Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

Friday, May 14, 2010

ரீ எண்டரி நம்ம ஹீரோ!

திரும்பவும் நம்ம ஹீரோ வருகிறார். எங்கே? திரும்பவும் ஹாஸ்பிட்டல் தான். ஆனா இந்த முறை எண்ட்ரி கொஞ்சம் வித்தியாசமாக! அப்படின்னா என்னா? பேக் போர்சனை காட்டிக்கிட்டா? ச்சே ச்சே அவரு என்னா ஹீரோயினா அப்படி எண்ட்ரி ஆக? இந்த முறை ஹீரோவுக்கு மயக்க மருந்தை வெளியில் இருந்து கொடுக்காமலே அவரு மயக்கநிலையில் இருக்காரு!

ஏன் இப்படி ஒரு நிலமை? சொய்ங்ங்ங்ங்ங்.. சில பல வருடங்களுக்கு முன்னாடி, இண்டர்நெட்டில் எல்லாம் ரிசல்ட் பார்க்கும் பழக்கம் வராத காலகட்டத்தில் +12 படிச்சார் நம்ம ஹீரோ. எங்கே படிச்சாரு படிக்கிறமாதிரி நடிச்சார். ஹீரோ ஸ்டேட் பர்ஸ்ட் ரேங் வாங்கனும் பேப்பரில் அவரு போட்டோ வரனும் என்று கனவும் கானும் அம்மா. அந்த அம்மாவின் கனவில் ஒரு லாரி டிப்பர் மண்ணை கொண்டுவந்து கொட்டினார் நம்ம ஹீரோ! எப்படி?

ஹீரோவின் போட்டோ பேப்பரில் வரனும் என்று ஆசைப்பட்டா, நம்ம ஹீரோ அவரோட நம்பரையே பேப்பரில் வராம செஞ்சுட்டார்! எப்படி பார்த்தாலும் நம்ம ஹீரோ நம்பர் பேப்பரில் மிஸ் ஆகியிருக்கு, சரி மாலை பேப்பரில் தான் மிஸ் ஆகிட்டு காலை பேப்பரிலாவது வந்திடும் என்று நினைச்சா அதிலும் மிஸ் ஆயிட்டு, ஹீரோ பெயில் ஆன விசயம் ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சு, நம்ம ஹீரோவை யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும் நம்ம ஹீரோவுக்கு சேம் சேம் பப்பி சேம்மா போச்சு...அப்படியே கொல்லை பக்கம் போனவரு வயலுக்கு அடிக்க வெச்சிருந்த டெமக்ரானையும் இன்னொரு மருந்தையும் மிக்ஸ் செஞ்சு கருமாந்திரமா இருந்த அந்த கலவைய மூக்க பொத்திக்கிட்டு ஒரே கல்பா குடிச்சிட்டு சமத்து புள்ளையா போய் அவுங்க சித்தப்பா வீட்டில் உட்காந்துக்கிட்டார்.அவுங்க எல்லாம் பெயில் ஆன கவலைய காட்டிக்காம ஹீரோவை தேத்துவதிலேயே குறியா இருந்தாங்க, டக்குன்னு பூச்சி மருந்து ஸ்மெல் அடிச்சதை சித்தப்பா மோப்பம் புடிச்சு, ரெண்டு அறை விட்டு வண்டியில் தூக்கி முன்னாடி வெச்சிக்கிட்டு கொண்டு போய் போட்டாரு அருகில் இருந்த ஹாஸ்பிட்டலில், ஹீரோவுக்கு கொஞ்சம் கொஞ்சமா எங்கேயோ மிதக்கிற மாதிரி இருந்துச்சு, ஒரு பக்கெட்டில் உப்பை கொட்டி கரைச்சு வாயில் ஊத்தவந்தா ஹீரோ வாயை திறக்க மாட்டேங்கிறார்.

இது சரியாவராதுன்னு டாக்டர் ஒரு புனலில் டியூப் கனெக்ட் செஞ்சமாதிரியும் அதில் ஒரு மரக்கட்டையும் இருந்ததை ஹீரோ வாயில் உட்டு அதில் உப்பு கரைசலை ஊத்தி வாந்தி எடுன்னா, ஹீரோ என்ன மாசமாவா இருக்கிறார் வாந்தி எடுக்க? ஹீரோவுக்கு வாமிட் வரல. டாக்டர் அந்த புனலை அப்படியோ ஒரு சுத்து சுத்தினா அடியிறு வரை போய் நின்ன டியூப் அப்படியே உள்ளே ஒரு சுத்து சுத்தி பிரட்டிக்கிட்டு வாமிட் வந்துச்சு திரும்ப உடுடாங்கடா அந்த டீயுபை, திரும்ப ஊத்துங்கடா அந்த உப்பு கரைசலைன்னு விளையாடிக்கிட்டு இருக்காங்க, ஹீரோ குடம் குடமா வெளியில் எடுக்கும் உப்பு கரைசலை புடிச்சு மோந்து பார்த்துட்டு இன்னும் பூச்சி மருந்து ஸ்மெல் இருக்கு இருக்குன்னு அந்த ஸ்மெல் இல்லாம தண்ணி வரும் வரை இந்த விளையாட்டு நடந்துச்சு.

அப்புறம் என்ன என்னமோ செஞ்சு ஹீரோவை டயர்ட் ஆக்கி கொண்டு போய் படுக்கையில் போட்டுவிட்டார்கள். மயக்கம் எல்லாம் தெளிஞ்சு கண் முழிச்சு பார்த்தா ஹாஸ்பிட்டல் முழுவது ஊர் சனங்க மற்றும் சொந்தகாரனுங்க கவலையோட நிக்கிறாய்ங்க. ஹீரோ பிழைச்சதுக்காகயா இல்லை இப்படி செஞ்சதுக்காகயா என்று தெரியாம ஹீரோ அப்படியோ தூங்க ஆரம்பிக்கிறார்.

வீட்டுக்கு போனாலும் சாப்பாடு எல்லாம் கிடையாது எது குடிச்சாலும் தொண்டையில் இருந்து வயிறு வரை ஒரே எரிச்சல், அடபாவிங்களா இனி எத்தனை சப்ஜெக்டில் பெயில் ஆனாலும் பூச்சிமருந்தை மட்டும் குடிக்கமாட்டேன் டா என்ற சபதத்தோடு ஊரை விட்டு போய் ஒருவருடம் அவரோட மாமாவீட்டில் இருந்து படிச்சி பாஸ் ஆகி காலேஜில் சேர்ந்தபிறகுதான் ஊர் பக்கமே வந்தார்.. அதன் பிறகு சக்கையா படிச்சு ஹீரோ காலேஜ் படிப்பை முடிச்சார்.

பெயில் ஆனவன் இனி என்ன படிச்சு உருப்பட போறான் என்று நினைச்சவங்க எல்லாம் ஊரில் அவனை நல்லபடியா உதாரணமாக காட்டும் அளவுக்கு கஷ்டப்பட்டு முன்னேறி இன்னைக்கு ஒரு வெளிநாட்டு கம்பெனியில் கேரளா குஜிலிங்களுக்கு மேனேஜரா இருக்கார். 7G ரெயிண்போ காலனியில் ஹீரோவிடம் உனக்குன்னு ஒரு தனி திறமை இருக்கும் அதை கொண்டுவந்து நீ பெரிய ஆளா ஆகனும் என்று சொன்ன ஹீரோயினையே லவ்ஸ் & டூயட் எல்லாம் பாடி ஒரு பெரும் போராட்டத்துக்கு பிறகு கல்யாணமும் செஞ்சு இப்ப ஜாலியா இருக்கார் ஹீரோ, அப்ப அப்ப +12 ரிசல்ட் வரும் பொழுது மட்டும் இந்த ப்ளாஸ் பேக் அவருக்கு நினைவுக்கு வந்துட்டு போகும்.

நொட்ட நீதி: பெயில் ஆனால் தான் இப்படி டேமேஜர் ஆக முடியும்:))

நல்ல நீதி: தோல்வியினால் எதுவும் முடிந்துவிடுவது இல்லை...

Monday, April 26, 2010

பொத்திவெச்ச மல்லிகை மொட்டு...

கதைப்படி கதாநாயகன் ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவன். எப்படின்னா? ஜுரம் வந்து டாக்டரிடம் போனால் கூட ஜென்ஸ் டாக்டராக தான் பார்த்து போவான். ஒரு முறை வேளச்சேரியில் தங்கி வேலை பார்த்துக்கொண்டு இருந்த பொழுது, கடுமையான சுரம். அருகில் இருந்த மருத்துவமனைக்கு நண்பன் ஒருவன் அழைத்துச்சென்றான், இவன் நேரம் அங்கிருந்த ஜென்ஸ் டாக்டர் லீவ், வேறு வழியே இல்லாமல் லேடி டாக்டரிடம் காட்டவேண்டியதாக போச்சு. அவுங்க டெஸ்ட் செஞ்சுட்டு ஊசி மருந்து எழுதி கொடுத்து வாங்கி வர சொன்னாங்க, வாங்கிட்டு வந்த மருந்தை டாக்டரிடம் கொடுத்தான்.

டிஸ்போசல் சிரஞ்ஜில் மருத்தை எடுத்து அதை ஒரு அமுக்கு அமுக்கி ரெண்டு சொட்டு மருத்து சும்மா சாமிக்குன்னு தரையில் விழுந்ததும், டாக்டர் சொன்னாங்க கொஞ்சம் பேண்டை இறக்குங்க என்று.. பதறிபோன ஹீரோ அச்சிச்சோ முடியாது கையில் போடுங்க என்று சொல்ல டாக்டர் இல்லை இதை கையில் போடமுடியாது, பின்னாடிதான் போடனும் என்று பிடிவாதம் பிடிக்க அப்ப வேற ஜென்ஸ் டாக்டரை விட்டு போட சொல்லுங்க இல்லை ஊசியே வேண்டாம் என்று சொல்லி பிடிவாதம் பிடிச்சான். கூட வந்த நண்பன் திட்டியும் போடா உடம்பு சரி இல்லை என்றாலும் பரவாயில்லை என்று கிளம்பி வெளியே வந்துட்டான் நம்ம ஹீரோ. கடைசிவரை ஊசி போட்டுக்கவே இல்லை.

சரி இப்ப எதுக்கு இந்த ப்ளாஸ் பேக் என்று கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கு, இப்படி ஊசி பின்னாடி போட்டுக்கவே கூச்சப்படும் நம்ம ஹீரோ வாழ்வில் ஒரு புயல் அடிச்சு அவன் கட்டி காத்து வந்த கற்பு காற்றில் பறந்து போச்சு.. எப்படின்னு சொல்றேன் கேளுங்க.

நம்ம ஹீரோவுக்கு கல்யாணம் ஆகி ஒருமாசம் கூட ஆகவில்லை வேலை விசயமாக மனைவியை விட்டு பிரிஞ்சு இருக்க வேண்டிய சூழ்நிலை, எப்படியும் மனைவியை ஒரு இரண்டு மாசத்தில் அவன் இருக்கும் இடத்துக்கு அழைச்சுக்கிட்டு போய்விடனும் என்ற வெறியோடு கிளம்பி போனான் நம்ம ஹீரோ. போய் ஒரு பத்து நாள்தான் ஆகியிருக்கும் தலைவருக்கு ஒண்ணுக்கு அடிக்கும் பொழுது ஒண்ணுக்கோடு வலியும் கொஞ்சம் இரத்தமும் சேர்ந்து வர ஆரம்பிச்சிட்டு. ஆஹா இதுவரைக்கு ஒழுங்காதானே இருந்துச்சு, மனைவியை அழைச்சிக்கிட்டு வரும் நேரம் பார்த்து இப்படி ஆவுதே என்ற கவலையோடு டாக்டரை பார்க்க போனான் நம்ம ஹீரோ.

அங்க ரிசப்சனில் இருந்த டீவியில் வயசுக்கு வராத பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்ட கவுண்டமணிக்கு செந்தில் ஐடியா கொடுத்து கிரிக்கெட் விளையாட சொல்லி, பால் கரெக்ட்டா பொண்ணோட அப்பா மண்டையை உடைக்காமல் கவுண்டமணியை பதம் பார்க்கவேண்டிய இடத்தில் பதம் பார்த்துவிடும், டாக்டர் ஆப்ரேசன் முடிஞ்சதும் உங்களை காப்பாத்திட்டோம் ஆனா இனி நீங்க தாம்பத்தியம் வெச்சிக்க முடியாது என்று சொல்லுவார், இந்த காமெடியை பார்த்ததும் நம்ம ஹீரோ கொஞ்சம் ஜர்க் ஆனாலும். பயப்படாத மாதிரி உள்ளே போய் டாக்டரை பார்த்தான், எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து வந்ததும் அதை பார்த்த டாக்டர் உங்களுக்கு சிறுநீரக கல் இருக்கு, இந்த பக்கம் கிட்னியில் இரண்டு அந்த பக்கம் இரண்டு இதோ கிட்னிக்கும் பிளாடருக்கும் போகும் பாதையில் ஒன்னு வந்து சிக்கி ஜாம் ஆகி நிக்குது அதான் அது நகரும் பொழுது வலியோடு இரத்தமும் வருகிறது என்றார். அவசரமாக அதை ஆப்ரேசன் செஞ்சு கல்லை உடைக்கனும் என்று டாக்டர் சொல்ல. முதலுக்கு மோசம் வராது என்ற உறுதி மொழியை வாங்கிக்கிட்டு விரைவில் வருகிறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினான் நம்ம ஹீரோ.

வீட்டுக்கு போய் படுத்ததும் நம்ம ஹீரோவுக்கு பல யோசனை, இந்த ஊரில் இருக்கும் டாக்டருங்ககிட்ட நாம ஒன்னு சொல்லி அது புரியாம அவர் ஒயரிங்கை மாத்தி கொடுத்து ஏதும் சார்ட் சர்கியூட் ஆகி புகைஞ்சு போய்ட்டா என்ன செய்வது? பெட்டர் நம்ம ஊருக்கே போய் ஆப்ரேசன் செஞ்சுக்கலாம் என்று அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்து நண்பர்கள் பலர் கைக்காட்டிய டாக்டரிடம் போய் காட்டி அவரும் சீக்கிரம் ஆப்ரேசன் செஞ்சுடுவது நல்லதுன்னு சொன்னதும், சரி என்று அன்றே அட்மிட் ஆகிவிட்டான் நம்ம ஹீரோ.

மறு நாள் காலை 10 மணிக்கு ஆப்புரேசன், இரவில் இருந்து ஏதும் சாப்பிட கூடாது குடிக்க கூடாது என்று எல்லாம் சொன்னாங்க சரின்னு அங்கிருந்த பெட்டில் படுத்து இருந்தான், ஒரு அழகான நர்ஸ் வந்து, சார் எழுதிருங்க ஆப்ரேசனுக்கு பிரிப்பேர் செய்யனும் என்று சொன்னதும் எழுந்தான், என்ன செய்யனும்? உட்காருங்க என்றதும் உட்காந்தான், கண்ணை ஒரு பச்சை துணியால் கட்டியது அந்த நர்ஸ், படுக்க சொன்னுச்சு அந்த நர்ஸ். படுத்ததும். கொஞ்சம் பேண்டை கழட்டுங்க,சட்டை பனியனை தூக்குங்க என்றதும் பதறி எழுந்த நம்ம ஹீரோ எதுக்குன்னு கேட்டான்.

"ஷேவ் செய்யனும்"

"எங்க?"

"அங்க"

"கொடுங்க நான் செஞ்சுக்கிறேன்"

"முடியாது, வயிறில் இருந்து முட்டி கால் வரை சுத்தமா ஷேவ் செய்யனும்"

"முடியாது நானே செஞ்சிக்கிறேன்"

"இல்லை டாக்டர் என்னைதான் திட்டுவார், கண்ணை கட்டிக்கிட்டு படுங்க"

"என்னங்க இது கண்ணை கட்டிக்கிட்டா சரி ஆகிடுமா? அதெல்லாம் முடியாது."

