Sunday, November 30, 2008

உலகிலே எந்த ஊர் பெண்கள் அழகு!

ஒரு வாரத்துக்கு முன்பு பதிவுலக நண்பர்களுடன் மெயில் அனுப்பி ஒரு விவாதத்தில் இருந்த பொழுது இந்த ஊர் அரபி பெண்கள் அல்லது ஈரான் பெண்களின் அழகுக்கு இனை யாரும் கிடையாது என்றேன், நண்பர் அதெல்லாம் கிடையாது நீ சும்மா பொய் சொல்றே என்றார், அவரிடம் பல பாடல்களில் வரும் அரபி பெண்களின் அழகை பற்றி மேற்கோள்களையும் (அரபு நாடே அசந்து நிற்கும் அழகி நீயாம்) பாடல்களையும், அடிக்கடி சொல்லப்படும் அரபி குதிரைக்கு அர்த்தத்தையும் சொன்னேன் அப்பொழுதும் அவர் நம்பவில்லை.

பின் புரியும் படி நம் ஊர் சூப்பர் சூப்பர் பிகர்= இந்த ஊர் சப்பை பிகர் அல்லது அட்டு பிகர் என்றேன் ஆதாரம் வேண்டும் என்றார் பின் அவருக்கு இந்த ஊர் பெண்களின் புகைப்படத்தை அனுப்பினேன், அதன் பிறகு அவர் பேசவே இல்லை! இதோ அவருக்கு அனுப்பிய படங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்க.



*******************************************************************************

மேலும் இந்த விவாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக போன வாரம் ஒரு கணவன் மனைவிக்குள் நடந்த உண்மை சம்பவத்தையும் சொல்கிறேன்!

மனைவி: என்னங்க! (பொதுநலன் கருதி விகுதி மாற்றப்பட்டுள்ளது).

கணவன்: என்னம்மா!

மனைவி: இத்தனை வருசமா இங்கிருக்கீங்க,உங்களுக்கு இங்க ரொம்ப பிடிச்சது என்னனு சொன்னீங்கன்னா நான் வாங்கி தருவேன்ல்ல!

கணவன்: இரவின் இருட்டில் இந்த கருப்பு கலர் லேண்ட் கூருசர் காரில் உள்ளே இருக்கும் சிறு வெளிச்சத்திலும் பெளர்ணமி நிலவு போல் ஜொளிக்கும் படி முகம் மட்டும் தெரிய வலம் வரும் அரபி பெண்களின் அழகு ரொம்ப பிடிக்கும், இதுல பியூட்டியே பேக்ரவுண்டும்கருப்பு, காரும் கருப்பு, அவுங்க டிரஸும் கருப்பு!.....

மனைவி: #%~@$#$ எதாலோ அடிக்க அந்த கணவன் கையில் கட்டு!

(என்னது என் கையில் இருக்கும் கட்டு ஏனா? அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை,என் கையில் இருப்பது ராக்கெட் லாஞ்சரை தடுத்த பொழுது ஏற்பட்ட சிறு காயம்!ராக்கெட் லாஞ்சர் தீவிரவாதிகள்கையில் மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கும் கல்யாணம் ஆகாத பசங்களே உங்களை நினைச்சா பாவமாக இருக்கு!)

************************************************************************

சென்னையில் மழை பெய்தால் இனி பதிவர்கள் என்ன செய்யவார்கள்!

வெண்பூ வீட்டில்:

என்னங்க மழை தூறல் போடுற மாதிரி இருக்கு வெளியே நீங்க தொவைச்சு காயப்போட்ட டிரஸ் எல்லாம் நனைச்சுடப்போவுது சீக்கிரம் எடுத்து வந்து அயர்ன் செஞ்சு வெச்சுடுங்க! டீயை அப்புறம் ஆத்தி தரலாம் சீக்கிரம் போங்க!


டீயை பொருப்பாக ஆத்திக்கிட்டு இருந்த வெண்பூ அலறி அடிச்சுக்கிட்டு என்னது மழை தூறுதான்னு கேட்டுகிட்டு செல் போனை எடுத்துக்கிட்டு ஓடுகிறார்!....

