Tuesday, December 23, 2008

என் அம்மாவுக்காக பிராத்தனை!!!

அம்மாவுக்கு கையில் 5 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு ஆப்ரேசன் இரு தினங்களுக்கு முன்நடந்தது. ஆப்ரேசன் நல்ல படியாகமுடிந்தது கண் விழிக்க குறைந்தது 5 மணி நேரம் ஆகும் என்று சொல்லி இருக்காங்க தம்பி என்று அப்பா என்னிடம் போனில் சொல்ல,அப்பா என்னிடம்தான் பேசுகிறார் என்று அந்த மயக்கத்திலும் தெரிந்துக்கொண்டு, அய்யா நல்லா இருக்கேன்யா கவலைப்படாதய்யா என்று குழறி குழறி பேச என் குரல் உடைந்தது அந்த நிலையிலும் அழுவாத ராசா நான் நல்லா இருக்கேன் என்று சொல்லியது அதற்கு மேல் பேச முடியவில்லை, நேற்று கொஞ்சம் பரவாயில்லை என்று சொன்னார்கள் ஆனால் அம்மாவுக்கு நேற்று திடிர் என்று சுவாச கோளாறு ஏற்பட்டு தற்பொழுது திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர டாக்டர்களின் கண்கானிப்பில் இருக்கிறார்கள். விரைவில் நலம் பெற எனக்காக முடிந்தால் ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள்! உங்கள் பிராத்தனை நிச்சயம் பலன் கொடுக்கும்!

Monday, December 22, 2008

டரியள் டக்ளஸும் பின்னே ஞானும்!

காங்கிரஸ் தல : தமிழகத்தில் நடக்கும் எல்லா நிகழ்சிகளையும் தமிழக காங்கிரசார் நன்கு அறிவர்!

டரியள் டக்ளஸ்: ஓ அப்படியா இருங்க உங்கள் அறிவு திறனை சோதிக்கும் வகையில் ஒரு கேள்வி, வேளச்சேரி அம்மன் திருவிழா நிகழ்சியில் மூன்றாவதாக ஜிமிக்கி சட்டை போட்டுகுத்தாட்டம் போட்ட நடிகை யாரு? எங்கே சொல்லுங்க பார்க்கலாம்.

காங்கிரஸ் தல :நமது கட்சி மேலிடமும் இச்சம்பங்களை கூர்ந்து கவனித்து வருகிறது!

டரியள் டக்ளஸ்: ரொம்ப கூர்ந்து பார்த்தா கண் வலி வந்துடும் கொஞ்சம் கண்ணை சிமிட்டிக்க சொல்லுங்க!

காங்கிரஸ் தல :காந்திய வழியில் சென்றதால் செருப்படி வாங்கினோம்!

டரியள் டக்ளஸ்: அப்படி போனது உங்க தப்பு, E.C.R வழியில் சென்றால் நல்லா பீச் காத்தும் வாங்கலாம், பசிச்சா திங்க சுண்டலும் வாங்கலாம்!

காங்கிரஸ் தல :காந்திய வழியில் சென்றதால் செருப்படி வாங்கினோம்!

டரியள் டக்ளஸ்: என்னங்க இதுக்கு எல்லாம் கவலைபட்டுக்கிட்டு பாதி புஷ் ஆகிட்டீங்க இப்ப எல்லாம் ஷூவால் அடி வாங்குவதுதான் பேசன்!

காங்கிரஸ் தல :சத்தியமூர்த்தி பவனுக்கு தாக்க வருபவர்கள் தைரியமிருந்தால் தேதி சொல்லிவிட்டு வரட்டும் அப்படி வந்தால் அவர்களை நாங்கள் நேருக்கு நேர் சந்திக்க தயார்!

டரியள் டக்ளஸ்: அவுங்க என்னா வசந்த பவனுக்கு காப்பி சாப்பிட நண்பர்களோடவா வராங்க தேதி டைம் எல்லாம் சொல்லி வர!
அப்புறம் கிட்ட வாங்க ஒரு ரகசியம் முதலில் வாசனை நேருக்கு நேர் சந்தியுங்க அப்புறம் பேசுவோம்!

*********************பின்னே ஞானும்**********************************
போன வாரம் ஒரு மாலை நேரம் நானும் மனைவியும் ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றோம் அவர் கொஞ்சம் உறவு முறையில் கூட வரும், ஆனால் அத்தனை பழக்கம் கிடையாது. இங்கு வந்த பிறகுதான் பழக்கம் என் ஊருக்கும் அவர் ஊருக்கும் குறைந்தது ஒரு 10கிமீ தூரம் இருப்பதால் கொஞ்சம் தூரத்து சொந்தம் என்று கூட சொல்லலாம்.

அவருடைய அப்பாவும் ஊரில் இருந்து வந்து இருக்கிறார், அவர் அப்பாவிடம் இவரும் நம்ம ஊர் பக்கம் தான் என்று சொல்ல அவர் ஊர் பெயரை கேட்க நானும் சொன்னேன் பின் அப்பா பெயரை தாத்தா பெயரை எல்லாம் கேட்டார் சொன்னேன் பின் மனைவியிடம் மனைவி படிச்சது என்ன ஊர் என்று கேட்க ஊர் பெயரை சொன்னதும் அதற்கு அவர் அந்த ஊரில் என் சாதி பெயரை சொல்லி “--------” குடும்பங்களுமா இருக்கு? யார் பொண்ணுமா நீ என்று கேட்க, மனைவிக்கு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை, நான் உடனே அவுங்க “...........” இல்லை அவுங்க வேறு என்று சொன்னேன்.

டக்கென்று ஒரு நிமிடம் பேசாமல் இருந்தவர், நானும் சாதி எல்லாம் பார்ப்பது இல்லை இதை எல்லாம் ஆதரிப்பவன் என்றார். இரண்டு மணி நேரம் 28 நிமிடம் பலான பலான மேட்டரை காட்டிவிட்டு கடைசி 2 நிமிடம் இப்படி எல்லாம் செய்யாதீங்க என்று மெசேஜ் சொல்லும் படம் போல!பேசியது எல்லாம் சாதியை பற்றி பேசிவிட்டு கடைசியில் நானும் சாதி எதிர்பாலன் என்று சப்பைகட்டு வேறு! பெருசுங்களா கொஞ்சம் திருந்துங்க!

இதை எழுதும் பொழுது சில பதிவர்கள் நினைவுக்கு வந்தார்கள் அவர்கள் எழுதும் பொழுது எல்லாம் கீபோர்ட் தேய சாதி எதிர்ப்பை பற்றி எழுதிவிட்டு, பழகும் பொழுது என்னை பார்த்து கேட்ட முதல் வார்த்தை நீ என்னசாதி?

சாதிய ஒழிக்கனும் சாதிய ஒழிக்கனும் என்று கூப்பாடு போடும் ஆட்கள்தான் சாதிய பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது அது சரியா!

Sunday, December 21, 2008

இனியும் நான் எழுதனுமா?

வணக்கம் மக்களே போன பதிவுக்கும் இந்த பதிவுக்கும் போதிய இடைவெளி விட்டுவிட்டதாலும், பூஜ்ய கணக்கான ரசிகைகளிடம் இருந்து ஆயிரகணக்கான மெயில்களும், போன்களும் வந்ததாலும் இந்த பதிவு. சஞ்சய்,கார்க்கி இருவரும் ஆண்கள் என்பதால் இவர்கள் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபடமாட்டாது!

சரி விசயத்துக்கு வருகிறேன் ஊரில் இருந்து ஒரு பதிவர் துபாய் வருகிறேன் என்றும் சொல்லி இருந்தார், அது போல் நேற்றுவந்ததும் போன் செய்தார் அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு போனேன்.

போகிற வழியில் அவர் சொன்ன ஒரு ஜோக் அவரு படித்த கல்லூரியின் நிர்வாகி பேசியதை சொன்னார்.


மீ 4 டாட்டர், 2 டாட்டர் மேரீட், ரிமைனிங் 2 டாட்டர் போத் ஆர் கேர்ள்ஸ்!
(எனக்கு நான்கு பெண்கள், இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது, இருவருக்கு திருமணம் ஆக வில்லை இதுதான் அவர் சொல்ல வந்தது!)


பின் என்ன அண்ணாச்சி நீங்க எழுதி ரொம்ப நாளாச்சு ஏன் என்றார்?

நானும் நான் மட்டும் இல்லை ஆசிப் அண்ணாச்சி சின்ன புள்ள மாதிரி இப்ப எல்லாம் மலையாள படம் பார்க்க போய்விடுகிறார் இங்கு நடக்கும் உலக திரைப்பட விழாவுக்கு அதானால் அவரும் எழுதுவது இல்லை, அய்யனாருக்கு ஆபிஸில் நெட் இல்லை வீட்டுக்கு வந்த பிறகு நெட் பார்க்க அனுமதி இல்லை அதானால் அவரும் எழுதுவது இல்லை, அபி அப்பா எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை, சுட சுட விமர்சனம் எழுதும் பதிவர் பினாத்தல் சுரேஸும் கையில் அடிப்பட்டு எழுதுவது இல்லை என்னமோ தெரியவில்லை அமீர பதிவர்களுக்கு திருஸ்டி போல என்றேன்.

அதுக்கு அவர்... அவுங்க எல்லாம் எழுத தெரிஞ்சவங்க எழுதுல அதுல ஒரு நியாயம் இருக்கும் நீங்க ஏன் எழுதுல என்று கேள்வியபோட்டு என்னை சாச்சுபுட்டாரு!!!



கடைசி போட்டோவில் புதுகை அப்துல்லா பக்கத்தில் இருப்பது யார் என்று சொல்பவர்களுக்கு இரவு கழுகு என்று பட்டமும் ஒரு டார்ச் லைட்டும் பரிசாக வழங்கப்படும்!

போட்டோவில் அப்துல்லா மட்டுமே இருக்கிறார் போன்ற பின்னூட்டங்கள் போடுபவர்கள் டரியள் ஆக்கபடுவீர்கள்!

குசும்பனை விசாரித்ததாக சொல்ல சொல்லி அப்துல்லாவிடம் சொல்லி அனுப்பிய ரமேஸ் வைத்யா, பரிசல் அவர்களுக்கு மிக்க நன்றி!

Sunday, November 30, 2008

உலகிலே எந்த ஊர் பெண்கள் அழகு!

ஒரு வாரத்துக்கு முன்பு பதிவுலக நண்பர்களுடன் மெயில் அனுப்பி ஒரு விவாதத்தில் இருந்த பொழுது இந்த ஊர் அரபி பெண்கள் அல்லது ஈரான் பெண்களின் அழகுக்கு இனை யாரும் கிடையாது என்றேன், நண்பர் அதெல்லாம் கிடையாது நீ சும்மா பொய் சொல்றே என்றார், அவரிடம் பல பாடல்களில் வரும் அரபி பெண்களின் அழகை பற்றி மேற்கோள்களையும் (அரபு நாடே அசந்து நிற்கும் அழகி நீயாம்) பாடல்களையும், அடிக்கடி சொல்லப்படும் அரபி குதிரைக்கு அர்த்தத்தையும் சொன்னேன் அப்பொழுதும் அவர் நம்பவில்லை.

பின் புரியும் படி நம் ஊர் சூப்பர் சூப்பர் பிகர்= இந்த ஊர் சப்பை பிகர் அல்லது அட்டு பிகர் என்றேன் ஆதாரம் வேண்டும் என்றார் பின் அவருக்கு இந்த ஊர் பெண்களின் புகைப்படத்தை அனுப்பினேன், அதன் பிறகு அவர் பேசவே இல்லை! இதோ அவருக்கு அனுப்பிய படங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்க.



*******************************************************************************

மேலும் இந்த விவாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக போன வாரம் ஒரு கணவன் மனைவிக்குள் நடந்த உண்மை சம்பவத்தையும் சொல்கிறேன்!

