Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Saturday, January 30, 2010

ஆசிப் அண்ணாச்சிக்கு பிறந்தநாள்!

அண்ணனுக்கு அண்ணன் வலையுலக கண்ணன் ஆசிப் அண்ணாச்சிக்கு இன்று 50வது பிறந்த நாள். என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்!

Tuesday, January 5, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்!

ஒப்பனை கலைஞர் தன் உதவியாளர்களிடம் டேய் பூ எத்தனை முழம் இருக்கு.

எடுபுடி: அது ஒரு 200 முழம் இருக்குங்கய்யா.

தலைவர்: ம்ம்ம் அந்த பவுடர் டப்பா?

எடுபுடி: அது ஒரு 12 டப்பா இருக்குதுங்க...

தலைவர்: ம்ம்ம் அந்த மை...

எடுபுடி: அது மட்டும் 6 தாங்க இருக்கு.

தலைவர்: ம்ம்ம் சரி சரி ஆள் அனுப்பி வாங்கி வர சொல்லு. அப்படியே ஜிகினா பேப்பர், கொடி தோரணம் எல்லாம் வாங்கி வர சொல்லு.


டேய் குமாரு நீ அந்த பூவை சுத்த ஆரம்பி..

சரிங்கய்யா..

டேய் பாபு நீ அந்த பவுடரை அடிக்க ஆரம்பி...

சரிங்கய்யா...

தலைவர்: டேய் என்னடா பூ சுத்துர அங்க கொஞ்சம் கேப் இருக்கு பாரு நல்லா நெருக்கி ஒழுங்கா சுத்துடா..

டேய் பாபு என்னாடா செய்யுற? நல்லா சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பது போல் அடிக்கனும் சரியா?

பாபு: ஐய்யா இதுவரை 5 கோட் அடிச்சு இருக்கேன் போதுமா பாருங்க.

தலைவர்: பத்தாதுய்யா இன்னும் 4 கோட் அடி..

டேய் வாங்கிட்ட வர சொன்ன ஜிகினா பேப்பரை எல்லாம் வெட்டி பின்னாடி சடையில் கொடி போட கட்டுங்க... அந்த பச்ச ரிப்பனை ஒரு பக்கமும் அந்த சிகப்பு ரிப்பனை அடுத்த பக்கமும் கட்டுங்க.

ம்ம்ம் அந்த மை டப்பாவை இங்க கொடு...இப்படி பல மணி நேரம் டெக்ரேசனுக்கு பிறகு ரெடி செஞ்ச பிறகு நொங்கு நொங்குன்னு நொங்கி...

எடுக்கப்பட்ட படம்


ஹேப்பி பர்த் டே ஆயில்யன்!

டிஸ்கி: பழய பதிவுதான் இது, அதுக்காக கும்முவதில் குறை வெச்சிடாதீங்க மக்கா!

Wednesday, November 25, 2009

கும்மு கும்மி வாழ்த்தலாம் வாங்க!

நிஜப்பெயர்: தென்கரை பாலன், கீழக்குகரை சூலன் இப்படி ஏதோ ஒன்று

புனைப்பெயர்: நாட்டாமை

வயது: இன்றோடு 60 (அனுஜன்யாவுக்கு நான்கு வயது இளையவர்)

தொழில்: நோட்டு அச்சடிப்பது.

உபதொழில்: சஞ்சய்க்கு பொண்ணு தேடுவது.( வயதான காலத்திலும் கஷ்டமான வேலை)

நண்பர்கள்: அண்ணாச்சி என்று அழைப்பவர்கள்

எதிரிகள்: அங்கிள் என்று கூப்பிடுபவர்கள்

பிடித்தது: சின்னபசங்க வெயிலான்,செல்வேந்திரன், அகல்விளக்கு இவர்களோடு ஊர் சுற்றுவது.

பிடிக்காதது: எல்லோரையும் போல ஆதியின் பதிவுகள். (அப்பாடா ஒரு ஆள் காலி)

சமீபத்திய சாதனை: இத்தனை வயதிலும் ரெண்டு வீட்டுக்காரன் என்று பெயர் வாங்கியது. (புதுவீடு கட்டி குடிபோனது)

நீண்டகால சாதனை: தொழிலதிபராக இருப்பது

நீண்டநாள் ஆசை: மும்பை போகும் பொழுது கவிதை சொல்லாமல் இருக்ககூடிய அனுஜன்யாவை பார்க்கனும் என்பது.

