Tuesday, November 30, 2010

போலி குசும்பன் -விளக்கம்

என் பெயரில் சிலர் சவுக்கு தளத்திலும், ஒரு சில ஆபாச தளங்களிலும் கமெண்ட் போடுகிறார்கள், சவுக்கு தளத்தில் தொடர்ந்து உன் பெயரில் கமெண்ட் வருகிறது என்றார்கள் . போய் பார்த்தேன் ஆபாசமாக எதுவும் இல்லை என்றாலும், அது நான் இல்லை என்பதை சொல்லவே இந்த பதிவு.

ஏதும் எனக்குன்னு அரசியல் நிலைபாடு இருக்குன்னு காட்ட முயற்சியா அல்லது எதுக்குன்னு புரியவில்லை. நான் நண்பர்கள் பதிவை தவிர வேறு எங்கும் கமெண்ட் போடுவது இல்லை.

Wednesday, November 24, 2010

போச்சே போச்சே...அனுஜன்யா திரும்பி வாங்க!

நேற்று மாலை அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் லாம்சி பிளாசாவுக்கு சென்றேன், மால் நடுவில் ஸ்டேஜ் போட்டு இருந்தார்கள் கூட்டம் அதிகமா இருந்துச்சு என்ன விசயம் என்றேன்... இம்ரான் கானும், தீபிகா படுகோனும் வருகிறார்கள் என்றார்கள். ஆஹா தீபிகா படுகோனா என்று ஆர்வத்துடன் காத்திருந்தேன். பத்து நிமிடத்தில் ஸ்டேஜுக்கு அனைவரும் வந்தார்கள். ஒரு நிமிடத்துக்கு மேல் அங்க என்னால் நிற்க முடியவில்லை. தீபிகா படுகோனை அவ்வளோ பிடிக்கும் ஆனால் நேரில் பார்த்ததும் ச்சை என்று ஆகிவிட்டது:(( டக்குன்னு கிளம்பி வந்துவிட்டேன்.

லவ் ஆஜ்கல் என்கிற ஒரு படம் தீபிகா படுகோனுக்காகவே குறைந்தபட்சம் 30 தடவைக்கு மேல் டிவிடி தேய தேய பார்த்துவிட்டு, இப்ப ஹார்ட் டிஸ்கில் அந்த படத்தை வெச்சிருக்கேன்.



எனக்கு இந்த பாடத்தில் வரும் Chor Bazaari பாட்டை பார்க்கும் பொழுது எல்லாம் ஒரு சந்தோசம் வரும். பஞ்சாபிகள் எதையும் ரசனையோடு செய்பவர்கள், நமக்கு எல்லாம் ரொம்ப சந்தோசம் வந்தால் என்ன செய்வோம் என்று யோசிச்சோம் என்றால் எப்பொழுதும் போல் தான் இருந்திருப்போம். ஆனால் பஞ்சாபிகள் பல்லே பல்லே பல்லே என்று ஆட ஆரம்பிச்சிடுவார்கள். அது ரோடாக இருந்தாலும் சரி கவலையே பட மாட்டார்கள். பஞ்சாபி பெண்களும் அதுமாதிரிதான், அவர்களையும் ரொம்ப பிடிக்கும். ஏன் பிடிக்கும்? அதுக்கு சில புள்ளி விவரங்களை சொல்லவேண்டும்... பஞ்சாபி பெண்கள் பற்றி புள்ளி விவரங்களை சொன்னால் அடி விழும் என்பதால் நம்ம திரும்ப ஆட்டம் பற்றியே பேசுவோம். கல்லூரியில் படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தியேட்டரில் நண்பர்களுடன் ஆடியது...அதன் பிறகு வாய்ப்பு கிடைக்க வில்லை.

ஊருக்கு வரும் பொழுது தேணாம்படுவை தப்பு செட்டு காரர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சிட்டு ஆடனும் என்று ஆசை...(முன்னாடி துண்டு விரிச்சி கூட வைக்கலாம் தப்பு இல்ல)
*********
போன வாரம் நண்பன் ஒருவன் போன் செஞ்சான், மச்சான் நீ மாமா ஆக போற டா என்றான். அட பாவி வேலையில் பிரச்சினை அதுக்காக இப்படியாடா சொல்லுவ என்றேன். ச்சே லூசு நான் அப்பா ஆகபோறேன் டா என்றான். அடங்கொன்னியா கல்யாணம் ஆகி 50 நாள் கூட ஆகவில்லையே டா என்றேன்...ஹி ஹி ஹி என்றான்.


