Showing posts with label அரசியல் லொள்ளு. Show all posts
Showing posts with label அரசியல் லொள்ளு. Show all posts

Monday, August 3, 2009

குடநாட்டு எஸ்டேட் ஓய்வும் ஒரு காமெடியும்!

குடநாட்டு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் பயலலிதாவும், குஷிகலாவும்.


அங்கு பதறியடித்துக்கொண்டு ஓடிவருகிறார் வெண்ணீர்செல்வம். அவர் பின்னாடியே பங்கோட்டையன்,எல்லாம் ஓடி வருகிறார்கள்.

வெண்ணீர்செல்வம் குஷிகலாவிடம் மேடத்தை பார்க்கனும் என்கிறார்.

குஷிகலா: மேடம் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர் ஆகி ரெஸ்ட் எடுக்கிறாங்க இப்ப அவங்களை டிஸ்டர்ப் செஞ்சா ரொம்ப கோவப்படுவாங்க அவுங்க கண் முழிச்சு யாரை பார்க்கிறாங்களோ அவுங்களுக்கு பீஸ் புடுங்கிடுவாங்க.

வெண்ணீர்செல்வம்: மனசுக்குள் (ஒருநாள் கூட உங்க முகத்தில் முழிக்கலையா)

பரவாயில்லை சின்னமேடம் நாங்க வெயிட் பண்ணுறோம், மேடம் வரப்ப வரட்டும். என்று காலை போனவர்கள் மதியம் வரை காத்திருக்கிறார்கள் மதியம் சாப்பிட எழுந்தவரிடம், குஷிகலா இதுபோல் வந்து இருக்காங்க என்றதும் எதுக்கு பர்மிசன் இல்லாம இவங்களை எல்லாம் உள்ளே விட்ட!

பயலலிதா:என்ன இப்ப தலைபோற காரியம் எதா இருந்தாலும் ரெண்டு மாசம் வெய்யில் எல்லாம் குறையவிட்டு பார்த்துக்கலாம்.

குஷிகலா: இல்ல மேடம் என்னான்னு சும்மா கேட்டுக்கிட்டு அனுப்பிடுங்க...என்று சொல்லி சமாதானபடுத்தி அழைத்து வருகிறார் குஷிகலா.

மேடத்தை பார்த்ததும் எல்லாம் ஒரு நாலு அடி உயரம் கம்மி ஆகி பம்மி நிற்கிறார்கள், மேடம் வந்ததும் வெண்ணீர் செல்வம் ஏதோ சொல்ல ஆரம்பிக்கிறார்..

குஷிகலா: இருங்க வெண்ணீர் ஏன் இவ்வளோ அவசரப்படுறீங்க, இப்பதான் மேடம் அங்கிருந்து நடந்து வந்திருக்காங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.அப்புறம் சேதிய சொல்லுங்க.

ஒரு பத்து நிமிடம் கழிச்சு ம்ம்ம் என்று பயலலிதா சொன்னதும்..

வெண்ணீர்செல்வம்: (ஸ்கூலில் ஒன்னாம் வாய்பாடு ஒப்பிக்கும் மாணவன் போல் எழுந்து கை கட்டி நின்று )மேடம் மேடம் இந்த தேர்தல் கமிசன் நம்மை கேட்காம திடிர் என்று 5 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிச்சுட்டாங்க,நாம கூட்டணி தலைவர்கள் கூட பேசி முடிவெடுத்து அவுங்களுக்கு எந்த தொகுதின்னு பங்கீடு முடிவுசெ .........

பயலலிதா முறைக்க

இல்ல இல்ல நாம முடிவெடுத்து கூட்டணி தலைவர்கள் கிட்ட இவுங்கதான் உங்க கட்சி வேட்பாளர் என்று சொல்லிடலாம், அதுதானே நம்ம வழக்கம். எப்பொழுதும் போல பைகோவும், கோமதாஸும் ஒன்னும் சொல்லாம வாங்கிப்பாங்க. ஆளும் கட்சிக்கு நாம யாருன்னு காட்டனும்.

