Monday, August 25, 2008

டா டா பை பை சொல்பவர்களுக்கு:(((((((((

ஒரு படத்தில் கதவை மூடிக்கிட்டு உள்ளே இருக்கும் கவுண்டமணியை வெளியேகொண்டு வர வீட்டு கதவுக்கு அருகில் ஒரு 25 பைசாவை கீழே போடுவாங்க அந்த சத்தத்தில் கதவை திறந்துக்கிட்டு வெளியே வருவார்.(ஏதும் நடிகர் பேரை மாற்றிசொல்லி வரலாற்று பிழையாகி இருந்தால் கொஞ்சம் பொருத்தருள்க:))

திரும்ப பதிவுலகுக்கு வரமாட்டேன் என்று சொல்லிட்டு போகும் சிலரை வீட்டை விட்டு வெளியேவரவைக்க என்ன செய்யவேண்டும் என்று ஒரு கற்பனை...

கோவி.கண்ணன் எழுதமாட்டேன் என்று போனால் வீட்டுக்கு அருகில் இருந்துகட்டிங் செஞ்சா ஷேவிங் இலவசம், கட்டிங் செஞ்சா ஷேவிங் இலவம் என்று குரல் கொடுக்கனும். (குசேலன் படத்தில் வடிவேல் ரயில்வே கேட் முன்பு சொல்வது போல்).

வால்பையன் எழுதமாட்டேன் என்று சொல்லிட்டு போனால் அவர் வீட்டு கதவுக்கு அருகில் இருந்து ”சியர்ஸ்” சொல்லிட்டு கிளாஸை கிளிங் என்று சத்தம் வருவது போல்மோத வேண்டும்.

ஆயில்யன் எழுதமாட்டேன் என்று சொன்னால் அவர் வீட்டுக்கு முன்பு நின்றுக்கொண்டு ரஜினி வாழ்க என்று கூவ வேண்டும்.

லக்கிலுக் எழுதமாட்டேன் என்று சொன்னால் அவர் வீட்டுக்கு அருகில் நின்றுகொண்டு உண்மைதமிழன் எடுத்து இருக்கும் 8 மணி நேர குறும்பட "DVD"யை எடுத்துக்கிட்டுலக்கிய பார்க்க வருகின்றாரா? என்று சவுண்டாக பேசவேண்டும்.

நாமக்கல் சிபி அப்படி சொன்னால் அவர் வீட்டு கதவுக்கு அருகில் இருந்து நயன் தாரா ஷூட்டிங்குக்கு வருகிறார்களா?அப்புறம்நம்ம ஊரு எருமை குட்டையில் குளிக்க போறாங்களா என்று பேசிக்கனும்?

பரிசல்காரன் வீட்டுக்கு முன்பு போய் சார் போஸ்ட் from லதானந் என்று சொல்ல வேண்டும்.

ஜொள்ளுபாண்டி வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு வாவ் என்ன பிகர், என்ன பிகர் அடா அடா என்னா கலர்ன்னு பேசிக்கனும்.

ஜ்வோராம் சுந்தர் என்றால் சரோஜா தேவி வாங்கினா மருதம் இலவசம், மருதம் வாங்கினா சரோஜா தேவி இலவசம் இரண்டும் வாங்கினா காமசூத்ரா இலவசம் என்று கூவனும்.

இளயகவி என்றால் ”தமிழச்சி மீண்டும் தமிழ்மணத்தில்” என்று தலைப்பு செய்தி படிப்பது போல் சொல்லனும்.

மங்களூர் சிவா வீட்டுக்கு முன்பு போய் நின்றுக்கிட்டு ஆர்குட்டை பிளாக் செய்ய போறாங்களா? அல்லது ஜெர்மனிக்கு இலவசமா பேச செல்போன் அறிமுகமா என்று பேசனும்.

