Saturday, March 22, 2008

பூங்காவின் புது வடிவ முன்னோட்டம்....

பூங்கா இதழ் வெகு நாட்களாக வெளிவரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும், அதை புதுவடிவில் மெருகேற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அது எப்படி என்றுஒரு கற்பனை. முன்பு எல்லாம் பதிவு போட்ட பின்புதான் அது பூங்காவில் வரும் இனி சிறந்த எழுத்தாளர்களிடம் எழுதி வாங்கி வெளியிடுவது, அதன் பின்பேஅதை பதிவில் போட அனுமதிப்பது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

முதல் ஆளாக போய் அவர்கள் சந்திப்பது நமது ஓசை செல்லா அண்ணாச்சியை...

நிர்வாகி : வணக்கம் ஓசை செல்லா

ஓசை : வணக்கம்!

நிர்வாகி: பூங்கா இதழில் வெளியிட ஒரு கட்டுரை எழுதி தரவேண்டும்...

ஓசை : அடா அடா கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க, இப்பதான் 5 நிமிடம் முன்பு இனி எழுத போவது இல்லை என்றும், இனி ஆடியோ பதிவு மட்டும் தான் என்றும் முடிவு செய்து இருக்கிறேன்.

நிர்வாகி: மனதுக்குள் ஆமா மனசுல பெரிய பின்லேடன், வீரப்பன் என்று நினைப்பு ஆடியோ மட்டும்தான் ரிலீஸ் செய்வார்!(சும்மா உட்கார்ந்துக்கிட்டு கடிகாரத்தையே பார்த்துக்கிட்டு இருக்கிறார்)

ஓசை: என்னா கடிகாரத்தையே பார்கிறீர்கள்?

நிர்வாகி: இல்லை எப்படியும் இன்னும் 5 நிமிடத்தில் முடிவு மாத்திப்பீங்க அதான் வெயிட்டீங், போய் திரும்ப எல்லாம் வருவது கஷ்டமாச்சே அதான்.

ஓசை : டக்க்குன்னு ஒரு பேப்பரில் ஓல பாயில் ஒன்னுக்கு அடிக்கும் அய்யானார் என்று எழுதி தர...

நிர்வாகி: தலைப்பு ஓக்கே பதிவு?

ஓசை: அதேதான் தலைப்பு அதே தான் பதிவு.. அந்த ஒன்னுக்கு என்பதை மட்டும் சைஸ் 36ல் போட்டுக்குங்க, அடிக்கும் என்பதை 26ல் போட்டுக்குங்க. முடிஞ்சா ஒவ்வொருஎழுத்தும் ஒவ்வொரு, மாதிரி இருக்கனும்.

நிர்வாகி: ரைட்டுங்க அப்ப கிளம்புறேன்.

*****************************************************
அடுத்து அவர் போய் சந்திக்கும் ஆள் கோவி.கண்ணன்

நிர்வாகி: வணக்கம்

கோவி: வணக்கம் சொல்லுங்க எப்படி இருக்கீங்க, நலமா?

நிர்வாகி: மிக்க நலம், நீங்க பூங்காவுக்கு ஒரு கட்டுரை எழுதி தரவேண்டுமே!

கோவி: அடா அடா நீங்க ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க,நான் இனி 9.9.9999 ல் தான் எழுத போவதாக முடிவு எடுத்து இருக்கிறேன். அதுவரை நோ அழுகாச்சி, நோ பீளிங்ஸ்.

நிர்வாகி: என்னங்க இப்படி சொல்லிட்டீங்க:(

கோவி: சோக ஸ்மைலி கூட வேண்டாமே!!! ஆமாங்க கடைசி வரி எப்பயும் எழுத பட்டு இருக்காது என்பது உங்களுக்கு தெரியாதா?

நிர்வாகி: ங்கே... சரிங்க அப்ப கிளம்புறேன்.

கோவி: என்னங்க கிளம்பிட்டீங்க, இருங்க இருங்க.

நிர்வாகி: அதான் எழுத மாட்டேன் என்று சொல்லிட்டீங்க அப்புறம் என்னா செய்வது.

கோவி: இருங்க சிஸ்டம் டேட்டை 9.9.9999ன்னு மாத்திட்டுட்டு எழுதி தருகிறேன்.