குஷிகலா: வெண்ணீர் மைனாரிட்டிய விட்டுவிட்டிங்க

வெண்ணீர்: ஆளும் மைனாரிட்டி அரசுக்கு நாம யாருன்னு காட்டனும் என்று திருத்தி சொல்கிறார்

பயலலிதா: வாட்? திரும்ப தேர்தல்? என்ன மேன் இப்பதானே இரண்டு மாசம் முன்னாடி தேர்தல் பிரச்சாரம் எல்லாம் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து செஞ்சு, ஹெலிபேடில் இருந்து மேடைக்கு நடந்து எல்லாம் போய் ரொம்ப டயர்டா இருக்கேன் இப்ப திரும்ப தேர்தலா? என்னால திரும்ப இந்த வெய்யிலில் எல்லாம் பிரச்சாரம் செய்ய முடியாது..

பங்கோட்டையன்: ஆமாம் மேடம் , இந்த தேர்தல் கமிசன் சரி இல்லை நம்ம கிட்ட ஒரு வார்த்தையும் கேட்க மாட்டேங்கிறாங்க, நாம ஆட்சிக்கு வந்ததும் இவுங்க பவரை புடுங்கனும்.

வெண்ணீர்: மேடம் வரவர நம்ம கட்சி எம்.எல்.ஏ எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வருது ஏதாச்சும் செய்யனும்...


பயலலிதா: என்னமேன் இந்த 5 சீட் ஜெயிச்சா நான் என்ன திரும்ப சி.எம் ஆக முடியுமா? இல்லீல்ல அப்புறம் எதுக்கு அலட்டிக்கனும் பேசாம தேர்தலை புறக்கனிச்சுடலாம்...


வெண்ணீர்: சரிங்க மேடம் அப்ப அப்படியே பைகோ,கோமதாஸ் இவங்களுக்கும் போன் போட்டு சொல்லிடவா?

பயலலிதா: தேவை இல்லாம எதுக்கு மேன் ரெண்டு கால் வேஸ்ட் பன்னுற பேப்பரில் நியுஸ் கொடுத்துடுங்க அத பார்த்து தெரிஞ்சுக்கிட்டும்.


வெண்ணீர்: சரிங்க மேடம்

Tuesday, April 7, 2009

சிதம்பரம் மேல் ஷூ வீச்சு--- அதன் பின்விளைவுகள்+ கார்ட்டூன்


மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார். ஷூ வீசிய நிருபருக்கு அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ. 2 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.


இனி கற்பனை கார்ட்டூன் வரைய தெரியாததால் கார்ட்டூன் மாதிரி கற்பனை செஞ்சுக்குங்க:)))



கந்தசாமி: என்னங்க இங்க இவ்வளோ கூட்டம்?

பெரியசாமி:அதுவா குறைந்த நாட்களில் எப்படி குறி தப்பாமல் ஷூவை வீசுவது என்று கிளாஸ் எடுக்கிறார்களாம் கெஸ்டா ஈராக் நிருபரும் கிளாஸ் எடுக்கிறாராம். லைவ் டிரைனிங் வேற உண்டாம்!
***************
அப்பா: டேய் இது என்னடா நடுவீட்டில் பொம்மைய கட்டி அதன்மேல் இப்படி ஷூவை வீசிக்கிட்டு இருக்க?

மகன்: அப்பா இப்ப இதுதான் சீக்கிரம் சம்பாதிக்க வழி யார் மேலயாவது கரெக்டா ஷூவை வீசினா அவரை பிடிக்காதவங்க லட்சகணக்கில் பணம் தருவாங்க அதுக்குதான் ஷூவை வீசி பிராக்டிஸ் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

*****************
மனைவி: என்னங்க நம்ம பையன திட்டிக்கிட்டே இருந்தீங்களே பாருங்க நம்ம எம்.பி மீது செருப்ப வீசி 5 லட்ச ரூபாய் சம்பாரிச்சுட்டு வந்து இருக்கான்
*****************

தொண்டன்1: என்னப்பா தலைவரை சுத்தி புதுசா ஒரு படை கருப்பு பூனை படை மாதிரி?

தொண்டன்2:அதுவா தலைவரை நோக்கி யாரும் செருப்பை வீசினா கரெக்டா கேட்ச் புடிக்கும் செருப்பு படையணி

*****************

தொண்டன்1: என்னங்க தலைவர் டெப்பாசிட் போயும் பயங்கர சந்தோசமா இருக்கார்.

தொண்டன்2:அட நீங்க வேற போற இடம் எல்லாம் வீசிய செருப்பை வச்சு
ஒரு கடை ஆரம்பிச்சு பெரும் கோடிஸ்வரர் ஆகிட்டார்.

*****************

நிருபர்: என்னங்க இது தலைவருக்கு பக்கத்தில் நான்கு நாய் இருக்கு?

