Tuesday, July 31, 2007

யார் திருந்தவேண்டும்?

"ஏய் செல்வி என்னடி வயல் பக்கமே வராத சின்ன ஐயா அடிக்கடி வயலுக்கு வருகிறார்?"

"எனக்கென்ன தெரியும் நீயே அவருகிட்ட கேளு"

"அடி சிறுக்கி அவருக்கு உன்ன புடிச்சு இருக்குன்னு என் கிட்ட சொன்னதை, உன் கிட்ட சொன்னதே நான் தான் என்கிட்டயேவா?"

"அதான் விசயம் தெரியுதுல்ல அப்புறம் என்ன நையாண்டி"

"அடியே பார்த்துடி புள்ள பட்டணதில் படிச்ச புள்ள கம்பி நீட்டிட போகுது"

"அக்கா ஒரு சந்தேகம்"

"என்னடி?"

"இல்ல ஒரு மாசத்து புள்ள வயித்தை உதைக்குமா?"

"அடியே எடுப்பட்டவளே என்னடி சொல்லுற"

"ஆமாக்கா ஒரு மாசமாச்சு படவே இல்ல"

"டேய் அவருகிட்ட சொன்னியாடி"

"சொன்னேன் வா இப்பவே அம்மன் கோயிலில் வச்சு தாலி கட்டுறேன் என்கிறார்"

“பார்துடி உங்க அப்பா நிதானத்தில் இருக்கும் பொழுது விசயத்தை பக்குவமா சொல்லுடி”

"எப்படியும் இன்னைக்கு ஆத்தா கிட்ட சொல்லிட போறேன்"

..................................................................................................................
"என்ன டா கருப்பா ஊர்ல ஒன்னும் இழவு சத்தமே கேட்கல நீ என்ன விறகு அடுக்கிகிட்டு இருக்க, யாருக்கு?"

நம்ம ராமய்யா பொண்னு செல்வி வயத்து வலி தாங்காம தூக்கு போட்டுக்கிட்டு அதுக்குதான்.

"அட போங்க டா இதோட இந்த வருசத்துல அஞ்சாவது வயத்து வலி சாவு" பெத்த புள்ள சங்க திருக எப்படிதான் மனசு வருதோ " எப்பதான் திருந்த போறானுங்களோ?

யார திருந்த சொல்றீங்க?

அசினின் அண்ணன் கப்பிக்கு வாழ்துகள்

கப்பி: கை வீசம்மா
கை வீசு கடைக்கு
போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
(அய்யோ என் கண்ணு போச்சே)

அசின் : என்னனா ஆச்சு

கப்பி: வேகமா கை வீசி அண்ணன் கண்னை
நொல்லை ஆக்கிட்டீயம்மா!!!

அசின்: அண்ணா அண்ணா சாரின்னா! பிறந்த நாள் அதுவுமா நல்ல காரியம் செஞ்சுட்டேனா அண்ணா
பிறந்த நாள் வாழ்துகள் அண்ணா...

(எல்லோரும் இது போல் கண்ணுல குத்திட்டு வாழ்து சொல்லுங்கோ!!!!)

சூடானில் இருந்து சங்கத்து சிங்கம் துபாய் ஏன் வந்தது?

வா.வா சிங்கம் (நாகை சிவா) என்ன திடிர் என்று துபாய்க்கு விஜயம் என்று கேட்டால் பதிலே இல்லை.

சந்திப்பின் பொழுது கூட என்ன சூடான் எப்படி இருக்கு என்று கேட்டதுக்கு கூட சூடான் எப்பவுமே முன்னேறாதுன்னு சாபம் வேறு.

என்னடா இப்படி வா.வா சிங்கம் சுனக்கமாவே பேசுதுன்னு

நம்ம அப்பரெண்டிசுகலை விட்டு விசாரிக்க சொன்னா

வா.வா சங்கத்து சிங்கம் சிவாவுக்கு சூடான் பையன் ஒருவன் ஆப்பு அடிச்சு இருக்கிறான்.







இருடி எங்க சங்கத்துல போய் சொல்லி சிபிய அழைச்சிகிட்டு வறேன்!!!
வா வா என் சின்ன புள்ள உதைச்சு விளையாட சிங்க தலை வேனும் என்று கேட்டுக்கிட்டே இருக்கான்...தாராளமா அழைச்சுக்கிட்டு வா!!!

(பாராட்டு எதுவும் இருந்தால் மின்னலுக்கும், அன்பளிப்பு எதுவும் இருந்தால் அதை குசும்பனுக்கும் அனுப்பி விடவும். படங்கள் நன்றி மின்னல்)

Monday, July 30, 2007

காதல் காதல் காதல் கதை

"டேய் பொறுக்கி"

"என்னம்மா"

"எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை டா"

"என்ன? கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா ஆகனுமா? "

பேசுவீயா இது மாதிரி ! பேசுவீயா !

"அடி பாவி சும்மா சொன்னா அதுக்காக இப்படியா வாயிலேயே அடிப்ப ராட்சசி...சொல்லு என்ன ஆசைன்னு. "

"இல்ல உன்ன கல்யாணத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு போய் என் கையால உனக்கு சாப்பாடு பரிமாறி நீ சாப்பிட்டு முடிச்ச இலையில் நான் சாப்பிடனும் டா. "

"சரி வா போகலாம். "

"சீ விளையாடத, அப்பா தோல உறிச்சு உப்பு தடவிடுவாறு. "

"சரி என்ன பண்ணலாம் "

"அடுத்த வாரம் எங்க வீட்டுல எல்லாரும் பெரிய்பா வீடு குடி போறதுக்கு போவாங்க அப்ப எங்க வீட்டுக்கு வா நான் மட்டும் தனியாக தான் இருப்பேன். "

"தனியா இருப்பீயா? அப்ப நான் முதலில்ல்ல்........அய்யோ அம்மா அடிக்காதடி. "



...................................................................................................................
"ஏய் சீக்கிரம் உள்ள வா, யாரும் பார்க்க போறாங்க. "

"ரொம்பதான் டா உனக்கு திமிர் என்னமோ கல்யாணம் ஆன மாப்பிள்ளை மறு வீட்டுக்கு வர மாதிரி அமத்தலா வர்ர. யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க. "

"ஏய் யாருக்கு திமிர் எனக்கா உனக்கா, நானா வர்ரேன்னு சொன்னேன். நீ தானே சாப்பாடு போடனும் ஐயாவோட எச்சி இலையில் சாப்பிடனும் அது இதுன்னு சொல்லி வர சொல்லிட்டு என்ன திட்டுற. "

"பசி உயிர் போகுது முதல்ல சாப்பாடு போடு...இங்க கொடு இலைய நீ போய் மத்ததை எடுத்து வா! "

"முண்டம் இப்படியா டா இலைய போடுவ...ஒரு இலை போட கூட தெரியல புள்ளைக்கு இத எல்லாம் கட்டிக்கிட்ட எப்படி காலம் தள்ள போறேனோ! "

