிடுறேன்...ஆனா ஒரு வார தாடியோடயும் சிலர் மட்டும் அழகா இருக்கிறப்ப டென்சன் ஆவுது மை லார்ட்!




பொண்ணுங்கதான் ஜட்டி தெரியிறமாதிரி பேண்ட் போட்டுக்கிட்டு சுத்துதுங்க...பார்க்க கொஞ்ச நல்லாவும் இருக்கு, ஆனா இந்த மொன்ன பயலுங்களும் அதுமாதிரி பேண்ட் போட்டுக்கிட்டு சுத்தி டென்சன் செய்யிறாய்ங்க மை லார்ட்!



கார்க்குள்ள கை கால மடக்கி உட்காந்துக்கிட்டு கார் ஓட்டிக்கிட்டு போவதே கஷ்டமா இருக்கு, ஆனா அவன் அவன் காருக்குள்ளேயே என்ன என்னமோ செய்யிறத பார்க்கும் பொழுது டென்சன் ஆவுது மை லார்ட்!


பிரதோஷம் அன்னைக்கின்னு பார்த்து நம்ம ஆசிப் அண்ணாச்சி பிரியாணி போடுறேன் வரீயாடான்னு கேட்டு டென்சன் செய்யிறார் மை லார்ட்!



இவங்களை எல்லாம் அந்த "எழுத்தாளர்" புத்தகத்தை 10 வாட்டி படிக்க சொல்லி தண்டனை கொடுங்க மை லார்ட்!

Tuesday, January 11, 2011

எழுத்தாளர்கள் கார்ட்டூன் 12-11-2011














புத்தகம்போட & விற்க சில குறிப்புகள்!

கல்யாணம் ஆகி நாலு மாசத்திலேயே "என்ன விசேசம் இல்லீயா"ன்னு கேட்பது மாதிரி, ஒருத்தர் வலைப்பதிவு ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆயிட்டா...என்னாய்யா புக்கு ஏதும் போடலீயா என்று கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதுக்காக பதிவு எழுத ஆரம்பிக்கும் முன்பே எதிர்காலத்தில் எழுதப்போகும் புக்கின்னு எண்ணிக்கையை பொறுத்து அதன் விளம்பரத்தை போட பிளாக்கின் வலது மூலையிலோ, அல்லது இடது மூலையிலோ...அல்லது வாஸ்த்துப்படி ஈசானி மூலையிலோ கொஞ்சம் 5cm by 5cm க்கு காலியாக இடம் விட்டு வைப்பது நல்லது.

புத்தகம் உள்ளே என்ன எழுதப்போகிறோம் என்பதை விட...வெளியே அட்டைப்படமும், பின் பக்க அட்டையில் போட ஏதுவாக உங்கள் புகைப்படமும் கலக்கலாக இருக்கவேண்டியது அவசியம்.

பின்பக்க அட்டையில் போடப்போகும் உங்கள் புகைப்படம் எப்படியிருக்கவேண்டும் என்று முதலில் பார்த்துவிடுவோம்.

1) கேமிராவை நேருக்கு நேராக பார்க்க கூடாது.

2) ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈன்னு எல்லா பல்லும் தெரியிர மாதிரி இளிக்கக்கூடாது.

3) அதுக்காக உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு உராங்க் உட்டான் மாதிரி மூஞ்சை வெச்சிக்காம இருக்கனும்.

4) உடம்பை 45 டிகிரியும், தலையை லைட்டா 30டிகிரியும் திருப்பி அப்படியே ஸ்டைலா போஸ் கொடுக்கனும்.(பரிசல்காரனின் புகைப்படத்தை பார்க்கலாம்)

5) தலைவலி வந்தால் தலையை பிடிச்சிப்பது மாதிரி இல்லாமல் ஒரு விரலை மடக்கி அப்படியே ஸ்டைலாக கன்னத்தில் வைத்து போஸ்கொடுக்கனும்.

6) கண்ணாடி போட்டு இருந்தால் அதில் ஒரு பக்கம் பிரேம்மை இருவிரல்களால் ஸ்டைலாக பிடித்துக்கொள்ளலாம்.(டவுட் இருப்பவர்கள் கேபிள் புகைப்படத்தை பார்க்கவும்)

உங்களுக்கு வாசகர்கள் லட்சக்கணக்கில் இருந்தால் பதிப்பகங்கள் உங்களை தேடி வரும், இல்லை என்றால் கொஞ்சம் நீங்கள் செலவு செஞ்சு புக்கு போடுற மாதிரி இருக்கும்.

