Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Wednesday, May 12, 2010

தேர்வுக்கு துணை வருவான் தென்றல் நண்பன்!

எங்கள் ஸ்கூல் கோ-எஜிகேசன் ஸ்கூல் ஆகையால் முழுபரிட்சை ரிசல்ட்டை விட கால் பரிட்சை,அரை பரிட்சை, மாத தேர்வுங்களுக்குதான் பயம் இருக்கும்.ஏன்னா? முழுபரிட்ச்சை ரிசல்ட் ஒன்லி பாசா?பெயிலான்னுதான் தெரியும் மார்க் வராததால் அந்தபயம் இருக்காது, ஆனா இந்த நடுவில் வரும் குட்டிசாத்தானுங்க என்றால் ஒரே டென்சன் தான். பேப்பரை கொடுக்கும் பொழுது மார்க்கை சொல்லி பொம்பள புள்ளைங்க முன்னாடி அடிவிழுமே அதுக்காக இருக்கும் டென்சன் தான், அப்படியே சில வருடங்களில் அது பழகி போய்விட்டது.இந்த டென்சன் ஒருபக்கம் என்றால் அப்பாவிடம் கையெழுத்து வாங்கிட்டு வான்னு ஒரு அட்டைய கொடுப்பாய்ங்களே அது ஒரு பெரிய டென்சன் இதுக்காகவே பரிட்சை என்றால் ஒரு பயம் வந்துவிடும்.சரியா ஸ்கூல் கிளம்பும் நேரம் அவசர அவசரமாக அட்டைய காட்டி கையெழுத்து வாங்கிட்டு போனாலும் மாலை வீட்டுக்குவரும் பொழுது அர்சனை பலமா இருக்கும்.


இது எல்லாம் பத்தாவது வரும் வரைதான். அதன் பிறகு ஒரு டெக்னாலஜியை கண்டுபிடிச்சேன் முதலில் கொடுத்த பிராக்கிரஸ்ரிப்போர்ட் கார்ட் தொலைஞ்சுட்டுன்னு சொல்லி வேற புது பிராக்கிரஸ் ரிப்போர்ட் ஒன்னு வாங்கி அதில் இருக்கும் ஒரிஜினல் மார்க்கில் நான் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவேன், பழைய ரிப்போர்ட்டில் நல்ல மார்க்கா நானே அதில் போட்டு அதை அப்பாவிடம் கையெழுத்து வாங்கிட்டு இருந்தேன்.


பத்தாம் வகுப்பு வரை எக்ஸாம் எழுதும் பொழுது பெஞ்சின் இரண்டு மூலைகளிலும் இரண்டு பெண்கள் நடுவில் ஒரு பையன், இப்படிதான் உட்கார வைப்பாங்க பெரியவங்களுக்கு அப்பவே தெரியும்போல ஒரு ஆணின் முன்னேற்றத்துக்கு பெண் எந்த வகையிலும் உதவி செய்யமாட்டா என்று:). அதுவும் பொண்ணுங்களிடம் நமக்கு இருக்கும் ரொம்ப நல்லபெயருக்கு பேப்பரை காட்டிட்டுதான் மறுவேலை பாப்பாங்க:( சரி இனி பொண்ணுங்களை நம்பினால் வேலைக்கு ஆவாதுன்னு எக்ஸ்ட்ரா ரெண்டு அடிஸ்னல் சீட் வாங்கி அதில் முதல் நாளே பித்தாகரஸ் தேற்றம் போன்ற கடினமான கேள்விகளுக்கு எல்லாம் பதிலை எழுதி அதை எடுத்து போய் திரும்ப வேறொரு பேப்பரில் எழுதி கொடுத்துக்கிட்டு இருந்தேன்,கூட படிச்ச ஒரு மாங்காமடையன் திரும்ப எழுத அலுப்பு பட்டுக்கிட்டு வராத கேள்விக்கு எழுதி வந்த பக்கத்தை மட்டும் அடிச்சிட்டு பேப்பரை கட்டி கொடுத்துட்டான், அதில் இருந்து அடிஸ்னல் ஷீட்டில் அப்பொழுது ஹாலுக்கு வரும் ஆசிரியரும் கையெழுத்து போட்டு தரனும் என்று ரூல்ஸ் போட்டுட்டாய்ங்க.


