Wednesday, June 22, 2011

போட்டோ டூன்ஸ் 22-6-2011



Monday, June 20, 2011

போட்டோ டூன்ஸ் 20-6-2011







Thursday, May 5, 2011

US ஸ்டைலில் இந்தியா அட்டாக் கார்ட்டூன்

Wednesday, May 4, 2011

படம் எடுக்கப்போகும் பதிப்பகம்.

கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் பா.ராகவன் உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி ஒரு லேப்டாப்பை வெச்சிக்கிட்டு இருக்கார்...அது ஹோம்மினிஸ்டர் லேட்டஸ்டா அப்ரூவ் செஞ்ச லேப்டாப். சைஸ் ரொம்ப சின்னது என்பதால் அவரோ உள்ளங்கையிலேயே அடங்கிவிடுகிறது.அதுல ஹெட்போன் மாட்டிக்கிட்டு ஆன்லைனில் காத்திருக்கார்.கே.வி.ஆர் ஆன்லைனில் வந்ததும் அவரிடம் ஹாய் சொல்றாரு...

கே.வி.ஆர் உனக்குள் பல திறமை இருக்கு...உன்னால படம் எடுக்கமுடியும்...நீ என்ன செய்யிற....ஓட்டகம் மேய்பது எப்படி? என்ற படத்தை டைரக்ட் செய்யிற...
உனக்கு 90 டேஸ் தான் டைம்...அதுக்குள்ள முடிச்சிக்கொடு...ப்ரீவியூ பார்த்துட்டு ரிலீஸ் செஞ்சிடலாம்....

அடுத்து துபாயில் பினாத்தலார் லைனில் வருகிறார்...திரும்பவும் அதே பிட் உனக்குள் பல திறமை இருக்கு...உன்னால படம் எடுக்கமுடியும் இன்னும் இரண்டு வருசத்துல தமிழ்மாநாடு வருது...அந்த நேரத்தில் சிந்துனமணி வரலாற்றை படமா எடுக்குறோம் நீதான் டைரக்ட் செய்யிற...சீக்கிரம் டைரக்ட் செஞ்சி அனுப்பு....

பினாத்தல்: யாரை ஹீரோவா போடுவதுன்னு முதலில் ஒரு பிளாஸ் பைல் செஞ்சி அனுப்புறேன்...அதுல வரும் கோட் நம்பரை எனக்கு அனுப்பினா நாம முடிவு செஞ்சி படத்தை ஆரம்பிச்சிடலாம்...

பா.ரா:சரி சரி ஆனா பழக்கதோசத்துல கதை எப்படியிருக்கும் என்று பிளாஸ் பைல் செஞ்சி ஓப்பனிங் ஷோ வசூலை கெடுத்துடாத...

அடுத்து ஆன்லைனில் அதிஷா வருகிறார்....அதிஷா ஹவ் டூ பிகம் ரிச் மேன் இன் 30 டேஸ் என்று ஒரு படம் இருக்கு...

அதிஷா: சார் அது வேல்ட் அரவுண்ட் இன் 30 டேஸ்...இல்லையா இது வேற படம்...அந்த படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்யிறோம் இந்தா டோரண்ட் லிங் இதை வெச்சி டவுன் லோட் செஞ்சி இதை அப்படியே தமிழில் எடுத்துக்கிட்டு வா பார்க்கலாம்...

அப்துல்லா சிரிசிரின்னு சிரிச்சிக்கிட்டே இருக்காரு....அதைப்பார்த்த வெண்பூ என்ன ஆச்சி இப்படி சிரிக்கிறீங்க...இல்லய்யா பா.ரா ஆன்லைனில் வந்தாரு...அவரு சொல்றாரு.......

வெண்பூ: இருங்க இருங்க மீதிய நான் சொல்றேன்...

உனக்குள் பல திறமையிருக்குன்னு சொல்லியிருப்பாரே...

“ஆமாம்”

உன்னால ஒரு சூப்பரா ஒரு படம் எடுத்து தரமுடியும் என்று சொல்லியிருப்பாரே!

