என்னம்மா இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய் வா சேர்ந்து சாப்பிடலாம்!
இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க அதுக்குதான்.
இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!
**********************
என்னம்மா இன்னைக்கு ஸ்பெசல்!
சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு ஆம்லேட் தொட்டுக்க!
அவ்வளோதானா?
முடியலைங்க!
இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!
**************************
என்னம்மா சாப்பிடலாமா?
இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு தாங்களேன் ஆம்லேட் போடுறேன்.
இது கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆனதுங்க!
********************************
என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லேட் போட்டு இருக்க எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்லே!
ஒரு நாள் இதை சாப்பிட்டாதான் என்னா? எல்லாத்தையும் நானே செய்யனுமா?
இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!
*******************************
என்னம்மா இது இத்தனோன்டு இருக்கு, முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே உடைச்சு புல் பாயிலா ஊத்தி இருக்க?
முட்டை என்னா நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு அதுக்கு நான் என்னா செய்ய! சும்மா குறை சொல்லிக்கிட்டு இருக்காம, தொட்டுக்கிட்டு சாப்பிடுங்க!
இது ஒரு மூன்று வருடம் ஆனது!
***********************************
என்னா இது ஆப் பாயில் போட்டு இருக்க நான் இத சாப்பிடவே மாட்டேன் என்று தெரியும்ல!
ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போய்டாது, சாப்பிடுங்க ஊருல இல்லாத அதிசய புருசன் எனக்குன்னு வந்து வாச்சி இருக்கு! இது ஒரு 4ல் இருந்து 5 வருடம் ஆன ஜோடிங்க!
******************************
என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?
சாதம் வைத்து இருக்கேன், பிரிஞ்சில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க!
இது ஒரு 7 வருடம் ஆனதுங்க!
*******************************
என்னம்மா இன்னை என்ன சமையல் செய்யனும்!
அதையும் நான் தான் சொல்லனுமா? எனக்கு என்னா பிடிக்கும் என்று தெரியாதா? அதை செய்யுங்க!
இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!!!
********************************
இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை:)
ஆண்கள் வைக்கும் அன்பும் பாசமும் என்றுமே மாறாது என்றும் ஆசிப் அண்ணாச்சி சொல்கிறார், பெரியவங்க சொன்னா சரியாகதான் இருக்கும் போல. (அண்ணாச்சி நீங்க பொடிசு இல்ல, பொடிசு இல்ல:) என்னை மன்னிக்கலாம்!!!)
ரெடி ஸ்டார்ட் மியூஜிக்!!!
Showing posts with label குசும்பு டிப்ஸ். Show all posts
Showing posts with label குசும்பு டிப்ஸ். Show all posts
Monday, January 28, 2008
Wednesday, December 5, 2007
மாலன் மட்டும்தான் ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் போடுவாறா?
கொஞ்ச நாட்களுக்கு முன் மாலன் அ முதல் ஓள வரை அவர் பதிவுக்கு எப்படி பின்னூட்டம் போடுவது என்று ரெடிமேடாக பின்னூட்ட டெம்ளேட் கொடுத்து இருந்தார், அவர் மட்டும்தான் அப்படி செய்ய முடியுமா?
இதோ இன்றைக்கு தமிழ்மணத்தை ஓப்பன் செய்தாலே நச் என்று ஒரு கதை இச்சென்று ஒரு கதை, வாரா வாரம் தொடர் கதை என்று எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு கதை ஆசிரியர் ஆயிட்டாங்க. கவிதை எழுத மாட்டேங்கிறாங்க நாமலும் எதிர் கவுஜ எழுதலாம் என்று பார்த்தா ம்ம்ம்:(
சரி ரூட்ட மாத்துன்னு தொடர் கதை , சிறு கதை எழுதுவர்களுக்கு எப்படி பின்னூட்டம் போடலாம் என்றுதான் இந்த பதிவு.
பார்த்தீங்கன்னா பல பேர் கதையை எல்லாம் படிக்க நேரம் இல்லை அப்புறம் எப்படி பின்னூட்டம் போடுவது என்று போடுவதே இல்லை, அப்படி செய்தால் கதை எழுதும் ஆசிரியர் மனம் என்ன பாடு படும். இதோ சில ரெடிமேட் டெம்ளேட்ஸ்
சிறு கதைக்கு என்றால்
1) எதிர் பாராத முடிவு:) அருமை
2) நல்ல திரும்பம்:) எதிர் பார்கவே இல்லை.
3) சின்ன கதையாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.
4) //--------------------------------// இந்த வரி மிக அருமை ( ------குள் எதை வேண்டும் என்றாலும் காப்பி பேஸ்ட் செஞ்சுக்குங்க, ஆனால் முடிந்தது or முற்றும் என்ற வரியை காப்பி பேஸ்ட் செஞ்சி அருமை என்று சொல்லிடாதீங்க அடி விழும்).
5) சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.
6) ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!
போட்டிக்கான் கதையாக இருந்தால் வேலை மிக சுலபம்.
1) வாழ்த்துக்கள்
2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.
4) கலக்கல் கதை வெற்றி நிச்சயம்.
5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!
6):))) அருமை
தொடர் கதைக்கு என்றால்
1) ரொம்ப அருமை! மிக இயல்பாக இருக்கிறது!
2) அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங் !!! ( எத்தனை பாகம் எழுதினாலும் இவர் படிக்க போவது இல்லை என்பது வேறு விசயம்)
3) வாரம் ஒரு முறைதானா? :(((( [ வாரம் ஒரு முறைதானே!!! என்று போட்டுவிட கூடாது கவனம் தேவை]
4) ஹீரோ டயலாக சூப்பர் , ஹீரோயின் டயலாக் சூப்பர் [ நன்றி அபி அப்பா]
5) நல்ல எழுத்து நடை!
6) கடைசி வரியில் அடுத்த பாகத்துக்கான் எதிர்பார்பை தூண்டி விட்டு விடுகிறீர்கள்!
7) சீக்கிரம் தொடருங்கள்!!! [ நிஜ கருத்து சீக்கிரம் முடியுங்கள் ]
8)//-------------------------------// நான் ரசித்த வரிகள்
9) கதை போல் இல்லை சொந்த அனுபவமோ!!!
10) தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர் கதை போல இருக்கு.
11) அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதவும்!!! [ ரொம்ப பெருசா எழுதி இருக்க சின்னதா எழுதுய்யான்னு அர்த்தம்]
12) தொடரும் என்ற வரிக்கு முதல் வரியை காப்பி செய்து, என்ன இப்படி முடித்து விட்டிர்கள் சீக்கிரம் தொடருங்கள்.
13) முடிவை அறிய ஆவலாக உள்ளேன் தனிமடலிலாவது சொல்லவும்!!!
14) முந்தைய பாகங்களை தேடி தேடி படித்தேன் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது உங்கள் தொடர். [ முதல் பாகத்துக்கு இந்த பின்னூட்டம் சரி வராது]
15) மிகவும் விறு விறுப்பாக இருக்கிறது.
16) யாராவது அருமை என்று பின்னூட்டத்தில் சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)
இதோ இன்றைக்கு தமிழ்மணத்தை ஓப்பன் செய்தாலே நச் என்று ஒரு கதை இச்சென்று ஒரு கதை, வாரா வாரம் தொடர் கதை என்று எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு கதை ஆசிரியர் ஆயிட்டாங்க. கவிதை எழுத மாட்டேங்கிறாங்க நாமலும் எதிர் கவுஜ எழுதலாம் என்று பார்த்தா ம்ம்ம்:(
சரி ரூட்ட மாத்துன்னு தொடர் கதை , சிறு கதை எழுதுவர்களுக்கு எப்படி பின்னூட்டம் போடலாம் என்றுதான் இந்த பதிவு.
பார்த்தீங்கன்னா பல பேர் கதையை எல்லாம் படிக்க நேரம் இல்லை அப்புறம் எப்படி பின்னூட்டம் போடுவது என்று போடுவதே இல்லை, அப்படி செய்தால் கதை எழுதும் ஆசிரியர் மனம் என்ன பாடு படும். இதோ சில ரெடிமேட் டெம்ளேட்ஸ்
சிறு கதைக்கு என்றால்
1) எதிர் பாராத முடிவு:) அருமை
2) நல்ல திரும்பம்:) எதிர் பார்கவே இல்லை.
3) சின்ன கதையாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.
4) //--------------------------------// இந்த வரி மிக அருமை ( ------குள் எதை வேண்டும் என்றாலும் காப்பி பேஸ்ட் செஞ்சுக்குங்க, ஆனால் முடிந்தது or முற்றும் என்ற வரியை காப்பி பேஸ்ட் செஞ்சி அருமை என்று சொல்லிடாதீங்க அடி விழும்).
5) சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.
6) ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!
போட்டிக்கான் கதையாக இருந்தால் வேலை மிக சுலபம்.
1) வாழ்த்துக்கள்
2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.
4) கலக்கல் கதை வெற்றி நிச்சயம்.
5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!
6):))) அருமை
தொடர் கதைக்கு என்றால்
1) ரொம்ப அருமை! மிக இயல்பாக இருக்கிறது!
2) அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங் !!! ( எத்தனை பாகம் எழுதினாலும் இவர் படிக்க போவது இல்லை என்பது வேறு விசயம்)
3) வாரம் ஒரு முறைதானா? :(((( [ வாரம் ஒரு முறைதானே!!! என்று போட்டுவிட கூடாது கவனம் தேவை]
4) ஹீரோ டயலாக சூப்பர் , ஹீரோயின் டயலாக் சூப்பர் [ நன்றி அபி அப்பா]
5) நல்ல எழுத்து நடை!