"என்ன டீ இப்படி வச்ச கண்னு வாங்காம பார்கிற... "

"இல்ல இப்படியே உனக்கு காலம் பூரா எந்த பிரச்சினையும் இல்லாம சமச்சு போட்டா எப்படி இருக்கும் என்று நினைச்சேன். "

"அதுக்கு என்ன எங்க வீட்டுக்கு வேலைகாரியா வந்துடு, வச்சு......................... "

"அம்மாமாமா...அடி பாவி அதுக்காக இப்படியா கரண்டியால அடிப்ப. எப்படி வீங்கிடுச்சு பாரு... "

"எங்க...காட்டு... "

"ம்ம்ம் இப்படி அடிபட்டு வீங்கின இடத்தில் முத்தம் கொடுப்பாயா? அன்னைக்கு நீ வாயில் அடிச்சது கூட இன்னும் வீங்கி இருக்கு பாரு. "

"உனக்கு எத்தனை தடவை அடி வாங்கினாலும் புத்தி வராது டா பொறுக்கி. "

............................................................................................................

"டேய் குமார் இந்தா போய் இத அந்த ஆளுக்கிட்ட கொடு. "

"போம்மா எனக்கு வேலை இருக்கு. "

"ரெண்டு புள்ள பெத்தாச்சு ஒரு சல்லி காசுக்கு பிரோசனம் இல்ல இதுல மல்லாக்க படுத்துக்கிட்டு கணவு...வேற "

"அவள் வைத்த வேகத்தில் முகத்தில் தெரித்த காப்பி துளியினை துடைத்து கொண்டு டீவியை போட்டால்.... "

அசின் விஜயிடம் ....டேய் வர்ர வெள்ளி கிழமை வீட்டுக்கு வா சமைச்சு வைத்து இருப்பேன் உனக்காக.

பல கவலைகளையும் மீறி சிரிப்பு தான் வருகிறது.
.........................................................................................................

Sunday, July 29, 2007

செய்திதாளுக்கும் சரோஜா தேவிக்கும் வித்தியாசம் இல்லை

ஏன்டா உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா? ஏதோ அதுங்கதான் தப்பு செஞ்சுதுங்கன்னா? அத போட்டோ போட்டு காட்சிகளுக்கு விளக்கும் கொடுத்து இப்படியா டா எழுதுவீங்க?

"இளம் ஜோடி கேபினுக்குள் சிரித்தபடி அமர்கிறார்கள், பக்கத்து கேபினில் உள்ளவர்கள் தங்களை கவனிக்கிறார்களா என்று பார்கிறார்கள், பின் அந்த மாணவர் மாணவியை லேசாக தொடுகிறார். அவர் சிணுங்குகிறார் பிறகு சம்மதம் தெரிவிக்கிறார், முடிவில் இருக கட்டி பிடித்து கொள்கிறார்கள்.................................................................................... "

மேலும் உள்ள மிச்ச காட்சிகள் இங்கு சென்சார் செய்ய பட்டு உள்ளது என்று சொல்லி விட்டு அவர்களின் அடுத்த அடுத்த படத்தை போட்டு பிசரிப்பது தான் பத்திரிக்கைதர்மமா?"


வீனாக அந்த செய்திதாள் பெயரை கொடுத்து அவர்களுக்கு விளம்பரம் தர விருப்பம் இல்லை.

இதை எல்லாம் தடுக்க சட்டம் இருக்கிறதா? இல்லையா?

Saturday, July 28, 2007

வேக்கன்சி - விமர்சனம்

ஐந்தே ஐந்து பேர் + ஒரு மோட்டலில் ஒரே ஒரு ரூம் இதை வைத்து என்ன செய்யமுடியும்,என்று நிர்மோட் அன்டெல் (இந்த படத்தின் டைரக்டர்)யிடம் கேட்டால் உங்களை பயப்படும் படி படம் எடுக்க என்னால் முடியும் என்று சொல்வார் போல் இருக்கிறது.

நள்ளிரவில் நெடுந்தொலைவு பயனிக்கும் லக் வில்சனும் (ஹீரோ) கேட் பெக்னீசல் (ஹீரோயினும்) வென்ஹெல்சிங், அன்டர் வேர்ல்ட் படங்களில் நடித்தவர்.


பாதி தூரத்தில் மலை பாதையில் போகும் காருக்கு குறுக்கே பூனை ஓடி வர சடன் பிரேக் போட்டு நிறுத்திய அவர்கள் நம்ம டைரக்டர் சங்கருக்கு போன் போட்டு இனி பயனத்தை தொடரலாமா கூடாதா என்று கேட்டு இருந்தால் அவர்கள் அத்தனை பெரிய பிரச்சினையில் மாட்டி இருக்க மாட்டார்கள்.

கேஸ் நிரப்ப ஒரு மோட்டலில் நிறுத்துகிறார்கள்அங்கு வண்டியை சரி செய்யும் அவர்கள் கையில் மத்தா"ஆப்பு" ஒன்றை கொடுத்து அனுப்புகிறான் மெக்கானிக் கொஞ்ச தூரம் போன கார் ரிப்பேர் ஆகிவிட திரும்பவும் மோட்டலுக்கு வருகிறார்கள், அங்கு ரூம் எடுத்து தங்கும் அவர்கள்அறையின் கதவை தட தட என்று தட்டும் சத்ததில் அவர்கள் மட்டும் அல்ல நாமும் கொஞ்சம் அரண்டு தான் போகிறோம்.


அறையில் இருக்கும் டீவியை போட அது வேலை செய்யாததால் அங்கு இருக்கும் V.C.R ல் (நம்ம C.V.R அல்ல) கேசட்டை போட அந்த அறையில் அதற்கு முன் தங்கி இருந்தவர்கள் எப்படி கொலை செய்யபட்டார்கள் என்பது ஓடுகிறது, அடுத்து நாம் தான் என்றும் அவர்களுக்கு தெரிய வருகிறது, அறை முழுவதும் கேமிராவால் கண்கானிப்பது தெரிந்தவுடன் மேலும் கலவரமாகிறார்கள். அங்கிருந்து அவர்கள் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிகின்றன.

கொல்பவர்கள் யார் ஏன் கொல்கிறார்கள் அவர்களிடம் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து "கொல்லு"ங்கள்.

ஆரம்பத்தில் சுமாராக போகும் படம் போக போக வேகம் எடுக்கிறது.
படம் முழுவதும் இருவர் மட்டுமே வந்தாலும் அதன் பாதிப்பு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. அருமையாக போர் அடிக்காமல் என் பணி உங்களை பயமுறுத்துவது மட்டுமே என்று தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார் டைரக்டர்.