தலைவர் பி.ஏ: அதுவா யாராவது ஒரு கால் செருப்பை மட்டும் வீசினா மோப்பம் புடிச்சு அது யாருதுன்னு கண்டு பிடிச்சு இன்னொரு செருப்பையும் புடுங்கிட்டு வந்துடும்.

*****************

தொண்டன்1: என்னங்க கட்சி அலுவலகம் முன் புது கடையா இருக்கு.

தொண்டன்2:அதுவா தலைவர் பேட்டி கேட்கவரும் நிருபர்கள் அனைவரும் செருப்பை அங்க விட்டுவிட்டு டோக்கனை காட்டினாதான் தலைவரை பேட்டி எடுக்கும் அறைக்குள் போக முடியும். தலைவரோட மச்சான் தான் அந்த கடையே வெச்சு இருக்கார்.

*****************

நிருபர்: என்ன சார் பூமராங் மாதிரி வீசின செருப்பு திரும்ப வரும் மாதிரி
ஒரு செருப்பு கண்டுபுடிங்கன்னா முடியாதுன்னு சொல்லுறீங்களே

கடைகாரர்:ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே
*****************
வேலைவாய்பு செய்தி: சரியா செருப்பு வீச தெரிந்த நிருபர்கள் உடனடி தேவை! தினம் ஒரு ஜோடி செருப்பும் நல்ல சம்பளமும் வழங்கப்படும்.
முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
*****************
கோபு: என்ன புதுசா ஷூ பெட்டிங் ஊழலாம் என்னா அது?

ராமு: அதுவா வீசுற ஷூ தலைவர் மேல படுமா படாதான்னு பெட்டு கட்டி பெரும் அளவில் ஊழல் செஞ்சு சம்பாரிச்சு இருக்காங்க, இதுக்கு தலைவரும் உடந்தையாம்.

Sunday, September 7, 2008

ஆற்காடு வீராசாமிக்கு சில யோசனைகள்.

கடந்த ஒருவாரமாக எல்லோரும் மின்சாரத்தை எப்படி மிச்சம் படுத்துவது என்று எழுதிக்கிட்டு இருக்கிறார்கள். நண்பர் பரிசல் மின்சார காண்டம் என்று ஒரு பதிவு போட்டு அவர் பங்குக்கு கருத்து சொல்லி இருக்கிறார். இன்று (காலை டிபனுக்கு பின் போடும் பதிவு) கோவி.கண்ணன் அவர்கள் மின்சாரம் பற்றியும் அதுக்கு மாற்று யோசனை பற்றியும் எழுதி இருக்கிறார்.

இது எல்லாம் பத்தாது என்று கார்கி அவர்கள் என்னை பார்த்து உருப்படியா ஏதும் எழுதவே மாட்டியா? அய்யனார் உன் நண்பன் தானே அவரை போல் எழுதமாட்டியா என்று எல்லாம் என்னை கேள்வி கேட்டுவிட்டார். உருப்படியா எழுதமாட்டியா என்று கேட்டு இருந்தால் கூட பரவாயில்லை அய்யனார் மாதிரி என்று கேட்டதுதான் எனக்கு வருத்தத்தை தருகிறது :((
அய்யனார் மாதிரி எழுத முடியவில்லை ஆற்காடாருக்கு யோசனை சொல்லும் அளவுக்கு பதிவு எழுத தூண்டிய கார்கிக்கு இந்த பதிவு சமர்பனம்.

இனி சீரியசாக ஆலோசனைகள்:

ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கிக்கிட்டு இருந்த பொழுது லாலு மந்திரி ஆனபிறகு லாபம் ஈட்டும் துறையாக ஆனது. அது போல் முதலில் மின்சார துறையை லாபம் ஈட்டும் துறையாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

லாபம் வந்தால் தானே மின்சாரமும் வந்துடப்போவுது.
ஆலோசனை 1:
ஊர் எங்கும் துணி துவைக்கும் தொழிளார்கள் துணியை காயப்போட இடம் இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்று போட்டு காயவைக்கிறார்கள், அவர்களுக்கு சும்மாக கிடக்கும் லைன் கம்பிகள் மேல் துணி காயப்போட அனுமதி கொடுத்தால் அவர்களிடம் இருந்து துணி ஒன்றுக்கு 25 பைசா வீதம் வாங்கிக்கலாம். அதுபோல் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் துணி காயப்போட இடம் இல்லாமல் ஜட்டி முதல் அனைத்தையும் வீட்டுக்குள்ளேயே காயப்போடுவதால் அடிக்கடி இச் கார்ட் வாங்க வேண்டி இருக்கிறது, ஜட்டியை சூரிய ஒளியின் கீழ் காய்ப்போடுவதை கட்டாயமாக்க அன்பு மணி யோசித்து வருகிறார். அதுக்கு முன் நீங்கள் அனுமதி கொடுத்தால் அனைவரும் ஜட்டி முதல் அனைத்தையும் காயப்போட்டு அதுக்கு வாடகையும் கொடுப்பார்கள்.



