Wednesday, December 5, 2007

மாலன் மட்டும்தான் ரெடிமேட் பின்னூட்ட டெம்ளேட் போடுவாறா?

கொஞ்ச நாட்களுக்கு முன் மாலன் அ முதல் ஓள வரை அவர் பதிவுக்கு எப்படி பின்னூட்டம் போடுவது என்று ரெடிமேடாக பின்னூட்ட டெம்ளேட் கொடுத்து இருந்தார், அவர் மட்டும்தான் அப்படி செய்ய முடியுமா?

இதோ இன்றைக்கு தமிழ்மணத்தை ஓப்பன் செய்தாலே நச் என்று ஒரு கதை இச்சென்று ஒரு கதை, வாரா வாரம் தொடர் கதை என்று எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு கதை ஆசிரியர் ஆயிட்டாங்க. கவிதை எழுத மாட்டேங்கிறாங்க நாமலும் எதிர் கவுஜ எழுதலாம் என்று பார்த்தா ம்ம்ம்:(
சரி ரூட்ட மாத்துன்னு தொடர் கதை , சிறு கதை எழுதுவர்களுக்கு எப்படி பின்னூட்டம் போடலாம் என்றுதான் இந்த பதிவு.

பார்த்தீங்கன்னா பல பேர் கதையை எல்லாம் படிக்க நேரம் இல்லை அப்புறம் எப்படி பின்னூட்டம் போடுவது என்று போடுவதே இல்லை, அப்படி செய்தால் கதை எழுதும் ஆசிரியர் மனம் என்ன பாடு படும். இதோ சில ரெடிமேட் டெம்ளேட்ஸ்

சிறு கதைக்கு என்றால்

1) எதிர் பாராத முடிவு:) அருமை

2) நல்ல திரும்பம்:) எதிர் பார்கவே இல்லை.

3) சின்ன கதையாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

4) //--------------------------------// இந்த வரி மிக அருமை ( ------குள் எதை வேண்டும் என்றாலும் காப்பி பேஸ்ட் செஞ்சுக்குங்க, ஆனால் முடிந்தது or முற்றும் என்ற வரியை காப்பி பேஸ்ட் செஞ்சி அருமை என்று சொல்லிடாதீங்க அடி விழும்).

5) சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

6) ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!

போட்டிக்கான் கதையாக இருந்தால் வேலை மிக சுலபம்.

1) வாழ்த்துக்கள்

2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.

4) கலக்கல் கதை வெற்றி நிச்சயம்.

5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!

6):))) அருமை

தொடர் கதைக்கு என்றால்

1) ரொம்ப அருமை! மிக இயல்பாக இருக்கிறது!

2) அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங் !!! ( எத்தனை பாகம் எழுதினாலும் இவர் படிக்க போவது இல்லை என்பது வேறு விசயம்)

3) வாரம் ஒரு முறைதானா? :(((( [ வாரம் ஒரு முறைதானே!!! என்று போட்டுவிட கூடாது கவனம் தேவை]

4) ஹீரோ டயலாக சூப்பர் , ஹீரோயின் டயலாக் சூப்பர் [ நன்றி அபி அப்பா]

5) நல்ல எழுத்து நடை!

6) கடைசி வரியில் அடுத்த பாகத்துக்கான் எதிர்பார்பை தூண்டி விட்டு விடுகிறீர்கள்!

7) சீக்கிரம் தொடருங்கள்!!! [ நிஜ கருத்து சீக்கிரம் முடியுங்கள் ]

8)//-------------------------------// நான் ரசித்த வரிகள்

9) கதை போல் இல்லை சொந்த அனுபவமோ!!!

10) தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர் கதை போல இருக்கு.

11) அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதவும்!!! [ ரொம்ப பெருசா எழுதி இருக்க சின்னதா எழுதுய்யான்னு அர்த்தம்]

12) தொடரும் என்ற வரிக்கு முதல் வரியை காப்பி செய்து, என்ன இப்படி முடித்து விட்டிர்கள் சீக்கிரம் தொடருங்கள்.

13) முடிவை அறிய ஆவலாக உள்ளேன் தனிமடலிலாவது சொல்லவும்!!!

