Friday, November 14, 2008

வாரணம் பூஜ்ஜியம்

அழகான தமிழ் பெயர் டைட்டிலோடு ஆரம்பிக்கிறது பட டைட்டில் மட்டும் தான் தமிழ் ,நடிகர் பெயர் முதல் ஆங்கிலத்தில் தான் வருகிறது இது போதாதுக்கு படத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமே பேசிக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்போடு சென்ற எனக்கு பெரும் ஏமாற்றம்தான்.


சரி கதைக்கு என்ன...

ஹீரோவுக்கு டிரெயினில் ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோயின் மேலே லவ்வுன்னா லவ்வு கண்ணுமண்ணு தெரியாத லவ்வு, உடனே லவ்வை சொல்லுகிறார் ஹீரோயினும் இது சும்மா அட்ராக்சன்தான் இது லவ்வு இல்ல முதல்ல நாம பழகனும் புரிஞ்சுக்கனும் எங்க அப்பாவுக்கு உன்னை பிடிக்கனும் உங்க வீட்டில் என்னை பிடிக்கனும் என்று எல்லாம் டயலாக், பின் டக்குன்னு ஒரே ஒரு பாதி பாட்டில் வீடு கட்டும் அளவுக்கு பணக்காரர் ஆகிவிடுகிறார் சூர்யா. பின்மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற காதலியை தேடி அங்கு போகிறார், அங்கு இருவருக்கும் காதல் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது.

இப்படியே சொல்லி இருந்தால் நாம் காலம் காலமாக பார்க்கும் விஜய் படம் ஆகி இருக்கும் இது கெளதம் மேனன் படம் ஆச்சே அப்படியே நடுவில் அப்பா சூர்யா காதல் கதையும் வருகிறது அப்ப இது வித்தியாசமான படம் தானே!

அதன்பின் அமெரிக்காவில் ஒரு டிவிஸ்ட் அதன் பிறகு கதை எங்கேங்கோ பிரேக் இல்லாத தண்ணி லாரி மாதிரி போகிறது அப்படி போகும் பொழுது பார்க்கும் நம் மீதே ஏறி போவதுதான் கொடுமை!

சில சில இடங்களில் அப்பா சூர்யாவோ அல்லது குட்டி சூர்யாவை போலவோ உங்கள் வாழ்கையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம் அந்த ஜில் அனுபவத்துக்காக மூனு மணிநேரம் எல்லாம் உட்காந்து படத்தை பார்க்க முடியாது.

இயக்குனர் டச்:

1) சிம்ரன் சூர்யாவிடம் சொல்வது: நான் போற இடம் எல்லாம் உங்க அப்பா நான் அழகாக இருப்பதாக் சொல்ல சொல்லியபோது இருந்த கோபம் உங்க அப்பாவை நேரில் பார்த்ததும் அந்த கோவம் போச்சு ஏன்னா உங்க அப்பா ரொம்ப ஹேன்சம் என்று சொல்லும் பொழுது திரையில் ஈஈஈ என்று இளிச்சிக்கிட்டு இருக்கும் சூர்யாவை பார்த்தும் சிரிப்புதான் வந்தது.

2) அமெரிக்காவில் வைத்து சூர்யாவை லவ்வுவதாக சமீரா ரெட்டி சொன்னதும் சூர்யா கொடுக்கும் ரியாக்சன்

3) கேம்புக்கு வரும் ரம்யாவிடம் சூர்யா லவ்வை சொன்னதும் ரம்யா கொடுக்கும் ரியாக்சன். (லவ்வுவதாக சொன்னபிறகு Sure என்று கேள்வி வேறு விட்டா கோடிஸ்வர் நிகழ்சிமாதிரி காண்பிடண்ட்? என்று எல்லாம் கேள்வி கேட்கும் போல!)

***********************************************************************

நான்: படம் ஆரம்பித்ததுமே அப்பா சூர்யா சிரித்த முகமாகவே சாகிறார்! ஏன்?

சூர்யா: மீதி படம் பாக்க போகும் உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று! நினைச்சு பார்த்து இருப்பார்!

டிஸ்கி: பதிவை வகை படுத்த வில்லை முதலில் படம் ஆர்ட் படமா? பீரியட் படமா? அவார்ட் படமா? ஆக்சன் படமா என்று கெளதம் வகைப்படுத்தட்டும் பின் நான் இது படமான்னு வகைப்படுத்துறேன்.

(படம் இம்புட்டு மொக்கையாக இருந்தாலும் மிகவும் சந்தோசமாகவே படம் பார்த்தேன் அதை பார்த்த நண்பர் எப்படி இப்படி உற்சாகமாக இருக்கீங்க என்றதுக்கு ஆஸ்கார் ரவிசந்திரன் எஸ்கேப் ஆகி அழகிரியை மாட்டிவிட்டாரே அதை நினைச்சு பார்த்தேன் ரொம்ப சந்தோசமாக இருக்கு என்றேன்!)

34 comments:

said...

nice

said...

இதுக்கெல்லாம் விமர்சனம் எழுதின உம்ம நினைச்சா பாவமா இருக்கு...!!

Anonymous said...

