Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts

Tuesday, May 19, 2009

எங்களை கொஞ்சம் நிம்மதியாக அழவிடுங்கள்!

உங்கள் வீட்டில் உங்கள் சொந்த சகோதரன் விபத்தில் இறந்திருப்பின், அப்பொழுது வந்து உங்களிடம் உங்க அண்ணன் செய்தது சரி இல்லை குடிச்சுட்டு வண்டி ஓட்டியது தவறு, அதுவும் 100கிலோ மீட்டர் ஸ்பிடில்
சென்றது தவறு, அவரால் ரோட்டில் ஒருவரும் நடக்கமுடியாமல் இருந்தது என்றும் இனி நிம்மதி என்றும் ஒருவர் பேசும் பொழுது உங்களுக்கு எப்படி
இருக்கும்...

அப்படிதான் எங்களுக்கு இருக்கிறது வாதம் செய்யக்கூடம் மனம் வரவில்லை அதற்கான நேரமும் இது இல்லை...உங்களுக்கு இந்த செய்தி சந்தோசம் தருகிறது என்றால் அதை எங்களிடம் வந்து காட்டாதீர்கள். எங்களை கொஞ்சம் மெளனமாக அழவிடுங்கள்!

Tuesday, April 7, 2009

சீக்கியர்கள் உணர்வு என்றால் உசத்தியா?

ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழக்குவது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நேற்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் கூறுகையில்'காங்கிரஸ் ஒரு மிகப் பெரிய ஜனநாயக கட்சி, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எந்த முடிவும் எடுக்கப்படும், இவர்கள் இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது பற்றி மறுபரிசீலனை செய்வோம்' என்றார்.

அரசியல் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க எனக்கு.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவேண்டும் என்று எல்லா கட்சிகளும்(???), மக்களும் போராடினாங்க அப்ப மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து என்னாத்த செஞ்சாங்க இவங்க?

இதுவரை எத்தனை முறை எப்படி ஈழமக்கள் படுகொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதனால் என்ன பயன் விளைந்தது?

அட விடுங்க எதுக்கெடுத்தாலும் அயல் நாட்டு பிரச்சினையில் தலையிடுவது சரி இல்லை என்று சொல்லுவீங்க.

தமிழக மீனவர்கள் சுட்டபடும் பொழுது அதை தடுக்க என்ன செய்து இருக்கீங்க?

தமிழக தலைவர் உங்களுக்கு லெட்டர் எழுதுவார் திரும்ப அவருக்கு நீங்க லெட்டர் எழுதுவீங்க இதுஎன்னா சாலமன் லெட்டர் எழுதும் தொடர் விளையாட்டா? மாறி மாறி லெட்டர் எழுதி விளையாடுறீங்க?

எத்தனை தமிழர்கள் தீக்குளித்தார்கள் அதுக்கு என்ன அறிக்கை கொடுத்தீர்கள்? சீக்கியர்களின் உணர்வு என்றால் ஒசத்தியா? தமிழர்களின் உணர்வு என்றால்.......???

அதே மாதிரி இந்நேரம் வேறு ஒரு மாநில அமைச்சர் மீது ஒரு தமிழன் செருப்பு வீசி இருந்தா என்னா நடந்து இருக்கும்?

Sunday, January 4, 2009

கூறு கெட்ட அரபுதேசங்களும், தமிழகமும்

இதோ இன்றய தினம் வரை பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் நடந்து வரும் தாக்குதலில் பலியானோர் 500 என்றும் 1000க்கும் அதிகமானோர் காயம்பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.

பாலஸ்தீனத்தை சுற்றி இருப்பது அனைத்தும் இஸ்லாம் நாடுகள், அங்கே தினம் இறந்து கொண்டு இருக்கும் அனைவரம் சகோதரர்கள் ஆனால் எப்படி இங்கிருக்கும் அரசுகள் அதை வேடிக்கை பார்க்க மனசு வருகிறது என்று தெரியவில்லை.