“ஆமாம்”

பிளாக்ள டைம் வேஸ்ட் செய்யாத இன்னும் ரெண்டு மாசம் தான் டைம் அதுக்குள்ள ஒரு இங்கிலீஸ் படத்தை பார்த்து அப்படியே ட்ரான்ஸ்லேட் செஞ்சிக்கிட்டு வான்னு சொல்லியிருப்பாரே

“ஆமாம்” எப்படி இது எல்லாம் சரியா சொல்ற...

என்கிட்டயும் அதைதானே சொன்னார்.

அடுத்து கேபிள் சங்கரிடம்...நாங்க படம் எடுக்கலாம் என்று இருக்கிறோம்.

கேபிள்:சார் ஏற்கனவே ஒன்லைன் போட்டு வெச்சிருக்கேன் சார், முழு சூட்டிங்கும் சிங்கப்பூரில் ஒரே செட்டியூலில் எடுத்து முடிச்சிடலாம் சார், ஹேண்டிகாம்லேயே ரிச்சா எடுத்துடலாம் சார்...

பா.ரா: இல்ல கேபிள் அதெல்லாம் வேண்டாம்...நீங்க கிழக்குக்கு படம் எடுத்துக்கொடுப்பது எப்படின்னு ஒருபுக்கு மட்டும் எழுதிக்கொடுங்க...

பா.ரா அசிஸ்டெண்ட் ஓடிவருகிறார்..சார் ஜெயமோகன் எடுத்த ஏழாம்உலகம் என்று ஒரு படம் நல்லாயிருக்காம்...நாம வாங்கிடலாமா?

சூப்பரு...அதை அப்படியே வாங்கிட்டு டைட்டில் கிராப்பிக்சை மட்டும் ரொம்ப புதுசா செஞ்சி புதுபடம் மாதிரி ரிலிஸ் செஞ்சிடலாம்...


கிழக்கு மார்க்கெட்டிங் டீம் அறிக்கை:

மூன்று மாசம் கழிச்சி....உலக வரலாற்றில் முதல் முறையா ரிலிஸ் ஆகாத படங்களின் டிவிடிகள் நேரடியா உங்கள் அப்பார்மெண்ட் வாசலிலேயே ஸ்டால் போட்டு விற்கப்போகிறோம் குறைந்தது 100 வீடுகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு என்றால் எங்களுக்கு தகவல் தாருங்கள். இதைதவிர புதிய முயற்சியாக...ஓடும் பஸ்ஸில் புதுபடம் போடும் திட்டத்தின் கீழ்
பஸ்ஸில் பயணம் செய்யும் ஒவ்வொருவரிடமும் குறைந்த பணம் வாங்கிக்கொண்டு படத்தை போடப்போகிறோம், சோதனை முயற்சியாக ஓடும் ரயிலில் புதுப்படம் போடும் திட்டம் சென்னை டூ டெல்லி எக்ஸ்பிரஸ்ஸில் செயல்படுத்திப்பார்த்தோம் பலத்த வரவேற்பு இருந்தது. இதையடுத்து இத்திட்டத்தை பல இரயில்களில் செயல்படுத்தலாம் என்று இருக்கிறோம்.
அடுத்து பிளைட்டிலும் இந்த திட்டம் தொடரும்...

**************
ஒட்டகத்தை பார்த்திருக்காதவனுக்கு கூட ஒட்டகம் எப்படியிருக்கும் அதை எப்படி வளக்கனும் என்று சொல்லித்தரும் படம் தான் ”ஒட்டகத்தை கட்டிக்கோ” படம், படத்தின் முதல் சீனிலேயே ஒட்டகத்தின் பின்பக்கத்தை காட்டி தமிழ்சினிமா செண்டிமெண்டை உடைச்சிருக்கார் கேவிஆர்... ஒட்டகத்தின் ஒவ்வொரு முடியும் எப்படி பயன்படுத்தலாம் என்பது வரை டீடெயிலா சொல்லிக்கொடுத்து இருக்காங்க. விமர்சனம் பை லக்கி

பா.ரா: ஆமா பத்ரிக்கிட்ட ஒரு படம் எடுக்க சொல்லியிருந்தேனே என்ன ஆச்சு எடுத்தாரா?