சமீபத்திய ஆசை: அழகுகுட்டி குசும்பனை பார்க்கனும் என்பது




மேற்கண்ட படத்தில் இருப்பவர் இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வாங்க வாங்க கும்மலாம்...

Friday, April 17, 2009

மொய் எங்கப்பா?

முதல் காதலியை மறக்கவும் முடியாமல் அவள் வேறு ஒருவன் மனைவி ஆன பிறகு அவளை நினைக்கவும் முடியாமல், அவளின் திருமண நாள் அன்று சாப்பிடவும் பிடிக்காமல் தூங்கவும் முடியாமல், அவளோடு சுற்றிய
இடங்களுக்கு திரும்ப போகும் பொழுது எல்லாம் அவளின் நினைவுகளும் அப்பொழுது பேசிய பேச்சும் நினைவுக்கு வந்து பாடாய் படுத்தும் பொழுது வரும் கண்ணீர் துளிகளும், எல்லோரும் காதலர் தினம் கொண்டாடும் பொழுது நான் மட்டும் இறந்த என் காதலுக்காக அஞ்சலி செலுத்த, கட்டிய
புது மனைவியோடு முதல் திருமணநாள் கொண்டாடுவது என்பது எத்தனை கொடுமை???

இப்படி எந்த கொடுமையும் இல்லாமல் முழுக்க முழுக்க சந்தோசத்தோடு திருமணநாளை கொண்டாடவைத்த இறைவனுக்கும் என் காதல் திருமணத்தில் முடிய பெரிதும் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

திருமணத்தன்று வந்து வாழ்த்திய நம் பதிவர்களுக்கு தெரியும் அன்று எத்தனை சந்தோசமாக இருந்தேன் என்று, அன்று போல் இன்றும் உணர்கிறேன் திரும்பவும் அதேபோல் உங்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்த அனைத்து நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

இருநாட்கள் விடுமுறை அதனால் பதிவுலகம் பக்கம் வரவில்லை பதிவு போட்டு வாழ்த்திய வடகரை வேலன் அண்ணாச்சி ,பரிசல், நாமக்கல் சிபி, புதுகை தென்றல், தூயா, சஞ்சய், புதுகை அப்துல்லா, சென்ஷி, ஜோசப் பால்ராஜ், சங்கமம் ,காயத்ரி (G3), கார்க்கி பின்னூட்டத்தில் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் ,போன் போட்டு வாழ்த்து சொன்ன மகேஷ், அப்துல்லா , G3 ஆகியோருக்கும், தனியாக மெயில் அனுப்பியும், கிரீட்டிங் கார்ட் அனுப்பியும் வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றி நன்றி!

டிஸ்கி: ஆமாம் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதினமாதிரி கல்யாணநாள் அன்னைக்கு எல்லாம் மொய் எழுதமாட்டீங்களா மக்களே? என்ன கொடுமையா இது??? பதிவு எழுதி வாழ்த்து சொன்ன மக்கள் ஒவ்வொருவரும்
ஆளுக்கு 10000ரூபாய் வீதமும், பின்னூட்டத்தில் வாழ்த்து சொன்ன மக்கள் அனைவரும் 5000ரூபாய் வீதமும், போன் போட்டு வாழ்த்து சொன்ன மக்கள் அனைவரும் 2500ரூபாய் வீதமும் இவனுக்கு எதுக்கு இத்தனை வாழ்த்து பதிவு என்று நிச்சயம் டென்சன் ஆகியிருப்பார்கள் சிலர் அவர்களுக்கு சிறப்பு சலுகையாக 1000ரூ மட்டும் அனுப்பினால் போதும் அனைவரும் என்னுடைய வீட்டு அட்ரஸுக்கு அனுப்பிவிடவும்.

Friday, March 27, 2009

இது எதுக்கு? ஏன்?


இது எதுக்கு? பதில் சிலதினங்களில்!

Sunday, March 15, 2009

இந்த வார ஆனந்த விகடன் புத்தகத்தில் ஓசை செல்லாவும், லிவ்விங் ஸ்மைல் வித்யாவும்!