மனைவி: என்னங்க! (பொதுநலன் கருதி விகுதி மாற்றப்பட்டுள்ளது).

கணவன்: என்னம்மா!

மனைவி: இத்தனை வருசமா இங்கிருக்கீங்க,உங்களுக்கு இங்க ரொம்ப பிடிச்சது என்னனு சொன்னீங்கன்னா நான் வாங்கி தருவேன்ல்ல!

கணவன்: இரவின் இருட்டில் இந்த கருப்பு கலர் லேண்ட் கூருசர் காரில் உள்ளே இருக்கும் சிறு வெளிச்சத்திலும் பெளர்ணமி நிலவு போல் ஜொளிக்கும் படி முகம் மட்டும் தெரிய வலம் வரும் அரபி பெண்களின் அழகு ரொம்ப பிடிக்கும், இதுல பியூட்டியே பேக்ரவுண்டும்கருப்பு, காரும் கருப்பு, அவுங்க டிரஸும் கருப்பு!.....

மனைவி: #%~@$#$ எதாலோ அடிக்க அந்த கணவன் கையில் கட்டு!

(என்னது என் கையில் இருக்கும் கட்டு ஏனா? அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை,என் கையில் இருப்பது ராக்கெட் லாஞ்சரை தடுத்த பொழுது ஏற்பட்ட சிறு காயம்!ராக்கெட் லாஞ்சர் தீவிரவாதிகள்கையில் மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கும் கல்யாணம் ஆகாத பசங்களே உங்களை நினைச்சா பாவமாக இருக்கு!)

************************************************************************

சென்னையில் மழை பெய்தால் இனி பதிவர்கள் என்ன செய்யவார்கள்!

வெண்பூ வீட்டில்:

என்னங்க மழை தூறல் போடுற மாதிரி இருக்கு வெளியே நீங்க தொவைச்சு காயப்போட்ட டிரஸ் எல்லாம் நனைச்சுடப்போவுது சீக்கிரம் எடுத்து வந்து அயர்ன் செஞ்சு வெச்சுடுங்க! டீயை அப்புறம் ஆத்தி தரலாம் சீக்கிரம் போங்க!


டீயை பொருப்பாக ஆத்திக்கிட்டு இருந்த வெண்பூ அலறி அடிச்சுக்கிட்டு என்னது மழை தூறுதான்னு கேட்டுகிட்டு செல் போனை எடுத்துக்கிட்டு ஓடுகிறார்!....

பரிசல் வீட்டில்:

என்னங்க மழை தூறல் போடுற மாதிரி இருக்கு நம்ம இரண்டு குழந்தைங்களையும் ஸ்கூலில் இருந்து அழைச்சுட்டு வாங்க என்ன இன்னும் சின்னபுள்ளமாதிரி குவீஸ் கேம்ஸ் விளையாடிக்கிட்டு இருக்கீங்க!!!


என்னது மழை பெய்கிறதா! அவரும் மொபைல் போனை எடுத்துக்கிட்டு ஓடுகிறார்!

தாமிரா வீட்டில்:

என்னங்க மழை வரமாதிரி இருக்கு, நீங்க பிழிஞ்சு வெச்ச வடாம் நனைஞ்சுட போவுது கொஞ்சம் எடுத்துட்டு வந்துடுங்க!

தாமிரா: என்னது மழை வரமாதிரி இருக்கா! அவரும் செல்போனை எடுத்துகிட்டு வெளியே ஓடுகிறார்!

தாமிரா: மழை வருவது போல் இருக்கு நீ அங்க தனியா இருக்க வேண்டாம்! நாளை மனைவி ஊருக்கு போக போறாங்க வேண்டும் என்றால் இங்க வந்துடு, நாம சேர்ந்து இருக்கலாம், கூச்சப்படாத உடம்ப பார்த்துக்க மழையில் நனையாத, ஏதும் வேண்டும் என்றால் என்னிடம் தயங்காம கேளு! அடிக்கடி போன் செய்!

இவர் பேசியது மனைவி காதி விழுந்துவிடுகிறது!

மனைவி: ஹலோ நில்லுங்க நான் மழையில் நனைஞ்சா கூட இவ்வளோ கவலை படமாட்டீங்க அது யாரு போன்ல!

தாமிரா: அது அது வந்து பிரண்டும்மா!

மனைவி: எனக்கு தெரியாம அது யாரு பிரண்ட்டு! என்ன பேரு!

தாமிரா: அதிஷா!

மனைவி: என்ன தைரியம் இருந்தா ஒரு பொண்ணை நான் இல்லாதப்ப வீட்டுக்கு வா கூட தங்கலாம் என்று கூப்பிவீங்க! எவ அவ திரிஷா மாதிரி இருப்பாளோ! உங்களை எல்லாம்.... என்று ஆயுதத்தை எடுக்க போகும் பொழுது எஸ்கேப் ஆகிறார்!

மற்ற இருவரும் யாரிடமோ பேசிட்டு வீட்டுக்குள் வருகிறார்கள் தங்கமணிகள் முறைக்க மற்ற இருவரும் சொல்கிறார்கள் நீ வேறம்மா வீட்டில் வாங்கும் திட்டு பத்தாதுன்னு மழை பெய்த பொழுது ஏன் போன் செய்யலைன்னு தூ ஆட்டிக்கிட்டு வந்துட்டானுங்கன்னு அதிஷா பதிவு போட்டு திட்டுவார் அதான் பேசிட்டுவந்துட்டேன் என்கிறார்கள்! (இது புரியவில்லை என்றால் லிங்கை கிளிக் செஞ்சு படிங்க புரியும்).


இனி மழை பேஞ்சா அதிஷா நினைவு வரவில்லை என்றால் நீங்களும் டரியள் ஆக்கப்படுவீர்கள்!!!

************************************************************

தலைவர் தங்கபாலு :புலிகளால் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

டரியள் டக்ளஸ்: உங்களை எல்லாம் பூனை கூட பிறாண்டாது போய் தைரியமா தூங்குங்க!

Tuesday, November 25, 2008

வாங்க வாங்க நர்சிம்மை கலாய்கலாம்!

சஞ்சய் ஆர்வத்தோட சென்னைக்கு கிளம்பி போகிறார் பரிசலுக்கு கொடுத்த மாதிரி ஒரு சிறப்பான வரவேற்ப்பை தமக்கும் நர்சிம்மும் ,அப்துல்லாவும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்!


இனி மீதி அங்கே!


சஞ்சய் போகவேண்டிய ரயில் ரத்தாகிவிட சரி வர லேட் ஆகும் என்று நர்சிமிடம் போன் செஞ்சு சொல்லிடலாம் என்று போன் செஞ்சு பேசுகிறார்!

சஞ்சய்: அண்ணே நான் வர இருந்த டிரெயின் கேன்சல் ஆகிட்டு அடுத்த டிரையின் புடிச்சு வர எப்படியும் 5 மணி நேரம் தாமதம் ஆகும்!


நர்சிம்: இப்பதான் நான் ஆபிசில் இருந்து வந்தேன் எப்படியும் நான் கிளம்பவும் 5 மணி நேரம் ஆகும், நான் கூட எங்கே உங்களை அழைக்க வரமுடியாதோ என்று பயந்துக்கிட்டே இருந்தேன்! நல்லவேளை டிரையின் கேன்சல்!


சஞ்சய்: (குழப்பத்துடன்) அண்ணே நான் காலையில் தான் அங்கு வருவேன்!


நர்சிம்: அதனால் என்ன நடுவே 10 மணி நேரம் தானே இருக்கு, பேசிக்கிட்டே இருந்தா எப்படி நான் உங்களை அழைக்க ரெடி ஆகனும் போனை வையுங்க!

சஞ்சய்: குழப்பத்துடனே போனை வைக்கிறார்!

காலை மணி 5...

சஞ்சய்: என்னன்னே என்னை ரிசிவ் செய்யதான் வந்தீங்களா இல்லை ஏதும் போர்ட் மீட்டிங்குக்குபோறீங்களா?

நர்சிம்: ஹி ஹி அது எல்லாம் அப்படிதான்! வாங்க வீட்டுக்கு போகலாம்!

நர்சிம் வீட்டில் காலை டிபனை முடித்துவிட்டு அடுத்து மதியம் சாப்பாட்டுக்கு வெண்பூ வீட்டுக்கு போக கிளம்பும் பொழுது அப்துல்லாவுக்கு போன் போட்டு அண்ணே வெண்பூ வீட்டில் மதியம் சாப்பாடு போகலாமா!

அப்துல்லா: இல்ல மாம்ஸ் எனக்கு இன்னை 12th எக்ஸாம் இருக்கு, எழுத போகனும்!

சஞ்சய்: ஆஹா மாம்ஸ் என்ன மாதிரியே தான் நீங்களூம் இன்னும் 12th பாஸ் செய்யமா தொழிலதிபர் ஆகிட்டீங்களா?

அப்துல்லா: யோவ் மாம்ஸ் நான் உன்ன மாதிரி இல்லைய்யா, நான் மத்தவங்களுக்காக எழுதப்போறேன்!

நர்சிம்: சஞ்சய் நீங்க டீவி பார்த்துக்கிட்டு இருங்க நான் போய் குளிச்சுட்டு ரெடி ஆகிவந்துடுறேன் வெண்பூ வீட்டுக்கு போகலாம்!

சஞ்சய்: குளிக்கதானே போறீங்க அதுக்கு எதுக்கு இதை எல்லாம் எடுத்துட்டு போறீங்க?

நர்சிம்: ஹி ஹி அது எல்லாம் அப்படிதான்! வாங்க வீட்டுக்கு போகலாம்!

சஞ்சய்:இதோ குளிக்க போறேன் என்று போனார் மணி 2 ஆகுது லேட் ஆனா எல்லா பிரியாணியையும் வெண்பூவே காலி செஞ்சுடுவார் வருவாரா மாட்டாரா,போய்பாத்ரூம் கதவை தட்டலாமா என்று யோசயில் கதவின் அருகில் போகிறார்!

நர்சிம்: போகலாமா மாம்ஸ்!

சஞ்சய்: அந்த கோலத்தில் நர்சிம்மை பார்த்த அவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் போகலாம் என்று போகிறார்!

வெண்பூ வீட்டில் சாப்பிட்டு விட்டு மொக்கை போட்டுவிட்டு பதிவர் சந்திப்புக்கு கிளம்பும் பொழுது மாம்ஸ் கொஞ்சம் பொருங்க ரெடி ஆகி வந்துடுறேன் என்றுகிளம்பி போகும் நர்சிம்மை டரியளாக பார்க்கிறார் சஞ்சய்!

பதிவர் சந்திப்பில் மழை பெய்து நனைந்த பிறகு வீட்டுக்கு வந்தபின் சஞ்சய் நர்சிம் மாம்ஸ் பக்கத்து கடையில் போய் டீ சாப்பிட்டுவிட்டு அப்படியே ஸ்டேசன் போய்டலாமாஎன்று கேட்டதும் இருங்க அப்ப டிரஸ் சேஜ் செஞ்சுட்டு கிளம்பி வந்துடுறேன் என்று போகிறார்...

திரும்பி வந்து பார்த்தால் சஞ்சயை காணவில்லை அங்கு ஒரு கடிதம்...

அன்புள்ள அண்ணன் நர்சிம்

5மணிக்கு அழைக்க வரும் பொழுது அப்படி வந்தீங்க ஒத்துக்கலாம்,

ரேமாண்ட் மாடல் கணக்கா பாத்ரூமில் இருந்தும் வெளியே வரும்பொழுது டக் இன் செஞ்சு வந்தீங்க பொருத்துக்கிட்டேன், பீச்சுக்கு போகும் பொழுதும் அப்படியே வந்தீங்க கண்ரோல் செஞ்சுக்கிட்டேன் இதுக்கு மேல எனக்கு என்னால முடியல நான் கிளம்புறேன் போகும் முன் ஒரு சின்ன வேண்டுகோள்.