ரொம்ப வித்தியாசமான, அதிகமான கிராப்பிக்ஸ், தலைவலிக்கும் படி சத்தம், மிக பிரம்மாண்டம் அப்படி ஏதும் இல்லாமல் அழகாக எடுத்து இருக்கிறார். பாதி நேரம் மீயுசிக் இல்லாமல் இருப்பதே நம்மை கலவரப் படுத்துகிறது. மீதி நேரம் நம்மை பயமுறுத்துவதும் மியுசிக் தான்.

படத்தை மிக சிறந்த சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டரில் பார்பது நல்லது.

Wednesday, July 25, 2007

குங்குமம் வைத்து பிறந்த நாள் கொண்டாடும் ரவி

இன்று பிறந்த நாள் கொண்டாடும் செந்தழல் ரவி இதுபோலவே ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் கொண்டாட வாழ்த்தும் நண்பர்கள் & பாசகார குடும்பம்.

தலைவர் கொரியா போனதில் இருந்து ஒரு மார்கமாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே!!!


நேற்று குங்கும் இல்லை என்று போட்டோ போட்டவர் இன்று அந்த பெண்களுக்கு இவர் பிறந்த நாள் பரிசாக குங்குமம் வைத்துவிட்டு பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார் எப்படி என்று பாருங்கள்...வயிறார சாரி மனமார வாழ்துங்கள்.






Monday, July 23, 2007

பசி











Friday, July 20, 2007

தமிழ் மணத்தில் இருந்து விடை பெறுகிறேன்...

கடைசியாக தீர்மானித்து விட்டேன் தமிழ் மணத்தில் இருந்து விடை பெறுவது என்று. இத்தனை நாள் நீங்கள் எனக்கு கொடுத்து வந்த ஆதரவையும் மீறி, உங்கள் அன்பையும் மீறி இந்த முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளபட்டு விட்டேன்.

பல நாட்கள் குழப்பத்திற்கு பிறகு இந்த முடிவு,
பல நாள் இதனால் தூங்காமல் இருந்திருக்கிறேன்,
ஏன் இப்படி? எதனால்? எதற்கும் விடை இல்லை.

ஏன் இந்த முடிவு என்று பலருக்கு ஆச்சிர்யமாக இருக்கலாம்,
இருந்தாலும் வேறு வழி இல்லை.

பல பேர் பல முறையில் விடை பெற்று இருக்கிறார்கள், நான்
கொஞ்சம் வித்தியாசமாக விடை பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் எனக்கு சந்தோசமாக விடை கொடுங்கள்.


1 + 1 = ???

தயவு செய்து விடை கொடுங்கள்.

(இளா போட்டோம்ல ஒரு மொக்கை)

Thursday, July 19, 2007

தொட்டில் கைதி------no குசும்பு

இதை பல நாட்களாக கவனித்து வந்தாலும் இன்றைக்கு தான் கோபப்படும் படி அதை பார்க்க நேர்ந்தது.

அப்படி என்ன பார்த்தாய் என்கிறீர்களா, குழந்தையை வைத்து தள்ளி போகும் தள்ளு வண்டி, ஒரு 1 வயது குழந்தை அழகா, கொழு கொழுன்னு இருந்துச்சு. பார்க்கவே ஆசையா இருந்துச்சு தள்ளிக்கிட்டு போய் கிட்டு இருந்தவன் பெடஸ்ட்ரீயன் கிராஸ்யை கவனிக்காமல் இறங்கினப்ப டப்புன்னு வண்டி
குப்புற விழுந்துட்டு, விழுந்ததுல குழந்தைக்கு அடி பட்டுச்சா இல்லையான்னு தெரியவில்லை வண்டியை தூக்கி நிமிர்த்தி விட்டு அப்படியே அந்த குழந்தையை அதிலேயே வைத்து ரெண்டு பேரும் சண்டை, அட பாவிங்களா தூக்கி புள்ளைய எங்க அடி பட்டு இருக்குன்னு பார்பீங்களா அத விட்டுட்டு சண்டை.
மிஞ்சி மிஞ்சி போனா அந்த குழந்தை என்ன ஒரு ஐந்து கிலோ இருக்குமா, கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக இருந்தால் கூட பரவாயில்லை, பிறந்து சில மாசமே ஆன குழந்தைகளை அந்த வண்டியில் வச்சு தள்ளிக்கிட்டு
போற அழகை பார்கனுமே, அப்படியே பத்திக்கிட்டு வரும்.

பச்ச புள்ளய அந்த வண்டியில் போட்டு கைகளை ஒரு டேப்பால் அசைக்க முடியாத படி கட்டி, கால்களை கட்டி,பார்க்க ஏசுவை சிலுவையில் அறைந்த மாதிரி. அந்த வண்டிய ரோட்டுலேந்து நடை பாதைக்கும், பின் ஷாப்பிங்
மால்க்கும் அங்க இங்கன்னு போட்டு அலைகழிச்சு, அந்த பிஞ்சு குழந்தைகளை பார்த்தா பாவமா இருக்கு, வண்டியில் போகும் பொழுது குலுங்கினா நமக்கே இப்படி இருக்கே குட்டி பாப்பாங்களுக்கு எப்படி இருக்கும், அத அழகா அம்மா கையில் அரவணைத்து நெஞ்சோடு
சேர்த்து அதுக்கு பத்திரமாதான் இருக்கோம் என்கிற பாதுகாப்பு உணர்வை கொடுத்து தூக்கி கொண்டு போன பெண்கள் எல்லாம் லெமூரியா கண்டத்தோட வழக்கொடிந்து போய் விடும் போல...

Wednesday, July 18, 2007

டிராண்ஸ்பார்மர்

எனக்கு என்னவென்று தெரியவில்லை நம்ம சனி பகவான் உச்சத்துல நின்னுக்கிட்டு டிஸ்கோ ஆடுகிறார், ஆமாங்க என்னத்த சொல்லுறது எங்க போனாலும், ஆப்பு தேடி வந்து பர்பெக்டா அது அது இடத்துல பிக்ஸ் ஆகிக்கிறது.


இப்படி தான் போன வாரம் மின்னலின் அன்பின் அனைவரும் விறைத்து வந்தது தெரியும், தெரியாதவுங்க இங்க படிச்சுக்குங்க.