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விசயம்... புக்கு எழுத எடுத்துக்கிட்ட நாட்களை விட...புக்கு ரிலீஸ் செய்ய பிளான் செய்யும் நாட்கள் அதிகமாக இருக்கனும். யார் யாரை கூப்பிடனும், எப்படி கூப்பிடனும், எங்கே புத்தக ரிலீஸை வைக்கனும் என்று எல்லாம் பக்காவா பிளான் செய்யனும். ஏதும் ஒரு சினிமா பிரபலம் வருவது ரொம்ப முக்கியம்.

சரி புத்தகம் எல்லாம் பிரிண்ட் ஆகி வந்துவிட்டது அதை விற்க என்ன செய்வது?

புத்தக கண்காட்சியை ஒட்டி உங்கள் புத்தகங்கள் பிரிண்ட் ஆகி வருவது மாதிரி பார்த்துக்கவும்.

புத்தக கண்காட்சியில் உங்கள் புத்தகம் இருக்கும் ஸ்டாலுக்கு அருகிலிருக்கும் அக்கம் பக்கத்து கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரம் பார்த்து ஒரு பையனை அனுப்பி அண்ணே "அவரு" எழுதிய அந்த நாவல் இருக்கான்னு சத்தம் போட்டு கேட்கனும்...அவரும் இல்லை என்பார்...திரும்ப சத்தமாக ரொம்ப நல்லபுக்காம் வந்ததும் வித்துவிடுகிறதுன்னு சொல்றாங்கன்னு சத்தம் போட்டு சொல்லனும். (எப்படி சத்தம் போட்டு சொல்லனும் என்றால் களவானி படத்தில்...ஏஏஏஏஏ ராசு நம்ம பஞ்சாயத்து இல்ல பஞ்சாயத்து பால்டாயில குடிச்சிட்டானாம் என்று சொல்லுவாய்ங்களே அதுமாதிரி சொல்லனும்) திரும்ப அதுமாதிரி சிறிது இடைவெளி விட்டு, வேறு ஒரு ஆளை அனுப்பனும்.

கடையில் இருக்கும் பையனும் கொஞ்சம் சூதனமாக இருக்கனும், ஒருவர் 20 புக்கு வாங்கியிருந்தால் அதை பில் போடும் பொழுது சேஞ் இல்லை என்று சொல்லிட்டு உங்க புக்கையும் சேர்த்து கொடுக்கும் திறமை உள்ளவராக இருக்கனும். இல்லையென்றால் பில் போடும் பொழுது 20புக்குக்கு நடுவில் உங்க புக்கையும் வெச்சி 21க்கு பில்லு போடும் திறமை இருக்கனும். சரி அப்படியும் புக்கு விக்கவில்லை என்றால்...வலைப்பதிவர்கள் கல்யாணம் நடக்கும் பொழுது ஒரு கிப்ட் பேப்பரில் உங்க புக்கை வைத்து பேக் செய்து அவர்களுக்கு கிப்டாக கொடுத்துவிட்டு ஓடிவந்துவிட வேண்டும்.

எங்கயாவது சந்திப்புக்கு போகும் பொழுது யாராவது ஒருவர் தெரியாத்தனமாக பாஸ் உங்க புக்கு கிடைக்கவே இல்லை எங்க கிடைக்கும் என்று கேட்டுவிட்டால், உடனே உள்ளே வெச்சிருக்கும் புக்கை எடுத்து நீட்டிவிடக்கூடாது, முதல் எடிசன் பிரிண்ட் ஆகி வித்துட்டு.இப்ப செகண்ட் எடிசன் பிரிண்ட் செய்ய ஆர்டர் கொடுத்திருக்காங்க ஒரு வாரத்தில் வந்துடும்...உங்க அட்ரஸ் கொடுங்க வந்ததும் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அவர் அட்ரஸை மறக்காமல் வாங்கி வெச்சி, ஒருவாரம் கழித்து அவர் அட்ரஸ்க்கு போஸ்ட் செய்வதுவிடவேண்டும்.