முதல் வருட கல்யாண நாளை புள்ளையோட கொண்டாட போகும் நண்பா நீ வாழ்க வாழ்க என்றேன்...ஹி ஹி ஹி என்றான்.


குழந்தை பிறந்த பிறகு அவனோட நிலமைய நினைச்சேன்...நான் ஹி ஹி ஹி என்றேன்.


**********
கல்யாணம் என்றது இந்த கல்யாணம் ஆகி குட்டி போட்ட சீனியருங்க அட்வைஸ் செய்வாங்க பாருங்க அய்யெய்யோ...தாங்க முடியாது.


மச்சான் முதல் ராத்திரியே பாஞ்சிடாத..பொறுமையா டீல் செய்யனும் என்று சொல்லுவான் ஒருத்தன்.


இன்னொருத்தன் மச்சான் முதல் ராத்திரியே சக்சஸ்புல்லா முடிச்சிடு அப்புறம் காலம் முழுக்க நம்ம சொன்ன பேச்சிதான் கேட்பாங்க என்று சொல்லுவான் இன்னொருத்தன். (இந்த லாஜிக் படி பார்த்தால் உலகத்தில் 99% கேஸ் பெயிலியர் கேஸ்தான்).


குறைந்தது ஒருவருசம் குழந்தை பிறப்பை தள்ளி போட்டுக்குங்க. என்று சொல்லுவானுங்க.


மச்சான் எப்பவும் நீ சொல்றத கேட்கிற மாதிரி வெச்சிக்க, கிரிப்ப விட்டுவிடாதடா அப்புறம் காலம் முழுக்க ஆமாம் சாமி போடவேண்டியிருக்கும். கொஞ்சம் இடம் கொடுத்தா அவ்வளோதான் ஆளை காலி செஞ்சிடுவாங்க. இது இன்னொருத்தன்.


மச்சான் இன்னும் மூனு மாசம் டைம் இருக்கு, ஜிம்முக்கு எல்லாம் போ...பிட்டா வெச்சிக்க. ஜல்லி கட்டுக்கு போய் காளைய அடக்க ட்ரைனிங் கொடுப்பது மாதிரியே டிப்ஸ் கொடுப்பாய்ங்க.


எல்லாத்தையும் நோட் செஞ்சு வெச்சிக்கிட்டாலும் புது பொண்டாட்டி பக்கத்துல வந்ததும் இந்த பிக்காலி பயலுவோ சொன்னது எல்லாம் எங்க நினைவுக்கு வரும்?


*****
இது அனுஜன்யா திரும்பி வரவேண்டும் என்பதுக்காக எழுதியது...
அனுஜன்யா திரும்பி வாங்க...

Saturday, November 20, 2010

மன்மோகன் சிங் ஸ்பெசல் 20-11-2010

(படம் பெரிதாய் தெரிய படத்தின் மேல் கைய வெச்சி எலியை ஒரு குத்து குத்தவும்)
மன்மோகன்: CNN IBNல்லிருந்து ஒரு பத்துபதினைஞ்சு பேரு...சுத்தி நின்னுக்கிட்டு கும்முகும்முன்னு கும்மினானுங்க...நானும் அதோட முடிஞ்சிதுன்னு நினைச்சிக்கிட்டு கிளம்ப நினைச்சேன்...

வடிவேலு: அப்புறம்?

மன்மோகன்: இவிங்க கேள்வி கேட்டு டயர்ட் ஆகி...மத்த நியுஸ் சேனல் காரனுங்களுக்குபோன் போட்டு..இங்க ஒரு ஆளு வசமா சிக்கியிருக்காரு வாங்கன்னு கூப்பிட்டானுங்க...

வடிவேலு: அப்புறம்?