உங்களுக்காக பிளான் மாடல் மேலே, ஜட்டி படம் போட்டால் தமிழ்மணத்தில் சட்ட சிக்கல் வரும் அதனால் போடவில்லை.

அலோசனை 2:
விடுமுறை நாட்களில் குழந்தைகளை தூங்க வைக்க அல்லது விளையாட இடம் பற்றாக்குறை இருக்கிறது, அதை சரி செய்ய குழந்தைகளை அல்லது என்னை போன்ற வீர தீர செயல்கள் செய்ய விரும்பும் இளைஞர்கள் ஊஞ்சல் போல் ஆட மின்சார கம்பிகளை பயன் படுத்த அனுமதி கொடுத்தால்

ஒரு மணி நேரத்துக்கு என்று வாடகை வாங்கிடலாம்.
பிளான் மாடல் கீழே!




ஆலோசனை 3:

காதலிப்பவர்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்சினை, கிராமம், நகரம் என்று எங்குமே காதலிப்பவர்கள் உட்காந்து பேச இடம் கிடைப்பது இல்லை.

கிராமத்தில் என்றால் கரும்பு காடு , பருத்தி காடு என்ற இடங்களுக்கு சென்றால் பூச்சி, கரும்பு சுணை என்று ஏகப்பட்ட பிரச்சினை, நகரம் என்றால் கூட்டம் ஒரு பிரச்சினை அடுக்கு மாடி குடியிருப்பு போல ஒருத்தர் மடி மீது ஒருவர் உட்காந்து பேச வேண்டி இருக்கு, அது மட்டும் இன்றி ரோப் கார் பார்கனும் என்றால் பழனிக்கு செல்லவேண்டி இருக்கு ஆகையால் ரோப் கார்களை சும்மாக லையன் கம்பிகளில் தொங்க விட்டு அதை தின வாடகை வாங்கினால் கூட்டம் அதிகமாக வரும், ரோப் கார்களை இயக்க மின்சாரம் தேவை படும் என்று நினைக்கிறேன் ஆனால் இங்கு சும்மா நிறுத்தி வைத்து இருந்தால் போதும்.


பிளான் மாடல் கீழே


என்னை இப்படி சீரியசாக பதிவு எழுத வைத்த பரிசல், கோவி, கார்கி அனைவருக்கும் நீங்கள் சொல்லும் பாராட்டுகள் போய் சேரட்டும்.

டிஸ்கி: பரிசல் பதிவில் சொல்லி இருப்பது போல் ஏதாவது செஞ்சு மின்சாரத்தை மிச்சம் செஞ்சு அதை ஒரு கம்பியில் எடுத்து ஆற்காடார் டிக்கியில் கொடுக்கவும் அப்பயாவது பல்பு எரிஞ்சு ஏதும் செய்கிறாரா என்று பார்க்கலாம்.

Monday, August 18, 2008

எம்.பி லஞ்ச விவகாரம்..பிரதமருக்கு தொடர்பு இல்லை!!!

அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தை விசாரிக்க விசாரனை குழு அமைக்கப்பட்டு விசாரனை நடந்து வருகிறது. இதில் நேற்று இடைத்தரகர் சோகைல் கூறுகையில் கொடுத்த சாட்சியம்..

//பா.ஜ.க எம்.பிக்களுக்கு பணம்கொடுப்பது பற்றி நான் அமர்சிங்கை சந்தித்துப் பேசினேன். அப்பொழுது அவர் யாரோ ஒருவரிடம் செல்போனில் பேசினார்.
மேலும் 3 பா.ஜ.க எம்.பிக்கள் நம் பக்கம் வந்துள்ளனர்” என்றார், பிறகு 3 பா.ஜ.க எம்.பிகளிடம் தொடர்பு கொண்டு “உங்களை பற்றி நான் பிரதமரிடம் கூறி விட்டேன்” என்றார்.