6) கடைசி வரியில் அடுத்த பாகத்துக்கான் எதிர்பார்பை தூண்டி விட்டு விடுகிறீர்கள்!
7) சீக்கிரம் தொடருங்கள்!!! [ நிஜ கருத்து சீக்கிரம் முடியுங்கள் ]
8)//-------------------------------// நான் ரசித்த வரிகள்
9) கதை போல் இல்லை சொந்த அனுபவமோ!!!
10) தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர் கதை போல இருக்கு.
11) அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதவும்!!! [ ரொம்ப பெருசா எழுதி இருக்க சின்னதா எழுதுய்யான்னு அர்த்தம்]
12) தொடரும் என்ற வரிக்கு முதல் வரியை காப்பி செய்து, என்ன இப்படி முடித்து விட்டிர்கள் சீக்கிரம் தொடருங்கள்.
13) முடிவை அறிய ஆவலாக உள்ளேன் தனிமடலிலாவது சொல்லவும்!!!
14) முந்தைய பாகங்களை தேடி தேடி படித்தேன் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது உங்கள் தொடர். [ முதல் பாகத்துக்கு இந்த பின்னூட்டம் சரி வராது]
15) மிகவும் விறு விறுப்பாக இருக்கிறது.
16) யாராவது அருமை என்று பின்னூட்டத்தில் சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)
Thursday, October 18, 2007
டக்குன்னு ஹிட் ஆக செய்யவேண்டிய ஐந்து
நீங்கள் தமிழ் பதிவுக்கு புதியவராக இருந்தாலும் அல்லது நம் பதிவை யாரும் சீண்டவே மாட்டேங்கிறாங்க என்று ரூம் போட்டு அழுபவராக இருந்தாலும் அதுக்கு நீங்கள் செய்யவேண்டியது.
1) "கண்டனம்" இது மிக முக்கியமான வார்த்தை. சும்மா அப்படியே உள்ள என்ன வேண்டும் என்றாலும் எழுதுங்க. தலைப்பில் இந்த வார்த்தை இருப்பது அவசியம்.
எடுத்துக்காட்டாக:
1) மாலனுக்கும் என் கண்டனம்,
2) ஜமாலனுக்கு என் கண்டனம்,
3) டவுசரை கிழிக்கும் லக்கிக்கு கண்டனம்,
4) தோழி தமிழச்சிக்கு கண்டனம்
5) மாசில்லாவுக்கு கண்டனம்
(இதுக்காக மாலன், ஜமாலன் பதிவு எல்லாம் படிச்சு இருக்கனும் என்றே, அல்லது அவுங்க எல்லாம் என்ன சொல்லி இருக்காங்க என்றோ தெரிஞ்சு இருக்க வேண்டும் என்ற அவசியம் கொஞ்சம் கூட இல்லை)
பெரிய ஆளுங்களுக்கு கண்டனம் என்று தலைப்பு வைக்கனும், அரசியல் தலைவர்களுக்கு கூட கண்டனம் தெரிவிக்கலாம் இப்ப பார்த்தீங்கன்னா அமெரிக்கா புஷ்சுக்கு கண்டனம் தெரிவிச்சு தஞ்சாவூர் மணி மண்டபத்துக்கு பக்கத்தில் 10 cm by 5 cmக்கு ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி இருப்பாங்க:)) அது போல் இல்லாமல் கண்டனம் தெரிவிக்கும் பொழுது ஆள் பார்த்து இடம் பார்த்து கண்டனம் தெரிவிக்கனும்.
சரி கண்டனம் என்று தலைப்பு வெச்சாச்சு உள்ள என்ன எழுதனும் என்று பிரச்சினையா அதெல்லாம் நமக்கு எதுக்கு? உள்ள இவுங்க எல்லாம் ஏன் என் பதிவை படிப்பதில்லை அதனால் தான் என் கண்டனம் என்று ஒரு நாலு வரி எழுதுங்க.
முக்கிய குறிப்பு:
குசும்பனுக்கு கண்டனம்,
கோபிக்கு கண்டனம்,
சோமுவுக்கு கண்டனம்,
என்று எல்லாம் தலைப்பு வெச்சா வியாபாரம் ஆகாது.
2) பகிரங்க கடிதம்: இதுவும் முக்கியமான வார்த்தை மேல் சொன்னது போல்
1) ஓசை செல்லாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!
2) தமிழ்மணத்துக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!
3) பெயரிலிக்கு ஒரு கடிதம்!!!
4) ஞாநிக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!
இப்படி கடிதம் எழுதலாம் , போஸ்ட் செய்யும் செலவும் இல்லை, அவுங்களும் படிக்க போவது இல்லை, ஆனால் நீ எப்படி இப்படி கடிதம் எழுதப்போச்சு என்று பின்னாடி பிரச்சினை வந்தாலும் வரலாம்!!