பரிசல் வீட்டில்:

என்னங்க மழை தூறல் போடுற மாதிரி இருக்கு நம்ம இரண்டு குழந்தைங்களையும் ஸ்கூலில் இருந்து அழைச்சுட்டு வாங்க என்ன இன்னும் சின்னபுள்ளமாதிரி குவீஸ் கேம்ஸ் விளையாடிக்கிட்டு இருக்கீங்க!!!


என்னது மழை பெய்கிறதா! அவரும் மொபைல் போனை எடுத்துக்கிட்டு ஓடுகிறார்!

தாமிரா வீட்டில்:

என்னங்க மழை வரமாதிரி இருக்கு, நீங்க பிழிஞ்சு வெச்ச வடாம் நனைஞ்சுட போவுது கொஞ்சம் எடுத்துட்டு வந்துடுங்க!

தாமிரா: என்னது மழை வரமாதிரி இருக்கா! அவரும் செல்போனை எடுத்துகிட்டு வெளியே ஓடுகிறார்!

தாமிரா: மழை வருவது போல் இருக்கு நீ அங்க தனியா இருக்க வேண்டாம்! நாளை மனைவி ஊருக்கு போக போறாங்க வேண்டும் என்றால் இங்க வந்துடு, நாம சேர்ந்து இருக்கலாம், கூச்சப்படாத உடம்ப பார்த்துக்க மழையில் நனையாத, ஏதும் வேண்டும் என்றால் என்னிடம் தயங்காம கேளு! அடிக்கடி போன் செய்!

இவர் பேசியது மனைவி காதி விழுந்துவிடுகிறது!

மனைவி: ஹலோ நில்லுங்க நான் மழையில் நனைஞ்சா கூட இவ்வளோ கவலை படமாட்டீங்க அது யாரு போன்ல!

தாமிரா: அது அது வந்து பிரண்டும்மா!

மனைவி: எனக்கு தெரியாம அது யாரு பிரண்ட்டு! என்ன பேரு!

தாமிரா: அதிஷா!

மனைவி: என்ன தைரியம் இருந்தா ஒரு பொண்ணை நான் இல்லாதப்ப வீட்டுக்கு வா கூட தங்கலாம் என்று கூப்பிவீங்க! எவ அவ திரிஷா மாதிரி இருப்பாளோ! உங்களை எல்லாம்.... என்று ஆயுதத்தை எடுக்க போகும் பொழுது எஸ்கேப் ஆகிறார்!

மற்ற இருவரும் யாரிடமோ பேசிட்டு வீட்டுக்குள் வருகிறார்கள் தங்கமணிகள் முறைக்க மற்ற இருவரும் சொல்கிறார்கள் நீ வேறம்மா வீட்டில் வாங்கும் திட்டு பத்தாதுன்னு மழை பெய்த பொழுது ஏன் போன் செய்யலைன்னு தூ ஆட்டிக்கிட்டு வந்துட்டானுங்கன்னு அதிஷா பதிவு போட்டு திட்டுவார் அதான் பேசிட்டுவந்துட்டேன் என்கிறார்கள்! (இது புரியவில்லை என்றால் லிங்கை கிளிக் செஞ்சு படிங்க புரியும்).


இனி மழை பேஞ்சா அதிஷா நினைவு வரவில்லை என்றால் நீங்களும் டரியள் ஆக்கப்படுவீர்கள்!!!

************************************************************

தலைவர் தங்கபாலு :புலிகளால் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

டரியள் டக்ளஸ்: உங்களை எல்லாம் பூனை கூட பிறாண்டாது போய் தைரியமா தூங்குங்க!

Tuesday, November 25, 2008

வாங்க வாங்க நர்சிம்மை கலாய்கலாம்!

சஞ்சய் ஆர்வத்தோட சென்னைக்கு கிளம்பி போகிறார் பரிசலுக்கு கொடுத்த மாதிரி ஒரு சிறப்பான வரவேற்ப்பை தமக்கும் நர்சிம்மும் ,அப்துல்லாவும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்!


இனி மீதி அங்கே!


சஞ்சய் போகவேண்டிய ரயில் ரத்தாகிவிட சரி வர லேட் ஆகும் என்று நர்சிமிடம் போன் செஞ்சு சொல்லிடலாம் என்று போன் செஞ்சு பேசுகிறார்!

சஞ்சய்: அண்ணே நான் வர இருந்த டிரெயின் கேன்சல் ஆகிட்டு அடுத்த டிரையின் புடிச்சு வர எப்படியும் 5 மணி நேரம் தாமதம் ஆகும்!