அங்க எல்லாரும் போய் ஒரு இடத்துல போய் உட்கார்ந்தாங்க நான் மிகவும் கஷ்டப்பட்டு உட்கார முடியாம உட்கார்ந்தா அங்க பார்த்தா கட்டெறும்பு புற்று இருக்கனும் அதுங்க பங்குக்கு ரெண்டு கடிச்சுடுச்சு ய்ப்பா புள்ளைங்களா எறும்பு கடிக்குது இங்க படுக்காதீங்கய்யான்னா எங்களை எல்லாம் கடிக்காது என்று படுத்து இருந்தாங்க அது மாதிரி அவுங்கள எல்லாம் கடிக்கவில்லை. இந்த கடியாவது பரவாயில்லை



போன வாரம் போய் பார்கலாம் என்று பார்த்த படம் டிரான்ஸ் பார்மர்ஸ்.
அவன் அடிச்ச ஆப்பு இருக்கே, அம்மா சாமி எங்க தானே தலைவர் விஜயகாந்தின் நரசிம்மாவை கூட 10 முறை பார்த்துவிடலாம் இத ம்ம்ம்ம்ம்

கதை முதல்ல Gulfல் ஸ்டார்ட் ஆகிறது, Gulf டேரா போட்டு இருக்கும் அமெரிக்கா ஆர்மி இருக்கும் இடத்துக்கு சொன்ன பேச்சு கேட்காம ஒரு பிளைட் வருகிறது அதை எல்லாரும் ரவுண்ட் கட்டுகிறார்கள், அது என்னடான்னா டக்குன்னு காத்தாடி எல்லாத்தையும் டக் டக்குன்னு சுருட்டிக்கிட்டு கம்பீரமாய் ஒரு ரோபவா எழுந்து நிக்குது, ஆகா படம் ஜூப்பர் போல என்று நினைத்தேன். அங்க இருக்கிற எல்லாத்தையும் காலி செய்கிறது அந்த ரோபோ.

அதே நேரத்தில் காலேஜில் படிக்கும் ஒருவன் தாத்தாவோட கண்ணாடிய ஏலம் விட பார்கிறான், அந்த கண்ணாடிக்குள் தான் எல்லா மர்மமும் அடங்கி இருக்கு ,அந்த கண்ணாடிய தேடி கெட்ட ரோபோஸுக்கும் , நல்ல ரோபோஸுக்கும் போட்டி. நல்ல ரோபோ என்ன செய்கிறது இந்த பேராண்டிக்கு கார் மாதிரி உருவம் எடுத்து வந்து மக்களை காக்க வந்து
இருக்கிறது நல்ல ரோபோ.

பிறகு வழக்கம் போல என்ன செய்வது என்று பெண்டகனில் மண்டைய உடைத்து கொள்கிறார்கள்.

இந்த படத்துல என்ன விசேசம் என்றால் நல்ல ரோபோங்களுக்கும் கெட்ட ரோபோங்களுக்கும் நடக்குற சண்டையில் உடைகிறது நம்ம மண்டை அப்படி இருக்கிறது சண்டை.

கடைசியா நம்ம ஹீரோ ரக்பி பால எடுத்துகிட்டு ஓடிவது போல் ஒரு சதுர வடிவ டிரான்ஸ்பார்மரை எடுத்துக்கிட்டு ஓடுகிறார் ஓடுகிறார் வாழ்கையின் விளிம்புக்கே ஓடுகிறார். கடைசியா அத கெட்ட ரோபோ நெஞ்சுக்கு நேரா காட்டி அத சாக அடிக்கிறார் ஹீரோ. (நம்மளையும் தான்).

கிராபிக்ஸ் கலக்கலா இருக்கு...அதுக்கா படம் பார்க்க போகலாம் என்று முடிவு செஞ்சீங்கன்னா. "விதி வலியது"

Tuesday, July 17, 2007

ஜெயா டீவி பின்னொலி

வணக்கம் நேயர்களே! இது கடந்த வாரத்தில் ஓளி பரப்பான நிகழ்சிய பற்றி ஆயிரகணக்கான நேயர்கள் தங்கள் கருத்துக்களை கடிதம் மூலம் தெரிய படுத்தி இருக்காங்க அதை பற்றிய நிகழ்சி தான் இந்த பின்னொலி.

நிகழ்சிக்கு போகலாம் ...ம்ம்ம் படிங்கம்மா.

சார் குவாட்டர் கோவிந்தன் என்பவர் எழுதி இருக்கிறார்.
நான் தவறாமல் ஜெயா டீவியை பார்த்து வருகிறேன், அதில் ஒளிப்பரப்பாகும் எல்லா நிகழ்சியும் நன்றாக இருக்கிறது, குறிப்பா நைட் 12 மணிக்கு மேல போடும் மிட் நைட் மசாலவை, சிக்கன் மசால வச்சுக்கிட்டு ஒரு குவாட்டர் பாட்டிலோடு பாரு சார் அப்ப தான் அதன் அருமை தெரியும், என் கூட்டாளிங்க கூட இதையே நீங்க "புல்" டைம்மா போட மாட்டீங்களான்னு கேட்கிறாங்க சார்.

நன்றி குவாட்டர் கோவிந்தன் உங்கள் யோசனைக்கு நாங்கள் செயல் படுத்த முயற்சி செய்கிறோம்.

அடுத்து வியாழன் அன்று ஓளி பரப்பான வலைப்பூ பற்றி பல கடிதங்கள் வந்து இருக்கிறது.
அதுல குறிப்பா பூக்கடை தெரு பூபாண்டி என்பவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

ஐயா கடந்த பல வருடங்களாக உங்க டீவியில் ஓளி பரப்பாகும் பல விவசாய நிகழச்சிகளை பார்த்து சிறந்த முறையில் பூ விவசாயம் செய்து பூ வியாபாரம் செய்து வருகிறேன், ஆனால் வியாழன் அன்று ஒளி பரப்பான வலைபூ பற்றி நிழச்சியில் வந்த பால பாரதி என்பரிடம் பல பேர் பல கேள்வி கேட்டாங்க(ஒழுங்கா பதில் சொல்ல அது வேற விசயம்), ஆனா வலை பூ பதிய விதை எங்கே கிடைக்கும், அது பூக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்ற கேள்விய கேட்கவில்லை, அதன் விபரங்களை கேட்டு சொன்னால் உபயோகம் ஆக இருக்கும்.

நன்றி பூபாண்டி, பல பேர் பல கேள்வி இது சம்மந்தமாக கேட்டு இருக்கிறார்கள் அவரிடம் கேட்டு விவரம் புரிந்தால் சொல்கிறோம்.

(முதல் கேள்வியும் அடுத்த கேள்வியும் ஏதேச்சையாக தான் அடுத்து அடுத்து படிக்க பட்டது இதில் எந்த உள் குத்தும் இல்லை)

Friday, July 13, 2007

ஐஸ் கட்டியில் நடந்த அமீரக பதிவர்கள் சந்திப்பு

வியாழக் கிழமை
மாலை 4 மணி போல் மகேந்திரன்.பெ போன் செய்து இன்று இரவு சந்திக்கலாமா என்றார், சரி சந்திப்போம் அபி அப்பாவும் அவர் இருக்கும் அல்கூஸ் (அவர் தங்கி இருக்கும் இடம்)வர சொல்லி இருக்கிறார், நீங்க என் ஆபிஸ்க்கு மாலை 7 மணிக்கு வந்தால் நாம் இருவரும் அங்கு செல்வோம் என்று "பிளான்" செஞ்சு மகி சரியாக 9.45 க்கு வந்தார், 8 மணிக்கு வண்டி அனுப்புகிறேன் என்று சொல்லிய அபி அப்பா சரியாக 7.59 க்கு போன் செய்து நீங்க இரண்டு பேரும் ஒரு டேக்ஸியில் வந்து விடுங்க காலையில் இங்கிருந்து மின்னலை பார்க்க போகலாம் என்றார். அடிக்கடி தம்பி போன் செய்து அபி அப்பாவை நம்பி போகிறாயா உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது என்றார்.