ஈழத்தில் தமிழன் தாக்கப்படும் பொழுது அதை எதிர்த்து 1000 முறை எதிர்கட்சிகூட்டம் நடத்தி ஒன்றும் கிழிக்க முடியாததுக்கு 101 காரணம் இருக்கிறது, பதவியை காப்பாற்றனும், நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும், கண்கள் அடிக்கடி பனிக்கும் பொழுது கண்ணை தொடைக்கனும், காங்கிரசை அனுசரிச்சு போகனும் இப்படி பல காரணங்கள் இருக்கிறது அதனால் தான் ஈழத்துக்காக நம்மால் ஒன்னும் செய்யமுடியாமல் போய்விட்டது.

பிரணாப் முகர்ஜி அங்கு போய் இருந்தால் சிங்கள டாங்கிகளுக்கு முன் தலை வைத்தாவது சண்டையை நிறுத்தி இருப்பார் ஆனால் நம்முடைய போதாத நேரம் அவர் அங்கு போவதற்கு விமான டிக்கெட் கிடைக்கவில்லை.

ஆனால் இந்த பாழாப்போன அரபு நாட்டு ராஜாங்களுக்கு ஒன்னும் பிரச்சினையே இல்லை எதிர்கட்சி இல்லை, எதிர்த்து குரல் கொடுக்க ஆள் இல்லை, உலகமே எரிபொருள்களுக்கு தங்களைதான் அண்டி இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் பொழுது. பாலஸ்தீனத்தில் தினம் சாகும் சகோதர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க திராணி இல்லாத அரபுதேசங்களை என்ன சொல்வது... இன உணர்வு கூட வேண்டாம் மனிதாபிமான உணர்வு கூடவா இல்லாமல் போய்விட்டது.

பாலஸ்தீனத்தில் தாக்குதலை நிறுத்தி அங்கு அமைதியை நிலை நாட்டும் வரை எண்ணெய் பேரல்கள் உற்பத்தி குறைக்கபடும் என்று சொன்னால் ஒரு தீர்வு சீக்கிரம் கிடைக்காதா?

********************************************************************
அம்மாவின் உடல் நிலைக்காக பிராத்தனை செய்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி, நாளை சென்னை வருகிறேன். வந்ததும் தொடர்பில் இருப்பவர்களை தொடர்பு கொள்கிறேன். மற்றவர்கள் தங்கள் நம்பரை மெயில் அனுப்பினால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்!

Sunday, September 28, 2008

இவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க கூடாது!

மரண தண்டனை கூடாது என்றும் இல்லை இன்னும் தண்டனை கடுமையாக வேண்டும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள், இங்கு(அமீரகத்தில்) குற்றங்களே நடக்கவில்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் தண்டனைக்கு பயந்து குற்றங்கள் குறைந்த அளவிலே நடக்கின்றன.

இரு தினங்களுக்கு முன் ஒரு செய்தியை காண நேர்ந்தது, இருவயது குழந்தையை ஒரு ***மகன் பணத்துக்காக கடத்தி அந்த குழுந்தையை கால்களை பிடித்து ரெயில் தண்டவாளத்தில் தலையை அடித்து கொன்று இருக்கிறான். குழந்தை மூளை சிதறி இறந்து இருக்கிறது, தலை முகம் என்று உரு தெரியாத அளவுக்கு மாறி இருந்து இருக்கிறது, மனதில் வன்மம் எத்தனை இருந்தால் இப்படிப்பட்ட செயலை செய்ய அவனுக்கு மனது வரும்?


நேற்று டெல்லியில் பைக்கில் வந்த இருவர் பையை கீழே விட்டு செல்வதை கண்ட சிறுவன் எடுத்து அவர்களிடம் கொடுக்க ஓடும்பொழுது குண்டு வெடித்து பலியாகி இருக்கிறான். இப்படி எல்லாம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.

