Tuesday, July 17, 2007

ஜெயா டீவி பின்னொலி

வணக்கம் நேயர்களே! இது கடந்த வாரத்தில் ஓளி பரப்பான நிகழ்சிய பற்றி ஆயிரகணக்கான நேயர்கள் தங்கள் கருத்துக்களை கடிதம் மூலம் தெரிய படுத்தி இருக்காங்க அதை பற்றிய நிகழ்சி தான் இந்த பின்னொலி.

நிகழ்சிக்கு போகலாம் ...ம்ம்ம் படிங்கம்மா.

சார் குவாட்டர் கோவிந்தன் என்பவர் எழுதி இருக்கிறார்.
நான் தவறாமல் ஜெயா டீவியை பார்த்து வருகிறேன், அதில் ஒளிப்பரப்பாகும் எல்லா நிகழ்சியும் நன்றாக இருக்கிறது, குறிப்பா நைட் 12 மணிக்கு மேல போடும் மிட் நைட் மசாலவை, சிக்கன் மசால வச்சுக்கிட்டு ஒரு குவாட்டர் பாட்டிலோடு பாரு சார் அப்ப தான் அதன் அருமை தெரியும், என் கூட்டாளிங்க கூட இதையே நீங்க "புல்" டைம்மா போட மாட்டீங்களான்னு கேட்கிறாங்க சார்.

நன்றி குவாட்டர் கோவிந்தன் உங்கள் யோசனைக்கு நாங்கள் செயல் படுத்த முயற்சி செய்கிறோம்.

அடுத்து வியாழன் அன்று ஓளி பரப்பான வலைப்பூ பற்றி பல கடிதங்கள் வந்து இருக்கிறது.
அதுல குறிப்பா பூக்கடை தெரு பூபாண்டி என்பவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

ஐயா கடந்த பல வருடங்களாக உங்க டீவியில் ஓளி பரப்பாகும் பல விவசாய நிகழச்சிகளை பார்த்து சிறந்த முறையில் பூ விவசாயம் செய்து பூ வியாபாரம் செய்து வருகிறேன், ஆனால் வியாழன் அன்று ஒளி பரப்பான வலைபூ பற்றி நிழச்சியில் வந்த பால பாரதி என்பரிடம் பல பேர் பல கேள்வி கேட்டாங்க(ஒழுங்கா பதில் சொல்ல அது வேற விசயம்), ஆனா வலை பூ பதிய விதை எங்கே கிடைக்கும், அது பூக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்ற கேள்விய கேட்கவில்லை, அதன் விபரங்களை கேட்டு சொன்னால் உபயோகம் ஆக இருக்கும்.

நன்றி பூபாண்டி, பல பேர் பல கேள்வி இது சம்மந்தமாக கேட்டு இருக்கிறார்கள் அவரிடம் கேட்டு விவரம் புரிந்தால் சொல்கிறோம்.

(முதல் கேள்வியும் அடுத்த கேள்வியும் ஏதேச்சையாக தான் அடுத்து அடுத்து படிக்க பட்டது இதில் எந்த உள் குத்தும் இல்லை)

10 comments:

said...

தலய கலாய்ச்சவனும், தல தலைய புடிச்சு தண்டவாளத்துல வச்சவனும் பொழச்சதா இஸ்ட்டிரி இல்ல!

said...

அடப்பாவி மக்கா...!

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

said...

இன்னும் நிறைய போட்டுருக்கலாம்ல
ரெண்டே ரெண்டுதானா?

said...

//இன்னும் நிறைய போட்டுருக்கலாம்ல
ரெண்டே ரெண்டுதானா?//

repeat......yyyyyyyyy

said...

\\இதில் எந்த உள் குத்தும் இல்லை)
\\

இப்படி சொல்லி சொல்லியே அவரை குத்து குத்துன்னு குத்திட்டியே குசும்பா ;))

(மொத்தம் நாலு "கு" வருது இதிலும் எந்த உள்குத்தும் இல்லை ;))))

said...

சூப்பரு. . . . .

இன்னொரு கேள்விய விட்டுட்டீங்களே. . . .

வலைப்பூங்கறது செடியில பூக்குமா கொடியில பூக்குமா. . . . .. ?

said...

அபி அப்பா said...
தலய கலாய்ச்சவனும், தல தலைய புடிச்சு தண்டவாளத்துல வச்சவனும் பொழச்சதா இஸ்ட்டிரி இல்ல!

அபி அப்பா நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்

said...

தம்பி said...
இன்னும் நிறைய போட்டுருக்கலாம்ல
ரெண்டே ரெண்டுதானா?

கண்மணி said...
//இன்னும் நிறைய போட்டுருக்கலாம்ல
ரெண்டே ரெண்டுதானா?//

தம்பி, அக்கா நேரம் இன்மைதான் காரணம்

said...

கோபிநாத் said...

இப்படி சொல்லி சொல்லியே அவரை குத்து குத்துன்னு குத்திட்டியே குசும்பா ;))

:)))

said...

வெங்கட்ராமன் said...
"வலைப்பூங்கறது செடியில பூக்குமா கொடியில பூக்குமா. . . . .. ? "

சூப்பரு. . . . .