"சொன்னா புரிஞ்சுக்குங்க, இன்னும் ரெண்டு பேசண்டுக்கு பிரிப்பரேசன் செய்யனும் படுங்க"

"அல்லோ நீங்க சொன்னா புரிஞ்சுக்குங்க, முடியாது அட்லீஸ்ட் Male நர்ஸ் இருந்தா அனுப்புங்க"

"அவுங்களுக்கு நைட் டூட்டி கிடையாது காலையில்தான் வருவாங்க"

"அப்ப காலையிலேயே செஞ்சுக்கலாம் நீங்க போங்க"

"முடியாது"

"ஆப்ரேசன் செய்யலைன்னா கூட பரவாயில்லை, நான் ஒத்துக்கமாட்டேன்"

ஹல்லோ டாக்டர் நான் கமலா பேசுறேன், 203 பேசண்ட் பிரிப்பரேசனுக்கு ஒத்துக்கமாட்டேங்கிறார் அடம்பிடிக்கிறார்,ரொம்ப கூச்சப்படுகிறார். நீங்க பேசுங்க... " ஹல்லோ இந்தாங்க டாக்டர் லைனில் இருக்கிறார்.

டாக்டர் நான் லேடி டாக்டரிடம் ஊசி போட்டுக்க கூட கூச்சப்படுவேன், இதுக்கு எல்லாம் ஒத்துக்கமாட்டேன், ஆப்ரேசன் டிலே ஆனாலும் பரவாயில்லை வலியை தாங்கிக்கிறேன். இது நம்ம ஹீரோ

"ஓக்கே ஓக்கே போனை அவுங்க கிட்ட கொடுங்க"

"ஓக்கே டாக்டர், ஓக்கே டாக்டர் சொல்லிடுறேன்....

"என்ன சொன்னார் டாக்டர்?"

"காலையில் வருவாங்க.." படார்ர்ர்ர்ர்ர்ர்ர் கதவு வேகமாக சாத்தப்பட்டது.

காலையில் ஒரு ஆள் வந்து எல்லாம் முடிஞ்ச பிறகு பச்சை கலர் அங்கி நம்ம ஹீரோவுக்கு கொடுக்கப்பட்டது, ஆப்ரேசன் தியேட்டருக்கு அழைச்சிக்கிட்டு போய் மயக்க மருந்து கொடுத்த பிறகு சில பெண் குரல் கேட்டது, தூக்கி வாரி போட்டாலும் நம்ம ஹீரோவால் ஒன்னும் செய்யமுடியவில்லை. எல்லாம் முடிஞ்சு போச்சு. ரூமில் கொண்டு வந்து போட்ட பிறகு கொஞ்சம் மயக்கம் தெளிஞ்சு நிமிர்ந்து பார்க்க தலையை தூக்கி பார்க்க முடியவில்லை கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருந்துச்சு, மற்றொரு கையால் என்ன நடந்திருக்கு என்று ஆராய்ந்த பொழுது, டிங்கரிங் பட்டி எல்லாம் பார்த்து அதில் ஒரு விரல் மொத்த பிளாஸ்டிக் டியூப் சொறுவி இருந்தது, ஆஹா அது எங்க போவுதுன்னு பார்த்தா ஒரு பிளாஸ்டிக் பையில் போய் முடிவடைந்தது.

கண்ணில் கண்ணீர் வழிய படுத்திருந்தான் நம்ம ஹீரோ, அவனோட நண்பன் ஏன் டா ரொம்ப வலிக்குதா என்றான். அதுக்கு அவன் இல்லைடா இத்தனை வருசம் பொத்தி வெச்சிருந்த கற்பு காற்றில் பறந்து போய்ட்டுடா, ஆப்ரேசன் தியேட்டரில் யாருன்னே தெரியவில்லை பெண் குரல் கேட்டுச்சுடா. என்று அழுதான். அதுக்கு நண்பன் அதான் நீ அவுங்க மூஞ்சை பார்க்கவில்லையே என்றான்.. அதுக்கு ஹீரோ டேய் அவுங்க மூஞ்சை நான் பார்க்கவில்லை என்றால் என்ன....என்று திட்டிவிட்டு போச்சே போச்சே எல்லாம் போச்சேன்னு படுத்து இருந்தான்.

அப்பொழுது கிளிக் என்று கதவு திறக்கும் சத்தம், வெள்ளை டிரஸில் ஒரு ட்ரேயில் மருந்தோடு வந்த நர்ஸ் எப்படி இருக்கு, வலி இருக்கா? என்று கேட்டுக்கிட்டே வலிக்காத மாதிரி ஒரு ஊசியை போட்டு விட்டு, டக்கென்று பச்சை அங்கியை தூக்கி டியூபை பிடிச்சு பார்த்துவிட்டு, ம்ம்ம் இன்னும் யூரின் கலர் மாறல என்று டியூபை ரெண்டு ஆட்டு ஆட்டிவிட்டு போய்விட்டார்கள். ஹீரோவால் ஒன்னியும் சொல்லமுடியல. அதன் பிறகு போற வர நர்ஸ் எல்லாம் தூக்கி பார்த்து டியூபில் வரும் யூரின் கலரை நோட் செய்வது வழக்கமா போய்விட்டது. தலைக்கு மேலே வெள்ளம் போச்சு இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன ஹீரோ சோகமாக படுத்து கிடந்தான்.

அருகில் இருந்த நண்பனை கூப்பிட்டு மச்சி வரண்டாவில் யாரும் டேபிள் சேர் போட்டுக்கிட்டு உட்காந்து இருக்காங்களா பாரு என்றான். அவனும் ஓடி போய் பார்த்துட்டு இல்லைடா, ஏன் ஏதும் செய்யுதா? நர்ஸை கூப்பிடவா என்றான். அதுக்கு ஹீரோ, இல்லை இல்லை கூப்பிட வேண்டாம் என்னமோ எக்ஸ்பிஸன் நடக்கிறமாதிரி போறவங்க வரவங்க எல்லாம் தூக்கி பார்த்து பிள்ளையார் கோவிலில் மணி அடிப்பது போல் டியூபை ஆட்டுறாங்களே, அதான் வெளியில் யாரும் உட்காந்து டிக்கெட் கொடுத்து அனுப்புறாங்களோன்னு டவுட் என்றான். உனக்கு தையலை கீழே போட்டு இருக்க கூடாது. வாயில் போட்டு இருக்கனும் என்று திட்டிவிட்டு படுத்தான் நண்பன்.

இரண்டாவது நாள் ஒயரிங் எல்லாம் கட் செஞ்சுவிட்டு டாக்டர் நீங்க வீட்டுக்கு போகலாம், ஆனா ஒரு மாசம் "ஒன்னியும் செய்யக்கூடாது". ஊர்ல பாம்பு அடிக்கும் பொழுது தலையை அடிச்சு நசுக்கிட்டாலும் வாலு ஆடும், உயிர் இருக்கு பாருன்னு போட்டு செத்த பாம்பை அடிஅடின்னு அடிப்பாங்க அதுமாதிரி அடிச்சிட்டு பேசுறீங்க பேச்சு, நீங்க சொல்லவில்லை என்றாலும் ஒன்னியும் முடியாது போல டேமேஜ் அப்படி இருக்குன்னு மனசுக்குள் நினைச்சுக்கிட்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வரும் பொழுது முறைச்சு பார்த்துக்கிட்டே போனது, பிரிப்பரேசன் செய்யவந்து திரும்பி போன நர்ஸ், ஊரே கூடி நின்னு வேடிக்கை பார்த்துவிட்டு உன்னை மட்டும் விரட்டி அடிச்சிட்டேனே, நீ விட்ட சாபமா இருக்குமா இல்ல ஏதும் நாயை கல்லால் அடிச்சு பிரிச்சதால் அந்த நாய்விட்ட சாபமா இருக்குமா ஏன் இப்படி என்று யோசனையில் வீட்டுக்கு வந்தான் ஹீரோ.

விவேக் ஒரு படத்தில் பின்னாடி வேஸ்டியை தூக்கி பிடிக்க ஆள் இருப்பது போல் இவன் முன்னாடி கைலியை தூக்கி பிடிச்சுக்கிட்டு சேரில் உட்காந்திருந்தப்ப விசுக் என்று ஒரு கல் பறந்து போய் வேலியில் விழுந்ததும் லொள் லொள் என்று சத்தத்தோடு இரண்டு நாய்கள் பிரிந்து வேறு வேறு பக்கம் ஓட அதை தொரத்திக்கிட்டு ஒரு சிறுவர் கூட்டம் ஓடியது. அந்த பசங்களை நினைச்சு சிரிச்சுக்கிட்டு உட்காந்திருந்தான் நம்ம ஹீரோ.

*************சில வருடங்களுக்கு பிறகு********************
அதன்பிறகு லேடி டாக்டர் ஜென்ஸ் டாக்டர் என்று எல்லாம் பார்ப்பதை விட்டுவிட்டான் நம்ம ஹீரோ.

டாக்டர் ஹல்லோ ஹல்லோ இப்ப எதுக்கு பேண்டை கீழே இறக்குறீங்க இந்த ஊசியை கையிலேயே போட்டுக்கலாம். என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டான் நம்ம ஹீரோ.

Sunday, January 3, 2010

சாணி அள்ள பிறந்தவன்--- புது பட கதை

ஹாலிவுட் பட DVDயை பார்த்து அதுல நம்ம ஊரு செண்டிமெண்டை சேர்த்து படம் எடுத்து ஹிட் ஆக்கும் பார்முலாவை பிடிச்சு இனி அடுத்த படத்தை அதே மாதிரி இயக்கி மக்களை பொலிபோட்டுவிடவேண்டியதுதான் என்று சபதம் செய்யும் போர்ரரசு, கதை சொல்ல ஓடுகிறார் தளபதி குஜயிடம்.

"போர்"ரரசு: பாஸ் இந்த முறை எல்லாமே வித்தியாசம், இந்த முறை ஊர் பேரில் படம் கிடையாது, படத்துக்கு பெயர் சாணி கேப்சன் அள்ளப்பிறந்தவன். டைட்டிலே அதிரடியா இதுவரை யாரும் செய்யாத மாதிரி ஒரு எறுமை மாடு பேக்கை குளோசப்பில் காட்டுறோம் சாணி போடும் பொழுது அது தரையில் விழாம எதிரே இருக்கும் சுவரில் துப்பாக்கி குண்டால் சுடுவது போல் தட தடன்னு 1000வாட்ஸ் சவுண்டில் போய் விழுது, போய் விழும் ஒவ்வொரு உருண்டையும் ஒரு ஒரு புள்ளியாக மாறி சாணின்னு பார்ம் ஆவுது. கீழே கேப்சன் அள்ளப்பிறந்தவன் என்று சுவரை பிளந்துக்கிட்டு வருது.

குஜய்: ஆஹா ஒருமுடிவோடதான் கிளம்பி வந்திருக்கார் போல...சரி கதை என்னா சொல்லுங்க.

போர்ரரசு: ஓப்பனிங் சீன் அமெரிக்காகாரன் உங்க போட்டோவை வெச்சுக்கிட்டு “ஐ நீட் ஹிம் இமிடியட்லி” என்று 500 டெசிபல் சவுண்டில் கத்துகிறான், கேமிராவைதடதடன்னு ஆட்டுறோம், அப்படியே அடுத்த சீன் ஜப்பான் காரன் ““ஐ நீட் ஹிம் இமிடியட்லி” 500 டெசிபல் சவுண்டில் கத்துகிறான், கேமிராவை தடதடன்னு ஆட்டுறோம்.இப்படியே பலநாட்டு ஆளுங்க உங்களை தேடுறாங்க.

குஜய்: ஏன்?

போர்ரரசு: அங்கதான் இருக்கு ட்விஸ்ட்! வெளிகிரகத்தில் இருந்து வந்த வினோத உருவம் கொண்ட பூச்சி மக்களை கடிச்சு கொல்லுகிறது, துப்பாக்கியால் சுட்டாலும் அது சாகமாட்டேங்குது, ராக்கெட் விட்டு அடிச்சாலும் அது சாகமாட்டேங்குது, உலகம் முழுவதும் அது தரைக்கு அடியில் பரவுது, அது எங்க எப்ப வரும் என்று சொல்லமுடியாது.ஆனா திடிர் என்று வந்து ஒரு ஊரையே காலி செஞ்சுடும். உங்களுக்கு ஒரு தங்கை, உங்க அப்பா அம்மா நீங்க சின்னவயசில் இருக்கும் பொழுதே செத்துபோய்ட்டாங்க, தங்கச்சின்னா உங்களுக்கு உசுரு.. உங்க ஊருக்கு பக்கத்து ஊரு வரைக்கும் அந்த பூச்சிகள் பரவிடுது.

நீங்க அன்னைக்கு வழக்கம் போல் காலையில் எழுந்து சுவரில் சாணி அடிச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க ஊருக்கும் அந்த பூச்சிங்க வந்துடுது, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி உங்க வீட்டுக்கு வருது வீட்டில் இருந்து தங்கச்சி வீல் என்று சத்தம் கேட்குது பதறி அடிச்சு கையில் ஒரு சாணி உருண்டையோட ஓடுறீங்க, அங்க அந்த பூச்சிங்க உங்க தங்கச்சியை கடிச்சிடுது.கையில் இருந்த சாணியை தூக்கி மலிங்கா த்ரோ அடிப்பது போல் அடிக்கிறீங்க, எல்லா பூச்சிம் செத்து விழுந்துடுது. இருந்தாலும் உங்க தங்கச்சியை காப்பாற்ற முடியல.தங்கச்சி சாகும் பொழுது அண்ணே என்னை கடிச்ச பூச்சை இந்த உலகத்தை விட்டு துரத்திடனும் ஊர் முழுக்க இதுபோல் எத்தனை தங்கச்சி இருக்காங்க என்று சொல்லி செத்துடுறாங்க.

தங்கச்சியை எரிச்சிட்டு திரும்ப வீட்டுக்கு வரும் பொழுதுதான் தெரியுது யாராலையும் கொல்லமுடியாத அந்த பூச்சிகளை நீங்க கொன்னது, மறுநாள் உலகின் அத்தனை பேப்பரிலும் உங்க போட்டோ வருது ஆள் ஆளுக்கு அவுங்க அவுங்க வீட்டுல இருந்து மாட்டு சாணியை எடுத்து அடிச்சு பார்க்கிறாங்க அந்த பூச்சிங்க சாக மாட்டேங்குது.

ஏதோ உங்க வீட்டு மாட்டு சாணியில் மட்டும் விசேசம் இருப்பது தெரிஞ்சு அந்த பார்முலாவை கண்டுபிடிக்க ஒரு சர்வதேச தீவிரவாத கும்பல் லோக்கல் ரவுடிங்க கூடசேர்ந்துக்கிட்டு பிரச்சினை செய்யுறாங்க, மறுபக்கம் இந்த உலகை அழிக்கும் பூச்சிங்க, கடைசியில் அனைவரையும் எப்படி ஜெயிக்கிறீங்க என்பதுதான் கதை.

குஜய்: ஏன் என்னிடம் இருக்கும் மாடு போடும் சாணியில் அப்படி என்ன விசேசம்?

போர்ரரசு: அங்கதான் இருக்கு நம்ம படத்தோட ட்விஸ்டே, மக்களுக்கு மெசேஜ் சொல்றோம் நீங்க மாடுங்களுக்கு போடுவது இயற்கை உரம் போட்டு வளந்த புல்லு வைக்கோலை, நீங்க உங்க மண்ணையும் பொண்ணு போல பார்த்துக்குறீங்க, அதோடு நீங்க மாட்டுக்கு புண்ணாக்கு போடும் பொழுது வெறும் புண்ணாக்கு மட்டும் போடுவது இல்லை அதோடு சேர்த்து உங்க அன்பையும் போடுறீங்க. அதான் மேட்டரே.

தீவிர வாதிங்க உங்க மாட்டு சாணியை பாக்கெட் போட்டு வித்தா கோடீஸ்வரர்களாயிடலாம் என்று பிளான் போட்டு உங்க மாட்டை எல்லாம் கடத்த வராங்க, பூச்சிங்க உங்களை தேடிக்கிட்டு வருது ஒரு பக்கம் பூச்சி, ஒரு பக்கம், எப்படி ஜெயிக்கிறீங்க என்று சாணி பறக்க சொல்றோம்..

தந்திரசேகர்: மகனே இது செம சான்ஸ்டா இதுல நடிச்ச அடுத்த முதல்வர் நீதான்...

குஜய்: தயாரிப்பாளர் யாரு போர்ரரசு?