3)ஒரு கேள்வி?
1) ஓசை செல்லாவுக்கு ஒரு கேள்வி?
2) கோவி கண்ணனுக்கு ஒரு கேள்வி?
3) செந்தழல் ரவிக்கு ஒரு கேள்வி?
4) நட்சத்திரத்துக்கு ஒரு கேள்வி?
5) தமிழ்மணம் நிர்வாகத்துக்கு ஒரு கேள்வி?
காசாபணமா அது என்னா ஒரு கேள்விதான் கேட்கனுமா நிறைய கேள்வி எல்லாம் கேட்க கூடாதான்னு நீங்க அதிக பிரசங்கி தனமாக எல்லாம் யோசிக்க கூடாது, உள்ள எத்தனை கேள்வி வேண்டும் என்றாலும் கேளுங்க ஆனா தலைப்பை இப்படிதான் வைக்கனும்.
இல்ல முதலில் ஒரு பின்னூட்டம் யாருக்காவது போடுங்க அவுங்க பதில் போட்டா பாருங்க இல்லையா? டக்குன்னு கேள்வி கேட்டுவிடுங்க.
இல்ல அவுங்க பதில் சொல்லி இருந்தா எப்படி அவுங்க இப்படி சொல்லலாம் என்று ஒரு பதிவு போட்டுவிடுங்க.
4) வீக் end ஜொள்ளு
வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்
கவர்ச்சி புகைபடங்கள்
தலைப்பை இப்படி வெச்சுட்டு உள்ள படம் போட்டாலும் பார்த்து ரசித்துவிட்டு திட்டு விழும், ஏன் இப்படி பொது இடத்தில் படம் போடுறீங்கன்னு.
படம் போடவில்லை என்றாலும் அனானியாக வந்து திட்டு விழும் ஆனால் இதுபோன்ற தலைப்புக்கு அதிக பின்னூட்டம் கிடைக்காது ஆனால் ரகசியமாக எல்லாம் வந்து பார்த்துவிட்டு போவாங்க நிச்சயம் ஒரு 250 ஹிட்டாவது அதிகமாகும்.
5) ..................எதால் அடிக்கலாம்?
.....................இந்த ஜென்மங்களை எதால் அடிக்கலாம்?
தலைப்பை இப்படி வெச்சுட்டு கொசுவை எதால் அடிக்கலாம், மாட்டை எதால் அடிக்கலாம் என்று டவுட் கேட்டு எழுதுங்க ஆனால் தலைப்பை மட்டும் இப்படி வெச்சுடுங்க.
டிஸ்கி: உங்கள் ஆலோசனைகளை பின்னூட்டமாக கூட தெரிவிக்கலாம். இந்த பதிவை தமிழ்மண வழிகாட்டி, துறை சார்ந்த பதிவுகளில் இடம் பிடிக்க இருப்பதால் உங்கள் பெயர் அதில் வரக்கூடும்.
1) "கண்டனம்" இது மிக முக்கியமான வார்த்தை. சும்மா அப்படியே உள்ள என்ன வேண்டும் என்றாலும் எழுதுங்க. தலைப்பில் இந்த வார்த்தை இருப்பது அவசியம்.
எடுத்துக்காட்டாக:
1) மாலனுக்கும் என் கண்டனம்,
2) ஜமாலனுக்கு என் கண்டனம்,
3) டவுசரை கிழிக்கும் லக்கிக்கு கண்டனம்,
4) தோழி தமிழச்சிக்கு கண்டனம்
5) மாசில்லாவுக்கு கண்டனம்
(இதுக்காக மாலன், ஜமாலன் பதிவு எல்லாம் படிச்சு இருக்கனும் என்றே, அல்லது அவுங்க எல்லாம் என்ன சொல்லி இருக்காங்க என்றோ தெரிஞ்சு இருக்க வேண்டும் என்ற அவசியம் கொஞ்சம் கூட இல்லை)
பெரிய ஆளுங்களுக்கு கண்டனம் என்று தலைப்பு வைக்கனும், அரசியல் தலைவர்களுக்கு கூட கண்டனம் தெரிவிக்கலாம் இப்ப பார்த்தீங்கன்னா அமெரிக்கா புஷ்சுக்கு கண்டனம் தெரிவிச்சு தஞ்சாவூர் மணி மண்டபத்துக்கு பக்கத்தில் 10 cm by 5 cmக்கு ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி இருப்பாங்க:)) அது போல் இல்லாமல் கண்டனம் தெரிவிக்கும் பொழுது ஆள் பார்த்து இடம் பார்த்து கண்டனம் தெரிவிக்கனும்.
சரி கண்டனம் என்று தலைப்பு வெச்சாச்சு உள்ள என்ன எழுதனும் என்று பிரச்சினையா அதெல்லாம் நமக்கு எதுக்கு? உள்ள இவுங்க எல்லாம் ஏன் என் பதிவை படிப்பதில்லை அதனால் தான் என் கண்டனம் என்று ஒரு நாலு வரி எழுதுங்க.