கொஸ்டீன் டீன் கொஸ்டீன் என்ற ஒரு பகுதி ஆனந்தவிகடனில் வரும் அந்த பகுதியில் மட்டும் இன்றி பெரும்பால கேள்வி பதில் பகுதியில் பக்கத்துவீட்டு பையனுக்கும் எனக்கும் ஒரு “இது” அதை கண்டினியு செய்யலாமா வேண்டாமா? செய்வதால் என்ன பிரச்சினை என்று இளம் அம்மா ஒரு கேள்வி கேட்பார்கள்! இதுபோலவே பெரும்பாலும் அந்த கேள்வி பதில் பக்கம் இருக்கும், இன்னைக்கு என்ன மேட்டர் என்று படிக்கலாம் என்று பார்த்தால் இரண்டாவது கேள்வியில்
ஆலோசனை சொல்வபவர் நம்ம ஓசை செல்லா அண்ணாச்சி! இணைய கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியவரும், நிஜ பிளாக் பெல்ட் வாங்கிய தமிழச்சியின் தோழர்.


அட ஓசை செல்லா அண்ணாச்சி கூளிங் கிளாஸ் இல்லாம இருக்கும் முதல் படம் போல:) சரி கேள்விக்கு வருவோம்!

”எனக்கு இனையத்தில் புதிதாக ஒரு வலைப்பூ(பிளாக்) தொடங்கி எழுத எண்ணம். பத்திரிகைகளில் எழுதினால் சன்மானம் கிடைப்பது போல்,இணையத்தில் எழுதுவதால் வருமானம் கிடைக்குமா?”

‘ஓசை' செல்லா
இணைய ஆலோசகர்

“தாராளமாக, ஏராளமாகக் கிடைக்கும். அதற்கு எழுத்தார்வத்தோடு கொஞ்சம் தொழில்நுட்பமும் தெரிந்திருக்கவேண்டும் கணேஷ். இரண்டு வருடம் மாங்கு மாங்கென்று எழுதியதில் எனக்கே ஒரு லட்சரூபாய்க்கு மேல் வந்துள்ளது. ஆனால் முன்பு போல இப்போது வருவாய் இல்லை. தமிழில் விளம்பரம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததே இதற்குக் காரணம். பப்ளிஷர் ஆக இருந்தால் மட்டுமே விளம்பர வாய்ப்புகள் வருகின்றன. இப்போதைக்கு ஆடியோ,வீடியோ கொண்ட வலைப்பூக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
அவற்றுக்கு கூகுள் விளம்பரமும் கிடைக்கும் என்பதால் நல்ல வருமானம் வரும்.
உங்கள் எழுத்து மற்றவர்களை வசீகரிக்கும் என்று நம்பினால் இப்போதே,வலைப்பூவில் எழுதத் தொடங்குங்கள். பிளாக் என்பது நிச்சயம் வளர்ச்சி காட்டும் மீடியா. எனவே இப்பொழுதே எழுதத் தொடங்கி பிரபலமாகிவிட்டால் வருமானம் கிடைக்கும் காலத்தில் அறுவடை செய்யலாம். அதிக ஹிட்டுகள் காட்டும் பிளாக்குகளுக்கு கூகுள் விளம்பரமும் தேடி வரும். வாழ்த்துக்கள் கணேஷ்”

இதுதான் அண்ணாச்சியின் கருத்து!

ஏனுங்க அண்ணாச்சி உங்களிடம் ஒருவர் ஆலோசனை கேட்கும் பொழுது “எனக்கே ஒரு லட்ச ரூபாய்” என்று சொல்லலாமா? இந்த ”எனக்கே” என்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது, எனக்கு ஒரு லட்சரூபாய் வரை கிடைத்தது என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்!

அதெல்லாம் இருக்கட்டும் அண்ணாச்சி, வருமானம் வருவது இருக்கட்டும் போகும் மானத்தை புடிச்சு வைப்பது எப்படி? அதுக்கு பதில் சொல்லுங்க!
(அப்பாலிக்கா எனக்கும் வருமானம் வருவது எப்படின்னு சொல்லி கொடுங்க, டீல் ஓக்கே ஆனது என்றால் கோவை வந்து சஞ்சய் மண்டையில் சூடம் ஏத்துறேன்!)

**********************************############*****************************

62 ஆம் பக்கத்தில் கட்டுப்பாடுக் கோடு சுயசிந்தனைக்குக் கேடு என்ற கட்டுரையில் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் பேட்டி!