போர்ரரசு: ஆவிஎம்

குஜய்: யார் வேண்டும் என்றாலும் தயாரிக்கட்டும் ஆனா படத்தை அவுங்களே தான் ரிலீஸ் செய்யனும், அவுங்க பன் பிக்சருக்கு வித்துட கூடாது?

தந்திரசேகர்: ஏன் மகனே?

குஜய்: யப்பா நீ வேற படம் முடிஞ்சி பேசாம இருக்கலாம் என்றால், காலையில் இருந்து நைட் வரை புரோகிராம் செட்டியூல் போட்டு ஊர் ஊரா தியேட்டர் தியேட்டரா என்னை அனுப்பி டான்ஸ் ஆட உடுறாங்கப்பா, காதலில் கவுந்தேன் கோகுலை விட என்னை கேவலமா ஊர் ஊரா அனுப்பி ஆடவுடுறாங்கப்பா..வலிக்குதுப்பா வேண்டாம் அழுதுடுவேன்...

Thursday, October 8, 2009

இதிலிருந்து என்ன தெரியுது???

எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கும் பொழுது என்று நினைக்கிறேன் வாரத்தில் ஒரு நாள் நீதி போதனைகள் வகுப்பு இருக்கும், எப்பொழுதும் எதாவது ஒரு கதைய சொல்லி இதுல இருந்து என்ன தெரிகிறது சொல்லு, எங்க மணி நீ சொல்லுடா பார்ப்போம், எங்க குமாரு நீ சொல்லுடா பார்ப்போம் என்று ஒவ்வொரு வாரமும் பிளேடு போடுவார் எங்க வாத்தியார். அன்னைக்கும் வழக்கம் போல ஒரு கதை சொன்னார் ஒரு வீட்டில் ஒரு சோம்பேறி எப்பவும் தூங்கிக்கிட்டே இருப்பானாம் அவனுக்கு வேலைக்கு போவதே பிடிக்காதாம், அப்ப லெட்சுமி சாமி என்ன செஞ்சுச்சாம் ஒரு தேவதைய அனுப்பி அவன் வீட்டு கதவை தட்டிட்டு வீட்டு வாசல் முன்னாடி ஒரு ஓட்ட பானைய வைக்க சொன்னுச்சாம் தேவதையும் போய் கதவை தட்டிட்டு பானையவெச்சுட்டு ஒளிஞ்சுக்கிச்சாம், இந்த சோம்பேறியும் மெதுவா வந்து பார்த்தா ஓட்ட பானை இருந்துச்சாம் காலால் ஒரு உதை விட்டுவிட்டு திரும்ப போய் படுத்துக்கிட்டானாம், திரும்ப வேற ஒரு தேவதைய தட்ட சொல்லி ஒரு அலுமினிய பாத்திரத்தை வைக்க சொன்னுச்சாம் இப்படியே கதை போய்க்கிட்டு இருந்துச்சு கடைசியா லெட்சுமி ஒரு பானை நிறையா தங்க காசை போட்டு அதை அவன் வீட்டுக்கு முன்னாடி வெச்சு கதவை தட்ட சொன்னுச்சாம் இவனும் எழுந்து போய் பார்க்க அலுப்பு பட்டுக்கிட்டு படுத்தே கிடந்தானாம், அப்ப அந்த வழியா வேலைக்கு போய்ட்டு திரும்ப வந்த பக்கத்து வீட்டுக்காரன் அதை பார்த்து எடுத்துக்கிட்டு போய் பெரிய பணக்காரனாக ஆகிட்டான். இதுல இருந்து என்ன தெரியுது என்றார்... என்னை பார்த்து கொடுக்கனும் என்று நினைச்சா சாமி முதல் முறையே கொடுத்துடும் என்று தெரியுது சார் என்றேன்.**&&###@@@%%%^%%^%^*


பத்தாவது படிக்கும் பொழுது ஒருத்தரிடம் டியூசன் போனோம் அப்ப அவரு நடராஜ் என்பவனை கூப்பிட்டு கடைக்கு போ, இதமாதிரி சார் வாங்கி வரசொன்னாருன்னு சொல்லு அவன் ஒரு பொட்டலம் கொடுப்பான் அதை வாங்கிட்டு வா,பிரிச்ச கொன்னேப்புட்டேன் என்று அனுப்புவார். அவனும் ரொம்ப பயந்தபுள்ள ஒழுங்கா வாங்கிக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தான், ஒருநாள் அவன் லீவு என்னை கூப்பிட்டு போய்ட்டு வர சொன்னார் போய் கேட்டேன் இதுமாதிரி சார் வாங்கிவர சொன்னாருன்னு,அவனும் என்னத்தையோ ஒரு பேப்பரில் சுற்றி கொடுத்தான், என்னதான் இருக்குன்னு வரும் வழியில் பிரிச்சு பார்த்தேன் அதில் இருந்தது காண்டம் திரும்ப அதே மாதிரி மடிச்சுட்டதா நினைச்சு கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன் வாங்கிட்டு உள்ளே போனவர், என்னை பார்த்து டேய் இதை பிரிச்சியா என்றார் இல்ல சார் என்றேன், டேய் ஒழுங்கா உண்மைய சொல்லு என்றார் இல்ல சார் என்றேன், நாலு அடிய போட்டார் சார் அடிக்காதீங்க அப்புறம் சார் ஏன்டா உன்னை உள்ளே கூப்பிட்டு அடிச்சாரு என்றால் உண்மைய சொல்லிடுவேன் என்றேன். அத்தோட அடிக்கிறத நிப்பாட்டிட்டார். மறுநாள் டியூசனுக்கு போனா அடிபோட்டு நிமித்தினார் அடிக்கும் பொழுது சொன்னார், அடிச்சா சொல்லுவேன் என்று சொன்ன அடிக்காம விட்டேன் அப்படியும் எல்லோரிடமும் சொல்லி ஸ்கூல் வாத்தியார் எல்லாம் கேட்கிறானுங்க பையனை விட்டு வாங்கி வரசொன்னீயா, ஒரே ஒருநாள்தானே உன்னை அனுப்பினேன் என்று போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினார்..


காலேஜ் முடிச்சுட்டு தஞ்சாவூரில் ஒரு கம்பெணியில் மார்க்கெட்டிங்கா ஜாயிண்ட் செஞ்சேன், எங்க எம்.டி, சரவணன் உங்க காலேஜில் ஒரு செமினார் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் யாரையும் தெரியுமா? பர்மிசன் வாங்கி தரமுடியுமா என்றார், என்ன சார் இப்படி கேட்டுப்புட்டிங்க என்னா நேமு எனக்கு ,எப்ப தேதி வேண்டும் என்று சொல்லுங்க வாங்கி தருகிறேன் என்றேன். இல்ல நீங்க புதுசு எப்படி சொல்லி கேட்கனும் என்று தெரியாது நானும் வருகிறேன் வாங்க போகலாம் என்றார். சரிவாங்க என்று அவரையும் அழைச்சுக்கிட்டு எங்க CS டிப்பார்ட்மெண்ட் HOD ரூமுக்கு அழைச்சுக்கிட்டு போனேன், எப்பயும் அவரை பார்க்க நாலஞ்சு பேரு நின்னுக்கிட்டு இருப்பாங்க, நானும் மார்கெட்டிங் ஆனதால டை கட்டி ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு அவரு ரூமுக்கு போனேன். எங்க எம்.டியையும் அழைச்சுக்கிட்டு, எதோ எழுதிக்கிட்டு இருந்தவரு என்னை எதிரில் டை எல்லாம் கட்டி பார்த்ததும் என்ன டா டை எல்லாம் கட்டிக்கிட்டு இந்த பக்கம் என்றார், இதமாதிரி மார்க்கெட்டிங்கா ஜாயிண்ட் செஞ்சு இருக்கேன் என்றேன், உனக்கு எல்லாம் எந்த கேன டா வேலை கொடுத்தான் என்றார், சார் இவருதான் சார் என்று டக்குன்னு எங்க எம்.டியை காட்டிட்டேன். அவரும் சிரிச்சுக்கிட்டே ஹி ஹின்னு நின்னார். HODயும் இதை எதிர்பார்க்கல...அப்புறம் ஒருவழியா பேசி டேட் வாங்கி கொடுத்தேன் பேசுறேன்னு வந்தவர் ஒன்னும் பேசல. அதன் பிறகு ரொம்ப நாள் கிண்டலா சொல்லிக்கிட்டே இருந்தார் என்னை உங்க HODக்கு அறிமுகம் செஞ்சு வெச்ச மாதிரி யாரும் இப்படி அறிமுகம் செஞ்சு வெச்சு இருக்கமாட்டாங்க என்று...

இதில் இருந்து எல்லாம் என்ன தெரியுது......என்னை மாதிரி எப்பவும் உண்மை பேசிக்கிட்டே இருக்க கூடாதுன்னு தெரியுதா?:)))

Tuesday, August 18, 2009

எல்லோரும் வில்லன்கள் தான்!

பொம்மையை பங்கு போட
புதிதாய் வரும்
தம்பி ”பாப்பா”


மூங்கில் பிரம்போடு
எப்பொழுதும்
உலாவரும் கணக்கு
”வாத்தியார்”

சைட் அடிக்கும் பெண்ணுக்கு
பாடிகாட் மூனீஸ்வர் மீசையோடு
அவ கூடவரும் ”அப்பா”


பீர் அடிச்சு வீட்டுக்கு
வரும் பொழுது
வீட்டுக்கு அருகில் வந்ததும்
வரும் ”வாமிட்”

எண்ணெயில் போட்டு எடுத்த கத்திரிக்காய்
மாதிரி வேர்த்து வழிய போகும் இண்டர்வியுக்கு
பிரிஜில் இருந்து எடுத்த தக்காளி மாதிரி
ப்ரஸா வரும் மாடன் ”பொண்ணு”

புது மனைவிக்கு முத்தம் கொடுக்க
ஆசையோடு நெருக்கும் பொழுது
ஓடி வந்து ரூமில் ஒளியும் ”குட்டீஸ்”

மல்லிகை பூ அல்வாவோடு
வீட்டுக்கு வரும் பொழுது
மூட்டை முடிச்சோடு
வீட்டில் டேரா போட
வந்திருக்கும் ”விருந்தாளிகள்”

மனைவி பிறந்த நாளுக்கு
புடவை எடுத்து கொடுக்க
கடைக்கு போகும் பொழுது
காஸ்ட்லி புடவையை மட்டும்
எடுத்து போடும் ”சேல்ஸ் மேன்”

முதல் மூன்று மாசம்
கடைசி மூன்று மாசம்
பிறகு இரண்டு மாசம்
என்று எல்லாம் முடிஞ்சு ஆசையோடு
மனைவி அருகில் போகும் பொழுது
பாலுக்கு அழும் கை ”குழந்தை”

தியேட்டரில் தனியாய் உட்காந்திருக்கும்
நேரம் “பாஸ் கொஞ்சம் கொஞ்சம் பின்னாடி அங்க உட்கார
முடியுமா நாங்க பிரண்ட்ஸா வந்திருக்கோம்?”
என்று நாலஞ்சு பிகரோட வந்து கேட்கும் ”அவன்”

பலான படம் பார்க்க போய்
இருக்கும் பொழுது
பிட்டு போடும் நேரம்
ரெய்ட் வரும் ”போலீஸ்”


கூட்டத்தில் முண்டி அடிச்சு கைய வுட்டு
ரெண்டு டிக்கெட் என்று கேட்கும் பொழுது
ஹவுஸ் புல் என்று போர்ட் மாட்டும்
”கவுண்டர் ஆள்”

சைட் அடிக்கும் பிகர் ஏறிய பஸ்ஸில்
ஏறி ரூட் விடும் பொழுது சில்லரை
இல்லை இறங்குன்னு
இறக்கிவிடும் ”கண்டெக்டர்”


லோன் போட்டு புதுசா வாங்கிய
பைக்கை ஓட்டி பழக
கேட்கும் ”மச்சினன்”

நடுராத்திரி போன்
போட்டு தூங்கிட்டியா
மாப்பிள்ளைன்னு மப்பில் அனத்தும் ”நண்பன்”

பக்கத்து தெரு ஆயா வூட்டு
அட்ரஸையும்
சூப்பர் பிகர் பீட்டரா
கேட்கும் பொழுது ”இங்கிலீஸ்”

பிகரை பின்னாடி இருந்து
பார்த்துவிட்டு சைக்கிளில்
துரத்தி கிட்டக்க போகும்
பொழுது சடார் என்று கழண்டு
போகும் சைக்கிள் ”செயின்”

புதுசா குடிவந்த பெண்ணை
சைட் அடிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது
அதோட பிறந்தநாளுக்கு ‘அண்ணனுக்கு”
சாக்லெட் கொடும்மா
என்று சொல்லும் வீட்டு ”பெருசு”

கையில் காசு இல்லாமல்
நண்பர்களோடு
சாப்பிட போகும் பொழுது
கரெக்டா பில்லை நம்மிடம்
கொடுக்கும் ”சர்வர்”

டிஸ்கி: ஒன்றன் கீழ் ஒன்று இருப்பதால் கவிதையாக நினைச்சு விடவேண்டாம் அலைன்மெண்ட் பிராபிளம்!

Thursday, April 9, 2009

புது ஜட்டி வாங்கினதுக்கு பார்ட்டி

மச்சான் டேய் இன்னைக்கு நைட் நம்ம கோழி இருக்கான்ல அவன் புது ஜட்டி வாங்கினதுக்கு பார்ட்டி தருகிறான் வாடா நைட் நம்ம உலக்கை வீட்டுல எல்லோரும் ஊருக்கு போறாங்க அங்க வந்துடு என்று சொல்லிவிட்டு போவான்.

சரக்கு சைடிஸ் எல்லாம் வந்ததும் கிளிங் சத்தத்தோடு உற்சாகமாய் ஆரம்பிக்கும் பார்ட்டி. பேச்சுகள் மச்சான் அந்த மாலதி இருக்காளே அவ என்ன ஒரு மாதிரி பாக்குறாடா! டேய் அவளே ஒரு மாதிரிதான் போடா போ என்று எதிர் குரல் விட, போடா உன்னைய ஒருத்தியும் லுக்கு விடமாட்டேங்கிறான்னு காண்டு என்று பிகரில் ஆரம்பிக்கும் பேச்சு, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சுதி ஏறி டேய் மச்சான் அந்த பக்கத்து வீட்டு ஆண்டி இருக்குல்ல அதோட போன வாரம் என்று விவரிக்கும் பொழுது கிளு கிளுப்படையும். எல்லோரும் ஆர்வமாய் கதை கேட்பார்கள்.

அடுத்து எல்லா பார்ட்டியிலும் அஞ்சலைய நினைச்சு அழும் சூர்யா போல் ஒரு பெக் அடிச்சதும் ஓடி போன பழய காதலி நினைவு வந்து ஒப்பாரி வைக்கும் படலமும் நடக்கும். மச்சான் அவள எவ்வளோ சின்சியரா லவ் செஞ்சேன் தெரியுமாடா? என்னை அவ புரிஞ்சுக்கலடா! என்னை அவ கல்யாணம் செஞ்சிருந்தா , "இந்தா இந்தா இப்படி இப்படி உள்ளங்கையில் வெச்சு தாங்குவேண்டா" அவளை என்று குடிச்சுக்கிட்டு இருக்கும் பீர் பாட்டிலை கீழே வெச்சு உள்ளங்கைய காட்டிக்கிட்டு இருப்பான், உள்ளங்கையில் ஒரு சிக்கன் பீஸ் வெச்சதும் அப்படியே எரிக்கும் பார்வை பார்ப்பான். டேய் என்னா டா ஓவரா சலம்புற நான் கூடதான் லவ்வினேன் போய்டா அதுக்கு நான் என்ன பொட்டையாட்டம் அழுதுக்கிட்டா இருக்கேன் போடா போ எங்களுக்கு வலி இல்லை இவருதான் பெருசா லவ் செஞ்சாராம் என்று சொல்லிக்கிட்டே ஓ வென்று ஆரம்பிக்கும் அடுத்த பார்ட்டி. மச்சான் டேய் பாருடா நாம ஜாலியா இருக்கதானே கோழி ஜட்டி வாங்கினதுக்குன்னு பார்ட்டி கொடுக்கிறான் இப்படி அழுதா கஷ்டமா இருக்குல வாடா வா சீக்கிரம் முடி அந்த ரவுண்டை என்று அவனை ஒரு வழியா தேத்தி அடுத்த பெக் ஆரம்பிக்கும் பொழுது அடுத்தவன் ஆரம்பிப்பான்.