ஒரு வழியாக என் ஆபிஸ் காரிலேயே அபி அப்பா இருக்கும் இடம் அடைய 10.15 ஆனது. அவர் காத்திருந்து எங்களை அழைத்து சென்றார், பின் சாப்பிட்டு விட்டு டைனிங் ஹாலில் உட்கார்ந்து மூன்று பேரும் பேசினோம், பல முறை "HOT" ஆனா விவாதங்கள் நடந்தது இது இப்ப முடியாது போல இருக்கு என்று நான் ஒரு இரண்டு மணி போல் கிளம்ப முயன்ற பொழுது வலை பதிவர் மாநாடு நடக்கும் பொழுது வெளி நடப்பு செய்தால் குசும்பனை கொளுத்துவோம் என்றார்கள், முதல் அதிர்சி இப்ப நாம பேசிக்கிட்டு இருந்தது மாநாட்டிலா என்று. பின் ஒரு வழியாக 3 மணிக்கு நான் போய் படுத்தேன், இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை என்று . இப்படியாக முதல் வலை பதிவர் (????) முடிந்தது.

வெள்ளி கிழமை

காலை சரியாக 7 மணிக்கு எழுந்து அபி அப்பாவை தேடினால் அபி அப்பா மாநாடு நடந்த இடத்திலேயே ரொம்ப டயர்ட் ஆகி படுத்து இருந்தார். போய் எழுப்பினால் குசும்பன் எப்ப வந்திங்க என்றார்(??? அவர நான் எழுப்ப பட்ட பாடு இருக்கே அத எழுதனும் என்றால் மூன்று பக்கம் ஆகும்). பின் ஒரு வழியாக எல்லாரும் வந்து புறப்பட மணி 11 மணி ஆகி விட்டது , பின் அங்கிருந்து அனைவரும் மின்னுது மின்னல் இருக்கும் அல் அலைன் போய் சேருவதற்குள் மணி 1 ஆகி விட்டது.

அங்கு மின்னல் வேலை செய்யும் fun city சென்றோம், மின்னல் லேசாக ஆட்டம் கண்டார் ஏன் ஏன்றால் போய் இறங்கியது 14 பேர். அனைவரையும் அங்கு இருக்கும் ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து சென்று முழு கோழி(கவிதாயினிக்கு கொடுக்கு) ஒன்றை சாதத்தில் புதைத்து வைத்து அவர் அன்பை அதில் போட்டு கலக்கி ஒரு விருந்து கொடுத்தார். (இது வரை நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு!!!)

சாப்பிட்ட பின் அய்யனார் நாம எல்லாம் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும், என்றார் நானும் சாமிய வேண்டிக்கிட்டு தாய கட்டைய உருட்டி ஒரு "தாயம்" கேட்டேன் நான் கேட்ட படி தாயம் விழுந்தது அதனால் சொன்ன படி தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றோம்.

மின்னல் என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ தெரியவில்லை எங்களை எல்லாம் ஒரு பாழடைந்த பங்களாவுக்கு அழைத்து சென்றார்.அப்பயே எனக்கு மாப்பு வைக்க போறான் ஆப்பு என்று தம்பியிடம் சென்னேன். உள்ளே போனால் உறை பணி விளாயாட்டு மைதானம் நாம எல்லாம் எங்க ஊர்லேயே கோடை காலத்தில் வாக்கிங்கும் குளிர் காலத்தில் ஸ்கேட்டிங்கும் போன ஆள் அதானால் சும்மா தில்லாக ஸ்கேட்டிங் டூல்ஸ் கேட்டால் அங்கு இருந்தவன் என் ஷூவை பிடுங்கி வைத்து கொண்டு கீழே இரும்பு பட்டை வைத்த ஷூவைக் கொடுத்தான்.

கால்ல மாட்டிக்கிட்டு போய் மைதானாத்தில் இறங்கினால் "டமார்" என்று சத்தம் என்னடான்னு பார்த்தா நான் கீழே விழுந்து கிடக்கிறேன்.சரி எழுந்திருக்கிலாம் என்று முயற்சி செய்து முயற்ச்சி செய்து ரொம்ப டையர்ட் ஆகி அப்பா முடியல மின்னல் ஏம்பா இப்படி செஞ்சிட்ட என்றால் நீ எட்டு போட என்னை ஏன் கூப்பிட்ட அதுக்கு தான் என்றார். எங்க இதுல ஒரு எட்டு போடு குசும்பா என்கிறார், நானே தவழ்ந்து கிட்டு இருக்கேன் என்ன போய்!!! உன்ன 8 போட கூப்பிட்டதுக்காக காதலன்ல பிரபு தேவாவுக்கு ஐஸ் படுக்கை போல என்னை வச்சுட்டியே என்று சொல்லி முடிக்ககிறதுக்குள் டமால் டமால் டமால்.... கோபி, அபி அப்பா, சென்சி எல்லாம் அப்பதான் நம்ம பொசிசனுக்கு வந்துக்கிட்டு இருந்தாங்க. ஒரு இரண்டு மணி நேரம் எழுந்து நிற்க போராடி போராடி "பாடி டோட்டல் டேமேஜ்" சரி எல்லாம் அப்படியே அங்கேயே உட்கார்ந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைய பற்றி பேசினார்கள். ஆக முதன் முதலில் ஐஸ் கட்டியில் படுத்து, உட்கார்ந்து கொண்டு மாநாடு நடத்திய பெருமையை அமீரகம் தட்டி செல்கிறது.

மின்னல் ஒரு சின்ன பையனை கூப்பிட்டு இவருக்கு எப்படி ஸ்கேட்டிங் போகனும் என்று சொல்லிகுடேன் என்றார் அவன் முதல்ல எழுந்து இவன ஒரு நிமிசம் நிற்க சொல் மிச்சத்த அப்புறம் பார்கலாம், இவனுக்கு சொல்லி கொடுக்க முடியாது என்னையும் சேர்த்து தள்ளி விட்டுவிடுவான் என்றான். உடம்பு தான் டேமேஜ் என்றால் என் இமேஜயும் டோட்டல் டேமேஜ்.