14) முந்தைய பாகங்களை தேடி தேடி படித்தேன் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது உங்கள் தொடர். [ முதல் பாகத்துக்கு இந்த பின்னூட்டம் சரி வராது]

15) மிகவும் விறு விறுப்பாக இருக்கிறது.

16) யாராவது அருமை என்று பின்னூட்டத்தில் சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)

35 comments:

said...

//யாராவது அருமை என்று சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)/
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்

said...

அடப் பாவி அங்கிள்...இனி யாருக்கு பின்னூட்டம் போட்டாலும் இந்த பதிவுல இருந்து காப்பி பேஸ்ட் பண்ண மாதிரியே ஒரு ஃபீல் இருக்குமே.. நல்லா இருங்க ;(

said...

//தொடரும் என்ற வரிக்கு முதல் வரியை காப்பி செய்து, என்ன இப்படி முடித்து விட்டிர்கள் சீக்கிரம் தொடருங்கள்.//

//
//
//

என்ன இப்படி முடித்து விட்டிர்கள் சீக்கிரம் தொடருங்கள்.

இப்படித்தானே...?
:))))

said...

மீ த பர்ஸ்ட் !


-பின்ன யாராவது மாட்டமாட்டங்களான்னுத்தானே உக்காந்திருக்கேன் :))

said...

சூப்பருங்க..... சிரிச்சத பார்த்து என்ன ஏதுன்னு பக்கதில இருக்கறவங்க வந்து எட்டி பார்கற அளவு போயிடுச்சு...

said...

கதை எழுதரவங்கள்ளாம் கொலைவெறியோட இருக்காங்க மாமா. ஜாக்ரதையா இருங்க

said...

//ரிப்பீட்டேய்//

ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்

Anonymous said...

//யாராவது அருமை என்று சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)/
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்//

ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்

said...

மிகவும் விறு விறுப்பாக இருக்கிறது.

said...

ஆஹா.. அருமை. மிகவும் உபயோகமான பதிவு :)))

said...

அடப் பாவி அங்கிள்...இனி யாருக்கு பின்னூட்டம் போட்டாலும் இந்த பதிவுல இருந்து காப்பி பேஸ்ட் பண்ண மாதிரியே ஒரு ஃபீல் இருக்குமே.. நல்லா இருங்க ;(

ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்

said...

soope rpost kusumban soopera panreenga valthukal (idhaiyum template la add pannniratheenga )

unagali padhi saga padhvrtta pesitrundhane u r doin great

said...

ஆயில்யன் said...
//யாராவது அருமை என்று சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)/
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்////

அவ்வ்வ் ஆப்பு எனக்கேவா?

************************
பொடியன்~ said...
அடப் பாவி அங்கிள்...இனி யாருக்கு பின்னூட்டம் போட்டாலும் இந்த பதிவுல இருந்து காப்பி பேஸ்ட் பண்ண மாதிரியே ஒரு ஃபீல் இருக்குமே.. நல்லா இருங்க ;(//


ஹி ஹி :))

**********************

said...

ஆயில்யன் said...
///என்ன இப்படி முடித்து விட்டிர்கள் சீக்கிரம் தொடருங்கள்.

இப்படித்தானே...?
:))))///

கதைக்கு மட்டும் தான்:)))

****************************

ஆயில்யன் said...
மீ த பர்ஸ்ட் !


-பின்ன யாராவது மாட்டமாட்டங்களான்னுத்தானே உக்காந்திருக்கேன் :))////

அம்புட்டு வேலையா? ஓக்கே ஓக்கே:))))

*****************************

மதுரையம்பதி said...
சூப்பருங்க..... சிரிச்சத பார்த்து என்ன ஏதுன்னு பக்கதில இருக்கறவங்க வந்து எட்டி பார்கற அளவு போயிடுச்சு...///

நன்றிங்க:))

*************************

said...

நிலா said...
கதை எழுதரவங்கள்ளாம் கொலைவெறியோட இருக்காங்க மாமா. ஜாக்ரதையா இருங்க///

அவ்வ்வ்:(((((

************************

உங்கள் நண்பன்(சரா) said...
//ரிப்பீட்டேய்//

ரிப்பீட்டேய்///

நல்லா இருங்க!!!