மன்மோகன்: ஒரு நூறு நூத்தியைம்பது பேரு திபுதிபுதிபுன்னு ஓடி வந்து கேள்வி கேட்டுகும்மியடிச்சு அங்கியிருந்து பார்லிமெண்டுக்குள்ள தூக்கி போட்டானுங்க அங்க ஒரு 200 எம்.பிங்க ஒருநாள் இல்ல ரெண்டு நாள் இல்ல 7 நாள் ஓயாமா கேள்வியா கேட்டு அடிச்சானுங்க...அப்புறம் அங்கியிருந்து ஒரு ஆட்டோவுல ஏத்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினானுங்க...

வடிவேலு: அப்புறம்...

மன்மோகன்: அங்க ஒரு மூனு நாளு ஜட்ஜுமாருங்க கேள்வி மேல கேள்வியா கேட்டு ஓயாம அடிச்சாங்க...

வடிவேலு: இவ்வளோ நடந்திருக்கு...நீங்க ஒன்னுமே செய்யலையா?


மன்மோகன்: அவிங்க கேள்வி கேட்டு கும்மும் பொழுது ஒருத்தன் சொன்னான்...எவ்வளோகேள்வி கேட்டு அடிச்சாலும் நம்ம பிரதமரு தாங்குறாரு..இவரு ரொம்ப நல்லவருன்னு..இதுமாதிரிஒரு பிரதமர பார்த்ததில்லைன்னு சொல்லிட்டான்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


வடிவேலு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


*************************



(படம் பெரிதாய் தெரிய படத்தின் மேல் கைய வெச்சி எலியை ஒரு குத்து குத்தவும்)

விவேக்: சொல்லுங்க எசமான் சொல்லுங்க...


மன்மோகன்: என்ன சொல்லனும் விவேக்?


விவேக்: நீதிமன்றம் நாக்கை புடுக்கிக்கிற மாதிரி கேள்வி மேல கேள்வியா கேட்குதே...


மன்மோகன்: அதுக்கு?


விவேக்: என்ன செய்யப்போறீங்க? என்ன பதில் சொல்லப்போறீங்க?


மன்மோகன்: இதுவரைக்கும் என்னபதில் சொல்லியிருக்கேன்? என்ன செஞ்சிருக்கேன்?


விவேக்: ஒன்னியும் செஞ்சது இல்ல...


மன்மோகன்: அதேதான் இதுக்கும் கூடியிருக்கும் கூட்டத்துக்கிட்ட போய் சொல்லு...
*****************

நண்பேண்டா!

செய்தி: பரிட்சை எழுதி முடிச்ச ஸ்கூல் பிள்ளையை போல் உணருகிறேன்.




இதை வெச்சி நம்ம கும்மி....


நீதிபதி: போன வாரம் கேள்வி கேட்டு இருந்தோமே பிரதமரிடம் பதில் வந்துச்சா?




வக்கீல்: வந்திருக்கு எசமான், ஆனா அதுல 5 கேள்விக்கு 4 கேள்விக்கு அவுட் ஆப் சிலபஸ் என்றும் ஒரு கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டேன் என்றும் பதில் எழுதியிருக்கிறார் எசமான்.




**************

நீதிபதி: பிரதமர் ஏதோ கடிதம் அனுப்பியிருகிறாராம்...எங்கே அந்த கடிதத்தை படிங்க...



வக்கீல்: டியர் சார், ஐ ஆம் சபரிங் பிரம் பீவர் ப்ளீஸ் கிராண்ட் மீ டூ டேஸ் லீவ்.


யுவர்ஸ் & எவ்வரிபடி

ஒபிடீயண்ட்

மன்மோகன் சிங்


*************

நீதிபதி: யாருய்யா அது வாசலில் முட்டி போட்டுக்கிட்டு நிற்பது உள்ளே வரசொல்லு...



வக்கீல்: நம்ம பிரதமருதான் ஐயா...உள்ளே வந்தா கேட்ட கேள்விக்கு பதில் எங்கேன்னு நீங்க திரும்ப கேள்வி கேட்பிங்கன்னு பயந்து வெளியில் முட்டி போட்டுக்கிட்டு நிற்கிறார்.