(அவன் தான் இவன்)


அடுத்து ஒரு ராட்டினத்துக்கு அழைச்சுக்கிட்டு போனார் ஏற்கனவே சேதாரம் கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சி...முடியல மின்னல் இருய்யா என்று சொன்னால். ஒரு ஸ்ப்ரே எடுத்து அடித்து விட்டார் வீக்கம் குறைந்து, லேசா வலியும் குறைந்தது. இதுக்கு பேர் தான் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறது போல...

அடுத்து ஒரு கூண்டுக்கு அழைச்சிக்கிட்டு போனார். போய் உட்காந்ததும் அது சுத்த ஆரம்பிச்சு பாருங்க அம்மே...சொம்புக்குள் ஒரு கல்லை போட்டு உண்டியல் குலுக்கவது போல் குலுக்கி எடுத்துச்சு இறங்கி கெத்தா ஆங் இன்னொரு ரவுண்ட் போகலாமா என்று சொல்ல நான் பட்ட பாடு. யப்பா கண்ண கட்டிடுச்சு.

எல்லாருக்கும் ஆரத்தி தட்டு தான் சுத்துவாங்க ஆனா இவரு டிபிரண்டா, ஆரத்தி தட்டுல உட்கார வச்சி இப்படி பத்து சுத்து அப்படி பத்து சுத்து சுத்தி நிப்பாட்ட போகும்பொழுது என்னமோ போய் அந்த ஆப்ரேட்டர் கிட்ட காதில் கிசு கிசுத்தார்... அடிச்சான் பாருங்க அடுத்து இன்னொரு 20 சுத்து...எல்லாம் கலங்கி போச்சு..அப்புறமா அவன் கிட்ட போய் என்னய்யா சொன்னார் மின்னல் என்றால் ..எல்லாம் எனக்கு வேண்டியவுங்க நல்லா "கவனி" என்று சொன்னார் என்றான்..மின்னல் அம்புட்டு நல்லனாய்யா நீ...

இப்படி எல்லாரையும் நன்றாக கவனித்து பதிவர் சந்திப்பை சிறப்பு செய்த மின்னலை தனியாக எல்லாரும் வாழ்தினோம்.
அப்பொழுது கோபி மாயவரம் சந்திப்பை பற்றி சொல்ல நான் ரொம்ப மிஸ் செஞ்சுட்டேன் என்று பீல் செய்வதை பார்த்த அபி அப்பா,அங்கு சந்திப்புக்கு வந்த கண்மணி அக்கா, முத்துலெச்சுமி அக்கா, காயத்ரி பாட்டி, ஜெயந்தி, ராம் எல்லோருக்கும் டிக்கெட், விசா எடுத்து வந்து உனக்காக இங்கு ஒரு மாநாடு நடத்துகிறேன் குசும்பா கவலை படாதே என்றார். ஆகையால் சம்பந்த பட்டவர் அனைவரும் அபி அப்பாவுக்கு பாஸ்போர் காப்பி அனுப்பும் படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

மாலை புறப்படும் முன்பு முத்துகுமரன் போன் செய்து விசாரித்தார். காலையில் மங்கை அக்காவிடம் போனில் சந்திப்பு பற்றிய விவரங்களை சென்ஷியும், அபி அப்பாவும் சொன்னார்கள்.

இப்படியாக பல நல்ல விசயங்கள் பேசி (அது தனி பதிவு) முடிவுக்கு வந்தோம்.

ஏ ஏ எல்லாம் பாத்துக்குங்க பாத்துக்குங்க பாத்துக்குங்க நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் மாநாட்டுக்கு(????) எல்லாம் போய் வந்து இருக்கிறேன்.

சந்தித்தவர்கள்
அபி அப்பா, மகேந்திரன்.பெ ,அய்யனார்,தம்பி, கோபி ,சென்ஷி, மின்னல், லியோ சுரேஷ் ,நான், பிறகு அனானி 5 பேர்.

Thursday, July 12, 2007

சிபி vs பால பாரதி

சிபி: என்ன தல


பா.பா: மொட்ட தல

சிபி: வேண்டாம் கடிக்கிறது நிறுத்துக்கிங்க

பா.பா: நீ கவுஜ போடுறத நிறுத்து.

சிபி: சரி நம்ம சண்டைய இப்ப நிறுத்திப்போம் டீவிக்கு பேட்டி கொடுக்க போறத சொல்லாம எப்படி போகலாம்.

பா.பா: சொன்னா எல்லாரும் டீவியா ஆப் செஞ்சுடுவீங்க அதனால தான்.

சிபி: நான் வெள்ளி கிழமை f tv யில் வர போவதை தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கிட்டீங்க.

பா.பா: என்னது f tv யிலயா?

சிபி: ஆமா கொங்கு மார்க பனியனுக்கு மாடலா வர போறேன். அத பார்த்து பிரிஞ்சு போன நயண் என் கூட வர போவுதா இல்லையான்னுபாருங்க.
சரி பேட்டியில என்ன கேட்டாங்க.

பா.பா: ஒருத்தன் போன் போட்டு நீங்க பாஸா இல்ல மொட்ட பாஸான்னு கலாய்கிறான்.

ஒருத்தன் நீங்க அடிக்கடி சொல்லுற ங்கொய்யால அப்படின்னா என்னான்னு கேட்கிறான்.

ஒரு பொண்னு போன போட்டு ரோஜாப்பூ, குஷ்பூ தெரியும் அது என்னா வலைப்பூன்னு கலாய்குது.

அப்பொழுது சிபியிடம் இரண்டு பேர் வந்து ஐயா நீங்க சொன்ன மாதிரி போன் போட்டு பாலபாரதிய கலாய்ச்சிட்டோம் பேசிய படி பணத்த கொடுங்க என்று கேட்க .

அதன் பிறகு எடுத்த போட்டோதான் இது...



(ஜெயிக்க போவது யாரு சிபி மேல ஐந்து வச்சா பத்து, பால பாரதி மேல பத்து வச்சா 30)

படம் அனுப்பி உதவிய : மகிக்கு நன்றி

Tuesday, July 10, 2007

மாட்டு வண்டி பயணம்

எங்க வீட்டுல ஒரு கூண்டு வண்டி இருந்தது, அப்ப சினிமா, ஆஸ்பிட்டல் என்று அருகில் இருக்கும் டவுனுக்கு போகனும் என்றால் மாட்டு வண்டிதான் ஒரே வழி. மாட்டு வண்டியில போறது என்றாலே ஒரு தனி குஷி வந்துடும். அதிலும் முன்னாடி வண்டி ஓட்டுபவர் சீட்டுக்கு பக்கத்திலும், பின்னாடி கடைசி சீட்டிலும் இடம் பிடிக்க ஒரு போட்டி இருக்கும், அப்படி என்ன முன் சீட்டுல விசேசம் என்றால் அவரு பக்கத்துல உட்காந்துக்கிட்டு அப்ப அப்ப தார் குச்சி வாங்கி மாட்டை லேசா ஒரு அடி அடித்து விட்டு ஹேய் ஹேய் என்று சத்தம் கொடுத்து கிட்டு உட்கார்ந்தா, நாம என்னமோ ஏரோ பிளேன் ஓட்டுர ஒரு சந்தோசம் வரும்,பின் சீட்டுல என்றால் கீழே விழாம இருக்க ஒரு கம்பி லாக் இருக்கும் அதை பிடித்து கொண்டு உட்காந்து நாம முன்னாடி போக பின்னாடி போகும் மரம் எல்லாத்தையும் வேடிக்கை பார்க்கலாம். பருவ பெண்கள் யாரும் வண்டிகுள் இருந்தால் முன்னும் பின்னும் திரை போட படும்.
இப்ப பைக்க ஸ்டார்ட் செய்யிறப்ப பெட்ரோல் இருக்கான்னு பார்கிற மாதிரி வண்டி சக்கர லாக் அச்சாணி இருக்கிறதா என்று சரி பார்பார்கள்.