இதையடுத்து சோனியா அரசியல் ஆலோசகர் அகமதுபடேலை தொடர்பு கொண்டு பேசினார். அவருடம் பா.ஜ.க எம்.பிக்களை பேசவைத்தார். இவ்வாறு இடைத்தரகர் சோகைல் சாட்சியம் அளித்துள்ளார்.

அமர்சிங்குக்கு இந்த விவகாரத்தில் நேரடி தொடர்பு இருப்பதாக சோகைல் குறிப்பிட்டுள்ளார், அமர்சிங் செல்போனில் பிரதமருடன்தான் பேசினார் என்று பெருள்பட அவர் சாட்சியம் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
//

இந்த சாட்சியம் ஒன்றே போதும் பிரதமர் தவறு செய்யவில்லை என்று! எப்படி என்று கேட்கிறீர்களா? இதுபோல் மிகவும் முக்கியமான விவசயங்களை எல்லாம் மன் மோகனிடம் யாராவது பேசுவாங்களா? பேசினாலும் அவரால் முடிவுதான் எடுக்க முடியுமா? சீனா காரனுங்க ஒலிம்பிக் துவக்கவிழாவுக்கே யாரை கூப்பிடனும் யாரை கூப்பிட கூடாது என்று தெரிஞ்சுவெச்சு சோனியா அம்மையாரை கூப்பிட்டு இருக்கானுங்க. நம்ம அமர் சிங்குக்கா தெரியாது நம்ம மன் மோகன் சிங் “பவரை” பற்றி?

என்ன நான் சொல்வது சரிதானே!!!

Sunday, August 10, 2008

18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்!!!

காலையில் குட்மார்னிங் என்று சொல்லி வரும் மெயில் இந்த படம் இருந்தா அந்த நாளு வெளங்குமாய்யா!!! எனக்கு என் நண்பர் சங்கர் அனுப்பினார், அதனாலா நானும் உங்களுக்கும் இந்த படத்தை போட்டு குட்மார்னிங் கொலைவெறியோடு சொல்லிக்கிறேன்.

(இதை செய்பவர்கள் அதிஷா, ராப் இருவரும்தான் என்பது கூடுதல் தகவல்)

Sunday, November 25, 2007

ஜெயலலிதா+ சாய்பாபா+ எட்டியூரப்பா+ காங்கிரஸ் கிருஷ்ணசாமி எல்லோரும் ஒரே இடத்தில்.









படம் பெரிதாக தெரிய படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

Wednesday, October 17, 2007

அனிமேசனில் வாலட்டுவதை பாருங்களேன்!!! நான் செய்தது.


படத்தின் மேல் கிளிக் செய்யவும் சூப்பராக வால் ஆட்டும் பாருங்க, போட்டோ ஷாப்பில் செய்தது.

சற்றுமுன் செய்தி:
முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலித்தாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தீய நோக்கத்தோடு நுழைந்துஅவன் ஜெயலலிதாவிற்கு ஆபத்து விளைவித்திருக்க கூடும் என்று நினைக்கும் போதேபதட்டமும், கவலையும் அளிக்கிறது.

முன்னாள் முதல் அமைச்சர் பங்கு பெறும் நிகழ்ச்சிகளுக்கு போதிய பாதுகாப்பினை காவல் துறை தருவதுஇல்லை.

கண்டனைத்தை இங்கு தெரிவிப்பதோடு அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பது அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறேன்.
டிஸ்கி: பதிவுக்கும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை. தனி தனி பதிவாக போட்டேன் பிளாக்கர் சதி செய்துவிட்டது. :)))
பிறகு அந்த செய்தியை சொன்னவர் யார் சொல்லுங்க பார்கலாம்!!!!

Monday, October 15, 2007

பெண்ணீயம் பேசும் பெண்களே எங்க போனீங்க?

இயக்குனர் சாமி நடிகை பத்மபிரியாவை அடித்துவிட்டாராம், சரி என்ன இப்ப அதனால என்று நினைக்கிறீங்களா? எல்லோரும் அதை பற்றி பேசும் பொழுது

ஆ ஊன்னா பெண் விடுதலை பெண் அடிமை என்று கூச்சல் போடும் பெண்களும், நடிகைகளும் எங்கே போனாங்க? யார் அடிச்சா என்னா?
ஏன் அதை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை?

யார் அடி வாங்கினா என்னா வாங்கா விட்டால் என்ன நம்மை யாரும் அடிக்காமல் இருந்தா சரி என்று நினைக்கும் பெண்களின் மனநிலையையே இது காட்டுவதாக எனக்கு தோன்றுகிறது. எங்கே இதுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அடுத்த பட வாய்பு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற சுய நலம் ஒரு காரணமா?