முக்கிய குறிப்பு:
குசும்பனுக்கு கண்டனம்,
கோபிக்கு கண்டனம்,
சோமுவுக்கு கண்டனம்,
என்று எல்லாம் தலைப்பு வெச்சா வியாபாரம் ஆகாது.
2) பகிரங்க கடிதம்: இதுவும் முக்கியமான வார்த்தை மேல் சொன்னது போல்
1) ஓசை செல்லாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!
2) தமிழ்மணத்துக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!
3) பெயரிலிக்கு ஒரு கடிதம்!!!
4) ஞாநிக்கு ஒரு பகிரங்க கடிதம்!!!
இப்படி கடிதம் எழுதலாம் , போஸ்ட் செய்யும் செலவும் இல்லை, அவுங்களும் படிக்க போவது இல்லை, ஆனால் நீ எப்படி இப்படி கடிதம் எழுதப்போச்சு என்று பின்னாடி பிரச்சினை வந்தாலும் வரலாம்!!
3)ஒரு கேள்வி?
1) ஓசை செல்லாவுக்கு ஒரு கேள்வி?
2) கோவி கண்ணனுக்கு ஒரு கேள்வி?
3) செந்தழல் ரவிக்கு ஒரு கேள்வி?
4) நட்சத்திரத்துக்கு ஒரு கேள்வி?
5) தமிழ்மணம் நிர்வாகத்துக்கு ஒரு கேள்வி?
காசாபணமா அது என்னா ஒரு கேள்விதான் கேட்கனுமா நிறைய கேள்வி எல்லாம் கேட்க கூடாதான்னு நீங்க அதிக பிரசங்கி தனமாக எல்லாம் யோசிக்க கூடாது, உள்ள எத்தனை கேள்வி வேண்டும் என்றாலும் கேளுங்க ஆனா தலைப்பை இப்படிதான் வைக்கனும்.
இல்ல முதலில் ஒரு பின்னூட்டம் யாருக்காவது போடுங்க அவுங்க பதில் போட்டா பாருங்க இல்லையா? டக்குன்னு கேள்வி கேட்டுவிடுங்க.
இல்ல அவுங்க பதில் சொல்லி இருந்தா எப்படி அவுங்க இப்படி சொல்லலாம் என்று ஒரு பதிவு போட்டுவிடுங்க.
4) வீக் end ஜொள்ளு
வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்
கவர்ச்சி புகைபடங்கள்
தலைப்பை இப்படி வெச்சுட்டு உள்ள படம் போட்டாலும் பார்த்து ரசித்துவிட்டு திட்டு விழும், ஏன் இப்படி பொது இடத்தில் படம் போடுறீங்கன்னு.
படம் போடவில்லை என்றாலும் அனானியாக வந்து திட்டு விழும் ஆனால் இதுபோன்ற தலைப்புக்கு அதிக பின்னூட்டம் கிடைக்காது ஆனால் ரகசியமாக எல்லாம் வந்து பார்த்துவிட்டு போவாங்க நிச்சயம் ஒரு 250 ஹிட்டாவது அதிகமாகும்.
5) ..................எதால் அடிக்கலாம்?
.....................இந்த ஜென்மங்களை எதால் அடிக்கலாம்?
தலைப்பை இப்படி வெச்சுட்டு கொசுவை எதால் அடிக்கலாம், மாட்டை எதால் அடிக்கலாம் என்று டவுட் கேட்டு எழுதுங்க ஆனால் தலைப்பை மட்டும் இப்படி வெச்சுடுங்க.
டிஸ்கி: உங்கள் ஆலோசனைகளை பின்னூட்டமாக கூட தெரிவிக்கலாம். இந்த பதிவை தமிழ்மண வழிகாட்டி, துறை சார்ந்த பதிவுகளில் இடம் பிடிக்க இருப்பதால் உங்கள் பெயர் அதில் வரக்கூடும்.
Thursday, June 21, 2007
எட்டு விளையாட்டு
என்னை அழைத்த சிவா அவர்களுக்கு ஒரு வார்தையில் நன்றி எல்லாம் சரி வராது தனியா கவனிச்சிக்கிறேன் என்னை பற்றிய எட்டு...