ஒரு சாரார் சொல்வது போல் இதுபோல் செயல்களுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது. ஒரு நொடியில் செத்துவிட்டால் அவனுக்கு மற்றவர்களின் வலி தெரியாது. கையை கட்டி விட்டு கொஞ்சமாக ஆண் குறியை வெட்டி விட்டவேண்டும். புண் ஆறுவதற்கு எந்த மருந்தும் தரவும் கூடாது . வேண்டும் என்றால் அதில் மிளாகய் தூளை வேண்டும் என்றால் கூட தடவி விடலாம், தினம் தினம் அந்த வலியாலே அவன் சாகவேண்டும் அப்பொழுதுதான் தவம் இருந்து பெற்ற குழந்தையை இழந்த தாயின் வலி புரியும்.

யார் எங்கு குண்டு வைத்தால் என்ன எவன் எந்த ஏசு சிலையை இடித்தால் என்ன, எவன் கோயிலில் சிலைகளை உடைத்தால் என்ன, இரு மத மக்களும் அடிச்சுக்கிட்டு, வெட்டிக்கிட்டு செத்தால் எவனுக்கு என்ன நஷ்டமாபோச்சு, நமக்கு பதவியும், நாளை அணு ஆயுதஒப்பந்தமும் கையெழுத்து ஆனால் போதும்.

Sunday, January 6, 2008

மும்பை பெண்கள் மானபங்கம் படுத்தபட்ட போது எடுக்கபட்ட இதுவரை வெளிவராத புகைப்படங்கள் மற்றும் வீடியோ.






























ஓசோ: அடிப்பட்டு கிடக்கும் பெண்களின் நிர்வாணத்தையும் ரசிக்கும் ஒரு மிருகம் நம்முள் ஒளிந்து இருக்கிறது. சமயம் வரும் பொழுது அது எட்டிபார்க்கிறது!
நாமும் திருந்த வேண்டும்!

Monday, October 22, 2007

என்னை டென்சன் ஆக்கும் சில விசயங்கள்

ஒவ்வொருவருக்கு சில விசயங்கள் பிடிக்காது, அதை பார்த்தால் சுல் என்று கோவம் தலைக்கு ஏறும் அது போல் எனக்கு தலைக்கு ஏறும் சில ...

1) டாக்டர் என் பெயர் ....வயது 26 கடந்த வருடம் திருமணம் ஆனது இந்த வருடமே எனக்கு குழந்தை பெற்றுக்கனும் என்று ஆசை ஆனால் கணவருக்கு இல்லை இதுக்கு என்ன செய்வது?

நான் திருமணம் ஆகி கணவனை பிரிந்து இருக்கும் பெண் பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழியின் கணவன் என்னை அடைய முயற்ச்சிக்கிறார், நாம் ஓடி போய் விடலாம் என்று சொல்கிறார் என்ன செய்வது நான்?

இது போன்ற கேள்விகள் படிக்க நேரும் பொழுது

2) ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கை கழுவ போகும் பொழுது நமக்கு முன்பு இருப்பவர் கை கழுவி பல் விளக்கி, முகம் கழுவி விட்டா குளிச்சிடுவார் போல இருக்கும் அப்பொழுது ஏன் இங்கயே குளிச்சிட்டு போங்க என்று ஒரு துண்டை எடுத்து கொடுக்கனும் போல இருக்கும். அப்பொழுதும்...

3) ஹலோ பெப்ஸி உமாவா? அய்ய்யோ எத்தனை நாள உங்க கிட்ட பேசனும் என்று...இருங்க எங்க அம்மா பேசனும் என்கிறாங்க, இருங்க என் தம்பி பேசனும் என்கிறான்....என்னால நம்பவே முடியலைங்க உங்க கிட்ட பேசுகிறேன் என்று...குரல்களை காதில் கேட்கும் பொழுது

4) அட்டு பிகரு உலக அழகி ரேஞ்சுக்கு ரவுசு கொடுக்கும் பொழுதும்.

5) பாரு அந்த பொண்ணு என்னமா மார்க் வாங்குறா நீயும் தான் இருக்கீயே என்று சொல்லும் பொழுதும்.