*******************************************
அடுத்து அவர் சந்திப்பது அய்யனார்.

நிர்வாகி: வணக்கம்

அய்யனார்: என்னய்யா இது பார்த்த உடனே வணக்கம் என்று சொல்லனும் என்று ஏதும் சட்டம் இருக்கா, எவன்யா இதை கொண்டுவந்தது, வணக்கம் சொல்லிதான் பேச்சை ஆரம்பிக்கனும் என்று எவன்யாசொன்னது, சன் டீவி நியூஸ், ரேடியோ நியூஸ் எல்லாத்திலும் இப்படிதான் வணக்கம் சொல்லிட்டு செய்தியே படிக்க ஆரம்பிக்கிறாங்க..முதல்ல இதை எல்லாம் சிதைக்கனும்.

நிர்வாகி: இவ்வளோ பேசினதுக்கு ஒரு வணக்கம் சொல்லி இருக்கலாம்.

அய்யனார்: இவ்வளோ சொல்லியும் உனக்கு புரியலையா? அப்ப நீ அதிகார மையத்தின் மேல் அமர்ந்து இருக்கிறாய்.

நிர்வாகி: சரிங்க போதும் நான் கிளம்புறேன்...

அய்யனார்: என்னா வந்த விசயத்தை சொல்லாமலே கிளம்புறீங்க?

நிர்வாகி: இல்லீங்க இதுவரைக்கும் நீங்க பேசினதே போதும்...

அய்யனார்: என்னய்யா இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள டயர்ட் ஆனா எப்படி இருங்க ஒரு புல் அடிச்சுக்கிட்டே பேசலாம்.

நிர்வாகி: வேண்டாம் பிறகு அப்புறம் இந்த பதிவு எழுத ஆன செலவு என்று ஓல்ட் மங்+ ஓல்ட் மங்+ ஓல்ட் மங் +ஓல்ட் மங்+ ஓல்ட் மங்+ ஓல்ட் மங் என்று எழுதி கொடுப்பீங்க நான் ஜகா வாங்கிக்கிறேன்.

*******************************************************************
வசந்தம் ரவி

நிர்வாகி: வணக்கம்

வசந்தம் ரவி: வணக்கம், நானே உங்களை சந்திக்கனும் என்று நினைச்சேன்.

நிர்வாகி: ஏன்?

வசந்தம் ரவி: இல்லை தமிழ்மணத்துக்கு 1001 யோசனைகள் என்று ஒரு நோட்ஸ் போட்டு இருக்கிறேன் அதான்...

நிர்வாகி: இதோட நீங்க மட்டும் 10001 யோசனை சொல்லி இருக்கீங்க அதுபத்தாதுன்னு இது வேறயா?

வசந்தம் ரவி: இப்ப புதுசா Uk Top 10 ரேட்டிங் என்று இருக்கு அதுல எப்படி உங்க பதிவை வர வைப்பது எப்படின்னு யோசனை சொல்ல போறேன்.

நிர்வாகி: அது படத்துக்குதானே ரேட்டிங் கொடுப்பான் அதுல எப்படி?

வசந்தம் ரவி: அங்கதான் நிக்கிறேன் நான் உங்க போஸ்ட்ல ஒரு படத்த போட்டு அதுக்கு ஹிட் கொடுத்தா அங்க வரும்..

நிர்வாகி: சரிங்க அப்ப கிளம்புறேன்..

வசந்தம் ரவி: என்ன வந்த விசயத்தை சொல்லாமலே கிளம்பிட்டீங்க.

நிர்வாகி: எங்கய்யா என்னை பேச விடுகிறீர்கள் :(((

****************************************************************

சுகுணா, லக்கி, தமிழச்சி ஆகியோரிடமும் எழுதி வாங்கனும் என்று நிர்வாகி நினைத்தார் ஆனால் நேரம் இன்மையால் பிறகு வாங்கிக்கலாம் என்று ஜகா வாங்கிக்கிறார்.

32 comments:

said...

கல்யாணத்துக்கு முன்னாடி கடைசி ஆப்பு வாங்குவீன்னு நெனச்சா கடைசி பாராவுல எஸ்ஸாயிட்டியே குசும்பா?

பரவாயில்ல கல்யாணம் ஆனா பொழச்சுக்குவதான் :P

said...

நிர்வாகி அடுத்துப் போவது குசும்பனிடம்.....

நிர்வாகி: வணக்கம் குசும்பன்...
குசும்பன்: வணக்கம்! 1,2,3,4,5,6...