மாட்டு வண்டியில் இரண்டு உண்டு ஒன்று கூண்டு வண்டி, மற்றொன்று கட்ட வண்டி கூண்டு வண்டிதான் வெளியே போய் வர பயன் படும் கார்,இதன் சக்கரத்தில் ரப்பர வளையம் பொருத்த பட்டு இருக்கும் அதனால் குலுங்கள் கொஞ்சம் குறையும்,கட்ட வண்டி விவசாயத்துக்கு பயண் படும் வண்டி உர மூட்டை, நெல் மூட்டை எல்லாம் அடுக்கி எடுத்து போகும் எங்கள் லாரி.

கூண்டு வண்டி
பயணம் மிகவும் இனிமையாக இருக்கும் மாலை படத்துக்கு போக வேண்டும் என்றால் மதியம் முதல் மாட்டுக்கு தண்ணி காட்டுறது, குளிப்பாட்டுறது என்று ஆரம்பித்து விடும். வண்டியில் உட்காரும் இடத்தில் வைக்கோலை மெத்தை மாதிரி அழகாக நிரவி அதன் மேல் ஒரு ஜமுக்காலம் (போர்வை) ஒன்றை விரித்து வைத்துவிடுவார். வைகோலை அப்படி போடுவதற்க்கு இரண்டு காரணங்கள் ஒன்று உட்காரும் பொழுது மெத்தை மேல் உட்காருவது போல் இருக்கும்,மற்றொன்று நாம் படம் பார்த்துவிட்டு வரும் வரை மாட்டுக்கு சாப்பிட உணவு.

சினிமா தியேட்டரில்(??) இப்பொழுது கார்,பைக் நிறுத்துவது போல் அப்ப மாட்டு வண்டி நிறுத்து என்று பெரிய இடம் இருக்கும். அங்க போய் மாட்டு வண்டியை நிறுத்தலாம், பின் இரவு படம் முடிந்த பிறகு இருட்டில் வண்டி வருகிறது என்று எதிரில் வருபவற்களுக்கு தெரிய ஒரு அரிக்கேன் விளக்கு ஏற்றி கட்டி தொங்க விட்டு பின் பயணம் தொடரும், மாட்டு காலில் கட்டி இருக்கும் சலங்கை ஜல் ஜல் என்ற சத்தம் , கரு வேல மரத்தில் இருந்து கத்தும் குறட்டை பூச்சி என்று இரவு பயணம் அருமையாக இருக்கும். மாட்டின் காலில்,கழுத்தில் கட்டும் சலங்கை வெறும் அழகுக்காக மட்டும் கட்டுவது இல்லை இரவு பயணத்தின் போது அது கொடுக்கும் ஜல் ஜல் சத்தம் வண்டி ஹாரனாகவும் உபயோக படும். தியேட்டரில் வாங்கி வைத்த முறுக்கை அப்படியே கொறித்துக் கொண்டு சிலு சிலு என்று குளிர் காற்றில் போனது எல்லாம் மிகவும் சுகமான அனுபவம்.

கட்டை வண்டி
பயணம் கரடு முரடாக இருக்கும், வீட்டில் அறுவடையின் பொழுது நெல் மூட்டைகளை வண்டியில் அடுக்கி அதன் மேல் உட்கார்ந்து கொண்டு வந்தது, பள்ளி கூடம் போய்விட்டு வரும் பொழுதுரோட்டில் போகும் யார் வீட்டு கட்டை வண்டியிலாவது தலையில் மாட்டி வரும் ஜோல்னா பை புத்தக மூட்டையைவண்டியில் போட்டு விட்டு வண்டி பின்னாடி கொஞ்ச தூரம் தொங்கி கொண்டு சென்றது,பொங்கல் சமயத்தில் கட்டை வண்டி கட்டிக்கிட்டு போய் தாத்தா வீட்டுக்கு மாமா வீட்டுக்கு சித்தப்பா வீட்டுக்கு என்று எல்லாருக்கும் கரும்பு வாழைதார் என்று எல்லாம் வாங்கி கொண்டு வந்தது என்று நிறைய மாட்டு வண்டி பயனங்கள் சுகமான அனுபவங்கள்,இப்பொழு ஊரில் எல்லாத்துக்கும் டிராக்டர், மினி லோடு வண்டி என்று மாட்டு வண்டியின் தேவையை குறைத்து விட்டது.

வண்டி ஓட்டுபவர் குரலுக்கு மாடு அப்படியே கட்டுபடும் அதட்டி ஹய் ஹய் என்றால் ஓட்டம் பிடிக்கும், மூக்கனாங் கயிறை லேசாகஇழுத்து ஹோ ஹோ ஹோ என்றால் அப்படியே நிற்க்கும் பிரேக் பெயிலியர் எல்லாம் கிடையாது.

மாட்டு வண்டியின் பாகங்கள்:

அச்சாணி: இரவு நேரங்களில் பயனம் முடிந்ததும் வண்டியை லாக் செய்வது போல் மாட்டு வண்டிக்கு வண்டி சக்கரம் கழண்டு விடாமல் தடுக்கும் இரும்பு பட்டை.

தார் குச்சு: மெலிய மூங்கில் கம்பில் ஊசி ஆனி அடித்து வைத்து இருப்பார்கள் மாடு மெதுவாக போகு பொழுது லேசாக ஒரு குத்து குத்துவார்கள்.

நோத்தடி: மாடு வண்டியில் பூட்டபடும் கம்பு. வண்டி சும்மாக இருக்கு பொழுது சீசா மாதிரி விளாயாடலாம்.

Monday, July 9, 2007

விஜயகாந் சொக்க தங்கம்...