நர்சிம்: இப்பதான் நான் ஆபிசில் இருந்து வந்தேன் எப்படியும் நான் கிளம்பவும் 5 மணி நேரம் ஆகும், நான் கூட எங்கே உங்களை அழைக்க வரமுடியாதோ என்று பயந்துக்கிட்டே இருந்தேன்! நல்லவேளை டிரையின் கேன்சல்!


சஞ்சய்: (குழப்பத்துடன்) அண்ணே நான் காலையில் தான் அங்கு வருவேன்!


நர்சிம்: அதனால் என்ன நடுவே 10 மணி நேரம் தானே இருக்கு, பேசிக்கிட்டே இருந்தா எப்படி நான் உங்களை அழைக்க ரெடி ஆகனும் போனை வையுங்க!

சஞ்சய்: குழப்பத்துடனே போனை வைக்கிறார்!

காலை மணி 5...

சஞ்சய்: என்னன்னே என்னை ரிசிவ் செய்யதான் வந்தீங்களா இல்லை ஏதும் போர்ட் மீட்டிங்குக்குபோறீங்களா?

நர்சிம்: ஹி ஹி அது எல்லாம் அப்படிதான்! வாங்க வீட்டுக்கு போகலாம்!

நர்சிம் வீட்டில் காலை டிபனை முடித்துவிட்டு அடுத்து மதியம் சாப்பாட்டுக்கு வெண்பூ வீட்டுக்கு போக கிளம்பும் பொழுது அப்துல்லாவுக்கு போன் போட்டு அண்ணே வெண்பூ வீட்டில் மதியம் சாப்பாடு போகலாமா!

அப்துல்லா: இல்ல மாம்ஸ் எனக்கு இன்னை 12th எக்ஸாம் இருக்கு, எழுத போகனும்!

சஞ்சய்: ஆஹா மாம்ஸ் என்ன மாதிரியே தான் நீங்களூம் இன்னும் 12th பாஸ் செய்யமா தொழிலதிபர் ஆகிட்டீங்களா?

அப்துல்லா: யோவ் மாம்ஸ் நான் உன்ன மாதிரி இல்லைய்யா, நான் மத்தவங்களுக்காக எழுதப்போறேன்!

நர்சிம்: சஞ்சய் நீங்க டீவி பார்த்துக்கிட்டு இருங்க நான் போய் குளிச்சுட்டு ரெடி ஆகிவந்துடுறேன் வெண்பூ வீட்டுக்கு போகலாம்!

சஞ்சய்: குளிக்கதானே போறீங்க அதுக்கு எதுக்கு இதை எல்லாம் எடுத்துட்டு போறீங்க?

நர்சிம்: ஹி ஹி அது எல்லாம் அப்படிதான்! வாங்க வீட்டுக்கு போகலாம்!

சஞ்சய்:இதோ குளிக்க போறேன் என்று போனார் மணி 2 ஆகுது லேட் ஆனா எல்லா பிரியாணியையும் வெண்பூவே காலி செஞ்சுடுவார் வருவாரா மாட்டாரா,போய்பாத்ரூம் கதவை தட்டலாமா என்று யோசயில் கதவின் அருகில் போகிறார்!

நர்சிம்: போகலாமா மாம்ஸ்!

சஞ்சய்: அந்த கோலத்தில் நர்சிம்மை பார்த்த அவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் போகலாம் என்று போகிறார்!

வெண்பூ வீட்டில் சாப்பிட்டு விட்டு மொக்கை போட்டுவிட்டு பதிவர் சந்திப்புக்கு கிளம்பும் பொழுது மாம்ஸ் கொஞ்சம் பொருங்க ரெடி ஆகி வந்துடுறேன் என்றுகிளம்பி போகும் நர்சிம்மை டரியளாக பார்க்கிறார் சஞ்சய்!

பதிவர் சந்திப்பில் மழை பெய்து நனைந்த பிறகு வீட்டுக்கு வந்தபின் சஞ்சய் நர்சிம் மாம்ஸ் பக்கத்து கடையில் போய் டீ சாப்பிட்டுவிட்டு அப்படியே ஸ்டேசன் போய்டலாமாஎன்று கேட்டதும் இருங்க அப்ப டிரஸ் சேஜ் செஞ்சுட்டு கிளம்பி வந்துடுறேன் என்று போகிறார்...

