வழிதெரியாமல் தவிக்கும் ஒருவர் நம் வலைபதிவர்களிடம் வழிகேட்டால் எப்படி வழி சொல்வார்கள் என்று ஒரு கற்பனை. பெரிய தலைகள் எல்லாம் கோச்சுக்காதீங்க:)
அப்பாவியான அவர் எதிரே நம்ம ஜோசப் சார் எதிரில் வருகிறார்.
அப்பாவி: எக்ஸ்கூயுஸ் மி சார் இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?
ஜோசப் சார்: ம்ம்ம் இங்க வா இப்படியே நேரா போய் "திரும்பிபார்" ஒரு புலிய மரம் தெரியும்,அங்க இருந்து லெப்ட்ல போய் "திரும்பிபார்" ஒரு Bank போர்ட் தெரியும் அங்கே இருந்து, அங்க இருந்த ரைட்ல திரும்பி பார் ஒரு பழைய வீடு தெரியும், நேராக போய் "திருப்பி பார்" நான் இங்க நிற்பது தெரியும். திரும்பி பார்துக்கிட்டே வந்தின்னா நான் நிற்கும் இடத்தில் இருக்கும் எதிர் வீடுதான் அந்த வீடு.
அப்பாவி: ?????????????????
*****************************************
வீட்ட கண்டுபிடிக்க முடியாத அப்பாவி எதிரில் நம்ம செந்தழல் ரவி வருகிறார்.
அப்பாவி: எக்ஸ்கூயுஸ் மி சார் இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?
செந்தழல் ரவி: என்னய்யா என்னை பார்க்காம திரும்பி யார பார்த்து அட்ரெஸ் கேட்கிற?
அப்பாவி: இல்ல இதுக்கு முன்னாடி வேற ஒருத்த கிட்ட கேட்டேன் அடிக்கடி திரும்பி பார்க்க சொன்னார் அதனால கழுத்து சுலுக்கிக்கிச்சு.
ஹோ அப்படியா ! இப்படியே நேராக போ அங்க பச்சகலர் பெயிண்ட் அடிச்ச வீட்டு கொடியில நீலகலர் சுடிதார் காஞ்சிக்கிட்டு இருக்கும், அதுக்கும் பக்கத்தில் இருக்கும் ரோட்டில் ரைட்டில் கட் செஞ்சீன்னா ஒரு காலேஜ் பஸ்ட் இயர் படிக்கும் பெண் மொட்ட மாடியில் நின்னு படிச்சிக்கிட்டு இருக்கு. அந்த வீட்டுக்கு எதிர் பக்கம் போகும் ரோட்டில்....
செந்தழல் : இப்ப டைம் என்னா?
அப்பாவி: 12.30
செந்தழல்: அய்யயோ பிலிப்பைன்ஸில் 10 மாடலிங் பெண்களுடன் மீட்டிங் இருக்கு பிளைட்ட பிடிக்கனும், மீதி வழியை பிளைட்டில் போகும் பொழுது லேப் டாப்பில் டைப் செஞ்சு மெயில் செய்கிறேன் இப்ப பை.
************************************************
எதிரில் நம்ம அய்யனார் வருகிறார்
அப்பாவி: தம்பி தம்பி இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?
அய்யனார்: இப்படியே நேரா போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ... அங்கே இருந்து ரைட்டில் திரும்பி போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒரு டாஸ்மார்க் வரும் அங்கே இருந்து லெப்டில் திரும்பி போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ. ஒரு "குட்டி" சுவரு வரும் அங்கே இருந்துநேரா வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... பக்கத்தில் ஒரு நீலகலர் பெயிண்ட் அடிச்ச வீடு இக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
தம்பி டைம் என்னா? ஏன்னா நான் கால சக்கரத்தை மறந்து வச்சிட்டு வந்துட்டேன்.
அப்பாவி: 6.30
அய்யனார்: சாரி சார் எனக்காக பல்லில் கிளிப் போட்ட பெண், ஜாக்கெட்டில் ஊக்கு போட்ட பெண், ராதிகா எல்லாம் வெயிட்டிங் வேற ஆள் கிட்ட கேளுங்க...
**********************************************
தம்பி கதிர் எதிரில் வருகிறார்
அப்பாவி: தம்பி தம்பி இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?
தம்பி: வாய்யா! என் பேரு எப்படி தெரியும்?
அப்பாவி: உங்க பேரு தம்பிங்களா ரொம்ப சந்தோசம்... இந்த அட்ரஸை கொஞ்சம் சொல்லுங்களேன் காலையில் இருந்து தேடிக்கிட்டு இருக்கேன்
தம்பி: சரி வா ஒரு டீ சாப்பிட்டு கிட்டே அட்ரஸ் சொல்கிறேன். சரி உன் பேரு என்னா?
அப்பாவி: .................
தம்பி: கூட பிறந்தவுங்க எத்தனை பேர் என்னா வேலை செய்யுற? எத்தனை பிள்ளை எல்லா விவரத்தையும் கேட்டுகிறார். பின் நான் கிளம்புறேன் பை பை
அப்பாவி: தம்பி இன்னும் நீங்க அட்ரசை சொல்லவே இல்ல...
தம்பி: போய்யா இப்பதான் பதிவு போட மேட்டர் உன் கிட்ட இருந்து வாங்கி இருக்கேன் அது மறக்கும் முன் நான் பதிவு போடனும் பை பை.
*********************
எதிரில் ஜீ.ராவு கையில் அர்சனை தட்டோடு வருகிறார்.
சார் சார் உங்கள பார்தா ரொம்ப நல்லவுங்க போல தெரியுதுகொஞ்சம் இந்த அட்ரஸ் எங்க இருக்கு சொல்ல முடியுமா?
ஜீ.ரா : ஓம் முருகா! இப்படியே நேரா போனா, ஒரு முருகன் கோயில் வரும் அங்க இருந்துலெப்டில் திரும்பினா ஒரு பிள்ளையார் கோவில் வரும், அங்கே இருந்து நேராக போனா ஒரு அம்மன் கோயில் வரும் அதுக்க அடுத்த சந்தில்....
மணி என்னா ஆச்சு?
அப்பாவி: 8.30
ஜீ.ரா: கோயில் நடை சாத்தும் முன் நான் போக வேண்டும் பை பை.
**********************
எதிரில் நம்ம அண்ணாச்சி வருகிறார்.
அப்பாவி: அண்ணே அண்ணே இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?
அண்ணாச்சி : எலே செவுத்து மூதி எங்கன நின்னுக்கிட்டு என்ன விலாசத்த கேக்குதியபோலே போய் வட பழனி பஸ் ஸ்டாண்டில் கும்பகோணம் பஸ் புடிச்சு ஊருக்கு போய் அங்கன கேளுலே, வந்துட்டாங்கிய எங்கன இருந்துதான் இப்படி கிளம்புவானுகிய!!!
அந்த அப்பாவி அபி அப்பா!!!!