Sunday, September 2, 2007

அய்யனாருக்கு என் கண்டனம்...

அய்யனார் நீங்கள் எழுதும் கவிதை புரியாது என்பது தெரிந்தும் அதை படித்து , அதை புரிந்துகொள்ள நான் எடுத்த முயற்சிகள் ஏராளம்.
நீங்கள் எதிர் வினை என்று எழுதினால் நான் சம வினை என்று எழுதி அதுக்கு விளக்கம் கொடுத்தேன். இப்படி நான் பல பதிவுகள் உங்களுக்காக போட்டு இருக்கிறேன் ,அப்படி இருக்கும் பொழுது.. நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள்?????

நான் மூன்று நாள் லீவில் இருக்கும் பொழுது, வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-
என்று வரிசையாக 5 பதிவுகள் போட்டால் நான் எப்படி ஓவர் டைம் செய்துதான் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கும். இப்படி எனக்கு அதிக வேலை கொடுக்கும் உங்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

ஏன் இப்படி செஞ்சீங்க விளக்கம் கொடுங்க!!!


டிஸ்கி: எங்களுக்குள் ஏதும் பிரச்சினை என்று நினைச்சீங்களா மக்களே!!! அப்படி ஏதும் வராது. ஏன்னா நான் அய்யனாரை எப்படி வேண்டுமானாலும் கலாய்ச்சிக்கலாம் என்று அவருடன் *ஒரு வருட அக்ரிமெண்ட் போட்டு இருக்கிறேன்.

நான் உங்க கூட *அக்ரிமெண்ட் போட ரெடி!!! நீங்க உங்க பெயரையும் கெடுக்க சாரி சாரி கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் மெயில் அனுப்பவும்.

* நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

இப்படிக்கு
அக்ரிமெண்ட் போட்டு கலாய்போர் சங்கம்
துபாய்

2 comments:

said...

குசும்பன்..அது இருக்கட்டும்..நான் ஒரு படம் அனுப்பினேனே..என்ன ஆச்சி..

மக்களே..இந்த குசும்பனை நம்ப வேண்டாம...

இவரிடம் நியாயம் இல்லை..தர்மம் இல்லை..

சொன்ன சொல்லைக் காப்பாத்துறது இல்லை...

குசும்பனுக்கு என் கண்டனங்கள்..

said...

TBCD said...

ஐய்யா ராசா இருய்யா,,, போடுகிறேன்யா. அதுக்குள்ள ஏன் இந்த கொலைவெறி????