திரும்பி வந்து பார்த்தால் சஞ்சயை காணவில்லை அங்கு ஒரு கடிதம்...

அன்புள்ள அண்ணன் நர்சிம்

5மணிக்கு அழைக்க வரும் பொழுது அப்படி வந்தீங்க ஒத்துக்கலாம்,

ரேமாண்ட் மாடல் கணக்கா பாத்ரூமில் இருந்தும் வெளியே வரும்பொழுது டக் இன் செஞ்சு வந்தீங்க பொருத்துக்கிட்டேன், பீச்சுக்கு போகும் பொழுதும் அப்படியே வந்தீங்க கண்ரோல் செஞ்சுக்கிட்டேன் இதுக்கு மேல எனக்கு என்னால முடியல நான் கிளம்புறேன் போகும் முன் ஒரு சின்ன வேண்டுகோள்.


டக்கின் செய்யுங்க வேண்டாங்கல ஆனா நைட் 10மணிக்கு படுக்க போகும் பொழுதும் எல்லாம் டக்கின் செய்யாதீங்க!



அளவில்லா கோரிக்கையோடு

சஞ்சய்








காலை 5 மணிக்குஇரவு 10 மணிக்கு மழையில் நனைந்தபின்பும்

இலவச இணைப்பு:

முன்பு நட்சட்திரமாக இருந்த ஒருவரின் கெட்டப்பை கலாய்த்து போட்ட பழய பதிவு

Sunday, November 23, 2008

கார்ட்டூன்+ டரியல் 25-11-2008




புத்தகவெளீயிட்டு விழாவுக்கு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று திரும்ப ஏதும் அறிக்கை பேட்டி எல்லாம் கொடுத்துட மாட்டிங்கள்ளே??

கை கட்டி வேடிக்கை பார்த்த போலீஸ் லிஸ்டில் இருந்து இவரை தூக்கிடுங்கப்பா! (வெண்பூ இவருக்கு சொந்தமோ!!!)

தோளில் எல்லாம் உங்கள போட்டுக்க முடியாது!!!

கிலியில் கில்லி


ஒன்னு இவங்களுக்கு பந்து பொருக்கி போடும் வேலை கிடைக்கனும் இல்ல கீழ இருப்பவர்களுக்கு கார் ஓட்டு வேலையாவது கிடைக்கனும்!

டரியல் டக்ளஸ்!!!
டெஸ்டில் கங்குலி இடம் யுவராஜ் சிங்குக்கு கொடுக்கப்படும் - ஸ்ரீகாந்
டரியல் டக்ளஸ்: இது யுவராஜ்க்கு பாராட்டா இல்லை ஆப்பா?ஒன்னுமே புரியலையே!!!

Wednesday, November 19, 2008

சென்னை பதிவர்கள் சந்திப்பின் பின்னனி!

சென்னையில் இருதினங்களுக்கு முன் பதிவர்கள் சந்தித்தது அனைவரும் அறிந்ததே, ஏன் அங்கு விடாது மழை பெய்த பொழுதும் கூடினார்கள் என்ற விவரம் இப்பொழுது கைக்கு கிடைத்து இருக்கிறது அது உங்கள் பார்வைக்கு!!!







இன்று பிறந்தநாள் கொண்டாடும் வெண்பூவுக்கு இந்த பதிவின் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்!!!

ஆதங்கம்: ஜ்வோராம் சுந்தர் சந்திப்புக்கு வராமல் போய்விட்டாரே, வந்திருந்தால் தர்பூஸ் என்ன பலாபழத்தையே கடத்தி இருக்கலாம்!!

Friday, November 14, 2008

வாரணம் பூஜ்ஜியம்

அழகான தமிழ் பெயர் டைட்டிலோடு ஆரம்பிக்கிறது பட டைட்டில் மட்டும் தான் தமிழ் ,நடிகர் பெயர் முதல் ஆங்கிலத்தில் தான் வருகிறது இது போதாதுக்கு படத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமே பேசிக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்போடு சென்ற எனக்கு பெரும் ஏமாற்றம்தான்.


சரி கதைக்கு என்ன...