டக்கின் செய்யுங்க வேண்டாங்கல ஆனா நைட் 10மணிக்கு படுக்க போகும் பொழுதும் எல்லாம் டக்கின் செய்யாதீங்க!



அளவில்லா கோரிக்கையோடு

சஞ்சய்








காலை 5 மணிக்குஇரவு 10 மணிக்கு மழையில் நனைந்தபின்பும்

இலவச இணைப்பு:

முன்பு நட்சட்திரமாக இருந்த ஒருவரின் கெட்டப்பை கலாய்த்து போட்ட பழய பதிவு

Sunday, November 23, 2008

கார்ட்டூன்+ டரியல் 25-11-2008




புத்தகவெளீயிட்டு விழாவுக்கு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று திரும்ப ஏதும் அறிக்கை பேட்டி எல்லாம் கொடுத்துட மாட்டிங்கள்ளே??

கை கட்டி வேடிக்கை பார்த்த போலீஸ் லிஸ்டில் இருந்து இவரை தூக்கிடுங்கப்பா! (வெண்பூ இவருக்கு சொந்தமோ!!!)

தோளில் எல்லாம் உங்கள போட்டுக்க முடியாது!!!

கிலியில் கில்லி


ஒன்னு இவங்களுக்கு பந்து பொருக்கி போடும் வேலை கிடைக்கனும் இல்ல கீழ இருப்பவர்களுக்கு கார் ஓட்டு வேலையாவது கிடைக்கனும்!

டரியல் டக்ளஸ்!!!
டெஸ்டில் கங்குலி இடம் யுவராஜ் சிங்குக்கு கொடுக்கப்படும் - ஸ்ரீகாந்
டரியல் டக்ளஸ்: இது யுவராஜ்க்கு பாராட்டா இல்லை ஆப்பா?ஒன்னுமே புரியலையே!!!

Wednesday, November 19, 2008

சென்னை பதிவர்கள் சந்திப்பின் பின்னனி!

சென்னையில் இருதினங்களுக்கு முன் பதிவர்கள் சந்தித்தது அனைவரும் அறிந்ததே, ஏன் அங்கு விடாது மழை பெய்த பொழுதும் கூடினார்கள் என்ற விவரம் இப்பொழுது கைக்கு கிடைத்து இருக்கிறது அது உங்கள் பார்வைக்கு!!!







இன்று பிறந்தநாள் கொண்டாடும் வெண்பூவுக்கு இந்த பதிவின் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்!!!

ஆதங்கம்: ஜ்வோராம் சுந்தர் சந்திப்புக்கு வராமல் போய்விட்டாரே, வந்திருந்தால் தர்பூஸ் என்ன பலாபழத்தையே கடத்தி இருக்கலாம்!!

Friday, November 14, 2008

வாரணம் பூஜ்ஜியம்

அழகான தமிழ் பெயர் டைட்டிலோடு ஆரம்பிக்கிறது பட டைட்டில் மட்டும் தான் தமிழ் ,நடிகர் பெயர் முதல் ஆங்கிலத்தில் தான் வருகிறது இது போதாதுக்கு படத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமே பேசிக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்போடு சென்ற எனக்கு பெரும் ஏமாற்றம்தான்.


சரி கதைக்கு என்ன...

ஹீரோவுக்கு டிரெயினில் ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோயின் மேலே லவ்வுன்னா லவ்வு கண்ணுமண்ணு தெரியாத லவ்வு, உடனே லவ்வை சொல்லுகிறார் ஹீரோயினும் இது சும்மா அட்ராக்சன்தான் இது லவ்வு இல்ல முதல்ல நாம பழகனும் புரிஞ்சுக்கனும் எங்க அப்பாவுக்கு உன்னை பிடிக்கனும் உங்க வீட்டில் என்னை பிடிக்கனும் என்று எல்லாம் டயலாக், பின் டக்குன்னு ஒரே ஒரு பாதி பாட்டில் வீடு கட்டும் அளவுக்கு பணக்காரர் ஆகிவிடுகிறார் சூர்யா. பின்மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற காதலியை தேடி அங்கு போகிறார், அங்கு இருவருக்கும் காதல் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது.

இப்படியே சொல்லி இருந்தால் நாம் காலம் காலமாக பார்க்கும் விஜய் படம் ஆகி இருக்கும் இது கெளதம் மேனன் படம் ஆச்சே அப்படியே நடுவில் அப்பா சூர்யா காதல் கதையும் வருகிறது அப்ப இது வித்தியாசமான படம் தானே!

அதன்பின் அமெரிக்காவில் ஒரு டிவிஸ்ட் அதன் பிறகு கதை எங்கேங்கோ பிரேக் இல்லாத தண்ணி லாரி மாதிரி போகிறது அப்படி போகும் பொழுது பார்க்கும் நம் மீதே ஏறி போவதுதான் கொடுமை!

சில சில இடங்களில் அப்பா சூர்யாவோ அல்லது குட்டி சூர்யாவை போலவோ உங்கள் வாழ்கையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம் அந்த ஜில் அனுபவத்துக்காக மூனு மணிநேரம் எல்லாம் உட்காந்து படத்தை பார்க்க முடியாது.

இயக்குனர் டச்:

1) சிம்ரன் சூர்யாவிடம் சொல்வது: நான் போற இடம் எல்லாம் உங்க அப்பா நான் அழகாக இருப்பதாக் சொல்ல சொல்லியபோது இருந்த கோபம் உங்க அப்பாவை நேரில் பார்த்ததும் அந்த கோவம் போச்சு ஏன்னா உங்க அப்பா ரொம்ப ஹேன்சம் என்று சொல்லும் பொழுது திரையில் ஈஈஈ என்று இளிச்சிக்கிட்டு இருக்கும் சூர்யாவை பார்த்தும் சிரிப்புதான் வந்தது.

2) அமெரிக்காவில் வைத்து சூர்யாவை லவ்வுவதாக சமீரா ரெட்டி சொன்னதும் சூர்யா கொடுக்கும் ரியாக்சன்

3) கேம்புக்கு வரும் ரம்யாவிடம் சூர்யா லவ்வை சொன்னதும் ரம்யா கொடுக்கும் ரியாக்சன். (லவ்வுவதாக சொன்னபிறகு Sure என்று கேள்வி வேறு விட்டா கோடிஸ்வர் நிகழ்சிமாதிரி காண்பிடண்ட்? என்று எல்லாம் கேள்வி கேட்கும் போல!)

***********************************************************************

நான்: படம் ஆரம்பித்ததுமே அப்பா சூர்யா சிரித்த முகமாகவே சாகிறார்! ஏன்?

சூர்யா: மீதி படம் பாக்க போகும் உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று! நினைச்சு பார்த்து இருப்பார்!

டிஸ்கி: பதிவை வகை படுத்த வில்லை முதலில் படம் ஆர்ட் படமா? பீரியட் படமா? அவார்ட் படமா? ஆக்சன் படமா என்று கெளதம் வகைப்படுத்தட்டும் பின் நான் இது படமான்னு வகைப்படுத்துறேன்.

(படம் இம்புட்டு மொக்கையாக இருந்தாலும் மிகவும் சந்தோசமாகவே படம் பார்த்தேன் அதை பார்த்த நண்பர் எப்படி இப்படி உற்சாகமாக இருக்கீங்க என்றதுக்கு ஆஸ்கார் ரவிசந்திரன் எஸ்கேப் ஆகி அழகிரியை மாட்டிவிட்டாரே அதை நினைச்சு பார்த்தேன் ரொம்ப சந்தோசமாக இருக்கு என்றேன்!)

Sunday, November 9, 2008

லேட்டஸ்ட் கார்ட்டூன்ஸ் 10-11-2008

ஆ.ராசா நீங்க என்னதான் சர்ப் எக்ஸல் போட்டு விளக்கினாலும் சன் டீவியும், தினகரனும் விடமாட்டாங்க!!!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....
வாராய் நீ வாராய் என்று கங்குலி பாடும் பொழது , நீ முன்னாலே போ நான் பின்னாலே வாரேன் என்று எதிர் பாட்டு பாடியது நிஜம் ஆயிடும் போல இருக்கே!!!

உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல....

ஊர் உலகத்தில் இருக்கிற அம்புட்டு பேருக்கு பழசு எல்லாம் மறந்து போய்டனும் சாமீ!!!

தொப்பையில் அதிக தகுதி உடைய கோவி.கண்ணன், வெண்பூ இருவரும் அங்கு போகாததால் மிரட்டும் போலீஸ் மாமா!!!




கதவை திற பிகர் வரட்டும்!!!


Wednesday, November 5, 2008

டரியல் டக்ளஸ்---5-11-2008

கட்டணம் செலுத்தாத மின் இணைப்பைத் துண்டிக்க சட்டத்தில்அதிகாரம் உள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்அளித்துள்ளது--- ஆணையத்தின் செயலர் பாலசுப்பிரமணியன்.

டரியல் டக்ளஸ்: ஒழுங்காக மின்சாரமே கொடுக்காத உங்களுக்கு எதை துண்டிப்பது???

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக பேசுவது குற்றம் என்றால் என்னையும் கைது செய்யலாம்--- பாரதிராஜா

டரியல் டக்ளஸ்: நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்.

புதுவை தலைமை ஜூடிசியம் மாஜிஸ்திரேட்டாக பொங்கியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டரியல் டக்ளஸ்: அநியாயத்தை கண்டா ரொம்ப பொங்கிடுவாரோ!!!

அ.தி.மு.க மற்றும் தி.மு.கவோடு கூட்டணி கிடையாது- சரத்குமார்

டரியல் டக்ளஸ்: என்னங்க இப்படி சொல்லீட்டீங்க இத கேட்டு அம்மாவும், ஐயாவும் சாப்பிடாமதூங்க முடியாம தவிக்கிறாங்க, கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்க!

நான் இங்கே புறப்பட்டு வந்த பொழுதுகால் இடறி அதன் காரணமாக வலது காலில்எட்டு அங்குல நீளத்திற்கும் இரண்டு அங்குலஅகலத்துக்கும் காயம் ஏற்பட்டது!

டரியல் டக்ளஸ்: நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு...கோவி.கண்ணனுக்கு போட்டியாக! (இவரு சொன்ன டீட்டெயிலு)

இப்படி சொன்னாலும் சொல்வார்கள்

ஜெ.ஜெ: தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க நான் காலையில் விமானத்தில் ஏறும் பொழுதே படிக்கட்டில் ஸ்லிப் ஆகும்படி செய்தது என்னை கொல்லபார்த்தது விடுதலைபுலிகள் தான். இது உளவு துறைக்கும் தெரியும்!

சு.சாமி: விமான படிக்கட்டில் விளக்கெண்ணெய தடவிதான் ஜெ.ஜெவை கீழ விழவைத்து கொல்ல முயற்சி செய்தார்கள், படிக்கட்டில் எண்ணெய் தடவியதன் வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

வைகோ: என்னை கைது செய்து சிறையில் அடைத்து, பின் சகோதரி ஸ்லிப் ஆகும் படி செய்தது எல்லாம் திட்டம்மிட்ட சதி, என்னை கைது செய்ததை விட சகோதரிக்கு அருகில் இருந்து சகோதரியை கவனிச்சுக்க முடியவில்லையே என்ற வருத்தம் தான் என்னை கொல்கிறது!

Sunday, November 2, 2008

மூட் இல்லாததால் தாமதமாய்...

பொடியன் மற்றும் ஸ்ரீ யின் கோரிக்கையை ஏற்று கும்ளே கார்ட்டூனை எடுத்துவிட்டேன்







இரண்டு நாட்களுக்கு முன்பே செய்து வைத்தும் சில பல காரணங்களால் தாமதமாய் இந்த பதிவு.