இப்படி எல்லாம் செஞ்சால் நிச்சயம் வெற்றி நமதே!


Note: இவ்விடம் குறைந்த செலவில் புத்தக அட்டைகள், விளம்பர தட்டிகள், Flash விளம்பரங்கள் செய்து தரப்படும். புகைப்படங்களை மேலும் அழகுபடுத்தியும் தரப்படும்.

Note2: என்னுடைய கவிதை தொகுப்பு ஒன்றும், குறுநாவல் இரண்டும், ஒரு சிறுகதை தொகுப்பும், ஒரு நான்லீனியர் இலக்கியமும் அடுத்த வருட புத்தககண்காட்சியில் கிடைக்கும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பதிவும் இங்கே செய்யப்படும்.

Sunday, January 2, 2011

விஜய் போட்டோ டூன்ஸ் + பாரு


*************
பாரு....புஸ்.ராவுக்கு போனை போடுகிறார்...

பாரு: அல்லோ புஸ்.ரா...இங்கிருக்கும் டைரக்டருங்க சரியில்லை, புத்தக ரிலீஸ்க்கு கூப்பிட்டா என்னைப்பற்றிய உண்மைய எல்லாம்பொதுவுல சொல்லிடுறானுங்க... அடுத்த வருசம் புத்தக ரிலீஸை அமெரிக்காவில் வைக்கிறோம்...ஜேம்ஸ் கேமரூனை கூப்பிடுறோம்... எப்படி நம்ம ஐடியா!

புஸ்.ரா: மனசுக்குள் (புக்கு ரிலீஸ்ஸுக்கு இவ்வளோ யோசிக்கும் நீங்க புக்கு எழுத மேட்டரை யோசிக்கலாம்)...ஆஹா சூப்பர் ஐடியா அப்படியே செஞ்சிடுவோம்.முதன் முதலாக வெளிநாட்டில் புக்கு ரிலீஸ் செய்யப்போகும் முதல் தமிழக எழுத்தாளர் நீங்கதான் பாரு.

பாரு: இதுக்கு முன்னாடியே 180 டிகிரி புக்கை சந்திரமண்டலத்தில் ரீ-ரிலிஸ் செய்யனும் என்று என்னோட பிரான்ஸ் வாசகி ரொம்ப ஆசைப்பட்டாங்க..நான் தான் வேண்டாம் என்று சொல்லி வெச்சிருக்கேன்.

2012 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி

நியுயார்க்கில் புத்தக வெளியீட்டு விழா...

பாரு: நான் எழுதிய "உடம்பு" புத்தகத்தை வெளியீட்ட ஜேம்ஸ் கேமரூனை அழைக்கிறேன்...

ஜேம்ஸ்: அட் நைட் பார்ட்டி ஐ வில் டெல் மை கமெண்ட்ஸ் அபவுட் திஸ் புக் பாரு, பட் ஐ வாண்ட் டு டெல் ஒன் திங்...திஸ் புக் இஸ் சேம் லைக் அஸ் "நான்ஸி பிரைடே" & "டெபோனியர்"

பாரு: (அருகில் இருக்கும் புஸ்.ராவிடம்) என்னய்யா சொல்றான் இந்த ஆளு இந்த ஊரு எழுத்தாளர்கள் மாதிரி நான்னு சொல்றானா? ஏதோ பார்ட்டி கீர்ட்டினு சொல்றான் ...ஆகச்சிறந்த புக்கு எழுதியதுக்கு எனக்கு பார்ட்டி கொடுக்கப்போகிறானா?

புஸ்.ரா: ம்ம்ம்ம்ம் இந்த ஊரு சரோஜா தேவி மாதிரின்னு சொல்றாரு...அப்புறம்...

பாரு: போதும் போதும் மீதிய நானே சொல்றேன்..." புக்கை பத்தி என் கருத்தை தண்ணியடிச்சிக்கிட்டே நாம நைட் பார்ட்டியில் பேசிக்கலாம் என்றுதானே சொன்னான்.

புஸ்.ரா: அதே அதே!

பாரு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அமெரிக்கா வந்தும் அதே பல்பா! அவ்வ்வ்வ்
கூடவே இருக்கியே செவ்வாழ கொண்டைய மறைக்க சொல்லிக்கொடுக்க மாட்டியா?