ஹரன்: இப்ப வந்துக்கிட்டே இருக்கேன்னு போன் செஞ்சாரு...

பத்ரி: இந்தாங்க பா.ரா என்னோட படம்...

பா.ரா: என்ன படம் பத்ரி? என்ன கதை?

பத்ரி: ”தப்பே செய்யாத ராசா”

பா.ரா: உங்க கடமைக்கு அளவே இல்லையா...ராசாவே அப்ரூவரா மாறி செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு போய் 5 வருசம் கழிச்சுமா இன்னும் இதேயே சொல்லுவீங்க...

பத்ரி: இல்ல பா.ரா...இப்ப பாருங்க எல்லாம் சட்டப்படி....

பா.ரா: ஆளை வுடுங்க சாமி........

பத்ரி: இப்ப ஒசாமா ட்வின் டவரை தகர்த்தான் என்று என்ன ஆதாரம் இருக்கு...அதை பேஸ் செஞ்சி ஒருபடம் எடுக்கலாமான்னு இருக்கேன்...ஒசாமா தீவிரவாதியா ஆதாரம் என்ன?

பா.ரா: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*********************

கிழக்கு புரொடெக்சனில் வெளிவர இருக்கும் படங்கள்:

சொக்கன் இயக்கத்தில் வெளிவரப்போகும் படங்கள்...

சத்யராஜ் வெற்றிப்பெற்றது எப்படி!

ரஜினிகாந்த் வெற்றியின் ரகசியம்!

கமல் ஒரு சகாப்தம்!

அமுல் பேபியா குஷ்பூ!


முகில் இயக்கத்தில் வெளிவரப்போகும் படங்கள்

இராமன்

அக்பர்

ஒளரங்சீப்

ஜான்சிராணி

இரா.முருகன் இயக்கத்தில் வெளிவரப்போகும் படங்கள்

என் டெலிபோன் டைரி

ஆறுவிரல்

நம்பர் 4 விவேகானந்தர் தெரு

மருதன் இயக்கத்தில் வெளிவரப்போகும் படங்கள்

இதோ வருது புரட்சி!

அதோ வந்துட்டு புரட்சி!

புரட்சி வர செய் புரட்சி!

எதையும் புரட்டாத புரட்சி!

*********************
உயிர்மைபதிப்பகம் மனுஷ்ய புத்திரனிடம் கதை சொல்கிறார் எஸ்.ரா...ஒரு கடலை வியாபாரி ஒரு மூட்டைக்கடலையோட வீட்டுக்குப்போறான்....
ஒரு ஒரு கடலையா எடுத்து உடைக்கிறான் உடைக்கிறான் உடைச்சிக்கிட்டே இருக்கேன்...3 மணிநேரம் டீடெயிலா இதைக்காட்டுறோம்.

(இவுங்க ஒரு படம் தான் எடுப்பாங்க ஆனா ஒன்பது வருசம் எடுப்பாங்க)

