Monday, May 28, 2007

அடுத்த படம்

இன்றைய அரசியல் சூழ்நிலைகளை வைத்து பட டைரக்டர்ஸ் படம் எடுத்தால் என்ன படம் எப்படி எடுப்பார்கள்.

டைரக்டர்: சரவணசுப்பையா
நடிகர்: அஜித்
படம்: season
கதை: 2000 வருடங்களுக்கு முன்பு இருந்த பாலம் உலகவரை படத்துல இருந்து திடிர் என்று காணாமல் போய்விட்டுகிறது. அது எப்படி என்று கண்டுபிடிப்பதுதான் கதை கரு.


டைரக்டர்: சிலம்பரசன்
நடிகர்: சிலம்பரசன்
படம்: கண்றாவி கருமம்
கதை: M.L.A ஒருவர் ஊர்ல இருக்குற எல்லா நர்ஸையும் கடத்தி கடத்தி கொலை செய்கிறார், ஏன் எதற்க்கு என்று கண்டுபிடிப்பது தான் கதை.

டைரக்டர்: லிங்குசாமி
நடிகர்: விக்ரம்
படம்: பாம்மா!
கதை: திருமணபத்திரிக்கை அடிக்கும் ஆபிஸ் எரிக்கபடுகிறது அது ஏன் எதற்க்கு என்று கதாநாயகன் கண்டு பிடிக்கு போகிறார் அதில் பல பெருங்கைகள்,சில அல்ல கைகள் அதில் ஈடுப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. பயந்து ஜகா வாங்குகிறார இல்லை பந்தாடுகிறாரா..முடிவு 30 வருடங்களுக்கு பிறகு.

கதை டிஸ்கஸனில் நடக்கும் கூத்து விரைவில்...

Sunday, May 27, 2007

என்ன பேசி இருப்பார்கள்?


பர்னாலா: கலைஞர் டீவி என்று ஒரு டீவி ஆரம்பிக்க போவதாக கேள்விபட்டேன் வாழ்த்துக்கள்.

கலைஞர்: அதற்க்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை!

பர்னாலா: என்னது சம்மந்தம் இல்லையா! உங்க இடம் உங்க பேர்ல வேற ஆரம்பிக்கிறாங்க சம்மந்தம் இல்லைன்னு சொல்லிறீங்க! நீங்க வேற ஒரு பேட்டியில் அடுத்த மாதம் ஆரம்பிக்க போறோம்ன்னு சொன்னிங்கலே!

கலைஞர்: சாரி சார், அடிக்கடி சம்மந்தம் இல்லைன்னு சொல்லி சொல்லி பழக்கம் ஆயிடுச்சு.

பர்னாலா: மனதுக்குள் (இப்படி தான் தயாநிதி மாறன் எனக்கும் சன் டீவீக்கும் சம்மந்தம் இல்லை, தினகரனுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை அது இதுன்னு சொல்லுறாரு, நீங்களும் இதே மாதிரி சொலுறீங்க கேட்குற எங்களுக்கு தலை சுத்துகிறது!!!)

Thursday, May 24, 2007

இவர்கள் இப்படிதான்




கேப்டன்: நான் திருமணமண்டபத்தை இடித்தற்க்காக எல்லாம் வருத்தபடவில்லை,அது மக்கள் பணி செய்ய வந்ததற்காக கொடுத்த விலை (ம்ம்ம்..ம்ம்ம்..சின்ன புள்ள அழுவதை போல!) நான் கொஞ்சம் கூட கவலைபடவில்லை, திரும்ப திரும்ப சொல்கிறேன் நான் கவலை படவில்லை.


ராமதாஸ்: இப்பொழுது இருக்கும் இளைய சமுதாயம், கிட்டி பில், கோலி போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை மறந்துவிட்டது, அதை மீட்டு எடுக்கும் முயற்ச்சியாக எங்கள் அமைப்பு உறுப்பினற்கள் தெருவோரங்களில் இந்த விளையாட்டை விளையாட்டை விளையாடி அதன் பெருமைகளை உணர்த்துவார்கள், அதில் யாரும் தவறு செய்தால் கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கலாம்.