6) தான் ஏறி உட்கார்ந்த உடன் எல்லா ஸ்டாப்பிலும் நிறுத்தும் பஸ் டிரைவரிடம் சண்டை போடும் ஆட்களை பார்க்கும் பொழுதும்.

7) சில்லரை இல்ல இறங்கு என்று சொல்லும் நடத்துனரை பார்க்கும் பொழுதும்.

8) கரெக்ட்டா நான் கைய உட்டு ரெண்டு டிக்கெட் என்று சொல்லும் பொழுது ஹைவுஸ் புல் என்று போர்ட் மாட்டும் பொழுதும்.

கோவம் வரும். அது போல் உங்களுக்கு எப்பொழுது கோவம் வரும்?

டிஸ்கி: தம்பி கதிர்!!! என் பதிவை, அல்லது போட்டோவை பார்க்கும் பொழுது கோவம் வரும் என்று பின்னூட்டம் போட்ட ரிலீஸ் செய்ய மாட்டேன் ஆமா.

Friday, August 3, 2007

இன்னொரு உலகம்

பல் செட்டை கழட்டி வைத்துவிட்டு
என் அருகில் வந்து காலில் விழும்
ஒரு அறுபது வயது வாலிபர்.

குச்சியை ஊன்றிய படி எழுந்து
நின்று தத்தி தத்தி என் அருகில் வந்து
என் கையை தடவி தான் போட்டு இருந்த
மோதிரத்தை எனக்கு மாட்டி விடும்
இன்னொரு எழுபது வயது வாலிபர்.

கட்டு கட்டாக பணத்தை டோக்கனாக
மாற்றி வைத்து வீசும் மற்றொறு
ஐம்பது வயது விடலை.

முதல் வரிசை சில இருக்கைகள் இது
போன்ற வாலிபர்களுக்காகவே
முன்பதிவு செய்யபட்டு காத்திருக்கிறது.

கடைசி வரிசையில் அமர்ந்து ஆரஞ்சு பழ
சாராயம் குடிக்கும்இருப்பத்தைந்து
வயது பெரியவர்கள் கூட்டம்.
குடும்பத்தோடு வந்து ஆணுக்கு பெண்
சமம் என்று பீர் ஜூஸ் குடிக்கும் குலவிளக்குகள்.

உடை குறைச்சலாக இருக்கிறது
இன்னும் கொஞ்சம் அதிகமாக
உடுத்து அப்பொழுதான் செயின் கிடைக்கும்
என்று ஆலோசனை சொல்லும் சக தோழி.

இந்த உலகம் விந்தையாகவே
இருக்கிறது என்று அவள் உறங்கியும்
உறங்காமல் விடை தேடும்
நாட்டியகாரியின் மனசாட்சி.

Sunday, July 29, 2007

செய்திதாளுக்கும் சரோஜா தேவிக்கும் வித்தியாசம் இல்லை

ஏன்டா உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா? ஏதோ அதுங்கதான் தப்பு செஞ்சுதுங்கன்னா? அத போட்டோ போட்டு காட்சிகளுக்கு விளக்கும் கொடுத்து இப்படியா டா எழுதுவீங்க?

"இளம் ஜோடி கேபினுக்குள் சிரித்தபடி அமர்கிறார்கள், பக்கத்து கேபினில் உள்ளவர்கள் தங்களை கவனிக்கிறார்களா என்று பார்கிறார்கள், பின் அந்த மாணவர் மாணவியை லேசாக தொடுகிறார். அவர் சிணுங்குகிறார் பிறகு சம்மதம் தெரிவிக்கிறார், முடிவில் இருக கட்டி பிடித்து கொள்கிறார்கள்.................................................................................... "

மேலும் உள்ள மிச்ச காட்சிகள் இங்கு சென்சார் செய்ய பட்டு உள்ளது என்று சொல்லி விட்டு அவர்களின் அடுத்த அடுத்த படத்தை போட்டு பிசரிப்பது தான் பத்திரிக்கைதர்மமா?"


வீனாக அந்த செய்திதாள் பெயரை கொடுத்து அவர்களுக்கு விளம்பரம் தர விருப்பம் இல்லை.