Wednesday, October 29, 2008

சிக்ஸ் பேக் முயற்சியில் சில ஸ்டார்ஸ்- ஒரு காமெடி!!!

பொல்லாதவனில் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் நடிச்ச தனுசை பார்த்து விசால், அர்ஜூன், சூர்யா என்று அனைவரும் மல்லு கட்டகிறார்கள் இனி சில சினிமா நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஜே.கே.ரித்தீஸ் அறையில்...ரித்தீஸிடம்

அண்ணே நீங்க நாயகன் படத்தில் ஒருவன் முதுகில் ஊஞ்சலாடியதை கண்டு உலகமே மெரண்டு போய் கிடக்கு அண்ணே அதை அப்படியே மெயிண்டெயின் செய்யனும், ஈக்குச்சி போல உடம்பு இருக்கிறவனுங்க எல்லாம் சிக்ஸ் பேக்கோடு நடிச்சு மிரட்டுரானுங்க அதுபோல நீங்களும்
சிக்ஸ் பேக்கோட நடிக்கனும்...

ஜே.கே: நாம நடிக்கிறத பார்த்தே மிரண்டு போறானுங்க, இதுல எதுக்கு சிக்ஸ் பேக்!

இப்படி சொன்னா எப்படின்னே அப்புறம் உங்க எதிர்கால அமெரிக்க முதல்வர் ஆகும் கனவு கலைஞ்சுடும் அண்ணே!

ஜே.கே: சிக்ஸ் பேக்கும் என் அமெரிக்க முதல்வர் கனவுக்கும் என்ன சம்மந்தம்?

அண்ணே அர்ணால்டு சிக்ஸ் பேக்கோடு நடிச்சதால் தான் அவரு அழகில் அனைவரும் மயங்கிட்டாங்க அதனால் தான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டுக்கு பிரதமர் ஆகி இருக்கார், நீங்களும் அவரை போல் நடிச்சீங்க புஷ் போல நீங்களும் அடுத்த அமெரிக்க முதல்வர் ஆகிடுவீங்க.

ஜே.கே: அப்படியா இருடே இதோ வருகிறேன்,என்று வெளியே ஓடிப்போய்
திரும்ப வருகிறார்..

இதோ பாருடா சிக்ஸ் பேக்

1) இது ஸ்கூல் பேக்

2) இது டிராவல் பேக்

3) இது ஹேண்ட் பேக்

4) இது ஷோல்டர் பேக்

5) இது லெதர் பேக்

6) இந்தாடா கடைசியா கேரி பேக்

எடுத்து மாட்டுங்கடா என் மேலே. இப்ப வந்துச்சா சிக்ஸ் பேக் என் மேலே!!!

மனசுக்குள் (அண்ணே உங்களு சினிமான்னா என்னானு தெரியாதுன்னே நினைச்சேன் ஆனா சிக்ஸ் பேக்ன்னாலும் என்னன்னு தெரியாதா அவ்வ்வ்வ்)

ஜே.கே: ஏய் யாருடா அங்க இந்த ஸ்கூல் பேக் ஒரு ஸ்கூல் படிக்கும் பெண் கொடுத்துச்சு அதுக்கு வாங்கி கொடுங்கடா 1000 ஸ்கூல் பேக், டிராவல் பேக் கொடுத்தவனுக்கு வாங்கி கொடுங்கடா ஒரு பஸ்!இப்படி அடுத்த அடுத்த கட்டளைகளை போட்டுக்கிட்டு இருக்கார் ரித்தீஸ் (2011 முதல்வர் நம்பர் 12).

***********************************************************************
எஸ்.ஜே.சூர்யாவிடம் ஒரு தயாரிப்பாளர் நீங்க தான் என் அடுத்த படத்தில் ஹீரோ படம் பேரு புளு பிலிம்..

என்னங்க புளு பிலிம் என்று வெச்சா வரி சலுகை கிடைக்காது நீலப்படம் என்று வெச்சுடலாம்...

தயாரிப்பு: அதுவும் சரிதான் நீலப்படம் என்றே வெச்சுடலாம், ஆனா நீங்க இந்த படத்தில் சிக்ஸ் பேக்கோடு வரும் போல ஒரு ”சீன்” வைக்கனும்...
எஸ்.ஜே: அதுக்கு என்னா ஒரு நாள் டைம் கொடுங்க உங்க எதிர்ப்பார்பை நிறைவேற்றுவது போல சிக்ஸ் பேக்கோடு வருகிறேன்...

மறுநாள் காலை சார் இதோ பாருங்க சிக்ஸ் பேக்கோடு வந்து இருக்கேன்...

இது நமீதா ”பேக்”..

இது ஸ்ரேயா ”பேக்”...

இது அசின் ”பேக்”...

இது திரிஷா ”பேக்”...

இது நயன் தாரா ”பேக்”...

இது பிரியாமணி ”பேக்”... என்று கிளேவில் செஞ்ச நடிகைகளின் ”பேக்”கை காட்டுகிறார். கதைப்படி ஹீரோவுக்கு காலையில் ஒரு பேக் இருக்கும் மாலை ஒரு பேக் இருக்கும் இப்படி ஒன்னு ஒன்னா மாறும் என்று கதைய வெச்சு கலக்கிடலாம்...

ஆஹா நீ எப்பவும் இப்படிதானா!!! என்று ஓடுகிறார் தயாரிப்பு.

********************************************************
அடுத்து டி.ஆர். வீட்டில் சார் உங்க பையன புது படத்தில் புக் செய்ய வந்து இருக்கோம்...

டி.ஆர்: சரி முதலில் கதைய சொல்லுங்க, புடிச்சா கால் ஷீட் வாங்கி தருகிறேன்...

சார் கதைப்படி உங்க பையன் ஒரு பாடி பில்டர் அவரிடம் பாடிய பில்ட் பண்ண வரும் ஹீரோயினுக்கும் கசமுசா ஆகிடுது... இதுல முக்கியமே உங்க பையன் தனுஷ்க்கு இருந்தது போல் சிக்ஸ் பேக் வேண்டும்...


டி.ஆர்: சினிமாவுக்காக அவனுக்கு வந்தது
சிக்ஸ் பேக்..
சிம்பு சினிமாவிலேயே இருக்கு பேக்கு.

அவன் வளந்த பின் வந்தது சிக்ஸ் பேக்
இவன் பிறப்பிலேயே ஒரு பேக்கு.

எங்க வீட்டில் இருப்பது இரண்டு பேக்கு
இதை தெரியதவனை எல்லாம் போட்டு தாக்கு.

ஏ டன் டனக்கா ஏ டனக்குனக்கா!

Tuesday, October 28, 2008

சும்மா டைம் பாஸ் மச்சி!!!

சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை ரசிக்கும்


தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்


இந்த வண்ணக்கலவை நிறமிழந்து போகுமோ என்ற அச்சம் மிகுகிறது.


அலையடித்து பறக்கும் கல்லூரி பெண்கள் கூந்தல்களை ரசிக்கும் தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்என் தலையில் அடித்த வண்ணகலவை வெளுத்து போய்விடும் என்ற அச்சம் மிகுகிறது...


இரவுப் பனியில் குளித்தெழுந்து தலை துவட்டாத ஈரத்தில்


இதழ் மலரக் காத்திருக்கும் ரோஜாக்களைப் பார்த்து


புன்னகைக்கவும் மறந்து போய் இன்று


ஒரு நாள் மட்டும்தானே இந்த அழகு எனகவலை தொற்றிக் கொள்கிறது



காலை சவரில் நனைந்து தலை துவட்டிய துண்டில்


ஒட்டிக்கொண்டு வரும் சாயத்தை பார்த்து


அழவும் மறந்து போய் இன்னும் எத்தனை நாள் தான்


இந்த சாயம் நிற்கும் என்ற பயம் தொற்றி கொள்கிறது!!!


ஓயாத உன் பேச்சொடு கலந்து வரும் புன்னகையில்


அதிக பங்களிப்பு இதழ்களுக்கா விழிகளுக்கா என


ஆராயவும் மனமின்றி இது எனக்கானதா என


ஏக்கமே நிலை தடுமாறச் செய்கிறது


காற்றோடு கலந்து வரும் ஈர பதத்தில்


கூட சாயம் வெளுத்துவிடுமோ என பயம் அது பற்றி


ஆராயவும் முடியவில்லை அது போல் முடி


எனக்கு வாய்க்காதா என்று ஏக்கம் வருகிறது




இருப்பை மறந்த தேடலில்


கரைந்து ஓடும் கால வெளியில்


தொலைந்து போவது


என் சுயம் மட்டுமே



வெளுப்பை மறைக்கும் முயற்சியில்


கரைந்து ஓடும் சாயங்கள் மழையில்


மற்றவர்களுக்கு தெரிந்து போவது


என் சொட்டை தலையும்


அதில் வெள்ளை முடியும் மட்டுமே!!!



டிஸ்கி : வழக்கம் போல் எதிர் கவிதை கண்மணி அக்கா கவிதை கருப்பில் இருப்பது.



*************************************************************************




சிகப்பு கலரில் இருப்பது கண்மணி எழுதிய கவிதை அதற்க்கு கீழே இருப்பது நான் எழுதிய எதிர் கவுஜ:)

ஆஹா...வந்துடுச்சி...[தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்]

ஓஹோ வரவில்லை....(தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்)

உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால்
பூக்கள் இதழ் விரிக்காமலே இருந்திருக்கக் கூடும்.
பிரிவோம் என நினைத்திருந்தால்
உன்னைப் பற்றிய நினைவுகள்
எனக்குள் வேர்விட்டிருக்காது
காதல் பூத்தும் இருக்காது
கொட்டியச் சிதறிய சருகுகள்
மக்கிச் சிதைந்து மரத்திற்கே உரமாவதுபோல
உன் சுணக்கமும்,ஒதுங்கல்களும் எனக்குள்ளே
புதைந்து என் கனவுகளுக்கு உரமிட்டு
உன் நினைவுகளை என்னுள் ஆழமாய்
வேறூன்றச் செய்கின்றன.

தடுக்கி விழுவோம் என அஞ்சியிருந்தால்
அஞ்சு பாபி ஜார்ஜ் ஓடாமலே இருந்திருக்க கூடும்.
உடைவோம் என நினைத்திருந்தால்
எனக்கு பிடித்த முட்டை
கோழி வயிற்றிலேயே இருந்திருக்க கூடும்.
முட்டை வெளியே வந்தும் இருக்காது
வந்து என் கையில் சிக்கியும் இருக்காது.
உடைந்து முட்டைகள் வெந்து தணிந்து
ஆம்லேட் ஆவதுபோல.
வாந்துமுட்டையும், ஆமை முட்டையும்
மண்ணுக்குள்ளே இருந்திருக்கும்.

இந்த உலகை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
உன்னிடம் பேசும் வரை
பேசிய பிறகோ என்னையே வெறுத்துக் கொள்கிறேன்
காரணமே தெரியாமல்.
பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்
விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள்
ஏராளம்.

இந்த ஆம்லேட்டை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
அதை எடுத்து சாப்பிடும் வரை
சாப்பிட்ட பிறகோ என்னையே வெறுத்து கொள்கிறேன்
காரணமே தெரியாமல்..
வெந்த முட்டைகளை விட வேகாத ஆப் பாயில்கள்
ருசி அதிகம்.


கவனம் தப்பாத உன் பேச்சுக்களில்
எங்கேனும் காதல் ஒளிந்திருக்குமோ
எனப் பார்த்திருப்பதும்
மட்டறுக்கப் படும் உன் வார்த்தைகளில்
எனக்கான நேசம் தூவப் பட்டிருக்குமோ எனத்
தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது


கவனமாக திருப்பி போடப்பட்ட ஆம்லேட்டுகளில்
பச்சைமிளகாய் எங்கேனும் ஒளிந்துருக்குமா
என பார்பதும்
அதன் மேல் மிளகு தூள் தூவபட்டு இருக்குமா
எனத் தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது.