1) 12 படிக்கும் பொழுது ஆசிரியர்கள் என்னவாக போகிறீர்கள் என்று எல்லாரிடமும் கேட்டு என் முறை வந்த பொழுது மல்டிமீடியா டிசைனர் ஆக வேண்டும் என்று சொன்னது சொன்னது போலவே அதை செய்தது. படித்தது வளர்ந்தது எல்லாம் கிராமம், முழுசா நாலு வார்தை இங்கிலீஸில் எழுதவோ படிக்கவோ வராத நான் இன்று வெளி நாட்டில் வெளிநாட்டவருடன் தட்டு தடுமாறி பேசிகிறேன் அதுவே பெரிய சாதனை. (ராசையா படத்தில் வடிவேல் பிரபுதேவா பேசும் இங்கீலிசையை பார்த்து அழுவது போல் உள்ளே இருக்கும் குசும்பன் அடிக்கடி அழுவான்)
2) யாருக்காகவும் எதற்காகவும் என்னை, என் பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ளாத பிடிவாதம், நீ நீயாக இரு நான் நானக இருக்கிறேன் எனது கொள்கை. (காதலிக்கு பிடிக்கவில்லை, மனைவிக்கு பிடிக்கவில்லை என்று தங்கள் பழக்கங்களை மாற்றி கொள்பவர்களை பார்த்தால் :) )
3) காலேஜ் படிக்கும் பொழுது B.Sc மூன்று வருடம் M.Sc இரண்டு வருடம் ஆக மொத்தம் ஐந்து வருடம் நான் வைத்து தலையில் வெட்டாமல் வைத்து இருந்த ஒன்றரை அடி நீள தலை முடி முன் பக்கம் வைத்து இருந்தது, ஹிட்லர் மீசை இப்படி பல கெட்டப் பல எதிர்புகளையும் மீறி வைத்து இருந்தது.
4) மற்றவர்களோடு என்றும் பொருத்தி பார்த்து கொள்ளாத குணம்.
5) தெரியாததை தெரியாது என்று சொல்வதற்க்கு, அதை கேட்டு தெரிந்து கொள்ள தயங்காத குணம். இதனால் பல பேர் கிண்டல் கேலிக்கு ஆளாக நேரிட்டாலும் அந்த குணம் மட்டும் மாறவில்லை.
6) இன்று வரை புகை, மது அருந்தாதது (குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்ல :)
7) மணதறிந்து இதுவரை யாருக்கும் தீங்கு நினைக்காதது, யாருக்கும் துரோகம் செய்யாதது.
8) நான் என்னிடம் இருக்கும் ஒரே ஒரு திறமையாக நினைப்பது உள்ளுக்குள் தூங்கி கொண்டு இருக்கும் "கிரியேட்டர்" அவன் ஒரு விளம்பர பிரியன் நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க அவன் டீவி யில் வருமே அந்த விளம்பர பிரியன் பல பொருட்களுக்கு பல மாதிரியாக விளம்பரம் எப்படி எடுக்கலாம் என்று யோசித்து எழுதி வைத்து இருப்பவன். என்றாவது ஒரு நாள் Ad film making ல சாதிக்கனும் என்று வெறியோடு (மற்றவர் தேவைக்காக) இப்பொழுது உறங்கி கொண்டு இருப்பவன்.
குறிப்பு: exam கூட இத்தனை நேரம் எழுதியது இல்லைங்க.
நான் அழைக்கும் எட்டு பேர்
1) வெங்கட்ராமன்
2) நாமக்கல் சிபி
3) காயத்ரி
4) அய்யனார்
5) துர்கா
6) மின்னுது மின்னல்
7) சந்தோஷ்
8) அபி அப்பா
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.
1) 12 படிக்கும் பொழுது ஆசிரியர்கள் என்னவாக போகிறீர்கள் என்று எல்லாரிடமும் கேட்டு என் முறை வந்த பொழுது மல்டிமீடியா டிசைனர் ஆக வேண்டும் என்று சொன்னது சொன்னது போலவே அதை செய்தது. படித்தது வளர்ந்தது எல்லாம் கிராமம், முழுசா நாலு வார்தை இங்கிலீஸில் எழுதவோ படிக்கவோ வராத நான் இன்று வெளி நாட்டில் வெளிநாட்டவருடன் தட்டு தடுமாறி பேசிகிறேன் அதுவே பெரிய சாதனை. (ராசையா படத்தில் வடிவேல் பிரபுதேவா பேசும் இங்கீலிசையை பார்த்து அழுவது போல் உள்ளே இருக்கும் குசும்பன் அடிக்கடி அழுவான்)
2) யாருக்காகவும் எதற்காகவும் என்னை, என் பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ளாத பிடிவாதம், நீ நீயாக இரு நான் நானக இருக்கிறேன் எனது கொள்கை. (காதலிக்கு பிடிக்கவில்லை, மனைவிக்கு பிடிக்கவில்லை என்று தங்கள் பழக்கங்களை மாற்றி கொள்பவர்களை பார்த்தால் :) )
3) காலேஜ் படிக்கும் பொழுது B.Sc மூன்று வருடம் M.Sc இரண்டு வருடம் ஆக மொத்தம் ஐந்து வருடம் நான் வைத்து தலையில் வெட்டாமல் வைத்து இருந்த ஒன்றரை அடி நீள தலை முடி முன் பக்கம் வைத்து இருந்தது, ஹிட்லர் மீசை இப்படி பல கெட்டப் பல எதிர்புகளையும் மீறி வைத்து இருந்தது.