நிர்வாகி: என்ன பண்ணுறீங்க?
குசும்பன்: நான் ஊருக்குப் போக இன்னும் எத்தனை நாள் இருக்குன்னு எண்ணுறேன்..

:)))

said...

:)))))))))))))))

Anonymous said...

எங்கள் தலைவி தமிழச்சியை பேட்டி எடுக்காத தமிழ்மணத்தையும் குசும்பனையும் வண்மையாக கண்டிக்கிறேன்

said...

seetha thinking aloud...


ம் ம் ம் என்ன இது இன்னைக்கு 30/4.08..குசும்பன்கிட்ட இருண்து பதிவே இல்லயே?

who said...actually he is busy preparing for a consumer court proceings against penathal as all that he learnt in M.Sc wifeology have nt helped him....oh no.

said...

seetha thinking aloud...


ம் ம் ம் என்ன இது இன்னைக்கு 30/4.08..குசும்பன்கிட்ட இருண்து பதிவே இல்லயே?

who said...actually he is busy preparing for a consumer court proceedings against penathal as all that he learnt in M.Sc wifeology havent helped him...

.oh no.but never mind i'll have the last laugh!!!!

Anonymous said...

எதும் புச்சா எல்லாரயும் அடிச்சுக்க வைக்க முடியாதா நைனா? போரடிக்குது எல்லாரும் அடிச்சுக்கரத நிப்பட்டிட்டாங்க.

said...

குசும்புங்க எசமான் குசும்புங்க...!

விடாதீங்க

கும்முங்க எசமான் கும்முங்க!

இந்த குசும்பனே இப்படித்தான்..!

said...

//முக்கிய அறிவிப்பு
இன்னும் இரண்டு நாட்களில் வரும்:)))

//

என்ன?

என்ன?

அட என்னப்பா?

said...

//மங்களூர் சிவா said...
:)))))))))))))))
//
யோவ்! சிவா

கும்மியில வேற ஐக்கியமாகியாச்சு

கமெண்ட்ஸ்ல நாலு வரி எழுத கத்துக்கய்யா :))

said...

படிச்சேன் ரசிச்சேன்....அருமை குசும்பரே

said...

பாத்துக்குங்க குசும்பன், யாராவது வெடி வச்சுரப் போறாங்க.

எப்படிய்யா இப்படி அசராம அடிக்கறீங்க...?!

said...

சரி சூப்பரா எஸ் ஆயிட்டே.. நேரம் இல்லையா தைரியம் இல்லையா?

என் பங்குக்கு:

நிர்வாகி: வணக்கம் அண்ணாச்சி!

அண்ணாச்சி: நல்லா இருங்கடே.

நிர்வாகி: பூங்காவுக்கு ஒரு கட்டுரை..

அண்ணாச்சி: அவசியம் எழுதிடலாம். நீங்க என்ன எழுதணும்னு நெனைக்கிறீங்களோ அதை மின்னஞ்சல் பார்வார்டு பண்ணிடுங்க.. அதை கொஞ்சம் தட்டி மின்னஞ்சல் ஜல்லி ஆக்கிடலாம்..

நிர்வாகி: அது வேணாங்களே..

அண்ணாச்சி: அப்ப சரி, மத்தவங்க கட்டுரைத் தலைப்பையெல்லாம் கொடுங்க, எது சூடா இருக்குதோ அதை வச்சு மெகா மொக்கை போட்டுடலாம்.

நிர்வாகி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. புதுசா எதாச்சும்?

அண்ணாச்சி: சரி ரொம்ப கேக்கறீங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க,எனக்கு பேரன் பொறந்ததும் அவன் எதாச்சும் எழுதினா அதை உங்களுக்கே தரேன்!

****************

இந்த விளையாட்டு நல்லா இருக்கே.. ஆளாளுக்கு போட்டு தாக்குங்கப்பூ!

*******

சீதா, ஒப்புதல் வாக்குமூலத்துக்கு நன்றி. இல்லறத்தியல் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதி எப்போதும் அளித்ததில்லை. பிரச்சினைகளை அடையாளம் காண்பது மட்டுமே நோக்கம். அதை உறுதிப்படுத்தியமைக்கு (Last Laugh) நன்றி.

said...

தம்பி சரவணா,

இதெல்லாம் நல்லா இல்லே சொல்லிபுட்டேன்.
:)

said...