இலையுதிர் காலங்களுக்குப் பிறகு
வசந்தம் வந்துதானே ஆகவேண்டும்.
காத்திருக்கிறேன் வரும்வரை

எனக்கு முன் ஆடர் செய்த ஆம்லேட்டுக்கு பிறகு
ஆப்பாயில் வந்துதானே ஆகவேண்டும்
காத்திருக்கிறேன் வரும் வரை...(சாப்பிடாமல்)

டிஸ்கி: ....எனக்கும் காதல் கவிதை
டிஸ்கி: எனக்கான ஆப்பாயில்

***************************************************

முதல் முறையாக சும்மா ஒரு மீள் பதிவு.

Friday, October 24, 2008

தலை தீபாவளி கொண்டாடும் வலைப்பதிவர்கள்!!!

இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் வலைப்பதிவர்கள்

1) பாலபாரதி-மலர்வனம் லஷ்மி

2) அய்யனார்-கல்பனா

3) குசும்பன் - மஞ்சு

4) மங்களூர் சிவா- பூங்கொடி

5) இம்சை அரசி - மோகன்

அனைவருக்கும் வாழ்த்து சொல்லலாம் வாங்கோ!

டிஸ்கி : வேறு யாருக்கும் ரகசிய திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கும் தலை தீபாவளி வாழ்த்துக்கள். (சஞ்சய்க்கு அல்ல)

மற்றும் அனைத்து வலையுலக பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். (நன்றி பைத்தியக்காரன்)

துயாவுக்காக -ஈழம் பற்றிய பதிவு!!!

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

சிறுவனாக இருக்கும் பொழுது தஞ்சை அத்தை வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும் பொழுது அங்கு செந்தில்(ஈழத்தவர்) என்ற அண்ணன் ஒருவர் பழக்கம் ஆனார், அப்பொழுது எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன், அரசு
அனுமதியோடு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் இருந்தது என்று நினைக்கிறேன்(சரியாக நினைவு இல்லை), அந்த அண்ணன் அவர் பயிற்சிக்காக வந்தவர் என்று சொல்வார், அங்கு அவர் அண்ணன்,அண்ணி இருவரும் இராணுவத்தால் கொல்லப்பட்டதாகவும் அங்க தமிழ் ஆட்களை கண்டால் சிங்களருக்கு பிடிக்காது மிகவும் கொடுமை படுத்துவார்கள்
என்று சொன்னது நினைவு இருக்கிறது. மேலும் அங்கு நடக்கும் சண்டைகள் பற்றி விளக்கமாக சொல்வார். அவர் கண் புருவத்தின் மேல் கருப்பாக காச்சி போய் இருக்கும் என்ன என்றால் துப்பாக்கி டிரிகர் குறிபார்க்கும்
பொழுது அது கண்ணை அழுத்தி அழுத்தி அந்த இடம் காய்சிபோய்விடும் என்றார். இதனால் தான் பலரும் போலீஸில் பிடிபடுவார்கள் என்று சொல்வார்.

துபாயில் இருந்து டிராண்சிட் பிளைட்டில் வந்த பொழுது 4 மணி நேரம் ஸ்ரீலங்காவில் இருக்க நேரிட்டது, தாழ்வாக விமானம் பறந்த பொழுது அந்த நாட்டின் அழகு ஈடு இனை இன்றி இருந்தது. சண்டை மட்டும் இல்லை என்றால் சுற்றுலா தலங்களில் முதன்மையாக வருவாய் ஈட்டும் வாய்பு உள்ள நாடு!

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

தமிழீழம் சீக்கிரம் மலரவேண்டும் ஆனால் அப்படி மலரும் பொழுது தமிழ் மக்கள் அதை கொண்டாட இருக்கவேண்டும்,இப்பொழுது நடக்கும் சண்டைகளை பார்த்தால் குறைந்தது அதிகார பகிர்வு மூலம் அதிகாரத்துக்கு வந்தாவது உயிர்பலியை தடுக்கவேண்டும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

http://www.lankasrinew.com/

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அரசியல் அரசியல் அரசியல்!, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் கொடுக்கும் குரல்கள் சீசன் பிஸினஸ் போல் சீசன் அரசியல்!

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

சொல்ல வார்தைகள் ஏதும் இல்லை! காலேஜில் படிக்கும் பொழுது பிரபாகரன் படத்தை வீட்டில் ஒட்டி வைத்திருந்தேன் அந்த அளவுக்குஅவரை பிடிக்கும், சில வருடங்களுக்கு முன்பு பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்வின் பொழுது அவருடைய செக்யூரிட்டி இருவர் கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு இருந்தார்கள் அது எக்ஸ்ரே கிளாஸ் என்றும் அது போல் இந்திய தலைவர்களுக்கு கூட பாதுக்காப்புகிடையாது என்றும் சொன்னார்கள், அப்பொழுதும் முதன் முதல் வான் வழி தாக்குதல் நடத்திய பொழுதும் இருந்த மகிழ்ச்சி, பெருமை எல்லாம்கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது, இப்பொழுது எதைப்படித்தாலும் புலிகளுக்கு பின்னடைவு என்றே செய்திகள் வருகிறது.தமிழ்ச்செல்வன் இல்லாத குறை நன்றாக தெரிகிறது. பழயபடி புலிகளின் கை விரைவில் ஓங்க வேண்டும்.

மூன்று பேரை அழைக்கவேண்டும் என்பது தூயாவின் கட்டளை!

1) இலங்கை அரசியலை பற்றி மிகுந்த அனுபவம் உடையவரும், பிரபாகரனை நேரில் சந்தித்தவருமான ஆசிப் அண்ணாச்சியின் அப்பா திரு. அப்துல் ஜப்பார் http://smabduljabbar.blogspot.com/ (அண்ணாச்சி அப்பாவுக்கு கேள்வியை அனுப்பி பதில் வாங்கி போடுங்க, அவுங்க அனுபவத்தில் சொல்வது சிறந்ததாக இருக்கும்).

2) பினாத்தல் சுரேஸ் அவர்கள் இவரின் அரசியல் நிலைப்பாடு வித்தியாசமாக இருக்கும்.

3) பாரி அரசு அரசியல் பதிவுகளில் அதிரடி போடும் இவர் கொஞ்சம் நாட்களாக எழுதாமல் இருக்கிறார் அவரும் இதைப்பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்.

Tuesday, October 21, 2008

டரியல் டக்ளஸ்! + தன்னிலை விளக்கம்

டரியல் டக்ளஸ்: பழய வீட்ட இடிச்சு புதுவீட்டை பழய வீடு மாதிரியே கட்டுறானுங்க கேட்டாக்கா புதுமையா ஏதும் செய்கிறார்களாம்!

டரியல் டக்ளஸ்: போன் செஞ்சா கஸ்டமர் நீங்கதான் எங்கள் தெய்வம் உங்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் என்கிறது ரெக்கார்ட் செஞ்ச ஒரு பெண் குரல் ஒரு அவசரத்துக்குபோன் செஞ்சப்ப 200 முறையாக!

டரியல் டக்ளஸ்: 300 யூனிட்டுக்கு மேல உபயோகிச்சா 50% அதிகம் வசூலிக்கப்படுமாம், முதலில் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் கொடுத்தா நாங்க 50% அதிகம் மீட்டருக்கு மேல போட்டுக்கொடுக்கிறோம்!

*********************************************************************
நண்பர் ஒருவர் நேற்று ஆன் லைனில் வந்தார் அடிக்கடி வராதவர் வந்து இருக்காரே என்று ஒரு ஹாய் சொன்னேன், அவர் உடனே என்னய்யா குசும்பா இன் விசிபிள் மோடில் இருக்க யாருக்கு பயந்துக்கிட்டு என்றார்?

நான் சொன்னேன் பயம் எல்லாம் இல்லை நான் ஆன் லைனில் இருந்தாலும் யாரும் என்னிடம் பேசபோவது இல்லை, ஆன் லைனில் இருந்தும் யாரும் பேசமாட்டேங்கிறாங்களே என்று எதுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு அதான் இன் விசிபிளில் இருந்தாலாவது அதனால் தான் பேச மாட்டேங்கிறாங்க போல என்று மனச தேத்திப்பேன் என்றேன்.

நண்பன் என்னது யாரும் உன்னிடம் பேசமாட்டேங்கிறாங்களா என்றார்?

இல்லை இல்லை அப்படி சொல்லமுடியாது உன்னை மாதிரி வேலை, வெட்டி இல்லாதவங்க யாரும் அப்ப அப்ப பேசுவாங்க என்றேன்.

அதன் பிறகு அவரும் பேசவில்லை:((

என் மெயில் ஐடி kusumbuonly@gmail.com நீங்க சாட் செய்ய ரெடியா:))))

***************************************************************
இன்று பிளீச்சிங் பவுடர் பற்றி ஒரு மொக்கை போட்டு இருந்தேன் அதுபோல் நேற்று இரவே பதிவு வந்துவிட்டது என்றார்கள் அதான் அதை டெலிட் செஞ்சுட்டேன்.

Sunday, October 19, 2008

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது எப்படி? கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி பாராட்டுவது. சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி பேசிவிட்டு வந்து யார் அவர் என்று மண்டைய குழப்பிப்போம் அதுபோல் என்ன சாப்பிட்டோம் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கும் ஆண்களுக்காக இந்த பதிவு.


சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?

மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம், போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள் (கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது கண்டிப்பாக சாம்பார்தான்.


ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.


ரசம் என்று உறுதி செய்வது எப்படி?

நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை,முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

ரிஸ்க்: தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்கரை போட மறந்தாலும் மறந்து இருக்கலாம்).


புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?
நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல் கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.


******************************************************************************

சாதம் வகைகள்


சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).


ரிஸ்க்: சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில் மிளகு,பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால் அது பொங்கல். இல்லை என்றால்அது வெறும் சாதம்.

புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும், காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில சமயம் புளிப்பு.

லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை மிளகாய் கிடக்கும்.

இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி பிரச்சினை இல்லை.

சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ் கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன் புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.

ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால் உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான் இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அது பிரியாணிதான்.

முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.

******************************************************************************

இதர சில குறிப்புகள்

சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)

ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!

கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஞ்சி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு என்ற அவசியம் இல்லை).

வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல் இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து போய்விட்டது)

**********************************************************************

சில சமயம் அறுசுவை.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?, தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல் சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி இருந்தாலும் ”என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற” என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுங்க.

இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க, எஞ்சாய் செய்யுங்க!
டிஸ்கி: சில சமயம் உப்பு, உறைப்பு, புளிப்பு எதுவும் இருக்காது இருந்தாலும் எக்ஸ்பீரியன்ஸையும், மூலப்பொருட்களையும் வைத்து அது என்ன என்று கண்டுபிடிக்கனும்.
பிற்சேர்க்கை: இது முழுக்க முழுக்க கற்பனையே! இதை யாருடைய மிரட்டலுக்கும் பயந்து சொல்லவில்லை!!!

Tuesday, October 14, 2008

தவறு மேல் தவறு செய்யும் பரிசல்காரன்!!!

பரிசல்காரன் தாங்கள் அருமையாக எழுதுவது அனைவரும் அறிந்ததே, ஆனால் தாங்கள் எழுதிய கடந்த சில பதிவுகள் என்னை மட்டும் இன்றி பலரையும் கஷ்டப்படுத்தும் விதமாக இருக்கிறது.

தாங்கள் செய்த தவறுகள் லிஸ்ட் இதோ!!!

1) தாங்கள் எழுதும் பதிவுகள் வர வர பெரிதாகிகொண்டே போகிறது.
2) அப்படி எழுதிய பதிவை என்னை படிக்க வெச்சது( என்னை எழுத அழைத்ததால்)
3)படிக்க வெச்சது மட்டும் இன்றி இம்மாம் பெரிய பதிவை என்னை எழுத வெச்சது.