இதை எல்லாம் தடுக்க சட்டம் இருக்கிறதா? இல்லையா?

Thursday, July 19, 2007

தொட்டில் கைதி------no குசும்பு

இதை பல நாட்களாக கவனித்து வந்தாலும் இன்றைக்கு தான் கோபப்படும் படி அதை பார்க்க நேர்ந்தது.

அப்படி என்ன பார்த்தாய் என்கிறீர்களா, குழந்தையை வைத்து தள்ளி போகும் தள்ளு வண்டி, ஒரு 1 வயது குழந்தை அழகா, கொழு கொழுன்னு இருந்துச்சு. பார்க்கவே ஆசையா இருந்துச்சு தள்ளிக்கிட்டு போய் கிட்டு இருந்தவன் பெடஸ்ட்ரீயன் கிராஸ்யை கவனிக்காமல் இறங்கினப்ப டப்புன்னு வண்டி
குப்புற விழுந்துட்டு, விழுந்ததுல குழந்தைக்கு அடி பட்டுச்சா இல்லையான்னு தெரியவில்லை வண்டியை தூக்கி நிமிர்த்தி விட்டு அப்படியே அந்த குழந்தையை அதிலேயே வைத்து ரெண்டு பேரும் சண்டை, அட பாவிங்களா தூக்கி புள்ளைய எங்க அடி பட்டு இருக்குன்னு பார்பீங்களா அத விட்டுட்டு சண்டை.
மிஞ்சி மிஞ்சி போனா அந்த குழந்தை என்ன ஒரு ஐந்து கிலோ இருக்குமா, கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக இருந்தால் கூட பரவாயில்லை, பிறந்து சில மாசமே ஆன குழந்தைகளை அந்த வண்டியில் வச்சு தள்ளிக்கிட்டு
போற அழகை பார்கனுமே, அப்படியே பத்திக்கிட்டு வரும்.

பச்ச புள்ளய அந்த வண்டியில் போட்டு கைகளை ஒரு டேப்பால் அசைக்க முடியாத படி கட்டி, கால்களை கட்டி,பார்க்க ஏசுவை சிலுவையில் அறைந்த மாதிரி. அந்த வண்டிய ரோட்டுலேந்து நடை பாதைக்கும், பின் ஷாப்பிங்
மால்க்கும் அங்க இங்கன்னு போட்டு அலைகழிச்சு, அந்த பிஞ்சு குழந்தைகளை பார்த்தா பாவமா இருக்கு, வண்டியில் போகும் பொழுது குலுங்கினா நமக்கே இப்படி இருக்கே குட்டி பாப்பாங்களுக்கு எப்படி இருக்கும், அத அழகா அம்மா கையில் அரவணைத்து நெஞ்சோடு
சேர்த்து அதுக்கு பத்திரமாதான் இருக்கோம் என்கிற பாதுகாப்பு உணர்வை கொடுத்து தூக்கி கொண்டு போன பெண்கள் எல்லாம் லெமூரியா கண்டத்தோட வழக்கொடிந்து போய் விடும் போல...

Tuesday, June 19, 2007

ஒரு நிமிடம் பீளீஸ் - N0 குசும்பு

கட்சி தலைவன் தலைவிக்காக மண் சோறு, நாக்கை அறுத்துக்கொள்வது,பிறந்தநாளுக்காக காவடி எடுபது...அலகுகுத்துவது அமைச்சரே தீ மிதிப்பது போன்ற நிகழ்சிகள் நம் நாட்டில் இதுவரை நடக்கவில்லையா??? நம் உழைப்பு, நம் பணம் எல்லாத்தையும் நம்மிடம் இருந்து கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை விட நடிகர்கள் மேல்...

நாம் யாரிடம் எதிர் பார்க்கவேண்டுமோ அவர்களை மறந்துவிடுகிறோம்... வேலை செய்து கூலிவாங்கும் நடிகர்கள் நாட்டை காக்க வேண்டும்என்று எதிர் பார்கிறோம்...