4) மற்றவர்களோடு என்றும் பொருத்தி பார்த்து கொள்ளாத குணம்.
5) தெரியாததை தெரியாது என்று சொல்வதற்க்கு, அதை கேட்டு தெரிந்து கொள்ள தயங்காத குணம். இதனால் பல பேர் கிண்டல் கேலிக்கு ஆளாக நேரிட்டாலும் அந்த குணம் மட்டும் மாறவில்லை.
6) இன்று வரை புகை, மது அருந்தாதது (குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்ல :)
7) மணதறிந்து இதுவரை யாருக்கும் தீங்கு நினைக்காதது, யாருக்கும் துரோகம் செய்யாதது.
8) நான் என்னிடம் இருக்கும் ஒரே ஒரு திறமையாக நினைப்பது உள்ளுக்குள் தூங்கி கொண்டு இருக்கும் "கிரியேட்டர்" அவன் ஒரு விளம்பர பிரியன் நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க அவன் டீவி யில் வருமே அந்த விளம்பர பிரியன் பல பொருட்களுக்கு பல மாதிரியாக விளம்பரம் எப்படி எடுக்கலாம் என்று யோசித்து எழுதி வைத்து இருப்பவன். என்றாவது ஒரு நாள் Ad film making ல சாதிக்கனும் என்று வெறியோடு (மற்றவர் தேவைக்காக) இப்பொழுது உறங்கி கொண்டு இருப்பவன்.
குறிப்பு: exam கூட இத்தனை நேரம் எழுதியது இல்லைங்க.
நான் அழைக்கும் எட்டு பேர்
1) வெங்கட்ராமன்
2) நாமக்கல் சிபி
3) காயத்ரி
4) அய்யனார்
5) துர்கா
6) மின்னுது மின்னல்
7) சந்தோஷ்
8) அபி அப்பா
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.
Labels:
அரசியல் லொள்ளு,
அனுபவம்,
கார்ட்டூன் குசும்பு,
குசும்பு டிப்ஸ்
Tuesday, June 12, 2007
நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற!!!
நுழைவு தேர்வை ரத்து செய்துவிட்டதால் என் போன்ற திறமையான மாணவர்கள் திறமையை நிருப்பிக்க வழி இல்லாமல் போய்விட்டது, என்னதான் இருந்தாலும் அதில் அதிக மதிப்பெண் வாங்கும் டெக்னிக்கை மறந்து விடாமல் வாழையடி வாழயாக போற்றி பாதுக்காக்க வேண்டியது எனது கடமை. ஆகையால் இத்தனை நாட்களாக கட்டிகாத்து வந்த ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன்.
12வது தாண்டுவதற்கே முப்பது குட்டிகரணம் போடும் என்னை போன்ற ஆட்கள் 49 மார்க் நுழைவு தேர்வில்எடுப்பது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன், உங்களிடம் வேண்டி கேட்டு கொள்வது எல்லாம் இதை தயவு செய்து வியாபாரம் ஆக்கிவிட வேண்டாம். அது போல் குரு காணிக்கையாக எதுவும் எனக்கு வேண்டாம்.
நுழைவு தேர்வில் இனி 49 மார்க் எடுப்பது எப்படி. அவசியம் மூன்று ரப்பர், 1 பென்சில், ஒரு பால் பாயின்ட் பென் (ஏன் 3 ரப்பர், 1 பெண்சில் என்ற கேள்வி நீங்க கேட்பது புரிகிறது பதில் கடைசியில்) தேர்வு அறைக்கு முன் செல்லும் முன் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...ஒரு ரப்பரை எடுத்து அதன் நான்கு பக்கங்களிளும் 1,2,3,4 என்று எழுதி கொள்ளுங்கள். பின் கொஸ்டின் பேப்பரை கொடுத்த உடன் நீங்கள் எடுக்க வேண்டியது உங்கள் பெண்சிலை அல்ல..உங்கள் ரப்பரை.. எடுத்து அதை உங்கள் டேபிள் மேல் தாயகட்டை உருட்டுவது போல் உருட்டிவிடுங்கள் அதில் மூன்று என்று வந்தால்முதல் கேள்விக்கு பதில் மூன்றாவது கட்டத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் விடை.
அதுபோல் எல்லா கேள்விக்கும் உருட்டி எல்லா கேள்விக்கும் விடை அளியுங்கள்.
ம்ம்ம் இப்ப கேளுங்க உங்க சந்தேகத்தைஏன் மூன்று ரப்பர் அதுதானே?
உருட்டி விடும் பொழுது முன்னாடி போய் விழுந்துட்டா அத எடுக்க என்று உங்க நேரத்தை வீணடிக்காமல் அடுத்த ரப்பரை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுங்கள்.