பதிவுலகில் ஒரு உண்மை தமிழன் போதும், இது எச்சரிக்கை.

இனி உங்கள் கேள்விகளுக்கு பதில்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வயது நினைவு இல்லை வீட்டுக்கு அருகிலேயே சித்தப்பாவின் டூரிங் டாக்கிஸ் இருந்ததால் தினம் படம் தான்.நினைவு தெரிந்து பார்த்த படம் என்று சொல்வதை விட விவரம் தெரிஞ்சு பார்த்த முதல் படம் ஹை ஹீல் கேர்ள்ஸ் கும்பகோணம் விஜயாவில், படம் பேருக்கு ஏத்தமாதிரி கணுக்காலுக்கு மேல கூட காட்டவில்லை. தியேட்டரில் மூட்டைபூச்சி கடி அதனால் வீக்கத்தை உணர்ந்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குசேலன் -ஷார்ஜா கான்கோர்டில்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
திருட்டு வீ.சி.டியில் படம் பார்ப்பது இல்லை அதனால் காத்திருந்து பொல்லாதவன் படம் ஒரிஜினல்பிரிண்டில் பார்த்தேன். என்ன உணர்ந்தேன் என்றால், வயிறு புல் ஆனது போல் உணர்ந்தேன் மனைவி போட்டு கொடுத்த கார்ன் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பார்த்ததால்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா!
வீரம் விளைஞ்ச மண்ணு- எப்படி தாக்கினுச்சின்னு சொல்றேன். அன்று வழக்கம் போல் காலேஜ்க்கு போய் எல்லா புரொபசரும்ஒழுங்கா வந்து இருக்காங்களான்னு ஸ்டாப் ரூமில் எட்டி பார்த்தா அம்புட்டு பேரும் லீவ் எடுக்காம கரீட்டா வந்து இருக்காங்க, இதுகதைக்கு ஆவாது எல்லாரும் வந்து இருக்காங்க பிளேடு போட ஆரம்பிச்சா தாங்காது வாங்கடா படத்துக்கு போகலாம் என்று கிளம்பி போனோம். நான் பேசிக்கா நடக்க அலுப்பு படும் சோம்பேறி,அதனால் ரயிலை விட்டு இறங்கியதும் தஞ்சை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இருக்கும் ராஜராஜன் தியேட்டருக்கு போகலாம் விஜயகாந்து படம் ரிலீஸ் ஆகி இருக்கு போகலாம் என்றேன், நாங்க மொத்தம் 20 பேர் சரி என்று வந்தார்கள் படம் போட்டு அரை மணி நேரம் கூட ஓடவில்லை,அத்தனை பேரும்போட்டு கும்மி எடுத்தானுங்க. அன்னைக்கு விட்டது விஜயகாந்து படம் பார்ப்பதை.ரொம்ப தாக்கிடுச்சு:(

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
பாபா படத்து பொட்டிய தூக்கிட்டு போய் பா.ம.க செய்த ரகளை.படம் ஓடக்கூடாது என்பதற்கா ஏன் அம்புட்டு வெயிட்டை தூக்கிட்டு ஓடினார்கள் என்று தெரியவில்லை, பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்தாலும் ஓடி இருக்காது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் நின்று டாண்ஸ் ஆடும் பொழுது ஒருவர் மேல தண்ணிய வாயில் இருந்து பீச்சி அடித்து எச்சி துப்பி விளையாடுவாங்க,கரீட்டா அவுங்க எச்சி துப்பி விளையாடும் தொழில்நுட்பம் ரொம்ப தாக்கியது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அட தமிழ் சினிமா பற்றி வாரமலரி வரும் துணுக்கு மூட்டை, சினி கூத்து, குடும்ப மலரில் வரும் சினி சிப்ஸ் எல்லாம் கரீட்டா படிச்சுவிடுவேன். நம் பிளாக்கர் தமிழ் சினிமா அவர்கள் எழுதும் பதிவுகளையும் படிக்கிறேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?
ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும், மற்றப்படி ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா என்ற ரீதியிலான கும்மாங்குத்து பாடல்களே அதிகம் விரும்பி கேட்பேன். சமீபத்தில் மந்ரா என்று(படம் பெயர் என்று நினைக்கிறேன்) “செல்லப்பிள்ளை” என்று ஒரு பாட்டு டிவீயில் பார்த்தேன் அடா அடா என்னா ஆட்டம் , அடிக்கடி அதோட டிக்கியில் கொசு கடிச்சுது போல அடிக்கடி டிக்கியில் அடிச்சு அடிச்சு டான்ஸ் ஆடினது பாருங்க ம்ம்ம் செம பாட்டு செம டான்ஸ்!(கடைசி வரை அந்த கொசு அடிப்பட்டுதா இல்லையான்னு தெரியலை) பாட்டை பற்றி விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ் தவிர உலக மொழிப்படம் என்றால் காலேஜ் படிக்கும் காலத்தில் சைனீஸ்,ஜப்பானீஸ்,ரஷ்யா,அமெரிக்கா,ஆப்பிரிக்கா என்று பல உகல படங்களை பார்த்து இருக்கிறேன்.எல்லாமே செம தாக்குதான்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
(ஒரு நேரத்தில் ஒரு கேள்வி கேட்டாலே பேபேன்னு முழிக்கும் ஆள் இப்படி வரிசையா கேட்டா எப்படி?)

நேரடி தொடர்பு இருந்தது, சேது படத்து தயாரிப்பாளர் குடும்ப நண்பர் அதுக்காக படம் எடுத்தது எங்கள் ஊரில் தான் 6 மாதம் அவர்களோடுதான் இருந்தேன். அதை மீண்டும் செய்வீர்களா? பாலா திரும்ப எங்க ஊருக்கு படம் எடுக்க வந்தால் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா? இப்ப தமிழ் மேம்பட பிளாக் எழுதுவது போலவா!!!:)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
லக்கினம் 4ல் நமீதாவும், 7ல் ஸ்ரேயாவும் இருப்பதாலும் நயன்தாரா திசை நடப்பதாலும் தமிழ்சினிமாவுக்கு உடை பஞ்சம் ஏற்படும்,அதிக பஞ்சம் வர வர ரசிகர்கள் குளுமையாகவே இருப்பார்கள். ராகுவில் ஜே.கே ரித்திஸ் இருப்பதால் அடிக்கடி நல்ல காமெடி படம் கிடைக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நோ பிராபளம், யாரடி நீ மோகினி படத்தில் நடிச்ச அந்த குட்டி பொண்ணு போட்டோவை வெச்ச ஒரு வருடத்தை ஓட்டிவிடலாம்.தமிழர்களுக்கு என்ன ஆகும் பணம் மிச்சம் ஆகும், பொழுது போக்கு ஒன்னும் இல்லாததால் மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ஆகும்.

இதுபோல் எழுத நான் அழைக்கப்போகும் 5 பேர்

1)அகில உலக குறும்பட வித்தகரும், குறும்பதிவரும் ஆன -- அண்ணன் உண்மை தமிழன் (உங்க பெயருக்கு பின்னாடி நீங்க போடும் நம்பர் தெரியவில்லை கோச்சுக்காதீங்க)

2) சிங்கப்பூர் தமிழ்குடிதாங்கியும், அநியாயத்துக்கு எதிரா பொங்கும் பொங்கல்பாண்டியும், பதிவர் மாநாடு ஆர்கனைசரும், சிங்கப்பூர் பதிவர் சங்க போர் வாளும் ஆன நண்பர்- ஜோசப் பால்ராஜ்

3) இன்று பிறந்தநாள் கொண்டாடும் மது மதி

4) ஷங்கரின் அடுத்தப்படத்துக்கு கேமிரா மேன் ஆக வேலை செய்யப்போகிறவரும், நோய்யினில் விழுந்தவரும், வலையுலக மார்கண்டேயனுமான நந்து தாத்தா of நயன்தாரா

5) ஆராய்சி கட்டுரையும், அறிவியல் சிறுகதையும் எழுதும் இளம் சைன்டிஸ்டும் ,விஜய்க்கு அடுத்தப்படியாக வலையுலகில் டாக்டர் பட்டம் வாங்க தகுதி உடைய ஆளும் ஆன விக்கி என்கிற விக்னேஷ்வரன்

Sunday, October 12, 2008

கார்ட்டூன்ஸ் + செய்திகளும் டவுட்டும்









ஆற்காடு. வீராச்சாமி:மின் தட்டுப்பாடால் வரும் தேர்தலில் தி.மு.க தோற்றுவிடுமோ என்று என்னும் பொழுதுஇரவிலும் தூக்கம்வரமாட்டேங்குது!

பொதுசனம்: நாங்ககூட எங்களுக்கு ஒழுங்கா கரண்டு கொடுக்கமுடியாததையும், நாங்கள் படும் கஷ்டத்தையும் நினைச்சுதான் தூங்கமாட்டேங்கிறீங்ளோன்னுநினைச்சோம்!
****************************************************************
எப்பொழுதும் சென்னை வெளியீட்டு உரிமையை நாங்கள் வைத்துக்கொள்வோம், ஆனால் குருவியில் அது பற்றி பேசிய பொழுதுமுடியாது என்று சொல்லிவிட்டார் தயாரிப்பாளர், எங்களை விட அதிக அக்கறை எடுத்து படவிளம்பரங்கள் செய்தார்கள். --குருவி 150வது நாள் (?????)விழாவில் விஜய்.

பொதுசனம்: படம் ரிலீஸ் ஆகி ரிசல்டை கேட்டப்பிறகு நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் என்று பாட்டுபாடி இருப்பீங்களே!!!
****************************************************************
இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் எப்படி இருக்கவேண்டும்என்று கிரேக் சேப்பல் சொல்லும் யோசனை மிகவும் உதவியாக இருக்கிறது, அவர் நீண்ட காலம் எங்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ரிக்கிபாண்டிங்!

கங்குலி: நீண்ட கால உங்களுக்கு அவர் உதவியாக இருக்கவேண்டும் என்றே நாங்களும் விரும்புகிறோம்! சீரியஸ் முடிஞ்சதும் எனக்கு ஒரு கூட்டாளி கிடைக்கபோறான் டா டோய்!!!

Thursday, October 9, 2008

என்னோட பாஸ்க்கு எல்லோரும் தந்தி அனுப்புங்க!!!

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வலைப்பக்கம் வரமுடியாத அளவுக்கு வேலை, புதுசாக என்னை நம்பி Kodek NexPress s3000 என்ற மெசினை வாங்கி இருக்கிறார் என் டைரக்டர். அதன் மதிப்பு சுமார் 4 1/2 கோடி ஒரு 7 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் உள்ள மெசின் மூன்று பகுதியாக வந்தது அதை பிக்ஸ் செய்ய வந்தது ஜெர்மனியில் இருந்து ஒரே ஒரு ஆள். அதை பற்றி தனி பதிவாக எழுதுகிறேன். வேறு இடத்தில் இதை வைக்கலாம் என்ற பொழுது அழுது அடம்புடிச்சு இங்கேதான் வைக்கனும் என்று சொல்லி வாங்கி வைத்த பிறகு வைக்க இடம் இல்லாமல் என் ரூமையும் இடித்தார்கள், வைத்த பிறகு அதுக்கு டிரைனிங் அது இதுன்னு ஆப்பு மேல் ஆப்பு, இதுக்கு பேருதான் சொ.செ.சூ போல! என்னை வேலை மேல் வேலை வாங்கும் என் பாஸ்க்கு என்னை பிரியாக விடும் படியும் கும்மி அடிக்க கை குறைகிறது என்றும் உடன்பிறப்புகளே தந்தி அனுப்புங்க.