\\நந்து f/o நிலா said...
கல்யாணத்துக்கு முன்னாடி கடைசி ஆப்பு வாங்குவீன்னு நெனச்சா கடைசி பாராவுல எஸ்ஸாயிட்டியே குசும்பா?\\

ரீப்பிட்டே ;)))

said...

வழக்கம் போல நம்ம அய்ஸ் தான் சூப்பரு :)))

said...

:))

said...

சரவணா = எப்பப்பா வெளி வரப் போகுது ?

Anonymous said...

ஆப்பிஸர்,

சும்மா 'நச்'சுன்னு இருக்கு!!!

said...

//சுகுணா, லக்கி, தமிழச்சி ஆகியோரிடமும் எழுதி வாங்கனும் என்று நிர்வாகி நினைத்தார் ஆனால் நேரம் இன்மையால் பிறகு வாங்கிக்கலாம் என்று ஜகா வாங்கிக்கிறார்.//

கண்டினியு செய் குசும்பா...

உன்னை யாரும் கோச்சுக்கமாட்டாங்க..

அடுத்த பதிவ கொலவெறியோட எதிர்பார்க்குறேன் :))

இப்படிக்கு

சென்ஷி

said...

மாமு.. எனக்கு அனுப்பின மெயில்ல அந்த கடைசி பாரால இருந்த ஒருத்தர் பேட்டி இருந்ததே. அது எங்க போச்சி?:(

.. ச்ச..ச்ச.. அது தமிழச்சி இல்லை :P..

said...

செம காமெடி பாஸ் !!!!! :)))))))))

said...

////ஆயில்யன். said...
//மங்களூர் சிவா said...
:)))))))))))))))
//
யோவ்! சிவா

கும்மியில வேற ஐக்கியமாகியாச்சு

கமெண்ட்ஸ்ல நாலு வரி எழுத கத்துக்கய்யா :))//////


அப்படி சொல்லுங்க ஆயிலு.
அவரு வெறும் ஸ்மைலியும் ஜொள்ளு படமும் போட்டே ஒப்பேத்துராரு

said...

////நந்து f/o நிலா said...
கல்யாணத்துக்கு முன்னாடி கடைசி ஆப்பு வாங்குவீன்னு நெனச்சா கடைசி பாராவுல எஸ்ஸாயிட்டியே குசும்பா?////


இப்படியே நோண்டுங்க. மனுஷன் எத்தனை தடைவ பம்மல் பாண்டியா மாறுறது

said...

/////ஆயில்யன். said...
//முக்கிய அறிவிப்பு
இன்னும் இரண்டு நாட்களில் வரும்:)))

//

என்ன?

என்ன?

அட என்னப்பா?//////


அட இருப்பா.
ரொம்ம்ப அவசரமோ?

said...

////ஜ்யோவ்ராம் சுந்தர் said...
பாத்துக்குங்க குசும்பன், யாராவது வெடி வச்சுரப் போறாங்க.

எப்படிய்யா இப்படி அசராம அடிக்கறீங்க...?!/////



இன்னும் கொஞ்ச நாள்ல அசராமா அடி வாங்குவாரு.

said...

///பினாத்தல் சுரேஷ் said...
இந்த விளையாட்டு நல்லா இருக்கே.. ஆளாளுக்கு போட்டு தாக்குங்கப்பூ!
////

ஏதோ என்னால முடிஞ்சது.


(மங்கலூரார் சன் மீஜிக் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் நிர்வாகி நுழைகிறார்)

நிர்வாகி:வணக்கம் மங்களூர் சிவா

மங்களூர் சிவா:வணக்கம்( ச்சே எங்க இருந்து தான் சிவபூஜையில கரடி மாதிரி வாராய்ங்களோ)

நிர்வாகி:பூங்கா இதழில் தங்களது படைப்பு ஒன்றை வெளியிடலாம் என்று இருக்கிறோம்.

மங்களூர் சிவா: ஆஹா பூங்கா நமக்கு மிக பிடித்த இடமாயிற்றே. வீக் என்ட்ல அங்க தானே நம்ம பொழுதே ஓடுது.

நிர்வாகி:அப்படியா ரொம்ப சந்தோஷம். எல்லோரும் என்னைய மண்டைய காய வச்சுட்டாங்க. நீங்களாவது ஒரு கட்டுரை எழுதி கொடுங்க.

மங்களூர் சிவா: யோவ் நானே ஏதும் எழுத் தெரியாம ஜொள்ளு படம் போட்டு ஒப்பேத்திக்கிட்டு இருக்கேன் என்னைய போய் கட்டுரை கிட்டுரை கேட்டுகிட்டு என்று கொல வெறியில் நிர்வாகி மீது பாய்கிறார்......

said...