அபி அப்பா அப்படி சொன்னால் அவர் வீட்டுக்கு முன்பு எல்லோரும் போய்விடனும் ஆனால் சைலண்டா இருக்கனும்...அவரே கதவை திறந்துக்கிட்டு தானா வந்து யாராவது கூப்பிட மாட்டார்களா என்று பூனை போல எட்டிப்பார்பார் அப்பொழுதும் பேசாமல் இருக்கனும் பின் அவரே இது ஆவுறது இல்லை என்று தானே, ”திரும்ப வந்துட்டேன் திரும்ப வந்துட்டேன் யாரும் அழுவாதீங்க “ என்று கூவிகிட்டே வந்துவிடுவார்.

நந்து & ஜீவ்ஸ் என்றால் எருமை மாட்டு மூக்கு மேல என்ன அழகா ஒரு ஈ உட்காந்து இருக்கு இதை எப்படி? எந்த ஆங்கிளில் போட்டோ எடுப்பது? என்று பேசிக்கனும்!

நான் அப்படி சொல்லிட்டு வீட்டுக்குள் போனால் விவேக் வாஸ்து சொல்லி வாசலை அடைப்பது போல் அடைச்சுவிட தம்பி ரெடியாக இருப்பதால் நான் அப்படி எல்லாம் சொல்லமாட்டேன்.

37 comments:

said...

:-)))...

said...

//விஜய் ஆனந்த் said...

:-)))...//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)

said...

//அவரே கதவை திறந்துக்கிட்டு தானா வந்து யாராவது கூப்பிட மாட்டார்களா என்று பூனை போல எட்டிப்பார்பார் அப்பொழுதும் பேசாமல் இருக்கனும் //

:)))))

said...

//நான் அப்படி சொல்லிட்டு வீட்டுக்குள் போனால் விவேக் வாஸ்து சொல்லி வாசலை அடைப்பது போல் அடைச்சுவிட தம்பி ரெடியாக இருப்பதால் நான் அப்படி எல்லாம் சொல்லமாட்டேன்.//

பாவம்ய்யா தம்பி அவர ஏன் வம்புக்கு இழுக்குறீங்க???

said...

//ஆயில்யன் எழுதமாட்டேன் என்று சொன்னால் அவர் வீட்டுக்கு முன்பு நின்றுக்கொண்டு ரஜினி வாழ்க என்று கூவ வேண்டும்.//


:)))))))

said...

ஹா ஹா ஹா விடைபெறுகிறேன் வாரம் :-))))

said...

அருமை.. அதுவும் அபி அப்பாவுடையது அருமையோ அருமை. ;-)

said...

:)))))))))))

said...

:))))))))

said...

மூணாவதா கமெண்டுன அத்தைய லிஸ்ட்ல விட்டுட்டீங்களே. லிஸ்ட்ல அவங்களயும் சேருங்க

said...

:) எல்லாமே நல்லாருக்கு.. அபி அப்ப்பா சூப்பர்..

said...

நண்பா, ரொம்ப நல்லா இருக்கு. எப்டியோ இந்த‌ வார‌ம் ஓடுச்சுனா ச‌ரி. அடுத்த‌ வார‌த்துக்கு என்ன‌ செய்யிற‌துன்னு இப்ப‌லேருந்து யோசிச்சாத்தான் ச‌ரியா இருக்கும்.

said...

அண்ணா நல்லாருக்கு..!! :))
எப்படில்லாம் யோசிக்கறீங்க?? :))

said...

அருமை.. அதுவும் அபி அப்பாவுடையது அருமையோ அருமை. ;-)

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

:-)))))

said...

;-)) பாகம் 2 வருமா

Anonymous said...