***************************
ஜெகதீசன் said...
மிகவும் விறு விறுப்பாக இருக்கிறது.///

ரொம்ப நன்றிங்கண்ணா:(((( ஆப்பை எனக்கு திருப்பி வைப்பது என்று முடிவெடுத்தபின் என்ன செய்வது?

*******************************

said...

உங்கள் பதிவில் உள்ள வரிகள் இல்லாது வேறு எப்படி பின்னூட்டம் போடுவது என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் - தனி மடலிலாவது சொல்லவும்.

said...

குசும்பன் மட்டும் தான் ரெடிமேட் டெம்ளேட் போடுவாறா, நாங்களும் போடறோம்யா டெம்ப்பிளேட்... வெயிட்டீஸ்....

said...

பின்னிட்டீங்க

கலக்கீட்டிங்க

சான்ஸே இல்ல..

எப்படி உங்களாக மட்டும் இப்படி எல்லாம்

உங்கள அடிச்சுக்கவே முடியாது

அப்படியே உருகிட்டேன்

இது எல்லாம் என் வரிகள்....

said...

///G3 said...
ஆஹா.. அருமை. மிகவும் உபயோகமான பதிவு :)))///

நன்றி:))

****************************
வெங்கட்ராமன் said...
///
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்///

நல்லா இருங்க:(((

*************************

கார்த்திக் பிரபு said...
soope rpost kusumban soopera panreenga valthukal (idhaiyum template la add pannniratheenga )///

நன்றிங்க கார்திக்

unagali padhi saga padhvrtta pesitrundhane u r doin great///

ரொம்ப மகிழ்ச்சி!! ஆனா என்ன வெச்சு காமெடி கீமெடி பன்னலீயே!!!

***************************

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
உங்கள் பதிவில் உள்ள வரிகள் இல்லாது வேறு எப்படி பின்னூட்டம் போடுவது என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் - தனி மடலிலாவது சொல்லவும்.///

ஏன் அப்படி இதையே யூஸ் செஞ்சுக்கலாமே!!! என்ன பிரச்சினை!!

***********************

Baby Pavan said...
குசும்பன் மட்டும் தான் ரெடிமேட் டெம்ளேட் போடுவாறா, நாங்களும் போடறோம்யா டெம்ப்பிளேட்... வெயிட்டீஸ்...///

நல்லா கிளப்புறீங்க பீதிய...
போடுங்க போடுங்க!!!
******************************

நாகை சிவா said...
பின்னிட்டீங்க

கலக்கீட்டிங்க

சான்ஸே இல்ல..

எப்படி உங்களாக மட்டும் இப்படி எல்லாம்

உங்கள அடிச்சுக்கவே முடியாது

அப்படியே உருகிட்டேன்

இது எல்லாம் என் வரிகள்....////

சூப்பர் புலி !

said...

அற்புதமான பதிவு

வரிக்கு வரி உடன்படுகிறேன்

நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க

இதற்கு ---வாதிகள் என்ன பதில் சொல்கிறார்கள் பார்க்கலாம்

சரியான சூடு கொடுத்தீங்க

இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றன..

நினைவில் இருந்து எழுதுகிறேன், அந்த காலத்தில முகமூடி பதிவுல இப்படியெல்லாம் டெம்ப்ளேட் போட்டு விளையாடினோம்..

said...

// ஆயில்யன் said...

//யாராவது அருமை என்று சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)/
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய//

ரிப்பீடேய்ய்ய்ய்ய்....

said...

ஒரு வார்த்தை டெம்ப்ளேட்
* * * * * *
சபாஷ்

சூப்பர்

எக்ஸலண்ட்

மார்வலஸ்

வண்டர்ஃபுல்

வாவ்!!