+1 +12 படிக்கும் பொழுது எல்லாம் ஆசிரியர் வெவரமா பொண்ணுங்க பக்கத்தில் நம்மை உட்காரவிடவில்லை. ஆனா பேப்பர் கொடுக்கும் பொழுது மட்டும் நல்லா நாக்கைபுடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டு அடிச்சு கொடுப்பாங்க ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு அப்புறம் வடிவேல் மாதிரி நீ அடி நான் ஒரு கணக்கு வெச்சுக்க வேண்டாமா என்கிற லெவலுக்கு வந்துட்டோம். என்ன இருந்தாலும் எக்ஸாம் என்றால் கொஞ்சம் பயமாகதான் இருக்கும் நமக்கு பின்னாடி உட்காரும் செந்தில் ஒழுங்கா படிச்சுக்கிட்டு வரனுமே என்று ரொம்ப டென்சனா இருக்கும். அவனை மட்டும் நம்பி போக முடியுமா அவன் எழுதி முடிக்கும் வரை சும்மாவா உட்காந்திருக்க முடியும் என்று கொஞ்சம் பிட்டும் பிரிப்பேர் செஞ்சுக்கிட்டு போகனும் இப்படி ரொம்ப டென்சனா இருக்கும். நைட் முழுக்க கண் முழிச்சு கை வலிக்க எழுதிக்கிட்டு போன பிட்டில் இருந்து எந்த கேள்வியும் வராம இருந்தா மனசு எவ்வளோகஷ்டப்படும் என்று அதை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும்.


கல்லூரிக்கு வந்த பிறகு நாமலும் கொஞ்சம் இம்ரூவ் ஆகி புது புது மெத்தேட் எல்லாம் யூஸ் செய்ய ஆரம்பிச்சோம், எங்கள் பூண்டி கல்லூரியில் பிட் அடிச்சு பிடிச்சிட்டா 3 வருடம் முடிக்கும் வரை செமஸ்டர் எழுத முடியாது, இருந்தாலும் அடங்கவில்லை. ஸ்கூல் போல என் பின்னாடி உட்காரும் பையன் பெயர் ஆனந்த், அய்யர் வூட்டு புள்ளநல்லா படிப்பான் ஆனா பேப்பரை கொடுக்க பயப்படுவான், ரெண்டு மூனு முறை கேட்டு பாப்பேன் தர பயப்படுவான், அய்யரே பேப்பரை தரல பிட்டை உன் கால் அடியில் போட்டுவிடுவேன்என்று வலுகட்டாயமாக பேப்பரை புடுங்கி எழுதுவேன். ரிசல்ட் வரும் பொழுது அவனை விட கூட மார்க் வாங்கியிருப்பேன், வாய் ஓயாம திட்டிக்கிட்டே இருப்பான்.எலே நீ உன்னை மட்டும் நம்பி எக்ஸாமுக்கு வர, நான் உன்னை மாதிரி நாலு பேரை நம்பி வருகிறேன் எல்லோரிடம் இருந்தும் வாங்கி எழுதுவதால் தான் மார்க் கூட வருது நெக்ஸ்ட் டைம் வேண்டும் என்றால் நீயும் ட்ரை செய்யுன்னு சொன்னா போதும் ஓடிடுவான்.


ஒரு முறை எடுத்து போன பிட்டை வெச்சி 15 மார்க் கொஸ்டின் எழுதிக்கிட்டு இருக்கும் பொழுது, 5 மார்க் கொஸ்டின் பிட்டை கொடுக்க சொல்லி கேட்டான் பிரண்ட், இருடா எழுதிட்டு பேப்பரை தருகிறேன் என்றேன் இல்ல இப்பவே கொடு என்றான். சரின்னு பிட்டை கொடுத்தேன். வெளியில் வந்ததும் போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினான் ஏன் டா இந்த ஒரு பிட்டை படிச்சு எழுதங்காட்டியும் டைம் முடிஞ்சு போச்சுச்சு... பெரிசா எழுதினாலா என் கையெழுத்து என்னை மாதிரி அழகா இருக்கும், இதுல பிட் உன்னால புரிஞ்சுக்க முடியாதுன்னுதான் பேப்பரை தருகிறேன் என்றேன் நீதான் அடம்பிடிச்ச நான் என்ன செய்ய என்றேன்...