அபி அப்பா அப்படி சொன்னால் அவர் வீட்டுக்கு முன்பு எல்லோரும் போய்விடனும் ஆனால் சைலண்டா இருக்கனும்...அவரே கதவை திறந்துக்கிட்டு தானா வந்து யாராவது கூப்பிட மாட்டார்களா என்று பூனை போல எட்டிப்பார்பார் அப்பொழுதும் பேசாமல் இருக்கனும் பின் அவரே இது ஆவுறது இல்லை என்று தானே, ”திரும்ப வந்துட்டேன் திரும்ப வந்துட்டேன் யாரும் அழுவாதீங்க “ என்று கூவிகிட்டே வந்துவிடுவார் orutharayum vidurathulla polla

said...

:))))))))0
நல்லா இருக்கு ஜூப்பரா... :)

said...

//கோவி.கண்ணன் எழுதமாட்டேன் என்று போனால் வீட்டுக்கு அருகில் இருந்துகட்டிங் செஞ்சா ஷேவிங் இலவசம், கட்டிங் செஞ்சா ஷேவிங் இலவம் என்று குரல் கொடுக்கனும். (குசேலன் படத்தில் வடிவேல் ரயில்வே கேட் முன்பு சொல்வது போல்).//

தெரியாத்தனமா 1000 ரூபாய் கட்டிங் சேவிங் பற்றி எழுதிட்டேன். கும்முறாங்கே........... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//ஜ்வோராம் சுந்தர் என்றால் சரோஜா தேவி வாங்கினா மருதம் இலவசம், மருதம் வாங்கினா சரோஜா தேவி இலவசம் இரண்டும் வாங்கினா காமசூத்ரா இலவசம் என்று கூவனும்.//

அதீதன் நடித்தப்படம் யூட்யூபில் வெளியாகி இருக்கிறது என்று சொன்னாலே போதும் !

said...

ஜூப்பரப்பூ!

said...

//லக்கிலுக் எழுதமாட்டேன் என்று சொன்னால் அவர் வீட்டுக்கு அருகில் நின்றுகொண்டு உண்மைதமிழன் எடுத்து இருக்கும் 8 மணி நேர குறும்பட "DVD"யை எடுத்துக்கிட்டுலக்கிய பார்க்க வருகின்றாரா? என்று சவுண்டாக பேசவேண்டும்.//

பாவம்யா

said...

//
வால்பையன் எழுதமாட்டேன் என்று சொல்லிட்டு போனால் அவர் வீட்டு கதவுக்கு அருகில் இருந்து ”சியர்ஸ்” சொல்லிட்டு கிளாஸை கிளிங் என்று சத்தம் வருவது போல்மோத வேண்டும்.//

நிறுத்தீட்டாரே.. தெரியாதா?

said...

//அபி அப்பா அப்படி சொன்னால் அவர் வீட்டுக்கு முன்பு எல்லோரும் போய்விடனும் ஆனால் சைலண்டா இருக்கனும்...//

கோவி.கண்ணன் தீபாவெங்கட்டுடன் டிபன் சாப்பிட்டாராம் என்று சொல்லுங்க அலறி அடித்து ஓடிவருவார்

said...

நல்லா சிரிச்சேன் நண்பா!

கொஞ்ச நேரத்துல ஆஃபீசிலிருந்து வீட்டுக்கு போகப்போறேன்..

இப்படி சிரிச்சுட்டே வழியனுப்பின உங்களுக்கு நன்றி!

அங்க போயி சீரியஸா இருக்கணும்ல!

said...

:))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))

said...

// நிலா said...

மூணாவதா கமெண்டுன அத்தைய லிஸ்ட்ல விட்டுட்டீங்களே. லிஸ்ட்ல அவங்களயும் சேருங்க//

குட்டிமா ஆசைய வீணாக்கலாமா?

.. காயத்ரி அப்டி சொல்லிட்டு வீட்டுகுள்ள போனா.. யாராவது வெளிய நின்னு ஒரு முழம் குண்டு மல்லி வாங்கினா குவைதுக்கு ஒரு ரிட்டர்ன் டிக்கெட் இலவசம்னு சொல்லனும்.. :)

Anonymous said...

கலக்கறீங்க குசும்பன்.