அடுத்து ஒரு மூடிய குடிச்சதுமே பாட்டு பாட ஆரம்பிக்கும் படலம் அதில் எப்பவும் குண்டன் ஆரம்பிப்பான் ”வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரம் இல்லை” என்று பழய பாட்டா பாட ஆரம்பிப்பான், டேய் மச்சான் அப்படி பாக்காத டா எனக்கு போதை இல்லை சும்மா ஜாலிக்கு பாடுறேன்.. பாரு நான் எவ்வளோ ஸ்டெடியா இருக்கேன் என்று டக்கென்று நின்னுக்கிட்டு பெண்டுலம் மாதிர் ஆடிக்கிட்டே, பாருடா நான் ஸ்டெடியா இல்லையா என்பான். சரி டா சரி நீ ஸ்டெடிதான் மச்சான் என்று அவனை அமுக்கி போட்டு விட்டு அடுத்த ரவுண்ட் ஆரம்பிக்கும்.

டேய் பாருடா இவன் சிக்கன் சாப்பிட்ட கையோட என் சைடிஸ் பிளேட்டில் கைய வெச்சு மிக்ஸர் எடுக்கிறான் என்று புகார் கொடுப்பான் ஐயர். டேய் ஐய்யரே அதான் பீர் குடிக்கிறீல்ல அப்படியே ஒரு சிக்கன் பீஸை உள்ள விட்டா என்ன என்று அவனை சீண்டும் படலம் ஆரம்பம் ஆகும். பொருத்து பொருத்து பார்த்துவிட்டு டேய் உனக்கு முதலிரவில் உனக்கு ஸ்டார்டிங் டிரபுள் வரும் டா என்று ஹைடெக் சாபம் விடுவான். அதெல்லாம் சுத்தமான ஐயர் சாபம் தான் பலிக்கும் நீ டூப்ளீகேட் ஐய்யர் அதனால பலிக்காது போடா என்று அவனை சீண்டுவதும் அதுக்கு அவன் திரும்ப டென்சன் ஆவதும் என்று ஓடிக்கிட்டு இருக்கும்.

டேய் மச்சான் இத்தனை ரவுண்ட் அடிச்சும் நான் எவ்வளோ ஸ்டாராங்கா இருக்கிறேன் பாரு என்று நான் சொல்லும் பொழுது அப்படியே ஒரு டெரரர் லுக் விடுவானுங்க சரி சரி மிக்ஸிங்க்கு அந்த வாட்டர் பாட்டிலை எடு என்று மிக்ஸ் செஞ்சு ஒருமடக்கில் குடிச்சுட்டு தலைய உலுக்கி ஸ்ஸ்ஸ்ஸ் அந்த சிக்கன் பீஸை எடுடா என்றதும் அப்படியே திமு திமு திமுன்னுபோட்டு சாத்துவானுங்க. நாயே குடிப்பது பெப்ஸி அதுக்கு மிக்ஸிக்குங்கு தண்ணி அதோடு சிக்கன் பீஸுமா டேய் குடிக்கிற நாங்களே இதுவரை ஒரு சிக்கன் பீஸ் தான் சாப்பிட்டு இருக்கோம் இதோட நீ சாப்பிட்டது நாலுடா , டேய் ரொம்ப ஓவரா போர மகனே இனி சிக்கன் பீஸ்ல கைய வை கைய வெட்டுறேன் என்று மிரட்டல்.அதுக்காக நான் சைடிஸ் சாப்பிடுவதை விட மாட்டோம்!

அடுத்து கடைசியா வாமிட் எடுக்கும் படலம். நம்ம மக்களுக்கு தண்ணி அடிச்சுட்டு வாமிட் எடுப்பது என்பது சூப்பர் பிகருங்களுக்கு மத்தியில் சத்தமா டுர்ர்ர்ர்ர்ர் விடுவதற்கு சமம். டேய் ஏன் டா அதுக்குள்ள எழுந்திருச்சுட்ட எங்கே டா போற என்ற கேள்விகளுக்கு சைகாயாலே ஒன்னுக்குன்னு சொல்லிக்கிட்டு பாத்ரூம் போய் அங்க யாருக்கும் தெரியாமல் வாமிட் எடுக்க சத்தம் கேட்டு டேய் இங்க பாருடா கழுதை கக்கூஸ் போற மாதிரி நம்ம பழம் சவுண்ட் கொடுத்துக்கிட்டு வாந்தி எடுக்கிறான், என்ன மச்சான் நீ ஒன்னுக்கடிச்சா மட்டும் உவ்வே உவ்வேன்னு சவுண்ட் வருது? மச்சான் வாழ்த்துகள் அப்பா ஆக போறீயா டா என்று வெளியே வந்தவனை சீண்டுவானுங்க, டேய் இதுவரை என் லைப்பில் இதுதான் பர்ஸ்ட் டைம் வாமிட் எடுக்கிறது, அந்த சைடிஸ் ரொம்ப ஆயில், அதோட ரெண்டு பிராண்ட் மிக்ஸ் செஞ்சது ஒத்துக்கலை என்று சாமாளிபிகேசன் நடந்துக்கிட்டு இருக்கும்பொழுதே அடுத்த ஆள் உவ்வே... டேய் இவன் ஒரு மோந்து பாத்தாலே பிளாட் ஆவும் ஆள் இவனுக்கு எவன் டா ஊத்திக்கொடுத்தது என்று பேசிக்கிட்டே இடத்தை சுத்தம் செஞ்சுக்கிட்டே இருக்கும் பொழுது எல்லாம் ஒவ்வொரு ஆளும் அப்படியே இருக்கும் இடத்திலேயே பிளாட் ஆகும்.

காலையில் எழுந்ததும் மச்சான் ஸ்மெல் வருதா பாரு என்று குளேசப் விளம்பர மாடல் மாதிரி ஊதி ஊதி பாத்துக்கிட்டு இருப்பானுங்க. டேய் பாருடா இந்த நாதாறி இங்கயே வாமிட் எடுத்து வீட்டை நாறடிச்சு இருக்கிறான் என்று வீட்டுக்காரன் சத்தம் போட, சுத்தம் செய்ய கொடுத்துவெச்சு இருக்கனும் என்று வாமிட் எடுத்தவன் தலைய சீவிக்கிட்டே...சரி சரி ஒழுங்கா துடைச்சு வை நைட் வருகிறோம் என்று அலப்பறைய கொடுத்துக்கிட்டு முடியும் பார்ட்டி.

இங்கு என்னதான் நண்பர்களோடு ஹைடெக் பாருக்கு போனாலும் அந்த சந்தோசம் வரமாட்டேங்குது.

Wednesday, March 4, 2009

கிங் பிஷர் ஏர்ஹோஸ்டஸும் நானும்!

சில பல மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது, சிறுநீரக கல் பிரச்சினையால் டாக்டரிடம் சென்ற பொழுது அவரும் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு இடது கிட்னியில் 2 கல்,வலது கிட்னியில் ஒரு கல், பிளாடரில் ஒன்று, பிளாடருக்கும் கிட்னிக்கும் இடையே ஒன்று என்று வீடு கட்ட தேவையான அளவுக்கு கல் இருக்கும் நல்ல செய்தியை சொன்னார்! வலி நாளுக்கு நாள் அதிகமாகவே ஊருக்கு போய்விடலாம் என்றால் சென்னை டிக்கெட் அனைத்தும் முடிந்துவிட்டன!

சரி மும்பை போய் அங்கிருந்து சென்னை போய்விடலாம் என்று முடிவெடுத்து மும்பைக்கும் அங்கிருந்து சென்னைக்கு கிங் பிஷரிலும் டிக்கெட் புக் செய்து இரவே மும்பை கிளம்பினேன்.மும்பையில் இருந்து சென்னை விமானத்துக்காக 3 மணி நேரம் காத்துக்கொண்டு இருக்கனும். வலி வேறு பிரிச்சு எடுக்குது எப்படி 3 மணி நேரத்தை ஓட்டபோகிறோமே என்று வந்தால் பிளைட் 1 மணி நேரம் தாமதம் என்றார்கள் என்ன கொடுமை இது என்று அங்கு வெயிட்டிங் ஏரியாவில் உட்காந்து இருந்தேன்.


(படத்தில் இருப்பவர்கள் அனைவரும் என் கேர்ள் பிரண்டுகளே, மாடல்கள் அல்ல!!!)

என்னே ஆச்சர்யம் எல்லா வலியும் குறைந்து போய்விட்டது, அன்று தான் உணர்ந்தேன் இயற்கையை ரசித்தால் எல்லாம் மறந்து போகும் என்று, ஆம் ஏர்போர்ட்டு உள்ளே கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட், டெக்கான் ஏர்வேன், பாராமவுண்ட்என்று பல நிறுவனங்களில் வேலை செய்யும் ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அங்கு இங்கும் போய் கொண்டு வந்தார்கள் அடா அடா என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கொட்டிய அழகு என்று அத்தனை அழகு பதுமைகள், அடா அடா எத விடுவது எத பார்ப்பது? இப்படி இயற்கையை ரசித்துக்கொண்டு இருந்ததில் வலி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை. பொழுதும் நன்றாக போய்கொண்டு இருந்தது, இது பத்தாததுக்கு பெங்களூரில் இருந்து வந்த கல்லூரி மாணவியர் கூட்டமும் ...எதற்கு வந்தோம் என்றே மறந்து போய்விட்டது!!!

அப்பொழுதுதான் என்னை கடந்து கிங் பிஷரில் வேலை செய்யும் ஏர் ஹோஸ்டஸ் கூட்டம் கடந்து சென்றது அதில் ஒரு பெண்ணின் அழகு வெகுவாக கவர அட இந்த பொண்ணும் நாம போகும் பிளைட்டிலேயே வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்! என் ராசி தான் எனக்கு தெரியுமே அதனால் ரொம்ப ஆசைப்படாமல் இயற்கையை ரசிக்க ஆரம்பித்தேன்.

நான் போக வேண்டிய விமானத்துக்கான அழைப்பு வரவே கிளம்பி போனேன், பிளைட்டில் ஏறினால் வெல்கம் செஞ்சது நான் பார்த்த அதே பெண்! என்ன ஆச்சர்யம் முதன் முதலாக நாம் நினைத்தது எல்லம் நடக்கிறதே என்று நினைச்சு சீட் நம்பர் தெரிஞ்சாலும் அவர்களே சொல்லி காதால் கேட்டு போய் உட்காரலாம் என்று நினைத்தேன் அது போலவே அவர்களும் நான் அமரவேண்டிய இடத்தை சொல்ல போய் அமர்ந்தேன். அப்பொழுதுதான் நினைத்தேன் குஷியில் விவேக் போட்டு வரும் ஒரு கருப்பு கண்ணாடியபோட்டு வந்திருந்தாலவது மும்தாஜ் கூட போவது போல் இவுங்க கூட போய் இருக்கலாமே என்று!

பிளைட் கிளம்பியதும் வாட்டர் பாட்டில் கொடுக்க அந்த பெண் ஒரு டிராலிய தள்ளிக்கிட்டு வர,என் இதயம் துள்ளிக்குதிக்க, டக் டக் என்று அந்த பெண் நடக்க என் இதயம் திக்திக் என்று துடிக்க...(கொஞ்சம் ஓவராத்தான் தோணும் ஆனா அந்த பெண்ணை பார்த்தா இது எல்லாம் பத்தாதுன்னு தோனும்!)ஒவ்வொருவரா கொடுத்துக்கிட்டு வந்த பெண் எனக்கு முதல் வரிசையோடு சடன் பிரேக் போட்டு நின்றுவிட்டு திரும்ப போய்விட்டது, சரி தீர்ந்து விட்டது போல அதான் எடுக்க போய் இருப்பார்கள்என்று நினைச்சேன், பின்னாடி இருந்து வந்த இட்லி குண்டன் தண்ணி பாட்டிலை கொடுத்தான் நான் அமர்ந்து இருக்கும் வரிசை வரைக்கும் அவன் ”சப்ளையர்” என்று!

ம்ம்ம் என்ன கொடுமைங்க இது!

அதன் பிறகு யூட்ரோஸ்கோப்பி செஞ்சு கல்லை எல்லாம் உடைச்சு என் வீடு கட்டும் கனவையும் தகர்த்துவிட்டார்கள் டாக்டர்கள்!
**************************************************
நேற்று நண்பர் ஒருவரிடம் சாட்டிக்கிட்டு இருக்கும் பொழுது தல நீங்க எப்பொழுது பாலோயர்சில் எப்பொழுது 200 போட போறீங்க என்றார்!

அட போங்க தல, இதுவரைக்கு பாலோயரா ஆயி அதன் பிறகு அத்துக்கிட்டு ஓடி போனவர்கள் எண்ணிக்கைய சேர்த்தாலே இன்னேரம் 200 தாண்டி இருக்கும் என்றேன்!

என்ன தல ஏன் அப்படி சொல்றீங்க என்றார்!

ஆமாம் தல ஏதாவது ஒரு பதிவை படிச்சுட்டு ஆர்வத்தில் சரி இவன் ஒழுங்கா எழுதுவான் போல என்று பாலோயரா ஆயிடுறாங்க, அதன் பிறகு நம்மை பற்றி உண்மை தெரிஞ்சதும் இவன் சகவாசமே வேண்டாம் என்று அத்துக்கிட்டு ஓடி போய்விடுகிறார்கள் என்றேன்.

கவலைய விடுங்க தல நான் உங்க பாலோயரா ஆகிறேன் என்றார்...

அவரிடம் சொன்னே, குறைந்த பட்சம் என் மொக்கையை எல்லாம் பொருத்துக்கிட்டு 3 மாசமாவது அத்துக்கிட்டு போக மாட்டேன் என்று உறுதி கொடுக்கவேண்டும் என்றேன்!

அவரு இறுதி மூச்சு வரை என்றார்!

அவரின் நம்பிக்கை சல்யூட்!!

Monday, March 2, 2009

என் கன்னி ராசியும் அனுபவங்களும்!!!

பூவரசு அல்லது கருவேலிக் கிளைய வெட்டி, அழகா தோல் சீவி ஸ்டெம்ப் எல்லாம் ரெடி செஞ்சு, மரத்தில் செதுக்கினபேட்டோடு உமா வீட்டுக்கு முன்னாடி இருக்கும் காலி இடத்தில் ஆட்டத்தப் போடுவது எங்கள் பழக்கம். அந்த புள்ளைக்குமுன்னாடி சீனைப் போடுவோம் என்று கரெக்டா அந்த புள்ள வெளியில் வரும் பொழுது, அதுக்கு முன்னாடி நம்ம திறமைய காட்ட, பவுலிங் செஞ்சுக்கிட்டு இருப்பவனை பேபி கட் ஓவராக்கி மீதி பந்தை நாம போடலாம் என்று போட்டால் அதுவரை தடவிக்கிட்டு இருந்த பன்னாடை இறங்கி வந்து மொடேர் என்று அடிப்பான் சிக்ஸ்ராக போய் அந்த புள்ள வீட்டில் விழும்! என் இதயம் அப்படியே நொறுங்கி கீழே விழும்:(


சரி பவுலிங்கில தான் சொதப்பிட்டோம் அதுக்கு முன்னாடி பேட்டிங்கிலாவது பவரைக் காட்டுவோம் என்றுஇறங்கி வந்து அடிக்கலாம் என்று அடிக்க வந்தா அதுக்குள்ள அந்த பந்து மூனு குச்சியையும் கிளப்பிக்கிட்டுப் பறக்கும் பப்பறக்கான்னு, சரி அவுட் ஆகிட்டோம் வந்ததும் தெரியாம அவுட் ஆனதும் தெரியாம போய்விடலாம் என்று நினைச்சா! கிளீன் போல்ட், அவுட் சாட் என்று ஊருக்கே கேட்கும் படி அலறுவானுங்க அதுவும் டக் அவுட் என்று சொல்லி!