நரி இடம் போனா என்னா வலம் போனா என்னா தன் மேல விழுந்து புடுங்காம இருந்தா சரி என்று நினைக்கும் மனோபாவம் தான் இதுக்கு காரணமா? அல்லது அவள் நடிகைதானே என்ற இளக்காரமா?

ஒரு போராட்டம் நடத்தி அடுத்தமுறை யாரவது அடிக்க கை ஓங்கும் பொழுது யோசிக்கும் படி செய்து இருக்க வேண்டாமா?

ஏன் ஏன் ஏன்?

டிஸ்கி: இந்த பதிவை குரு ஆசிப் அண்ணாச்சிக்கும் மோகன்தாஸுக்காகவும்!!!

Wednesday, October 3, 2007

ராமர் பாலத்தை காப்பது எப்படி? சில யோசனைகள்

இப்ப பார்த்தீங்கன்னா இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் ஒரெ தொடர்பு இந்த ராமர் பாலம்தான் அதுதான் பிரிஞ்சு இருக்கும் இலங்கையையும் இந்தியாவையும் ஒன்று சேர்கிறது, இப்படி முக்கியமான அந்த பாலத்தை (????) இடிப்பதால் தினமும் அவ்வழியே வாக்கிங், ஜாக்கிங் எல்லாம் போய் வரும் ஆமை, நத்தை எல்லாம் பாதிக்க கூடும் ஆகையால்
இது கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிரானது என்று இல. கனேசன் அறிக்கை கொடுக்கலாம்.


இப்ப பிரச்சினை என்னன்னு பார்தீங்கன்னா, பாலம் லைட்டா ஒரு 100 அடி தண்ணியில் மூழ்கி இருக்கு அதான் பிரச்சினை, அதை மேலே தெரியும் படி செய்துவிட்டால் பிரச்சினை இல்லை, ஆகையால் இந்து மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு புரண்டு, ஆளுக்கு "ஒரு கைபிடி மண்" என்ற திட்டதில் சேர்ந்து, ஒரு கைபிடி மண்ணை தூக்கி கடலில் போட்டோம் என்றால் பாலம் வெளியில் தெரிய ஆரம்பித்துவிடும். இப்படி இராம கோபாலன் அறிக்கைவிடலாம்.


இராமர் பாலம் விடுதலை புலிகள் ஆயுதங்களை கடத்தி வரும் பொழுது அது இடைஞ்சலாக இருக்கிறது, அதற்காக தான் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு அதை இடிக்க திட்டம் போடபட்டது அதற்கான ஆதாரம் என் கையில் இருக்கிறது. இப்படி சுப்பிரமணி சாமி அறிக்கை விடலாம்!!!


தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே விமானபோக்குவரத்தை நிறுத்தவேண்டும் அந்த வழியேதான் அனுமன் பறந்து போனார் அவர் பறந்து போன வழியில் பிளைட்டை விடுவது அவரை இழிவுபடுத்தும் செயல் ஆகும், அதுமட்டும் இன்றி பாலத்தை இடிக்க நினைக்கும் அனைவருடைய தலை முடியை கொண்டுவருபவர்களுக்கு புது விக் வழங்க படும். இப்படி வேதாந்தி அறிக்கை விடலாம்.


முன்பு பாலம் கட்டுகிறேன் என்று சொல்லி என் கல்யாணமண்டபத்தை இடித்தவர்தான் இந்த பாலு, இப்பொழுது அதே பாலு ஒரு பாலத்தை இடிக்கிறார், இவர் ஆட்சியில் இருக்கும் வரை இப்படிதான் ஏதேனும் நடக்கும், என் கையில் ஒரு முறை ஆட்சியை கொடுத்து பாருங்க புது ராமர் பாலம் கட்டி அதில் ஷூட்டிங் எடுக்க அனுமதி கொடுத்தாலே தமிழ்நாடு வல்லரசாக மாறிவிடும் அப்படி ஒரு திட்டம் என்னிடம் இருக்கு ஆங்ங்ங்!!!



இது நான் மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதிய பதிவு!!!


கடைகாரர்: ஐயா தெய்வமே! எப்படி இருக்கீங்க! எங்க இந்த பக்கம்?