//சில சில இடங்களில் அப்பா சூர்யாவோ அல்லது குட்டி சூர்யாவை போலவோ உங்கள் வாழ்கையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம் அந்த ஜில் அனுபவத்துக்காக மூனு மணிநேரம் எல்லாம் உட்காந்து படத்தை பார்க்க முடியாது.//

இதுக்கப்புறம் எங்க பாக்க?

said...

:-(

said...

வேறு வழியில்லை,பார்த்துதான் ஆகனும் என்று நினைக்கிறேன்.பொழுது போகனுமே!!

Anonymous said...

download பண்ணி முடிச்ச பிறகு இப்படி ஒரு கொடுமையா...:(

said...

//வெடிகுண்டு முருகேசன் said...
download பண்ணி முடிச்ச பிறகு இப்படி ஒரு கொடுமையா...://

மின்னல் வேகத்தில் டவுன்லோட் பண்ண ஒரு சைட் சொல்லுங்க முருகேசா.. :)

said...

படம் இழு இழு என ஜவ்வு மாதிரி இழுக்கிறது. எப்படா முடியும் என எண்ண தோன்றுகிறது. தேவையில்லாமல் ஏகப்பட்ட பாடல்கள்.
தேவையில்லாத பல காட்சிகள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

சூர்யாவின் கடுமையான உழைப்புக்கான பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஒரு நல்ல படத்தை கெடுத்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

said...

நீங்க வெச்சிருக்கிற தலைப்பு சூப்பரு!

said...

என்ன ஆனாலும் சரி நாங்க பார்த்துடுவோம்ல ;;))

Anonymous said...

Gentleman said...

//வெடிகுண்டு முருகேசன் said...
download பண்ணி முடிச்ச பிறகு இப்படி ஒரு கொடுமையா...://

மின்னல் வேகத்தில் டவுன்லோட் பண்ண ஒரு சைட் சொல்லுங்க முருகேசா.. :)
//

புரியுது....
வேணாம்....
அழுதுடுவேன்....
:)

said...

அவ்வ்வ். :-((((

said...

ஹம்ம்ம் பார்க்க வேணாணு சொல்றிங்களா?

said...

ஆஸ்கார் ரவிசந்திரன் எஸ்கேப் ஆகி அழகிரியை மாட்டிவிட்டாரே அதை நினைச்சு பார்த்தேன் ரொம்ப சந்தோசமாக இருக்கு என்றேன்!)

இது தான் சூப்பர்

said...

Sure என்று கேள்வி ////


happy

said...

நல்ல குசும்பு

Anonymous said...

//டிஸ்கி: பதிவை வகை படுத்த வில்லை முதலில் படம் ஆர்ட் படமா? பீரியட் படமா? அவார்ட் படமா? ஆக்சன் படமா என்று கெளதம் வகைப்படுத்தட்டும் பின் நான் இது படமான்னு வகைப்படுத்துறேன்//

இது சூர்யா படம். நான் சூர்யா படம் தான் பாத்தேன். ஆமாம். தங்கமணி சூர்யா ரசிகையா?

said...

haahha. ur title is attractive.. and movie review.. kadavule... just an hour before nanum annanum tuppi mudichom. ninga athe vida balama eluthi irukkinga. great sense of humor. :)

said...

எவனையுமே நம்ப முடிலயே.. இப்பிடி மொக்க போட்டுர்றாங்களே..

said...

:)

said...

இது அண்ணாச்சிக்காக போட்ட பதிவில்லையே குசும்பரே ;)

said...

நன்றாக கலாய்திருக்கிறீர்கள்.

சூர்யாவை நம்பிச் சென்று ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
:(((

said...

//அதன்பின் அமெரிக்காவில் ஒரு டிவிஸ்ட் அதன் பிறகு கதை எங்கேங்கோ பிரேக் இல்லாத தண்ணி லாரி மாதிரி போகிறது அப்படி போகும் பொழுது பார்க்கும் நம் மீதே ஏறி போவதுதான் கொடுமை!

//

super comedy

said...

:(:(:(

said...

me the 25th

said...

டைட்டில் சூப்பர்!

said...

//பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமே பேசிக்கிறார்கள். //

அது தேசிய ஒருமைபாட்டிற்க்கு சான்று.
இன்னொன்று டப் செய்யாமல் அப்படியே வெளியிடலாம்

said...

இன்னும் மூணு போட்ட முப்பது போட்ட புண்ணியம் எனக்கு கிடைக்கும்

said...

வாரணம் ஆயிரம் எப்போ ரிலிஸ் ஆச்சு

said...

கந்தசாமி வந்துருச்சா வரலையா?
இது தான் 30

said...

அந்தளவு மோசம் இல்லை நைனா!

Anonymous said...

இப்படி எல்லாம் படம் எடுத்தா பாக்க மாட்டோம்னு நெனப்பா? பாத்துட்டோம்ல.....

said...

வால் பையன் சொன்னமாதிரி ..தேசிய ஒருமைப்பாடு தான் போல மலையாள முறைப்ப்டி கல்யாணம்.. ஹிந்தி பாட்டு.. ஆங்கிலத்தில் பேச்சு..

ஆனா எனக்கும் மறந்தே போச்சு .. அப்பா சாகும்போது எதை பாத்து சிரிச்சாருன்னு காட்டலையா..?

Anonymous said...

hi

This is film only for Commercial

okay.

don't speak.