சரி விளையாட்டில் தான் இப்படி முடிஞ்சு போச்சு ஸ்கூல் போகும் பொழுது அப்படியே அய்யா திறமையக் காட்டி உசார் செய்யலாம் என்று நினைப்பேன். ஸ்கூல் முடிஞ்சு வரும் பொழுது அண்ணே அண்ணே நானும் வரேன்னே
உங்க கூட, அந்த முருகன் பய சைக்கிளில் போகும் பொழுது மண்டய தட்டிட்டுப் போறான்னே உங்க சைக்கிளில்அழைச்சுக்கிட்டுப் போங்கன்னே என்பான், நம்மளும் லிப்ட் கொடுத்து அந்தப் பக்கம் போகும் புள்ளைங்க மனசில்ஒரு துண்டை போட்டுவிடலாம் என்று வாடா என்று ஏத்திக்கிட்டு கிளம்பினா, அண்ணே வேகமாப் போண்ணேஅண்ணே வேகமா போண்ணே என்று சவுண்ட் கொடுப்பான், நாமளும் வேகமா ஏறி நின்னு மிதிப்போம் கரீட்டா அந்த புள்ளைக்குப் பக்கத்துல போய் டபக்குன்னு செயின் கழண்டுக்கும் அப்படியே தலைக்குப்புறக்ககீழே விழுந்து எழுந்தாக் கூட வந்த குட்டிசாத்தான் போன்னே போயும் போயும் உன் சைக்கிளில் ஏறினேன்
பாரு என்று இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிடும்!


ஸ்கூலில் கூட படிக்கும் புள்ளைங்களோடதான் ஒட்டோ உறவோ கிடையாதுன்னு காச வெட்டி போட்டு உறவை முறிச்சுக்கிட்டதால பக்கத்து கிளாஸ் காமர்ஸ் பொண்ணுங்களை உசார் செய்யலாம் என்று அதுங்களுக்கு முன்னாடி பந்தா காட்டிக்கிட்டு இருக்கும் பொழுது, கரெக்டா அதுங்க நம் கிளாசை கிராஸ் செய்யும் பொழுதுதான் கணக்கு வாத்தியார் உள்ளே வெச்சு அடிச்சதும் மட்டும் இல்லாம கிளாஸ் ரூமுக்கு வெளியேயும் அடிச்சு இழுத்துட்டு போவார், க்ளுன்னு ஒரு சிரிப்பு சிரிப்பாளுங்க பாருங்க, அப்படியே ஒரு கருங்கல்லைஎடுத்து வாத்தியார் மண்டய உடைச்சுவிடலாம் என்று தோனும். கணக்கு வாத்திக்கும் நமக்கும் ஜென்ம பகை ஏன்னா, கிளாஸில் ஒரு முறை மச்சான் வாத்தியார் புள்ள மக்கு என்றபழமொழிய மாத்த போறேன் டா என்று சொல்ல, எப்படி என்றான் கனேஷ், கணக்கு வாத்தி மருமகனும் மக்கு என்றுமாத்த போறேன் டா என்று சொன்னேன். கூடப்படிக்கும் சுந்தரி அவர் பெண் அது காதில் விழுந்துவிட்டது இதுக்கு மேல என்ன வேண்டும்!


சரி ஸ்கூல் லைப்தான் இப்படி போச்சு காலேஜ்க்கு டிரைனில் போகும் பொழுது கூட வரும் அஞ்சலையம்மாள் காலேஜ் பெண்களுக்கு முன்னாடியாவது ஒரு இத கிரியேட் செஞ்சு வைப்போம் என்று லைப்ரரியில் இருந்து ஆட்டைய போட்ட ஜாவா புக்கை வெச்சுபடம் காட்டிக்கிட்டு வரும் பொழுதுதான் வருவான் ஒரு கிராதகன் மச்சான் முடிஞ்ச செம்மில் 4 ல் கப்பாமே ஆமாம் ஜாவாவில் 90% என்று சொன்ன ஆனால் 4 மார்க்தான் வாங்கி இருக்கியாமே என்பான், அடேய் நான் அட்டன்ட் செஞ்சதே 5 மார்க்குக்கு அதில் 4 மார்க் வாங்கினா அது 90% இல்லாம என்னடா என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கிப்பேன்!


சரி இதோட முடிஞ்சுதா என்றால் அதான் இல்லை இந்தியாவை விட்டு துபாய் வந்த பிறகு இப்பொழுது இருக்கும் கம்பெணியில் பிரிண்டிங் அவசரமாக செய்யவேண்டும் என்று வரும் சூப்பர் கில்மாங்கி கல்லூரி பெண்களிடம் நம்ம அப்ரெண்டிஸ் சாரி மேடம் நாங்க பிஸி ரெண்டு நாளைக்கு ஒன்னும் செய்யமுடியாது என்று சொல்லுவானுங்க.

உடனே அந்த பொண்ணுங்களும் உங்க மேனேஜர் கிட்ட பேசனும் என்றதும் நம்மை கை காட்டிவிட்டுவிடுவானுங்க சரி இந்த மாசம் அவனுக்கு சம்பளத்தை ஏத்திக்கொடுக்கனும் என்று நினைச்சுக்கிட்டு எஸ் மேடம் How can i help you என்று கேட்டு பீட்டர் விட்டுக்கிட்டு டேய் அந்த வேலைய நிறுத்தமுடியுமா? என்றால் முடியாது என்பான் இதுவும் பிளீஸ் ஐ நீட் இட் வெரி அர்ஜெண்ட், டூ சம்திங் பார் மீ! என்று கெஞ்சி கொஞ்சி சொல்லும், என்ன டா செய்யலாம் என்று ஒரு பெரிய பில்டப்பை கொடுத்துக்கிட்டு சரி நம்ம பிராஞ்சில் எல்லாம் என்னா செய்யமுடியுமான்னு போன் போட்டு பாரு, அதான் என்னிடம் சொல்லிட்டில்ல கவலைய விடு என்பது போல் ஒரு இமேஜ் கிரியேட் செஞ்சுக்கிட்டு இருக்கும் பொழுது வருவான் ஒரு கிராதகன் டேய் நீதானே 9 மணிக்கு எல்லாத்தையும் முடிச்சு டெலிவரி வேற செய்வோம் என்று சொன்ன, ஆனா இப்பொழுதுதான் பிரிண்டிங் ஓடிக்கிட்டு இருக்கு என்னா டா நினைச்சுக்கிட்டு இருக்க, இது இல்லாம நான் எப்படி ஒபாமை மீட் செய்வது என்ற ரேஞ்சுக்கு பாட்டு விழும்... அப்படியே பம்மி பதுங்கி சாரிங்க நோரிங்க எல்லாம் சொல்லி அவனை தாஜா செஞ்சு அனுப்பிவிட்டு பார்த்தா இந்த புள்ள விடும் பாரு ஒரு கேவலமான லுக்கு....ம்ம்ம்




காசிக்கு போனாலும் கருமம் விடாது என்பது போல துபாய் வந்தாலும் இந்த ராசி விடாது போல!

Thursday, February 19, 2009

பெண்களை குட்டுவது தப்பா? அதனால் என்ன ஆகும்?

எங்க பள்ளிகூடம் கோ-எஜிகேசன், கூட பல ஊரில் இருந்தும் பல பொண்ணுங்க இருந்தாங்க அப்பொழுதில் இருந்தே நமக்கும் பொம்பள புள்ளைங்களுக்கும் ஆகவே ஆகாது. எப்ப பார்த்தாலும் முதல் மார்க் அது இதுன்னு வாங்கிட்டு நம்மை ஏகத்துக்கும் டென்சன் ஆக்குவாளுங்க, அது கூட பரவாயில்லை எங்களை பார்த்து வாடா போடான்னு வேற கூப்பிடுவாளுங்க அங்கதான் ஆரம்பிச்சிது வினை. ஏய் எங்களை வாடா போடான்னு கூப்பிட்ட நல்லா இருக்காது ஆமா, ஒழுங்க பேர் சொல்லி கூப்பிடு என்று சுமதியிடம் நான் சொல்ல முடியாது டா அப்படிதான்டா கூப்பிடுவேன் டா என்று சொன்னதும் ஏய் அப்புறம் நானும் வாடி போடின்னு கூப்பிடுவேன்டி என்று சொல்ல வாய் பேச்சு கை கலப்பானது.


அடிச்சு கீழ தள்ளி மேல ஏறி நல்லா கும்மு கும்முன்னு கும்மிட்டு கிளாசுக்கு ஓடி போய்விட்டேன், கிளாசுக்கு போனா ஊஊஊஊஊஊன்னு சங்கு சத்தம், ஊர்ல மதியம் ஒரு மணிக்குதானே சங்கு ஊதும் ஆனா என்ன டா அதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுடுச்சுன்னு பார்த்தா அடிவாங்கின சுமதி கத்துறா, என்ன டா இது அவளும் தான் அடிச்சா நாம என்னா இப்படியா ஊரகூட்டினோம் என்ன இது சின்னபுள்ள தனமா ராஸ்கல்ஸ் என்று நினைச்சுக்கிட்டு இருக்கும் பொழுதே அப்படியே கொத்தா கோபால் சார் தூக்கிட்டு போனதுதாங்க தெரியும் சட சடன்னு ஒரே சத்தம், டின்னு கட்டுவது என்று கேள்வி பட்டு இருக்கேன் அன்னைக்குதான் வாங்கினேன்.

சரி சரி விடு விடு பெண்ணீயத்தை எதிர்த்து போர் செய்யும் வீரனுக்கு இது எல்லாம் சகஜம் என்று வந்து பார்த்தா இஇன்ன்னு சிரிக்கிறா அவ, அடி பாவி நடிச்சியாடின்னு மனசுக்குள்ளே கருவிக்கிட்டு. உடனே நண்பர்களை எல்லாம் கூட்டி டேய் இது ஒட்டு மொத்த ஆண் சமுகத்துக்கே வந்த இழுக்கு இனி அவளுங்க யாரும் டா போட்டு கூப்பிட்டா நீங்களும் டி போட்டுகூப்பிடனும் என்று சொல்லி சபதம் எடுத்து விட்டு கலைந்தோம்.

கொஞ்சநாட்களில் சுமதி, கவிதா, புனிதவள்ளி என்று எதிரிகள் லிஸ்ட் அதிகமாகிட்டே போனது டெய்லி அவளுங்களும் அடிவாங்கமா இருக்க மாட்டாளுங்க,அவுங்க வீட்டுபாட நோட்டில் இங்கை ஊற்றி மூடி வைத்து விடுவது புஸ்த பையில் இருக்கும் புத்தகத்தை வேறு யாரோட பைக்காவது மாற்றிவிட்டு அந்த பையில் மண் குப்பை எல்லா கொண்டு நிரப்பி வைப்பேன்.கிளாஸ் சாரிடம் போய் புகார் கொடுப்பாங்க ஆனால் குற்றத்தை நான் தான் செஞ்சேன் என்பதற்கு போதிய சாட்சிகள் இல்லாததால் நான் விடுதலை ஆகிவிடுவேன்,இப்படியே ஒரு ரெண்டு வருசம் ஆனது.

7 வது 8 வது படிக்கும் பொழுது பேச்சு வார்த்தை கட் ஆனது பேசிக்க மாட்டோம். கிளாசுக்கு வரும் நடராஜ் சார் என்ன செய்யவார் கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்றால் பொண்ணுங்களை விட்டு குட்ட சொல்லுவார் அது அப்ப பெரிய அவமானம். ஒரு பொண்ணு கையால அடிவாங்குறியே புத்திவரவில்லை என்றுவேறு திட்டுவார்.

நம்ம எப்ப கரீட்டா பதில் சொல்லி இருக்கோம் அங்க பொண்ணுங்க எப்ப டா நான் மாட்டுவேன் என்று காத்துக்கிட்டு இருப்பாளுங்க,அங்கேருந்து வந்து முக்கி முக்கி ஓங்கி வேகமா குட்டுவாளுங்க அது அவளுங்களுக்கு வேகம் ஆனா நம்ம மண்டை தான் ஸ்டாராங்கான மரமண்டையாச்சா அதனால் வலி இருக்காது.என்னமோ ஒரு சிங்கத்தை குட்டி சாச்சுட்ட நிம்மதியில் போய் உட்கார்ந்து இருப்பாளுங்க.

அடுத்த முறை அவுங்க பதில் சொல்லாத பொழுது அதிகமாக கொட்டு வாங்கியது யார் என்ற தகுதியின் அடிப்படையில் நமக்குதான் அவுங்களை குட்ட வாய்பு கிடைக்கும், விரலை மடக்கி முட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சும்மா நங்குன்னு ஒரு குட்டுவைப்பேன் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் வரைக்கும் அழுகை நிறுத்தாதுங்க. மண்டைய தடவி தடவி பார்த்துக்கிட்டு இருக்குங்க வீங்கி இருக்கான்னு மற்ற பொண்ணுங்க எல்லாம் குட்டு வாங்கியவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு என்னை ஒரு முறை முறைப்பாங்க பாருங்க அப்ப நமக்கு அது ஒலிம்பிக்கில் மெடல் கொடுத்த மாதிரி.

நம்ம கூட்டதில் சில குள்ள நரிங்க இருப்பானுங்க போய் குட்டுங்கடான்னா அந்த பக்கம் போய் காசு கொடுத்தா யானை தும்பிக்கையை தலையில் வைக்கும்ல்ல அதுபோல நைசா வலிக்காம குட்டுவது போல் நடிச்சுட்டு வந்துடுவானுங்க. அவளுங்களும் அந்த நன்றி கடனை கிளாஸ் டெஸ்டில் காட்டுவாளுங்க பெஞ்சின் இரு மூலையிலும் இரண்டு பெண்கள் நடுவில் ஒரு பையன் என்று உட்கார வெச்சு டெஸ்ட் வைப்பாங்க. அப்பவே தெரிஞ்சு இருக்கு பொண்ணுங்க ஆண்களின் முன்னேற்றத்துக்கு உதவமாட்டாங்க என்று, குட்டுவது போல் நடிச்ச குள்ள நரிங்களுக்கு மட்டும் பேப்பரை காட்டிடுவாளுங்க.

அப்புறம் 9வது படிக்கும் பொழுது தனி தனி கிளாசில் போட்டுவிட்டானுங்க, பிறகு ரெண்டு வருசம் கழிச்சு 11ல் திரும்ப ஒன்னா படிக்கும் பொழுதுதான் வாழ்கையில் எத்தனை பெரிய தப்பை செஞ்சு இருக்கோம் என்று புரிஞ்சது, ஆமாங்க அழகா தாவணி போட்டுக்கிட்டு அம்சமா இருந்தாளுங்க போய் பிரண்ட் ஆகிக்கலாம் என்று பார்த்தால் அப்பயும் நம்ம மேல இருந்த கோவம் தீரல போல! பேச மாட்டாளுங்க சரி இப்ப யாரும் குட்ட சொன்னா போய் நானும் குள்ள நரி ஆகி சமாதானம் ஆகிடலாம் என்று பார்த்தா கடைசிவரை அதுக்கு வாய்பே இல்லாம போச்சுங்க.

டிஸ்கி: தலைப்புக்கு பதில் கேர்ள் பிரண்டு கிடைக்காமல் போகும்!

இது பழயகுப்பை முன்னாடி எழுதியது! சும்மா கிண்டியதில் கிடைத்தது!

Wednesday, October 29, 2008

சிக்ஸ் பேக் முயற்சியில் சில ஸ்டார்ஸ்- ஒரு காமெடி!!!

பொல்லாதவனில் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் நடிச்ச தனுசை பார்த்து விசால், அர்ஜூன், சூர்யா என்று அனைவரும் மல்லு கட்டகிறார்கள் இனி சில சினிமா நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஜே.கே.ரித்தீஸ் அறையில்...ரித்தீஸிடம்

அண்ணே நீங்க நாயகன் படத்தில் ஒருவன் முதுகில் ஊஞ்சலாடியதை கண்டு உலகமே மெரண்டு போய் கிடக்கு அண்ணே அதை அப்படியே மெயிண்டெயின் செய்யனும், ஈக்குச்சி போல உடம்பு இருக்கிறவனுங்க எல்லாம் சிக்ஸ் பேக்கோடு நடிச்சு மிரட்டுரானுங்க அதுபோல நீங்களும்
சிக்ஸ் பேக்கோட நடிக்கனும்...

ஜே.கே: நாம நடிக்கிறத பார்த்தே மிரண்டு போறானுங்க, இதுல எதுக்கு சிக்ஸ் பேக்!