வைகோ: அன்று கன்னியாகுமரியில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு தனியாக படகில் சென்றுவரும் பொழுது அண்ணன் கலைஞர் அவரின் தூண்டுதலின் படி படகை கவிழ்க்க நடந்ததை பற்றி நான் சொன்னால், தமிழன் நெஞ்சம் துடிக்கும்...அன்று கடலில் விழுந்த என்னை ஜிலேப்பி, சிப்பி போன்ற கொடிய மீன்களுக்கு இடையில் இருந்து என்னை காப்பாற்றிய தமிழ் மாறன் தான் இதற்க்கு சாட்ச்சி ஆனா அவர் இப்பொழுது உயிரோடு இல்லை.


மேலும் இலவச டிவீயில் என் படம் மட்டும் தெரியாத படி டிவீக்கு என்று ஒரு Fire wall அதில் பொருத்த பட்டு இருக்கிறது என் படம் அதில் வரும் பொழுது மட்டும் அது காமெடி டைம் மயில் சாமியை காண்பிக்கிறது.


கலைஞர்: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்கும் படி பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் நடவடிக்கை எடுப்பார்.


மன்மோகன் சிங்: திரு.கலைஞர் அவர்களே உங்கள் கடிதம் வருவதற்க்குள் அவர்கள் அணை கட்டி திறப்பு விழா அழைப்பிதழில் என் பெயரை போட்டு மெயில் அணுப்பி விட்டார்கள், ஆகையால் நீங்க அடுத்த முறையாவது மெயில் அல்லது SMS அனுப்புங்க உடனே நடவடிக்கை எடுக்கிறேன்.


ஜெயலலித்தா: இரண்டு ரூபாய் அரிசியில் முன்பு புழுதான் இருந்தது இப்பொழு பாம்பு இருக்கிறது.


இலகனேசன்: திருவாரூர் நாகை அகல ரயில் பாதை திட்டத்தை கைவிட வேண்டும், ராமன் இலங்கைக்கு போகும் பொழுது அந்த வழியாக போனதற்கான ஆதாரம் இருக்கிறது அதை அழிக்க கூடாது.

உங்கள் கற்பனையை "comment" ஆக போடுங்களேன்.

Wednesday, May 23, 2007

பரபரப்பான அந்த பத்து நிமிடங்கள்

கேள்வி: நேற்று திரு.ஸ்டாலின் எங்காவது மருத்துவமனைக்கு யாரையும் பார்க்க சென்றாரா?
கீழே உள்ள செய்தி நேற்றைய தினகரன் செய்திதாளின் கடைசி பக்க செய்திகொட்டை எழுத்தில் "மருத்துவமனைக்குள் நுழைந்த கரடி".
அல்புகொர்க், மே 23: காலை பொழுதில் மருத்துவமனைக்குள் திடீரென் கரடிஒன்று நுழைந்தது. ஒவ்வொரு அறையாகச் சென்று கடைசியில் குளியல் அறைக்குள்பதுங்கிக்கொண்டது. மயக்க ஊசி போட்டு அந்த கரடி பிடிக்கப்பட்டது.

Tuesday, May 22, 2007

கோவையின் தமாசு தமாசு


செய்தி: விடுதலைப்புலிகளை பற்றி பேசக்கூடாது என மிரட்டினால் அதிகமாக பேசுவோம்- கோவை கோமாளி ஆவேசம்.