இரு நாட்களுக்கு முன்பு காலை 5 மணிக்கு எல்லாம் டாக்ஸி பிடிச்சு ஆபிஸ் வரும் பொழுது டாக்ஸி டிரைவருக்கு பணம் கொடுத்துவிட்டு பர்ஸை உள்ளே வைக்கும் பொழுது அது தவறி டாக்ஸியிலேயே விழுந்துவிட்டது, கவனிக்காமல் பஸ் ஏற போன பிறகுதான் பர்ஸ் இல்லாதது தெரியவந்தது அதுக்குள் டாக்ஸியும் போய் விட்டது.பஸ் ஸ்டாண்டில் இருக்கும் அலுவலகத்தில் போய் சொல்ல போனேன் அங்கு இருந்தவனுங்களுக்கு ஆங்கிலத்தில் டாக்ஸி என்ற வார்த்தை மட்டும் தான் தெரியும் போல இருக்கு, டாக்ஸி???? அங்கே போ என்று டாக்ஸி நிறுத்தத்தை காட்டினார்கள் காலையிலேயே பர்ஸ் காணாமல் போனது ஒரு சோதனை என்றால் இவனுங்களுக்கு புரியவைப்பது பெரும் சோதனை போல் என்று ஒன்னியும் இல்ல என்று சொல்லிவிட்டு சட்டையில் இருந்த சில்லறைய வைத்து ஆபிஸ் வந்து, எல்லா கிரிடிட் கார்டையும் பிளாக் செஞ்சேன்.

அதில் 475 திர்ஹாமும் (சுமார் 6000ரூபாய்), என்னோட கிரிடிட் கார்ட், டெபிட் கார்ட், லேபர் கார்ட் என்ற சகல வஸ்துக்களும் இருந்தன, லேபர் கார்ட் திரும்பபுதுசாக வாங்கனும் என்றால் சுமார் 15,000ரூபாய் ஆகும் என்றார்கள் என்ன கொடுமை இது என்று வேலைய பார்க்க ஆரம்பித்தேன்.

மதியம் 12 மணி போல் ஒரு போன் வந்தது எடுத்தவர் ஹிந்தியில் பேசினார் ஒன்னும் புரியாமல் என் டிரைவரிடம் கொடுத்தேன் அவர் பேசிவிட்டு சார் உங்க பர்ஸ் கிடைச்சிடுச்சு, அதை ஒருவர் எடுத்துவெச்சுக்கிட்டு போன் செய்கிறார் என்றார், சரி என்று அவரை பார்க்க போனோம், பேக்கரியில் டெலிவரி வேலை பார்க்கும் ஒரு பஞ்சாபி பர்சை கொடுத்துவிட்டு எல்லாம் சரியாக இருக்கா பாரு என்றார், உள்ளே 475 திர்ஹாம் இருக்கு வேறுஎல்லாம் சரியாக இருக்கா பாரு என்றார், பிரித்து கூட பார்க்காமல் எல்லாம் சரியாகதான் இருக்கும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பரிசல்காரனிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பதிவில் அவர் போட்ட பின்னூட்டத்துக்கு பதில் சொல்லமுடியவில்லை என்ன சொல்வது என்று தெரியவில்லை, அவர் போட்டு இருந்த பின்னூட்டம் மூலம் மேன்மக்கள் மேன்மக்களே என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். சாரி பரிசல்!

அபி அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனது இங்கு இருக்கும் அனைவரும் அவர் பதிவை பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டோம், ஒவ்வொருவரும் அவருக்கு என்ன ஆச்சு பக்கத்தில்தானே இருக்கீங்க போய் பார்க்கலையா என்று கேட்கும் பொழுது கோவம் தான் வந்தது. ISD போன் செஞ்சு பேச முடிஞ்சவருக்கு ஒரு லோக்கல் மிஸ்டுகால் கொடுக்கமுடியாமல் போனது ஏன் என்றுதான் தெரியவில்லை.

இங்கு அமீரகத்தில் தினமலர்,மாலைமலர் போன்ற தளங்களை தடைசெய்துவிட்டார்கள், அதனால் அதில் இருந்து படங்களை எடுத்து கார்ட்டூன் போட முடியவில்லை, யாரும் அனுப்பி வைத்தீர்கள் என்றால் நல்லது.


என்னை காணவில்லை என்று தேடிய கார்க்கிக்கு நன்றி:))

Sunday, September 28, 2008

இவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க கூடாது!

மரண தண்டனை கூடாது என்றும் இல்லை இன்னும் தண்டனை கடுமையாக வேண்டும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள், இங்கு(அமீரகத்தில்) குற்றங்களே நடக்கவில்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் தண்டனைக்கு பயந்து குற்றங்கள் குறைந்த அளவிலே நடக்கின்றன.

இரு தினங்களுக்கு முன் ஒரு செய்தியை காண நேர்ந்தது, இருவயது குழந்தையை ஒரு ***மகன் பணத்துக்காக கடத்தி அந்த குழுந்தையை கால்களை பிடித்து ரெயில் தண்டவாளத்தில் தலையை அடித்து கொன்று இருக்கிறான். குழந்தை மூளை சிதறி இறந்து இருக்கிறது, தலை முகம் என்று உரு தெரியாத அளவுக்கு மாறி இருந்து இருக்கிறது, மனதில் வன்மம் எத்தனை இருந்தால் இப்படிப்பட்ட செயலை செய்ய அவனுக்கு மனது வரும்?


நேற்று டெல்லியில் பைக்கில் வந்த இருவர் பையை கீழே விட்டு செல்வதை கண்ட சிறுவன் எடுத்து அவர்களிடம் கொடுக்க ஓடும்பொழுது குண்டு வெடித்து பலியாகி இருக்கிறான். இப்படி எல்லாம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.

ஒரு சாரார் சொல்வது போல் இதுபோல் செயல்களுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது. ஒரு நொடியில் செத்துவிட்டால் அவனுக்கு மற்றவர்களின் வலி தெரியாது. கையை கட்டி விட்டு கொஞ்சமாக ஆண் குறியை வெட்டி விட்டவேண்டும். புண் ஆறுவதற்கு எந்த மருந்தும் தரவும் கூடாது . வேண்டும் என்றால் அதில் மிளாகய் தூளை வேண்டும் என்றால் கூட தடவி விடலாம், தினம் தினம் அந்த வலியாலே அவன் சாகவேண்டும் அப்பொழுதுதான் தவம் இருந்து பெற்ற குழந்தையை இழந்த தாயின் வலி புரியும்.

யார் எங்கு குண்டு வைத்தால் என்ன எவன் எந்த ஏசு சிலையை இடித்தால் என்ன, எவன் கோயிலில் சிலைகளை உடைத்தால் என்ன, இரு மத மக்களும் அடிச்சுக்கிட்டு, வெட்டிக்கிட்டு செத்தால் எவனுக்கு என்ன நஷ்டமாபோச்சு, நமக்கு பதவியும், நாளை அணு ஆயுதஒப்பந்தமும் கையெழுத்து ஆனால் போதும்.

Wednesday, September 24, 2008

வலைபதிவர்களே உங்க பதிவுகள் பத்திரம்- உசார்

வலைப்பதிவர்களே உங்கள் பதிவகளை சிலர் திருடி அங்கு இங்கு என்று போட்டுவிடுகிறார்கள், இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது, அதை தடுக்க வழி ஒன்று இல்லை. பேசாம எழுதாம இருக்கவேண்டியதுதான்.

இங்கு ஒவ்வொருவரும் அவர் அவர் ஸ்டைலில் பதிவு எழுதினால் எப்படி இருக்கும் என்று இனி இங்கு நானே எழுதப்போகிறேன்.

இன்று கோவி.கண்ணன் விபத்தும் உள்ளுணர்வும்!!!

எப்பொழும் நானும் நண்பர் எம்.எஸ் பாஸ்கரனும் குழந்தைகளுக்கு பென்சில் சீவ தோப்புக்கு செல்வோம்,கடந்த முறை அப்படி பென்சில் சீவ வருகிறேன் என்றார்நானும் என் பொண்ணுக்கு டிராயிங் காம்பெட்டிசன் இருக்கு,நிறைய பென்சில் சீவ வேண்டி இருக்கு நானும்வருகிறேன் என்றேன், தோப்புக்கு வந்தபிறகு அழையுங்கள் என்றேன்.

அதன் படி வந்த பிறகு என்னை அழைத்தார்,பின் நானும் அங்கு சென்றேன்.

அவர் தோப்புக்கு வந்த பிறகு பென்சில் சீவ கத்தியை எடுத்தார்!

கத்தியில் சீவலாமா?-எம்-எஸ் பாஸ்கர்

எனது உள் உணர்வு தடுக்கவே.

இப்பதாங்க சப்பாத்தி போட்டுவிட்டு வந்தேன், கை எல்லா ஆயில் வழுக்கும் கத்தி வேண்டாம் என்றேன்.

அவர் நீங்க வேற நான் பூரி, சப்பாத்தி,புரோட்டா எல்லாம் போட்ட கையோடு எல்லாம் பென்சில் சீவ கத்திதான்பயன்படுத்துவேன் நீங்க என்னாடான்னா சப்பாத்தி போட்டேன் கை வழுக்கும் என்று சொல்றீங்களே என்றார்.

இருந்தாலும் என் உள் உணர்வு தடுக்கவே!

வேண்டாம் பாஸ்கர், நாம் ஷார்பனர் வைத்தே சீவலாம் என்றேன்.
ஷார்பனரில் சீவுனா ரொம்ப நேரம் ஆகும் , நான் வந்தால் எப்பொழுதும் கத்தியை வைத்துதான் சீவுவேன்,நீங்க என்னடான்னா இப்படி பயப்படுறீங்களே என்றார்.

மற்ற நாளில் பயம் இல்லை, இன்று சப்பாத்தி போட்டு கை எண்ணெய் ஆக இருக்கிறது, அது மட்டும் இன்றி மீதி சப்பாதியும், அடுத்தமாதம் முழுவதும் நடக்க இருக்கும்பதிவர் சந்திப்புக்கு வேண்டிய பஜ்ஜியும் இப்பயே போட்டு வைக்கனும். அதான் என்று நான் சொன்னேன்.

இருந்தாலும் நீங்க ரொம்ப பயப்படுறீங்க- எம்.எஸ். பாஸ்கர்.

வேறு வழி இல்லாமல் ஷார்பனரை வைத்து சீவ ஆரம்பித்தோம்.
டக் என்று அருகில் இருந்த ஒருவன் கால் இடறி பாஸ்கர் மேல் விழ அவரோடு சேர்ந்து நானும் கீழே விழ, அவர் கையில் இருந்த ஷார்பர் உடைந்து அவர் கையில் குத்திவிட்டது.என் கையில் இருந்த பென்சில் முனை உடைந்து என் கையை குற்றிவிட்டது.எழுந்து பார்த்தார் அவர் கையில் ஒரு சொட்டு இரத்தம். என் கையிலும் காயம்.சட்டையில் வேறு பென்சில்கோடு போட்டுவிட்டது.

பார்த்தீங்களா பாஸ்கர் ஷார்பனர் வைத்து சீவியதால் தப்பித்தோம், இதுவே கத்தி வைத்து சீவி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? என்று அடிப்பட்ட நிலையிலும் கருத்து சொல்ல ஆரம்பித்தேன்.

ஆமாங்க நீங்க சொல்வது சரிதான் என்றார்- எம்.எஸ். பாஸ்கர்

சரி பரவாயில்லை ஒரு ரூலர் இருந்தால் கொடுங்க என்றேன், அவர் திரு திரு என்று முழித்துவிட்டு எடுத்து கொடுத்தார்.பின் கையில் கீறீயதை அளவு எடுத்து வைத்துக்கிட்டேன் பதிவு எழுத. அடிப்பட்டாலும் அங்கேயே இருந்து பென்சில் சீவிவிட்டுதான் வீட்டுக்குவந்தோம்.