இப்படி சொன்னா எப்படின்னே அப்புறம் உங்க எதிர்கால அமெரிக்க முதல்வர் ஆகும் கனவு கலைஞ்சுடும் அண்ணே!

ஜே.கே: சிக்ஸ் பேக்கும் என் அமெரிக்க முதல்வர் கனவுக்கும் என்ன சம்மந்தம்?

அண்ணே அர்ணால்டு சிக்ஸ் பேக்கோடு நடிச்சதால் தான் அவரு அழகில் அனைவரும் மயங்கிட்டாங்க அதனால் தான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டுக்கு பிரதமர் ஆகி இருக்கார், நீங்களும் அவரை போல் நடிச்சீங்க புஷ் போல நீங்களும் அடுத்த அமெரிக்க முதல்வர் ஆகிடுவீங்க.

ஜே.கே: அப்படியா இருடே இதோ வருகிறேன்,என்று வெளியே ஓடிப்போய்
திரும்ப வருகிறார்..

இதோ பாருடா சிக்ஸ் பேக்

1) இது ஸ்கூல் பேக்

2) இது டிராவல் பேக்

3) இது ஹேண்ட் பேக்

4) இது ஷோல்டர் பேக்

5) இது லெதர் பேக்

6) இந்தாடா கடைசியா கேரி பேக்

எடுத்து மாட்டுங்கடா என் மேலே. இப்ப வந்துச்சா சிக்ஸ் பேக் என் மேலே!!!

மனசுக்குள் (அண்ணே உங்களு சினிமான்னா என்னானு தெரியாதுன்னே நினைச்சேன் ஆனா சிக்ஸ் பேக்ன்னாலும் என்னன்னு தெரியாதா அவ்வ்வ்வ்)

ஜே.கே: ஏய் யாருடா அங்க இந்த ஸ்கூல் பேக் ஒரு ஸ்கூல் படிக்கும் பெண் கொடுத்துச்சு அதுக்கு வாங்கி கொடுங்கடா 1000 ஸ்கூல் பேக், டிராவல் பேக் கொடுத்தவனுக்கு வாங்கி கொடுங்கடா ஒரு பஸ்!இப்படி அடுத்த அடுத்த கட்டளைகளை போட்டுக்கிட்டு இருக்கார் ரித்தீஸ் (2011 முதல்வர் நம்பர் 12).

***********************************************************************
எஸ்.ஜே.சூர்யாவிடம் ஒரு தயாரிப்பாளர் நீங்க தான் என் அடுத்த படத்தில் ஹீரோ படம் பேரு புளு பிலிம்..

என்னங்க புளு பிலிம் என்று வெச்சா வரி சலுகை கிடைக்காது நீலப்படம் என்று வெச்சுடலாம்...

தயாரிப்பு: அதுவும் சரிதான் நீலப்படம் என்றே வெச்சுடலாம், ஆனா நீங்க இந்த படத்தில் சிக்ஸ் பேக்கோடு வரும் போல ஒரு ”சீன்” வைக்கனும்...
எஸ்.ஜே: அதுக்கு என்னா ஒரு நாள் டைம் கொடுங்க உங்க எதிர்ப்பார்பை நிறைவேற்றுவது போல சிக்ஸ் பேக்கோடு வருகிறேன்...

மறுநாள் காலை சார் இதோ பாருங்க சிக்ஸ் பேக்கோடு வந்து இருக்கேன்...

இது நமீதா ”பேக்”..

இது ஸ்ரேயா ”பேக்”...

இது அசின் ”பேக்”...

இது திரிஷா ”பேக்”...

இது நயன் தாரா ”பேக்”...

இது பிரியாமணி ”பேக்”... என்று கிளேவில் செஞ்ச நடிகைகளின் ”பேக்”கை காட்டுகிறார். கதைப்படி ஹீரோவுக்கு காலையில் ஒரு பேக் இருக்கும் மாலை ஒரு பேக் இருக்கும் இப்படி ஒன்னு ஒன்னா மாறும் என்று கதைய வெச்சு கலக்கிடலாம்...

ஆஹா நீ எப்பவும் இப்படிதானா!!! என்று ஓடுகிறார் தயாரிப்பு.

********************************************************
அடுத்து டி.ஆர். வீட்டில் சார் உங்க பையன புது படத்தில் புக் செய்ய வந்து இருக்கோம்...

டி.ஆர்: சரி முதலில் கதைய சொல்லுங்க, புடிச்சா கால் ஷீட் வாங்கி தருகிறேன்...

சார் கதைப்படி உங்க பையன் ஒரு பாடி பில்டர் அவரிடம் பாடிய பில்ட் பண்ண வரும் ஹீரோயினுக்கும் கசமுசா ஆகிடுது... இதுல முக்கியமே உங்க பையன் தனுஷ்க்கு இருந்தது போல் சிக்ஸ் பேக் வேண்டும்...


டி.ஆர்: சினிமாவுக்காக அவனுக்கு வந்தது
சிக்ஸ் பேக்..
சிம்பு சினிமாவிலேயே இருக்கு பேக்கு.

அவன் வளந்த பின் வந்தது சிக்ஸ் பேக்
இவன் பிறப்பிலேயே ஒரு பேக்கு.

எங்க வீட்டில் இருப்பது இரண்டு பேக்கு
இதை தெரியதவனை எல்லாம் போட்டு தாக்கு.

ஏ டன் டனக்கா ஏ டனக்குனக்கா!

Sunday, October 19, 2008

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது எப்படி? கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி பாராட்டுவது. சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி பேசிவிட்டு வந்து யார் அவர் என்று மண்டைய குழப்பிப்போம் அதுபோல் என்ன சாப்பிட்டோம் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கும் ஆண்களுக்காக இந்த பதிவு.


சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?

மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம், போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள் (கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது கண்டிப்பாக சாம்பார்தான்.


ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.


ரசம் என்று உறுதி செய்வது எப்படி?

நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை,முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

ரிஸ்க்: தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்கரை போட மறந்தாலும் மறந்து இருக்கலாம்).


புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?
நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல் கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.


******************************************************************************

சாதம் வகைகள்


சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).


ரிஸ்க்: சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில் மிளகு,பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால் அது பொங்கல். இல்லை என்றால்அது வெறும் சாதம்.

புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும், காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில சமயம் புளிப்பு.

லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை மிளகாய் கிடக்கும்.

இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி பிரச்சினை இல்லை.

சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ் கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன் புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.

ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால் உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான் இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அது பிரியாணிதான்.

முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.

******************************************************************************

இதர சில குறிப்புகள்

சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)

ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!

கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஞ்சி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு என்ற அவசியம் இல்லை).

வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல் இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து போய்விட்டது)

**********************************************************************

சில சமயம் அறுசுவை.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?, தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல் சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி இருந்தாலும் ”என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற” என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுங்க.

இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க, எஞ்சாய் செய்யுங்க!
டிஸ்கி: சில சமயம் உப்பு, உறைப்பு, புளிப்பு எதுவும் இருக்காது இருந்தாலும் எக்ஸ்பீரியன்ஸையும், மூலப்பொருட்களையும் வைத்து அது என்ன என்று கண்டுபிடிக்கனும்.
பிற்சேர்க்கை: இது முழுக்க முழுக்க கற்பனையே! இதை யாருடைய மிரட்டலுக்கும் பயந்து சொல்லவில்லை!!!

Monday, September 15, 2008

முட்டை வாங்குவது எப்படி? டிப்ஸ் பதிவு

எல்லோரும் நினைப்பது போல் முட்டை வாங்குவது அவ்வளோ ஈசி இல்லை, முட்டை வாங்க என்று ஒரு தனி திறமை வாங்க வேண்டும்.
இதில் Veg , Non-veg என்று வித்தியாசம் கிடையாது யார் வேண்டும் என்றாலும் முட்டை வாங்கலாம், என்ன வாங்க தனி தில் வேண்டும்.

நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல, பரிட்சை பேப்பரில், அல்லது சிலேட்டில் முட்டை வாங்குவது. எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் பேப்பரை கொடுத்துவிட்டால் முட்டை மார்க் போட்டுவிடப்போகிறார்கள் என்று, அதில் அத்தனை கிக் இருக்காது. நம் திறமையை காட்டி முட்டை மார்க் வாங்குவதில் தான் ஒரு கிக் இருக்கும்.

முட்டைகள் அவை என் வாழ்கையோடு பின்னிப்பினைந்தவை, தேர்வானாலும் சரி, சாப்பாடானுலும் சரி, பதிவானாலும் சரி முட்டைகள் எனக்கு பிடித்தவை. பதிவில் ஆம்லேட் போடுவதை வைத்து ஜோடி கண்டுபிடிப்பது என்று எழுதியது செம ஹிட் ஆனது, அதை போல் முட்டையை போட்டோ புடிச்சு போட்டது PIT போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு அழைத்து சென்றது இப்படி என் வாழ்கையில் ஒரு முக்கிய அங்கமாக ஆகிவிட்ட முட்டையை பற்றிய கதை!!!

முன்பே சொன்னது போல் முட்டை வாங்குவது ஒரு கலை, அந்த கலை சிறுவயது முதலே என்னிடம் இருந்தது இதைதான் பார்ன் ஜீனியஸ் என்று சொல்லுவாங்க போல்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஒரு கெட்டப்பழக்கம் தேர்வு சமயத்தில் மட்டும் பெஞ்சின் இரு மூலைகளில் பசங்களையும், நடுவில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்துவிடுவார்கள் ஏன் என்றால் அப்பொழுதுதான் பார்த்து எழுத முடியாதாம், (அப்பவே குறிப்பா சொல்லி இருக்காங்க பெண்கள் வாழ்கையில் முன்னேற உதவமாட்டார்கள் என்று) .

உட்காந்த பிறகு பார்த்தால் நாம ”உ” என்று பிள்ளையார் சுழி, முருகன் துனை எல்லாம் மேலே எழுதிவிட்டு பெயரை எழுதி, நம்பரை எழுதி முடிக்கும் முன்பே பக்கத்தில் இருக்கும் எனிமி(பொண்ணு), சார் என்று கூப்பிடும் என்னன்னு பார்த்தால் அடிசனல் பேப்பர் வாங்கும், அடப்பாவி நாம இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள மெயின் பேப்பரை முடிச்சிட்டியா என்று நினைச்சுக்கிட்டு என்னத்த எழுத ஆரம்பிக்கலாம், என்று யோசிக்கும் முன் அடுத்த அடிஸ்னல் பேப்பர் கேட்கும் அந்த புள்ள.

ஸ்கூலில் எல்லாம் அடிஸ்னல் பேப்பர் கேட்டு வாங்கினா ஒரு தனி மரியாதை, நமக்கு எழுத தெரிஞ்ச மேட்டருக்கு தேதி, பெயர், தேர்வு எண் என்று மூன்று வரி போதும் இதில் எங்கே இருந்து முப்பது வரி + முப்பது வரி +முப்பது வரி + முப்பது வரி (நான்கு பக்கமும் முப்பதுவரி என்று எழுதிவிட்டால் இந்த பதிவின் பக்கத்தை எப்படி நிறப்புவது???) எழுதி அடிஸ்னல் பேப்பர் வாங்குவது????

இருந்தாலும் ஒரு கூடப்படிக்கும் புள்ளைய பக்கத்தில் வெச்சுக்கிட்டு எழுதாம எப்படி உட்காந்து இருப்பது? அது இழுக்கு என்று எழுத ஆரம்பிச்சா பேனாவுக்கு பேப்பரில் ஏதோ ஸ்பீட் பிரேக் இருப்பது போல் நகரவே நகராது.

இருந்தாலும் பேப்பரை நிறப்பி அடிஸ்னல் பேப்பர் வாங்கனுமே, அதுக்கு நான் கண்டு பிடித்த டெக்னிக் பேப்பரின் நான்கு புறமும் ஸ்கேல் மொத்தத்துக்கு இடம் விட்டு அழகாக ஸ்கெட்ச் வைத்து மார்ஜின் போட்டு பொட்டி கட்டினால்
எழுத வேண்டிய இடம் டக்குன்னு சின்னதாகிவிடும். எல்லோரும் எழுதி முடிச்சுதான் டெக்ரேட் செய்வாங்க ஆனா நாம எல்லாம் வெறும் பேப்பரையே டெக்ரேட் செஞ்சவோம். அதுபோல் எழுதும் பொழுது ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையில் ஒரு பத்தியே எழுதும் அளவுக்கு இடம் விடுவேன்.

டெக்ரேட் எல்லாம் செஞ்சு முடிஞ்ச பிறகு ஈயத்தின் பயன்கள் என்ன?என்று இருக்கும் கேள்விக்கு இட்லி பானைக்கு ஈயம் பூச பயம் படுகிறது, சட்டி பானைகளுக்கு ஈயம் பூசவும் அப்படி பூசுவதால் பாத்திரம் சீக்கிரம் வீனாகமலும் சூடு எளிதில் பரவவும் பயன் படுகிறது என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் எழுதி பேப்பரை நிறப்புவேன். பக்கத்தில் இருக்கும் புள்ள அடே இவனும் என்னமோ எழுதி மெயின் பேப்பரை முடிச்சுட்டானே என்று பார்க்கும். அப்ப நம்ம கெத்தா எழுந்திருச்சு சார் பேப்பர் என்று கேட்கும் பொழுது அப்படியே கிளாசே நம்ம திரும்பி பார்க்கும் பாருங்க! நொம்ப பெருமையாக இருக்கும், இதுக்காகவே என்ன என்னமோ எழுதி அடிசனல் மேல அடிசனல் வாங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவேன்.

பேப்பரை நிறப்ப நான் செய்த டெக்னிக்ஸ்

1) பேப்பரின் நான்கு புறமும் மார்ஜின் விட்டு பொட்டி கட்டனும்.

2) ஒருவரிக்கும் அடுத்தவரிக்கும் இடையில்





இம்புட்டு கேப்பாவது இருக்கனும்.

3) கொஸ்டின் நம்பரை மட்டும் எழுதி பதில் எழுத கூடாது.

ஏதேனும் 3 க்கு சிறு குறிப்பு வரைக என்று கொஸ்டின் பேப்பரில் இருந்தால் அதையே திரும்ப எழுதி, கேள்வியை எழுதி பின் பதிலை எழுதவேண்டும்.

4)பொருத்துக என்று இருந்தால் கொஸ்டின் பேப்பரில் இருப்பதை அப்படியே எழுதி திரும்ப நாமும் நம் பங்குக்கும் அதை சரி செய்ய முயற்சிக்கனும்.

இப்படி கஸ்டப்பட்டு எல்லா டெக்னிக்கையும் உபயோகித்து எழுதிய பிறகு
பேப்பர் கொடுக்கும் பொழுது முட்டை மார்க் வாங்க எதுக்குடா இத்தனை பேப்பர் வாங்கின என்று அடி விழும் பொழுதுதான் கொஞ்சம் வெட்கமாக இருக்கும், பிறகு அதுவும் பழக்கம் ஆகிவிட்டது.

Sunday, September 7, 2008

ஆற்காடு வீராசாமிக்கு சில யோசனைகள்.

கடந்த ஒருவாரமாக எல்லோரும் மின்சாரத்தை எப்படி மிச்சம் படுத்துவது என்று எழுதிக்கிட்டு இருக்கிறார்கள். நண்பர் பரிசல் மின்சார காண்டம் என்று ஒரு பதிவு போட்டு அவர் பங்குக்கு கருத்து சொல்லி இருக்கிறார். இன்று (காலை டிபனுக்கு பின் போடும் பதிவு) கோவி.கண்ணன் அவர்கள் மின்சாரம் பற்றியும் அதுக்கு மாற்று யோசனை பற்றியும் எழுதி இருக்கிறார்.

இது எல்லாம் பத்தாது என்று கார்கி அவர்கள் என்னை பார்த்து உருப்படியா ஏதும் எழுதவே மாட்டியா? அய்யனார் உன் நண்பன் தானே அவரை போல் எழுதமாட்டியா என்று எல்லாம் என்னை கேள்வி கேட்டுவிட்டார். உருப்படியா எழுதமாட்டியா என்று கேட்டு இருந்தால் கூட பரவாயில்லை அய்யனார் மாதிரி என்று கேட்டதுதான் எனக்கு வருத்தத்தை தருகிறது :((
அய்யனார் மாதிரி எழுத முடியவில்லை ஆற்காடாருக்கு யோசனை சொல்லும் அளவுக்கு பதிவு எழுத தூண்டிய கார்கிக்கு இந்த பதிவு சமர்பனம்.