Friday, April 22, 2011

கோ- பட விமர்சனம்

இரண்டு வருடங்களுக்கு பிறகு நானும் மனைவியும் சேர்ந்து போய் பார்த்தபடம், மகன் வயிற்றில் 3 மாதமாக இருந்த பொழுது கடைசியாக பார்த்த படம் அதே டைரக்டர் எடுத்த அயன். திரும்ப அதே டைரக்டர் எடுத்த “கோ” படத்தை வியாழன் அன்று இரவு பார்த்தோம். அப்ப இப்பவும் திரும்ப பாப்பா ஏதும் வயித்தில் இருக்கான்னு கேட்டிங்க பிச்சி பிச்சி! ஷார்ஜா மெகா மால் கிராண்ட் சினிமாஸில் கோ 11.30 ஷோ போகலாம் என்று நண்பர்கள் குடும்பத்தையும் அழைச்சிக்கிட்டு போனோம். போனதும் தான் தெரிஞ்சுது ஷோ கேன்சல். பிறகு துபாயில் இருக்கும் கலேரியாவில் போன் செஞ்சி கேட்டதுக்கு ”கோ” 12 மணிக்கு ஒரு ஷோ, 1 மணிக்கு ஒரு ஷோ என்றான். மணி 11.30 ஆவுது போய் ட்ரை செஞ்சி பார்க்கலாம் என்று ஒரு முடிவோடு கிளம்பினோ. 11.30 வரை இனியன் தூங்கவில்லை. சரி நாம இன்னைக்கு வெளியில்தான் நிக்கனும் என்று நினைச்சிக்கிட்டே போனோம், வழியில் கொஞ்சம் ட்ராபிக் இருந்ததால் கொஞ்சம் லேட் ஆகி சரியாக 12.00மணிக்கு போனோம். நண்பர் டிக்கெட் எடுக்க போனார் பார்த்தால் 1 மணி ஷோ கேன்சல் 12 மணி ஷோ மட்டும் தான் என்றார்கள் படம் போட்டு 5 நிமிடம் ஆகும் என்றார்கள்.

படம் பார்த்தால் டைட்டில் ஓடுவதிலிருந்து பார்க்கவேண்டும் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டு போனோம் பார்த்தால் அப்பொழுதுதான் டைட்டில் ஓடிக்கிட்டு இருந்தது. வரும் பொழுது இனியன் காரிலேயே தூங்கிவிட்டது கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஆனால் சரியா 30 நிமிடத்தில் முழித்ததும் பக்குன்னு இருந்துச்சு...ஆனா அழாம அப்படியே உட்காந்து 2.30 வரை படம்பார்த்தான்.

படம் ஆரம்பமே பேங் கொள்ளை ...கொள்ளையர்களை சேஸ் செஞ்சி பாஞ்சி, எம்பி , எகிறி என்று எல்லா ஆங்கிளிலும் போட்டோ எடுக்கும் பிரஸ் போட்டோ கிராப்பராக ஜீவா அறிமுகம் ஆகிறார். இவர் எடுத்த போட்டோக்களின் உதவியால் கொள்ளைக்கூட்டம் பிடிபடுகிறது. செம ஜாலியான கொலிகாக பியா, அடக்கமான பொண்ணாக கார்த்திகா. (சிம்பு சொன்னது சரிதான், இந்த பெண் ஹீரோயினாக மட்டும் இல்ல ஹீரோயின் பிரண்டாக நடிக்கக்கூட லாயக்கு இல்லை) படத்தில் இந்த பெண்ணை தவிர மீதி அனைத்தும் அருமையாக இருந்தது.

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று அனைவரும் செய்யும் தில்லுமுள்ளு திருகுதாளங்களை எல்லாம் தின அஞ்சல் பேப்பர் முதல் பக்கத்தில் ஜீவாவின் அதிரடி போட்டோக்களால் போட்டு டார்டாராக கிழிக்கப்படுகிறது. IIM, DR என்று படித்தவர்கள் கொண்ட டீம் ஒன்று ”இறகு” சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
பலதடைகள்,பல அவமானங்கள், பல இழப்புகளை சந்திக்கநேரிடுகிறது. அதையெல்லாம் மீறி தேர்தலை சந்திக்கிறார்கள். முடிவு என்ன ஆனது என்பதை மே 13 தேதிவரை காத்திருக்காமல் தியேட்டரில் போய் பார்த்து தெரிஞ்சுக்குங்க.

அமளி துமுளி பாட்டுக்கான லொக்கேசனும் பாடல் படமாக்கப்பட்ட விதமும் அவ்வளோ அருமை. பாம் வெடித்து நண்பர்கள் இறந்தசோகத்தில் ஜீவா இருக்கும் பொழுது ஜீவா கார்த்திகாவுடன் டூயட் பாடுவது போல் வருவது படத்தில் ஒட்டவே இல்லை. தியேட்டரில் இருப்பவர்கள் கூட என்ன கொடுமை இது என்றார்கள்.