அடேங்கப்பா இந்த கோவை கோமாளி செய்யுற அலப்பறைக்கு அலவே இல்லாம போச்சு பா. தூக்கி ஒன்றரை வருடம் சிறையில் போட்டு களி திங்க வைத்த பின்பும், சர்கரை வியாதி இருக்கிறது என்பதற்காக எல்லாரையும் கூட்டி கொண்டு நடை பயிற்சி போன போது எல்லாம் இப்படி ஆவேசமா பேசமுடியாத எலி இப்பொழுது தாத்தா மூக்கில் வாலை விட்டு ஆட்டுகிறது, ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க சிங்கம் சுனங்கிடுச்சினா எலி மூக்குல வால விட்டு ஆட்டுமாம் என்று. கொஞ்ச மாதங்களுக்கு முன்பு வரை நீ ஊருக்கு வருகிறாய் என்றால் சேது சமுத்திர நாயகனே என்று போஸ்டர் அடித்து ஒட்டுவார்களே , இப்ப எங்கங்கயா அந்த போஸ்டர் போச்சு? அம்மா எதிர்கிற திட்டம் என்பதால் அது பற்றி மூச்சு விடாத நீ இன்று இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறாய், என்ன காமெடியா இது உள்ளூர் தமிழர்களுக்கே குரல் கொடுக்க முடியவில்லையாம், இவரு இலங்கை தமிழர்களுக்காக போராட போகிறாராம்... கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போக போறாராம்.

Sunday, May 20, 2007

சென்னை வந்த ராமன்


கடைகாரர்: ஐயா தெய்வமே! எப்படி இருக்கீங்க! எங்க இந்த பக்கம்?

ராமர்: நாங்க அடிக்கடி இலங்கைக்கை போக வர பயன்படுத்திக்கொண்டு இருக்கும் பாலத்தை இடிக்க போவதாக செய்தி வந்தது, அதான் பாலத்தின் கன்ஸ்ட்ரக்சன் இன்சினியர் அனுமனையும் கூப்பிட்டு வந்தேன்.

அனுமன்: நியாமா பார்த்தா அந்த பாலத்தை இடிக்க வேண்டிய அவசியேமே இல்லை, கொஞ்சம் தள்ளி நோண்டிக்கலாம், அதுக்காக ஒரு மாற்று வரைவு திட்டத்தை தயாரிச்சி இருக்கோம் அப்படின்னு ஒரு அறிக்கை கொடுத்து விட்டு அத டி.ஆர்.பாலு கிட்ட கொடுத்துட்டு போகலாம்ன்னு இப்படி வந்தோம்.

கடைகாரர்: தெய்வமே எனக்கு ஒரு டவுட், லாஸ்ட் டைம் நீங்க பாலம் கட்டிக்கிட்டு இருக்கும் பொழுது டையர்டா, தாகமாக இருக்குன்னு சொன்னப்ப ஓனான் ஒன்னுக்கு அடிச்சு கொட்டாங்கிச்சில கொடுத்துச்சு என்றும் அணில் தான் ரொம்ப ஹல்ப் பண்ணிச்சு என்று பாராட்டி முதுகுல கோடு போட்டிங்க என்று சொல்லுறாங்கலே நிஜமா??

ராமர்: நிஜம்தான், இப்ப எங்க பசிக்கு வெள்ளேரி பிஞ்சு கொடுக்கல! உன் முதுகுல ரோடு போட்டுவிடுவோம்.

Saturday, May 19, 2007

பழய தயாநிதி


அம்மா வர்றாங்க

படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிக்கவும்

Thursday, May 17, 2007

விளம்பரம்


கருணாஸ் ஹீரோவாக நடித்து (பக்கதுல ஓடி வர்ற தம்பி பேரு தெரியலைங்க),வெளிவரும் "நினைத்து நினைத்து பார்த்தேன்" படம் வெற்றி பெறவாழ்த்துவது உங்கள் குசும்பன்.

Monday, May 14, 2007

டென்டுல்கர்


செய்தி: டென்டுல்கர் பயிற்ச்சியின் போது காயம்!

அன்று: ஐய்யயோ! அப்ப அடுத்த மேட்ச் விளையாட மாட்டாரா?

இன்று: ஐய்யா! அப்ப அடுத்த மேட்ச் விளையாட மாட்டார்!!!