ஹீரோவுக்கு டிரெயினில் ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோயின் மேலே லவ்வுன்னா லவ்வு கண்ணுமண்ணு தெரியாத லவ்வு, உடனே லவ்வை சொல்லுகிறார் ஹீரோயினும் இது சும்மா அட்ராக்சன்தான் இது லவ்வு இல்ல முதல்ல நாம பழகனும் புரிஞ்சுக்கனும் எங்க அப்பாவுக்கு உன்னை பிடிக்கனும் உங்க வீட்டில் என்னை பிடிக்கனும் என்று எல்லாம் டயலாக், பின் டக்குன்னு ஒரே ஒரு பாதி பாட்டில் வீடு கட்டும் அளவுக்கு பணக்காரர் ஆகிவிடுகிறார் சூர்யா. பின்மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற காதலியை தேடி அங்கு போகிறார், அங்கு இருவருக்கும் காதல் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது.

இப்படியே சொல்லி இருந்தால் நாம் காலம் காலமாக பார்க்கும் விஜய் படம் ஆகி இருக்கும் இது கெளதம் மேனன் படம் ஆச்சே அப்படியே நடுவில் அப்பா சூர்யா காதல் கதையும் வருகிறது அப்ப இது வித்தியாசமான படம் தானே!

அதன்பின் அமெரிக்காவில் ஒரு டிவிஸ்ட் அதன் பிறகு கதை எங்கேங்கோ பிரேக் இல்லாத தண்ணி லாரி மாதிரி போகிறது அப்படி போகும் பொழுது பார்க்கும் நம் மீதே ஏறி போவதுதான் கொடுமை!

சில சில இடங்களில் அப்பா சூர்யாவோ அல்லது குட்டி சூர்யாவை போலவோ உங்கள் வாழ்கையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம் அந்த ஜில் அனுபவத்துக்காக மூனு மணிநேரம் எல்லாம் உட்காந்து படத்தை பார்க்க முடியாது.

இயக்குனர் டச்:

1) சிம்ரன் சூர்யாவிடம் சொல்வது: நான் போற இடம் எல்லாம் உங்க அப்பா நான் அழகாக இருப்பதாக் சொல்ல சொல்லியபோது இருந்த கோபம் உங்க அப்பாவை நேரில் பார்த்ததும் அந்த கோவம் போச்சு ஏன்னா உங்க அப்பா ரொம்ப ஹேன்சம் என்று சொல்லும் பொழுது திரையில் ஈஈஈ என்று இளிச்சிக்கிட்டு இருக்கும் சூர்யாவை பார்த்தும் சிரிப்புதான் வந்தது.

2) அமெரிக்காவில் வைத்து சூர்யாவை லவ்வுவதாக சமீரா ரெட்டி சொன்னதும் சூர்யா கொடுக்கும் ரியாக்சன்

3) கேம்புக்கு வரும் ரம்யாவிடம் சூர்யா லவ்வை சொன்னதும் ரம்யா கொடுக்கும் ரியாக்சன். (லவ்வுவதாக சொன்னபிறகு Sure என்று கேள்வி வேறு விட்டா கோடிஸ்வர் நிகழ்சிமாதிரி காண்பிடண்ட்? என்று எல்லாம் கேள்வி கேட்கும் போல!)

***********************************************************************

நான்: படம் ஆரம்பித்ததுமே அப்பா சூர்யா சிரித்த முகமாகவே சாகிறார்! ஏன்?

சூர்யா: மீதி படம் பாக்க போகும் உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று! நினைச்சு பார்த்து இருப்பார்!

டிஸ்கி: பதிவை வகை படுத்த வில்லை முதலில் படம் ஆர்ட் படமா? பீரியட் படமா? அவார்ட் படமா? ஆக்சன் படமா என்று கெளதம் வகைப்படுத்தட்டும் பின் நான் இது படமான்னு வகைப்படுத்துறேன்.

(படம் இம்புட்டு மொக்கையாக இருந்தாலும் மிகவும் சந்தோசமாகவே படம் பார்த்தேன் அதை பார்த்த நண்பர் எப்படி இப்படி உற்சாகமாக இருக்கீங்க என்றதுக்கு ஆஸ்கார் ரவிசந்திரன் எஸ்கேப் ஆகி அழகிரியை மாட்டிவிட்டாரே அதை நினைச்சு பார்த்தேன் ரொம்ப சந்தோசமாக இருக்கு என்றேன்!)