நான் இதை பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன், நீங்களும் அது போல் சிரிக்க இதை கிளிக் செய்யவும்.

http://www.youtube.com/watch?v=eB5JzLy2e3c&search=balayya

http://www.youtube.com/watch?v=GZJDTszmN_Y&search=balayya

http://www.youtube.com/watch?v=ypGI3NecLc0&search=balayya

http://www.youtube.com/watch?v=WMJ_y936XoU&search=balayya

குறிப்பு : எனக்கு மிகவும் பிடித்தது நான்காவதாக உள்ள லிங்க் தான். இதை பக்கத்தில் யாரையும் வைத்துகொண்டு பார்க்கவும் தனியாக பார்த்து சிரிக்கும் பொழுது யாரும் நம்மை ஒரு மாதிரியாக பார்க்க வாய்ப்பு இருப்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கவும்.

Thursday, July 5, 2007

அய்யனாரின் மகிமை

இது நம்ம அய்யனாரின் மகிமை. நம்ம தம்பியும், காயத்ரியும் அழுது புரண்டு கேட்டுக்கிட்டதால் அவரின் மகிமையை உங்களுக்கு உனர்த்த கடமை பட்டு இருக்கிறேன்..
இந்த படம் கவிதை சொல்லும் முன்பு:

பொம்மை: யப்பா யாருப்பா நீ


அய்யனார்: நான் தான் அய்யனார்

பொம்மை: என்ன கிண்டலா அய்யனார் என்றால் சிலையாக தானே இருக்கனும்...

அய்யனார்: அட போய்யா நீ வேற நான் மண் சிலையாக எல்லாம் இருந்து இருக்கிறேன்.

பொம்மை: சரி என்ன செய்யுறே...

அய்யனார்: தனிமையின் இசைன்னு வலை பதிவு ஒன்னுல கவிதை எழுதிக்கிட்டு இருக்கேன்.

பொம்மை: எங்க ஒரு கவிதை சொல்லு பார்கலாம்

அய்யனார்: இப்ப லேட்டஸ்டா

குற்ற உணர்வின் நீட்டிப்பாய்
கவிழ்ந்திருக்கும் இக்கணங்களின் மீது
படிந்திருக்கும் புனிதங்களைஎதைக்
கொண்டழிப்பதெனத் தெரியவில்லை

இந்த படம் கவிதை சொன்ன பிறகு

அய்யனார்: அடச்சே எங்கப்பபா இங்கதானே நின்னுக்கிட்டு இருந்தானுங்க....

அசரி: கொடுத்த வச்ச பொம்மைங்க ஓடி போச்சு...பாவம் வலை பதிவர்கள்...

Wednesday, July 4, 2007

கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம்

கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம்
கும்மியடிக்கும் பதிவர்கள், நல்ல அனானிகள் மற்றும் கும்மியை விரும்பும் பதிவர்கள் ஆகியோரின் பேராதரவோடு
நேற்று முதல்
இனிய உதயம்
கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம்
இங்க வாங்க கும்முங்க

Tuesday, July 3, 2007

பார்க்க சிரிக்க

மலேசியாவில் இருக்கும் நண்பனின் போட்டோவில் நான் செய்த குசும்பு, இதை அவன் மிகவும் ரசித்தான், அது உங்களுக்காக... எதை வைத்து அவனை கிண்டல் செய்வோம் என்பது உங்களுக்கே பிறகு புரியும்...


இது காலையில் டிபன் சாப்பிட (மேய) போனப்ப எடுத்தது...ம்ம்ம் என்னத்த இருந்தாலும் நம்ம ஊரு தென்னை மட்டைய போல வருமா?


ம்ம்ம் இது பாத்திர கடைக்குள்ள புகுந்தா பழமொழி இருக்கு, ஆனா இது ஹோட்டல் என்ன சொல்லுறது???? ம்ம்ம ஊர்ல கோவிலுக்கு முன்னாடி நிறுத்தி வைப்பாங்க ஆனா மலேசியாவில் கடை போல...
அட அங்க சாமிக்கு பின்னாடியும் நிறுத்திவச்சு இருக்காங்கப்பா!!!

ம்ம்ம ஊர் சர்கஸ்ல சைக்கிள் ஓட்டும், மலேசியாவில் டேபிள் டென்னிஸ் போல...


இது ஆபிஸ்ல வேலை செய்யும் பொழுது நண்பன் எடுத்தது, சாரி முழுவதும் கவர் பண்ண முடியல...


டேய் குசும்பா என்ன வச்சு காமெடியா செய்யுற உன்ன தூக்கி போட்டு மிதிக்காம விடமாட்டேன்...



Sunday, July 1, 2007

இது எப்படி!!! உங்கள் பார்வைக்கு

கொர் கொர் கொர் கொர் கொர் கொர் கொர் கொர் ...(இது நான் தூங்கும் பொழுது விடும் குறட்டை) இப்ப காயத்ரி என்ன செய்யுறாங்க எனக்குள் ஒரு கவிஞன் குப்புற படுத்து தூங்குறானான்னு டெஸ்ட் செய்யுறாங்க. ஆனா அவன் மல்லாக்க படுத்து தூங்குகிறான் (அப்ப அவன் கவிஞனா இல்லையா அத அவர்கள் முடிவுக்கே விட்டுவிடுவோம்???) அவுங்க எதுக்கும் அவன எழுப்பி கிளாஸ் எடுக்குறாங்க.( சீசீ...அந்த கிளாஸ் இல்லப்பா) இது வேற படிப்பு சம்பந்த பட்டது...

அதன் பிறகு அவனிடம் நிறைய மாற்றம்...

கவிதாயினி காயத்ரி அவர்கள் ஆதரவுடனும் , சிபி, கீழ்மத்தூர் எக்ஸ்பிரஸ் மகியின் ஆசியுடனும், மேலும் அய்யனார், இளா, குருட்டு புலி இராம், மின்னல்
வாழ்த்துகளுடன் இதோ ஒரு அரிய படைப்பு...

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டியாழ்செய் சென்னை
அம்பானெய்யோ டாட லமர்ந்தா னலர்கொன்றை
நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்

பொடிகள் பூசித் தொண்டர் பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிக ளோடுந் நாள்விழ மல்கு சென்னை
கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்
அடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்

செல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் சென்னை
வில்லி னொல்க மும்மதி லெய்து வினைபோக
நல்கு நம்பான் நன்னகர் போலும் நமரங்காள்

பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின் தேன்
கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் சென்னை
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோ ரனலேந்தும்
நக்கன் மேய நன்னகர் போலும் நமரங்காள்

மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் சென்னை
இலையார் சூல மேந்திய கையா னெயிலெய்த
சிலையான் மேய நன்னகர் போலும் சிறுதொண்டீர்

மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக்
கொய்ம்மா வேன லுண்கிளி வோப்பும் சென்னை
கைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்எம்
பெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள்

சும்மா கிடந்த என்ன சிபியும், மகியும் எழுப்பி விட்டுட்டாங்க... திட்டுகள் குட்டுகள் எல்லாம் அவர்களுக்கே சமர்பனம்...காயத்ரியும் திட்டனும் போல ஆசையா இருந்தா
நீங்க திட்டலாம் அதையும் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.