“பொதுவாக பத்திரிகைகளில் தங்கள் கருத்துக்களைப்பதிவு செய்ய வாய்ப்பு இல்லாதவர்களே இணையதளங்களில் எழுதுகிறார்கள். இணைய தளங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தெளிவான சட்டங்கள் நம்மிடம் கிடையாது. இருக்கும் ஒரே கேடயமான தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அதிகாரவரம்புகள் குறித்தும் தெளிவான வரையறைகள் கிடையாது. ஆர்குட்டின் பதிவுகளிலோ பிளாக்குகளிலோ கமெண்ட்டுகளைத் தணிக்கை செய்கிற உரிமை சம்பந்தப்பட்டவருக்கே உண்டு. எ னவே அ வரது வலைப்பக்கத்தில் உங்கள கமெண்டுகளுக்கு அவரே பொறுப்பு என்பது சட்டப்படி சரிதான். ஆனால் எல்லாவற்றுக்கும் சட்டத்தை துணைக்கு வைத்துக்கொள்ளமுடியாது. தணிக்கை என்ற பெயரில் கருத்துரிமையைப் பறித்தால் அது பன் முகத்தன்மையை அடக்கி ஒடுக்கிவிடும். ஒரே ஒரு கருத்துதான் அதுவும் குறிப்பிட்ட குழுவினருக்கே சாதகமாக தான் இருக்கவேண்டும் என்ற நிலமை வன்முறையில் விடியும் ஆபத்து இருக்கிறது.

என்கிறார் இனையத்தின் மூலம் பிரபலமான படைப்பாளிகளில் ஒருவர் 'லிவிங் ஸ்மைல்' வித்யா.

******************************
நேற்றே ஜூவியில் வந்த நர்சிம் ஆகிய மூவருக்கும் வாழ்த்துக்கள்!

Sunday, February 22, 2009

ஆஸ்கார் A.R. ரஹ்மான் விருதும் என் வருத்தமும்!!!




முதலில் A.R.ரஹ்மான் அவர்களுக்கு விருது கிடைத்த மகிழ்ச்சி இருந்தாலும் அதில் எனக்கு இருக்கு வருத்தம் அதைப்பற்றி பின்னாடி பார்க்கலாம் இந்த வாரம் நாம் படிக்க போகும் பல பதிவுகள் இப்படி இருக்கும்....



A.R. ரஹ்மானுக்கு உண்மையில் தகுதி இருக்கிறதா? ----> எதையும் ஆழ்ந்து நோக்கும் பதிவர்.



ஆஸ்கார் என்பது ஆங்கில படத்துக்கான விருது அதனால் தமிழில் நல்ல படம் வருமா------> புதிய கண்டுபிடிப்பாளர் ஐன்ஸ்டீன்




ஆஸ்கார் விருது வாங்கியதால் இந்தியா முன்னேறுமா?-----> மன்மோகன் சிங்க்கு அடுத்தபடியாக முன்னேற்றத்தை பற்றி கவலைபடும் உண்மை இந்தியன்




ஆஸ்கார் விருது ஏன் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லை----> இளையராஜா விசிறி




ஆஸ்கார் விருதுவினால் என்ன பயன்?-------> பட்ஜெட் பத்மராஜா.




இந்தியாவின் மானத்தை உலகலவில் ஏலம் போட்ட படத்துக்கு விருது!!! கொண்டாடு தமிழனமே----> புரச்சிகர தமிழ்சிந்தனையாளர்




ஸ்லம் டாக் மில்லினியரில் இருக்கும் இசை அபத்தங்கள்----> சிம்பொனி சிலம்பு




உலக அமைதிக்கு என்ன செய்தார் A.R. ரஹ்மான்?----> சமாதான கழுகு


தமிழன் அல்ல ரஹ்மான்---------> பிறப்பு,சாதியை மட்டுமே ஆராயும் பதிவர்


ஆஸ்கார் விருது வழங்கியதில் திம்மிகளின் அரசியல்---- திம்மி எதிர்பாளர்


A.R. ரஹ்மான் ஒரு ஆங்கிலேயே அடிவருடி-----> முன்போக்கு சிந்தனையாளர் முனுசாமி




***********************%%%%%%%%%%%%%%%%************************


A.R. ரஹ்மான் வாங்கியாச்சு ஆஸ்கார் கொண்டாடி மகிழ்வோம் வாங்க----> சக தோழர்கள்


ரஹ்மானிடம் 10 கேள்விகள்-----> பரிசல்காரன், படகுகாரன், கப்பல்காரன், கத்திகப்பல் காரன், நீர்மூழ்கி கப்பல்காரன்


