Tuesday, April 26, 2016

தேர்தல் ஸ்பெசல் 3 - 2016


பாயகம் அலுவலகத்தில் மக்களை கேனையார் ஆக்கும் கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடக்கிறது..
பைகோ வைபாத்து ஜிங்.ரா, பத்தரசனும் என்னங்க இப்படி செஞ்சிட்டீங்க...உங்களை நம்பி நாங்க வந்தோம் இப்ப நீங்க எலக்சனில் நிக்கிலேன்னா நம்மளுக்கு யார் ஓட்டுப்போடுவா? நாங்களும் தேர்தல் போட்டியில் இருந்து விலகுறோம்...
பைகோ: என்ன காரணம் சொல்லிட்டு விலகுவீங்க..
ஜிங்.ரா : கையில் முள்ளு குத்திட்டு அதுனால விலகுறோம்..
பைகோ: கையில் எப்படி முள்ளு குத்தும்...கொஞ்சம் லாஜிக்கா எதாவது ரீசன் சொல்லுங்க...அப்பதான் மக்கள் நம்புவாம்க்க..
ஜிங்.ரா: பத்தரசன் கால்ல குத்தின முள்ள நான் எடுக்கும் பொழுது என் கையில் குத்திட்டு...அவ்வளோதாங்க ரீசன் எங்க ரெண்டு பேர் கட்சியும் போட்டியில் இருந்து விலகுதுங்க.
பைகோ: அந்த முள்ளு செடிய நட்டது திமுகன்னு சொல்லிடுங்க.
*****
பாசன்: பைகோ அண்ணா...நான் கொஞ்சம் சாந்தம்..எனக்கு இதுமாதிரி வன்முறையா எல்லாம் கதை சொல்ல வராது...
பைகோ: எது முள்ளு குத்துதுங்கிறது உங்களுக்கு வன்முறையா?
பாசன்: ஆமாங்க...இதெல்லாம் சரிவராதுங்க...அம்மா ஒரு சீட் கொடுக்காதப்ப நீங்க கூப்பிட்டு 25 சீட் கொடுத்தப்பயே நான் உசார் ஆகியிருக்கனும்.. இப்ப நான் என்ன செய்வேன்?
பைகோ: எதுனா மக்கள் நம்பும்படி சொல்லுங்க...
பாசன்: என் பாக்கெட்ல இருந்த பாக்கு தீந்து போச்சு...அத வாங்க பர்மா போறேன்....ரெண்டு மாசம் ஆகும் என்று சொல்லிடுங்க.
பைகோ: அவ்வ்வ்வ்வ்வ்
******
குஜயகாந்த்: அர்ஜுனர், பீமன் எல்லாம் எங்கப்பா போனீங்க...உளுந்தூர்பேட்டையில் என்ன உளுந்து பொறுக்க கூப்பிட்டாங்க அதுனால எனக்கு வேலை இருக்கு நானும் போறேன்...