இனி சீரியசாக ஆலோசனைகள்:

ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கிக்கிட்டு இருந்த பொழுது லாலு மந்திரி ஆனபிறகு லாபம் ஈட்டும் துறையாக ஆனது. அது போல் முதலில் மின்சார துறையை லாபம் ஈட்டும் துறையாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

லாபம் வந்தால் தானே மின்சாரமும் வந்துடப்போவுது.
ஆலோசனை 1:
ஊர் எங்கும் துணி துவைக்கும் தொழிளார்கள் துணியை காயப்போட இடம் இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்று போட்டு காயவைக்கிறார்கள், அவர்களுக்கு சும்மாக கிடக்கும் லைன் கம்பிகள் மேல் துணி காயப்போட அனுமதி கொடுத்தால் அவர்களிடம் இருந்து துணி ஒன்றுக்கு 25 பைசா வீதம் வாங்கிக்கலாம். அதுபோல் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் துணி காயப்போட இடம் இல்லாமல் ஜட்டி முதல் அனைத்தையும் வீட்டுக்குள்ளேயே காயப்போடுவதால் அடிக்கடி இச் கார்ட் வாங்க வேண்டி இருக்கிறது, ஜட்டியை சூரிய ஒளியின் கீழ் காய்ப்போடுவதை கட்டாயமாக்க அன்பு மணி யோசித்து வருகிறார். அதுக்கு முன் நீங்கள் அனுமதி கொடுத்தால் அனைவரும் ஜட்டி முதல் அனைத்தையும் காயப்போட்டு அதுக்கு வாடகையும் கொடுப்பார்கள்.



உங்களுக்காக பிளான் மாடல் மேலே, ஜட்டி படம் போட்டால் தமிழ்மணத்தில் சட்ட சிக்கல் வரும் அதனால் போடவில்லை.

அலோசனை 2:
விடுமுறை நாட்களில் குழந்தைகளை தூங்க வைக்க அல்லது விளையாட இடம் பற்றாக்குறை இருக்கிறது, அதை சரி செய்ய குழந்தைகளை அல்லது என்னை போன்ற வீர தீர செயல்கள் செய்ய விரும்பும் இளைஞர்கள் ஊஞ்சல் போல் ஆட மின்சார கம்பிகளை பயன் படுத்த அனுமதி கொடுத்தால்

ஒரு மணி நேரத்துக்கு என்று வாடகை வாங்கிடலாம்.
பிளான் மாடல் கீழே!




ஆலோசனை 3:

காதலிப்பவர்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்சினை, கிராமம், நகரம் என்று எங்குமே காதலிப்பவர்கள் உட்காந்து பேச இடம் கிடைப்பது இல்லை.

கிராமத்தில் என்றால் கரும்பு காடு , பருத்தி காடு என்ற இடங்களுக்கு சென்றால் பூச்சி, கரும்பு சுணை என்று ஏகப்பட்ட பிரச்சினை, நகரம் என்றால் கூட்டம் ஒரு பிரச்சினை அடுக்கு மாடி குடியிருப்பு போல ஒருத்தர் மடி மீது ஒருவர் உட்காந்து பேச வேண்டி இருக்கு, அது மட்டும் இன்றி ரோப் கார் பார்கனும் என்றால் பழனிக்கு செல்லவேண்டி இருக்கு ஆகையால் ரோப் கார்களை சும்மாக லையன் கம்பிகளில் தொங்க விட்டு அதை தின வாடகை வாங்கினால் கூட்டம் அதிகமாக வரும், ரோப் கார்களை இயக்க மின்சாரம் தேவை படும் என்று நினைக்கிறேன் ஆனால் இங்கு சும்மா நிறுத்தி வைத்து இருந்தால் போதும்.


பிளான் மாடல் கீழே


என்னை இப்படி சீரியசாக பதிவு எழுத வைத்த பரிசல், கோவி, கார்கி அனைவருக்கும் நீங்கள் சொல்லும் பாராட்டுகள் போய் சேரட்டும்.

டிஸ்கி: பரிசல் பதிவில் சொல்லி இருப்பது போல் ஏதாவது செஞ்சு மின்சாரத்தை மிச்சம் செஞ்சு அதை ஒரு கம்பியில் எடுத்து ஆற்காடார் டிக்கியில் கொடுக்கவும் அப்பயாவது பல்பு எரிஞ்சு ஏதும் செய்கிறாரா என்று பார்க்கலாம்.

Saturday, March 22, 2008

பூங்காவின் புது வடிவ முன்னோட்டம்....

பூங்கா இதழ் வெகு நாட்களாக வெளிவரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும், அதை புதுவடிவில் மெருகேற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அது எப்படி என்றுஒரு கற்பனை. முன்பு எல்லாம் பதிவு போட்ட பின்புதான் அது பூங்காவில் வரும் இனி சிறந்த எழுத்தாளர்களிடம் எழுதி வாங்கி வெளியிடுவது, அதன் பின்பேஅதை பதிவில் போட அனுமதிப்பது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

முதல் ஆளாக போய் அவர்கள் சந்திப்பது நமது ஓசை செல்லா அண்ணாச்சியை...

நிர்வாகி : வணக்கம் ஓசை செல்லா

ஓசை : வணக்கம்!

நிர்வாகி: பூங்கா இதழில் வெளியிட ஒரு கட்டுரை எழுதி தரவேண்டும்...

ஓசை : அடா அடா கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க, இப்பதான் 5 நிமிடம் முன்பு இனி எழுத போவது இல்லை என்றும், இனி ஆடியோ பதிவு மட்டும் தான் என்றும் முடிவு செய்து இருக்கிறேன்.

நிர்வாகி: மனதுக்குள் ஆமா மனசுல பெரிய பின்லேடன், வீரப்பன் என்று நினைப்பு ஆடியோ மட்டும்தான் ரிலீஸ் செய்வார்!(சும்மா உட்கார்ந்துக்கிட்டு கடிகாரத்தையே பார்த்துக்கிட்டு இருக்கிறார்)

ஓசை: என்னா கடிகாரத்தையே பார்கிறீர்கள்?

நிர்வாகி: இல்லை எப்படியும் இன்னும் 5 நிமிடத்தில் முடிவு மாத்திப்பீங்க அதான் வெயிட்டீங், போய் திரும்ப எல்லாம் வருவது கஷ்டமாச்சே அதான்.

ஓசை : டக்க்குன்னு ஒரு பேப்பரில் ஓல பாயில் ஒன்னுக்கு அடிக்கும் அய்யானார் என்று எழுதி தர...

நிர்வாகி: தலைப்பு ஓக்கே பதிவு?

ஓசை: அதேதான் தலைப்பு அதே தான் பதிவு.. அந்த ஒன்னுக்கு என்பதை மட்டும் சைஸ் 36ல் போட்டுக்குங்க, அடிக்கும் என்பதை 26ல் போட்டுக்குங்க. முடிஞ்சா ஒவ்வொருஎழுத்தும் ஒவ்வொரு, மாதிரி இருக்கனும்.

நிர்வாகி: ரைட்டுங்க அப்ப கிளம்புறேன்.

*****************************************************
அடுத்து அவர் போய் சந்திக்கும் ஆள் கோவி.கண்ணன்

நிர்வாகி: வணக்கம்

கோவி: வணக்கம் சொல்லுங்க எப்படி இருக்கீங்க, நலமா?

நிர்வாகி: மிக்க நலம், நீங்க பூங்காவுக்கு ஒரு கட்டுரை எழுதி தரவேண்டுமே!

கோவி: அடா அடா நீங்க ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க,நான் இனி 9.9.9999 ல் தான் எழுத போவதாக முடிவு எடுத்து இருக்கிறேன். அதுவரை நோ அழுகாச்சி, நோ பீளிங்ஸ்.

நிர்வாகி: என்னங்க இப்படி சொல்லிட்டீங்க:(

கோவி: சோக ஸ்மைலி கூட வேண்டாமே!!! ஆமாங்க கடைசி வரி எப்பயும் எழுத பட்டு இருக்காது என்பது உங்களுக்கு தெரியாதா?

நிர்வாகி: ங்கே... சரிங்க அப்ப கிளம்புறேன்.

கோவி: என்னங்க கிளம்பிட்டீங்க, இருங்க இருங்க.

நிர்வாகி: அதான் எழுத மாட்டேன் என்று சொல்லிட்டீங்க அப்புறம் என்னா செய்வது.

கோவி: இருங்க சிஸ்டம் டேட்டை 9.9.9999ன்னு மாத்திட்டுட்டு எழுதி தருகிறேன்.

*******************************************
அடுத்து அவர் சந்திப்பது அய்யனார்.

நிர்வாகி: வணக்கம்

அய்யனார்: என்னய்யா இது பார்த்த உடனே வணக்கம் என்று சொல்லனும் என்று ஏதும் சட்டம் இருக்கா, எவன்யா இதை கொண்டுவந்தது, வணக்கம் சொல்லிதான் பேச்சை ஆரம்பிக்கனும் என்று எவன்யாசொன்னது, சன் டீவி நியூஸ், ரேடியோ நியூஸ் எல்லாத்திலும் இப்படிதான் வணக்கம் சொல்லிட்டு செய்தியே படிக்க ஆரம்பிக்கிறாங்க..முதல்ல இதை எல்லாம் சிதைக்கனும்.

நிர்வாகி: இவ்வளோ பேசினதுக்கு ஒரு வணக்கம் சொல்லி இருக்கலாம்.

அய்யனார்: இவ்வளோ சொல்லியும் உனக்கு புரியலையா? அப்ப நீ அதிகார மையத்தின் மேல் அமர்ந்து இருக்கிறாய்.

நிர்வாகி: சரிங்க போதும் நான் கிளம்புறேன்...

அய்யனார்: என்னா வந்த விசயத்தை சொல்லாமலே கிளம்புறீங்க?

நிர்வாகி: இல்லீங்க இதுவரைக்கும் நீங்க பேசினதே போதும்...

அய்யனார்: என்னய்யா இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள டயர்ட் ஆனா எப்படி இருங்க ஒரு புல் அடிச்சுக்கிட்டே பேசலாம்.

நிர்வாகி: வேண்டாம் பிறகு அப்புறம் இந்த பதிவு எழுத ஆன செலவு என்று ஓல்ட் மங்+ ஓல்ட் மங்+ ஓல்ட் மங் +ஓல்ட் மங்+ ஓல்ட் மங்+ ஓல்ட் மங் என்று எழுதி கொடுப்பீங்க நான் ஜகா வாங்கிக்கிறேன்.

*******************************************************************
வசந்தம் ரவி

நிர்வாகி: வணக்கம்

வசந்தம் ரவி: வணக்கம், நானே உங்களை சந்திக்கனும் என்று நினைச்சேன்.

நிர்வாகி: ஏன்?

வசந்தம் ரவி: இல்லை தமிழ்மணத்துக்கு 1001 யோசனைகள் என்று ஒரு நோட்ஸ் போட்டு இருக்கிறேன் அதான்...

நிர்வாகி: இதோட நீங்க மட்டும் 10001 யோசனை சொல்லி இருக்கீங்க அதுபத்தாதுன்னு இது வேறயா?

வசந்தம் ரவி: இப்ப புதுசா Uk Top 10 ரேட்டிங் என்று இருக்கு அதுல எப்படி உங்க பதிவை வர வைப்பது எப்படின்னு யோசனை சொல்ல போறேன்.

நிர்வாகி: அது படத்துக்குதானே ரேட்டிங் கொடுப்பான் அதுல எப்படி?

வசந்தம் ரவி: அங்கதான் நிக்கிறேன் நான் உங்க போஸ்ட்ல ஒரு படத்த போட்டு அதுக்கு ஹிட் கொடுத்தா அங்க வரும்..

நிர்வாகி: சரிங்க அப்ப கிளம்புறேன்..

வசந்தம் ரவி: என்ன வந்த விசயத்தை சொல்லாமலே கிளம்பிட்டீங்க.

நிர்வாகி: எங்கய்யா என்னை பேச விடுகிறீர்கள் :(((

****************************************************************

சுகுணா, லக்கி, தமிழச்சி ஆகியோரிடமும் எழுதி வாங்கனும் என்று நிர்வாகி நினைத்தார் ஆனால் நேரம் இன்மையால் பிறகு வாங்கிக்கலாம் என்று ஜகா வாங்கிக்கிறார்.

Wednesday, March 12, 2008

செம காமெடி வீடியோ- எச்சரிக்கை 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்.

இதை பார்த்தும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் ..................ஒன்னியும் சொல்ல முடியாது.



வாடா என் மச்சி வாழைக்கா பச்சி உன் தோலை உறிச்சி போட்டுவிடுவேன் பச்சி. அப்படி என்று சொல்லிக்கிட்டு அடிக்கும் பொழுது அவரு போடும் ஸ்டெப்பை பார்த்தா எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது.




கடைசியில் மரத்தின் மேல் இருக்கும் ஒருவர் முட்டிப்பது போல் முட்டிக்கிட்டீங்களா இல்லையா?:)

ஸ்கூலில் படிக்கும் பொழுது எல்லாம் இந்த மாதிரி வசனங்கள் மிகவும் பிரபலம்.

கும்தலக்கடி கும்மா இதை வாங்கிக்க டா சும்மா

Wednesday, October 24, 2007

டமார்ன்னு மனைவியின் மனதை கவர சில டிப்ஸ்

நேற்று G பதிவில் கும்மி அடிக்கும் பொழுது என் கமெண்டுக்கு பதில் சொல்லி இருந்த திவ்யா என்பவர்கள் லிங்கை கிளிக் செஞ்சா
சில உபயோகமான சில டிப்ஸ் கண்ணில் பட்டது. சரி நம்ம பையன் ஒருத்தன் கல்யாணம் செய்து கஷ்டபடுகிறான் டிப்ஸ் கொடுக்கலாம் என்று அவனிடம் போன் போட்டு எலேய் இன்னைக்கு ஒரு உனக்காக உருப்படியான ஒரு விசயம் பிளாக்கில் படிச்சேன் டா? திவ்யா என்ற பதிவர் அருமையாக எழுதி இருக்கிறார்கள் என்றேன்.

பிளாக்கிலா? ன்னு நக்கலாக கேட்டான்?

ஏன்னா அவனிடம் முன்பு அய்யனார் பதிவின் லிங்கை கொடுத்து படின்னு சொல்லி இருந்தேன் அந்த கோபம் அவனுக்கு என் மேல்

நான் சொல்வதால் அவன் நம்பவில்லை அவனிடம் எலேய் உன் மனைவி மனைதை கவருவது எப்படின்னு உனக்கு சில டிப்ஸ் கொடுக்கிறேன் அது போல் செய் எல்லாம் சரி ஆகிடும் என்றேன். அரை குறையான மனதோடு மண்டையை ஆட்டினான். அவனிடம் சொன்ன முதல் டிப்ஸ் திவ்யா அவர்கள் எழுதி இருந்தது

டிப்ஸ் -1:ஒரு மனைவி தான் பேசும் போது'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும். உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

இத அவனிடம் சொன்னேன் அவனும் ஆமான் டா நான் பாட்டுக்கு எப்ப பார்த்தாலும் லேப் டாப் தட்டிக்கிட்டே உம் போடுவேன் திட்டிட்டு போய் விடுவா, நீ சொல்வதிலும் உண்மை இருக்கு அது போலவே செய்துவிடுகிறேன் என்றான்.

ஒரு 2 மணி நேரம் கழித்து போன் மச்சான் கை என் கை ஒடிஞ்சு போன மாதிரி வலிக்குது டா வந்து ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போடான்னு சொன்னான் என்னா விசயம் என்று விசாரிச்சா?

இனி ஓவர் டூ ஹோம்:

மனைவி: என்னங்க?

நண்பன்: உம் (சொன்னபிறகு நான் சொன்னது நினைவுக்கு வர லேப் டாப்பை மூடி விட்டு) என்னம்மா?

மனைவி: ஊரில் எங்க அப்பா பாத்ரூமில் குளிக்கும் பொழுது....