காமெடிக்கு என்று தனியாக ஆள் எதுவும் இல்லாமல் அதையும் ஜீவாவே செய்திருக்கிறார்... அவரோட ஹெட் என்னாடா போட்டோ எடுத்திருக்க எல்லா போட்டோவும் ஷேக் ஆகியிருக்கு என்று சொல்லும் பொழுது சரி சார் அடுத்த பேங் கொள்ளையடிக்கும் பொழுது கொள்ளையனுங்களை போஸ் கொடுக்க சொல்லி நின்னு நிதானமா ஜூம் போட்டு எடுக்கிறேன் என்று சொல்லுவதும். பேப்பரில் வந்த அழகிகள் நியூஸை நான் தான் எழுதினேன் அவுங்க எல்லாம் ஒரு நைட்டுக்கு நைட்டுக்கு 10 ஆயிரமாம் சம்பாரிக்கிறாங்களாம்...அப்படின்னா நீ எனக்கு எவ்வளோ தருவ என்று பியா கேட்கும் பொழுது 108 ரூபாய் என்று சொல்லிட்டு...பக்கத்திலிருக்கும் கார்த்திகாவுக்கு எவ்வளோ தரலாம் என்று கேட்டதுக்கு...எல்லாம் ஓக்கே ஆனா ஹைட்தான் கொஞ்சம் சாஸ்தி வருகிறவனுக்கு என்னா ஸ்டூலா கொடுத்து அனுப்பமுடியும் என்று சொல்லும் பொழுது தியேட்டரே அதிருகிறது.

முதல் பாதி விறுவிறுப்புடன் போனது...இரண்டாம் பாதி சற்று நீளம். ஆனால் படம் ஓக்கே. பொலிட்டிக்கள் த்ரில்லர்.

Sunday, April 3, 2011

ஸ்ரீசாந்த் ஸ்பெசல் 3-4-2011




இப்படி எல்லாம் இந்திய கொடிய போத்திக்கிட்டாதான் இன்னைக்கு நான் இந்திய டீம் வெற்றிக்காக விளையாடியதா நம்பவைக்க முடியும்.









**********

பெட்டிங் கட்டுபவர்: ஒருத்தன் கூட ஸ்ரீசாந்த் விக்கெட் எடுப்பான்னு பெட்டு கட்ட மாட்டேங்கிறானுங்களே...இப்படியே போனா கம்பெனி நஷ்டத்தில் போய்விடுமே!

***********
கங்குலி: வாப்பா ஸ்ரீசாந்த் இப்படி பக்கத்துல உட்காரு...

ஸ்ரீசாந்த்: என்ன அண்ணே ரொம்ப பாசமா கூப்பிடுறீங்க?

கங்குலி: எப்படியும் அடுத்த IPLல் எனக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் அதான் இப்பவே சீட் ரிசர்வ் செஞ்சி வைக்கிறேன்...

*********
பழமொழி: கேட்கிறவன் கேனையனா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொல்லுவானாம்.

புதுமொழி: கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா ஸ்ரீசாந்த் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தான்னு சொல்லுவானாம்.

********
ஜெயிலர்: உனக்கு இன்னைக்கு தூக்கு தண்டனை எதுனா கடைசி ஆசை இருந்தா சொல்லு!

கைதி: ஸ்ரீசாந்த் விக்கெட் எடுப்பதை பார்க்கனும்.

ஜெயிலர்: அது நடக்காத விசயம் வேற எதுனா கேளு...

கைதி: அப்ப ஸ்ரீசாந்த் மெயிடென் ஓவர் போடுவதை பார்க்கனும்.

ஜெயிலர்: இதை எல்லாம் காதால கேட்பதுக்கு பதில் இந்த கயித்துல நானே தொங்கிடுவேன்.

Saturday, April 2, 2011

ஜம்கே பகட், ஜோர் சே லகட் லகாவ்! ஹே லகாவ்! ரிவீட் சாட்


சிலநேரங்களில் ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்...அதுமாதிரி தான் நேற்றைய உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி அமைந்தது.