நிஜமா நல்லவன் கலக்கிட்டிங்க :P

ஹாஹாஹாஹாஹா
:))))))))))))))))))

said...

நந்து எல்லாம் உங்க ஆசிர்வாதம்:)) பெரியவங்க எப்படியோ அப்படியே நாங்களும்:)))

******************************

ஜெகதீசன்

ஏன் 6 வரை எண்ணுகிறீர்கள் ஒன்லி 3:)))

*******************************

மங்களூர் சிவா

:))))

***************************

சீதா அவர்களே நன்றி

அப்படி எல்லாம் நடக்குமா?

******************************

சுரேகா நன்றி

******************************

ஆயில்யன் வெயிட்டீஸ்:)))

*******************************

நன்றி வசந்தம் ரவி

*****************************
ஜ்யோவ்ராம் சுந்தர் வெடி தான் வைக்க போகிறார்களே!!!:)))

****************************

பினாத்தலார் அண்ணாச்சி இதை பார்த்தாரா?:)) இல்லை போட்டு கொடுக்கவா?

********************************
கோவி கண்ணன் சார் ஏன் நல்லா இல்லை, என்னா குறையுதுன்னு சொல்லுங்க அடுத்த முறை நல்லாக்கிடலாம்:)))

*******************************
நன்றி கோபி தம்பி..

அது என்னா எல்லாரும் அய்யனாருதான் அருமைன்னு சொல்றீங்க:))

*****************************
நன்றி கொத்தனார்:)

*****************************
செல்விஷங்கர்

எதுங்க? புரியவில்லை:(

******************************
வணக்கம் ஆபிசர் , நன்றி
****************************
சென்ஷி said...
//உன்னை யாரும் கோச்சுக்கமாட்டாங்க..//

உனக்கு என்ன ராசா சொல்லிட்டு நீ பாக்கிஸ்தானி கூட பல்லாங்குழி விளையாட போய்விடுவ, மாட்டிக்கிட்டு ஆப்பு வாங்குவது நான் தானே!!!:)))

****************************
SanJai said...
//.. ச்ச..ச்ச.. அது தமிழச்சி இல்லை :P..//

அதான் நீங்களே சொல்லிட்டிங்களே அப்புறம் நான் என்ன சொல்வது:)))

****************************
நன்றி பொன்வண்டு

****************************
நிஜமா நல்லவன் said...
////ஆயில்யன். said...
//மங்களூர் சிவா said...
:)))))))))))))))
//
யோவ்! சிவா

கும்மியில வேற ஐக்கியமாகியாச்சு

கமெண்ட்ஸ்ல நாலு வரி எழுத கத்துக்கய்யா :))//////

மூத்த பதிவர்கள் என்றால் வெறும் ஸ்மைலிதான் போடுவார்கள் நல்லவனே:)))


//இப்படியே நோண்டுங்க. மனுஷன் எத்தனை தடைவ பம்மல் பாண்டியா மாறுறது//

அதானே முட்டை உடுற கோழிக்குதான் டிக்கி எரிச்சல் தெரியும்:)))பம்முற நமக்குதான் அதோட வலி தெரியும்:)))

///இன்னும் கொஞ்ச நாள்ல அசராமா அடி வாங்குவாரு.///

நல்லவனே ரொம்ப அனுபவம் போல:)))


//மங்களூர் சிவா: யோவ் நானே ஏதும் எழுத் தெரியாம ஜொள்ளு படம் போட்டு ஒப்பேத்திக்கிட்டு இருக்கேன் என்னைய போய் கட்டுரை கிட்டுரை கேட்டுகிட்டு என்று கொல வெறியில் நிர்வாகி மீது பாய்கிறார்......///

என்னது எழுத தெரியாததுனாலாதானா இப்படி:)) ரைட்டு

*****************************




*****************************

said...

தஞ்சாவூர் பக்கமோ?

:)

said...

// அதிகார மையத்தின் மேல் //

அது மையம் இல்லை மய்யம்

:)))

said...

/////பொன்வண்டு said...
// அதிகார மையத்தின் மேல் //

அது மையம் இல்லை மய்யம்

:)))/////


பொன்வண்டு ஏன் குறிவைத்து அங்கங்க போட்டு தாக்குறீங்க.