நண்பன்: ஓ! அப்படியா?

மனைவி: என்ன அப்படியா எங்க அப்பா குளிக்க மாட்டாரா? ரொம்ப ஆச்சர்யமா கேட்குறீங்க? கீழ விழுந்து கையை முறிச்சிக்கிட்டாராம்.

நண்பன்: (ரெண்டாவதா என்ன சொல்ல சொல்லி இருக்கான் .ம்ம்ம்ம்ம்)ஆஹா!இப்படியா?

மனைவி: இல்ல எப்படின்னு நான் காட்டுறேன்...

இதான் டா நடந்துச்சு என்றான் :)

டிப்ஸ்-2
பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

இதை சொன்னேன் செஞ்சிட்டா போச்சு என்று குஜாலா சென்றான்.
கொஞ்ச நேரத்தில் போன் மச்சான் நீ என் நண்பனா? எதிரியா? ஏன் இப்படி அடி வாங்க விடுகிறாய் என்றான்.

இனி ஓவர் டூ ஹோம்:

நண்பன்: டென் டொடடய்ங் (சமையல் வேலையாக இருக்கும் மனைவியிடம்) மீயுஜிக்கோடு உள்ளே போய் இருக்கான்.

மனைவி: என்ன மீயுஜிக் எல்லாம் பலமாக இருக்கு!

நண்பன்: என் கையில் என்ன இருக்கு கண்டுபிடி என்று (பின்னாடி கையை ஒளிய வெச்சிட்டு).

மனைவி: விளையாடாம சொல்லுங்க.

நண்பன்: திரும்ப மியூஜிக்கோடு டன் டடன் என்று பின்னாடி ஓளிய வெச்சு இருந்த புடவையை காட்ட..

மனைவி: என்ன இது?

நண்பன்: புடவை

மனைவி: அது தெரியுது! பீரோவில் மடிச்சி வெச்சிருந்த புடவையை ஏன் இப்ப எடுத்து வந்தீங்க?

நண்பன்: நான் சொன்னதை சொல்ல............அம்மான்னு அவன் கத்தும் சவுண்ட் உங்க காதில் விழுதா?

டிப்ஸ்-3: செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை] அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்..

மனைவி: என்னங்க இந்த மேக்கபில் எப்படி இருக்கேன்.?

நண்பன்: பொய் சொன்னா எளிதில் கண்டு பிடித்துவிடுவார்கள் என்று சொல்லி இருக்கான்... சோ உண்மையாகவே வர்னித்துவிடலாம்.
உனக்கு என்னம்மா பவுடர் பூசின பன்னி குட்டி மாதிரி இருக்க...
நண்பன்:....................

மச்சான் என்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்க வாடா துனைக்கு.

டேய் இருடா இன்னும் மூனு டிப்ஸ் இருக்கு என்று நான் சொன்னதும் போனை கட் செஞ்சுட்டான் அதன் பிறகு போன் செஞ்சாலும் சுவிச் ஆப் என்று வருது...

பி.கு: கல்யாணம் ஆகி மனைவியுடன் இருக்கும் ஒரே அமீரக பதிவர் லொடுக்குக்கு இந்த பதிவு சமர்பனம்.

Thursday, October 4, 2007

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

இன்னைக்கு காலையில் 8 மணிக்கு ஆபிஸ் கிளம்பி வந்த பிறகு, ஷேக் ஷாயித் ரோட்டில் ஒரு மீட்டிங்குக்கு போக வேண்டி இருந்தது, நம்ம டிரைவரிடம் சொன்னேன் அங்க போகனும் என்று சரி என்று சொல்லி வண்டியை எடுத்தான், சர் என்று வேகமாக எடுத்து போய் T -ஜாயினில் லெப்ட் எடுக்க போனான் பாதியில் வண்டியை ஆப் செஞ்சுட்டான் படு பாவி, பாதி வண்டி அதாவது நான் உட்காந்து இருக்கும் சீட் வரை அடுத்த டிராக்கில் இருக்கு மீதி இந்த டிராக்கில் இருக்கு, அந்த ரோட்டில் வேகமாக வந்த பிளாக் லேண்ட் கூரூஸர் காரில் இருந்த ஒரு அரபி பெண் சடார் என்று கீரீச் என்று சத்தம் கேட்கும் படி பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள், புண்ணியவதி மோதி இருந்தா பாலுதான், ஒரு நிமிசம் கலங்கி போய்டேன் மேலே போண பாட்டி எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க, அடேய் இன்னும் லைப்ல ஒன்னுமே பார்கவில்லை,வீட்டுக்கு ஒரே புள்ளை இப்படி என்னை அநியாயமா சாக அடிக்க பார்த்தானே என்று அவனை திட்டினேன். அன்னைக்கே ஆசிப் சொன்னார் உன் டிரைவர் டிரைவிங் சரி இல்லையா பார்த்து ஒழுங்கா ஓட்ட சொல்லுன்னு. எங்க பய புள்ள கேட்டாதானே!!! அய்யா தங்கம் என்னை திரும்ப ஆபிஸிலேயே விட்டு விடு, நான் இன்னொருத்தவன் வந்த உடன் போய்கிறேன் என்று சொல்லி விட்டு திரும்ப ஆபிஸ் வந்துட்டேன்!!!

சரி இதில் எங்கய்யா அரபி பொண்ணு ஐ லவ் யூ சொன்னா என்று தானே கேட்கிறீங்க?

வெயிட் வெயிட்...

அவ பிரேக் போட்ட உடன் கார் மேல ஏதும் மோதி இருக்கான்னு பார்க்க கார் கண்ணாடியை இறக்கினேனா? அப்ப அந்த அரபி பொண்ணு அரபியில் கொஞ்சம் சத்தமா ஏதோ என்னை பார்த்து சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

உனக்கு தான் தமிழை தவிர வேற ஒன்னுமே தெரியாதே அது எப்படி ஐ லவ் யூ சொன்னுச்சுதானே என்று கேட்கிறீங்க?

இருங்க மக்கா...

வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் கனி இருக்கும் பொழுது எதுக்கு காயை எடுத்துக்கனும் என்று சொல்லி இருக்கார் அதனால் புரியாத பாசையில் ஒரு பெண் திட்டினால் அதை ஏன் திட்டாக எடுத்துகனும்... நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்னதாக கூட எடுத்துக்கலாமே!!!

Monday, July 9, 2007

விஜயகாந் சொக்க தங்கம்...

நான் இதை பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன், நீங்களும் அது போல் சிரிக்க இதை கிளிக் செய்யவும்.

http://www.youtube.com/watch?v=eB5JzLy2e3c&search=balayya

http://www.youtube.com/watch?v=GZJDTszmN_Y&search=balayya

http://www.youtube.com/watch?v=ypGI3NecLc0&search=balayya

http://www.youtube.com/watch?v=WMJ_y936XoU&search=balayya

குறிப்பு : எனக்கு மிகவும் பிடித்தது நான்காவதாக உள்ள லிங்க் தான். இதை பக்கத்தில் யாரையும் வைத்துகொண்டு பார்க்கவும் தனியாக பார்த்து சிரிக்கும் பொழுது யாரும் நம்மை ஒரு மாதிரியாக பார்க்க வாய்ப்பு இருப்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கவும்.

Sunday, July 1, 2007

இது எப்படி!!! உங்கள் பார்வைக்கு

கொர் கொர் கொர் கொர் கொர் கொர் கொர் கொர் ...(இது நான் தூங்கும் பொழுது விடும் குறட்டை) இப்ப காயத்ரி என்ன செய்யுறாங்க எனக்குள் ஒரு கவிஞன் குப்புற படுத்து தூங்குறானான்னு டெஸ்ட் செய்யுறாங்க. ஆனா அவன் மல்லாக்க படுத்து தூங்குகிறான் (அப்ப அவன் கவிஞனா இல்லையா அத அவர்கள் முடிவுக்கே விட்டுவிடுவோம்???) அவுங்க எதுக்கும் அவன எழுப்பி கிளாஸ் எடுக்குறாங்க.( சீசீ...அந்த கிளாஸ் இல்லப்பா) இது வேற படிப்பு சம்பந்த பட்டது...

அதன் பிறகு அவனிடம் நிறைய மாற்றம்...

கவிதாயினி காயத்ரி அவர்கள் ஆதரவுடனும் , சிபி, கீழ்மத்தூர் எக்ஸ்பிரஸ் மகியின் ஆசியுடனும், மேலும் அய்யனார், இளா, குருட்டு புலி இராம், மின்னல்
வாழ்த்துகளுடன் இதோ ஒரு அரிய படைப்பு...

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டியாழ்செய் சென்னை
அம்பானெய்யோ டாட லமர்ந்தா னலர்கொன்றை
நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்

பொடிகள் பூசித் தொண்டர் பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிக ளோடுந் நாள்விழ மல்கு சென்னை
கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்
அடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்

செல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் சென்னை
வில்லி னொல்க மும்மதி லெய்து வினைபோக
நல்கு நம்பான் நன்னகர் போலும் நமரங்காள்

பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின் தேன்
கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் சென்னை
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோ ரனலேந்தும்
நக்கன் மேய நன்னகர் போலும் நமரங்காள்

மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் சென்னை
இலையார் சூல மேந்திய கையா னெயிலெய்த
சிலையான் மேய நன்னகர் போலும் சிறுதொண்டீர்

மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக்
கொய்ம்மா வேன லுண்கிளி வோப்பும் சென்னை
கைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்எம்
பெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள்

சும்மா கிடந்த என்ன சிபியும், மகியும் எழுப்பி விட்டுட்டாங்க... திட்டுகள் குட்டுகள் எல்லாம் அவர்களுக்கே சமர்பனம்...காயத்ரியும் திட்டனும் போல ஆசையா இருந்தா
நீங்க திட்டலாம் அதையும் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Thursday, June 21, 2007

"ஆப்பு"ரேசன் கவுஜர்ஸ்!

ஆப்புரேசன் கவுஜர்ஸ் ஸ்டாட்ஸ் அதன் துவக்கவிழா :)
(சிவாஜியில் ரஜினி கருப்பு பணத்தை எப்படி ஒழிக்கிறாறோ அது போல் இனி ....)


துர்கா: எப்படி குசும்பா எல்லா மொக்க கவிஞர்களையும் கண்டுபிடிக்க போற!!!

குசும்பன்: துர்கா எல்லா நாட்டுலேயும் வலைபதிவு பக்கம் வரும் பலபேர் இருக்காங்க சும்மா ஆணி புடுங்குறவுங்க, ஆணி புடுங்கர மாதிரி நடிக்கிறவுங்க எல்லாரையும் ஒரு இடத்துக்கு வரசொல்லுவோம். அவுங்க கிட்ட அவங்களுக்கு தெரிஞ்ச கவுஜை எழுதுறவுங்க பத்தி டீட்டெயில் கேட்போம்.

துர்கா: எப்படி குசும்பன் அவுங்க நம்ம கிட்ட சொல்லுவாங்க...

குசும்பன்: அதுக்கு நாம போகவேண்டிய இடம் முதலில் துபாய்...
(உய்ங்ங் ஏரேபிளேன் துபாய்ல இறங்குகிற சவுண்ட்)

குசும்பன்,துர்க்கா: ஹலோ மிஸ்டர் அய்யனார் எப்படி இருக்கீங்க...

அய்யனார்: என்ன இத மாதிரி கவுஜ, கதை எழுத சொன்ன தம்பி கூட எட்டி பார்கல, ஆனா நீங்க ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் (பேச முடியாமல் கண் கலங்குகிறார்).

குசும்பன்: நாங்க இத மாதிரி "ஆப்பு"ரேசன் கவுஜர்ஸ்" ஆரம்பித்து இருக்கிறோம், உங்களுக்கு பு.மொ.க.வி பட்டம் கொடுத்த பத்தி கவல படாம எங்க கூட வாங்க.

அய்யனார்: நாலாயிரம் பேருக்கு நல்லது நடக்கனும்னா வருகிறேன் குசும்பன், துர்கா.

(தட தட தட தட ஏரேபிளேன் இப்ப சென்னையில் இறங்குகிற சவுண்ட், டப்பா பிளைட் அதான் இந்த தட தட சத்தம்).

எங்க பேச்சுக்குமதிப்பு கொடுத்து வலைபதிவை மேய்பவர்கள், சும்மா கமெண்ட் போடுபவர்கள், பதிவு போடுபவர்கள், கவுஞர்கள் எல்லாம் வந்து இருக்கீங்க ...நீங்க எல்லாம் செய்யவேண்டியது...உங்களுக்கு தெரிஞ்ச நண்பர்கள் ரெடி செய்து வைத்து இருக்கும், அல்லது போஸ்ட்செய்து இருக்கும் மொக்ககவுஜர்கள் யார் யார் என்று நீங்க இங்க எங்க கிட்டவந்து சொல்லுங்க, (கூட்டத்தில் இருந்து ஒருவர்).மொக்ககவுஜன்னா என்னா....அத ஏன் உங்க கிட்ட சொல்லன்னும்...

குசும்பன்: நீ வலைபதிவுக்கு புதுசா...!!!

அந்த ஆள்: ஆமா எப்படி கண்டுபிடிச்சிங்க...

குசும்பன்: ஹாஹாஹா..கண்னு...மொக்ககவுஜன்னா என்னான்னு நீ கேட்க்கும் பொழுதே...நான் தெரிஞ்சுக்கிட்டேன்...நீ என்னன்னு தெரியாம படிச்சு அவுங்களுக்கு கமெண்ட் போடுறதாலதான் அவுங்க இன்னும் மொக்ககவுஜ போடுறாங்க...நீ தெரியாம செய்யிற தப்பு மத்தவுங்க ஏன் உன் பிள்ளைங்க கூட நாளைக்கு இப்ப தமிழ் மணத்துல பரண் என்று ஒரு வசதி இருக்கு அதன் மூலமாக அத படிச்சு தலை கிறு கிறுத்து போகலாம் ... இது தேவையா...

அந்த ஆள்: நான் யார் யார்ன்னு சொல்லிடுறேன்... மேடைக்கு வருகிறார்

மற்றவர்கள்: பார்டா...நாம யார் யார்ன்னு சொல்லனும்மாம் இவரு எல்லாருக்கும் விருது கொடுத்து நல்ல பெயர் வாங்குவாராம்...

துர்கா: இங்க சொல்ல விருப்பம் இல்லாதவங்க அங்க ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க....
(பாதிபேர் ஆபிஸ் ரூம் போகிறார்கள் )

அங்கே ஆபிஸ் ரூம்மில்...( வராரு வராரு அய்யனார் வராரு, கையில் கவிதை, கதை தொகுப்ப எடுத்துக்கிட்டு வராரு...மொக்க சத்தம் கேட்காமலே, குந்திகினு கவுஜை போடுறாரு அழகு ராசா..) இது பின்னனி பாட்டு.

அய்யனார் அங்கே அவன் அவள் மற்றுமொரு அவள் மேலதிகமாய் சாயந்திர மழையும் (கதை தலைப்பே புரியலேயே ராசா எப்படிஎப்படி ராசா உன்னால மட்டும் முடியுது!!!) கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.. என்ன கதையை சொன்னார் என்று உங்களுக்கு தெரியவேண்டுமா? http://ayyanaarv.blogspot.com/2007/06/blog-post_19.html போய் பாருங்கள் ...

ஒரு மண்டை ஓடு கீழே ரெண்டு பெருக்கள் குறி

துர்கா: அது என்ன குசும்பா ஒரு மண்டை ஓடு கீழே ரெண்டு பெருக்கள் குறி..

குசும்பன் : எச்சரிக்கைக்கு அப்படிதானே போட்டு இருப்பாங்க...படம் போட முடியல கொஞ்சம் அட்ஜஸ் செய்துக்குங்க..

எல்லாம் கதவை உடைத்துக்கிட்டு, ஜன்னல உடைத்துகிட்டு வெளியே வந்து விழுறாங்க...
அவர்கள் கொடுத்த லிஸ்ட்.....(சாரி ரகசியம்...)

உங்களுக்கு தெரிந்த பெயர்களை பின்னூட்டதுல சொல்லுங்க இல்ல அய்யனார் அங்க வருவாரு பின்னாடியே அப்புறம் ராம் வருவாரு ஆமா சொல்லிபுட்டேன்....