* * * * *
இரு வார்த்தை டெம்ப்ளேட்

வாவ்!! சபாஷ்

வாவ்!! சூப்பர்

வாவ்!! எக்ஸலண்ட்

வாவ்!! மார்வலஸ்

வாவ்!! வண்டர்ஃபுல்
* * * * * * *
மூன்று வார்த்தை டெம்ப்ளேட்

வாவ்!! சபாஷ் கலக்கல்

வாவ்!! சூப்பர் கலக்கல்

வாவ்!! எக்ஸலண்ட் கலக்கல்

வாவ்!! மார்வலஸ் கலக்கல்

வாவ்!! வண்டர்ஃபுல் கலக்கல்

இங்க ரெண்டாவது வார்த்தையும் மூன்றாவது வார்த்தையும் மாற்றி போட்டால் இன்னும் ஒரு 5 பின்னூட்டம் ரெடி

(இது எல்லாம் என் வரிகள்....)

said...

ஹ ஹ ஹா!! :-D

///
4) //--------------------------------// இந்த வரி மிக அருமை ( ------குள் எதை வேண்டும் என்றாலும் காப்பி பேஸ்ட் செஞ்சுக்குங்க, ஆனால் முடிந்தது or முற்றும் என்ற வரியை காப்பி பேஸ்ட் செஞ்சி அருமை என்று சொல்லிடாதீங்க அடி விழும்)./////

நான் மிகவும் ரசித்த வரிகள்!! :-)

said...

////--------------------------------// இந்த வரி மிக அருமை ( ------குள் எதை வேண்டும் என்றாலும் காப்பி பேஸ்ட் செஞ்சுக்குங்க, ஆனால் முடிந்தது or முற்றும் என்ற வரியை காப்பி பேஸ்ட் செஞ்சி அருமை என்று சொல்லிடாதீங்க அடி விழும்).//

இந்த வரி மிக அருமை ;)

said...

\\11) அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதவும்!!! [ ரொம்ப பெருசா எழுதி இருக்க சின்னதா எழுதுய்யான்னு அர்த்தம்]\\

பதிவிற்கு வரும் பின்னூட்டங்களின் உள் அர்த்ததை உணர வைச்சுட்டீங்க குசும்பரே!!

மிகவும் ரசித்து , சிரித்தேன் இந்த பதிவினை படித்து! சபாஷ்!!
[ சபாஷ் என்ற வார்த்தை எந்த பின்னூட்ட உதாரணத்திற்க்கும் நீங்க சொல்லலீன்னு நினைக்கிறேன்]

said...

எங்கவோய் என் கமெண்ட் இன்னும் வரலை!!

said...

:))

இப்படி ஒரு ஸ்மைலி மட்டும் போடறத விட்டுட்டீங்களே மாமா

said...

குசும்பன்,

நீங்க என்ன தான் டெம்ளேட் போட்டாலும் அதை வச்சு ஒரு ஆம்லேட் போட முடியுமா...? :-))

அதே போல உங்க கிட்டே ஆப்பு செய்ய சொல்லி உங்களுக்கே மக்கள் திருப்பி அடிக்கிறத தடுக்க முடியுமா?

(கைய சுத்திகிட்டு "லொள்ளு சபா அல்வா மனோகர்" போல இதை படிக்கவும்)

said...

பினாத்தல் சுரேஷ் said...
அற்புதமான பதிவு///

நன்றி பினாத்தல் சுரேஷ்:))

****************************
ரசிகன் said...
// ஆயில்யன் said...

ரிப்பீடேய்ய்ய்ய்ய்....////

அவ்வ்வ்:((((
************************
மங்களூர் சிவா said...
ஒரு வார்த்தை டெம்ப்ளேட்///

உங்கள் எல்லா டெம்ளேட்டும் அருமை நன்றி:)))

**********************

CVR said...
ஹ ஹ ஹா!! :-D////

நன்றி:)))

*************************

வெட்டிப்பயல் said...
//இந்த வரி மிக அருமை ;)//

வாங்க வெட்டி நன்றி!!

**************************
Divya said...
///பதிவிற்கு வரும் பின்னூட்டங்களின் உள் அர்த்ததை உணர வைச்சுட்டீங்க குசும்பரே!!

மிகவும் ரசித்து , சிரித்தேன் இந்த பதிவினை படித்து! சபாஷ்!!
[ சபாஷ் என்ற வார்த்தை எந்த பின்னூட்ட உதாரணத்திற்க்கும் நீங்க சொல்லலீன்னு நினைக்கிறேன்]///

இல்லை இல்லை சொல்லவில்லை, மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு!!!