சரி அவரு விருது வாங்கியதில் உனக்கு என்ன வருத்தம் என்று கேட்கிறீர்களா? முதல் ஆஸ்கார் விருது வாங்கியவர் என்று ஒரு சவுண்ட் மிக்சிங்க்கு விருதுவாங்கிய பூக்குட்டி பெயர் வந்துவிடுமே!. A.R. ரஹ்மான் பெயர் வராதே என்றுதான்:(((


இருந்தாலும் ஒருவிருதுக்கு இரண்டு கிடைச்சுடுச்சு அதுவரை சந்தோசமே.




Friday, October 24, 2008

தலை தீபாவளி கொண்டாடும் வலைப்பதிவர்கள்!!!

இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் வலைப்பதிவர்கள்

1) பாலபாரதி-மலர்வனம் லஷ்மி

2) அய்யனார்-கல்பனா

3) குசும்பன் - மஞ்சு

4) மங்களூர் சிவா- பூங்கொடி

5) இம்சை அரசி - மோகன்

அனைவருக்கும் வாழ்த்து சொல்லலாம் வாங்கோ!

டிஸ்கி : வேறு யாருக்கும் ரகசிய திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கும் தலை தீபாவளி வாழ்த்துக்கள். (சஞ்சய்க்கு அல்ல)

மற்றும் அனைத்து வலையுலக பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். (நன்றி பைத்தியக்காரன்)

Sunday, September 7, 2008

சஞ்சய்க்கு ஒரு அட்வைஸ் + சிவாவுக்கு மொய்

எல்லோருக்கும் பொடியனாக அறிமுகம் ஆகி பொடிப்போட்டு திகட்டாமல் பதிவு எழுதிக்கொண்டு வந்த நீங்கள் இன்று அனைவருக்கு தெரிந்த தொழிலதிபர்.சஞ்சய் ஆனபிறகு பதிவுகள் எல்லாம் செம காட்டு காட்டுகிறது.
விவசாய பதிவாகட்டும் , பட விமர்சனம் ஆகட்டும் எல்லாவற்றிலும் அரசியல் சூடுபறக்கிறது. நல்ல மாற்றம் அப்படியே அரசியலிலும் ஒருகலக்கு கலக்க வாழ்த்துக்கள்.


அடுத்த பிறந்தநாளை கல்யாணம் கட்டிக்கிட்டு மனைவியோடு கொண்டாடவும் வாழ்த்துக்கள்.
(நந்து: ”கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகு கொண்டாட்டமா? சஞ்சய் மண்டையில் முடி முளைக்கவைக்கிறது கூட ஈசி இது அம்புட்டு ஈசி இல்ல குசும்பா”)


அரசியல் பதிவர் பர்த்டே கொண்டாட்டங்கள்.



என்னைமாதிரி ஒருவன் கேக் செஞ்சு இருக்கான் போல சஞ்சய் காந்திக்கு பதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ராகுல் காந்தின்னு போட்டு இருக்கான்.

********************************$$$$$$$$$$$*******************************

மங்களூர் மைனர் குஞ்சு சிவா உன் கல்யாணத்துக்கு என்னால் வரமுடியவில்லை என்ற வருத்தத்தைவிட சஞ்சய், நந்து எல்லாம் உன் கல்யாணத்துக்கு வருகிறார்களே என்ற வருத்தம் தான் அதிகமாக இருக்கிறது.(மொய் பணம் உசார்)

நந்து வருகிறார், ஜீவ்ஸ் வருகிறார் என்ற நம்பிக்கையில் போட்டோகிராப்பர்ஸ் யாரையும் வைக்காமல் இருந்து விடாதே, அவர்கள் எடுத்த போட்டோவுக்கு போஸ்ட் புரோடக்ஸன் செய்யுறேன் செய்யுறேன் என்று செய்வார்கள் அதுக்குள் உன் பொண்ணுக்கு புட்டு சுத்தும் விழாவுக்கு போட்டோ எடுக்க திரும்ப கூப்பிடும் படி ஆகிவிடும்.