அப்புறம் ஒரு முறை பிராக்டிகளுக்கு எழுதிக்கிட்டு போன புரோகிராம் பிட்டில் அடுத்த லைன் என்று புரிய / போட்டு வரிசையாஎழுதி வெச்சேன், பிட்டை வாங்கி எழுதிய பிரண்ட் அந்த / சேர்த்து எழுதி அதை எண்டரும் செஞ்சு ஏகப்பட்ட எர்ரர் காட்டியதும் கடுப்பாகி வந்து அடிச்சான். இப்ப HCLல் வேலை பார்க்கிறான்:)

எழுதிட்டு போன பிட் எல்லாம் வந்துட்டா எதை முதலில் ஆரம்பித்து எதை கடைசியா முடிப்பதுன்னு ஒரு டென்சன் வரும் பாருங்க..அதை எல்லாம் சொன்னா புரியாது!அப்புறம் சில பேர் எந்த பிட் எங்க இருக்குன்னு அதுக்கு ஒரு பிட் எடுத்து வருவாங்க. இது உட்சக்கட்ட காமெடி.

இப்படிதான் நம்ம எக்ஸாம் வாழ்கை ரொம்ப டென்சனா இருந்தது.

டிஸ்கி: வினவு அண்ணா நீங்க ஆரம்பிச்சதுன்னு தெரியாம இப்படி விளையாட்டு தனமா, சந்தனமுல்லை கேட்டாங்கன்னு எழுதிட்டேன், இவன் சமூகத்தில் இருக்கும் களைன்னு இந்தியன் தாத்தா மாதிரி கிளம்பிடாதீங்க, இனி எக்ஸாம் எல்லாம் எழுத முடியாது:)

எக்ஸாம் டென்சன் பத்தி எழுதனுமாம்... இனம் இனத்தோடதான் சேரும் என்பதுமாதிரி என்னை மாதிரி பிர்லியண்ட் பாய்ஸ்

1)கார்க்கி (இவரு ஸ்டேட் அளவில் பர்ஸ்ட் மார்க் வாங்கியவர்)

2)அப்துல்லா (இவரு இந்திய அளவில் முதல் ரேங்க் வாங்கியவர்)

3) ஆதிமூலகிருஷ்ணன் (இவரு உலக அளவில் மெடல் வாங்கி சாதனை செய்தவர்) யோவ் இதிலும் வந்து சிக்சிக்மா இல்ல சிக்காம போவுமா அது இதுன்னு சீக்கு கோழியாட்டம் அனத்துன வாயிலேயே குத்துவேன்.

Sunday, November 9, 2008

லேட்டஸ்ட் கார்ட்டூன்ஸ் 10-11-2008

ஆ.ராசா நீங்க என்னதான் சர்ப் எக்ஸல் போட்டு விளக்கினாலும் சன் டீவியும், தினகரனும் விடமாட்டாங்க!!!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....
வாராய் நீ வாராய் என்று கங்குலி பாடும் பொழது , நீ முன்னாலே போ நான் பின்னாலே வாரேன் என்று எதிர் பாட்டு பாடியது நிஜம் ஆயிடும் போல இருக்கே!!!

உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல....

ஊர் உலகத்தில் இருக்கிற அம்புட்டு பேருக்கு பழசு எல்லாம் மறந்து போய்டனும் சாமீ!!!

தொப்பையில் அதிக தகுதி உடைய கோவி.கண்ணன், வெண்பூ இருவரும் அங்கு போகாததால் மிரட்டும் போலீஸ் மாமா!!!




கதவை திற பிகர் வரட்டும்!!!