ம்ம்ம் அடுத்தது என்ன இப்படி செய்வதால் 49 மார்க் வாங்க முடியுமா அதுதானே! கண்டிப்பா 200 க்கு 49 மார்க நான் வாங்கினேன்.
இருந்தாலும் முன்பு நான் சிபியிடம் சொன்னதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்
சிபி கேட்டார் எப்படிய்யா பார்த்து எழுதும் பொழுது தப்பு வரும் என்று...அதற்க்கு நான் சொன்னேன் சனி பகவான் உச்சத்துல இருந்தா ஜெராக்ஸ் எடுத்து குடுத்தா கூட தப்புவரும் என்று..
இதன் நன்மைகள்
முன்பு கண்னை மூடிக்கொண்டு ஒரு பதிலை தொடும் முறை இருந்துவந்தது அதில் நிறைய bugs இருப்பதால் அதற்க்குமாற்றாக இந்த முறை, கண்னை மூடி கொண்டு தொடும் முறையில் தவறாக கேள்வியையே தொடும் வாய்ப்பு அதிகம்அது போல் முதல் கேள்விக்கு அடுத்த கேள்விக்கான பதிலை தொடும் வாய்ப்பும் அதிகம் ஆகையால் இது அதிகமுறை சோதனைக்கு உட்படுத்த பட்டு அதில் நான் வெற்றியும்(????) பெற்றதால் உங்களிடம் சொல்கிறேன்.
12வது தாண்டுவதற்கே முப்பது குட்டிகரணம் போடும் என்னை போன்ற ஆட்கள் 49 மார்க் நுழைவு தேர்வில்எடுப்பது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன், உங்களிடம் வேண்டி கேட்டு கொள்வது எல்லாம் இதை தயவு செய்து வியாபாரம் ஆக்கிவிட வேண்டாம். அது போல் குரு காணிக்கையாக எதுவும் எனக்கு வேண்டாம்.
நுழைவு தேர்வில் இனி 49 மார்க் எடுப்பது எப்படி. அவசியம் மூன்று ரப்பர், 1 பென்சில், ஒரு பால் பாயின்ட் பென் (ஏன் 3 ரப்பர், 1 பெண்சில் என்ற கேள்வி நீங்க கேட்பது புரிகிறது பதில் கடைசியில்) தேர்வு அறைக்கு முன் செல்லும் முன் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...ஒரு ரப்பரை எடுத்து அதன் நான்கு பக்கங்களிளும் 1,2,3,4 என்று எழுதி கொள்ளுங்கள். பின் கொஸ்டின் பேப்பரை கொடுத்த உடன் நீங்கள் எடுக்க வேண்டியது உங்கள் பெண்சிலை அல்ல..உங்கள் ரப்பரை.. எடுத்து அதை உங்கள் டேபிள் மேல் தாயகட்டை உருட்டுவது போல் உருட்டிவிடுங்கள் அதில் மூன்று என்று வந்தால்முதல் கேள்விக்கு பதில் மூன்றாவது கட்டத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் விடை.
அதுபோல் எல்லா கேள்விக்கும் உருட்டி எல்லா கேள்விக்கும் விடை அளியுங்கள்.
ம்ம்ம் இப்ப கேளுங்க உங்க சந்தேகத்தைஏன் மூன்று ரப்பர் அதுதானே?
உருட்டி விடும் பொழுது முன்னாடி போய் விழுந்துட்டா அத எடுக்க என்று உங்க நேரத்தை வீணடிக்காமல் அடுத்த ரப்பரை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுங்கள்.
ம்ம்ம் அடுத்தது என்ன இப்படி செய்வதால் 49 மார்க் வாங்க முடியுமா அதுதானே! கண்டிப்பா 200 க்கு 49 மார்க நான் வாங்கினேன்.
இருந்தாலும் முன்பு நான் சிபியிடம் சொன்னதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்
சிபி கேட்டார் எப்படிய்யா பார்த்து எழுதும் பொழுது தப்பு வரும் என்று...அதற்க்கு நான் சொன்னேன் சனி பகவான் உச்சத்துல இருந்தா ஜெராக்ஸ் எடுத்து குடுத்தா கூட தப்புவரும் என்று..
இதன் நன்மைகள்
முன்பு கண்னை மூடிக்கொண்டு ஒரு பதிலை தொடும் முறை இருந்துவந்தது அதில் நிறைய bugs இருப்பதால் அதற்க்குமாற்றாக இந்த முறை, கண்னை மூடி கொண்டு தொடும் முறையில் தவறாக கேள்வியையே தொடும் வாய்ப்பு அதிகம்அது போல் முதல் கேள்விக்கு அடுத்த கேள்விக்கான பதிலை தொடும் வாய்ப்பும் அதிகம் ஆகையால் இது அதிகமுறை சோதனைக்கு உட்படுத்த பட்டு அதில் நான் வெற்றியும்(????) பெற்றதால் உங்களிடம் சொல்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)