ஸ்ரீசாந்த் முதல் மேட்சில் பங்களாதேஷ்க்கு எதிராக காட்டிய பர்மான்சில் ஆடிப்போய் இருந்த நமக்கு தோனி என்ன நம்பிக்கையில் இறுதிப்போட்டியில் ரிஸ்க் எடுக்கிறார் என்று கோவம் கோவமா வந்துச்சு. அந்த கோவத்தை விட காலையில் இருந்து இன்று இறுதிப்போட்டியில் நம்ம ஸ்ரீசாந்த் களிக்குமா களிக்கனும் என்ற அனைத்து மலையாளிதாரங்களின் விருப்பம் என்று எல்லாம் புலம்பிக்கிட்டு இருந்த ரேடியோ சானல்ஸ், மற்றும் சேட்டன்களை நினைச்சால் தான் எனக்கு வயிறு கலக்கியது. இவன் பாட்டுக்கு இரண்டு விக்கெட் எடுத்துட்டா
ங்கொயாலுங்க கிரிக்கெட்ன்னு ஒரு விளையாட்டு அழிஞ்சு போனாலும் வாய் ஓயாம பேசுவானுங்களேன்னு ஒரு பயம் இருந்துக்கிட்டே இருந்துச்சு.

ஆனா ஸ்ரீசாந்த் ஓவரை உட்டு பிரி பிரின்னு பிரிச்சதில் பயபுள்ளைங்க இன்னைக்கு வாயே திறக்கவில்லை. அவனுங்களையும் ஆப் செஞ்சாச்சு, நம்ம கப்பையும் ஜெயிச்சாச்சு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

***********
5 முறை வேர்ல்ட் கப்பில் விளையாடியும் கப் வாங்காவில்லையே என்ற சச்சின் குறை தீர்ந்ததுதான் மிகப்பெரிய சந்தோசம்...போன முறை வேர்ட்ல் கப்பில் டாப் ஸ்கோர் அவருதான், இந்த முறை 18 ரன் வித்தியாசத்தில் இரண்டாமிடம்.

*********
ஒரு சிறந்த தலைவனுக்கான பண்பு தோனியின் பேச்சில் நேற்று தெரிந்தது...ஏன் அஸ்வினுக்கு பதில் ஸ்ரீசாந்த், ஏன் யுவராஜுக்கு பதில் நீ முன்னாடி இறங்கின என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டியிருந்திருக்கும் அதனால் தான் பொறுப்பா ஆடினேன் என்றார். அதுமாதிரி ஜெயித்ததும் ஆர்பட்டமும் இல்லை, ஆர்பாட்டத்திலும் இல்லை.

********
350 எடுத்திருந்தாலும் இவிங்ககிட்ட ஜெயிச்சிருக்க முடியாது போலன்னு ஸ்ரீலங்கா கேப்டன் சொன்னதுதான் ஹைலைட்.

********
சேவாக் முதல் ஓவரிலேயே டக், சச்சின் 18 ரன்னில் அவுட் என்றதுமே ஸ்ரீலங்கன்ஸ் அனைவரும் கப்பு நமக்குதான் என்று கனவில் இருந்திருப்பானுங்க..நம்மில் பலரும் அட அவ்வளோதான் என்று நினைத்திருப்போம்... ஆனால் நம்பிக்கையோட போராடிய கம்பீர், கோலி, தோனி தான் ரியல் ஹீரோஸ். ஒரு வேர்ல்ட் கப் பைனலில் அதுவும் இரண்டு விக்கெட் இழந்த நிலையில் சேசிங்கில் அத்தனை பிரஸ்சரோடு 97 வரை ஸ்கோர் செய்த கம்பீர், அவரோடு களத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விக்கெட் எதுவும் விழாமல் நின்ற கோலி அதன் பிறகு வந்த தோனி ஆகியோர் ஸ்ரீலங்கன்ஸ் கனவை தகர்த்துவிட்டார்கள்.

*******