Sunday, November 9, 2008

லேட்டஸ்ட் கார்ட்டூன்ஸ் 10-11-2008

ஆ.ராசா நீங்க என்னதான் சர்ப் எக்ஸல் போட்டு விளக்கினாலும் சன் டீவியும், தினகரனும் விடமாட்டாங்க!!!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....
வாராய் நீ வாராய் என்று கங்குலி பாடும் பொழது , நீ முன்னாலே போ நான் பின்னாலே வாரேன் என்று எதிர் பாட்டு பாடியது நிஜம் ஆயிடும் போல இருக்கே!!!

உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல....

ஊர் உலகத்தில் இருக்கிற அம்புட்டு பேருக்கு பழசு எல்லாம் மறந்து போய்டனும் சாமீ!!!

தொப்பையில் அதிக தகுதி உடைய கோவி.கண்ணன், வெண்பூ இருவரும் அங்கு போகாததால் மிரட்டும் போலீஸ் மாமா!!!




கதவை திற பிகர் வரட்டும்!!!


Wednesday, November 5, 2008

டரியல் டக்ளஸ்---5-11-2008

கட்டணம் செலுத்தாத மின் இணைப்பைத் துண்டிக்க சட்டத்தில்அதிகாரம் உள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்அளித்துள்ளது--- ஆணையத்தின் செயலர் பாலசுப்பிரமணியன்.

டரியல் டக்ளஸ்: ஒழுங்காக மின்சாரமே கொடுக்காத உங்களுக்கு எதை துண்டிப்பது???

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக பேசுவது குற்றம் என்றால் என்னையும் கைது செய்யலாம்--- பாரதிராஜா

டரியல் டக்ளஸ்: நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்.

புதுவை தலைமை ஜூடிசியம் மாஜிஸ்திரேட்டாக பொங்கியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டரியல் டக்ளஸ்: அநியாயத்தை கண்டா ரொம்ப பொங்கிடுவாரோ!!!

அ.தி.மு.க மற்றும் தி.மு.கவோடு கூட்டணி கிடையாது- சரத்குமார்

டரியல் டக்ளஸ்: என்னங்க இப்படி சொல்லீட்டீங்க இத கேட்டு அம்மாவும், ஐயாவும் சாப்பிடாமதூங்க முடியாம தவிக்கிறாங்க, கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்க!

நான் இங்கே புறப்பட்டு வந்த பொழுதுகால் இடறி அதன் காரணமாக வலது காலில்எட்டு அங்குல நீளத்திற்கும் இரண்டு அங்குலஅகலத்துக்கும் காயம் ஏற்பட்டது!

டரியல் டக்ளஸ்: நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு...கோவி.கண்ணனுக்கு போட்டியாக! (இவரு சொன்ன டீட்டெயிலு)

இப்படி சொன்னாலும் சொல்வார்கள்

ஜெ.ஜெ: தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க நான் காலையில் விமானத்தில் ஏறும் பொழுதே படிக்கட்டில் ஸ்லிப் ஆகும்படி செய்தது என்னை கொல்லபார்த்தது விடுதலைபுலிகள் தான். இது உளவு துறைக்கும் தெரியும்!

சு.சாமி: விமான படிக்கட்டில் விளக்கெண்ணெய தடவிதான் ஜெ.ஜெவை கீழ விழவைத்து கொல்ல முயற்சி செய்தார்கள், படிக்கட்டில் எண்ணெய் தடவியதன் வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

வைகோ: என்னை கைது செய்து சிறையில் அடைத்து, பின் சகோதரி ஸ்லிப் ஆகும் படி செய்தது எல்லாம் திட்டம்மிட்ட சதி, என்னை கைது செய்ததை விட சகோதரிக்கு அருகில் இருந்து சகோதரியை கவனிச்சுக்க முடியவில்லையே என்ற வருத்தம் தான் என்னை கொல்கிறது!

Sunday, November 2, 2008

மூட் இல்லாததால் தாமதமாய்...

பொடியன் மற்றும் ஸ்ரீ யின் கோரிக்கையை ஏற்று கும்ளே கார்ட்டூனை எடுத்துவிட்டேன்







இரண்டு நாட்களுக்கு முன்பே செய்து வைத்தும் சில பல காரணங்களால் தாமதமாய் இந்த பதிவு.