வீட்டுக்கு வந்த பிறகு நடந்ததை சொன்னேன், ஆறுதலா கிடைக்கும். ஒரு பென்சிலை கூட ஒழுங்கா சீவி எடுத்துவரமுடியவில்லை அது இதுன்னு செம டோஸ்.

SMS: பென்சில் சீவினா கையில் கிளவுஸ் போட்டுக்குங்க.

(இனி இதுபோல் ஒவ்வொருவரும் எப்படி பதிவு எழுதுறாங்க என்று இங்கே எழுதப்படும், அடுத்து யார் ?)

இந்த பதிவு புரியாதவர்களுக்கு இங்கே கிளிக் செஞ்சு படிச்சுப்பாருங்க

Tuesday, September 23, 2008

இரு நல்லவர்கள் + ஒப்புதல் வாக்குமூலம் + தமிழ்மணம் கவனத்துக்கு அல்ல!!!

நேற்று பரிசலின் இந்த பதிவை அனைவரும் படிச்சு இருப்பீர்கள் , நண்பர் பரிசலை பல்பு வாங்க வைக்கனும் என்று ஆசைப்பட்ட சிங்கப்பூர் வாசிகளுக்காக அந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

சரி பல்பு வாங்க வைக்கனும் கொஞ்சமும் டவுட் வரக்கூடாது நாதாரிதனம் செஞ்சாலும் நாசுக்காக செய்யனுமே! போன் மூலம் விளையாடுவது அலுத்துப்போச்சு அதுமட்டும் இன்றி அது காஸ்ட்லி விளையாட்டும்கூட.
அதனால் மெயில் மூலம் விளையாடலாம் என்றதும் நினைவுக்கு வந்தது அவர் ஏற்கனவே வால் பையனை நட்சத்திரம் என்று சொல்லி ஏமாற்றியது, சரி அவர் ரூட்டிலே போகவேண்டியதுதான் என்று ஒரு g mail ஐடி கிரியேட் செஞ்சேன்.

ஸ்டார் ஆக தேர்ந்து எடுத்தால் எப்படி மெயில் வரும் என்று தெரியலையே, நாமாக ஒரு மெயில் அனுப்பினால் அதை வைத்து கிராஸ் செக் செய்வார்கள் அப்பொழுது அது தெரியவந்துவிடும் என்று , ஏற்கனவே ஸ்டார் ஆன நண்பர்
ஆயில்யனிடம் கேட்டேன் அவரு எனக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சிட்டார்.
ஆஹா சரி இப்படியே மெயிண்டென் செய்வோம் பரிசலுக்கு பல்பு கொடுக்கும் முன்பு எனக்கும் பல்பு வேண்டும் என்று ஆசைப்படும் ஆயில்யனை நான் தான் அடுத்த ஸ்டார் என்று நம்ப வெச்சபிறகு மெயிலை அனுப்புய்யா என்றால் டெலிட் செஞ்சுட்டேன் என்று சொன்னார்.

சரி என்று அடுத்த ஆள் பினாத்தலாரை கேட்டால் நீ ஜட்டி போட்டு திரிஞ்ச காலத்துலேயே ஸ்டார் ஆகிவிட்டேன் அதனால் இம்புட்டு நாள் எல்லாம் அந்த மெயில் என்னிடம் இல்லை என்று சொல்லிவிட்டார், பின் தள சிபி வந்தார் அவரிடம் கேட்டேன் கொடுத்தார் அவரிடம் உண்மையை சொல்லித்தான் கேட்டேன் அவரும் கொடுத்துவிட்டு மற்றவர்கள் வருத்தப்படதா மாதிரி இருக்கனும் என்றார்.

சரி பரிசலுக்கு மெயில் அனுப்பினா அதை அவர் நண்பர் அதிஷாவிடமும் சொல்வார் அப்ப அவரும் நம்பும் படி இருக்கனும் என்பதர்காக அதிஷாவும் சேர்க்கப்பட்டார், தாமிராவையும் சேர்கலாம் என்று நினைச்சேன் ஆனா ஏதோ ஒரு பாசம் கண்ணை மறைத்துவிட்டது.

பின் மெயில் அனுப்பி நடந்த கதையை பரிசல் சொல்லிவிட்டார், சரி விளையாட ஆரம்பிச்ச பிறகு உண்மைய சொல்லிடலாம் என்று திரும்ப சிங்கப்பூர் நண்பர் ஒருவரிடம் பரிசல் நம்பர் கொடுங்க என்றேன் அவரும் அண்ணே அவரை கலாய்கனும் அப்படின்னு நம்பர் கொடுத்தார், பின் இன்னொருவரிடமும் நம்பர் கேட்டு இரண்டும் ஒரே நம்பரா என்று சரி பார்த்த பின் அவருக்கு போன் செஞ்சேன், மனுசன் ஜே.கே ரித்தீஸ் மாதிரி பல முகம் இருக்கு, ஒருவர் பத்திரிக்கை கொண்டு வந்து வைத்து உங்க தலைமையில் தான் கல்யாணம் நடக்கனும் என்றும், ஒருவர் அண்ணே காதுகுத்து உங்க முன்னிலையில் தான் வைக்கனும் என்றும் , ஒருவர் அண்ணே நீங்கதான் என் குழந்தைக்கு பேர் வைக்கனும் என்றும் சொல்லிக்கிட்டு இருந்தனர், நானும் போனில் அண்ணன் இப்பொழுது 2000ரூபாய் மொய் செய்வார் என்று செந்தில் மாதிரி சொல்லிப்பார்த்தேன், ம்ம் அவுங்க காதில் விழவே இல்லை.

பின் அவர் இதுபோல் எனக்கு மெயில் அனுப்பி இருந்தாங்க அது நீங்களா என்றார், ஆம் என்று சொல்ல நினைத்து சொன்னேன் ஆனால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி இல்லை என்று சொல்லிட்டேன், பேசும் பொழுதும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்.

பின் நேற்று பதிவில் கும்மி அடிச்சப்ப மை பிரண்ட் யாருன்னு கண்டுபிடித்துவிட்டேன் என்று சொன்னப்ப சரி நம்ம ஆயில்யன் தான் நான் மெயில் கேட்ட விசயத்தை சொல்லிட்டார் போல என்று ஆயில்யனிடம் தம்பி நான் மெயில் கேட்ட விசயத்தை யாரிடமும் சொன்னீயா என்று கேட்டேன், திரும்பவும் அண்ணே எப்ப ஸ்டார் ஆக போறீங்கன்னு சொல்லுங்க என்று திரும்வும் கேட்க ஆரம்பித்தார், சரி இவருக்கு காந்திய சுட்ட விசயம் தெரியவில்லை போல என்று அடுத்த வாரம் என்றேன்.

பரிசல் பதிவை பார்த்துவிட்டு மெயில் அனுப்பியது யார் என்று தெரிஞ்சும் சொல்லாமல் இருந்த பினாத்தல் சுரேஸ்க்கும், மெயில் அனுப்ப உதவிய சிபிக்கும் என் நன்றிகள்.

குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவருக்குதான் தண்டனை அதிகம் என்று சொல்லுவாங்க. அப்படி எல்லாம் செஞ்சு விக்கிக்கும், வால் பையனுக்கும், சஞ்சய்க்கும் அதிக தண்டனை கொடுத்துவிடாதீங்க.


டிஸ்கி: மெயில் அனுப்பி விளையாண்டா அது என்னடான்னா, பெண் பதிவர்கள், போட்டோ அது இதுன்னு ஸ்பின் ஆனப்ப கொஞ்சம் பயமாகதான் இருந்துச்சு. அப்படியே மெயிண்டெய்ன் செஞ்சாச்சு.

Monday, September 22, 2008

அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை!!!

சிக்கென உடலை பெற தென்னை மட்டை உதவுவதை ஆராய்சியாளர் ஒருவர் கண்டுபிடித்து இருக்கிறார், அதை எப்படி உபயோக்கனும் என்று படங்களோடு சொல்லி இருக்கிறார் பாருங்கள்.

பச்சை தென்னை மட்டையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.
படம் 1
படம் 1: ஒரு கால் கட்டை விரலால் இன்னொரு காலை அழுத்தி பித்துக்கொண்டு கை இரண்டையும் இடுப்பில் வைப்பதால் இரத்தம் காலை நோக்கி அதிக அழுத்தத்தோடு போகும் அதனால் கால் விரல்கள் அழகாகும்.

படம்2
படம்2 : மேலே சொன்ன அதே பொசிசனில் படுத்து, தலையை இடமிருந்து வலமாக திருப்பவும், வேகமாக திருப்பாமல் மெதுவாக திருப்புவது அவசியம், அப்பொழுதுதான் கழுத்து நரம்புகள் வலுவடையும்.
படம்3
படம்3: பின் அதே பொசிசனில் படுத்துக்கொண்டு இடப்பக்கம் திருப்பிய தலையை வலது புறம் திருப்பவும். பலன்கள் மேலே சொன்னதே!

படம் 4

படம் 4: இப்பொழுது கட்டை விரலால் காலை அழுத்தியதால் அதிக இரத்தம் காலுக்கு பாய்ந்துவிட்டது அது போதும், எனவே குதிகாலை அடுத்த கால் மீது அழுத்தாமல் வைத்துக்கொண்டு, கைகளை படத்தில் காட்டியது போல் மாற்றவும், இப்படி செய்வதால் கைகள் ரிலாக்ஸ் ஆகும். அதனால் கைகள் அழகாகும்.


படம் 5
படம் 5: மேலே எடுத்து சென்ற கையால் தலையை கொஞ்சம் வலப்புறம் தள்ளவும், பின் கைகளை மாற்றி திரும்பிய தலையை இடப்புறம் தள்ளவும், இப்படி செய்வதால் கை, கழுத்து ஆகிய இடங்களில் மாற்றம் ஏற்ப்பட்டு அழகாகும்.
படம் 6
படம் 6: அப்படியே படுத்துக்கொண்டு, கைகளை குரங்கு சொறிவது போல் வைத்து இடுப்பை சொறியவும், கைகளை மாற்றி சொறியக்கூடாது, இடப்பக்கத்தை இடது கையாலும், வலது பக்கத்தை வலது கையாலும் சொறியவும், அப்படி சொறியும் பொழுது கைவிரல்களும், இடுப்பும் மெலிந்து அழகாகும்.

படம்7

படம்7: கால்களை அப்படியே வைத்துக்கொண்டு கைகளை பப்பரக்கா என்று விரித்து வைத்துக்கொண்டு படுத்து ரிலாக்ஸ் செய்யவும். மூச்சை மெதுவாக விடவும், இப்படி இருப்பது நுரையீரல் கல்லீரல் போன்றவை பலன் அடையும், வெளி அழகுக்கும் மட்டும் இன்று இது உள் ஆரோக்கியத்துக்கும் பயன்படும்.
படம் 8
படம் 8: ஒரு கை பின்னங்கழுத்தில் வைத்துக்கொண்டு ஒரு கையால் கழுத்தில் போட்டு இருக்கும் மணியை மந்திரம் சொல்லும் பொழுது உருட்டுவது போல் 101 முறை உருட்டவும், அப்படி உருட்டுவதால் நினைவாற்றல் பெருகும்.
படம் 9
படம்9: போட்டு இருக்கும் அரை டவுரை இறுக்கமா பிடிச்சுக்கிட்டு மேலே கீழே கையை பட்டர்பிளை போல் ஆட்டவும் இதனால் முதுகு தண்டு பலமாகும்.
ஆராய்சி செய்தவர்: குசும்பன்
ஆராய்சி மாடல்: நிஷா கோத்தாரி
டிஸ்கி: ஆராய்சி முடிவு பெண்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி இப்படி பக்கத்து வீட்டு பிகர், அல்லது உங்க சைட் யாரும் இப்படி செய்யும் பொழுது தினம் இருமுறை நீங்க பார்த்துவந்தால் போதும் உங்கள் உடல் இளைத்து அழகா ஆகிவிடுவீர்கள்.