ராமர்: நாங்க அடிக்கடி இலங்கைக்கை போக வர பயன்படுத்திக்கொண்டு இருக்கும் பாலத்தை இடிக்க போவதாக செய்தி வந்தது, அதான் பாலத்தின் கன்ஸ்ட்ரக்சன் இன்சினியர் அனுமனையும் கூப்பிட்டு வந்தேன்.

அனுமன்: நியாமா பார்த்தா அந்த பாலத்தை இடிக்க வேண்டிய அவசியேமே இல்லை, கொஞ்சம் தள்ளி நோண்டிக்கலாம், அதுக்காக ஒரு மாற்று வரைவு திட்டத்தை தயாரிச்சி இருக்கோம் அப்படின்னு ஒரு அறிக்கை கொடுத்து விட்டு அத டி.ஆர்.பாலு கிட்ட கொடுத்துட்டு போகலாம்ன்னு இப்படி வந்தோம்.

கடைகாரர்: தெய்வமே எனக்கு ஒரு டவுட், லாஸ்ட் டைம் நீங்க பாலம் கட்டிக்கிட்டு இருக்கும் பொழுது டையர்டா, தாகமாக இருக்குன்னு சொன்னப்ப ஓனான் ஒன்னுக்கு அடிச்சு கொட்டாங்கிச்சில கொடுத்துச்சு என்றும் அணில் தான் ரொம்ப ஹல்ப் பண்ணிச்சு என்று பாராட்டி முதுகுல கோடு போட்டிங்க என்று சொல்லுறாங்கலே நிஜமா??

ராமர்: நிஜம்தான், இப்ப எங்க பசிக்கு வெள்ளேரி பிஞ்சு கொடுக்கல! உன் முதுகுல ரோடு போட்டுவிடுவோம்.

Thursday, June 21, 2007

எட்டு விளையாட்டு

என்னை அழைத்த சிவா அவர்களுக்கு ஒரு வார்தையில் நன்றி எல்லாம் சரி வராது தனியா கவனிச்சிக்கிறேன் என்னை பற்றிய எட்டு...

1) 12 படிக்கும் பொழுது ஆசிரியர்கள் என்னவாக போகிறீர்கள் என்று எல்லாரிடமும் கேட்டு என் முறை வந்த பொழுது மல்டிமீடியா டிசைனர் ஆக வேண்டும் என்று சொன்னது சொன்னது போலவே அதை செய்தது. படித்தது வளர்ந்தது எல்லாம் கிராமம், முழுசா நாலு வார்தை இங்கிலீஸில் எழுதவோ படிக்கவோ வராத நான் இன்று வெளி நாட்டில் வெளிநாட்டவருடன் தட்டு தடுமாறி பேசிகிறேன் அதுவே பெரிய சாதனை. (ராசையா படத்தில் வடிவேல் பிரபுதேவா பேசும் இங்கீலிசையை பார்த்து அழுவது போல் உள்ளே இருக்கும் குசும்பன் அடிக்கடி அழுவான்)

2) யாருக்காகவும் எதற்காகவும் என்னை, என் பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ளாத பிடிவாதம், நீ நீயாக இரு நான் நானக இருக்கிறேன் எனது கொள்கை. (காதலிக்கு பிடிக்கவில்லை, மனைவிக்கு பிடிக்கவில்லை என்று தங்கள் பழக்கங்களை மாற்றி கொள்பவர்களை பார்த்தால் :) )

3) காலேஜ் படிக்கும் பொழுது B.Sc மூன்று வருடம் M.Sc இரண்டு வருடம் ஆக மொத்தம் ஐந்து வருடம் நான் வைத்து தலையில் வெட்டாமல் வைத்து இருந்த ஒன்றரை அடி நீள தலை முடி முன் பக்கம் வைத்து இருந்தது, ஹிட்லர் மீசை இப்படி பல கெட்டப் பல எதிர்புகளையும் மீறி வைத்து இருந்தது.

4) மற்றவர்களோடு என்றும் பொருத்தி பார்த்து கொள்ளாத குணம்.

5) தெரியாததை தெரியாது என்று சொல்வதற்க்கு, அதை கேட்டு தெரிந்து கொள்ள தயங்காத குணம். இதனால் பல பேர் கிண்டல் கேலிக்கு ஆளாக நேரிட்டாலும் அந்த குணம் மட்டும் மாறவில்லை.

6) இன்று வரை புகை, மது அருந்தாதது (குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்ல :)

7) மணதறிந்து இதுவரை யாருக்கும் தீங்கு நினைக்காதது, யாருக்கும் துரோகம் செய்யாதது.