உன் கல்யாணத்துக்கு பதிவுலக நண்பர்கள் சார்பாக நாங்கள் வைக்க போகும் மொய்.

தலை பாலபாரதி -----10001 ரூபாய்.

குசும்பன் -ரிப்பீட்டேய்

நந்து- ரிப்பீட்டேய்

ஆயில்யன்- ரிப்பீட்டேய்

ஜீவ்ஸ் -ரிப்பீட்டேய்

புதுகைத்தென்றல்-ரிப்பீட்டேய்

நிஜமாநல்லவன் -ரிப்பீட்டேய்

தமிழ்பிரியன் - ரிப்பீட்டேய்

பூங்கொடி அப்பா- ரிப்பீட்டேய்

சஞ்சய்- மொய்யோடு அபீட்டேய்

Tuesday, August 26, 2008

இந்த வார ஜூவி அட்டை படத்தில் பரிசல்காரன்

இந்த வார ஜூவியின் அட்டை படத்தை அழகாக அலங்கரித்து இருக்கிறார் நம் பரிசல்காரர். இதுபோல் புத்தங்களில் வருவது கொடுக்கும் உற்சாகம் மேலும் சிறப்பாக எழுத வைக்கும். எனவே மேலும் சிறப்பாக எழுதவும்.

TIMES இல் வரவும் வாழ்த்தலாம் வாங்க.




மேலும் விவரம் தெரிய ஜூவியை வாங்கி படியுங்கோ!!!


நன்றி: கலககாரார். ஜோசப் பால்ராஜ் (படத்தை அனுப்பியவர்)

டிஸ்கி: இது எப்படி அட்டை படம் என்று நீங்க கேட்டால் , ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி, நம் பரிசல் பற்றி இருக்கும் பக்கம் நமக்கு அட்டை படமுதல் பக்கம்!

Monday, August 20, 2007

காதலிக்கும் அனைவருக்காகவும் இது....


If you have some conditions in the mind then you will never be able to love, those conditions will become barriers. Because love is beneficial to you .if you can understand that just by loving people you grow in fearlessness, you will Love for the sheer joy of it.

Ordinarily people love only when there conditions are fulfilled. They say you should be like this, only then will I love. A mother says to the child. “I’ll love you only if you behave.” A wife says to the husband. ”You have to be this way, only then can I love you”. Everybody creates conditions; Love disappears.

Love is infinite sky! You cannot force it into narrow space, conditioned, limited. if you bring fresh air into your house and close it off from everywhere-all the window closed all the doors closed-soon it becomes stale. Whenever love happens it is a part of freedom; then soon you bring that fresh air into your house and everything goes stale, dirty.

When you fall in love everything looks beautiful, because in those movement you don’t put conditions. Two persons move near each other unconditionally. Once they have settled, once they have stared talking each other for granted, then conditions are being imposed;” you should be Like this, you should have like that, only then will I love “- as if love is bargain

People come to me, they always say “the others is not loving me “ nobody comes and say “ I am not loving the other. “Love has become Demand;” “The other is not loving me.” Forget about the other! Love is such a beautiful phenomenon, if you love you will enjoy.

By Osho

டிஸ்கி: இன்று என் அக்கா மகள் பிறந்த நாள் அதற்காகதான் இந்த பதிவு. அக்கா மகளுக்கு படிக்க தெரியாது ஏன் என்றால் அவளுக்கு வயது இரண்டு.
இது ஓசோ எழுதியது யாரும் தமிழில் அழகாக மொழிபெயர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Wednesday, July 25, 2007

குங்குமம் வைத்து பிறந்த நாள் கொண்டாடும் ரவி

இன்று பிறந்த நாள் கொண்டாடும் செந்தழல் ரவி இதுபோலவே ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் கொண்டாட வாழ்த்தும் நண்பர்கள் & பாசகார குடும்பம்.

தலைவர் கொரியா போனதில் இருந்து ஒரு மார்கமாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே!!!


நேற்று குங்கும் இல்லை என்று போட்டோ போட்டவர் இன்று அந்த பெண்களுக்கு இவர் பிறந்த நாள் பரிசாக குங்குமம் வைத்துவிட்டு பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார் எப்படி என்று பாருங்கள்...வயிறார சாரி மனமார வாழ்துங்கள்.