ஓருத்தரையும் விடறது இல்ல போல...

Part 2 இருக்கா.......


Kathir.

Anonymous said...

:-))))))))))

said...

நன்றி
விஜய் ஆனந்த் ,
ஆயில்யன் ,
காயத்ரி,
கிரி,
மை ஃபிரண்ட்,
ஜொள்ளுப்பாண்டி, (உங்களை இந்த பக்கம் வரவழைக்க என்னவெல்லா செய்யவேண்டி இருக்கு:))
பொன்வண்டு,
நிலா,
முத்துலெச்சுமி,
பால்ராஜ்,
Sri,
இரவு கவி,
கார்த்திக்,
கானா பிரபா,
அனானி,
தமிழ்ப்பிரியன்,
கோவி,
பரிசல்காரர்,
பொடியன்,(சஞ்சய் பேரு பிடிக்கவில்லை)
வடகரை வேலன்

said...

டோண்டு சார் வரமாட்டேன்னு சொன்னா!
நாலு கேள்வியோட வெளியே ஒருத்தர் நிக்கிறார்ன்னு சொன்னா உடனே வந்துருவார்!

தருமி சார் வரமாட்டேன்னு சொன்னா!
"யங்கேயோ பார்த்த மய்க்கம்" ன்னு யாராவது அவர் வீட்டு முன்னாடி நின்னு பாடினா ஒரு கட்டையோடு வெளியே வருவார்

said...

குசும்பரே ஏன் இந்த கொலவெறி...?? நான் பாட்டுக்கு செவனேன்னு தான் போய்கிட்டு இருக்கேன்???

said...

//வால்பையன் எழுதமாட்டேன் என்று சொல்லிட்டு போனால் அவர் வீட்டு கதவுக்கு அருகில் இருந்து ”சியர்ஸ்” சொல்லிட்டு கிளாஸை கிளிங் என்று சத்தம் வருவது போல்மோத வேண்டும்.//

யோசித்து பார்த்தால் தவறாக தெரிகிறது,
அப்படி சொன்னால் எழுத எப்படி வருவேன்.
குடிக்க தான் போவேன்.
வேறு ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள்
ஒரு பெக்கு போட்டுட்டு வர்றேன்

said...

dondu(#11168674346665545885) has left a new comment on your post "டா டா பை பை சொல்பவர்களுக்கு:(((((((((":

//டோண்டு சார் வரமாட்டேன்னு சொன்னா!//
என்ன வால்பையன் குழந்தை மாதிரி இருக்கீங்க. டோண்டு சார் போக மாட்டேன்னுதானே இருக்காருன்னு ஒரு குறிப்பிட்ட பேர்வழி, அவனது அள்ளக்கைகளின் பிரலாபம்? அதுக்கு வழியை சொல்லாம, வரமாட்டாருன்னான்னு பேசிக்கிட்டிருக்கிறீங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வெண்பூ

// குசும்பன் said...
அனைவருக்கும் நன்றி
அப்படியே வெண்பூவை தேடி கண்டுபிடித்து கொடுங்களேன்:)
//

குசும்பா, லக்கி,

ரெண்டு பேருக்கும் நன்றி. என் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாட நான் நான்கு நாட்களாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றிருந்ததால் என்னால் உங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை (நான்கு நாட்களும் கம்ப்யூட்டரை தொடுவதில்லை என்று முடிவு செய்திருந்ததால்).

உட‌னே ச‌ஞ்ச‌யை தொட‌ர்பு கொள்கிறேன்.

said...

தவறுதலாக சில பின்னூட்டங்கள் ரிஜெக்ட் ஆகிவிட்டது. அதை Gmail மூலம் காப்பி பேஸ்ட் செய்து இருக்கேன்,வேறு யாருடையதும் ரிஜெக்ட் ஆகி இருந்தால் மன்னிக்கவும்.

said...

நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்துகிறேன். :-))