*************************

மங்களூர் சிவா said...
எங்கவோய் என் கமெண்ட் இன்னும் வரலை!!///

நேற்று இங்கு எங்களுக்கு விடுமுறைங்க ஆபிஸில்தான் நெட் கனெக்சன் இருக்கு வீட்டில் இல்லை:)) தாமதத்திற்கு மன்னிக்கவும்:))
*******************************

நிலா said...
:))

இப்படி ஒரு ஸ்மைலி மட்டும் போடறத விட்டுட்டீங்களே மாமா///

அது கதைக்குமட்டும் என்று பொருந்தாதே எல்லாத்துக்கு அப்படி போட்டு விடலாம்:)))

*****************************

said...

வவ்வால் said...
குசும்பன்,

நீங்க என்ன தான் டெம்ளேட் போட்டாலும் அதை வச்சு ஒரு ஆம்லேட் போட முடியுமா...? :-))

அதே போல உங்க கிட்டே ஆப்பு செய்ய சொல்லி உங்களுக்கே மக்கள் திருப்பி அடிக்கிறத தடுக்க முடியுமா?

)////

நண்பர் வவ்வால் அவர்களே முட்டை வாங்கினாதான் ஆம்லேட் போட முடியும் என்று சொன்னதை நம்பி பரிட்சை பேப்பரில் முட்டை வாங்கி இந்தாம்மா ஆம்லேட் போடு என்று சொல்லி அம்மா என் முதுகில் தோசை சுட்டாங்கள்:)) அதனால் ஆம்லேட் அலர்ஜி:))

//மக்கள் திருப்பி அடிக்கிறத தடுக்க முடியுமா? //

ஆமாங்க ரொம்ப அடிக்கிறாங்க எம்புட்டு நாள்தான் வலிக்காதது போல் நடிப்பது:(((

////(கைய சுத்திகிட்டு "லொள்ளு சபா அல்வா மனோகர்" போல இதை படிக்கவும்)///

கை சுத்திக்கிச்சு எடுக்க முடியவில்லை! மருத்துவ செலவு ரூ 10,000 அனுப்பி வைக்கவும்:)))

said...

அடங்க மாட்டேங்கறீங்களே நீங்க...

நீங்க சொன்ன எல்லா பாயிண்ட்டும் சூப்பர். அந்த 18-வது பாயிண்ட் பிரமதம் :-)

said...

குசும்பன்,
பெயருக்கு ஏற்ற பதிவு. :-))
வாசிச்சு சிரிப்பை அடக்கமுடியவில்லை.

said...

//பரிட்சை பேப்பரில் முட்டை வாங்கி இந்தாம்மா ஆம்லேட் போடு என்று சொல்லி அம்மா என் முதுகில் தோசை சுட்டாங்கள்:)) //
அது முட்டை தோசையா? :-))

//கை சுத்திக்கிச்சு எடுக்க முடியவில்லை! மருத்துவ செலவு ரூ 10,000 அனுப்பி வைக்கவும்:)))//

மருத்துவ செலவை மருத்துவர் ராம தாசுக்கிட்டே கொடுத்துட்டேன் அவ்ரே வந்து கையை கோடாரி வச்சு வெட்டி சரி பண்ணிடுவார் கவலைப்பட வேணாம் :-))

said...

Sridhar Venkat said...
அடங்க மாட்டேங்கறீங்களே நீங்க...

நீங்க சொன்ன எல்லா பாயிண்ட்டும் சூப்பர். அந்த 18-வது பாயிண்ட் பிரமதம் :-)///

அண்ணே ஏன் உங்களுக்கு என் மேல கொல வெறி 18 வது பாயிண்ட் பிரமாதமா? அவ்வ்வ்வ் நல்லா இருங்க:(((

said...

கண்டிப்பாக பயன்படுத்தி கொள்கிறேன்!
சமீபகாலமாக கதையாசிரியர்கள் தொல்லை தாங்க முடியல!

(நாங்ககூட நாளைக்கு ஒரு கதை எழுதுறேன். உங்க கருத்தை சொல்லிட்டு போங்க)