8) நான் என்னிடம் இருக்கும் ஒரே ஒரு திறமையாக நினைப்பது உள்ளுக்குள் தூங்கி கொண்டு இருக்கும் "கிரியேட்டர்" அவன் ஒரு விளம்பர பிரியன் நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க அவன் டீவி யில் வருமே அந்த விளம்பர பிரியன் பல பொருட்களுக்கு பல மாதிரியாக விளம்பரம் எப்படி எடுக்கலாம் என்று யோசித்து எழுதி வைத்து இருப்பவன். என்றாவது ஒரு நாள் Ad film making ல சாதிக்கனும் என்று வெறியோடு (மற்றவர் தேவைக்காக) இப்பொழுது உறங்கி கொண்டு இருப்பவன்.

குறிப்பு: exam கூட இத்தனை நேரம் எழுதியது இல்லைங்க.

நான் அழைக்கும் எட்டு பேர்

1) வெங்கட்ராமன்

2) நாமக்கல் சிபி

3) காயத்ரி

4) அய்யனார்

5) துர்கா

6) மின்னுது மின்னல்

7) சந்தோஷ்

8) அபி அப்பா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Tuesday, June 5, 2007

இன்றைய காமெடி அறிக்கைகள்

நர்ஸ் ஜெயலெச்சுமி: நான் ரொம்ப கவுரவமாண குடும்பத்தை சேர்ந்தவள், என்னை கலங்கபடுத்த முயற்சிக்கிறார்.

முதல்வர்: வண்டி ஓட்டி செல்பவர்கள் கட்டாயமாக தலை கவசம் தலையில் தான் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை, பின் சீட்டிலோ இல்லை சைட், பாக்ஸிலோ அவர் அவர் வசதிக்கேற்ப்ப எங்க எங்க மாட்டிக்கலாம் என்று தோனுதோ அங்க அங்க மாட்டிக்கலாம்.

தலைவி: ஏய் ங்கொயாலே, நாளைக்கு நீ இருக்கியா இல்ல நான் இருக்கனாங்குறத பார்த்துடலாம். இன்னா திமிரு இருந்தா என் இதய தெய்வம் வாழ்ந்த இடத்த இடிக்க நோட்டிஸ் விடுவ!

விஜயகாந்: மதுரை மத்திய தொகுதியில் என்னை தனியாக எதிர்க்க முடியுமா தில் இருக்கா? ஆங்ங்ங்

Sunday, May 20, 2007

சென்னை வந்த ராமன்


கடைகாரர்: ஐயா தெய்வமே! எப்படி இருக்கீங்க! எங்க இந்த பக்கம்?

ராமர்: நாங்க அடிக்கடி இலங்கைக்கை போக வர பயன்படுத்திக்கொண்டு இருக்கும் பாலத்தை இடிக்க போவதாக செய்தி வந்தது, அதான் பாலத்தின் கன்ஸ்ட்ரக்சன் இன்சினியர் அனுமனையும் கூப்பிட்டு வந்தேன்.

அனுமன்: நியாமா பார்த்தா அந்த பாலத்தை இடிக்க வேண்டிய அவசியேமே இல்லை, கொஞ்சம் தள்ளி நோண்டிக்கலாம், அதுக்காக ஒரு மாற்று வரைவு திட்டத்தை தயாரிச்சி இருக்கோம் அப்படின்னு ஒரு அறிக்கை கொடுத்து விட்டு அத டி.ஆர்.பாலு கிட்ட கொடுத்துட்டு போகலாம்ன்னு இப்படி வந்தோம்.

கடைகாரர்: தெய்வமே எனக்கு ஒரு டவுட், லாஸ்ட் டைம் நீங்க பாலம் கட்டிக்கிட்டு இருக்கும் பொழுது டையர்டா, தாகமாக இருக்குன்னு சொன்னப்ப ஓனான் ஒன்னுக்கு அடிச்சு கொட்டாங்கிச்சில கொடுத்துச்சு என்றும் அணில் தான் ரொம்ப ஹல்ப் பண்ணிச்சு என்று பாராட்டி முதுகுல கோடு போட்டிங்க என்று சொல்லுறாங்கலே நிஜமா??

ராமர்: நிஜம்தான், இப்ப எங்க பசிக்கு வெள்ளேரி பிஞ்சு கொடுக்கல! உன் முதுகுல ரோடு போட்டுவிடுவோம்.